கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும்
போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ்,
நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால்,
யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
=========================================================================
பீமநகரி - 1
எங்கள் கிராமத்தின் ஜடாயுபுரம் ஆற்றங்கரைப் பகுதி வடக்கு/வடமேற்குப் பகுதியில் என்றால் பீமநகரி எனும் சின்ன கிராமம் (இப்போது பெரிதாகிவிட்டது) எங்கள் கிராமத்தின் வடகிழக்குப் பகுதியில். இரண்டிற்கும் நடுவில் வயல்கள், தோப்புகள், தேரேகால் வாய்க்கால், வீரநாராயணமங்கலம் - நாஞ்சில்நாடன் அவர்கள் பிறந்து வளர்ந்த ஊர் - செல்லும் சாலை. பீமநகரி நோக்கி, இயற்கைக் காட்சிகளைப் பார்த்தபடியே நடப்போம் வாங்க...வீட்டிலிருந்து கிளம்பியாச்சு.