என்னோடு எல்லோரும் ஏறிவிட்டீர்கள்தானே! சென்ற பதிவை வாசித்துக் காத்திருந்தமைக்கு மிக்க நன்றி. இப்போது இத்தலத்தைப் பற்றி....
பிரதோஷ வழிபாட்டிற்குப் பெயர் பெற்ற சுருட்டப்பள்ளி – ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்
தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில எல்லையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஊத்துக்கோட்டையிலிருந்து 2 கிமீட்டர் தூரத்தில் ஆந்திர எல்லை தொடங்கும் சுருட்டப்பள்ளி எனும் சிறிய ஊரில்தான், ஆரணி ஆற்றின் கரையில் பள்ளி கொண்டிருக்கிறார் பரமேஸ்வரன்!