“கேக்கற செய்திய நம்பறதானு தெரில....அவன் இறந்துட்டான்னும் சொல்லிக்கறாங்க...”
“அடப்பாவி!”......தொடர்ச்சி இதோ....
“ம்ம்ம் என்னத்த சொல்ல. இது
நம்ம ராஜ்ஜியம் இல்லையே...”
இப்படியாக வருத்தத்துடன் நாட்கள் கடந்து இரு புலியார்களும் சாதாரண
நிலைமைக்கு வந்துவிட்டார்கள்.
“சரி வேற என்ன நாட்டு நடப்பு? என்ன நியூஸ் நீதான் மனுஷங்க வம்புக்கு
அலைவியே”
“அந்த வம்பும் உனக்கும் வேண்டித்தானே இருக்கு. இந்த ஊருல ஒருத்தர் எழுதாறார் இல்லை? வெங்கட்ஜி னு அவரு
போட்டுருந்தாராம்...புதுக்கோட்டைனு ஒரு ஊராமே அங்க இந்த எழுதற மனுசங்க எல்லாம்
மீட்டிங்க் போடுறாங்களாம்.”
“ஏய் இது பழைய நியூஸ். ஆங்க் வெங்கட்ஜி நல்லா ஃபோட்டோ புடிப்பாரு
தெரியுமா? ம்ம் அதுக்குனு இப்ப உடனே போய் அலங்கரம் பண்ணிக்காத. அவரு வரும் போது நம்மள ஒரு ஃபோட்டோ எடுக்கச்
சொல்லிட்டா போச்சு. ச்சே விஜய் இல்லாம போய்ட்டான். ம்ம்ம்... சரி விஷயத்துக்கு வர்ரேன். அதுக்கு அப்புறம் வேற
நியூஸ் எல்லாம் கேட்டுச்சு. காடு ரொம்ப முக்கியம் அப்படினு போட்டி எல்லாம் வைச்சு,
இந்த மாதிரி காட்டை எல்லாம் மனுஷங்க
அழிக்கறாங்க. பூமி சூடாகுது. நாலு காலுங்க எல்லாம் வாழ இடம் இல்லாம
அலையுதுங்க பாவம் அப்படினு நம்மளுக்கு சப்போர்ட் பண்ணி நிறைய பேரு எழுதிருக்காங்க
அது தெரியுமா?”
“ஆரம்பிச்சுட்டியா திரும்பவும் காடு காடுனு....ஹும்...”
“நீ சொகுசுக்குப் பழகிட்ட.
இங்க சுதந்திரக் காத்து இல்ல.
நாத்தக் காத்து. நமக்கு சப்போர்ட் பண்ண நிறைய பேரு இருக்காங்க. அப்புறம்
இந்த விழாவை நடத்தறதுக்கு, நம்ம காட்டு ராஜா மாதிரி அங்க முத்துநிலவன் அப்படினு
ஒரு பெரியவரு இருக்காராம். அவரு வேற நம்மள
அழைச்சுருக்காரு அது தெரியுமா உனக்கு?”
“என்னது மனுஷங்க நம்மள அவங்க மீட்டிங்குக்கு அழைச்சுருக்காங்களா..யேய்
அப்ப நம்ம உஷாரா இருக்கணும். கூப்பிட்டுட்டு நம்மள சுட்டுறப் போறாங்க....
“ஹ்ஹ்ஹ்
ஆமா கண்டிப்பா சுடுவாங்க நம்மள....ஆனா துப்பாக்கியால இல்ல. கேமரா, அது ஏதோ செல்ஃபோனாமே இங்க கூட நிறைய
பேரு நம்மள எடுக்கறாங்க இல்ல.....அத வைச்சு சுடுவாங்க....சுட்டுப் பேப்பர்ல
எல்லாம் போடுவாங்க. சும்மா எப்ப பாரு மனுஷங்கள இப்படிச் சந்தேகப்படுறியே. இங்க பாரு அந்தப் பெரியவரு எப்படிப் பாடி அழைச்சுருக்காருன்னு.....ஆனா
கொடுத்து வைக்கலையே..போக முடியாதே.....
புலியெனப் புறப்பட்டு வா!
சிங்கமென சீறி வா!
அலைகடலென ஆர்ப்பரித்து வா!
