புதன், 16 ஏப்ரல், 2025

ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் - ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் - பயணம் - 4

 எல்லாரும் படகில் ஏறத் தயாராக இருக்கீங்கதானே

நம் படகை செலுத்துபவர். பெயர்  நஞ்சுண்டசாமி

ரங்கனதிட்டு பற்றி சில தகவல்கள். பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வாழும் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்கள் கேடு விளைவிக்கும் அதே நேரத்தில், காவிரி நதியின் குறுக்கே, மைசூர் ராஜா கண்டீரவ நரசிம்ஹராஜ உடையார் (வாடியார்) 1645 - 1648 வருடங்களின் இடையில், ஸ்ரீரங்கப்பட்டினம் அருகே காவிரி நதியின் குறுக்கே அணைக்கட்டு கட்டிட, அதற்கு எதிர்வினை புரிவது போல், ஆனால் பறவைகளுக்குக் கொடைவள்ளலாக, வரப்பிரசாதமாக இயற்கை இந்த ரங்கனதிட்டைப் பரிசாக உருவாக்கியிருக்கிறது. எப்படி?  

அணைக்கரை உருவானதும் காவிரி, தன் பாய்ச்சலை அதற்கேற்ப மாற்றிக் கொண்டு, 25 பெரிய தீவுகள் மற்றும் குட்டித் தீவுகளை/திட்டுகளை இப்பகுதியில் உருவாக்கியதால் ரங்கனதிட்டு உருவாகி தனித்து விளங்கும் பகுதியானது.  பல நீர்ப்பறவைகள், அழிந்து வரும் உயிரினங்கள் கூடு கட்டுவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் ஏற்ற சூழலை உருவாக்கியிருக்கிறது.  

உலகப் புகழ் பெற்ற நம் இந்திய பறவையியல் வல்லுநரும், இயற்கையியல் அறிஞருமான சலீம் அலி, இப்பகுதி நிறைய பறவைகளை ஈர்ப்பதைப் பார்த்து, இதைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று 1940 ல் அப்போதைய மைசூர் மன்னருக்கு வேண்டுகோள் விடுத்தார். ராஜாவும் அறிவித்தார். போன பதிவில் சொல்லியிருந்த மஹாராஜா கோபுரம் இப்படி உருவானதுதான். அப்படி ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் உருவாகியது.

காலப் போக்கில் இயற்கையின் சீற்றத்தால், தொடர்ந்து சுற்றுச் சூழலைப் பாதிக்கும் வகையில் நம் செயல்பாடுகள் இருப்பதால்  பல தீவுகள் உருமாறி தற்போது 6 பெரிய தீவுகளும் 6 சிறிய தீவுகளும்/திட்டுகளும் இருக்கின்றன. அங்கு தங்கள் இனப்பெருக்கத்திற்கும் ஓய்விற்கும் நீர்ப்பறவைகளும், நீர் சார்ந்த கரைப்பறவைகளும் வருகின்றன. 

ரங்கனதிட்டு, ஆகஸ்ட் 2022 இல் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டது. இந்த ராம்சார் தளம்/இயக்கம் பற்றி முன்பே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன். சதுப்பு நிலங்கள், ஈர நிலங்களைப் பாதுகாக்கும் அமைப்பு. கர்நாடகாவில் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்ட முதல் ஈரநிலம் இதுதான்.

சரி படகில் ஏறியாச்சு. இந்த இடத்தில் நதியின் ஆழம் 40 அடி.

ரங்கனதிட்டிற்கு அல்லது இப்படிப் படகுகளில் சென்று பார்க்கும் பறவைகள் சரணாலயத்திற்குச் செல்வதென்றால் சில பரிந்துரைகள். குறிப்பாகப் பறவை ஆர்வலர்களுக்கும், படங்கள், காணொளிகள் எடுப்பவர்களுக்கும் - இங்கு நான், என் அனுபவத்தில் கற்றதை உங்களுக்கும் பயன்படலாம் என்பதால் சொல்கிறேன்.

1. ரங்கனதிட்டில், எல்லாரும் செல்லும் பொதுவான படகுகள் 8-10 பேரிலிருந்து 18 பேர் வரை செல்லும் படகுகளும், இருக்கின்றன. பெரும்பாலும் கூரையுள்ள படகுகள். 8-10 பேர் செல்லும் படகுகளில் 4 பெஞ்சுகள். ஒரு பெஞ்சில் படகோட்டி, மற்ற 3 பெஞ்சுகளில் பயணிகள். எனவே, கூடுதலாக இரண்டு பேர் இருந்தாலும் நமக்கு நகர்வது கொஞ்சம் சிரமமாக இருக்கும். படகின் ஓரத்தில் உட்கார இடம் கிடைத்தால் நன்று. அப்படிக் கிடைத்தாலும் மறுபக்கம் இருக்கும் பறவைகளைப் படம் பிடிப்பது கொஞ்சம் சிரமம்.

சற்று தூரத்தில் - 4 பேர் சென்று கொண்டிருக்கும் சிறப்பு படகு சவாரி - கூரை இல்லாத படகு. ஓரத்தில் ஒருவர் இந்தப் பக்கமும் ஒருவர்

இப்படத்தில் மேலே மூடியிருக்கும் சிறப்புப் படகு சவாரி - இடப்புறம் முன்னில் தெரிகிறதா? அதில் மூவர் உட்கார்ந்திருக்கிறார்கள்

2. (நட்பு/குடும்ப உறுப்பினர்) குழுவாகச் செல்கிறோம் என்றால் 4 பேர் அல்லது 2 பேராக இருந்தாலும், 2000 ரூ கொடுக்க சிரமம் இல்லை என்றால், சிறப்புப் படகு சவாரியை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் நாம் ஓட்ட அனுமதி கிடையாது. இந்த வகையில் கூரை உள்ள படகும், (படத்தில் இருக்கு) திறந்தவெளிப் படகும் (படத்தில்) இருந்தாலும், ஆர்வலர்கள், படங்கள், காணொளிகள் எடுப்பவர்கள் கூரை இல்லாத படகில் (படத்தில் இருக்கும் பாருங்க) செல்லலாம். பறவைகளை நன்றாகப் பார்த்துப் படங்கள் காணொளிகள் எடுக்கலாம்.

நாங்கள் இருவர். ரூ 2000 எங்கள் பாக்கெட்டிற்குக் கொஞ்சம் பெரிது. பொதுப்படகில் - 8-10 பேர் செல்லும் கூரையுள்ள படகில் ஏறிக் கொள்ளச் சொன்னார்கள். அப்போது அவ்வளவுபேர்தான் இருந்தோம். ஒருவேளை கூட்டம் இருந்திருந்தால் 18 பேர் செல்லும் படகில் கூட ஏற்றியிருப்பார்கள். எங்களுடன் பெரியவர்கள் சிறுவர்கள் என்று 12 பேர்.

இப்படிப் படகின் ஓரத்தில் உட்கார அல்லது நிற்க இடம் கிடைத்தால் நல்லது. நான் இங்கு நிற்கலாம் என்று அடி எடுத்து வைத்த போது இருவர் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டனர்.

2. ஒரு வேளை படகின் ஓரத்தில் உட்கார இடம் கிடைத்தால், பெஞ்சில், குதிரையில் அமர்வது போன்று அமர்ந்தால் படங்கள் காணொளிகள் எடுப்பது எளிது. என் அனுபவம் - எனக்குப் படகு ஒரம் உட்கார அல்லது நிற்க ஆசை. ஆனால் நாங்கள் கடைசியில் ஏறியதால் எனக்கு இடம் கிடைக்கவில்லை.

3. கையில் மொபைல் அல்லது கேமரா இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். கீழே விழுந்துவிடாமல். கூடவே, கவனம் - படகின் அசைவில் படங்கள் எடுக்கும் போது கேமரா/மொபைல் ஷேக் ஆகும் வாய்ப்புகள் அதிகம். (என் அனுபவம்) எனக்குப் பல படங்கள் காணொளிகள் எடுக்கும் போது ஷேக் ஆயிற்று.

4. என்னைக் கேட்டால் நின்று கொண்டு செல்வது நல்லது.  படகின் ஓரத்தில் தடுப்பருகில் நின்றால் படங்கள் காணொளிகள் எடுக்க சௌகரியமாக இருக்கும். ஆனால் மறுபக்கம் யாரேனும் நின்று கொண்டிருந்தால் நமக்கு அப்பக்கம் உள்ள பறவைகளைப் படம் பிடிப்பது கடினம். படகின் ஆட்டத்தில் நாம் இங்கும் அங்கும் அடி எடுத்து வைக்கும் போது இடையில் உட்கார்ந்திருப்பவர்களின் கால்களை மிதிக்காமல்படகு ஆட்டத்தில் அடி எடுத்து வைக்கக் கொஞ்சம் தடுமாற நேரிடலாம்அதற்குள் படகுகாட்சிகளைக் கடந்துவிடும் அல்லது பறவைகள் பறந்துவிடவும் கூடும்!

ஆர்வத்தில் இருபக்கமும் பறவைகளைப் பார்க்கும் போது எதை எடுக்க என்று ஒன்றை எடுக்கும் போது மற்றொரு பக்கம் காட்சிகள் அல்லது பறவைகள் விட்டுப் போகலாம். படகின் கம்பிகள் கூரை இவை எல்லாம் சில கோணங்களில் முட்டுக்கட்டையாக இருக்கலாம். னவே திறந்தவெளிப் படகை, சிறப்புப் படகை நான் சிபாரிசு செய்வேன். அல்லது கூரையுள்ள பெரிய படகுகளின் கடைசியில் இருக்கும் இடைவெளியில் நிற்க வேண்டும். எனக்கு அந்த இடமும் கிடைக்கவில்லை.  

எனவே படகின் கடைசிப் பகுதியில் அல்லது ஓரத்தில் நிற்க இடம் பார்த்துக் கொள்வது நல்லது. ஆனால் உயரமானவர்களுக்கு நிற்பது சிரமம் என்று நினைக்கிறேன். கூரை தட்டும்.

(என் அனுபவம்) எனக்கு இடம் கிடைக்காததால், நான் குள்ளமாக வேறு இருப்பதால் நின்று கொண்டேன். இரு புறமும் பார்த்து படம் எடுக்க சௌகரியம் என்று. ஆனால் அதுவும் சிரமமாக இருந்தது. காரணம் படகின் ஒரு ஓரத்தில் இரு  பெண்மணிகள் நின்று கொண்டுவிட்டனர். இத்தனைக்கும் அவர்கள் படங்கள் எடுக்கவில்லை. மறுபுறத் தடுப்பின் அருகில் குழந்தைகள். நான் நடுவில் மாட்டிக் கொண்டேன். பொதுவாகவே படகோட்டி நிதானமாகத்தான் படகைச் செலுத்துகிறார் ஆனால் படகு அங்குமிங்கும் அசைந்தது

நிறைய பறவைகள், அதுவும் சில மிகவும் சிறியவை. இப்புறம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, "இல்லி பக்ஷிகளு" என்று படகோட்டி சொல்வார். நான் உடனே அப்பக்கம் கொஞ்சம் நகர வேண்டும். நான் இப்புறமும் மறுபுறமும் மாறி மாறி எடுக்க. கோணம் பார்த்து ஜூம் செய்து எடுப்பதற்குள் படகு நகர்ந்து சில பறவைகள், காட்சிகள் ஃப்ரேமில் சிக்காமல் போய்விட்டன. சரி கொஞ்சம் ஜூம் செய்து கடந்ததை இப்புறம் திரும்பி எடுக்கலாம் என்றால் பறவைகளுக்குப் பதில் நின்றவர்கள் படத்தில் வந்தார்கள்!

எனவே அப்படி நின்று கொண்டு அவர்களுக்கிடையில் எடுக்கும்படியான சூழலில் ஓரளவுதான் எடுக்க முடிந்தது. பல இடங்களில் படகு அசையும் போது நான் கம்பியைப் பிடித்துக் கொள்ளும்படி ஆனதால் படங்கள் எடுக்க முடியாமல் போனது. படங்களில், காணொளிகளில் shakes தெரியும். 

ஒருவர் துப்பாக்கி போன்ற நீண்ட ஜூமிங்க் லென்ஸ் கேமரா வைத்திருப்பது தெரிகிறதா? மேலே இருக்கும் அதே படம். 4 பேர் சென்று கொண்டிருக்கும் கூரையில்லா படகுதான். சிறப்புப் படகு

5. பறவைகளைப் படம் பிடிக்க நல்ல மொபைலாக இருந்தால் நல்லது. இல்லை என்றால் ஜூம் செய்து எடுத்தாலும் அத்தனை தெளிவாக வருவதில்லை என்பது என் அறிவுக்கும் அனுபவத்திற்கும் எட்டிய ஒன்று. கேமராவாக இருந்தால் பறவைகளையும் படம் பிடிக்கும் அளவு சக்தி வாய்ந்த DSLR வகை கேமராக்களாக இருந்தால் நல்லது.  அதாவது ஜூம் செய்தாலும் நன்றாக வரும் அளவு. 

இனி படகில் உலா சென்று பார்க்க முடிந்த பறவைகளைப் பார்க்கலாம், வாங்க…. படகில் ஏறியதும் என்னால், மொபைல் மற்றும் கேமரா இரண்டையும்  கையாள்வது கடினம் என்பதால் என் மொபைலை நம்ம வீட்டவரிடம் கொடுத்து அதில் படங்கள் எடுங்கள் என்று சொல்லிவிட்டு நான் கேமராவை  பயன்படுத்தினேன். அவருக்குப் புகைப்படங்கள் எடுக்கும் அனுபவம் அவ்வளவு கிடையாது.  

என் கேமரா பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். என் கைக்கு வந்த, பயன்படுத்தப்பட்ட ஆனால் அதிகம் பயன்படுத்தப்படாமல் ரொம்ப நாள் சும்மா இருந்த சாதாரண கேமரா. அது திறக்கவும் மூடவும்  கொஞ்சம் மக்கர் பண்ணும். சட்டென்று திறந்தாலும் பல சமயங்களில் blurred ஆக வரும். 

எனவே, படகில் ஏறியதும் அதை ஆன் செய்து தயார் நிலையில் வைத்தேன். பேட்டரி வேறு டக்கென்று சார்ஜ் போய்விடும். வேறு பேட்டரியும் கையில் இல்லை. இடம் இல்லாததால் வசதியாக நிற்க வேண்டும் என்று இடம் பார்த்துக் கொண்டிருந்ததில் படகு கிளம்பும் போது கொஞ்சம்  அசைந்ததும்  லென்ஸ் பகுதி கம்பியில் அடி வாங்கியது. எனக்கு அழுகையே வந்துவிட்டது. "இதற்குத்தானா கீதா நீ ஆசைப்பாட்டாய்!" "போ வந்தது வரட்டும்" என்று எடுக்க முடிந்ததை ஓரளவு வந்ததைப் பகிர்கிறேன். 

கொக்கு தன் அலகில் குச்சியைப் பிடித்துக் கொண்டு பறப்பது தெரிகிறதா? என் மொபைலில் கணவர் எடுத்த படம். ஜூம் செய்யவில்லை.

பறக்கும் பெலிக்கன்கள் மேலே உள்ள இருபடங்களிலும்

நாரை பறப்பது தெரிகிறதா?

சிறிய காணொளிதான். மரத்தில் பறவைகளும், நாரையும், கூழைக்கடாவும் அங்குமிங்கும் பறப்பதும், கடைசியில் வானில் மிகவும் உயரே நிறைய பறவைகள் பறப்பதும் தெரியும்

*************************


மேலே இருக்கும் அடைகாக்கும் பறவைகள் போன்று வேறு ஒரு மரத்தில், இச்சிறிய காணொளியில் மற்றும் வேறு பகுதியில் பறவைகள்

*********************
முதலைகளும் பறவைகளும்

இரண்டு கொக்குககளுக்கும் நடுவில் முதலை சின்னதாகத் தெரிகிறதா?

முதலைகள், பறவைகளின் சிறிய காணொளி

அடுத்த பதிவில், படகிலிருந்து எடுத்த இன்னும் சில படங்களையும் காணொளியையும் பகிர்கிறேன். 


-------கீதா

48 கருத்துகள்:

  1. ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் போக படகில் ஏறியாச்சு.
    எப்படி பட்ட படகில் ஏறலாம், எப்படி எந்த பக்கம் உட்கார்ந்தால் வசதி என்பதை தெரிந்து கொண்டோம். அருமையாக இருக்கிறது, படகு சவாரி.
    பறவைகள் பார்க்க பார்க்க மகிழ்ச்சிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா. பறவைகளைப் பார்க்க படகில் செல்வது இதுதான் முதன்முறை. எனவே அனுபவங்களைச் சொன்னால் அங்கு செல்பவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமே என்று. எனக்கும் இது ஒரு பாடம் தான்

      ஆமாம் அக்கா பறவைகளைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  2. குச்சியை எடுத்துக் கொண்டு பறக்கும் பறவை, நாரை எல்லாம் தெரிகிறது.
    முன்று காணொளிகளும் அருமையாக இருக்கிறது. பறவைகளின் பேருடன் காணொளி அருமை. பறவைகள் உச்சிக்கிளையில் அமர்ந்து அதன் இறகை விரிக்கும் போது அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்குத் தெரிஞ்சுச்சா அக்கா...அது தெரியுமான்னு எனக்குத் தெரியாததால்ல்.

      முன்று காணொளிகளும் அருமையாக இருக்கிறது. பறவைகளின் பேருடன் காணொளி அருமை. //

      நன்றி கோமதிக்கா

      பறவைகள் உச்சிக்கிளையில் அமர்ந்து அதன் இறகை விரிக்கும் போது அழகு.//

      ஆம்அஅம் அக்கா நேரில் பார்க்கறப்ப அவ்வளவு அழகு அது

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  3. முதலைகளும், பறவைகளும் படங்கள் நன்றாக இருக்கிறது. பாறைகள் நிறைய கிடப்பது முதலை போலவே கண்களுக்கு காட்சி அளிக்கிறது.
    முதலை வாயை திறந்து கொண்டு இருக்கும் காட்சிகளை பார்க்க முடிகிறது.

    காணொளியில் பறவைகள் இணையுடன் இணையும் காட்சியும் வந்து விட்டது.
    அடைகாக்கும் பறவைக்கு பக்கத்தில் அதன் துணை பறவை காவல் காக்க நிற்பது போல இருக்கிறது. படங்கள் எல்லாம் அருமை கீதா.
    ரசித்துப்பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலைகளும், பறவைகளும் படங்கள் நன்றாக இருக்கிறது. பாறைகள் நிறைய கிடப்பது முதலை போலவே கண்களுக்கு காட்சி அளிக்கிறது.//

      ஆமாம் அக்கா. சட்டுன்னு ஏமாந்துவிடுவோம். முதலையைப் பார்த்தால் பாறை போல இருக்கு முகம் வெளியில் தெரியலைனா

      ஆமாம் இணையுடன் இணையும் காட்சி டக்கென்று எடுத்துக் கொண்டு வந்தப்ப கிடைத்தது. அதன் பின் போட்டின் கம்பி தடுக்கியதில் அடுத்து வந்த மரத்துக் காட்கிகள் விட்டுப் போச்சு. இதில் ஒரு பறவை அடைகாக்கும். தனியாக

      ஆமாம் அடைகாக்கும் பறவைக்கு அருகில் துணைப்பறைவை.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  4. நஞ்சுண்டன் என்கிற பெயர் முன்னர் ஒரு பழைய கதையில் புகழ்பெற்ற கேரக்டர்.   என்ன படைப்பு என்று மனதில் போராட்டம் ஆரம்பம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாளவாடியில் படித்தபோது என் ஆசிரியர் ஒருவர் பெயர் நஞ்சுண்டசாமி. சிவன். லிங்காயத்துகளிடம் இந்தப் பெயர் பிரசித்தம்

      நீக்கு
    2. நான் வைத்திருக்கும் பைண்டிக் பொக்கிஷங்களில் ஒரு கதையில் இந்தப் பெயர் கொண்ட கேரக்டர் ஒன்று வந்து படித்த நினைவு இருக்கிறது. எந்தக் கதை என்று நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது.

      நீக்கு
    3. ஸ்ரீராம், இங்கு சாம்ராஜ் நகரில் இருக்கும் பெரிய சிவன் கோவில் (தமிழ்நாட்டு பாணி கோபுரம்) அங்கு இறைவன் பெயர் நஞ்சுண்டசாமி. எனவே சிவ வழிபாட்டில்தீவிரமான லிங்காயத்து சமூகத்தில் இப்பெயர் பிரசித்தம். பாண்டிச்சேரியில் இருந்தப்ப நம் வீட்ட்டின் பின்னாடி ஒரு கர்நாடகா லிங்காயத்து குடும்பம் இருந்தாங்க. அவங்க வீட்டிலும் ஒருவர் இப்பெயருடன் உண்டு

      நீங்க சொல்லியிருக்கும் கதை என்னன்னு நினைவுக்கு வந்ததா?

      கீதா

      நீக்கு
  5. விதிதான் வோடேயாரை அணை கட்டச் சொல்லி இருக்கிறது போல!  ஆனால் இந்த அணைகளால் தமிழகத்துக்கு கொஞ்சம் பாதிப்பும் இருக்கும்தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடையார் அப்ப ஒரு சின்ன அணைக்கட்டுதான் கட்டியிருக்கார். கல்லணை போல!

      ஆமாம் அணை கட்டினால் பாதிப்பு இருக்கும் தான்

      கீதா

      நீக்கு
  6. இடம் பற்றிய குறிப்புகளுக்கு நன்றி.  படகு பற்றிய குறிப்புகளும் சுவாரஸ்யம், உபயோகமானவை.  அங்கு செல்ல விரும்புவோருக்கு உதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் அதனாலதான் கொடுத்தேன்.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. நீங்கள் படமெடுப்பதிலேயே கவனமாக இருந்து கேமிராவையே பார்த்துக் கொண்டு கோணம் பார்த்துக் கொண்டிருந்தால், நிறைய காட்சிகளை நிஜக் கண்கொண்டு பார்க்கும் வாய்ப்பையும் இழந்திருப்பீர்களே...   

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஸ்ரீராம் நேரிலும் ரசித்தேன்...ரசித்துக் கொண்டுதான் கேமராவிலும் எடுத்தேன் உண்மைய சொல்லணும்னா நேரில் பார்த்து வந்தப்ப கேமராவில் மிஸ் ஆனதும் நடந்தது!!!

      இங்குதான் அந்த விடுபட்ட ஒன்றா?

      கீதா

      நீக்கு
  8. புகைப்படம் எடுக்க இரண்டாம் முறையும், காட்சிகளை வெறும் கண்களால் ரசிப்பதோடு எதை புகைப்படம் எடுக்கலாம், எப்படி எடுக்கலாம் என்று ஐடியா ஏற்படுத்திக் கொள்ளவும் இரண்டு முறை சென்று வரலாம்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா உண்மைதான் ஸ்ரீராம் இப்படி ஒவ்வொரு இடத்துக்குமே கூடப் போய்வரலாம் என்று தோன்றும். ஒரு சில இடங்கள் தவிர.

      கீதா

      நீக்கு
  9. // ஒருவர் துப்பாக்கி போன்ற நீண்ட ஜூமிங்க் லென்ஸ் கேமரா வைத்திருப்பது தெரிகிறதா? //

    தூரத்தில் படகிருப்பதே என் கண்களுக்கு குத்து மதிப்பாய்தான் தெரிகிறது.  அதில், 'அந்தப் படகில் இருக்கும் பச்சை புடவைக்காரரைப் பார்த்தீர்களா?' என்றால் எப்படி??!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹிஹி.....எனக்கும் தோன்றியது. படம் போட்டு அதன் கீழ் எழுதும் போது, எல்லாமே பச்சை பச்சையாய் ....

      பார்த்தேன் நேரிலேயே பார்த்தேனே...இறங்கிய பின்னும் !! ஆனா பச்சைப்புடவையா?!!! ஃபோட்டோவுல ம்ஹூம் எனக்குத் தெரியலை

      இந்தக் கருத்தில்தான் அந்த விட்டுப் போனதா....

      கீதா

      நீக்கு
  10. உங்கள் கேமிரா பற்றிய தகவல்கள் படித்து எனக்கும் அழுகை வந்தாலும் 'முள்ளு முனையில் மூணு குளம் வெட்டிய' பாடல் நினைவுக்கு வந்தது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா.....அன்தப் பாட்டு தெரியுமே....மூணு குளம் வெட்டி வச்சேன் ரெண்டு பாழு ஒண்ணுல தண்ணியே இல்லை. தண்ணி இல்லா குளத்துக்கு வந்த குசவர் மூணு பேருன்னு...இப்படிப் போகும்..

      அதனால பார்த்தீங்கனா கேமரா அப்பப்ப ஃபோக்கஸ் பண்ண போது ப்ளர் ஆகும் அப்புறம்தான் தெளிவா வரும். அப்ப எல்லாம் போச்!!!காட்சிகள் எல்லாம் போச்!

      வீட்டில சொல்லிருக்கேன் ஒரு கேமராக்கு. அது எப்ப வாய்க்குமோ?

      கீதா

      நீக்கு
  11. கொக்கு தெரிகிறது..  குச்சி தெரியவில்லை..  இருங்கள்..  லேசாய் தெரிகிறது...  பெலிகன் பறவை என்ன மினி சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு பறப்பது போல அலகுநுனியில் ஒரு உருண்டை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா மினி சஞ்சீவி...அது உலகத்தையே தூக்கிட்டுப் போற குஷில பறக்குது பாருங்க!!!

      குச்சி லைட்டாதான் தெரியும்...மேஏஏஏஏஏஏஏஏஏஏஏலே...நம்மவர் ஜூம் பண்ணாமல் எடுத்தது, அப்படினாக்க நம்ம போட்டுக்குக் கொஞ்சம் மேல பறந்துச்சு...

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      கீதா

      நீக்கு
  12. காணொளிகளை முழுத்திரையில் கண்டபோது பறவைகள் தெரிந்தன.  அவற்றின் வாழ்க்கையின் அன்றாட அலுவல்களில் அவை இயங்கி கொண்டிருக்கின்றன.  படத்தெளிவு கொஞ்சம் கம்மிதான் இல்லை?  (ஹையா..   ஆங்கிலம் கலக்காமல் பின்னூட்டமொன்று இட்டுவிட்டேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஆங்கிலம் கலக்காமல்!!!!

