பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 அக்டோபர், 2025

மத்யரங்கம் - சிவனசமுத்திரம் - தலக்காடு - பகுதி 1

ஸ்ரீரங்கம், ஆதிரங்கம் போயாச்சு மத்யரங்கம் போக வேண்டாமா பல வருஷமாச்சு என்று வீட்டில் சொல்லப்பட்டதும், மத்யரங்கத்தின் அருகில்தானே சிவனசமுத்திரமும் தலக்காடும். இந்த இரு இடங்களும் என் லிஸ்டில் பல வருடங்களாக, சொல்லப் போனால், 2001-2002ல் பெங்களூரில் இருந்தபோது போய், அப்போதைய வசதிகள் சரியாக இல்லாததால் - காரணம் நாங்கள் பொதுப்போக்குவரத்தை உபயோகிப்பதால் - சரியாகப் பார்க்க முடியாமல்   விட்ட இடங்களாச்சே என்று நம்மவரிடம் சொல்லி அப்ரூவல் கிடைக்குமான்னு ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

திங்கள், 25 டிசம்பர், 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 27 - தருமபுரி - கிருஷ்ணகிரி மலைகள் - 1

வணக்கம், வந்தனம். பதிவுகளுக்கு இடையில் ரொம்பவே இடைவெளி வந்துவிட்டது. இதென்ன புதுசான்னு கேட்கக் கூடாது. இது Customary வசனம். எழுதிய பதிவுகளில் சில தொடரும் என்று போட்டிருந்த பதிவுகள் என்னன்னு எனக்கே மறந்துவிட்டது. உங்களுக்கும் மறந்திருக்கலாம். அப்பதிவுகளின் தொடர்ச்சி வருமா? புகழ்பெற்ற வசனமான "வரும் ஆனா வராது" கேஸ் தான்.  இதற்கான காரணத்தை - ஏன் என்னால் எழுத இயலவில்லை என்பதை - என்னை நானே சுயபரிசோதனை செய்து ஆராய்ந்த போது தெரிந்து கொண்டதைச் சொல்ல வேண்டும் என்றால் பின்னோக்கிச் செல்ல வேண்டும். அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல எழுத வேண்டும்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

கடம்போடுவாழ்வு - 4

வணக்கம்! வந்தனம்! சுஸ்வாகதம்! 

இன்னும் பசுமையான வளமான படங்கள் எல்லாம் அடுத்த பதிவில் என்று சென்ற பதிவில் சொல்லி முடித்திருந்தேன்.  சென்ற பதிவைப் பார்த்த, வாசித்த, கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. 

இதோ 4 வது பகுதி. கடம்போடுவாழ்வின் பசுமையான படங்கள்.  கூடவே ஒரு சிறு முன்ஜாமீன்!!! எடுத்து வைத்துக் கொள்கிறேன்!!!!!!! என் மூன்றாவது விழிக்காக!  

சனி, 19 மார்ச், 2022

கடம்போடுவாழ்வு - 3

 

//இப்பத்தானே ஊருக்குள் வந்திருக்கோம். கொஞ்சம் ஆற அமர ஊரின் வளத்தை, செழிப்பை, உழைப்பைப் பார்க்க அடுத்த பகுதியில் ஊர் சுற்றுவோம்// என்று முடித்திருந்தேன். கடம்போடுவாழ்வு 2

அப்பதிவிற்கும், எனது மூன்றாவதுவிழியின் பார்வையில் பதிவிற்கும் கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி.

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

நாகர்கோவில் - கடம்போடுவாழ்வு - 1


பெங்களூர் – நாகர்கோவில்  (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 11 

சென்ற பதிவில் - திருநெல்வேலி - நாகர்கோவில் பதிவு - 5 ல் நாகர்கோவில் சென்றதும் அங்கிருந்து கடம்போடுவாழ்வு செல்வதற்காகப் பேருந்து ஏற வடசேரி பேருந்து நிலையம் செல்வது பற்றிச் சொல்லி முடித்திருந்தேன்.  மீண்டும் யு டர்ன் வந்த வழியே ஆனால் சாலை வழிப்பயணம் ஏர்வாடி வரை. எனவே அதே வெள்ளமடம், தோவாளை, ஆரல்வாய்மொழி, முப்பந்தல், காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர், ஏர்வாடி.