(ஆனா மனுசனா மட்டும் வந்துறாதே!) – என்றழைக்கும் அரசியல் பாணியில்
அல்ல நண்பர்களே! (நன்றி முத்துநிலவன் ஐயா)
அந்தக் கடைசி வரி பாத்தியா....மனுசனா மட்டும் வந்துறாதே!!! அப்படினு. அதுவும் அவங்க நாட்டு அரசியல்
பாணில இல்லாம நம்மையும் அன்போடு நண்பர்களே! அப்படினு அழைச்சுருக்காரு பாரு.”
“மாட்டிக்கிட்டியா...மனுசனா
மட்டும் வந்துறாதே! அப்படினா அவரே மனுசங்க
எல்லாம் மோசம் அப்படினுதானே சொல்லிருக்காரு?!! பிரியாணி போடுறாங்களோ அதான் இப்படி நாக்கத் தொங்கப் போட்டுட்டுப்
பாட்டைக் காமிச்சுப் பேசற....”
“ஏய் சும்மாரு. நாம எப்படி போக முடியும்? மனுஷங்கள்ல நல்லவங்களும் இருக்காங்க. அங்க காட்டுல சிங்க ராஜா மீட்டிங்க் போட்டுருக்காருனு சொன்னல. அந்த
மீட்டிங்குக்கும் நாம போக முடியாது நம்மள எங்க இந்த நம்ம டாக்டரும், ஆஃபீசரும்
கூட்டிட்டுப் போகப் போறாங்க. அதனால ஒரு
செய்தி அனுப்பலாமானு யோசனை...மேல ஏதாவது கொக்கு இல்லைனா புறா பறக்குதானு பாரு”
“ஹும் என்ன செய்தியோ? சொல்லு பாக்கறேன்”
“நம்மள அன்போடு அழைச்சுருக்காங்க. எழுதறவங்க பலரும் நமக்கு ஆதரவா பேசறவங்க..
இந்த எங்கள் ப்ளாக் ஆளுங்க இல்ல அவங்க கூட நம்ம ஃபோட்டோ வீடியோ எல்லாம் போடுவாங்க.
வெங்கட்ஜியும் அப்படித்தான். ஜிஎம்பி னு ஒரு வாலிப வயோதிகர், டிடி,(இவர் ரொம்ப ஃபேமஸ்) அப்புறம்
க்ரேஸ் அக்கா, ஏஞ்சலின் அக்கா,, கீதாமதிவாணன் அக்கா, துளசிகோபால் அக்கா, செந்தில்அண்ணன், விசு அண்ணன், கில்லர்ஜி அண்ணன் அப்படினு ஒருத்தர் கில்லர்ன உடனே பயந்துராதே. பேருதான் அப்படி. இப்படி ஒரு பட்டாளமே
இருக்குது நமக்கு ஆதரவா பேச. இவங்கள எல்லாம் சொல்லிட்டு எங்களைச் சொல்லலையேனு யாரும் கேட்டுராதீங்க நீங்க எல்லாருமே எங்களுக்கு ஆதரவாதானே
எழுதறீங்க.”
“நல்ல மணக்குது......இல்ல நீ சோப் போட்டதச் சொன்னேன்....அதுசரி ஒரு முக்கியமான
ஆளை விட்டுட்ட போல....ஏதோ மாறுவேஷத்துல ஓருத்தர் வராருனு நியூஸ் வந்துச்சே”
“ஏய் அது மதுரைத் தமிழன்! பரமரகசியம். வெளில சத்தமா சொல்லாத. அவரும் நம்மளப்
போல புலி வேஷமா இல்ல சிங்க வேஷமா இல்ல....வேற...அவங்க மூதாதையர் வேஷமா.....தெரில. அவரு
பூரிக்கட்டை அடிலருந்து தப்பிக்க இப்படி வந்தாலும் வரலாம் நம்ம கூட்டத்தோட கூட்டமா.
