சில்லு - 1 - மங்கையராகப் பிறப்பதற்கே...
மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும் என்று எங்கள் ஊர் தாத்தா கவிமணி பாடியிருக்கிறார். கல்லூரியில் படித்த போது இதை நான் மேடை தோறும் முழங்கியிருக்கிறேன். ஆனால் அந்த முழக்கம் எல்லாம், எப்போது பெண்கள் பாலியல் துன்பத்துக்கு ஆளாவதும், சிவப்பு விளக்கிற்குத் தள்ளப்படுவதும் என்னைத் தாக்கத் தொடங்கியதோ அப்போது நின்றுவிட்டது.