இந்தப்
பதிவை நான் சைவம் படப் பாடல்களைக் கேட்டதும், உத்ரா பாடியிருக்கும் பாடல்
காட்சியைப் பார்த்ததும் எழுதத் தொடங்கி, அதற்குக் கண்டிப்பாக அவளுக்கு அவார்ட்
கிடைக்கும் என்பதையும் எழுதி, பிசாசு படம் பார்த்ததும் மீண்டும் எழுதி, முடிக்காமல்,
இப்போது மூன்றுமணி எனும் மலையாள சீரியலின் டைட்டில் பாடலாக இந்தக் குழந்தையின்
பாட்டு வருவதைக் கேட்டதும், எப்படியேனும் முடித்து, இந்தக் குழந்தையைப் பாராட்டியே
ஆக வேண்டும் என்ற ஒரு உத்வேகத்திலும், நான் அப்போது சொன்ன அவார்ட் அவளுக்குக்
கிடைத்தது குறித்த மகிழ்விலும், காதில் ஹெட் செட் வைத்துக் கொண்டு இந்தச் சிறு
குழந்தையின் இனிமையான குரலில், உணர்வுகளோடு, அனுபவித்துப் பாடிய அந்தத் தேன் குரல்
பாடல்களைக் கேட்டுக் கொண்டே எழுதி முடித்தேன்.
உத்ரா
உன்னிக் கிருஷ்ணன்! பிரபல கர்நாடக சங்கீதப் பாடகரும், திரைப்படப் பின்னணிப்
பாடகரும் ஆன திரு உன்னிக் கிருஷ்ணன் அவர்களின் செல்லப் புதல்வி! புலிக்குப்
பிறந்தது பூனையாகுமா! புலி எட்டடி
பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும்!
ஆம்! 16 அடி அல்ல இந்தக் குட்டிப்
பெண் பல உயரங்கள் பாய்ந்துவிட்டாள், தந்தையை விட, இந்த மிகச் சிறிய வயதில்! என்ன
தவம் செய்தனை உன்னிக் கிருஷ்ணா! என்று பாட
வேண்டும் போல் உள்ளது. அந்த அளவிற்குத் தன்
குரலால் மயக்கிக் கட்டிப் போட்டுவிட்டாள்.
பல வருடங்கள், பல கர்நாடக இசைப் பாடகர்கள் எனது
மானசீக குருவாக இருந்தார்கள், நான் ஏகலைவியாக. அதில் திரு உன்னிக் கிருஷ்ணனும்
உண்டு. சில நாட்களுக்கு முன், திருமணம் எனும் நிக்காஹ் படத்தில்
என்னைக் கவர்ந்த “கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்” பாடலை, அதனைப் பாடியவர்களை என்
மானசீக குருவாக வைத்துக் கொண்டு நான் ஏகலைவியாகக் கற்றுக் கொண்டேன். அதனைப் பாடி பதிவும் செய்தேன். தற்போது எனது
மானசீக குருவாகிப் போனாள் இந்தக் குட்டிப் பெண் உத்தரா உன்னிக் கிருஷ்ணன்.
தந்தையும் எனது மானசீகக் குரு, அவரது பெண்ணும் இப்போது! அவளது பாடல்களைக் கேட்டுக்
கற்றுக் கொண்டிருக்கின்றேன்!
சைவம் படத்தில் அழகு பாடல்
இந்தப் பாடல் எப்படி உருவாகிய விதம் தந்தையிடம் கற்று மெருகூட்டல் காணொளி
குட்டிப்
பெண் பாடிய சைவம் படப் பாடல் “அழகு” அழகு! நா முத்துக்குமார் அவர்களின் வரிகளில், மெய் சிலிர்க்க வைத்த பாடல். (சுப்புத்
தாத்தாவின் ஃபேவரிட் ராகத்தில் அமைந்த பாடல்-கானடா ராகத்தில்...கொஞ்சம் காபியின்
சுவை எட்டிப் பார்க்கிறதோ!!?) அவள் சுவரங்களும், ஜதியும் எப்படிப் பாடுகின்றாள்
அந்தப் பாடலில்! அந்தப் பாடலுக்குத் தேசீய
விருதும் வாங்கிவிட்டாள் இந்தக் குட்டி சங்கீத தேவதை! அவள் அளித்த பேட்டியில்
குழந்தை மனசு வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றது.
தேசீய விருது பற்றித் தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லுவது உட்பட! அது அறிவிக்கப்பட்ட போது அதை அவளது தாத்தா
சொல்லிய போது உத்ரா கணினியில் விளையாடிக் கொண்டிருந்தாளாம். உன்னிக் கிருஷ்ணன் அவர்களும் ஊரில்
இல்லையாம். தந்தை உன்னிக் கிருஷ்ணன்
குருவல்ல. டாக்டர் சுதா ராஜா தான் இவளது
குரு! உத்ரா! குட்டிப் பெண்ணே! உன்னால்
உனது பெற்றோர்களுக்குப் பெருமை!
பிசாசு படத்தில் "போகும் பாதை"
பிசாசு
படத்தில் உத்ரா பாடிய பாடல் “போகும் பாதை தூரமில்லை”. ஆம்!
குட்டிப் பெண்ணே! நீ போகும் பாதை வெகு தூரமில்லை இன்னும் பல உயரங்களைத்
தொட! தமிழச்சியின் வரிகள் அருமை. உத்ராவின் குரல் அதனை அப்படியே பிரதிபலித்து மனதை உருக்கி, நெகிழச் செய்துவிட்டது! கீரவாணி ராகத்தில் அமைந்த பாடல். அந்த வயலின் நோட்ஸ் ஆஹா! மனதை என்னமோ செய்கின்றது. முன்பே ராஜா போட்டதுதான் என்றாலும்....
தற்போது இப்போது மூணுமணி எனும் மலையாள தொடரில் மிக ரம்யமான ஒரு டைட்டில் பாடல் பாடியுள்ளாள். மன நிலை குன்றிய பெண் கதாபாத்திரத்திற்கு. காபி ராகத்தில் அமைந்த பாடல்...
இந்த 50 வயது இளம்?! கிழவிக்கு மானசீக குருவாகிப் போனாயடிப் பெண்ணே! இளம் கிழவியின் ராயல் சல்யூட்!! தேசீய விருது
வாங்கியதற்கும், இன்னும் நீ பல உயரங்களைத் தொடவும், விருதுகளைப் பெறவும், எங்களை
எல்லாம் உனது இனிய குரலால், நல்ல பாடல்களால் மகிழ்விக்கவும், கர்நாடக இசை மேடைகளில்
பாடி மிளிரவும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! வலையுலக சார்பில்! வாழ்க நீ
பல்லாண்டு குட்டி சங்கீத தேவதையே!
பின் குறிப்பு: இதை எழுதி வைத்தும் விடுபட்டு விட்டது பதிவில் பதிய. நண்பர் ஜோதிஜியின் பின்னூட்டம் அதை நினைவு படுத்த இதோ விடுபட்ட வரிகள்....
இன்னும் இது போன்ற பின்புலம் இல்லாத திறமை மிக்க குழந்தைகள் பலர் உள்ளனர். அவர்களும் வெளிச்சத்திற்கு வர வேண்டும். குழந்தைகளின் திறமை ஆச்சரியம் அளிக்கின்றதுதான். பண்டும் இருந்தார்கள் ஆனால் அப்போது இது போன்று வெளிச்சம் போட்டுக் காட்ட ஊடகங்கள் இல்லையே. இப்போதும் கூட ஊடகங்கள் இருந்தாலும். திறமை மிக்க குழந்தைகள் பலர் வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ளதால் வெளி வர முடியாமல் இருக்கின்றனர் தான் என்பதையும் இங்கு சொல்லியே ஆக வேண்டும்......
பின் குறிப்பு: இதை எழுதி வைத்தும் விடுபட்டு விட்டது பதிவில் பதிய. நண்பர் ஜோதிஜியின் பின்னூட்டம் அதை நினைவு படுத்த இதோ விடுபட்ட வரிகள்....
இன்னும் இது போன்ற பின்புலம் இல்லாத திறமை மிக்க குழந்தைகள் பலர் உள்ளனர். அவர்களும் வெளிச்சத்திற்கு வர வேண்டும். குழந்தைகளின் திறமை ஆச்சரியம் அளிக்கின்றதுதான். பண்டும் இருந்தார்கள் ஆனால் அப்போது இது போன்று வெளிச்சம் போட்டுக் காட்ட ஊடகங்கள் இல்லையே. இப்போதும் கூட ஊடகங்கள் இருந்தாலும். திறமை மிக்க குழந்தைகள் பலர் வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ளதால் வெளி வர முடியாமல் இருக்கின்றனர் தான் என்பதையும் இங்கு சொல்லியே ஆக வேண்டும்......
----கீதா
படங்கள் : கூகுளில் இருந்து