திங்கள், 23 பிப்ரவரி, 2026

தலக்காடு - 12 - வைத்யேஸ்வரா கோயில் / வைத்யநாதேஸ்வரா கோயில் - 5 - நிறைவுப் பகுதி

 தலக்காடு12345 , 6 , 7 , 8 , 9 , 10 , 11

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

கோயிலைச் சுற்றிச் சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே முன்பக்கம் வந்து கொண்டிருக்கிறோம் இல்லையா. இப்ப முன்பக்கத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். என்றாலும் நிறைய சிற்பங்கள்!

இப்பதிவில் கொஞ்சம் நிறையவே படங்கள் இருக்கலாம். காரணம், வேலை. இன்றோ நாளையோ வந்துவிடும். வந்துவிட்டால் வலைப்பக்கம் அதிகம் நேரம் செலவிட முடியாது என்பதால் மீதி இருக்கும் சிற்பங்களின் படங்களையும் போட்டு, கோயிலை ஒட்டி இருக்கும் வீரபத்ரேஸ்வரர் கோவிலின் படங்களையும் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்ததைச் சொல்லி மங்களம் பாடிடலாம் என்று....எவ்வளவு நாளா தலைக்காடை சுத்திட்டிருக்கோம் இல்ல?... சரி சிற்பங்கள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்...

மஹிஷாசுர மர்தினி ரம்ய கபர்தினி சைலசுதே? சிற்பம் என்று எனக்குத் தோன்றுகிறது

பிரம்மா 

https://www.youtube.com/watch?v=2NjWzUZSqfQ

பிரம்மா என்றதும் ஏதேனும் சினிமா பாடல் இருக்கிறதா என்று ஆராய்ந்தேன். அழகான பழைய தெலுங்கு பாடல் ஒன்று கிடைத்தது. அதன் சுட்டிதான் இது. ஆடியோ கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கிறது என்பதையும் சொல்லிவிடுகிறேன். 

சூரியன் மற்றும் அவரது இரு மனைவிமார்களுடன்? என்று எனக்குத் தோன்றுகிறது....


அழகான பெண் சிற்பம். கூடவே சுற்றிலும் எவ்வளவு அழகான நுணுக்கமான டிசைன்கள் செதுக்கியிருக்காங்க!

சிவன் என்று தெரிகிறது ஆனால் என்ன மூர்த்தம் என்று தெரியவில்லை

 https://www.youtube.com/watch?v=jLQqWQW4S4s&t=40s

எப்படி இப்பூமி, அது தரும் பிராணவாயு, காற்று, நீர், இரவு பகல், உறக்கம், உணவு எல்லா உயிர்களுக்கும் சமமோ அது போன்று சமூக அந்தஸ்திலும் அனுபவங்களிலும் வேறுபாடுகள் இருந்தாலும் அனைத்து உயிர்களுக்குள்ளும், மனித உயிர் உட்பட இருக்கும் உண்மைப் பொருள் ஒன்றே, என்று சொல்லும் பாடல். நீங்களும் கேட்டுப் பாருங்க! எனக்கு ரொம்பப் பிடித்த பாடல்.  

விஷ்ணு துர்கையா? துர்கையா? 

யார் யாரைச் சுமந்திருக்கிறார்? இடுப்பில் இருப்பவரின் தலையைக் காணவில்லை. இல்லை ஃபோட்டோவுக்கு வெட்கப்பட்டுக் கொண்டு பின்பக்கம் மறைத்திருக்கிறாரா!!?

நண்பா! கருணைக்கடலே!

எனக்கு வேண்டும் வரங்களை

இசைப்பேன் கேளாய் கணபதி!

மனத்திற் சலன மில்லாமல்,

மதியில் இருளே தோன்றாமல்,

நினைக்கும் பொழுது நின்மவுன

நிலைவந் திடநீ செயல்வேண்டும்.

கனகுஞ் செல்வம், நூறுவயது:

இவையும் தரநீ கடவாயே 

(பாரதியின் விநாயகர் நாண்மணிமாலை)

மீண்டும் கண்ணப்ப நாயனார் வலப்புறம்

மார்கண்டேயர் இடப்புறம். 

மேலே இடப்புறம் உள்ள மார்கண்டேயர் சிற்பம் தனியாக

அயிகிரி நந்தினி நந்தித மேதினி

இதோ திருச்சுற்று முடியப் போகிறது.... 

முன்பக்கம் வருவதற்கு வலப்புறம் திரும்பும் முன் இடப்பக்க மூலையில்
 இப்படி ஒரு சன்னதி..சிவன்...

ஹப்பா ஒரு வழியாகச் சுற்றி முன்பக்கம் நுழைவுவாயிலுக்கு வந்துவிட்டோம் தெரிகிறதா? துவாரபாலகர் (முதல் பதிவில் போட்டிருந்தேன்) 

முன்பக்கம் வந்தும், அடடா! சுற்றி வரத் தொடங்கும் போது வலப்பக்கம் திரும்பி சைட் சுவர் மற்றும் சைடில் இருந்த நுழைவுவாயில் தூண்களில் சிலவற்றை எடுக்காமல் விட்டிருந்தவை தெரிந்ததும் உடனே க்ளிக்ஸ். ஏற்கனவே சைட் சுவர், மண்டபத் தூண்கள் படங்கள் பகிர்ந்துவிட்டேன். கோவிலை விட்டு வெளியில் வரும் முன் மீண்டும் வலப்புறம் சைட்சுவர் மற்றும் சைட் நுழைவு வாயில் தூண்களில் கடைசியில்  எடுத்த படங்கள் இதோ கீழே...

 

மன்மதன்?

கோயிலில் இருந்து வெளியில் வந்ததும், அதை ஒட்டி வீரபத்ரர்சுவாமி கோயில். 

வாசலில் நந்தி, உள்ளே செல்லும் முன் பகுதியில் பிள்ளையார். வேறு படங்கள் எடுக்கவில்லை. கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஜஸ்ட் பார்த்துவிட்டு வெளியில் வந்தால் நந்தி இருக்கும் படத்தில் படிக்கட்டுகள் தெரிகின்றன இல்லையா? இப்படிக்கட்டுகள் வழி ஏறி பார்க்கிங் பகுதிக்குச் செல்ல வேண்டும்.

அப்படிக்கட்டுகளின் வழி ஏறிச் சென்றால் கூடாரப் பாதை. கூடாரப் பாதை வழியாகச் செல்லும் போது வலப்பக்கம் இப்படி மரங்களும் மணல் மேடுமாக....

மணலில் கால்கள் புதைய ஒரு 10 நிமிடம் நடந்தால் நேராக முதலில் பார்த்த பாதாளீஸ்வரர் கோவிலின் முன் சென்றுவிடுவோம். அப்படியே இடப்பக்கம் திரும்பி வந்த வழியே மீண்டும் மணலில் நடை. (இப்படங்கள் எல்லாம் தலக்காடு பதிவுகளின் முதல் பகுதிகளில் பகிர்ந்துவிட்டேன்) பார்க்கிங் பகுதிக்குச் சென்றடைந்த போது மணி 4.45 ஆகியிருந்தது. வண்டியில் ஏறி நேராக வீடு நோக்கிப் பயணம். 

மத்தூர் செல்லும் வழியில் இந்த இரு படங்கள் மற்றும் கீழுள்ள ஒரு படத்தில் வயல்களில் தூரத்தில் வெள்ளையாகத் தெரிபவை கொக்குகள். ஓடும் வண்டியிலிருந்து எடுத்த காட்சிகள் 

 

வழியில் அப்பாவிற்கு எங்கேனும் சூடாகக் காஃபி வாங்கிக் கொடுக்கலாம் என்றால் எங்கும் சரியாக இல்லை.  நெல்லைக்கும், எனக்கும் மத்தூர் வடை எங்கேனும் சுவைக்க வேண்டும் என்று ஆசை. மத்தூர் வழிதானே செல்வோம் எனவே "மத்தூர் டிஃபனிஸ்" (Maddur Tiffinys. கிளைகள் பல இடங்களில் இருக்கின்றன.) உணவகத்தில் நன்றாக இருக்கும் என்று இணையத்தில் பார்த்திருந்தேன். ஸ்ரீதரும் அதையே சொல்ல, மத்தூர் சென்றதும் அந்த உணவகத்தில் நிறுத்தினார். நேரம் 6 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. 

உணவகத்தில் கூட்டம். பார்க்கிங் பகுதியிலிருந்து கொஞ்சம் நடக்க வேண்டும் என்பதால் அப்பாவை காரிலேயே இருக்க வைத்துவிட்டு நாங்கள் உள்ளே சென்று  எல்லோரும் Refresh செய்து கொண்டு, காஃபியும் மத்துர் வடையும் சாப்பிட்டுவிட்டு அப்பாவுக்கும் வாங்கிக் கொண்டு கொடுத்துவிட்டு பெங்களூர் நோக்கிப் பயணித்தோம். 

நெல்லையின் குடியிருப்பை அடைந்த போதே மணி 7.30. அவர் இறங்கிக் கொண்டார். நாங்கள் வீட்டை அடைய 8.45 ஆகிவிட்டது. மறுநாள் நம்மவர் அலுவலகம் செல்ல வேண்டுமே! அப்படியாக என் நெடுநாள் ஆசையான தலைக்காடு பார்த்துவிட்டு வந்தாயிற்று என்றாலும் தலக்காடு பஞ்ச்சலிங்கேஸ்வரர் கோயில்களில் 3 தானே பார்க்க முடிந்தது. இன்னும் இரு கோவில்கள் இருக்கின்றன! எப்போது போக முடியுமோ! I am waiting with my fingers crossed!


