தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!!
இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைந்திடட்டும்.
கேரளத்தில், மார்ச்சில் நடை பெறத்
தொடங்கிய 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடந்துகொண்டிருந்த சமயத்திலே
எதிர்பாராத ஊரடங்கினால் தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் மே மாதம் 26 ஆம் தேதிக்கு
மாற்றி வைக்கப்பட்டு மே 26 முதல் மே 31 வரை நடந்திருக்கின்றன. தொற்று பாதிப்பு இல்லாத
பகுதிகளில், பரீட்சை எழுதும் மையங்கள் மாற்றப்பட்டு, மாற்றப்பட்ட மையம், தேதி, தேர்வு
விவரங்கள் என்று எல்லா மாணவ மாணவியர்க்கும் தெறிவிக்கப்பட்டு, பல பாதுகாப்பு நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கும், மாணாக்கர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு நடந்திருக்கிறது.
மஞ்சளழகி! இது இவளுக்கு நான் வைத்த
பெயர். அவளது பெயர் பெருங்கொன்றை/இயல்வாகை/மஞ்சள் வாகை. அறிவியல் பெயர்:Peltophorum ferrugineum. ஆங்கிலத்தில்காப்பர்
பாட்
(Copperpod), யெலோ ஃபிளேம் (Yellow Flame)
கண்ணழகிக்கு
திடீரென்று அழகிப் போட்டியில் பட்டம் வெல்லும் ஆசை வந்து விட்டது போலும். ஊரிலுள்ள
பலரும் ஆசைப்படும் போது என் கண்ணழகிக்கு ஏன்
வரக்கூடாதா என்ன? சரி எப்படி வந்தது? அதை ஏன் கேட்கின்றீர்கள்?!
என்ன
நண்பர்களே, சகோதர, சகோதரிகளே எல்லோர் வீட்டிலும் பால் பொங்கியதா! (தினமும் பொங்கத்தானே
செய்கிறது என்ற குரலும் கேட்கிறது!) இன்று பொங்கலோ பொங்கல் ஆயிற்றே! இனிய பொங்கல் தினமாயிற்றே!
இந்த இனிமை எல்லோருக்கும் என்றும் நிறைந்திருக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! நான்
வாட்சப்பில், கோலம் போட்டு, பானை வைத்து, பொங்கல் பொங்கிக் கொண்டாடியாயிற்று!!
கிராமத்தில் இருந்தவரை எங்கள் வீட்டில் பொங்கலன்று புதியதாய் விளைந்து வந்த நெல்லை நடுக் கூடத்தில் குவித்து வைத்திருப்பார்கள். நெற்கதிரை உத்திரத்தில் தொங்க விடுவார்கள். புது அரிசியில்தான் பொங்கல் செய்வார்கள். நாங்களும் வயலில் வேலை செய்ததுண்டு. வயல்கள் எல்லாம் வீட்டின் ஒவ்வொரு நிகழ்விற்காக விற்ற பிறகு பொங்கல் நகரத்துப் பொங்கலாகிப் போனது.
இனிமையானவர்களுக்கு, இனிய பொங்கல் என்பதால் அவர்களுக்கான இனிய இயற்கை இன்சுலின் ..
எங்கள் வீட்டில் இனியவள் நான் இருப்பதால் இந்த இனிய இயற்கை இன்சுலின்
பொங்கலுக்கு
என் தோழியின் கைவண்ணம்…
இன்று வயல்களில் உழைக்கும் நாலுகால் செல்லங்களின் திருநாள்!
படம் இணையத்திலிருந்து
எங்களை எல்லோரும் வாழ்த்துங்கள்!!!
“எங்களை
வைத்து நன்றாக காமெடி/அரசியல் செய்து சுய ஆதாயம் அடைகிறார்கள்! உங்கள் அரசியலுக்கு
வேறு விசயம் இல்லாததால் நாங்கள் தான் கிடைத்தோமா”! என்று இந்தச் செல்லங்கள், அவர்களும் போராட்டம் நடத்துகிறார்களாம்.
அவர்களுக்கு ஆதரவாக எல்லா நாலுகால் செல்லங்களும் சேர்ந்து கொண்டனவாம்.
“எங்களுக்காக
வருடம் ஒரு முறைதான் குரல் கொடுப்பீர்கள் போலும். நாங்கள் வருடம் முழுவதும் உங்களுக்காக
வயலிலும், வண்டி இழுத்தும் உழைக்கிறோம். அதிகமாகப் பால் கறப்பதற்கு ஊசி, சினை அடைய ஊசி என்று எங்களுக்கும் எவ்வளவோ துன்பங்கள் இழைக்கப்படுகின்றன.
அதற்காக யாரும் குரல் கொடுப்பதில்லை. உங்களைப் போல் எங்களால் குரல் கொடுக்க முடியாதே?
வாயிருந்தும் பேச முடியாத அப்பாவிகளாயிற்றே நாங்கள்.
எங்கள்
எசமானர்கள் எங்களுக்கு வேண்டிய அளவு தீனி தராமல் எங்களை சாலையில், வெயிலில் மேய விட்டு விடுகிறார்கள். மேய விடுவதில் தவறில்லை. ஆனால், சாலையில் நாங்கள் உங்கள் வாகனங்களில் அடிபட்டு உயிர் விடுபவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
உயிர்விடுவது ஒரு புறம் என்றால் அடிபட்டுத் துன்பப்படுவது மறுபுறம். எங்களைக் கம்பால்
அடித்து துரத்தியும் விடுவார்கள். இதற்காக யாரேனும் போராடியிருக்கிறீர்களா?
நீங்கள்
எல்லோரும் உங்கள் சுயநலத்திற்காக நாங்கள் திரிந்த நிலங்களை எல்லாம் கட்டிடங்களாக்கி
விட்டதால் மேய்ச்சலுக்கான நிலங்களும் அருகி, நீங்கள் எறியும் குப்பைகளையும் கண்டதையும்
தான் நாங்கள் உண்டு வாழ வேண்டிய நிலை. இப்படி வெயிலில் மேய்வதால் தாகம் எடுக்கும் போது
அருந்துவதற்கு நீர் நிலைகள் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. எல்லாம் குப்பைக் கிடங்காக
இருக்கின்றது. சாக்கடை நீர்தான் இருக்கிறது.
என் மொபைலில் எடுத்தது - என் வீட்டின் அடுத்துள்ள தொட்டியில் மாடு தண்ணீர் குடிக்கும் காணொளி
எனவே,
நாங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் நீர்த்தொட்டிகளின் குழாயை உங்களைப் போல் திறக்கக்
கற்றுக் கொண்டுவிட்டோம். ஏதோ ஒரு பொன்மொழி சொல்லுவீர்களே! தேவையே கண்டுபிடிப்புகளின்
தாய் என்று! அப்படித்தான் நாங்களே குழாயைத் திறந்து நீர் அருந்துகிறோம் ஆனால் மூடத்
தெரியவில்லை. எனவே தண்ணீர் வீணாகிப் போவதோடு, எங்களை நீங்கள் விரட்டவும் செய்கிறீர்கள்.
இது என்ன நீதி? இப்போது ஆள்பவர்கள் என்ன மனு நீதிச் சோழனைப் போன்றவர்களா என்ன?
எங்கள்
வேண்டுகோள் இதுவே! உங்களுக்கு உணவளிக்கும் வயல்வெளிகளைக் கூறு போடாதீர்கள். வானம் பொய்த்த
பூமியில் பாளங்கள் ஏற்பட்டு எங்களை மேய்க்கும் உழவர்களின் வாழ்விலும் பாளங்கள். நாங்கள்
சார்ந்திருக்கும் உழவையும் உழவைச் சார்ந்திருக்கும் எங்களையும் போற்றிப் பாதுகாக்க
வேண்டுகிறோம். எங்களை நம்பியிருக்கும் உழவர்களைக் காப்பாற்றி வாழ்வு கொடுங்கள்! உங்கள்
சுயலாபத்திற்காகப் பசுமையான புல்வெளிகளையும், வயல்களையும், மேய்ச்சல் நிலங்களையும்
கூறுபோடாமல், நீர்நிலைகளைப் பாழாக்காமல், எங்கள் பகுதிகளில் நஞ்சைக் கலக்காமல் பாதுகாப்பீர்கள் என்றால் உங்களுக்கு வளம். இல்லையேல்
அழிவுதான்! இயற்கையைக் கூர்ந்து நோக்கி இயற்கையுடன் ஒன்றி வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
இயற்கை
அன்னையைச் சார்ந்துதான் நாம் எல்லோருமே வாழ்கின்றோம் என்பதால் இயற்கையையும் மதித்துப்
போற்றிக் காப்பாற்றுங்கள்! வருடத்தில் ஒரு தினம் மட்டும் எங்களை அலங்கரித்துப் பூசித்துவிட்டு
பின்னர் எங்களைக் கண்டு கொள்ளாமல் இருக்காமல் எங்களையும் சற்றுக் கவனியுங்கள். எங்களை
செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்வது சிறந்தது என்று அதீதமாகச் செய்து துன்புறுத்தாதீர்கள்
என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
எங்களுக்கு
நோய் வந்தால் அதைத் தீர்க்க இறுதி வரை முயற்சி செய்யுங்கள். முயற்சி செய்யாமல், உடனே
எங்களை வெட்டும் இடத்திற்கு அனுப்பிவிடாதீர்கள். இறுதிவரை முயன்றும் தீர்க்க முடியவில்லை
என்றால் வெட்டும் இடத்திற்கு அனுப்புங்கள். எப்படி இருந்தாலும் எங்களை வளர்ப்பவர்களில் பலரும் எங்களை அங்கு தான் அனுப்புவீர்கள்
என்று தெரியும்.
நாங்களும்
உங்களுடன், உங்களில் ஒருவராக, உங்களுக்காகவே, உங்களைச் சார்ந்து வாழ்பவர்கள்தான்! எங்களுக்கும்
மனம் உண்டு, உயிர் உண்டு. உங்களைப் போல் எங்களுக்குப் புலம்பவோ பகிரவோ முடியாது! தயவாய்
இயற்கையையும், இயற்கை சார்ந்த எங்களையும் எங்கள் இயல்புகளுடன், எங்கள் இயல்புகளை மாற்றாமல் உங்கள் குழந்தைகளைப் போல் அன்பு செலுத்திப் பராமரியுங்கள்.
இதுவே இந்த வருடத்து எங்கள் நாளில் உங்களுக்கு வைக்கும் வேண்டுகோள்.”
கீழே இருப்பவை குழந்தைகளுக்காக. உழவுத் தொழில் பாடல்! உழவுத் தொழில் பற்றி அறிந்திராத குழந்தைகளுக்கு ஒரு காணொளி. மற்றொன்று ஒரு பசுவின் கதை மற்றும் தோட்டத்தில் வெள்ளைப் பசு பாடல் காணொளியாக. நானும் ரசித்தேன். ஏன் நீங்களும் ரசிப்பீர்கள். அமெரிக்காவில் இருக்கும் எனது தங்கை மகளுக்கு, அவள் குழந்தைக்காக இது போன்ற காணொளிகளை அனுப்புவதுண்டு.
சமீபத்தில் நடந்த திருமணம் ஒன்றிற்கு மண்டபத்தில் உள்ள அறைகளுக்குப் பூட்டு வேண்டும் என்று எங்கள் உறவினர் கேட்க, வெளியில் வாங்க வேண்டாம் எங்கள் வீட்டில் இல்லாத பூட்டா, சாவியா என்று வெற்றுச் சவடால் விட்டு வீட்டிற்கு வந்து பூட்டுகளையும், சாவியையும் எடுக்க முனைந்தால், பல வருடங்களாகப் புழங்கி வந்த பூட்டுகள் என்னை நோக்கி, "எனக்கு ஏற்ற சாவி எது என்று கண்டுபிடி பார்க்கலாம். உனக்கு ஒரு சவால்" என்று என்னைப் பார்த்துக் கெக்கலித்தன. ஒரு நான்கு பூட்டுகள், அதற்கேற்ற சாவிகள் கண்டு பிடித்துத் தேற்றி விட்டேன். ஹும் இன்னும் தேடிப் பிடித்துக் கொண்டே இருக்கிறேன்!!
பூட்டுகளை அதற்கேற்ற சாவிகளுடன் தனித்தனியாக வைத்துக் கொள்வது எனது வழக்கம். யாரேனும் கேட்டால் கொடுத்துவிடுவேன். ஆனால் மீண்டும் வரும் போது பூட்டு அல்லது சாவிகள் மட்டும் வரும். இல்லை என்றால் சோடி சேராத பூட்டும், சாவியும் வரும். அப்படியாகச் சேர்ந்தவைதான் இவை அனைத்தும்! புத்தகங்கள், சிடிக்கள் கொடுத்தால் எப்படி ஒழுங்காகத் திரும்பி வராதோ அப்படித்தான் இவையும். இதை எழுதி வெளியிடுவதற்குச் சேமித்து வைத்திருந்த சமயத்தில் நண்பர் கோ அவர்களின் பதிவு டைட்டானிக் சாவிகள்!! வாசிக்க நேர்ந்தது. வெனிஸ் நகரில் பூட்டுகளினால் விளைந்த மூடநம்பிக்கையைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை நண்பர் விவரித்திருக்கிறார்.
இந்தத் தடுப்பு எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் காவல்நிலைய சோதனைச் சாவடி அருகே இருந்தது. எனக்கு இதனைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. சென்னை மாநகர போக்குவரத்துக் காவலுக்கும் மலபார் தங்கத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுந்தது. உங்களுக்குப் புரிந்தால் சொல்லுங்களேன்.
இதைப் பார்த்ததும் ஹும் நம் மக்கள் திருந்தப் போவதே இல்லை என்று தோன்றியது. படித்தவர்களும் இங்கு குப்பை எறிகிறார்கள். மாநகராட்சியும் எச்சரிக்கை விடுத்ததோடுத் தன் கடமை முடிந்தது என்று நினைத்திருக்கிறது போலும். அந்த எச்சரிக்கப் பலகையில் உள்ளது போல் மாநகராட்சி எந்தத் தண்டனையும் கொடுக்கவில்லை. மட்டுமல்ல இந்தக் குப்பை எங்கள் பகுதி காவல் நிலையத்து மதிற்சுவர் அருகில்!!!
இவள் எங்கள் பேட்டைத் தலைவி
இவள்தான் மூக்கழகி! வாளிப்பாக இருந்தவள். எங்கள் பேட்டைப் பைரவர்களின் தேர்தலில் மூக்கழகிதான் தலைவியானாள்! தலைவியின் இப்போதைய நிலையைப் பாருங்கள்! பாவம். பேட்டையே அடங்கிக் கிடக்கிறது. குட்டிகள் போட்டாயிற்று. அவளுக்குச் சரியான சாப்பாடு இல்லாமல் வாடிப் போயிருந்தாள். சாப்பாடு கொடுக்க ஆரம்பித்தேன். கடந்த ஒரு வாரமாக அவளைக் காணவில்லை. சிலர் அவள் இறந்துவிட்டாள் என்று சொல்கிறார்கள். சிலர் அவளுக்கு ஏதோ நோய் என்று சொல்கிறார்கள். ஒரு சிலர் அவள் இல்லாதது நன்றாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால், கறுப்பழகி காத்துக் கொண்டிருக்கின்றாள். மூக்கழகி இல்லை என்றால் தான் தலைவியாகிவிடலாம் என்று ரவுசு பண்ணிக் கொண்டிருக்கின்றாள்!
பாவம் எங்கள் பேட்டைத் தலைவிக்குச் சொத்துச் சேர்க்கத் தெரியவில்லை! அப்பிராணி! அவளது அல்லக்கைகளையும் காணவில்லை. ஒரு வேளை தலைவி சீக்கிரம் உயிர்த்தெழுந்து வர வேண்டும் என்று அவர்கள் தெய்வமான பைரவருக்கு வேண்டிக் கொண்டு அங்கப்பிரதட்சிணம் செய்யப் போயிருக்கிறார்களோ என்னவோ??!!!! ஏதேனும் ஜோசியர் எங்கள் பேட்டைத் தலைவி பற்றி ஆரூடம் சொல்லுவாரா? சொன்னால் நன்றாக இருக்கும். ஒரு வேளை நாலுகால் ஆர்வலர்கள் யாரேனும் அவளை சிகிச்சைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்களோ என்னவோ. அங்கு அவள் தன் பேட்டையைத் தொடங்கிவிட்டாளோ?! இவளைக் காணவில்லை என்பது எங்கள் தெரு மக்களுக்கு ஒரே மர்மமாக இருக்கிறது. எனக்கும் தான். எல்லோருக்கும் அத்தனைச் செல்லம்!
இந்தப் படம் இணையத்திலிருந்து
தெரு நாய்கள் தங்கள் எல்லையைக் குறித்துக் கொண்டு, அடுத்த பகுதி நாய்களைத் தங்கள் பகுதிக்குள் வர விடாமல், "இது என் ஏரியா உள்ள வராதே" என்பது போல் சண்டை போடுவதை நாம் எல்லோருமே பார்த்திருப்போம். பண்டு தொட்டே மனித சமூகம் ஒவ்வொன்றும் தங்கள் எல்லையை வகுத்துக் கொண்டுதான் வாழத்தொடங்கினார்கள். அப்படி வளர்ந்த சமூகங்கள் இன்று நாடுகளாகி, அரசியல், ஆட்சி என்று விரிந்திருக்கிறது. மேலே சொல்லப்பட்டவை ஐந்தறிவு படைத்தவை.
ஆனால், ஆறறிவு என்று சொல்லிக் கொள்ளும் மனிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதும் எத்தனைதான் மண் ஆசை என்பது பண்டு தொட்டே இருந்து வரும் ஒன்று என்றாலும், பண்பாடு, நாகரீகம், தொழில் நுட்பம் என்று வளர்ந்து பொருளாதாரமும் வளர்ந்து வரும் இந்தக் காலத்திலும் மனிதனின் மண் வெறி மட்டும் இன்னும் அடங்கவில்லை என்பது நிரூபணம் ஆகிக் கொண்டே வருகிறது.
இதோ நம் இந்தியப் பாகிஸ்தான் எல்லையில் பதட்டம். போருக்கானப் பதட்டம் எல்லையில் மட்டுமின்றி எல்லையில் இருக்கும் மாநிலங்களிலும், தலைநகரிலும் நிலவுகிறது. போர் என்றால் அதன் பின் விளைவுகளைப் பற்றி நாம் எல்லோருமே அறிவோம். போரில் வெற்றி, தோல்வி என்பதை விட இரு தரப்பினருக்குமே அதீத அழிவுகள் ஏற்படத்தான் செய்யும். உயிர் சேதத்திலிருந்து, பொருளாதாரச் சேதம் வரை, நடைமுறை வாழ்க்கையே மாறி, இந்தப் பேரழிவிலிருந்து இரு தரப்பினருமே மீண்டு வருவது என்பதற்குப் பல வருடங்கள் ஆகிவிடும். ஆறறிவு படைத்தவர்கள் இரு தரப்பினரும் சிந்திக்கலாம். சிந்திக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒன்று நிகழாமல் இருக்கும் என்று நம்புவோம்.
அவர்கள் எங்கள் பேட்டையில் உலா செல்ல நினைத்த போது என்ன நடந்தது என்பதோடு முடிகின்றது தொடர்...என்று முடித்திருந்தேன் சென்ற பதிவை...
அவர்கள் உலா செல்ல நினைத்து ப்ரௌனியின் அறையை விட்டு வெளியில் வந்து கண்ணழகி இருந்த இடத்திற்கு வந்தனர்.
ஸன்னி : சரி கண்ணழகி, ஜெஸ்ஸியும் கருவாண்டியும் வெளியில் போய் வரலாமா என்று கேட்கிறார்கள். நீ என்ன சொல்கின்றாய்?
கண்ணழகி : போய் வரலாம்தான் ஆனால் நம்மவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் எங்கள் பேட்டையிலும் பக்கத்துப் பேட்டையிலும். அதான் யோசிக்கின்றேன்.
ஜெஸி/ரஜ்ஜு : சிங்கப்பூர் போன்ற நாடுகளில் எல்லாம் ஒரு சில சாலைகளின் வழியாகச் செல்ல வரி உண்டு தெரியுமா?
ஜூலி : ஹேய் இங்கும் டோல் கேட் உண்டு. சில சமயங்களில் சின்ன தூரத்திற்கே 3, 4 டோல் இருக்கிறது. அவ்வழி செல்ல பணம் கட்ட வேண்டும்.
ஸன்னி : ஓ அப்படியென்றால், நம் பேட்டையிலும் சாலை வழி செல்ல நம்மவர்களுக்கு வரி செலுத்த வேண்டுமோ. அதைத்தான் அம்மா, கப்பம் கட்டுகின்றேன் என்று சொல்லி எழுதுகின்றார்களோ?
கண்ணழகி : ஆமாம்! கப்பம் கட்ட வேண்டும். இல்லை என்றால் எல்லோரும் கத்திக் கொண்டு வருவார்கள். அம்மா எங்க பேட்டையையே அடக்கி வைச்சுட்டாங்க தெரியுமா. யாரும் இப்ப நாங்க வாக்கிங்க் போகும் போது சண்டைக்கு வருவது இல்ல. மட்டுமல்ல எங்கள் பேட்டையிலும் தேர்தல் முடிந்துவிட்டது. மூக்கழகிதான் தலைவி!!
ஸன்னி: ஹ்ஹ அப்போ அம்மா நல்லா லஞ்சம் கொடுத்து எல்லோரையும் அடக்கி வைத்திருக்காங்கனு சொல்லு. அம்மா பேட்டையையே அடக்கி வைத்துவிட்டார்களே அப்புறம் என்ன
டைகர்: ஹை ஸன்னி உன் அப்பாவின் வாசனை அடிக்கின்றதே!! ஹ்ஹ்ஹ
கண்ணழகி: ஆமாம்! ஏதோ அரசியல் வாசனை அடிக்கின்றதே. ஹிஹிஹி அது சரி ஸன்னி, நீ எந்த அம்மாவைப் பற்றிச் சொல்லுகின்றாய்?
