எழுத்தாளர் இராய செல்லப்பா சார் குடும்பத்தினர் நடத்தும் அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி- 2025 இந்த வருடமும் மிகவும் சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. தன் அன்னையின் நினைவில் தொடங்கி, எழுத்தாளர்களின் படைப்பாற்றலைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் எளிய முயற்சியாக சென்ற வருடத்திலிருந்து நடத்திவருகிறார், திரு செல்லப்பா சார்.
இந்த வருடம்
போட்டியில் நானும் பங்கெடுத்தேன். பரிசளிப்பு விழா டிசம்பர் 2 - 2025 ஆம் தேதி சென்னையில்
அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. நான் செல்வதாக இருந்தது. ஆனால் இறுதியில்
பயணத்தை ரத்து செய்ய வேண்டிய சூழல்.
நண்பேண்டா! நான் கேட்டுக்
கொள்ளாமலேயே, நம்ம நட்பு எபி ஸ்ரீராம் தானாக அன்புடன் முன்வந்து, என் சார்பில் பரிசைப்
பெற்று வருகிறேன் என்றார். மகிழ்ச்சியாக இருந்தாலும், மனம் சஞ்சலப்பட்டது. யாரிடமும் இப்படியான Obligations கேட்கும் வழக்கம் இல்லாததும், சென்னையில்
புயல் மழை என்றிருந்த சமயம் அவர் சிரமப்பட வேண்டாமே என்ற எண்ணமும் காரணங்கள்.
ஆனால் அவர் மகிழ்ச்சியாகச் சென்று பரிசைப் பெற்றுக் கொண்டு, எனக்கு நிகழ்வின் படங்களும் அனுப்பி, பரிசாக அளிக்கப்பட்ட சான்றிதழ், பரிசு பெற்றக் கதைகளின் தொகுப்புப் புத்தங்களையும் எனக்கு உடனேயே அனுப்பியும் கொடுத்துவிட்டார். ஸ்ரீராமிற்கு என் மனமார்ந்த நன்றி. படங்கள் உபயம், நம்ம ஸ்ரீராம்.
விருட்சம் இணைய நாளிதழின் திரு அழகியசிங்கர், வலப்பக்கம் லேடீஸ் ஸ்பெஷல் இதழின் ஆசிரியர் கிரிஜா ராகவன் அவர்கள், திரு அழகியசிங்கர், நடுவில் மருத்துவர் ஜெ பாஸ்கரன் மற்றும் திரு மந்திரமூர்த்தி அழகு
லேடீஸ் ஸ்பெஷல் இதழின் ஆசிரியர் கிரிஜா ராகவன் அவர்கள், திரு மந்திரமூர்த்தி அழகு அவர்கள், மருத்துவர், எழுத்தாளர் ஜெ பாஸ்கரன் அவர்கள் மற்றும் திரு செல்லப்பா சார்
நிகழ்விற்குச்
சென்றிருந்த ஸ்ரீராம், அங்கு பரிசு பெற்றவர்களின் பின்புலத்தையும், பேசியவர்கள் எவ்வளவு அழகாகப் பேசினார்கள் என்பதையும் ஏற்கனவே என்னிடம் தொகுத்துவிட்டார்!
அவர்களின் சாதனைகள், ஏற்கனவே எழுத்துலகில் அவர்களின் படைப்புகள் அவர்கள் வென்ற பரிசுகள்
என்று சொல்லி வியந்தார்.
நிகழ்வை வீடியோ
எடுத்திருந்த ஷ்ருதிடிவி இலக்கிய சானல் லிங்கை செல்லப்பா சார், குழுவிலும் பகிர்ந்திருந்தார்.
ஸ்ரீராமும், செல்லப்பா சாரும் எனக்குத் தனியாகவும் அனுப்பிவைத்தனர்.
ஸ்ரீராம் ஏற்கனவே
எனக்குச் சொல்லியது போலவே, பரிசு பெற்றவர்கள் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்களாக
இருந்தது என்னைப் பிரமிக்க வைத்தது.
உண்மையைச் சொல்ல
வேண்டும் என்றால், அவர்களைப் பற்றி செல்லப்பா சார் வாசித்த போது, என்னைப் பற்றிச் சொல்ல
ஒரு வரி கூட இல்லை. 20 வயது இளைஞர் முதல் (எங்கள் ஊர் நாரோயில்காரர். அவர் அம்மாவும்
பரிசு பெற்ரிருந்தார்!) வயதான வாலிபர்கள் வரை பெற்றிருந்த பரிசுகளும் அவர்கள் செய்திருந்த
சாதனைகளும்.... அதுவும் முதல் முறையாகக் கதை எழுதிப் பரிசு பெறும் இளைஞர் உட்பட.
இப்படியானவர்களின்
நடுவில் நானுமா என்றே வியந்தேன்.
அதையும் செல்லப்பா
சாரிடம் சொன்னேன். அதற்கு அவருடைய அவருக்கே உரித்தான நகைச்சுவையுடனான பதில் இது.
"தன் தகுதி
தெரியாமல் நோபல் பரிசு கேட்கிறார் அந்த ஆள்! தன் தகுதியை தெரிந்து கொள்ள விரும்பாமல்
ஆவென்று வாய் பிளக்கிறார் இந்த பெங்களூர்ப் பெண்மணி!"
நடுவர்களாக இருந்த
பெரிய எழுத்தாளர்கள் பரிசிற்குத் தேர்ந்தெடுத்த கதைகளுள் எனதும் இருந்தததை அறிந்ததும்
என்னவோ என் மனதில் ஒரு கேள்வி சுற்றிக் கொண்டே இருந்தது/இருக்கிறது.
என் எழுத்தின்
மீது எனக்கு நம்பிக்கை இருந்தாலும், பொதுவெளி என்று வரும் போது எத்தனை ஜாம்பவான்கள்,
அந்த ஜாம்பவான்களோடு போட்டியிடும் போது அப்போது தவறாமல் வரும் கேள்வி!
நேரில் சென்றிருந்தால்,
கண்டிப்பாகக் கூச்சத்துடன் இருந்திருப்பேன். கூச்சமாக உணர்ந்திருப்பேன். அத்தனை திறமைகளும்
பெருமைகளுடம் உடையவர்கள் பரிசு பெற்றவர்கள் அனைவரும்!
பரிசுத் தொகையை
செல்லப்பா சாரின் ஆசிர்வாதமாகவே எடுத்துக் கொள்கிறேன் என்று சாரிடமே சொல்லியும் விட்டேன்.
செல்லப்பா சார்,
இந்த முறை புதுமை ஒன்றைச் சேர்த்திருந்தார். பரிசு பெற்றவர்களில் ஒருவர் கதையை மற்றொருவர்
விமர்சித்து வாசிக்க 5 நிமிடங்கள் என்று ஒதுக்கியிருந்தார்.
அப்படி என் கதையை
விமர்சித்திருந்தவர் எழுத்தாளர் பானுமதி கண்ணன் அவர்கள். ஆனால், சென்னையில் அன்று பெய்த
தொடர் மழையின் காரணமாக, பானுமதி கண்ணன் அவர்கள் நிகழ்ச்சிக்கு நேரில் சென்று இந்த உரையை
வழங்க இயலவில்லை. செல்லப்பா சார் அவர்கள் எனக்கு விமர்சனத்தை அனுப்பியிருந்தார். தற்போது
பானுமதி கண்ணன் எடிட்டட் வெர்ஷனை அனுப்பியிருந்தார்கள்.
பானுமதி கண்ணன் அவர்களின் எழுத்து எனக்கு ஏற்கனவே பரிச்சயம். சஹானா இணைய இதழில் அம்மாவும் அபியும் என்ற இவரது அருமையான சிறுகதை ஒன்றை வாசித்திருக்கிறேன்.
அதோடு, நம் பானுக்காவிற்கும் பானுமதி கண்ணன் அவர்கள் பரிச்சயம் என்பதால் பானுமதி கண்ணன் எழுதி வெளியிட்ட விண்ணோடும் முகிலோடும் எனும் நாவல் அவர் கையெழுத்திட்ட பிரதி பானுக்காவிடம் இருந்திட, பானுக்கா, என்னிடம், கதை ரொம்ப நன்றாக எழுதியிருக்கிறார் என்று வாசிக்கக் கொடுத்தார். நானும் வாசித்தேன். வித்தியாசமான கதைக்களம். அவர் தேர்ந்தெடுத்திருந்த கதைக்களத்தைப் பற்றிய தகவல்களுடன் மிக நன்றாக எழுதியிருக்கிறார். வாழ்த்துகள்! பானுமதி கண்ணன் அவர்களுக்கு.
என் கதைக்கான கருத்தை தனிப்பட்ட முறையில் திரு அர்ஜுனன். எஸ் அவர்கள் என் மெயிலுக்கு அனுப்பியிருந்தார். அது இதோ.
வணக்கம்.
"அன்னை ஸ்வர்ணாம்பாள் இலக்கிய விருதுகள் - 2025" புத்தகத்தில் இருந்து தங்களின் "குப்பை" என்ற சிறுகதையை இன்று படித்தேன்.
சிறுகதை என்றால் உரையாடலின் பங்கு அதிகமாகவும், விவரிப்பு குறைவாகவும் இருக்க வேண்டும் என்ற எனது சிந்தனை தகர்ந்தது.
வீட்டில் பழைய குப்பைகளை கிளறாமல் இருப்பதே நல்லது எனத் தோன்றியது.
வாழ்த்துகள்.
----------
செல்லப்பா சார், அவருக்குத் தனிப்பட்ட
வகையில் பல யதார்த்த சிரமங்கள் தற்போது இருந்தும், அதற்கிடையிலும், தான் முன்னெடுத்த
இந்த நல்ல விஷயத்தை எந்தவித சிரமமும் பாராமல், தயக்கமும் இல்லாமல் மகிழ்ச்சியோடு எல்லோரையும்
ஊக்கப்படுத்திச் செய்வதும் அதற்கு அவரது குடும்பத்தினர் முழு ஆதரவு கொடுப்பதும் மிகவும்
பாராட்டிற்குரியது. நிகழ்வுக்கு அவரது பேரனும் பேத்தியும் வந்திருந்து அவருக்கு உதவினர்
என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். தாத்தாவின் மீது எத்தனை மரியாதையும் அன்பும்!
தாத்தாவும் குழந்தைகளிடம் அப்படியே!
செல்லப்பா சாரும் அவரது குடும்பமும் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் இருந்திட இறைவன் துணை இருப்பார்.
நிகழ்வின் சுட்டிகள் இதோ
மந்திரமூர்த்தி அழகு அவர்களின்
உரை
மருத்துவர் ஜெ பாஸ்கரன் அவர்களின் உரை
கதைகளை
வாசித்துக் கொண்டிருக்கிறேன். அழகாக எழுதப்பட்ட கதைகள். கதைகளைப் பற்றி பதிவுகள் வரும்.
தலக்காடு பற்றிய பதிவுகள் வர வேண்டுமே. எனவே இடையில் கதைகளைப் பற்றி...
நான் எழுதிய
கதை பின்னர் நல்ல நாள் முகூர்த்த நேரம் பார்த்து எபியில் வரும்.
----கீதா
.jpeg)
.jpeg)
.jpeg)


.jpeg)




.jpeg)


அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள் கீதா.
பதிலளிநீக்குசெல்லப்பா சார் உங்களைப்பற்றி சரியாக சொல்லி இருக்கிறார்.
பன்முக திறமையாளர் நீங்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தால் பல எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கும் உங்களுக்கு. மீண்டும் வேறு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் உங்களுக்கு.
மிக்க நன்றி கோமதிக்கா.
நீக்குவேறு வாய்ப்பு கிடைக்கும் நீங்கள் சொல்லியிருப்பது போல்
நன்றி கோமதிக்கா
கீதா
எழுத்தாளர் பானுமதி கண்ணன் அவர்கள் உங்கள் கதையை நன்றாக விமர்சனம் செய்து இருக்கிறார். அமைதியான வீட்டைப்பற்றி அவர் சொன்னது சரியே. சின்ன சின்ன சண்டைகளும், அப்புறம் சமாதானம் ஆவதும் தான் வாழ்க்கை .
பதிலளிநீக்குமலர் படுக்கையில் படுத்து இருக்கும் எலி குஞ்சுகள் நல்ல ரோஸ் கலரில் இருக்கும். நானும் பார்த்து இருக்கிறேன்.
திரு அர்ஜுனன். எஸ் அவர்கள் சொன்னது போல வீட்டில் பல குப்பைகளை கிளறாமல் இருப்பது நல்லதுதான்.
நாம் சேமித்து வைத்தவை பின் வருபவர்களுக்கு குப்பைகளாக தெரியலாம். அதை தூக்கி வீசவும் முடியாமல் , பத்திரபடுத்தவும் முடியாமல் சுமையாகி போவதும் உண்டு.
ஸ்ரீராம் உங்களுக்கு உதவியது மகிழ்ச்சி.
//செல்லப்பா சாரும் அவரது குடும்பமும் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் இருந்திட இறைவன் துணை இருப்பார்.//
கண்டிப்பாய் இறைவன் துணை இருப்பார்.நானும் பிரார்த்தனை செய்கிறேன்.