கிட்டத்தட்ட
15 வருடங்களுக்கும் மேலாக இப்போது வரை எங்கள் வீட்டுச் சூழலில் இடங்களைப் பார்ப்பதற்கான
பயணம் மேற்கொள்வது என்பது ரொம்பவும் கடினமான ஒன்றாக, யோசித்துச் செய்ய வேண்டியதாக உள்ளது.
தவிர்க்கமுடியாத
காரணங்கள் என்றால் மட்டுமே இருவருமாக ஒரு நாள் பயணம் மட்டுமே அதுவும் பல முன்னேற்பாடுகளுடன்
மேற்கொள்ள வேண்டிய சூழல். எனவே சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை மட்டுமேனும் பெங்களூருவுக்குள் சென்று வரலாம் என்று இடையில் செல்வதுண்டு. எனக்கு வெளியில் சுற்றிப் பார்ப்பது
என்பது மிகவும் பிடிக்கும் அதுவும் பயணம் என்றால் துள்ளல்தான். இல்லை என்றால் கொஞ்சம்
அயற்சி ஏற்படுகிறதுதான் எனக்கு.
அப்படி ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று சென்ற கோயில் தான் பெங்களூரில், Domlur (டொம்லூர்? டோம்லூர்) டோம்லூரில் உள்ள சூரிய நாராயணர் கோயில். இந்தியாவில் உள்ள மிகச் சில சூரிய பகவான் கோயில்களில் ஒன்று என்று சொல்லப்படுகிறது.