தலக்காடு- 1, 2, 3, 4, 5 , 6 , 7 , 8
கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்த பதிவில் கோவிலின் பின்பக்கம் பார்த்தவை படங்களுடன் என்று முடித்திருந்தேன். கோயிலைச் சுற்றி வரும் போது பின் பகுதியில் சிவலிங்க சன்னதி
இறைவன் லிங்க வடிவில் தெரிகிறாரா? வாயிலில் துவாரபாலகர்கள் சிற்பங்கள்.
மேலே கஜலக்ஷ்மி இருப்பது வித்தியாசமாக இருக்கிறது
அந்த சன்னதி மண்டபத்தின் தூண்கள்
மார்கண்டேயர் புராணம் சொல்லும் சிற்பம். (நன்றி கோமதிக்கா. கோமதிக்காவிடம் கேட்டுக் கொண்டேன்)
ஞானமே உருவான ஆஞ்சநேயனும்
காலன் வரும்முன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலுன் கடைவாய்ப் படுமுன்னே – மேல்விழுந்து
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானை நினை - (பட்டினத்தார்)
ஜல் ஜல் ஜல் எனச்
சதங்கைகள் ஒலித்திட
கொல் கொல் கொல் எனத்
தலைகளை மிதித்திட
நஞ்சுடை காளியன் நலிந்து
மடிந்திட
செஞ்சடையனைப் போல்
களிநடம் புரிந்திட!
(நன்றி கவிநயாம்மா)
அங்கம்
தழைக்க அருளும் பரனே!
அடியார்க்கு
பிச்சையளிக்கும் இறைவனே!
தங்கும்
பிக்ஷாடன மூர்த்தி போற்றி!
தருணமிதே
அருள்புரிய வாராய்!
(திருமூலர் மந்திரம்)
பொய்ந் நின்ற ஞானமும், பொல்லா
ஒழுக்கும், அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறவாமை உயிர் அளிப்பான்,
எந் நின்ற யோனியுமாய், பிறந்தாய்! இமையோர் தலைவா!
மெய் நின்று கேட்டருளாய், அடியேன் செய்யும்
விண்ணப்பமே.
(நம்மாழ்வார் பாடல்)
அன்று ஞாலம் அளந்த பிரான்* பரன்
சென்றுசேர் திருவேங்கடமாமலை*
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.
(நம்மாழ்வார் பாடல்)
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே
(அபிராமி அந்தாதி)
கூவி
அழைத்தால் குரல் கொடுப்பான் - பரம்
குன்றம்
ஏறி நின்று குமரா என்று
கூவி
அழைத்தால் குரல் கொடுப்பான்
(கவிஞர்
வாலி)
இன்னும் அடுத்த பகுதியில் தொடரும்...
----கீதா























