ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

தலக்காடு - 9 - வைத்யேஸ்வரா கோயில் / வைத்யநாதேஸ்வரா கோயில் - 3

  தலக்காடு- 1, 2, 3, 4, 5 , 6 , 7 , 8

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்த பதிவில் கோவிலின் பின்பக்கம் பார்த்தவை படங்களுடன் என்று முடித்திருந்தேன். கோயிலைச் சுற்றி வரும் போது பின் பகுதியில் சிவலிங்க சன்னதி 

இறைவன் லிங்க வடிவில் தெரிகிறாரா? வாயிலில் துவாரபாலகர்கள் சிற்பங்கள். மேலே கஜலக்ஷ்மி இருப்பது வித்தியாசமாக இருக்கிறது

அந்த சன்னதி மண்டபத்தின் தூண்கள்

அந்த சன்னதி மண்டபத்திலிருந்து இறங்கினால் அதனோடு இணைந்து பெரிய மண்டபம்.
அந்த மண்டபத்தில் இருந்த ஒவ்வொரு தூணிலும் சுற்றிலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள். இந்த மண்டபத்தில் சிற்பங்கள் விஜயநகரக் கலையாம். 

மார்கண்டேயர் புராணம் சொல்லும் சிற்பம். (நன்றி கோமதிக்கா. கோமதிக்காவிடம் கேட்டுக் கொண்டேன்) 

ஞானமே உருவான ஆஞ்சநேயனும்

பார்த்ததுமே தெரிந்துவிடும். 
இரண்டு நந்தி வடிவமைப்பிற்கும் வித்தியாசம் இருப்பது தெரிகிறதா? 
யாளி வடிவம்(ங்கள்)

சிவகணம்.  இக்கோயிலில் இச்சிற்பத்தை ஆங்காங்கே காணலாம்.

காலன் வரும்முன்னே கண்பஞ் சடைமுன்னே

பாலுன் கடைவாய்ப் படுமுன்னேமேல்விழுந்து

உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே

குற்றாலத் தானை நினை - (பட்டினத்தார்)

ஜல் ஜல் ஜல் எனச் சதங்கைகள் ஒலித்திட

கொல் கொல் கொல் எனத் தலைகளை மிதித்திட

நஞ்சுடை காளியன் நலிந்து மடிந்திட

செஞ்சடையனைப் போல் களிநடம் புரிந்திட!

(நன்றி கவிநயாம்மா) 

பிக்ஷாடன மூர்த்தி (பிட்சாடனர்)? சிவனின் 64 மூர்த்தங்களுள் அழகான வடிவம். இந்தச் சிற்பத்தில் கொஞ்சம் வித்தியாசமாக செதுக்கியிருக்கிறார்கள்

அங்கம் தழைக்க அருளும் பரனே!

அடியார்க்கு பிச்சையளிக்கும் இறைவனே!

தங்கும் பிக்ஷாடன மூர்த்தி போற்றி!

தருணமிதே அருள்புரிய வாராய்!

(திருமூலர் மந்திரம்)

 

பொய்ந் நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கும், அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறவாமை உயிர் அளிப்பான்,
எந் நின்ற யோனியுமாய், பிறந்தாய்! இமையோர் தலைவா!
மெய் நின்று கேட்டருளாய், அடியேன் செய்யும் விண்ணப்பமே.

(நம்மாழ்வார் பாடல்)

 

குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்*

அன்று ஞாலம் அளந்த பிரான்* பரன்

சென்றுசேர் திருவேங்கடமாமலை*

ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே. 

(நம்மாழ்வார் பாடல்) 


கோயிலின் கருவறையின் பின் பகுதி

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்

காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு

மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே

மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

(அபிராமி அந்தாதி)

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் - பரம்

குன்றம் ஏறி நின்று குமரா என்று

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

(கவிஞர் வாலி)

இன்னும் அடுத்த பகுதியில் தொடரும்...


----கீதா

புதன், 28 ஜனவரி, 2026

தலக்காடு - 8 - வைத்யேஸ்வரா கோயில் / வைத்யநாதேஸ்வரா கோயில் - 2

  தலக்காடு- 1,  2345 , 6 , 7 , 8


கருத்திடுபவர்களுக்கு -  நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு வசதியாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

சென்ற பதிவில் வைத்தியேஸ்வரா கோயிலினுள் சென்றதைத் தொடங்கியிருந்தேன் இல்லையா. அப்போதே 4 மணி ஆகியிருந்தது. ஒரு நாள் பயணம் என்றால் நம்மவருக்கு எங்கு சென்றாலும் அதிகபட்சம் 7 மணிக்குள் வீட்டிற்கு வந்துவிட வேண்டும். அப்போதே மணி 4. கோவிலை பார்த்துவிட்டு வண்டி நிறுத்திய இடத்திற்குச் சென்று காரில் ஏறி பயணத்தைத் தொடங்கினால் பெங்களூருக்குள் நுழைவதற்கே 2 1/2 மணி நேரம் ஆகிவிடும். அதன் பின் பெங்களூர் போக்குவரத்தை சமாளித்து வீட்டிற்குச் செல்ல மணி 8.30 அல்லது சற்றுக் கூடுதலும் ஆகிவிடும். அப்பாவை வேறு அழைத்துக் கொண்டு போயிருந்தோம். 

கோயிலுக்குள் நுழையும் போதே நெல்லை என்னிடம், "லேட்டாகிறதே உங்க ஹஸ்பண்டுக்குக் கஷ்டமாகிடுமோ" என்றார். 

"இவ்வளவு தூரம் வந்தாச்சு. பார்த்துக் கொள்ளலாம். கோவிலுக்குள் போய் படங்களேனும் எடுத்துடலாம். மீண்டும் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியலை." அப்படி நெல்லையிடம் சொல்லிக் கொண்டே கோவிலுக்குள் நுழைந்தாலும், உள்ளுக்குள் ஒரு சின்ன கலக்கம் இருக்கத்தான் செய்தது. 

அடுத்தாற் போல் கோவிலைச் சுற்றி இருக்கும் சிற்பங்கள் மற்றும் வேலைப்பாடுகளைப் பார்த்துக் கொண்டே சுற்றி வருவோம் என்று சென்ற பதிவில் முடித்திருந்தேன் இல்லையா. இறைவன் இருக்கும் கர்பகிரஹம், அர்த்த மண்டபத்தை இணைக்கும் பெரிய வெளி மண்டபத்திற்குள் நுழையும் முன்னர்  துவாரபாலகர் மற்றும் தூண்கள் படங்களைப் பகிர்ந்திருந்தேன்.  

உள்ளே நுழைந்ததும் வைத்தியேஸ்வரர் பெரிய லிங்க வடிவில் தரிசனம் தருகிறார். முருகன், பிள்ளையார் எல்லோரும் வீற்றிருக்கிறார்கள். ஆனால் படங்கள் எடுக்க அனுமதி இல்லை. 

மண்டபத்திலிருந்து  வெளியில் வந்ததும் சுற்றி வருவதற்கு வலப்பக்கம் திரும்பும் இடத்தில் காணொளி எடுக்கத் தொடங்கினேன். கொஞ்சம் மட்டுமே காணொளியில் இருக்கும். முழு காணொளி எடுக்க முடியவில்லை. 

கோயிலின் உள்ளே இருந்து வெளியில் வந்ததும் கோயிலைச் சுற்றி வர வலப்பக்கம் திரும்பியதும் கொஞ்சமாக

நம்ம நெல்லை ஒற்றைக் கையில் மொபைலை வைத்துக் கொண்டு குறுக்குவாட்டிலும் நெடுக்குவாட்டிலும் பிடித்துக் கொண்டு மிக மிக வேகமாகப் படம் எடுத்துக் கொண்டே சென்றார். அவர் திறமை எனக்கு வியப்பு! 

நான் படம் எடுக்கவில்லை என்றால் நடந்திருக்கலாம் அந்த வேகத்திற்கு. ஆனால் படம் எடுக்காம முடியாதே! அதுவும் இவ்வளவு அழகிய கோயிலை, உங்களுக்கும் காட்ட வேண்டுமல்லவா! அப்புறம் சான்ஸ் கிடைக்குமா என்று தெரியாது. படங்களேனும் பார்த்துக் கொள்ளலாமே!  ஆனால், நான் மெதுவாகச் சென்றால் அப்புறம் என்னைத் தேடுவார்கள். வேகமாகச் சென்றதால் காணொளி எடுக்காமல் படங்கள் மட்டுமே அதுவும் எனக்கு இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டுதான் எடுக்க முடியும். இருந்த நேரத்தில் முடிந்தவற்றை எடுத்துக் கொண்டு வந்தாச்சு.   

இனி மேலே உள்ள காணொளியைத் தொடர்ந்து இருக்கும் சிற்பங்களின் படங்கள். 

 

சோழ, ஹொய்சாள, விஜயநகர எல்லாக் கலைகளும் ஆங்காங்கே இருக்கும். முன்பக்க மண்டபம் படத்தில் வலப்புறம் இருப்பது தெரிகிறதா? அங்கிருந்து இறங்கி இப்படிச் சுற்றி வரும் போது சிற்பங்கள்...
காளிங்க நர்த்தனம் சின்னதாகத் தெரிகிறது
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இப்படம் இணையத்திலிருந்து. 
இப்படம் இணையத்திலிருந்து.  இப்படிச் சுற்றி வரும் போது வலது புறம் ஒரு நுழைவு வாயில். படத்தில் இடப்புறம் தெரிகிறதா? அங்கும் இரு துவாரபாலகர்கள் மற்றும் தூண்களில் மிக அழகான சிற்பங்கள்.  
இப்படமும் இணையத்திலிருந்து. மேலே உள்ள படத்தில் உள்ள அந்த சைடு நுழைவு வாயில் இது.  
-----------------------------------------------------------------------------------------------------------------------
மற்றவை  நான் எடுத்தவை கீழே....
சைடு நுழைவு வாயிலில் உள்ள துவாரபாலகர்களுக்கும் முகப்பு மண்டபத்தில் இருந்த துவாரபாலகர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது 

இந்தச் சிற்பம் - அபஸ்மரா (முயலகன்) என்பது மனிதனின் அறியாமை, அகந்தையை குறிப்பதாக அந்த அசுரன் மீது, நடராஜப் பெருமான் தனது வலது காலை வைத்து மிதித்து, அதாவது மனிதர்கள் நம் அறியாமையை அடக்கி, ஞானத்தை நிலைநிறுத்துவதாக அவரது cosmic dance (சிவ நர்த்தனம்) தூணின் மேலே நந்தி, பிள்ளையார்

 

தூணின் மேலே புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர் அருகில் உள்ளவை சிதைந்திருப்பதால் சரியாகத் தெரியவில்லை. அவரின் கீழ் நரசிம்மர். கீழே விஷ்ணு, பூதேவி, ஸ்ரீதேவி? 

கருடன், இடப்பக்கம் சைடில் கார்த்திகேயன் வள்ளி? 

ஒவ்வொரு தூணிலும் துளைகள் இருப்பதைக் காண முடிகிறதா? 
சிற்பம் சிதைந்திருக்கிறது 
இப்படித் திருச்சுற்றில் நிறைய சிவலிங்க, நந்தி திருஉருவங்களைக் காணலாம். கீழே இரு சன்னதிகள். இந்த இரு சன்னதிகளும் நாம் மேலே பார்த்த நுழைவுவாயிலின் எதிரே. நம் இடப்பக்கம்
இதோ மேலே பார்த்த அந்த சிற்பங்கள் நிறைந்த தூண்களுடன் சைடு நுழைவுவாயில் வலப்புறம் தெரிகிறதா? அங்கிருந்து அப்படியே சிற்பங்களைப் படம் எடுத்துக் கொண்டே சுற்றி வருகிறோம். இப்படி மடிந்து மடிந்து வருது பாருங்க, ஹொய்சாளர் கலைவடிவம் என்று தெரிகிறது இல்லையா? 

இதோ கர்பகிரஹத்தின் மேலுள்ள கோபுரம், இப்பகுதி கர்பகிரஹத்தின் வலப்புறம். 

அங்கிருந்து மீண்டும் சிற்பங்களை படம் பிடித்துக் கொண்டே 

கோயிலின் பின்புறம் வந்துவிட்டோம். இடப்புறம் சைடில் இப்படி ஒரு மேடையில் சிவலிங்கம். பின்பக்கம் நாங்கள் வந்த கூடாரப் பாதை
மேடையில் சிவலிங்கம் இப்படி ஆங்காங்கே. பின்பக்கம் நாங்கள் வந்த கூடாரப் பாதை

அடுத்த பதிவில் கோவிலின் பின்பக்கம் பார்த்தவற்றைப் படங்களுடன் பார்ப்போம். 

ஒரு சிறிய தகவல் - தலக்காடு பஞ்சலிங்கேஸ்வரர் கோவில்கள் என்று பார்த்துவருகிறோம் இல்லையா? அவை பஞ்சபூதங்களைக் குறிக்கின்றனவாம். பாதாளீஸ்வரா (நிலம்), மருலீஸ்வரா (நீர்), அர்க்கேஸ்வரா (நெருப்பு) (இக்கோவில் நாங்கள் செல்ல முடியவில்லை), வைத்யேஸ்வரா (வானம்/ஆகாசம்) இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் கோயில், மல்லிகார்ஜ்ஜுனா (வாயு) (இக்கோயிலும் நாங்கள் செல்ல முடியவில்லை)

அடுத்த பதிவில் தொடர்வோம்...


------கீதா

சனி, 24 ஜனவரி, 2026

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி 2025 பரிசு பெற்ற கதைகளைப் பற்றி...பகுதி - 7 - 7/7

 கதைகளைப் பற்றி - 1/7 , 2/7 , 3/7 , 4/7 , 5/7 , 6/7

சென்ற வருடம் பரிசு பெற்றக் கதைகளைப் பற்றி என் பார்வையில் சொல்லியிருந்தேன்.  இந்த வருடம் போட்டியில் நானும் கலந்து கொண்டு பரிசு பெற்றதால் சற்று கவனத்தோடுதான் கதைத்துக் கொண்டுவருகிறேன். நான் பெரிய எழுத்தாளர் அல்ல. ஏதேனும் குறை இருந்தால்,  ஆசிரியர்கள் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.  நட்புகளும் சுட்டிக் காட்டலாம். என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும் என்ற முன்னுரையுடன் அடுத்த பகுதி 7/7. நிறைவுப்பகுதி

கருத்திடுபவர்களுக்கு -  நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், எனக்கு யாரென்று புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

---------------------------------------------------------------------

புதன், 21 ஜனவரி, 2026

தலக்காடு - 8 - வைத்யேஸ்வரா கோயில் / வைத்யநாதேஸ்வரா கோயில் - 1

 தலக்காடு- 1,  2345 , 6 , 7

கருத்திடுபவர்களுக்கு -  நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், எனக்கு யாரென்று புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------