சில நாட்களுக்கு முன் பிரயாணம்.வேனலினால் காதிற்குள் கட்டி, சீழ் எனற நிலை! மூன்றாவது காது பயன்படுத்த முடியாத நிலை. காதோடுதான் நான் பாடுவேன்/பேசுவேன்னு நீங்க பேசினாலும் ம்ஹூம் கேட்காது. எனவே மனதோடுதான் நான் பேசுவேன்! விழியோடுதான் விளையாடுவேன்! விழியோடுதான் விளையாடிக் கொண்டிருந்தேன். இப்போது பிரச்சனை தீர்ந்து மூன்றாவது காதைப் போட்டுக் கொள்ள முடிகிறது. எனவே நீங்கள் என் காதிலும் பாடலாம், பேசலாம்.... மனதோடும் பேசலாம், நான் விழியோடும் விளையாடலாம்.