சனி, 3 மே, 2025

ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் - ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் - பயணம் - 8

சலீம் அலி மையம் - பார்ப்பதற்கு முன்னர் ஒரு விஷயம் 

நம்ம நெல்லையும் (நெல்லை என்னைக் கலாய்த்தது நம்மவீட்டவரின் பெயரை வைத்து என்று என் ஊகம்!!!!), ஸ்ரீராமும் “ரங்கன திட்டு” என்று ஏன் ரங்கன திட்டறீங்கன்னு கலாய்த்திருந்தார்கள்.

வியாழன், 24 ஏப்ரல், 2025

ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் - ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் - பயணம் - 7

ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தில் உள்ள பூங்காவும், நீரோடையும், சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதும்தான் இப்பகுதியில்.

சென்ற பதிவில், //அழகான பூங்கா, பூங்காக்குள் ஓடும் ஓடை ஆங்காங்கே இருக்கும் பாலங்கள் இவை எல்லாம் அடுத்த பதிவில்.// என்று சொல்லி முடித்திருந்தேன்

திங்கள், 21 ஏப்ரல், 2025

ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் - ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் - பயணம் - 6

ரங்கனதிட்டு - இப்பதிவில் பறவைகளைப் பார்வையிடும் கோபுரம் 

படகிலிருந்து இறங்கியதும் நேரே இருக்கும் கடையிலிருந்து (சென்ற பதிவில் போட்டிருந்தேனே அக்கடைதான்) வலப்புறம் இதோ பாருங்க ஒரு தகவல் கைகாட்டிப் பலகை. தொங்கு பாலம், கண்ணாடி பாலத்துக்கான வழி என்று காட்டுகிறது.

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் - ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் - பயணம் - 5

படகில் சென்ற போது எடுத்த சில படங்களை முந்தைய பதிவில் பகிர்ந்திருந்தேன் இல்லையா? இப்ப மிச்சம் மீதியையும் பகிரணுமே! இல்லைனா எனக்குத் தூக்கம் வராதே! பறவைகள் எல்லாம் தூக்கத்துல வந்து சண்டை போடும்! திட்டும். மிரட்டும். அந்த மரத்துல இருந்தவங்களை காட்டின நீ, இந்த மரத்துல நாங்க இருக்கோம் காட்ட மாட்டியா அப்ப எதுக்குப் படம் புடிச்சேன்னு....

இந்தப் பதிவில் அதிகம் வாசிக்க இருக்காது. பார்ப்பது மட்டும்தான்.

Red Wattled Lapwing Bird - செம்மூக்கு ஆட்காட்டி பறவை

https://youtu.be/TVQEMCZ9hGQ

அன்றில் பறவைகள்/அறிவாள் மூக்கன்

நான் அங்கு அப்பெண் அருகில் நின்று தூரத்தில் தெரியும் பறவைகளை கேமராவில் எடுக்க முடியுமா என்று ஆராய்ந்த போது என் கணவர் என் மொபைலில் தூரத்தில் தெரிந்த பறவைகளை க்ளிக் செய்திருக்கிறார். என் கேமராவில் மிஸ் ஆன காட்சி. அப்பெண் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். 
இந்த மரத்தில் உச்சியிலும் நத்தை குத்தி நாரை மரத்தில் வந்து இறங்கிவிட்டது

இந்த மரத்தில் நத்தை குத்தி நாரை இறங்கப் போகிறது

இவை கேமராவில் முந்தைய பதிவிலும், இங்கு கீழேயும்....ஜூம் செய்து எடுத்தவை

Cormorant - நீர்க்காகம்


*******************************
ஆறுவித்தியாசங்கள் கண்டுபிடிங்கன்னு குமுதம் ஸ்டைலில்...

இதே காட்சியை இன்னும் கொஞ்சம் ஜூம் செய்தேன்....கீழே...

அதே காட்சியை இன்னும் கொஞ்சம் கூட ஜூம் செய்து எடுத்தேன்... கீழே

ஜூம் செய்ததில் பெலிக்கன்ஸ் வந்தன....இடப்புறம் இருந்த நீர்க்காகங்கள் வரவில்லை. மூன்று படங்களுக்கும் வித்தியாசங்கள் தெரிகின்றன இல்லையா? படகு நகர....நான் ஜூம் செய்ய...

இது, மேலே இதுக்கு முந்தைய படத்தில் உள்ள மரம் இல்லைங்க...இது வேற மரம். வித்தியாசம் தெரியும் பாருங்க

நின்று கொண்டிருந்த நாரையை கேமராவில் பிடிக்க முயன்ற போது, அலகில் குச்சியை எடுத்துக் கொண்டு பறக்க சிறகை விரித்து சில அடிகள் உயரே எழுந்தது. அதன் அசைவில் படம் இப்படி ஆகிவிட்டது. எதிர்பார்க்கவில்லை.

இதுதான் கடைசிப் படம். 1/2 மணி நேரம் படகு சவாரி முடிந்து கரைக்கு வந்தாச்சு படகு நிற்கப் போகிறது. படத்தில் வலப்புறம் ஓரமாக பெரிய படகுகள் இருப்பது தெரிகிறதா? 18 பேர் செல்லும் துடுப்புப் படகு. இந்தப் படத்தில் ஒரு நாரை நிற்பது தெரிகிறதா? நம்மவர் அதை க்ளிக் செய்திருக்கிறார் ஜூம் செய்யாமல்...

இறங்கியதும் படகுத் துறைக்கு நேர் எதிரே இந்தக் கடை, இங்கு டீ காஃபி, ஏதோ கொறிக்கவும் கிடைக்கிறது. இடப்புறம் கோக்கோகோலா. கடைய சும்மா வேடிக்கை பார்த்துவிட்டு டீ காஃபி,  கோக் ஏதாச்சும் குடிக்கணும்னா குடித்துவிட்டு...அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது அடுத்த பதிவில்.

 


------கீதா

சனி, 12 ஏப்ரல், 2025

ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் - ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் - பயணம் - 3

படங்கள் போட்டு விவரங்கள் எழுதினால், இப்படி எத்தனை பகுதிகள் போகும் என்று!! ஹாஹாஹா! சத்தியமாக எனக்குத் தெரியலைங்க பதிவு எப்படி எழுதுவது என்று! நம் கமலாக்கா, கோமதிக்கா ஆசையோடு படங்களைப் பார்ப்பார்களே என்றும், இடங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் இப்படியேனும் பார்த்துக் கொள்ளலாமே என்றும் எனக்குத் தெரிந்ததை, நான் பார்த்தவற்றை எல்லாம் பகிர வேண்டும் என்ற ஆவலில், ஆர்வத்தில், பதிவுகள் கொஞ்சம் நிறைய பகுதிகளாகப் பிரித்துப் போடும்படி ஆகிவிடுகிறது.  அதனால் பறவைகள் பகுதி வர தாமதமாகிறது.


இதோ இந்த இடத்துக்குத்தாங்க நாம போகணும். இந்த இடம் பற்றிய தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். டிக்கெட் எடுக்க வேண்டாமா? வாங்கிவிட்டு அப்படியே படகுத்துறைக்குப் போகும் வழியில் இருப்பதைப் பார்த்துக் கொண்டே போவோம். 

செவ்வாய், 8 ஏப்ரல், 2025

வெளிவந்த கதையும் வெளிவராத கதையும்

ரங்கனதிட்டு பறவைகளைப் பார்க்க டிக்கெட் வாங்கும் வரை கொஞ்சம் இடைவெளியில் ஒரு பதிவு.

என் ஃபோல்டரில் மூன்று வருடங்களுக்கும் மேலாகக் கிடந்த (அப்பாவின்) நாற்காலி, 2025 மார்ச் மாத கணையாழி இதழில் வெளியானது. கணையாழி ஆசிரியருக்கும், குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றி. முதன் முறையாக இதழில் வெளிவந்திருக்கிறது. கணையாழிக்கு அனுப்புவதற்கு முதற் காரணமாகவும் தூண்டுகோலாகவும் இருந்தவர் நம்ம நட்பு எங்கள் ப்ளாக் ஸ்ரீராம். அவருக்கு என் நன்றி உரையை வழங்கிக் கொள்கிறேன்!

வியாழன், 3 ஏப்ரல், 2025

ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் - ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் - பயணம் - 2

பாண்டவபுரா ரயில் நிலையம். வலப்புறம் தெரியும் 2 வது நடைமேடையில் இறங்கி நடைபாதை மேல் பாலம் வழியாக 1 ஆம் நடைமேடையில் இறங்கும் முன் இந்த வளைவு தெரிந்ததும், அழகாக இருக்கா, ஒரு க்ளிக்

ஞாயிறு, 30 மார்ச், 2025

ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் - ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் - பயணம் - 1

பெங்களூரிலிருந்து 3, 4 மணி நேரப் பயணத்தில் - குறிப்பாக சாம்ராஜ்நகர், மாண்டியா மாவட்டங்களில் - சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் இருக்கின்றன. (அருகில் மைசூர், மடிக்கேரி). கொக்கரேபெல்லூர் சென்றுவந்த உடனேயே அடுத்த வார ஞாயிறில் அதாவது மார்ச் தொடத்திலேயே ரங்கனதிட்டு சென்று விட்டு வரவேண்டும் - பறவைகள் சீசன் என்பதால் - என்ற திட்டம் இருந்தது. ஆனால், சென்னைக்குச் செல்வது அந்தச் சனிக்கிழமையா அல்லது அடுத்த சனிக்கிழமையா என்ற குழப்பம் இருந்தது.

புதன், 26 மார்ச், 2025

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி - 2024 - பரிசு வென்ற கதைகளைப் பற்றிய என் பார்வை - 5 - நிறைவுப்பகுதி

 ஒரு பிரியமான கதை - ஸ்ரீமதி ரவி

ஸ்ரீமதி ரவி என்ற புனைபெயரில் எழுதும் திரு பி டி ரவிச்சந்திரன் அவர்கள் சிறந்த புகைப்படக் கலைஞர். விகடனில் இவரது முதல் கதை வெளிவந்ததும், ஆசிரியர் பாலசுப்ரமணியன், கதை நன்றாக இருக்கிறது என்று இவரைத் தொடர்ந்து விகடனில் எழுதச் சொன்னாராம். நிறைய பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்.