நம்ம சிங்க ராஜா கிட்ட சொல்லணும் காட்டிக் கொடுத்துராதீங்க” அப்படினு. (நம்மளப்
போலனு சொன்ன உடனே ம.தமிழன் கேப்பாரு அட நீங்களும் அப்ப மாறுவேஷம் தானா ஒரிஜினல்
இல்லையா அப்படினு...நாங்க ஒரிஜினல் தமிழா! உர்ர்ர்ர்ர்)
“ஆமா...காட்டு ராஜாகிட்ட சொல்லிரணும் இல்லைனா அப்புறம் ம.தமிழன் கிட்ட
மாட்டிக்கிட்டா அவ்வளவுதான்....ஹிர் ஹிர் ஹிர் ஹிர்...(ஒண்ணும் இல்ல இது எங்க
சிரிப்பு!!). சரி அவங்க மூதாதையர்னா?”
“ம்ம்ம் அப்புறமா சொல்லுறேன். இப்ப விஷயத்துக்கு வரேன். நம்ம சிங்க ராஜாவுக்கு அனுப்ப ஒரு மனு
தயாரிச்சுட்டேன். அவங்கள கேரளாலருந்து, துளசியோட அங்க புதுக்கோட்டைக்கு அனுப்பி
அங்க ஸ்ரீமலையப்பன், மது/கஸ்தூரி விதைக்கலாம் குழுவ பார்த்து, “ஐயா அன்பர்களே
நீங்க மரம் நடுறீங்கனு கேள்விப்பட்டோம். இங்கேயும் நடுங்க, எங்க காட்டுப் பக்கமும்
எங்க ஏரியாவ அழிக்காம, இன்னும் காட்ட விரிவாக்குங்க. அப்படி இல்லைனாலும்
இருக்கறதயாவது எங்களுக்கு விட்டுக் கொடுங்க அப்படினு உங்க அரசுக்கு கோரிக்கை
வைச்சு செயல்படுத்துங்களேன். உங்களுக்குப் புண்ணியமா போகும்.”னு பேசச் சொல்லப்
போறேன்”
“அதேதான்...அங்க பெரிய மனுசங்க எல்லாம் வராங்களாமே! யாராவது நம்ம
கோரிக்கையைக் கேட்க மாட்டாங்களா”
“ம்ம்ம் அந்த நம்பிக்கைதான். சொல்லிட்டு அப்படியே அங்க நம்மள பத்தி
எழுதினவங்கள்ல யாருக்கு முதல் பரிசு, 2வது பரிசு, 3வது பரிசு கிடைக்குதுனு பார்த்துட்டு
கை குலுக்கி குல்ஃபி எடுத்துக்கிட்டு வரச் சொல்லப் போறேன். மனுஷங்க ...
"கிகிகிகி...ஏய் இரு இரு..அது குல்ஃபி இல்ல எனதருமைக் கணவர் புலியாரே! அது செல்ஃபி”.
“சரி ஏதோ ஒண்ணு விடு...ஆமாம் அது என்ன ஒரு மா....திரி சிரிப்பு குல்ஃபினு சொல்லி?”
“அதெல்லாம் மதுரைத் தமிழன் கிட்ட கேளு..சொல்லுவாரு...."
"உர்ர் ..சரி அதெல்லாம் அப்புறம்.....ஆங்க் நான் சொல்ல வந்தது மறந்துரும்.....மனுஷங்க இந்த மாதிரி
விழால என்ன பண்ணறாங்கனும் பார்க்கலாம், நம்ம மனுவ கொடுத்தா, அங்க போற நம்ம உறவுகள ஃபோட்டோ
எடுத்து பேப்பர்ல போட்டு நாம படற கஷ்டத்த எழுதி, மனு பத்தி எல்லாம் போடுவாங்கல்ல? நம்ம
சப்போர்ட்டர் பெரிய மனுசத் தலைகள் படிப்பாங்கல்ல?
ஏதாவது செய்ய மாட்டாங்களானுதான்..”
“ம்ம்ம்ம்ம் எனக்கு இங்கதான் பிடிச்சுருக்கு. ஹாங்க்....சரி இதெல்லாம்
யாரு உனக்கு எழுதிக் கொடுத்தது?”
“அதுவா இதோ நாம பேசறத ஒட்டுக் கேட்டு எழுதுறாங்களே இவங்கதான். சரி நீ போய் பாரு சீக்கிரமா கொக்கு, புறா ஏதாவது பறக்குதானு....இன்னும் 4 நாள் தான் இருக்கு...சீகிரமா இதக்
கொடுத்து விடணும்.”
கீதா


