புதன், 1 ஜூலை, 2026

அழகே! அழகே! பாரதத்தின் தென் கோடி அழகே - 5

ஜடாயுபுரம் 1

ஜடாயுபுரம் 2

பீமநகரி 1

பீமநகரி 2 

==============================================================

பீமநகரி - 3

சில அடி தூரத்தில் வித்தியாசமான பெயருடன் ஒரு விநாயகர் கோயில் உண்டு. பதிவு பெரிதாகிவிட்டதால், அதை அடுத்த பகுதியில் பார்ப்போமா? என்று முடித்திருந்தேன். 

தோ அந்த விநாயகர் கோயிலை வெளியிலிருந்துப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் தொடங்குவோம் நம் நடையை! ஜடாயுபுரம், பீமநகரி


முகப்பில் உள்ள பச்சை நிறப் பலகையில் "அருள்மிகு எதிர்வல்லி சோழ விநாயகர் திருக்கோவில்" என்று எழுதப்பட்டுள்ளது. படத்தைப் பெரிது பண்ணி பார்த்தால்தான் ஓரளவு தெரியும். எதிர்வல்லி என்பது "எதிரிகளை வெல்பவர்" அல்லது "எதிர்ப்புகளை முறியடிப்பவர்" எனப் பொருள்படும்.

க்கோயில் சோழ மன்னர்களின் காலத்துடன் தொடர்புடையது, அதனாலேயே விநாயகர் 'சோழ விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார் என்று சொல்லப்படுகிறது. நாஞ்சில் நாடான இப்பகுதி ஒரு காலத்தில் சோழ மன்னர்களின் ஆதிக்கத்தின் கீழ் (முக்கியமாக முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் காலங்களில்) இருந்தபோது, எல்லையைக் காக்கும் பொருட்டோ அல்லது போரின் வெற்றியைத் தொடர்ந்தோ இந்த விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனால் தான் இதற்கு "சோழ விநாயகர்" என்ற பெயர் நிலைத்துள்ளது. (ஓவர் டு நெல்லை வேறு ஏதேனும் சரியான தகவல்கள் உண்டான்னு...)

நூற்றாண்டுகள் பழமையான, கருங்கற்களால் ஆன கட்டுமானத்தைக் கொண்ட கோயில்.

ந்த எதிர்வல்லி சோழ விநாயகர், இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும், வேண்டுதல்களை நிறைவேற்றும் நாயகனாகவும் போற்றப்படுகிறார். எதிர்மறை ஆற்றல் (Negative energy) மறைய, இங்கு விநாயகருக்கு சிதறுகாய் உடைத்து வழிபடுவது வழக்கம்.

க்கோயில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் (TNHRCE) நேரடி வழிபாட்டு நிர்வாகத்தின் கீழ் வராமல், தனித்துவமான அமைப்பான கன்னியாகுமரி தேவஸ்வம் போர்டின் (Kanyakumari Devaswom Board) கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. ஆனால் அதுவும் இணைக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. 

ன்னியாகுமரி மாவட்டம் முந்தைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் (கேரளா) இருந்ததால், இங்குள்ள பெரும்பாலான வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் "கன்னியாகுமரி தேவஸ்வம் போர்டு" மூலமாகவே நிர்வகிக்கப்படுகின்றன. தமிழ்நாடு அறநிலையத்துறையின் ஒரு பிரிவாக இது செயல்பட்டாலும், இதன் கணக்கு வழக்குகளும் நிர்வாக முறைகளும் தேவஸ்வம் சட்டதிட்டங்களின் படியே தனியாக நடத்தப்படுகின்றன.

ந்தத் தெப்பக் குளம் பீமநகரி பற்றிய சென்ற பதிவில் கிராமத்துக் கோவில் ஸ்ரீ பால பரமேஸ்வரி கோயில்  பதிவில் போட்டிருந்தேன் இல்லையா அதே குளம் தான் பிள்ளையார் கோயிலுக்கும். இப்படிப் போனால் படித்துறையும் உண்டு. எதிரில் அம்பாள் கோயில் தெரு தெரிகிறது பாருங்க. எதிர் எதிரில். அங்கும் படித்துறை தெரிகிறது பாருங்க.

இப்படத்தில் கோயிலின் இடப்புறம் தங்கக் கலரில் பீமநகரி பாலபரமேஸ்வரி அம்மன் கோயில் முகப்பு தெரிகிறதா?

இக்கோவில் ஊர் காவல் தெய்வங்கள். முன்னர் திறந்த வெளியில் இருந்த தெய்வங்கள் இப்போது அழகான கட்டிடங்களுக்குள் வெயிலில் காயாமல், மழையில் நனையாமல்...

இடப்புறம் ஸ்ரீ கணபதி, நல்ல மாடன், நல்ல மாடத்தி, வலப்புறம் ஸ்ரீ .........மாடன், பீமநகரி என்று இருக்கிறது. அன்றுமே நேரில் பார்த்தப்பவே வலப்புறம் உள்ள கோயிலின் முகப்பில் பீமநகரி என்பதற்கு மேல் உள்ள எழுத்துகள் சரியாகத் தெரியவில்லை. 


கோயில்கள் மூடி இருப்பதால் வெளியிலிருந்து கை கூப்பிவிட்டு இதோ இந்தச் சாலையில் நம் நடையைத் தொடர்வோம். 

அச்சாலையில் மேலே உள்ள படத்தில் தெரியும் மின் கம்பம் அருகில் இந்தப் பாழடைந்த  வீடு
இது வேறு ஒன்று...அடுத்தாப்ல....இது முகப்பு வாயில்? அல்லது பக்கவாட்டு எவ்வளவு அழகா இருக்குல்ல? இந ஜன்னலின் அப்புறம் நீண்ட திண்ணை அல்லது அறை போன்று இருந்திருக்கும்....

இதைப் பார்த்ததும் எனக்கு பாபிலோனின் தொங்கு தோட்டம் நினைவுக்கு வந்தது அதன் நடுவே மாளிகை. ஏனோ இந்த வீடு என்னை மிகவும் கவர்ந்தது. 

உயிர்ப்பிருந்த போது இல்லா சுதந்திரம்...

உயிர்ப்பிழந்த நிலையில் கிடைத்திட.

படர்ந்திருக்கும்  செடி, கொடிகள்!

இந்த மாளிகையின் பின் பக்கம் தான் மேலே உள்ள அந்தச் சின்ன மாளிகை. கேரளப்பகுதியாக இருந்ததால் கேரளத்துக் கொட்டாரம் போன்ற வீடு....பெரிய தரவாடாக இருந்திருக்கும் ஒருகாலத்தில். எனக்கு இந்த இரு வீடுகளுமே பிடித்திருந்தன....சரி எவ்வளவு விலை இருக்கும்? உருக்குலையாமல் தட்டிக் கொட்டி, பூசி வலுப்படுத்தி மேம்படுத்த முடியுமா?

ப்போது மிக மிகச் சிறிய கிராமமாக 10-12 வீடுகள் பாலபரமேஸ்வரி கோயில் அருகிலும் அப்புறம் சற்று வெளியில் ஒரு சில வீடுகள் மட்டுமே இருந்த கிராமம் இப்போது  பீமநகரி ஊராட்சியாக வளர்ந்துள்ளது.

இந்த அழகிய கிராமத்திற்கு வந்த சாபக்கேடு - சமீபகாலமாக, விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. எனவே இப்பகுதியின் இயற்கை எழிலை பாதுகாக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்து வருகின்றன.

இவை எல்லாம் புதியதாக வந்திருக்கும் எக்ஸ்டென்ஷன் தெரு, வீடுகள், வலப்பக்கம் இன்னும் கட்டப்பட்டுக் கொண்டிருப்பது தெரிகிறதா இதற்கு முந்தைய படம் அப்பகுதிதான். சரி நாம் இச்சாலையில் திரும்பாமல்  நடையைத் தொடர்வோம்...
அடுக்கடுக்காக மலைகள் தெரிகிறதா? அங்குதான் மருங்கூர் முருகன் கோவில் இருக்கிறது. இம்மலைப் பகுதியை இத்தொடரில் மருங்கூர் பற்றி வரும் போது அருகில் பார்ப்போம்... 
சாலையின் ஓரங்களில் இப்படி ஆங்காங்கே நீரோடைகள்...

தோ இந்த உரலைப் பார்த்ததும் ஆச்சரியம். எங்கள் ஊரிலா? நாம சின்ன வயசுல இப்படிப் பார்த்ததே இல்லையே....குங்கும் தீட்டி, விளக்கு, பூ எல்லாம் போட்டு, சுப்பு அக்காவிடமும் கேட்டேன்.  சரி இன்னும் சில மாதங்களில் ஏதேனும்  கோயில் வந்துவிடுமோ? அருகில் வேலியில் அம்மன் துணிகள் போலத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அது அருகில் உள்ள அம்மான் கோயில் துணிகளா என்று தெரியவில்லை. யாரும் இல்லாததால் கேட்கவும் முடியவில்லை. சுப்பு அக்காவிடமும் கேட்டேன். அவருக்கும் தெரியவில்லை...

வழியெல்லாம் மேலும் சில சின்ன சின்ன நீரோடைகள்

பாருங்கள் பெருமாள் நகர். Community! ஊரில் இப்படி முளைக்கத் தொடங்கியிருக்கின்றன. வயல்கள் அழிந்து வருகின்றன. விவசாயம் குறைந்து வருகின்றது. ஏதேனும் புரட்சி நடக்க வேண்டும் இல்லையேல் எதிர்காலம் கேள்விக்குறி. உணவுப் பற்றாக்குறை ஏற்படும். எனக்கு மிகவும் விருப்பமான விவசாயமும் செய்ய முடியவில்லையே என்று வருத்தத்துடன் அதற்கு எதிரில் உள்ள அழகான தாமரைக் குளத்தை க்ளிக்கிக் கொண்டு நடந்தேன். 

அந்தக் கட்டுமானத்தின் எதிரில் இருக்கும் தாமரைக் குளம்

இப்படத்தில் தூரத்தில் தெரிகிறதா மேலே படத்தில் பார்த்த அடுக்கடுக்கான மலை. இந்தத் தாமரைக் குளத்தைப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்த போது கார் மேகம் திரண்டு மழை பெய்யத் தொடங்கிவிட்டது. குடை எடுத்துக் கொண்டு வரவில்லை. கேமராவை பைக்குள் பொதிந்து வைத்துக் கொண்டு வேகமாக ஓடினேன்....ஒதுங்க இடம் பார்த்தால் சற்று தூரத்தில் ஒரு நெல் குத்தும் மில் அரவை மில், மற்றும் அரிசி வகைகள் வைத்திருந்த மில் இருந்தது. அங்கு ஒதுங்கிக் கொண்டேன். வகை வகையான அரிசி, பருப்புகள் இருந்தன. அரை மணி நேரம் அடர்த்தியான மழை. 

 

இப்படத்தில் வலப்பக்கம் ஒரு கட்டிடம் தெரிகிறதா? அங்குதான் ஒதுங்கிக் கொண்டேன். சற்று தூரத்தில் வலப்பக்கம் திரும்பினால் திருப்பதிசாரம் கீழூர் சாலை. அது வழி வீட்டிற்கு...

திரும்பிய பிறகு பீமநகரியிலிருந்து வந்த சாலையை ஒரு க்ளிக். இந்த இடம் ஒரு சந்திப்பு....பீமநகரி மற்றும் திருப்பதிசாரம் சாலைகள் நெடுஞ்சாலையில் இணையும் சந்திப்பு
சந்திப்பில் இருக்கும் தாமரைகள் இல்லா தாமரைக் குளம். இதில் பறவைகள் நிறைய இருந்தன. காணொளியில் கொஞ்சம் தெரியும். 

குளத்தை ஒட்டி சுவாமிஸ் சமையல் பொடி தயாரிக்கும் கம்பெனி இது சமீபகாலத்தில் வந்த ஒன்று

இப்படி திருப்பதிசாரம் கிராமத்திலிருந்து பீமநகரி சென்று அப்படியே மீண்டும் கிராமத்திற்குள் வந்துவிடலாம் ஒரு circle route.  கீழே இருக்கும் காணொளியை விருப்பமிருந்தால் பார்க்கலாம். நான் எடுத்திருந்த வேறு சில காணொளிகளில் இருந்த பறவைகளின் சத்தத்தைப் பிரித்தெடுத்து இக்காணொளியுடன் சில இடங்களில் இணைத்திருக்கிறேன்.



இனி திருப்பதிசாரத்தின் கீழூர் சாலையில் வீட்டை நோக்கி நடை! இந்தக் கீழூர் சாலை படங்களை இத்தொடரின் அடுத்த பதிவில் பார்ப்போம்...


-----கீதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக