கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும்
போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ்,
நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால்,
யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
=========================================================================
பீமநகரி - 1
எங்கள் கிராமத்தின் ஜடாயுபுரம் ஆற்றங்கரைப் பகுதி வடக்கு/வடமேற்குப் பகுதியில் என்றால் பீமநகரி எனும் சின்ன கிராமம் (இப்போது பெரிதாகிவிட்டது) எங்கள் கிராமத்தின் வடகிழக்குப் பகுதியில். இரண்டிற்கும் நடுவில் வயல்கள், தோப்புகள், தேரேகால் வாய்க்கால், வீரநாராயணமங்கலம் - நாஞ்சில்நாடன் அவர்கள் பிறந்து வளர்ந்த ஊர் - செல்லும் சாலை. பீமநகரி நோக்கி, இயற்கைக் காட்சிகளைப் பார்த்தபடியே நடப்போம் வாங்க...வீட்டிலிருந்து கிளம்பியாச்சு.
பார்த்தீங்கல்ல, சுற்றிலும் இவ்வளவு வயல்களும் தோப்புகளும் இருக்கையில் அந்த ஆராய்ச்சி மையம் இங்கு அவசியம் தானே? என்ன சொல்றீங்க? சின்ன வயதில் என் மனதில் அந்த மையங்கள் விதைத்த விதை, விவசாய பட்டப்படிப்பு படிக்கணும் என்ற ஆசை. ஆனால் விதை வாழ்க்கை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது!
வெள்ளம் வந்த போது என்னவோ பெரிய ஊடக நிரூபர் போன்று இந்தக் கிராமம் வரை சென்று மேலே உள்ள பகுதிகள் எல்லாம் வளைச்சு வளைச்சு காணொளிகள் எடுத்துப் பகிர்ந்திருந்தேன்! உங்களுக்கு நினைவு இருக்கலாம்.. இல்லைனாலும்!!!! No Problem!
வெள்ளம் வடிந்த பின் தினமும் நடைப் பயிற்சி சென்ற போது, பீமநகரி பகுதிக்கும் சென்று அப்படியே ஒரு சுற்று சுற்றி வரும் சாலையில் வந்தால் எங்கள் கிராமத்திற்குள் வந்துவிடலாம். அருகில் இருக்கும் பகுதிகள் எல்லாமே அடுத்தடுத்து என்பதால் நடந்தே சுற்றிச் சுற்றி வந்துவிடலாம். அப்படிச் சென்று எடுத்த படங்கள்தான் இவை.
இன்னும் தொடரும் எங்கள் ஊர்ப்பகுதி அழகைக் காட்டினால்தானே, நான் எப்படியான இயற்கை சூழ் பகுதியில் பிறந்து வளர்ந்திருக்கிறேன், இயற்கை ஆர்வம், புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எல்லாம் வந்தது...நான் சொல்வதெல்லாம், "ஆமால்ல....இம்புட்டு அழகா! உண்மை உண்மை உண்மை" அப்படினு சொல்வீங்கல்ல!!! எவ்வளவு அழகுல்ல எங்க ஊர்ப்பகுதி!
-------கீதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக