தலக்காடு- 1, 2, 3, 4, 5 , 6 , 7 , 8 , 9 , 10 , 11
தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
திங்கள், 23 பிப்ரவரி, 2026
தலக்காடு - 12 - வைத்யேஸ்வரா கோயில் / வைத்யநாதேஸ்வரா கோயில் - 5 - நிறைவுப் பகுதி
ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026
தலக்காடு - 10 - வைத்யேஸ்வரா கோயில் / வைத்யநாதேஸ்வரா கோயில் - 3
தலக்காடு- 1, 2, 3, 4, 5 , 6 , 7 , 8 , 9
கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்த பதிவில் கோவிலின் பின்பக்கம் பார்த்தவை படங்களுடன் என்று முடித்திருந்தேன். கோயிலைச் சுற்றி வரும் போது பின் பகுதியில் சிவலிங்க சன்னதி
இறைவன் லிங்க வடிவில் தெரிகிறாரா? வாயிலில் துவாரபாலகர்கள் சிற்பங்கள்.
மேலே கஜலக்ஷ்மி இருப்பது வித்தியாசமாக இருக்கிறது
அந்த சன்னதி மண்டபத்தின் தூண்கள்
மார்கண்டேயர் புராணம் சொல்லும் சிற்பம். (நன்றி கோமதிக்கா. கோமதிக்காவிடம் கேட்டுக் கொண்டேன்)
ஞானமே உருவான ஆஞ்சநேயனும்
காலன் வரும்முன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலுன் கடைவாய்ப் படுமுன்னே – மேல்விழுந்து
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானை நினை - (பட்டினத்தார்)
ஜல் ஜல் ஜல் எனச்
சதங்கைகள் ஒலித்திட
கொல் கொல் கொல் எனத்
தலைகளை மிதித்திட
நஞ்சுடை காளியன் நலிந்து
மடிந்திட
செஞ்சடையனைப் போல்
களிநடம் புரிந்திட!
(நன்றி கவிநயாம்மா)
அங்கம்
தழைக்க அருளும் பரனே!
அடியார்க்கு
பிச்சையளிக்கும் இறைவனே!
தங்கும்
பிக்ஷாடன மூர்த்தி போற்றி!
தருணமிதே
அருள்புரிய வாராய்!
(திருமூலர் மந்திரம்)
பொய்ந் நின்ற ஞானமும், பொல்லா
ஒழுக்கும், அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறவாமை உயிர் அளிப்பான்,
எந் நின்ற யோனியுமாய், பிறந்தாய்! இமையோர் தலைவா!
மெய் நின்று கேட்டருளாய், அடியேன் செய்யும்
விண்ணப்பமே.
(நம்மாழ்வார் பாடல்)
அன்று ஞாலம் அளந்த பிரான்* பரன்
சென்றுசேர் திருவேங்கடமாமலை*
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.
(நம்மாழ்வார் பாடல்)
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே
(அபிராமி அந்தாதி)
கூவி
அழைத்தால் குரல் கொடுப்பான் - பரம்
குன்றம்
ஏறி நின்று குமரா என்று
கூவி
அழைத்தால் குரல் கொடுப்பான்
(கவிஞர்
வாலி)
இன்னும் அடுத்த பகுதியில் தொடரும்...
----கீதா
புதன், 21 ஜனவரி, 2026
தலக்காடு - 8 - வைத்யேஸ்வரா கோயில் / வைத்யநாதேஸ்வரா கோயில் - 1
திங்கள், 12 ஜனவரி, 2026
தலக்காடு - 7 - கீர்த்தி நாராயணர் கோவில் - 2
புதன், 7 ஜனவரி, 2026
தலக்காடு - 6 - கீர்த்தி நாராயண பெருமாள் கோவில் - 1
கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், எனக்கு யாரென்று புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
சென்ற தலக்காடு பதிவு 5ல் கீர்த்திநாராயண பெருமாள் கோவிலைப் பார்க்கும் முன், இந்தப் பஞ்சலிங்கேஸ்வர, கீர்த்திநாராயண பெருமாள் கோவில்களின் தொகுப்பில் ஒரு பகுதியான சௌடேஸ்வரி அம்மன் கோவில் இருக்கிறது என்று அதைப் பார்த்தது பற்றிச் சொல்லியிருந்தேன்.
வெள்ளி, 2 ஜனவரி, 2026
சௌடேஸ்வரி அம்மன் கோவில் - தலக்காடு - 5
சென்ற பதிவு, தலக்காடு 4 ல் அடுத்து கீர்த்தி நாராயண பெருமாள் கோவிலை நோக்கின்னு முடித்திருந்தேன். ஆனா பாருங்க கோவில் படங்கள் கொஞ்சம் கூடுதல் என்பதால் தொகுக்க நேரம் எடுக்கிறது. எழுதவும் இல்லை...அதனால்...
வெள்ளி, 26 டிசம்பர், 2025
தலக்காடு - 4 - மரலேஷ்வரா/கோயில்/மருளேஸ்வரா/சைகதேஸ்வரா
பாதாளேஷ்வரர் கோவிலில் இருந்து மரலேஷ்வரா கோவிலுக்கு மீண்டும் மணலில் நடக்கத் தொடங்கினோம். 0.4 கிமீ தூரம்.
வெள்ளி, 19 டிசம்பர், 2025
தலக்காடு - 3 - பாடலேஸ்வரா / பாதாளீஸ்வரர் / வாசுகீஸ்வரர் கோவில்
முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன் இல்லையா? தலக்காடு கோவில்கள் காவிரி நதிக்கரையில் மணல் மூடி புதைந்து கிடந்தவற்றை மீட்டெடுத்தனர் என்று அப்படியான கோவில்களில் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில்களில் ஒன்றான பாதாளே/ளீஸ்வரர் கோயிலைச் சென்றடைந்தோம் என்று சொல்லியிருந்தேன். இப்ப அந்தக் கோவிலைப் பற்றி.....
புதன், 10 டிசம்பர், 2025
தலக்காடு - 2 - பாடலேஸ்வரா / பாதாளீஸ்வரர் / வாசுகீஸ்வரர் கோவில் நோக்கி
தலக்காடு - 1 ன் தொடர்ச்சி.
மைசூர் உடையார் வம்சத்தின் ராணியான அலமேலு, சில வரலாற்றுச் சம்பவங்களால் - அப்படியான ஒரு சம்பவத்தில் தன் கணவரை இழந்ததால், சோழர்களுக்கும், உடையார்களின் வம்சத்திற்கும் சாபம் இட்டதாகக் கூறப்படுகிறது.
திங்கள், 24 நவம்பர், 2025
தலக்காடு - 1 - காவிரி பீச்
கடைசியாகப் பார்த்த தலக்காடைப் பற்றித்தான் இப்பதிவு. பின்னர் முடிந்தால், என் மனம் ஒத்துழைத்தால் இடையில் விட்ட பகுதியைப் பற்றி எழுதுகிறேன்.























