பீமநகரி 1
பீமநகரி 2
==============================================================
பீமநகரி - 3
சில அடி தூரத்தில் வித்தியாசமான பெயருடன் ஒரு விநாயகர் கோயில் உண்டு. பதிவு பெரிதாகிவிட்டதால், அதை அடுத்த பகுதியில் பார்ப்போமா? என்று முடித்திருந்தேன்.
இதோ அந்த விநாயகர் கோயிலை வெளியிலிருந்துப்
பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் தொடங்குவோம் நம் நடையை! ஜடாயுபுரம், பீமநகரி
முகப்பில்
உள்ள பச்சை நிறப் பலகையில் "அருள்மிகு எதிர்வல்லி சோழ விநாயகர் திருக்கோவில்"
என்று எழுதப்பட்டுள்ளது. படத்தைப் பெரிது பண்ணி பார்த்தால்தான் ஓரளவு தெரியும். எதிர்வல்லி என்பது "எதிரிகளை வெல்பவர்" அல்லது "எதிர்ப்புகளை முறியடிப்பவர்" எனப் பொருள்படும்.
இக்கோயில் சோழ மன்னர்களின் காலத்துடன் தொடர்புடையது, அதனாலேயே விநாயகர் 'சோழ விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார் என்று சொல்லப்படுகிறது.
பல நூற்றாண்டுகள் பழமையான, கருங்கற்களால் ஆன கட்டுமானத்தைக் கொண்ட கோயில்.
இந்த எதிர்வல்லி சோழ விநாயகர், இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும், வேண்டுதல்களை நிறைவேற்றும் நாயகனாகவும் போற்றப்படுகிறார். எதிர்மறை ஆற்றல் (Negative energy) மறைய, இங்கு விநாயகருக்கு சிதறுகாய் உடைத்து வழிபடுவது வழக்கம்.
இக்கோயில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் (TNHRCE) நேரடி வழிபாட்டு
நிர்வாகத்தின் கீழ் வராமல், தனித்துவமான அமைப்பான கன்னியாகுமரி தேவஸ்வம் போர்டின்
(Kanyakumari Devaswom Board) கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. ஆனால் அதுவும் இணைக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் முந்தைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் (கேரளா)
இருந்ததால், இங்குள்ள பெரும்பாலான வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் "கன்னியாகுமரி
தேவஸ்வம் போர்டு" மூலமாகவே நிர்வகிக்கப்படுகின்றன. தமிழ்நாடு அறநிலையத்துறையின்
ஒரு பிரிவாக இது செயல்பட்டாலும், இதன் கணக்கு வழக்குகளும் நிர்வாக முறைகளும் தேவஸ்வம்
சட்டதிட்டங்களின் படியே தனியாக நடத்தப்படுகின்றன.
இந்தத் தெப்பக் குளம் பீமநகரி பற்றிய சென்ற பதிவில் கிராமத்துக் கோவில் ஸ்ரீ பால பரமேஸ்வரி கோயில் பதிவில் போட்டிருந்தேன் இல்லையா அதே குளம் தான் பிள்ளையார் கோயிலுக்கும். இப்படிப் போனால் படித்துறையும் உண்டு. எதிரில் அம்பாள் கோயில் தெரு தெரிகிறது பாருங்க. எதிர் எதிரில். அங்கும் படித்துறை தெரிகிறது பாருங்க.
இக்கோவில் ஊர் காவல் தெய்வங்கள். முன்னர் திறந்த வெளியில் இருந்த தெய்வங்கள் இப்போது அழகான கட்டிடங்களுக்குள் வெயிலில் காயாமல், மழையில் நனையாமல்...
இடப்புறம் ஸ்ரீ கணபதி, நல்ல மாடன், நல்ல மாடத்தி, வலப்புறம் ஸ்ரீ .........மாடன், பீமநகரி என்று இருக்கிறது. அன்றுமே நேரில் பார்த்தப்பவே வலப்புறம் உள்ள கோயிலின் முகப்பில் பீமநகரி என்பதற்கு மேல் உள்ள எழுத்துகள் சரியாகத் தெரியவில்லை.
இதைப் பார்த்ததும் எனக்கு பாபிலோனின் தொங்கு தோட்டம் நினைவுக்கு வந்தது அதன் நடுவே மாளிகை. ஏனோ இந்த வீடு என்னை மிகவும் கவர்ந்தது.
உயிர்ப்பிருந்த போது இல்லா சுதந்திரம்...
உயிர்ப்பிழந்த நிலையில் கிடைத்திட.
படர்ந்திருக்கும் செடி, கொடிகள்!
அப்போது மிக மிகச் சிறிய கிராமமாக 10-12 வீடுகள் பாலபரமேஸ்வரி கோயில் அருகிலும் அப்புறம் சற்று வெளியில் ஒரு சில வீடுகள் மட்டுமே இருந்த கிராமம் இப்போது பீமநகரி ஊராட்சியாக வளர்ந்துள்ளது.
இந்த அழகிய கிராமத்திற்கு வந்த சாபக்கேடு - சமீபகாலமாக, விவசாய நிலங்கள்
வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. எனவே இப்பகுதியின் இயற்கை எழிலை பாதுகாக்க
வேண்டும் என்ற குரல்களும் எழுந்து வருகின்றன.
இதோ இந்த உரலைப் பார்த்ததும் ஆச்சரியம். எங்கள் ஊரிலா? நாம சின்ன வயசுல
இப்படிப் பார்த்ததே இல்லையே....குங்கும் தீட்டி, விளக்கு, பூ எல்லாம் போட்டு, சுப்பு
அக்காவிடமும் கேட்டேன். சரி இன்னும் சில மாதங்களில்
ஏதேனும் கோயில் வந்துவிடுமோ? அருகில் வேலியில்
அம்மன் துணிகள் போலத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அது அருகில் உள்ள அம்மான் கோயில்
துணிகளா என்று தெரியவில்லை. யாரும் இல்லாததால் கேட்கவும் முடியவில்லை. சுப்பு அக்காவிடமும்
கேட்டேன். அவருக்கும் தெரியவில்லை...
பாருங்கள் பெருமாள் நகர். Community! ஊரில் இப்படி முளைக்கத் தொடங்கியிருக்கின்றன. வயல்கள் அழிந்து வருகின்றன. விவசாயம் குறைந்து வருகின்றது. ஏதேனும் புரட்சி நடக்க வேண்டும் இல்லையேல் எதிர்காலம் கேள்விக்குறி. உணவுப் பற்றாக்குறை ஏற்படும். எனக்கு மிகவும் விருப்பமான விவசாயமும் செய்ய முடியவில்லையே என்று வருத்தத்துடன் அதற்கு எதிரில் உள்ள அழகான தாமரைக் குளத்தை க்ளிக்கிக் கொண்டு நடந்தேன்.
இப்படத்தில் தூரத்தில் தெரிகிறதா மேலே படத்தில் பார்த்த அடுக்கடுக்கான மலை. இந்தத் தாமரைக் குளத்தைப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்த போது
கார் மேகம் திரண்டு மழை பெய்யத் தொடங்கிவிட்டது. குடை எடுத்துக் கொண்டு வரவில்லை. கேமராவை
பைக்குள் பொதிந்து வைத்துக் கொண்டு வேகமாக ஓடினேன்....ஒதுங்க
இடம் பார்த்தால் சற்று தூரத்தில் ஒரு நெல் குத்தும் மில் அரவை மில், மற்றும் அரிசி
வகைகள் வைத்திருந்த மில் இருந்தது. அங்கு ஒதுங்கிக் கொண்டேன். வகை வகையான அரிசி, பருப்புகள் இருந்தன. அரை மணி நேரம் அடர்த்தியான
மழை.
இப்படத்தில் வலப்பக்கம் ஒரு கட்டிடம் தெரிகிறதா? அங்குதான் ஒதுங்கிக் கொண்டேன். சற்று தூரத்தில் வலப்பக்கம் திரும்பினால் திருப்பதிசாரம் கீழூர் சாலை. அது வழி வீட்டிற்கு...
இப்படி திருப்பதிசாரம் கிராமத்திலிருந்து பீமநகரி சென்று அப்படியே மீண்டும் கிராமத்திற்குள் வந்துவிடலாம் ஒரு circle route. கீழே இருக்கும் காணொளியை விருப்பமிருந்தால் பார்க்கலாம். நான் எடுத்திருந்த வேறு சில காணொளிகளில் இருந்த பறவைகளின் சத்தத்தைப் பிரித்தெடுத்து இக்காணொளியுடன் சில இடங்களில் இணைத்திருக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக