திங்கள், 8 ஜூன், 2026

அழகே! அழகே! பாரதத்தின் தென் கோடி அழகே - 3

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

=========================================================================

பீமநகரி - 1

எங்கள் கிராமத்தின் ஜடாயுபுரம் ஆற்றங்கரைப் பகுதி வடக்கு/வடமேற்குப் பகுதியில் என்றால் பீமநகரி எனும் சின்ன கிராமம் (இப்போது பெரிதாகிவிட்டது) எங்கள் கிராமத்தின் வடகிழக்குப் பகுதியில். இரண்டிற்கும் நடுவில் வயல்கள், தோப்புகள், தேரேகால் வாய்க்கால், வீரநாராயணமங்கலம் - நாஞ்சில்நாடன் அவர்கள் பிறந்து வளர்ந்த ஊர் - செல்லும்  சாலை. பீமநகரி நோக்கி, இயற்கைக் காட்சிகளைப் பார்த்தபடியே நடப்போம் வாங்க...வீட்டிலிருந்து கிளம்பியாச்சு. 

அப்படிச் செல்லும் சாலையின் இடப்புறம் ஜடாயுபுரம் ஆற்றங்கரைப் பகுதி படங்களில், பீமநகரி இரண்டிற்கும் நடுவில் செல்லும் சாலை வழியாக பீமநகரிக்கு நடை.... 
அப்படி நடக்கையில் சமீபகாலமாக இருக்கும் இந்த பண்ணையைப் பார்க்க நேர்ந்தது. 
வலப்புறம் தேரேகால் வாய்க்கால். படத்தில் தெரியும் பாலம் வழி பீமநகரி கிராமத்திற்குச் செல்ல வேண்டும். 
தேரேகால் வாய்க்காலில் இருந்து இப்படி இடப்புறம் ஜடாயுபுரம் நோக்கி அங்கு வயல்களுக்குப் பாசனத்திற்காக அப்பப்ப திறந்துவிடப்படும் சின்ன வாய்க்கால்
இதோ பாலம் அருகில் வந்தாச்சு....இருங்க அதுக்கு முன்னாடி....
பாலம் வழி திரும்பாம நேரே போனா, வீரநாராயணமங்கலம் கிராமம்...நம்ம நாஞ்சில் நாடன் அவர்களின் ஊர் அப்படிப் போற சாலையின் இடப்புறம் இப்படித் தென்னந்தோப்புகள். வலப்புறம் தேரேகால் வாய்க்கால்...
ஆனால் நாம இப்ப....இந்தப் பாலத்துல திரும்பியாச்சு பீமநகரி போவதற்கு...
இந்த வாய்க்கால் பீமநகரி போகும் சாலையின் வலப்புறம்....இந்த வயல்களுக்கு நீர்ப்பாசனத்துக்கு...
சாலையை உங்களுக்குக் காட்டவே இல்லையே இதோ இது வழிதான்...இடப்புறம் இருக்கும் கட்டிடங்கள் விவசாயத் துறைக்கான   ARS எனப்படும் விவசாய ஆராய்ச்சி மையங்கள்.  இதுக்கான விவசாய பண்ணைப் பயிற்ச்சி மையம் எங்கள் ஊர்ப்பக்கம். 
விதை சுத்திகரிப்பு மையம்
விதை சுத்திகரிப்பு மையத்தின் எதிர்ப்புறம், நாம நடக்கும் போது இந்த வாய்க்கால்...முதல்ல பார்த்ததுதான் நம்ம கூட வந்துட்டே இருக்கும்...
அதோ வலப்புறம் தெரிகிறதா ஒரு கட்டிடம்  அதன் படம் கீழ வரும்...அதுக்கு இடையில் 
நமக்காக வயலில் உழைக்கும் உழைப்பாளிகளையும் பார்த்து நன்றி சொல்லிவிட்டு......இதோ மேலே சொன்ன கட்டிடம் என்னன்னு பார்ப்போம் கீழே
வேளாண்மைத் துறை உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம், மண் பரிசோதனை நிலையம். இந்த ஆராய்ச்சி மையங்களில்தான் நான் அப்ப அங்கு இருந்த போது TPM 1, 2, 3 வகை நெல் வகைகள் அதிக மகசூல் தரும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டன. பாருங்க நம்ம ஊரின் பெருமைகளை! 
பார்த்தீங்கல்ல, சுற்றிலும் இவ்வளவு வயல்களும் தோப்புகளும் இருக்கையில் அந்த ஆராய்ச்சி மையம் இங்கு அவசியம் தானே? என்ன சொல்றீங்க?  சின்ன வயதில் என் மனதில் அந்த மையங்கள் விதைத்த விதை, விவசாய பட்டப்படிப்பு படிக்கணும் என்ற ஆசை. ஆனால் விதை வாழ்க்கை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது! 
அதோ தெரிகிறதா ஊர்? அதுதாங்க பீமநகரி கிராமம்...இங்க சுத்தி இயற்கையைப் பார்த்துக் கொண்டே ஆசுவாசப்படுத்திக்குவோம்.  அப்புறம் ஊருக்குள்ளாற போவோம்... 

எங்கள் கிராமத்திலிருந்து 1.5 கிமீ. நடந்தே செல்லும் பகுதி.  ஆனால் நடக்கும் போது தூரம் தெரியவே தெரியாது.

வெள்ளம் வந்த போது என்னவோ பெரிய ஊடக நிரூபர் போன்று இந்தக் கிராமம் வரை சென்று மேலே உள்ள பகுதிகள் எல்லாம் வளைச்சு வளைச்சு காணொளிகள் எடுத்துப் பகிர்ந்திருந்தேன்! உங்களுக்கு நினைவு இருக்கலாம்.. இல்லைனாலும்!!!! No Problem!

வெள்ளம் வடிந்த பின் தினமும் நடைப் பயிற்சி சென்ற போது,  பீமநகரி பகுதிக்கும் சென்று அப்படியே ஒரு சுற்று சுற்றி வரும் சாலையில் வந்தால் எங்கள் கிராமத்திற்குள் வந்துவிடலாம்.  அருகில் இருக்கும் பகுதிகள் எல்லாமே அடுத்தடுத்து என்பதால் நடந்தே சுற்றிச் சுற்றி வந்துவிடலாம். அப்படிச் சென்று எடுத்த படங்கள்தான் இவை. 

இன்னும் தொடரும் எங்கள் ஊர்ப்பகுதி அழகைக் காட்டினால்தானே, நான் எப்படியான இயற்கை சூழ் பகுதியில் பிறந்து வளர்ந்திருக்கிறேன்,  இயற்கை ஆர்வம், புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எல்லாம் வந்தது...நான் சொல்வதெல்லாம், "ஆமால்ல....இம்புட்டு அழகா! உண்மை உண்மை உண்மை" அப்படினு சொல்வீங்கல்ல!!! எவ்வளவு அழகுல்ல எங்க ஊர்ப்பகுதி!


-------கீதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக