அனுகூல். நான் ரசித்துப் பார்த ஒரு குறும்படம். அதைப் பற்றிச் சொல்லும் முன் கொஞ்சம் கதைத்தல்.
நான் ஏற்கனவே இயற்கை வலியது என்ற கதையை எழுதிய போது (எபி யில் வந்தது) அப்போது இந்தப் படம் கண்ணில் படவில்லை. அக்கதை எழுதிய
பின் மேலும் சில கற்பனைகள் மனதில் ஓடியதை வைத்து
எழுதத் தொடங்கிய ஒரு கதை அப்படியே ப்ரேக் போட்டு நிற்கிறது.
செயற்கை
நுண்ணறிவு (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) குறித்து கொஞ்சம் தரவுகள், புதிய ஆய்வுகள்
என்று எடுக்க அவ்வப்போது இணையத்தில் தேடுவதுண்டு. சில மாதங்களுக்கு முன் அப்படித் தேடிய
சமயம் கிடைத்த குறும்படம்தான் இந்த அனுகூல்.
சத்யஜித்ரே
1976ல் எழுதிய அனுகூல் எனும் சிறுகதையைத் தழுவி படத்தை இயக்கியவர் சுஜாய் கோஷ்.
2017 ல் வெளிவந்திருக்கிறது.
படம்
பார்த்ததும் கதையின் மூல வடிவம் கிடைக்கிறதா என்று தேடினால் பெங்காலியில்தான் கிடைத்ததே
அல்லாமல் ஆங்கிலத்திலோ ஹிந்தியிலோ கூடக் கிடைக்கவில்லை.
இதைப்
பற்றி நான் எழுதத் தொடங்கிய சமயம், பானுக்கா, தான் ரசித்த கதை என்று 2003 ல் சுஜாதா
எழுதிய “ரிசப்ஷன் 2010” கதையைப் பற்றி எழுதியிருந்தது எபியில் சனிக்கிழமை அன்று வந்திருந்தது.
அதில் மனிதர்களைப் போலவே வித்தியாசம் தெரியாமல் இயந்திர மனிதர்கள் உலாவிக் கொண்டிருந்தார்கள்
என்று வரும். நான் பதிவு எழுதத் தொடங்கியிருந்ததால் அனுகூல் பற்றி நான் கருத்தில் எதுவும்
சொல்லவில்லை.
மனித
வாழ்க்கைக்குள் இயந்திர மனிதர்கள் புகுந்துவிட்டால் விளைவுகள் என்ன? ஃபிக்ஷனாக 1976ல்
அனுகூல் கதையில் சொல்லியிருக்கிறார் சத்யஜித்ரே. ஆனால் இப்போது அது சாத்தியமாகி வந்து கொண்டிருக்கிறது.
அவருக்கும் அறிவியல் தொழில்நுட்பங்கள், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பற்றி மிகுந்த
ஆர்வம் உண்டாம். அதனால் அதைப் பற்றி அறிந்துகொள்ள நிறைய வாசித்ததாகத் தெரிகிறது.
கதை
இதுதான்…
https://www.youtube.com/watch?v=J2mqIgdae5I
ஒரு
ஹிந்தி ஆசிரியர் தனக்கு உதவிக்காக ரோபோ ஒன்றை வாடகைக்கு எடுக்கிறார். ரோபோவின் பெயர்
அனுகூல். இப்போதெல்லாம் வீட்டு வேலை, பிற வேலைகளுக்கு ஆட்கள் அனுப்பும் ஏஜன் போன்று
ரோபோவை வாடகைக்கு விடுபவர் சொல்வார், எல்லா
நாளும் அனுகூல் வேலை செய்வார், கூடுதல் மணிநேரம் வேலை செய்வதற்கு மேலதிகப் பணம் கொடுக்கத்
தேவையில்லை என்று. ஆனால் மனிதர்களை வாடகைக்கு
விடும் ஏஜண்டுகள் அப்படிச் சொல்வதில்லையே! எனவே வீட்டு வேலைகளுக்கு படத்தில் சொல்வது
போல் வரும் காலம் அருகில்தான்.
அனுகூல்
இவரது வீட்டிற்கு வந்து உதவி செய்கிறார்/து. நிறைய புத்தகங்கள் இருப்பதைப் பார்த்து
ஆர்வம் பெற்று வாசிக்கத் தொடங்குகிறார்/து.
ஆசிரியரும் அனுகூலும் நல்ல புரிதலில் இயங்குகிறார்கள். இருவருக்குள்ளும் ஒரு
பிணைப்பே ஏற்படுகிறது!!!!
ஒரு
நாள் ஆசிரியரின் சித்தப்பா/பெரியப்பா மகன் வீட்டிற்கு வருகிறார். தனக்கு ரோபோவின் வருகையால்
வேலை போனதாகச் சொல்கிறார். அப்போது ஆசிரியரின் உத்தரவுப் படி அனுகூல் அங்கு தேநீர்
கொண்டுவர அனுகூல் ரோபோ என்று தெரிந்ததும் சகோதரருக்குக் கோபம் வருகிறது. வீட்டிற்குள் செல்பவர் அனுகூல் துணி தேய்த்துக் கொண்டிருந்த
போது அந்த இஸ்திரிப் பெட்டியாலேயே அனுகூலைத் தாக்குகிறார். அனுகூல் செயலிழந்துவிடுகிறார்/து.
சேவையாளர்
வந்து அனுகூலை உயிர்ப்பிக்கிறார். (இதன் அடிப்படையில் எனக்கு ஒரு கற்பனை தோன்றியது.
அதுவும் நான் ஆஇ ஒட்டி எழுதும, இப்போது ப்ரேக் போட்டு இருக்கும் கதையில்)
“இந்த
முறை அனுகூல் எதுவும் செய்யவில்லை அதனால் உங்கள் சகோதரர் தப்பித்தார். இனி அவர் மீண்டும்
தாக்கினால் அனுகூல் சும்மா இருக்கமாட்டார் எலக்ட்ரோ சார்ஜ் செய்துவிடுவார்” என்று எச்சரிக்கை
செய்துவிட்டுப் போகிறார்.
இரவு
ஆசிரியர் தூக்கம் வராமல் நடந்து கொண்டிருக்க, அறையில் அனுகூல் புத்தகம் வாசிப்பதைப்
பார்க்கிறார். அனுகூல், ஆசிரியரிடம் ஏதாவது வேண்டுமா என்று கேட்க, தனக்குத் தூக்கம்
வரவில்லை என்று சொல்லி விட்டு, “நீ தூங்கவில்லையா” என்று கேட்க அனுகூல் சொல்கிறார்/து
“எனக்குத் தூக்கம் ஏது?” என்று
அனுகூல்
தான் பகவத் கீதை வாசிப்பதாகவும் புரியவில்லை என்று சொன்னதும் ஆசிரியர், “நீ எனக்கு
தினமும் உதவுகிறாய். இன்று நான் உனக்கு உதவுகிறேன்” என்று சொல்லி “உனக்கு என்ன புரியவில்லை?
கேள்” என்று சொல்லி உரையாடுகிறார். ஆசிரியர் அனுகூல் கேட்கும் கேள்விகளுக்குப் பதில்
சொல்கிறார்.
இதை
நான் இங்கு சொல்வதை விடப் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். மிக மிக அழகான காட்சி.
சிந்திக்க வைத்த உரையாடல்கள்.
உரையாடலின்
இடையே அனுகூல் கேட்பார்/கும்
“யார்
இந்த நீலமனிதர்”
“பகவான்
கிருஷ்ணர்” - ஆசிரியர்.
“ஏன்
அவர் நீலமாக இருக்கிறார்?”
ஆசிரியர்,
கிருஷ்ணர் நீலமாக இருப்பதற்கான, விஷம் குடித்த கதையைச் சுருக்கமாகச் சொன்னதும்,
“அவர் இறக்கவில்லையா?” என்று கேட்கிறது அனுகூல்.
“அவர்
பகவான். எப்படி இறப்பார்?” என்று ஆசிரியர் சொன்னதும், உடனே அனுகூல் சொல்கிறார்/து
“நானும்
இறக்க முடியாது” என்று!!!!!
ஆசிரியர்
கொஞ்சம் ஜெர்க் ஆகி, “இல்லை அது வெவ்வேறு விஷயங்கள். அதை விடு, உனக்கு கீதையில் என்ன
புரியவில்லை அதைச் சொல்” என்று சொல்லி தர்மம், கடமை என்பதை பற்றி அனுகூல் கேட்க ஆசிரியர்
பதில் சொல்கிறார்.
சரி
எது தவறு எது, நியாயம் இதெல்லாம் எப்படி முடிவு செய்யப்படும் என்று அனுகூல் கேட்க ஆசிரியர்
நெஞ்சைத் தொட்டு, “மனசாட்சி” என்று சொல்லும் போது அனுகூலும் தன் நெஞ்சில் கை வைத்துப்
பார்த்துக் கொள்ளும்.
இதன்
அர்த்தம் படத்தின் முடிவில் உங்களுக்குப் புரியும்.
இதைப்
பார்க்கும் போது கிட்டத்தட்ட மனித மூளைக்கு நிகரான இயந்திர மனிதன் என்பது புரிகிறது.
இப்போது இந்தக் கதையில் வரும் அனுகூல் போல கிட்டத்தட்ட வந்தாயிற்று. அனுகூல் போலவே விரைவில் வந்து விடும் என்றே தோன்றுகிறது.
இதோ
கீழே உள்ள சுட்டியைப் பாருங்கள். சவுதி அரேபியாவின் குடியுரிமை (சிட்டிசன்ஷிப்) பெற்ற
சோஃபியாவைச் சந்தியுங்கள். (ஏன் பெண்? பெண் ரோபோதான் ஈர்க்கும் என்றோ?!!)
https://www.youtube.com/watch?v=uDoBKpTckuU
மனிதனுக்கும்,
மனிதனால் உருவாக்கப்படும் ரோபோவுக்கும் உள்ள வேறுபாடுகள் மனிதனுக்கு இருக்கும் சுய
சிந்தனை, இரக்கம், வருத்தம், ஆசாபாசங்கள் போன்ற நுண்ணுணர்வுகள். இவை எல்லாம் ரோபோவுக்குள்
சில்லு சில்லுகளாய் நிறுவப்பட்டால், ரோபோக்கள் கேள்வி கேட்கத் தொடங்கினால், அப்படி
மனித மூளைக்கு நிகராகச் சிந்தித்து முடிவு எடுக்கத் தொடங்கினால்? என்னாகும்? மனிதன்
தன் சுயநலத் தேவைக்கு ஏற்ப ரோபோவை வடிவமைத்தால்…? உலகம் ரோபோ உலகமாகிவிடும் அபாயம்
இருக்கிறதோ?
Artificial
Intelligence is the manifestation of the failure of humanity to understand
natural intelligence. It is going to snatch away the nature from everybody’s
life, in second by second basis and is designed to swallow humans from nature
forever. Nature wins!
-------கீதா