ஞாயிறு, 1 ஜனவரி, 2023

இந்திய கடற்படையின் கிழக்குக் கரையோரத் தலைமையக நகரத்தில் பயணம் - 12 - அனந்தகிரி மலை (G)கலிகொண்டா வியூ பாய்ன்ட் - காஃபி தோட்டம் - தடிகுடா நீர்வீழ்ச்சி

அனைவருக்கும் எங்கள் இருவரின் (துளசிதரன், கீதா) இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! எல்லோரும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருக்க இந்த ஆண்டும் இனி வரும் ஆண்டுகளும் நல்கிட வாழ்த்துகள்!

இன்று புத்தாண்டில் என்னோடு அழகான இயற்கை இடங்களைக் கண்டு களிக்கப் பயணியுங்கள்! மன நலத்திற்கும் உடல் நலத்திற்கும் உற்ச்சாகம் தரும் இயற்கை! ஆகவே பயணம் செய்வீர், வாய்ப்பு கிடைத்தால் இப்புத்தாண்டில் பயணம் செய்து உங்களைப் புத்துணர்வோடு வைத்துக் கொள்ளுங்கள்!

துளசியின் வீட்டில் கட்டுமான வேலைகள், வீட்டை விரிவாக்கும் பணிகள் நடப்பதால் அவரால் பதிவுகள் வாசித்துக் கருத்து அனுப்ப இயலவில்லை. நேர நெருக்கடி. ஏப்ரல் வரை பணிகள் தொடரும்.  

********

அங்கிருந்து வெளியில் வந்து ஒரு கார் ஏற்பாடு செய்து கொண்டு (பேருந்து நிலையத்தின் அருகிலேயே நிறைய கிடைக்கின்றன) போரா குகைகள் பார்க்கப் பயணித்தோம். தோராயமாக 36.5 கிமீ. வழியில் சில இடங்கள் பார்த்தோம்//

என்று சொல்லி முடித்திருந்தேன். கூடவே விரைவில் பதிவிடுகிறேன் என்றும் சொல்லியிருந்தேன். அப்படிப் பார்த்த இடங்கள் பற்றித்தான் இந்தப் பதிவு. கொஞ்சம் பெரிதாக இருக்கலாம். பொறுத்துக் கொள்ளுங்கள். 

கலிகொண்டா வியூ பாய்ன்ட்

அரக்கு பள்ளத்தாக்கிலிருந்து போரா குகைகள் (தோராயமாக 36.5-37கிமீ) நோக்கிய பயணத்தில் 17.5-18 கிமீ தூரம் சென்றதும் இந்த கலிகொண்டா வியூ பாயின்ட் என்ற இடம் உள்ளது. வழி முழுவதும் வலப்பக்கம் நிறைய காஃபி தோட்டங்கள். 

கலிகொண்டா வியுபாயின்ட் எனும் இந்த இடம் பல மலைப்பகுதிகளில் உள்ள வியூ பாயின்ட் போன்றுதான். சாலையின் ஓரத்திலேயே கொஞ்சம் ஒதுங்கி ஒரு முற்றம் போன்ற இடம் கம்பித் தடுப்புடன் உள்ளது. அனந்தகிரி மலைகளின் அழகான காட்சிகளை இங்கிருந்து பார்க்கலாம். 

இந்த கலிகொண்டா இங்குள்ள கிழக்குமலைத் தொடரின் இரண்டாவது பெரிய சிகரமாகும். ஏகதேசம் 4300 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 

இங்கிருந்து காணும் அரக்கு பள்ளத்தாக்கு மற்றும் மலைகளின் அழகைச் சொல்லிட வார்த்தைகள் இல்லை. மனதிற்கும் உடலிற்கும் உற்சாகமும் தெம்பும் கொடுக்கும் இடம். Tranquilizing Place புத்துணர்ச்சி கொடுக்கும் அனுபவம். நான் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். 


ரயில் பாதை தெரிகிறதா...
தூரத்தில் தெரியும் அழகான ரயில் பாதை (நாங்கள் அப்படித்தானே வந்தோம்) எதிரில் தெரியும் அழகான சாலை என்று இன்னும் பல காட்சிகளை உங்களுடன் பகிரலாமே என்று வளைத்து வளைத்து படம் எடுக்க முனைந்த போதெல்லாம் யாரேனும் ஒருவர் ஃப்ரேமிற்குள் வந்துவிடுவாங்க. என் கேமராவோ எப்போது சுணங்கும்னு தெரியாது. என்னடா இவ 4 அடியார் படம் எடுக்கறப்ப நாம குறுக்கே போகாம இருக்கலாமேன்னு ஹூம்...சரி அவர்கள் மலைக்காட்சிகளை எடுக்கறாங்களான்னா இல்லை....எல்லாம் செல்ஃபி மேனியாஸ். அதிலும் ஒரு பையன் அந்தக் கம்பியில் அபாயகரமாக உட்கார்ந்துகொண்டு அதுவும் தன் தோழி/காதலியுடன் செல்ஃபி.  கொஞ்சம் கை ஸ்லிப் ஆனா டிக்கெட் வாங்கிடுவாங்க ரெண்டு பேரும். 

எதிரில் சாலை

நம்ம குழுவோ எக்ஸ்ப்ரஸ் குழு. எப்படியோ நுழைந்து கம்பி அருகில் சென்று கிடைத்த கேப்பில் கொஞ்சம் சுட்டேன். நிறைய எடுக்க முடியவில்லை. கோணம் பார்த்து க்ளிக் செய்யும் போது செல்ஃபி எடுக்கும் ஆர்வத்தில் என்னைத் தட்டி விடுதலும் நடந்தது.  எடுத்தவை போதும் என்று தப்பித்து புகுந்து வெளியில் வந்தேன். 

அங்கும் தீனிக் கடைகள், சோளம், வறு கடலை, குளிர்பானங்கள் காஃபி, தேநீர் என்றிருந்தன. சாப்பாடு, டிஃபன் கூட ஒரு சிறிய கடைக்குள் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கூடவே குப்பைகளும். நம்ம மக்கள் திருந்தவே போவதில்லை!

காஃபி Trail - காஃபி தோட்டத்தின் நடுவில் ஒத்தையடிப் பாதையில்

அனந்தகிரி மலைக் காட்சிகளைப் படம் பிடித்ததுக் கொண்டு அங்கிருந்து கிளம்பியதும் நாங்கள் சென்ற காரின் ஓட்டுநர் அடுத்து 3 கிமீ தூரத்தில் இருக்கும் காஃபி தோட்டம் பார்க்கலாம் என்றதும், நான் ஏற்கனவே குறித்து வைத்திருந்த அருவிகளில் - கடிக்கி, சப்பாறை, ரானா ஜில்லேடா, தரகட்டா, தடிகுடா/அனந்தபுரி அருவி - தடிகுடா/அனந்தபுரி அருவி இந்த அனந்தபுரி மலைகளில் இதே சாலையில் சற்று தூரத்தில் உண்டே அங்கு போக முடியுமா என்று கேட்க, அவர் போகலாம் என்று சொன்னதும் எனக்கு ஒரே மகிழ்ச்சி. 

மற்ற அருவிகளுக்கு அன்று செல்ல நேரமில்லை. வேறு வேறு திக்கில் செல்ல வேண்டும். சில கொஞ்சம் காட்டில் நடக்கவும் வேண்டும். இரண்டு நாட்கள் தங்கினால்தான் செல்ல முடியும். இந்த தடிகுடா/அனந்தகிரி நீர்வீழ்ச்சிதான் போகும் வழியில் என்பதால் இதைக் குறித்து வைத்திருந்தேன்.

முதலில் காஃபி தோட்டம் அதன் பின் தடிகுடா அருவி.

காஃபி தோட்டம் என்றால் காலையில் எழுந்தவுடன் காஃபி ராகம் பாடும் கீதா விடுவாளா!!! காஃபி தோட்டத்தைக் காண கொஞ்சம் மலையின் மேலேறி அங்கிருக்கும் ஒற்றையடிப் பாதையில் நடந்து உள்ளே சென்று ஆஹா...மிகவும் ரசித்துப் பார்த்து படங்களும் எடுத்துத் தள்ளினேன். கேரளத்திலும் பார்த்ததுண்டு என்றாலும் இங்கும்.....அவற்றுள் சில இங்கு...

ஒத்தையடிப்பாதை





காபித் தோட்டத்தின் கீழே சாலையில் காபி பொடி, மலையில் விளைந்த மிளகு, ஏலக்காய் மசாலாக்கள் என்று வைத்திருந்தார்கள். காஃபி என்றதும் கீதாவாவது சுவைக்காமல் வருவதாவது! அதுவும் இந்த விஷயத்தில் குழுவினரும் ஒரே அலைவரிசை எனும் போது, சூடாகக் காபியும் குடித்தோம். காபி நன்றாக இருந்தது என்று என்னுடன் வந்தவர்கள் சொன்னார்கள். நிஜமாகவே சுத்தமான காபிதான். எனக்கு ஃப்ளேவர் தெரியாததால் சொல்லமுடியவில்லை. தேநீரும் நன்றாக இருந்ததாகச் சொன்னார்கள். நாங்கள் காஃபி பொடியும், மிளகும் கொஞ்சம் மசாலா சாமான்களும் வாங்கிக் கொண்டோம். 

தடிகுடா அருவி

காஃபி தோட்டத்திலிருந்து சிறிது தூரம் - 5 கிமீ இருக்கும் - பயணித்ததும் சாலையில் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டும் செல்லலாம் அல்லது அனந்தபுரி கிராமத்திற்குள் கொஞ்சம் தூரம் சென்று (அதன் பின் வண்டி செல்லாது) நிறுத்திவிட்டு அங்கிருந்து அரை கிமீ தூரம் நடந்து இந்த நீர்வீழ்ச்சியைக் காணலாம். 

நாங்கள் சென்றிருந்த போது இவ்வளவுதான் நீர் இருந்தது. சீசன் என்றால் தண்ணீர் கொட்டும். கடிக்கி, சப்பாறை, ரானா ஜில்லேடா அருவிகளைப் போல் அத்தனை பிராபல்யமில்லை அதுவும் கட்டிக்கி ரொம்ப பிராபல்யம். 

காரணம் இந்த தடிகுடா/அனந்தகிரி அருவி அனந்தகிரி கிராமத்தில் இருக்கிறது மட்டுமல்ல தங்கும் வசதிகளோ சுற்றுலாவிற்கான வசதிகளோ இல்லாததால் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் தற்போது இதைஹ்யும் ஆந்திரா சுற்றுலா துறை கணக்கில் எடுத்துக் கொண்டு பல வசதிகள் செய்து வருகிறதாகத் தெரிகிறது.

எனக்கு பிராபல்யம் அல்லாத இடங்களுக்குச் செல்வதில் அலாதிப் பிரியம்.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3100 அடி உயரத்தில், அனந்தகிரி மலையில் இருக்கும் இந்த அருவி, அரக்கு பள்ளத்தாகில் ஓடும் கோஸ்தானி நதியின் கிளை எனலாம். 

சுமார் 100 அடி உயரத்தில் பல அடுக்குகள்/படிகளாகப் (Cascade) பாயும் இந்த அருவியில் தண்ணீர் அதிகம் இருக்கும் காலத்தில் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொண்டேன். 

ஒரு புறம் பாறைகள், மறு புறம் பசுமையான வயல்கள், மரங்கள், மலைகள் என்று அற்புதமா காட்சி. அனந்தபுரி கிராமத்தார்கள் கொடுத்து வைத்தவர்கள்! இந்த அருவியில் குளிக்கலாம். குளிக்கவும் முடியும்.
 
ஆனால் பிராபல்யமான கட்டிக்கி அருவியில் குளிக்க அனுமதி கிடையாது. அந்த அருவியில் இருந்துதான் அரக்கு பள்ளத்தாக்கு கிராமங்களுக்கு தண்ணி சப்ளை என்பதால் என்று ஓட்டுநர் சொன்னார்.  மிக மிக நல்ல விஷயம்.



பல படிகளில் தண்ணீர் கீழே வந்து வீழ்வது அழகோ அழகு! (என்னடா படத்துல தண்ணியே அவ்வளவா இல்லை இதைப் போய் கீதா அழகோ அழகுன்னு சொல்றாளேன்னு நினைக்கறீங்கதானே!!!! இதையும் ரசிப்பேனே!!!)  பாருங்க அருவி விழும் இடத்தில் மக்கள் என்னமாய் சுகித்து அனுபவிக்கிறார்கள். நாங்கள் கொஞ்சம் மெதுவாகப் பாறையில் கால் வைத்துக் கீழே இறங்கிச் சென்றிருக்கலாம் ஆனால் நேரம் இல்லை என்பதோடு உடன் வந்தவர்கள் வந்திருக்க மாட்டார்கள். என் மகன் உடன் வந்திருந்தால் நாங்கள் இருவரும் கீழ் வரை சென்றிருப்போம்.

அருவி கீழே வீழ்ந்து செல்லும் பாதை. 

அருவியைக் கண்டு ரசித்த பின் அங்கிருந்து சுமார் 11.5 கிமீ தூரத்தில் இருக்கும் போரா குகைகளைக் காணச் சென்றோம். அது அடுத்த பதிவில்!

-----கீதா

பகுதி 11பகுதி 10, பகுதி 9பகுதி 8பகுதி 7பகுதி 6,  பகுதி 5,  பகுதி 4பகுதி 3பகுதி 2பகுதி 1



20 கருத்துகள்:

  1. அழகான படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது.

    வழக்கம் போல விவரங்கள் அருமை.

    தங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி, படங்களையும் பதிவையும் பற்றி சொன்னதற்கு.

      ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

      கீதா

      நீக்கு
  2. உங்கள் இருவரின் மிக அருமையான புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி.
    இயற்கையை ரசித்து கொண்டு போகும் பயணம் மிக அருமையானதுதான் கீதா.

    //துளசியின் வீட்டில் கட்டுமான வேலைகள், வீட்டை விரிவாக்கும் பணிகள் நடப்பதால் அவரால் பதிவுகள் வாசித்துக் கருத்து அனுப்ப இயலவில்லை. நேர நெருக்கடி. ஏப்ரல் வரை பணிகள் தொடரும்.//

    எல்லா பணிகளும் நல்லபடியாக நடக்கட்டும். அவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை சொல்லிவிடுங்கள்.


    அழகான படங்கள், மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் இருவரின் மிக அருமையான புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி.
      இயற்கையை ரசித்து கொண்டு போகும் பயணம் மிக அருமையானதுதான் கீதா.//

      நன்றி கோமதிக்கா

      ஆமாம் இயற்கையோடு பயணிக்கும் போது பயணம் அருமையாக இருக்கும்

      துளசிக்கும் உங்கள் வாழ்த்துகளைச் சொல்லிவிட்டேன் கோமதிக்கா. நன்றி யும் உங்களுக்கும் வாழ்த்துகள் சொன்னார்.

      அவர் பணிகள் நடக்க வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  3. அனந்தகிரி மலையில் இருக்கும் இந்த அருவி பார்க்க அழகுதான்.
    இந்த மாதிரி ஓங்கி வளர்ந்த மரங்கள், காப்பித்தோட்டம், ஒத்தையடி பாதையில் பயணிப்பது மகிழ்ச்சியான ஒன்றுதான். கீழே உள்ள வேர்களை பார்த்து நடக்க வேண்டும். மலையின் மேல் இருந்து மெலிதாக விழுந்தாலும் அருவிதான் பார்க்க அழகாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா அருவி குருவி போல சின்னதா இருந்தாலும் அதென்னவோ அழகுதான்....ஆமாம் காஃபி தோட்டம் உள்ளே நடந்து சென்றது ஆமாம் வேர்கள் பார்த்து நடக்கணும் இலைனா தடுக்கிவிட வாய்ப்பு அதிகம்...

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  4. வாழ்த்துகளுக்கு நன்றி.  உங்களிருவருக்கும் எங்கள் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. கலிகொண்டா வியூ பாயிண்டிலிருந்து எடுத்த படங்கள் ஓகே.  உங்கள் கண்கள் பார்த்த அழகை கேமிரா கண்கள் கொண்டு வராது.  சுற்றிலும் எடுத்த்தீர்கள்.  தள்ளி வந்ததும் அந்த வியூ பாயிண்ட்டை ஒரு க்ளிக் செய்திருக்கலாம்!  செல்பி எடுப்பவர்கள் அதுவும் இளையவர்கள் நிறையவே எரிச்சல் படுத்துவார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கண்கள் பார்ப்பதை கேமரா கொண்டு வராதுதான்....அந்த வியூ பாயின்டை எடுத்திருக்கலாம் ஆனால் கம்பி கூடத் தெரியாத அளவு இளசுகள் வட்டம்....பெரியவங்களும் இளசுகளாய் செல்ஃபி மயம்....அதனாலதான் எடுக்கலை. வெங்கட்ஜி எடுத்திருப்பார் பகிர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன் பார்த்த நினைவு

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  6. காப்பித்தோட்ட படங்களில் உயர மரங்கள் தவிர  விசேஷம் ஒன்றுமில்லை எனினும் உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கு கொண்டோம்!  காபி வேறு சுவையாய் குடித்திருக்கிறீர்கள் என்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அங்கு விசேஷம் எதுவும் இல்லை ஸ்ரீராம். சும்மா உள்ளாற நடந்துவிட்டு வந்தோம்....நிறைய கோணங்களில் க்ளிக்ஸ்.....உயரம் எடுக்க.....

      அங்கு குடித்த காஃபி அது நல்லாருந்ததுன்னாங்க....நமக்குத்தான் சுவை அப்ப சுத்தமா தெரியாத நிலை. இப்பவும் அப்பப்ப அப்படித்தான்

      நீங்களும் பங்கு கொண்டதில் மகிழ்ச்சி ஸ்ரீராம்

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. அருவி என்று சொல்லி விட்டு பம்ப்செட் போல ஒரு இடத்தைப் பார்த்தது எங்களுக்கும் சற்று ஏமாற்றம்தான்.  எனினும் தண்ணீர் நிறைய விழும் காலங்களில் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து மகிழ வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்...நல்ல ஒப்பீடு!!!!!!!

      அதென்னவோ இப்படி வீழ்ந்தது கூட எனக்கு சந்தோஷம் அட்லீஸ்ட் ஒன்றுமே இல்லாமல் வற்ண்டு இல்லாம கொஞ்சமேனும் அருவின்னு ஒன்று இங்கு இருக்குன்னு காட்டியதே!! என்று...

      கற்பனை செய்து பார்த்தேன் அப்படி ஒரு சீசனில் போக வேண்டும் வாய்ப்பு கிடைக்குமா....அங்கு தங்கி அனுபவிக்க வேண்டும் ஸ்ரீராம்...அத்தனை அழகான இடம்

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  8. பதில்கள்
    1. ஆமாம் டிடி இயற்கை என்றுமே எப்பவுமே அழகுதான் நாம் பாழ்பண்ணாத வரையில் ஆனால் பாழ்பண்ணினால் அது நம்மை துவம்சம் செய்துவிடும்!!!

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  9. படங்கள் எடுத்த வரைக்கும் OK. அருவி கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கிறது. விவரங்களை டைரியில் குறித்து வைத்திருந்தீர்களா? இத்தனை நாள் கழிந்தும் சரியாக சொல்வதற்கு. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக எனக்கு இப்படிச் சுற்றிய இடங்கள் மறப்பதில்லை ஜெ கே அண்ணா. நல்ல நினைவு இருக்கும்.

      இருந்தாலும் சிலவற்றை மொபைலில் என் வாய்ஸில் பதிந்து வைத்திருந்தேன் குறிப்பாகப் பெயர்களை அருவியின் பெயர்கள், சில விவரங்கள்... அதை கம்ப்யூட்டரில் காப்பி செய்து வைத்திருந்தேன்....ஆனால் அதுவும் ரிப்பேர் ஆன ஹார்ட் டிஸ்கில் போய்விட்டது...ஆனால் நினைவில் இருந்ததை நெட்டில் சரி பார்த்துக் கொண்டேன். சில விடுபட்டிருக்க வாய்ப்புண்டு...

      ஆனால் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் நினைவுகள்...இவை போன்றவைதான்...என் மிகச் சிறு வயதில் நான் அனுபவித்த இலங்கை வாழ்க்கை கூட இப்போதும் அப்படியே எழுத முடியும் அளவிற்கு நினைவில் உள்ளது. நாங்கள் இருந்த தெரு, படித்த பள்ளி, அருகில் இருந்த கோயில்கள், விவேகானந்தா கல்லூரி போன்றவை, இலங்கை வானொலிக்குச் சென்ற அனுபவம் எல்லாமே...ராஜேஷ்வரி சண்முகம் அவர்களுடன் பழகிய நாட்கள் அனைத்தும்

      மிக்க நன்றி ஜெகே அண்ணா...

      கீதா

      நீக்கு
  10. ஆஹா... அத்தனை படங்களும் அருமை... குறிப்பாக அந்த மலை பகுதிகள். அதிலுள்ள ரயில் தடங்கள்... படத்திலேயே இவ்வளவு அழகாக காட்சி தருகிறது என்றால்... நேரில் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கும்!!!...

    பதிலளிநீக்கு