ஞாயிறு, 27 அக்டோபர், 2013

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீங்கப்பா

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீங்கப்பா
       

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல ஒரு சம்பவம்க.  திருவனந்தபுரத்துல உள்ள ஒரு IAS அதிகாரிக்கு நடந்திருக்குது.  பெண்கள் மட்டும்தான் கழுத்துல செயின் போடலாம்னு ஏதாவது சட்டம் இருக்காங்க? இல்லைல? அரசு ஊழியர்கள் உடம்புல இத்தனை பவுன் தான் போடலாம்னு, சர்வீஸ் ரூலும் கிடையாதுதானே? பிறகு என்னங்க?  ஒரு IAS அதிகாரி சின்னதா 11 பவுன் செயின் கழுத்துல போட்டா என்னங்க?  பார்க்கிறவங்க சின்னதாவோ, பெரிசாவோ ஏக்கப் பெருமூச்சு விடலாம்...... வருத்தப்படலாம்.......வருத்தமோ, வயிற்றெரிச்சலோபடுறவங்களோட சேர்ந்துகிட்டு அவருக்குத் தெரியாம...அவர் காதுல கூட விழாம.........கொடுமைய பாருங்க.........“11 பவுன் செயின், அதுவும் ஒரு ஆம்பிள கழுத்துலனு சொல்லி வருத்தத்தையும், வயிற்றெரிச்சலையும் கொஞ்சம் குறைச்சுக்கலாம்....போனா போகுது....ஆனா ஏதோ ஒரு திருட்டு ராஸ்கல் அத அபேஸ் பண்ணிட்டு, 2 லட்சத்துக்கு மேல விலை மதிப்புள்ள அந்தச் செயின திருடிட்டு போன பிறகும் கூட, “இவரு இப்படி ஒரு செயின கழுத்துல போட்டது சரியா? இப்படிப்பட்ட நகை ஆசை ஒரு IAS அதிகாரிக்கு பொருந்துமா, வேணுமா? ....அவரு சின்னதா ஒரு 3 பவுன் செயின் போட்டிருக்கலாமேனு போஸ்ட் மேல போஸ்ட்....கமெண்டுக்கு மேல கமெண்ட்ஸா, ஃபேஸ் புக், ட்விட்டர், ப்ளாகுனு (?!) எல்லாத்துலயும் எழுதி, பாவம் அந்த மனிதரை சித்திரவதை செய்வது நியாயமா? இந்த மனுஷனோட வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுரதுல உங்களுக்கெல்லாம் என்ன அப்படி ஒரு சந்தோஷம்?  (அப்பாடா!....இப்பதான் மனசுக்கு சந்தோஷமா இருக்குதுங்க....நல்லபடியா போஸ்ட் பண்ணியாச்சு.....இனி நிம்மதியா மத்த வேலைகளை பாக்கலாம்!?)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக