வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

தகர்க்கப்பட்ட பால்ஷாமினும் பாதாளத்தில் தள்ளப்பட்ட மஹாபலியும்


     கடந்த வாரம் வெடிகுண்டு வைத்து தகர்த்தெறியப்பட்ட பால்மிரா பால்ஷாமின் கோவில் அழிக்கப்படுவதை சிரியா கடந்த ஞாயிறன்று காணொளியில் காண்பித்ததைக் கண்டதும் மனது பதைத்தது. IS (Islamic State militants) தீவிரவாதிகளின் அக்கரமத்தால் தவிடு பொடியாக்கப்பட்ட பண்டைக்காலக் கோவில்.  


சிரியாவில் கிறித்தவ மதம் பரவும் முன் அங்கு வாழ்ந்த அன்றைய மக்கள் அவர்களது தெய்வமான பேல் (Bel) வேதனை வழிபட்டிருந்த கோயில். இது போன்ற பண்டைய மக்களின், அவர்களது கலாச்சாரத்தின் சின்னங்களை யுனெஸ்கோ உலகில் பல பகுதிகளில் பாதுகாத்து வருகிறது.

அவற்றிற்கெல்லாம் இப்போது IS (Islamic State militants ) போன்ற தீவிர வாத இயக்கங்களிலிருந்து இது போன்ற ஆபத்து எற்படுகின்றது.  இப்படி இதற்கு முன்பும் உலகெங்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும், அன்று, பணம், படை மற்றும் ஆயுதபலமுள்ளவர்கள், அவர்களுக்குப் பிடிக்காதவற்றை, அவர்களுக்கு மட்டும் புரிகின்ற, மற்றவர்களுக்கு எவ்வளவு ஆழ்ந்து சிந்தித்தாலும் புரியாத, புரிந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாத காரணங்களுக்காகத் தகர்த்தெறிந்திருக்கின்றார்கள்.

அப்படித் தகர்த்தெறியப்பட்ட அந்த சம்பவங்கள் நடந்த நாட்கள் எல்லாம் காலப்போக்கில், அக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின் உழைப்பாலும், விருப்பப்படியும் கிடைத்த வெற்றியாகக் கொண்டாடப்படுவதுண்டு.  காலம் செல்லச் செல்ல அதை எதிர்ப்போரது எண்ணிக்கை குறைந்து, அதிகாரத்தில் இருப்போர் சொல்லுவதை ஆமோதிப்பவர்களின் எண்ணிக்கைக் கூடிக் கொண்டேதான் இருக்கும். 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை புனைந்து எலியைப் புலியாகவும், புலியை எலியாகவும், நடக்காததை நடந்ததாகவும், நடந்ததை நடக்காததாகவும் சொல்லி, வரலாற்றையே மாற்றி எழுதிவிடுவதுண்டு. யார் சொல்லுவதை நம்புவது என்ற குழப்பம் காலப்போக்கில் அடுத்த தலைமுறையினருக்கு இது போன்றவற்றைக் கேட்கும் போது உண்டாவது இயற்கையே.


      அப்படி ஒரு கதையல்ல பல கதைகள் உலகெங்கிலும் உள்ள மலையாளிகள் அனைவரும் கொண்டாடும் ஓணத்தைப் பற்றியும் சொல்லப்படுகிறது. 

“மாவேலி நாடு வானீடும் காலம்,
மானூச்சரெல்லாம் ஒந்நு போலே

மாவேலி என்றும் மகாபலி என்றும் (பாகுபலி அல்ல) அழைக்கப்பட்ட மாமன்னர் இப்போதைய கேரளத்தின் மத்திய பாகத்தை ஆண்ட போது எல்லா மனிதர்களும் எந்தவித சாதிமத வேறுபாடுகள் இல்லாமல் சமமாக வாழ்ந்திருந்தனர் என்பதுதான் இவ்விரு வரிகள் பறை சாற்றுவது. எந்தவிதக் குற்றங்களும் இல்லாத அமைதியான நாடாக இருந்த காலம். அவரது ஆட்சி கேரளத்தின் பொற்காலம் எனலாம். 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இவ்வோணப்பாட்டிலுள்ள வார்த்தைகளையும் அதைப்பாடும் விதத்தையும் வைத்துப் பார்க்கும் போது 17, 18, 19 நூற்றாண்டுகளில் பாணர்களால் பாடப்பட்ட வடக்கன் வீரகதை பாடல்களைப் போல்தான் உள்ளது.  அதற்கு முன் இப்பாடல், இவ் உண்மையை விளக்கும் பாடல், ஒரு தலை முறையினின்றும் அடுத்த தலைமுறைக்கு செவி வழியாகப் பரப்பப்பட்டிருக்கலாம்.

மகாபலியின் ஆட்சி தேவலோகத்தில் வாழ்ந்த தேவர்களைக் கூடப் பொறாமைப்படுத்தும் அளவிற்குச் சிறப்பாக இருந்ததாம். அதனால், தேவேந்திரனுக்கு இது பயத்தையும் ஏற்படுத்தியதாம்.  அசுர அரசன் என்று சொல்லப்பட்ட மகாபலி இந்திரனை வென்று இந்திரலோகத்தைக் கைப்பற்ற முயல்கிறான் என்று யாரோ சொல்ல பயத்தில் இந்திரன் மகாவிட்ணுவைக் கண்டு வருந்த, மகாவிட்ணுவும் அசுரர்கள் என்று சொல்லப்படும் தன்னை வணங்காதோர் அவ்வளவு நல்லவர்களும் வல்லவர்களும் ஆவது உலகிற்கு நன்றன்று என்று நினைத்து (விட்ணுவுக்கு தேவர்கள், அசுர்ர்கள் என்ற பாகுபாடு மட்டுமல்ல, மனிதர்களுக்கு இடையே பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர வேறுபாடுகளும் உண்டாம்! கூடுதலாக) அதிதியின் வயிற்றில் வாமனனாக திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தாராம். 

விஸ்வஜித் யாகம் நடத்திக் கொண்டிருந்த மகாபலியிடம் 3 அடி மண் தானம் கேட்க மகாபலியும் சம்மதிக்க விஸ்வரூபம் எடுத்த வாமனன், முதலடியால் பூமியையும், இரண்டாவது அடியால் ஆகாயத்தையும் அளந்து, மூன்றாம் அடி எங்கு வைக்க என்று கேட்க, மகாபலி தன் தலையைக் காண்பிக்க, வாமனன் அப்படி மகாபலியின் தலையில் மூன்றாம் அடியை வைத்து பாதாளத்திற்குள் மிதித்துத் தள்ளினாராம். அசுர அரசர் என்று சொல்லப்பட்ட ஒரே காரணத்தால் நல்ல அரசன் ஒருவனை இப்படிச் செய்திருப்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

தள்ளப்படும் முன் மகாபலி தன் மக்களைக் காண வாமநனின் பிறந்த நாளான ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளில் வர அனுமதி கேட்க வாமநன் அதற்கு அனுமதித்தும் விட்டாராம்.  அப்படி எல்லா வருடமும் தன் மக்களைக் காணவரும் மகாபலியை வரவேற்கத்தான் இவ் ஓணப்பண்டிகை. 10 நாட்களும் பூக்கோலமிட்டு 10 ஆம் நாள் குடும்பத்தினர் அனைவரும் மகாபலியை நினைவு கூர்ந்து விருந்துண்ணும் பழக்கம் இருந்து வருகின்றது. இத்துடன் வேறு சில ஓணப் பின்னணிக் கதைகளும் இல்லாமல் இல்லை. 

விஜயநகர மன்னர்கள் ஆட்சியில் வளர்ந்த வைணவப் ப்ரோகிதர்கள் சோழ, பாண்டிய நாடுகளில் தாங்கள் நினைத்த வண்ணம் வைணவத்தை வளரச் செய்ய முடியாமல் போகவே, கேரளாவில் மகோதயபுரத்தில் (இன்றைய இரிஞாலக் குடா) வேரூன்றி, அருகே உள்ள திருக்காக்கரையை (எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதி) ஆண்ட மாவேலியை சதியால் அரியணை துறந்திட வைத்தார்களாம். சைவ மன்னரான மாவேலி கொல்லப்பட்டது (நாடுகடத்தப்பட்ட்து) சோழ, பாண்டிய நாட்டு சைவர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தவும் செய்தது.

சைவர்கள் பிரித்த ஒரு கதைதான் சீர்காழி சட்டநாதன் கதை. சிவபக்தனான மகாபலியைக் கொன்றதால் செருக்குற்றுத் திரிந்த விஷ்ணுவை சிவபக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்கி சிவபகவான் கொன்று, அவரது தோலை உரித்து அதை ஆடையாக உடுத்தி சீர்காழியில் “சட்டை”நாதனாக கோபுரமேறி அமர்ந்துவிட்டாராம்.  விட்ணுவின் மனைவி இலக்குமி கணவனின் பிரிவால் அழுது கதற மனமிரங்கி விட்ணுவை உயிர்ப்பித்தாராம்.  இதுதான் சீர்காழியில் வாழும் சட்டநாதரான சிவபெருமானின் கதை.

மேற்கூறிய இரண்டு சம்பவங்களும் தேவைக்கதிகமான வைணவ, சைவ பக்தியால் விளைந்தது என்று சொன்னால் மிகையல்ல.

வேறு ஒரு கதை! This is only legal matter. பரசுராமன் தன் கோடாலியை எறிந்து கேரளக்கரையை அடிக்கடலில் இருந்து மீட்டபின் பிராமணர்களுக்கு அப்பகுதியை தானம் செய்தாராம். எப்போதாவது தனது உதவி தேவை எனில் அப்பிராமணர்களோ, அவர்களது வாரிசுகளோ நினைத்த மாத்திரத்தில் அவர்களுக்கு முன் தோன்றுவேன் என்று உறுதி அளித்தும் போனாராம்.  அதைப் பரிசோதிக்க அப்பிராமணர்கள் தேவை இல்லாமல் பரசுராமனை நினைத்திருக்கின்றார்கள்.

அப்போது பரசுராமனுக்குப் பதிலாக ராமன் அவர்கள் முன் தோன்றி அவர்களைக் கடிந்து கொண்டாராம்.  சபிக்கவும் செய்தாராம். வருடம் ஒரு முறை இச் சம்பவம் நடந்த திருக்காக்கரைக்கு தான் வருவேன் என்றும் அப்படி வரும் தினத்தை விழாவாக எல்லா வருடமும் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாராம்.  அப்படித்தான் ஓணம் கொண்டாடப்படுகிறது என்றும் ஒரு கதை.

இதன்றி இஸ்லாம் மதம் மாறி மெக்காவுக்குச் சென்ற சேரமன் பெருமானை நினைவு கூரவே இவ்வோணப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது என்றும் ஒரு கதை சொல்லப்படுகின்றது. 


                                                வில்லியம் லோகன்(1841–1914)** 
       ஆனால், மலபார் மேனுவெல் எழுதிய வில்லியம் லோகன்(1841–1914)** புதுவருடப் பிறப்பைக் கொண்டாடத்தான் மலபாரில் ஓணப்பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று அவர் எழுதியபோது, தான் கண்டறிந்ததை உள்ளபடி எழுதி இருக்கிறார். 

உண்மை என்ன என்று அறிய தமிழகத்தில் உள்ளது போல் பழைய ஓலைச்சுவடிகள் கேரளத்தில் பாதுகாக்கப்படவில்லை.  பால்ஷாமினுக்கு நேர்ந்த கதி கேரளத்தில், ஓலைச்சுவடிகளுக்கும் நேர்ந்துவிட்டது. கிபி 1750 ல் திருவிதாங்கூரை ஆண்ட முதல் வைணவ மன்னரான மார்த்தாண்ட வர்மா கேரளா எங்கிலுமுள்ள சிற்றரசர்கள் மற்றும் கோவில்களில் இருந்த ஓலைச் சுவடிகள், விலை உயர்ந்த ரத்தின்ங்கள், நகைகள் போன்ற எல்லாவற்றையும் “படையோட்டம்” நடத்தி, அவர் கைப்பற்றிய நகைகள் மற்றும் ரத்தினங்களை திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாப சுவாமியின் காலடியில் காணிக்கையாக்கி பதுக்கியும் வைத்துவிட்டார்.  பாதுகாக்கப்பட வேண்டிய அரிய ஓலைகளை எல்லாம் தீக்கிரையாக்கி, புதிதாக ஒரு கேரளச் வரலாறு அவருக்குப் பிடித்தமான வித்த்திலும் வைணவத்தை வளர்க்கும் வித்த்திலும் எழுதியும் விட்டார். அதுதான் இப்போது எல்லாவற்றிற்கும் கேரளத்தில் ஆதாரமாக்க் கருதப்படுகிறது.

இப்படி இறைவனை ஏதோ ஒரு கட்சித்தலைவரது நிலைக்குக் கொண்டுவந்து பிற்பட்டோரையும், தாழ்த்தப்பட்டோரையும் கோயிலுக்குள் வரவேண்டாம் என்று தடுத்ததால் கேரளத்திலுள்ள மக்களில் ஏறக்குறைய 45% இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதத்திற்குப் போய்விட்டார்கள். அப்படி அதிகாரவர்கத்தினால் மீட்கப்பட்டாலும், மகாபலியை நினைக்க அவர் நல்லாட்சியில் வாழ்ந்த எல்லா மக்களும் அவர்களது பின் தலைமுறையினரும்(மதம் பாராமல்) இருக்கிறார்கள். ஆனால், பேல் தேவனையோ, பால்ஷாமின் கோயிலையோ மறக்காமலிருக்க இனி வரலாற்றுத் தாள்களில் சில வரிகள் மட்டும்தான் இருக்கும்.  என்ன செய்ய? வருந்தத்தான் முடியும். இப்படி வருந்தி உங்களிடம் புலம்பத்தான் முடியும்!

சுதந்திர இந்தியாவில் வாழ்வதால் இப்படிப் புலம்பவாவது முடிகின்றது. பக்கத்து நாடான பங்களாதேஷில் இப்படிப் புலம்பும் பதிவர்களை கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்கின்றார்களே.

படங்கள் :இணையத்திலிருந்து
(பின் குறிப்பு: ** William Logan (18411914) was a Scottish officer of the Madras Civil Service under the British Government. Before his appointment as Collector of Malabar, he had served in the area for about twenty years in the capacity of Magistrate and Judge. He was conversant in Malayalam, Tamil and Telugu. He is remembered for his 1887 guide to the Malabar District, popularly known as the Malabar Manual.  Malabar by William Logan (popularly known as the Malabar Manual) is an 1887 publication commissioned by the Government of Madras, and originally published in two volumes.[1] It is a guide to the Malabar District under the Presidency of Madras in British India, compiled during Logan's tenure as Collector of Malabar. It is an exhaustive volume giving the details of the geography, people, their religion and castes, language and culture. It depicts the life and style of the vernacular people of Malabar District.  நன்றி விக்கி.   

36 கருத்துகள்:

  1. William Logan ezuthiyathu konjam etrukolla kudiyathaaka irukkirathu.

    matra kathaikal ellam verum karpanaiye..


    arumaiyaanathoru pathivu.

    பதிலளிநீக்கு
  2. எதை யார் கண்டிப்பது என்பது இப்ப யாராலும் முடியாத விடயம் எல்லாம் அரசியல் ஆட்டம் இப்படித்தான் ஆப்ஹாஸ்தானில் ஒரு புத்த சிலை உடைத்த விடயம் பற்றி யாரும் பேசவில்லை ! இதுக்கு அரசியல் பின்னூட்டம் சொல்லி உங்க தேடலை திசை திருப்ப விரும்பவில்லை ஆனால் ஓவ்வொரு இடிப்பும் பின் இன்னொரு கதை இருக்கு! தேடுவோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தனிமரம் தங்களின் கருத்திற்கு....நிச்சயமாக ஒவ்வொருஇடிப்பின் பின்னும் ஒவ்வொரு கதை இருக்கத்தான் செய்கின்றது....நண்பரே!

      நீக்கு
  3. மாவலி கதை பற்றிய அரிய தகவல்கள்..

    வரலாற்றுச் சின்னம் தரைமட்டமாக்கப்பட்டது கண்டு வேதனை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா! தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  4. தீவிரவாதிகளின் போக்கைக் கண்டு உள்ளம் பதறுகின்றது
    சகோதரா உலகெங்கும் பரவி வரும் தீவிரவாதம் ஒழிய
    வேண்டும் பிறரது உழைப்பும் உயிரும் காக்கப் பட வேண்டும்
    இந்தத் தீய சக்திகளை ஒழிக்க வேண்டும் !வரலாற்றுக் கதைகளைப்
    படித்து மகிழக் கிடைத்த இந்தத் தருணம் புனிதமானது என உணருகின்றேன்
    பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோதரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் அம்பாள் அடியாள் சகோதரி...ரொம்ப நாளாயிற்றுத் தங்களைப் பார்த்து. மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும்....

      நீக்கு
  5. பாகுபலிக்கும் கதைக்கும மகாபலிக்கும் கதைக்கும் உள்ள விபரம் தெரிந்து கொண்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  6. சிவ-வைஷ்ணவ கதைகள் மாறி மாறி நிறைய இருக்கும்! மகாபலி கதை அருமை. ஐ எஸ் அழிக்கும் கலைச்சின்னங்கள் பற்றிப் படிக்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறையவே மாறி மாறி இருக்கின்றன.! மிக்க நன்றி ஸ்ரீராம்! தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  7. அரிய தகவல்கள் அறியத் தந்தமைக்கு நன்றி
    மனிதன் மதம் மறந்தால் மனிதம் தளைக்கும்
    நல்லதொரு பதிவு தங்களுக்கு ஓணம் ஆசம்ஸகள்

    //சுதந்திர இந்தியாவில் வாழ்வதால் இப்படிப் புலம்பவாவது முடிகின்றது. பக்கத்து நாடான பங்களாதேஷில் இப்படிப் புலம்பும் பதிவர்களை கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்கின்றார்களே//
    ஹாஹாஹா ரசித்தேன்
    ஓணமொய் வச்சுட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கு! ரசித்ததற்கும்....

      நீக்கு
  8. இது திருந்தாத உலகம்! தீவிர வாதம் குறையாது முடிவு அழிவுதான்!

    பதிலளிநீக்கு
  9. தொன்று தொட்டு இப்படி பாரம்பரிய சின்னங்கள் எதிரிகளால் அழிக்கப்படுவது வழக்கம் ஆகிவிட்டது. ஓணம் குறித்த பல்வேறு கதைகளும் சிறப்பு! கதை எப்படி இருந்தால் என்ன? மக்களை மகிழ்விக்கும் ஓர் பண்டிகை கிடைத்த வகையில் சிறப்புதானே! இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ் தங்களின் கருத்திற்கு! தங்களுக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துகள்!

      நீக்கு
  10. அன்புள்ள அய்யா,

    தகர்க்கப்பட்ட பால்ஷாமினும் பாதாளத்தில் தள்ளப்பட்ட மஹாபலியும் IS (Islamic State militants) தீவிரவாதிகளின் அக்கரமத்தால் தவிடு பொடியாக்கப்பட்ட பண்டைக்காலக் கோவில்களைக் கண்டு மனம் பதைபதைத்தது. மனிதன் எங்கே போகிறான்? மனிதநேயம் எங்கே போனது?

    ஓணப் பின்னணிக் கதைகள் நான்கையும் கூறினீர்கள். எதுஎப்படியோ ஓணப்பண்டிகை. 10 நாட்களும் பூக்கோலமிட்டு 10 ஆம் நாள் குடும்பத்தினர் அனைவரும் மகாபலியை நினைவு கூர்ந்து விருந்துண்ணும் பழக்கம் இருந்து வருகின்றது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதுதானே!

    மகாபலியை நினைக்க அவர் நல்லாட்சியில் வாழ்ந்த எல்லா மக்களும் அவர்களது பின் தலைமுறையினரும்(மதம் பாராமல்) இருந்து கொண்டாடுவது நமது நாடு மதச்சார்பின்னை உள்ள நாடு என்பதற்கு இது ஒரு சாட்சி...!

    நன்றி.
    த.ம. 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு!

      நீக்கு
  11. ஆக்குவதற்கு ஆள் குறைவென்றாலும் அழிப்பதற்கு............?அருமையான அரியத்தந்தமைக்கு
    நன்றிசகோ ஓணம்நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி..தங்களின் முதல் வருகைக்கும், கருத்திற்கும். நாங்களும் தொடர்கின்றோம்...

      நீக்கு
  12. அதிகாரத்தில் இருப்போர் நினைப்பதும் செய்வதும் தான் வரலாறு! பல நேரம் இது அழிவிலே எழுதப் படுகிறது.
    வில்லியம் லோகன் பற்றிய தகவலுக்கு நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி க்ரேஷ் சகோதரி தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  13. பதில்கள்
    1. ஓணம் நல் வாழ்த்துகள் ! மிக்க நன்றி தங்களின் வாழ்த்திற்கும்...

      நீக்கு
  14. மகாபலி... மாவலி அறியத் தந்தீர்கள்...
    மிகவும் அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  15. பண்டிகைக்கு மூல கதை காரணம் எதுவாயினும்

    இன்று எல்லா கேரளா மக்களையும் ஒரு நேர்கோட்டில் இணையச் செய்து தமது கலாச்சாரத்தை நினைவு கூர்ந்து அதன் சிறப்புகளை உலகு அறியும் வண்ணம் கொண்டாடுகிறது என்பது தான் எனக்குச் சிறப்பாகப் படுகிறது.



    அன்று அவர்கள் வீடுகளில் போடும் வண்ண வண்ண கோலங்கள்,

    அவர்கள் அணியும் ஆடைகள், ஆபரணங்கள்,

    தித்திக்கும் பிரதமன் போன்ற பாயசங்கள்.

    எல்லாமே



    கேரள நாட்டினை கடவுளின் சொந்த நாடு என்பர். அதர்கேற்றவரே இருக்கிறது.



    ஓணம் வாழ்த்துக்கள்.

    உங்கள் மூலம் என் மலையாள நண்பர் அனைவருக்கும்.



    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுப்பு தாத்தா தங்களின் அழகான கருத்திற்கும், வாழ்த்திற்கும்!

      நீக்கு
  16. வணக்கம் அய்யா,
    நல்ல பகிர்வு, இலக்கியங்கள் காலபோக்கில் குழப்பமாவது இப்படி தான், மதம் தான்டி இவை மாறனும். பாசன் நாடகங்கள் பற்றிய செய்தி சேகரிப்பின் போது இது போல் நிறைய தகவல்கள் கிடைத்தது.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. மிக அருமையான பதிவு!

    கண்ணெதிரே தகர்க்கப்பட்ட வரலாற்றுச் சின்னத்தை ஒட்டி இதே போல் சிதைக்கப்பட்ட இன்னொரு வரலாற்றைத் தாங்கள் நினைவுகூர்ந்த விதமும் அதை எடுத்துச் சொன்ன விதமும் அருமை! ஒரே ஒரு பண்டிகை! ஆனால், அதை ஒட்டி எத்தனை எத்தனை கதைகள்!!

    இதே போல் தமிழினமும் வரலாற்றுச் சிதைப்புக்கு ஆளாகி இருக்கிறது; தொடர்ந்தும் ஆளாகி வருகிறது. யாழ் நூலக எரிப்பும், அண்மையில் நடந்த 300 கோயில்களின் தகர்ப்பும் எந்த விதமான விசாரணையும் இல்லாமலே சிங்களர்களின் தமிழ் எதிர்ப்பு வெறியையும் ஈழத் தமிழர்களின் தனிநாடு கோரிக்கையிலுள்ள நியாயத்தையும் புரிய வைக்கும் காலக் கண்ணாடிகளாக வரலாற்றில் இடம் பெற்று விட்டன.

    ஆனால், இப்படி ஒரு பதிவு எழுத உங்களுக்கு சுதந்திரம் இருப்பதாலேயே இந்தியாவை சுதந்திர நாடு என நினைக்க வேண்டா! அரசியல் பதிவுகள் எழுதுவதோடு மட்டுமின்றி நேரடியாகக் களமிறங்கியும் ஓரிரு அடிகள் நீங்கள் எடுத்து வைத்தீர்களானால் புரிந்து கொள்வீர்கள், இஃது எப்பேர்ப்பட்ட சுதந்திர நாடு என்பதை. எடுத்துக்காட்டுக்குப் பதிவுலகில் நடந்ததையே சொல்லவா?

    மே 17 என்கிற ஓர் இயக்கம் தமிழினப் படுகொலை நடந்ததிலிருந்து ஈழப் பிரச்சினைக்காகவும் இன்ன பிற தமிழர் பிரச்சினைகளுக்காகவும் செயல்பட்டு வருவதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த இயக்கத்தின் வலைப்பூ தடை செய்யப்பட்டு விட்டது. தெரியுமா உங்களுக்கு? இத்தனைக்கும் அவர்கள் இந்திய ஒற்றுமைக்கு எதிராகவோ, சட்டத்துக்குப் புறம்பாகவோ கூட ஏதும் எழுதவில்லை. அவ்வப்பொழுது தாங்கள் நடத்தி வரும் நியாயமான மக்கள் நலப் போராட்டங்களைப் பற்றி எழுதவும், போராட்டங்களுக்கு உணர்வாளர்களை அழைக்கவும் மட்டும்தான் அந்த வலைப்பூவைப் பயன்படுத்தி வந்தார்கள்.

    இந்தியா ஒன்றும் அவ்வளவு சுதந்திரமான நாடு இல்லை நண்பரே!

    பதிலளிநீக்கு
  18. முதலில் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் இபுஞா நண்பரே! உங்கள் விரிவான பின்னூட்டம் கண்டுமிகவும் மகிழ்ச்சி. ஆம் உங்கள் கருத்துகள் அறிவோம்...


    //மே 17 என்கிற ஓர் இயக்கம் தமிழினப் படுகொலை நடந்ததிலிருந்து ஈழப் பிரச்சினைக்காகவும் இன்ன பிற தமிழர் பிரச்சினைகளுக்காகவும் செயல்பட்டு வருவதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த இயக்கத்தின் வலைப்பூ தடை செய்யப்பட்டு விட்டது. தெரியுமா உங்களுக்கு? இத்தனைக்கும் அவர்கள் இந்திய ஒற்றுமைக்கு எதிராகவோ, சட்டத்துக்குப் புறம்பாகவோ கூட ஏதும் எழுதவில்லை. அவ்வப்பொழுது தாங்கள் நடத்தி வரும் நியாயமான மக்கள் நலப் போராட்டங்களைப் பற்றி எழுதவும், போராட்டங்களுக்கு உணர்வாளர்களை அழைக்கவும் மட்டும்தான் அந்த வலைப்பூவைப் பயன்படுத்தி வந்தார்கள்.//

    நீங்கள் சொல்லுவதும் சரிதான்..சுதந்திரம் பற்றி...இதற்கு முன்பும் நாங்கள் கேரளத்தில் நடந்த ஒரு நிகழ்வு பற்றி எழுதியிருந்தோம். ஒரு தளமே ஒரு குறிப்பிட்ட இரு கூட்டத்தால் உரிமை எடுக்கப்பட்டுவிட்டது. அதைப் பற்றி எழுதிவிட்டு ஒருவேளை எங்கள் தளமும் முடக்கப்ப்ட்டு விடுமோ என்று கொஞ்சம் பயந்த காலமும் உண்டு..ஹஹஹஹ்...

    எழுதியது என்னவென்றால் அந்த நாடுகளை விட கொஞ்சம் பரவாயில்லையோ என்றுதான். சரி இதை எப்படிச் சொல்லுவது நண்பரே...அதாவது வேதனையைத்தன் ...கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும் சமூகத்தில் சுதந்திரமாக நடந்துக் கொண்டிருக்கும் போது, குற்றமற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பற்றி?!! புரிந்திருக்கும் என்று நினைக்கின்றோம்...

    மிக்க நன்றி நண்பரே தாங்கள் இவ்வாறு நுணுக்கமாகப் பதில் இடுவதற்கு...மிக்க மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  19. //கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும் சமூகத்தில் சுதந்திரமாக நடந்துக் கொண்டிருக்கும் போது, குற்றமற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பற்றி?!! புரிந்திருக்கும் என்று நினைக்கின்றோம்// - புரிந்தது!

    //அதைப் பற்றி எழுதிவிட்டு ஒருவேளை எங்கள் தளமும் முடக்கப்ப்ட்டு விடுமோ என்று கொஞ்சம் பயந்த காலமும் உண்டு// - நன்றாகச் சொன்னீர்கள்! :-)

    பதிலளிநீக்கு