-----கீதா

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

தலக்காடு - 11 - வைத்யேஸ்வரா கோயில் / வைத்யநாதேஸ்வரா கோயில் - 4

 தலக்காடு12345 , 6 , 7 , 8 , 9 , 10

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

சிவராத்திரி

  

ஜோதிர் லிங்கமாய் பிர்பஞ்சத்தில் எங்கும் சிவமயமாகவும் சிவசக்தியாகவும் நிற்கும் பரம் பொருளுக்கான ஒரு ராத்திரி. மாதமிருமுறை அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் முன் வந்து போகும் பிரதோஷம் விரதம் ஆகின்ற சிவராத்திரி வருடத்தில் மாசி மாதம் வரும் அமாவாசைக்கு முன் வரும் போது மகா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

தலக்காடு - 10 - வைத்யேஸ்வரா கோயில் / வைத்யநாதேஸ்வரா கோயில் - 3

  தலக்காடு- 1, 2, 3, 4, 5 , 6 , 7 , 8 , 9

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்த பதிவில் கோவிலின் பின்பக்கம் பார்த்தவை படங்களுடன் என்று முடித்திருந்தேன். கோயிலைச் சுற்றி வரும் போது பின் பகுதியில் சிவலிங்க சன்னதி 

இறைவன் லிங்க வடிவில் தெரிகிறாரா? வாயிலில் துவாரபாலகர்கள் சிற்பங்கள். மேலே கஜலக்ஷ்மி இருப்பது வித்தியாசமாக இருக்கிறது

அந்த சன்னதி மண்டபத்தின் தூண்கள்

அந்த சன்னதி மண்டபத்திலிருந்து இறங்கினால் அதனோடு இணைந்து பெரிய மண்டபம்.
அந்த மண்டபத்தில் இருந்த ஒவ்வொரு தூணிலும் சுற்றிலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள். இந்த மண்டபத்தில் சிற்பங்கள் விஜயநகரக் கலையாம். 

மார்கண்டேயர் புராணம் சொல்லும் சிற்பம். (நன்றி கோமதிக்கா. கோமதிக்காவிடம் கேட்டுக் கொண்டேன்) 

ஞானமே உருவான ஆஞ்சநேயனும்

பார்த்ததுமே தெரிந்துவிடும். 
இரண்டு நந்தி வடிவமைப்பிற்கும் வித்தியாசம் இருப்பது தெரிகிறதா? 
யாளி வடிவம்(ங்கள்)

சிவகணம்.  இக்கோயிலில் இச்சிற்பத்தை ஆங்காங்கே காணலாம்.

காலன் வரும்முன்னே கண்பஞ் சடைமுன்னே

பாலுன் கடைவாய்ப் படுமுன்னேமேல்விழுந்து

உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே

குற்றாலத் தானை நினை - (பட்டினத்தார்)

ஜல் ஜல் ஜல் எனச் சதங்கைகள் ஒலித்திட

கொல் கொல் கொல் எனத் தலைகளை மிதித்திட

நஞ்சுடை காளியன் நலிந்து மடிந்திட

செஞ்சடையனைப் போல் களிநடம் புரிந்திட!

(நன்றி கவிநயாம்மா) 

பிக்ஷாடன மூர்த்தி (பிட்சாடனர்)? சிவனின் 64 மூர்த்தங்களுள் அழகான வடிவம். இந்தச் சிற்பத்தில் கொஞ்சம் வித்தியாசமாக செதுக்கியிருக்கிறார்கள்

அங்கம் தழைக்க அருளும் பரனே!

அடியார்க்கு பிச்சையளிக்கும் இறைவனே!

தங்கும் பிக்ஷாடன மூர்த்தி போற்றி!

தருணமிதே அருள்புரிய வாராய்!

(திருமூலர் மந்திரம்)

 

பொய்ந் நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கும், அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறவாமை உயிர் அளிப்பான்,
எந் நின்ற யோனியுமாய், பிறந்தாய்! இமையோர் தலைவா!
மெய் நின்று கேட்டருளாய், அடியேன் செய்யும் விண்ணப்பமே.

(நம்மாழ்வார் பாடல்)

 

குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்*

அன்று ஞாலம் அளந்த பிரான்* பரன்

சென்றுசேர் திருவேங்கடமாமலை*

ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே. 

(நம்மாழ்வார் பாடல்) 


கோயிலின் கருவறையின் பின் பகுதி

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்

காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு

மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே

மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

(அபிராமி அந்தாதி)

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் - பரம்

குன்றம் ஏறி நின்று குமரா என்று

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

(கவிஞர் வாலி)

இன்னும் அடுத்த பகுதியில் தொடரும்...


----கீதா