ஸன்னி : ஓ! நீ அந்த அம்மாவை நினைத்துவிட்டாயா? ம்ம் அவர்கள் கூட சமீபத்தில் காவல் துறையில் இருக்கும் நம்மவர்களைக் கொஞ்சிய புகைப்படம் பார்த்தேனே. நான் சொன்னது உன் அம்மாவை. ஹ்ஹ்ஹ்ஹ....(என்று மிகவும் பெருமையாக ஒரு லுக் விட்டான் எல்லோரையும். பார்த்து!!!
ஸன்னி, ஜெஸ்ஸி, கருவாண்டி, ரஜ்ஜு எல்லோரும் கண்ணழகியுடன் நடந்துகொண்டிருந்தாலும் உள்ளூர ஒரு சிறு பயம்தான். பேட்டை அல்லக்கைகள் தலைவியுடன் ஓடி வந்து வம்பு பண்ணுவார்களோ என்று.
குப்பையைக் கண்டு ஸன்னி, ஜெஸ்ஸி, ரஜ்ஜு எல்லோரும் வியந்தார்கள்.
படம் இணையம்
அவர்கள் மூவரும் : நம்மவர்கள் எல்லோரும் இங்கு குப்பையில் மேய்கின்றார்கள். குப்பையைச் சாப்பிடுகின்றார்கள். இவர்களுக்கெல்லாம் அம்மா, அப்பா இல்லையா? தெருவில்தான் இருப்பார்களா? வியாதிகள் வருமே!
கண்ணழகி : ஆமாம்! பாவம் இவர்கள் எல்லாம். பார் தோல் வியாதிகள்! நீ கப்பம் என்று சொன்னாயே. அது கப்பமல்ல. அது அம்மா சும்மா அப்படிச் சொல்லுவது. குப்பையைச் சாப்பிடுகின்றார்களே என்று வருத்தப்பட்டு தினமும் அவர்களுக்கு ரொட்டி, பிஸ்கோத்து என்று கொடுப்பார்கள்.
மூவரும் : எங்கள் ஊரிலெல்லாம் வெளியில் நம்மவர்களைப் பார்க்க முடியாது. அப்படியே பார்த்தாலும் நம்மவர்களின் நல அமைப்பிற்குத் தகவல் சொல்லி விடுவார்கள், ஏஞ்சலின் அம்மா செய்வது போல்.
கண்ணழகி : இங்கும் நல்ல உள்ளங்கள் பலர் உள்ளனர். இவர்களுக்கெல்லாம் சாப்பாடு போடவும், இவர்களை தங்கள் வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்து, காப்பகம் போல வளர்ப்பதற்கும். ஸ்ரீராம் அங்கிள் கூட பாசிட்டிவ் செய்தியில் சொல்லுவாரே!
இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது பேட்டையில் உள்ள நாலுகால் எல்லோரும் பட்டாளமாகக் குரைத்துக் கொண்டு ஓடி வர, ஸன்னி பயந்து கீதாவுடன் ஒட்டிக் கொண்டுவிட்டான். கீதா அவனைத் தன் கையில் எடுத்துக் கொண்டுவிட்டாள்.
படம் இணையம்
ஜெஸ்ஸி, கருவாடன், ரஜ்ஜுவைத் தேடினால் காணவில்லை. எல்லோரும் அருகிலிருந்த ஒரு வளாகத்திற்குள் ஓடி ஒளிந்து கொண்டு அங்கிருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். டைகரும், ஜூலியும், கண்ணழகியும் கீதாவின் மற்றொரு கையில் செயினில்.
டைகர் அவர்கள் எல்லோரையும் பார்த்துக் குரைக்க ஆரம்பிக்க, கீதா எல்லோருக்கும் ரொட்டித் துண்டுகளைக் கொடுக்கவும் எல்லோரும் தின்று கொண்டெ மெதுவாகக் குரைத்துக் கொண்டு பின் வாங்கினர்.
ஸன்னி மிகவும் பயந்து விட, ஜெஸ்ஸி, கருவாண்டி, ரஜ்ஜு எல்லோரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
ஸன்னி : எனக்கு இதெல்லாம் புதிதாக இருக்கிறது. நான் இனி இங்கு வரவில்லை நீங்கள் எல்லோரும் அங்கு வாருங்கள்.
ஜெஸ்ஸி/கருவாண்டி : ஹை அப்போ நாங்கள் அமெரிக்கா வருகின்றோம். அமெரிக்காவையும் பார்த்துவிடலாமே!!!
ஜூலி/டைகர் : நாங்கள் எப்படி அங்கு வருவது? தனியாக...விமானம் என்றால் எங்களுக்கு மிகவும் பயம்.
கண்ணழகி: எனக்கும் பயம்தான். நாம் எல்லாரும் அங்கு செல்ல வேண்டும் என்றால் நமக்கு சிப் பொருத்தி விடுவார்கள். கென்னல் போன்ற பெட்டியில் நம்மை வைப்பார்கள். இங்கு அண்ணா வேலை செய்யும் க்ளினிக்கில் செய்கின்றார்கள். இங்கிருந்து நிறைய நம்மவர்கள் அமெரிக்கா, லண்டன், எல்லாம் போகின்றார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதி முறை இருக்கிறதாம் அண்ணா சொல்லுவார். யு கேயின் விதி முறைகள் சற்றுக் கடினமாம்.
ஸன்னி: இதோ எனக்கும் கூட பொருத்தித்தான் அனுப்பியிருக்கிறார்கள். நாம் எங்கேனும் போனாலும் இந்தச் சிப் வைத்து நம்மைக் கண்டு பிடித்துவிட முடியும். நமக்கும் விமானத்தில் டிக்கெட் எல்லாம் எடுக்க வேண்டும் தெரியுமா?
ஜூலி/டைகர் : ஓ அப்படியா! முடிந்தால் வருகின்றோம். கண்ணழகி நீ போவாயா? ப்ரௌனியும் வருவாள் தானே?
கண்ணழகி: ப்ரௌனி பற்றி எனக்குத் தெரியாது. அவள் வீட்டை விட்டே வெளியில் வர மாட்டாள். அவள் விமானத்திலா.
ஸன்னி, ஜெஸ்ஸி, கருவாண்டி: ஆரம்பித்துவிட்டாயா ப்ரௌனி பற்றி. சரி நம்மைப் பற்றிப் பேச இன்னும் நிறைய இருக்கிறது. அடுத்த சந்திப்பில் பேசுவோம். அப்போ நாங்கள் எல்லோரும் இப்போது விடை பெறுகின்றோம். அடுத்த முறை எங்கு சந்திப்பது என்று முடிவு செய்வோம். தொடர்பில் இருப்போம் ஓகேயா.
கீதா எல்லோரையும் அழைத்துக் கொண்டு விமான நிலையம் செல்ல அங்கு ஜெஸ்ஸியின் மற்ற நண்பர்களும் இருக்க எல்லோரும் இவர்களைப் பார்த்துக் கொண்டே உள்ளே மறைய, பத்திரமாக ஏற்றி விட்ட திருப்தியில், ஜூலி, டைகரையும் அவர்கள் ஊருக்கு ஏற்றிவிட்டு, மனம் கனக்க இவர்கள் வீடு திரும்பினார்கள்.
கரந்தை சகோ, துளசி இங்குதான் என்பதால் விசாரித்துக் கொள்ளலாம்.
மதுரை சகோ. உங்கள் செல்லப் பிள்ளை பத்திரமாக வந்து சேர்ந்தான் தானே! ஏஞ்சல் உங்கள் செல்லக் குட்டிகள் அனைவரும் வந்து சேர்ந்தார்கள்தானே. துளசி அக்காவையும் கேட்டுவிட வேண்டும். ரஜ்ஜு வந்து சேர்ந்தானா என்று.
ஒரு வழியாக முடித்துவிட்டேன். இன்று நானும், மகனும் பயணம். இன்னும் ஒரு வாரம்/10 நாட்கள் வலைப்பக்கத்திற்கு விடுமுறை. முடிந்தால் இடையில் எட்டிப் பார்க்கின்றேன். 10 நாட்களுக்கு நீ.................ளமான மொக்கைப் பதிவுகள் எங்கள் தளத்தில் உங்களைத் தொல்லைப்படுத்தாது. ஹிஹிஹி...
வீட்டிற்குள் நுழைந்ததும் அந்தச் சமயம்
பார்த்து வென்ற கட்சியும், எதிர்க்கட்சியும் சரவெடிகள் வெடிக்க அவ்வளவுதான் எல்லோரும்
பயந்து, உடம்பு நடுங்க ஓடி ஒளிந்து கொண்டார்கள். முந்தைய பதிவில் முடித்திருந்தேன்
சத்தம் எல்லாம் அடங்கி எல்லோரும்
தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டதும் கண்ணழகி கட்டிலின் அடியிலிருந்து வெளியில்
வரவும் அங்கு அவள் அம்மா கீதா இவர்களுக்காகச் செய்த கேக் எல்லாம் வைத்திருக்க,
உடனே கண்ணழகி எல்லோரையும் அழைக்க...
கண்ணழகி : நண்பர்களே! நம் அருமைக் குட்டிச்
செல்லம் ஸன்னிக்கு இந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி 3 வயது நிறைகின்றது. அதற்குள் அவன்
ஊருக்குப் போய்விடுவான் என்பதால் நாம் எல்லோரும் இன்று அவனது பிறந்த நாளைக்
கொண்டாடுவோம். சரியா.
டைகர் : அதற்கு முன் எல்லோரும் நமது மற்ற
அப்பா, அம்மாக்களின் செல்லங்கள், நம் நண்பர்களின் பிரிவிற்கு ஒரு சிறிய மௌன அஞ்சலி
செய்துவிட்டுப் பிறந்த நாள் கொண்டாடுவோம் சரியா.
எல்லோரையும் கீதா அடக்கி மௌனமாக இருந்துவிட்டு
பின்னர் ஸன்னிக்கு ஹாப்பி பர்த்டே டு யு ஸன்னி என்று சேர்ந்து பாடி
வாழ்த்தினார்கள்.
எல்லோரையும் மகிழ்வித்து நீடுழி வாழ, ஜூன் 13, 2016 அன்று 3 வயது நிறைவடையும் ஸன்னிச் செல்லத்திற்கு எங்கள் எல்லோரது பிறந்த நாள் வாழ்த்துகளும்
கண்ணழகி : நண்பர்களே ஸன்னி மல்டிகான் (Maltichon) எனும் வகையைச் சேர்ந்தவன். மல்டீஸ் (Maltese) என்ற இனமும், பைக்கான் ஃப்ரைஸ் (Bichon Frise) என்ற இனமும் கலந்து உருவான தனி வகை
இனம். தோற்றத்தில் சிறியவனாகப் பொம்மை போன்று இருந்தாலும், மிகவும் அன்பானவன்,
எச்சரிக்கை உணர்வுடன் இருப்பவன், பொறுப்பானவன், நன்றாகத் தோழமையாகப் பழகுபவன், மகிச்சியானவன்
பிறரையும் மகிழ்விப்பவன், நன்றாக விளையாடுபவன்..இதோ பாருங்கள் அவன் விளையாட்டை,
சுறு சுறுப்பை....
மதுரைத் தமிழனின் செல்ல மகன் ஸன்னியின் விளையாட்டை இங்கு கண்டு மகிழுங்கள். நன்றி மதுரைத் தமிழன் சகோ
ஜெஸ்ஸி : அட சூப்பரா விளையாடறானே...
சரி நாங்கள் கிளம்புகின்றோம் என்று கருவாண்டியைக்
கூப்பிட அவன் ஜெஸ்ஸியுடன் தான் இருப்பேன் என்று சொல்லிவிட......ஜெஸ்ஸி, கருவாண்டி
நீங்கள் முடித்துவிட்டு விமான நிலையத்திற்கு வந்து சேருங்கள். அங்கு சந்திப்போம் என்று ஜெஸ்ஸியின் நண்பர்கள்
ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிட இவர்களின் உரையாடல்கள் தொடர்கின்றது.
ஸன்னி : ரொம்ப நன்றி உங்கள் எல்லோருக்கும்.
உங்கள் அன்பு மகிழ்வாக இருக்கிறது. நான் நெகிழ்ந்து விட்டேன். ஆனால், உங்கள் ஊரில் என்ன இப்படி எல்லாம் வெடிக்கின்றார்கள்?
அங்கெல்லாம் இப்படிச் சத்தமே இருக்காது தெரியுமா. இதைப் பற்றிச் சொல்லவே இல்லை நீ. எனக்குப் பயமாக இருக்கிறது.
கண்ணழகி : சொன்னா நீங்கல்லாம் வந்துருக்கவே
மாட்டீங்களே...அதை ஏன் கேட்கிறீர்கள்! இங்க அவ்வப்போது வெடித்துக் கொண்டே
இருப்பார்கள். சாவுச்சங்கு ஊதினாலோ, கோயிலில் பாட்டுகள் ஒலி பரப்பினாலோ எனக்குத் தெரிந்துவிடும்
அன்று வெடிச் சத்தம் இரும் என்று. என் உடம்பு நடுங்க ஆரம்பித்துவிடும்.
ஜூலி : எங்கள் ஊரிலும் வெடி எல்லாம் உண்டு.
இந்த மனுஷங்க ரொம்ப மோசம் நம்மை எல்லாம் ரொம்பப் பயப்பட வைக்கின்றார்கள். கண்ணழகி!
உங்கள் வீட்டில் பட்டாசு எல்லாம் வெடிப்பார்களா?
டைகர்: எங்க ஊர்ல பட்டாசு சத்தம் எல்லாம் நாங்கள்
இருக்கும் இடத்தில் கேட்காது. ஒரே ரப்பர் தோட்டம்தான். வீடும் அங்கங்குதான்
இருக்கும். அழகான ஊர். எங்கள் வீட்டில் பின் புறம் பெரிய ரப்பர் தோட்டம், முன்
புறம் பெரிய தோட்டம் எல்லாம் உண்டு. அடுத்த தடவை நீங்கள் எல்லோரும் அங்கு
வாருங்கள். ஜாலியா சத்தம் இல்லாமல் தோட்டத்திலேயே சுத்தலாம்.
ரஜ்ஜு : அட! இந்தத் தடவையே அங்கு
போயிருக்கலாம். எங்கள் ஊரிலும் இந்த மாதிரி சத்தம் எல்லாம் கிடையாது.
கண்ணழகி : எங்கள் வீட்டில் பட்டாசு எல்லாம்
வெடிக்கவே மாட்டர்கள். அண்ணன் 2 ங்க்ளாஸ் படிக்கும் போதே நம்மை மாதிரி 4 காலுக்கு
எல்லாம் இது ஆகாது என்று வெடிக்கறதே இல்லை என்று அண்ணன் சொல்லுவார்.
ஜூலி : ஆனால் ஊர் முழுக்க வெடிப்பார்களே
கண்ணழகி : ஆமாம் அப்பல்லாம் நான் சாப்பிடவே
மாட்டேன். தீபாவளினாலே பிடிக்காது. ஆனா
ப்ரௌனி பயந்தாலும் சாப்பாடு மட்டும் விட மாட்டா...
கண்ணழகி : ஹும். பட்டாசு சத்தம் கேட்டு அவள்
அந்த அறையில் கட்டிலுக்கடியில் மூலையில் ஒதுங்கியிருப்பாள். நான் சங்கிலி இல்லாமல்
இருப்பதால் அந்தக் கதவு மூடியிருக்கும்.
ஜெஸ்ஸி, ரஜ்ஜு: நீ இங்கே இரு. நாங்கள் அவளைப்
பார்த்துட்டு வருகிறோம். நீ இங்கே சும்மா குரைத்துக் குரைத்து எங்களைத் தொந்தரவு
பண்ணக் கூடாது.
எனது மற்றொரு மகள் ப்ரௌனி
ப்ரௌனியின் ரூமிற்குச் சென்றார்கள். ஹை
ப்ரௌனி...எங்கருக்க? என்று கோரஸாகக் கேட்க ப்ரௌனி தன் குண்டு உடம்பை தூக்கிக்
கொண்டு மெதுவாக வெளியில் வந்தாள். பூனையார்களைப் பார்த்ததும் முதலில் கொஞ்சம்
உறுமினாள். அப்புறம் கீதா அவளிடம் ஃப்ரென்ட்ஸ் என்று சொல்ல அடங்கிவிட்டாள்.
ப்ரௌனி : ம்ம் நடுங்காது ஆனால் பயம் உண்டு
கட்டிலுக்கடியில் போய் படுத்து விடுவேன். கண்ணழகி தொடை நடுங்கி நடுங்கியிருப்பாளே.
ஸன்னி : இதப் பார்ரா அவள் இவளைச் சொல்லுகிறாள்.
இவள் அவளைச் சொல்லுகிறாள்....அது சரி ஏன் உங்க ரெண்டு பேருக்கும் பங்கிச் சண்டை
ஜூலி : ஸன்னி! அது பங்கிச் சண்டை இல்லை
பங்காளிச் சண்டை...
ஸன்னி : என்னவோ ஒண்ணு....
ப்ரௌனி : அது உனக்கும், டைகருக்கும் தெரிந்துருக்குமே.
நம்மவர்களில் வயதிற்கு வரும் முன்னரேயே/வரும் சமயம் ஒரு Pack ற்கு யார் தலைமை என்று முடிவு செய்வது
உண்டு இல்லையா? நாங்கள் இருவருமே ஒரே வீட்டில் தானே இருக்கிறோம். எங்கள் பேக்
அம்மா, அண்ணா என்று இருந்தாலும் எங்கள் இருவருக்குள் யார் தலைவி என்ற பிரச்சனை
வந்தது. கண்ணழகி ஆல்ஃபா. நான் அடங்கித்தான் போய்க் கொண்டிருந்தேன். ஆனால், ஒரு
முறை எங்களுக்குள் தீவிரமாகச் சண்டை வந்த போது, அண்ணாவிற்கு, அப்போது நம் உளவியல்
தெரியாததால் கண்ணழகியை அடக்கி, எனக்கு ஆதரவாகப் பேசி என்னை அவள் கடியிலிருந்துப்
பிரிக்க, எனக்குத் தைரியம் வந்து விட்டது. நானும் கண்ணழகியை எதிர்க்கத் தொடங்கி
விட்டேன். அதன் பிறகு நாங்கள் இருவரும் எதிரும் புதிரும்தான்.
ஜெஸ்ஸி : சே நீங்கள் இருவரும் ஒன்றாக
இருந்திருந்தால் இப்போது எங்களுக்கும் நன்றாக இருந்திருக்கும், அம்மா,
அண்ணாவிற்கும் நன்றாக இருந்திருக்கும்.
ஜெஸ்ஸி, கருவாண்டி : சரி நாம் கொஞ்ச நேரம்
வெளியில் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோமா?
டைகர் : அதானே பார்த்தேன். இவர் இரண்டு பேரும் ஊர் சுற்றாமல் இங்கே இப்படி
அமைதியாக இருக்கிறார்களே என்று. ஆரம்பித்துவிட்டார்கள்.
ப்ரௌனி : நான் வர மாட்டேன் வெளியே. 1, 2
போவதற்கு மட்டும் தான் வெளியே வருவேன்.
ஜூலி : ஹ்ஹ்ஹ்ஹ் ஏன் அவள் வீட்டை விட்டு ஓடி
விடுவாளா?
டைகர் : அதை ஏன் கேட்கிறாய். அவள் 3 முறை
வெளியில் ஓடிவிட அண்ணனும், அம்மாவும் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு
வந்தார்கள்.
ப்ரௌனி : டைகர் உன் கதை மட்டும் என்னவாம்? சீசன் சமயத்தில் நீ அலைந்தாயே! சங்கிலியை
அறுத்து கொண்டு வெளியில் ஓடி விட்டு வீட்டிற்கு வர பயந்து ரப்பர் தோட்டத்து
மரத்தடியில் செடிகளுக்கிடையில் முனகிக் கொண்டு இருந்ததை, இருட்டில் தேடிக் கண்டு
பிடித்து அழைத்து வந்தார் துளசி அப்பா.
ஸன்னி : அப்போ நீங்கள் எல்லோருமே ஓடுகாலிகளா!
ஹ்ஹ்ஹ
ப்ரௌனி : நான் வெளியே போக மாட்டேன். ஒரு சின்ன
லாரி என் காலைப் பதம் பார்த்துவிட்டுச் சென்றுவிட இப்போதும் கால் நொண்டிக்
கொண்டுதான் நான் நடப்பேன். எனக்கு சாலையில் போக்கு வரத்தைக் கண்டாலே பயம்.
ஸன்னி : ஏன் டாக்டர் அண்ணா சரி பண்ணவில்லையா?
ப்ரௌனி : அது நடந்தது நான் 3 மாதக் குழந்தையாக
இருக்கும் போது. அண்ணா படித்து முடிக்கும் முன். இப்போது அண்ணா என்னைத்
துன்புறுத்த வேண்டாம் என்று விட்டுவிட்டார்.
ஜெஸ்ஸி : சரி நாம் எல்லோரும் சிறிது வெளியில்
சென்றுவிட்டு வருவோம்.
அவர்கள் எங்கள் பேட்டையில் உலா செல்ல நினைத்த
போது என்ன நடந்தது என்பதோடு முடிகின்றது தொடர்....நீங்களும் அவர்களுடன் உலா
வாருங்கள்.
படங்களுக்கு நன்றி ஏஞ்சலின், துளசி கோபால் அக்கா, கீதா சாம்பசிவம் அக்கா, மதுரைத் தமிழன் சகோ, சகோ கரந்தையார், இளங்கோ ஐயா, ஸ்ரீராம், ஜிஎம்பி சார், டி என் முரளிதரன் சகோ
https://tthamizhelango.blogspot.com/2015/07/blog-post_15.htmlதமிழ் இளங்கோ
ஐயா -இறந்து
போன எங்கள் ஜாக்கியின் நினைவாக, இந்த நாய்களுக்கு சாதம், பிஸ்கெட், ரொட்டி கொடுப்பதில் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி. இங்கு சென்றால் ஜாக்கியைப்
பற்றிய பதிவும் கிடைக்கும்