      ஆமாம் முழுத்திரையில் பார்த்தாதான் ஓரளவுக்காச்சும் தெரியும் ஸ்ரீராம்.....ஆமாம் அவங்க லைஃப் பாருங்க திறந்தவெளி ப் புத்தகம்!

      ஆமாம் படத் தெளிவு கம்மிதான். இங்க பக்கத்துல கேமராவ ஏதாச்சும் சரி பண்ண முடியுமான்னு கேட்டேன். அவங்க சொல்றாங்க புதுசா வாங்குங்களேன் ஆனா மொபைலே நல்லதா இருந்தா கேமரா எதுக்குன்றாங்க.

      அனு கூட சொன்னாங்க, கீதாக்கா பாருங்க இனி நீங்க கேமராவை தூக்கவே மாட்டீங்க மொபைலல்தான் எடுப்பீங்கன்னு, நல்லா இருக்குன்னும் சொன்னாங்க. ஆனா நான் கேமரா காதலி...எனக்கு அதில் எடுபப்வைதான் நல்லா வராப்ல தெரியுது.

      ஆனா அனு எடுக்கும் படங்கள் அவங்க கேமராலதான் எடுக்கறாங்க நல்லாதான் இருக்கு. என் மொபைலும், சிற்பங்கள் , கோவில் கட்டிடங்கள் எல்லாம் நல்லா எடுக்கும்....ஆனா இயற்கை அதுவும் பறவைகள் போலதை சரியா எடுக்காது ரொம்ப கிட்டத்தில் இருந்தா ஓரளவுதான் ஓகே அதுக்கு கேமராதான் பெஸ்ட்.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  13. இரண்டாவது காணொளியும் ரசித்தேன்.  படங்களிலேயே விளக்கங்கள் கொடுத்திருப்பது சிறப்பு.  பதிவை சுவாரஸ்யமாகவும் தகவல்களுடனும் கொடுக்கும் உங்கள் உழைப்பு தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நன்றி ஸ்ரீராம்.

      அதுவும் ஒரு காரணம் ஸ்ரீராம் இருக்கும் நேரத்தில் பதிவுகள் ரெடி பண்ண ரொம்ப டைம் எடுக்குது.

      கீதா

      நீக்கு
    2. நன்றி நன்றி ஸ்ரீராம்.

      அதுவும் ஒரு காரணம் ஸ்ரீராம் இருக்கும் நேரத்தில் பதிவுகள் ரெடி பண்ண ரொம்ப டைம் எடுக்குது.

      கீதா

      நீக்கு
  14. முதலைகள் வேறா?  முதுகுத்தண்டு 'சில்'லென்கிறது!  தவறி விழுந்தால் என்ன ஆவது?  

    அவற்றின் காலை டிஃபன் பறவைகள்தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம்....எனக்குப் பல கற்பனைகள் எல்லாம் விரிந்தன....நீங்க கேட்டதேதான்...என்னதான் லைஃப்ஜாக்கெட்ன்னு சும்மா சொல்லி கொடுத்தாலும் முதலை? ஆஆஆ நினைச்சாலெ வயிறு சில்! அது போல நாம கையை தண்ணில வைக்கவே பயம் படகோட்டியும் யாரும் தண்ணில கைய வைக்காதீங்கன்னாரு. குழந்தைகளைப் பத்திரமா இருக்கச் சொன்னார்.

      இன்னொன்னு...படகோட்டி இருந்த இடத்தில் அவரது டப்பக்கம் அவர் ஏறும் பகுதி மூடாமலேயே திறந்து வேறு இருந்துச்சா....நான் அதை அப்பப்ப பார்த்துக் கொண்டே வந்தேன் கேமரா கைல இருந்தாலும்....முதலை அதுல துள்ளி ஏறிடுச்சுன்னான்னு!!!!!

      //அவற்றின் காலை டிஃபன் பறவைகள்தானா?//

      ஹாஹாஹா ஆனா பாருங்க தைரியமா பக்கத்துல போய் நிக்குது பாருங்க. முதலை கண்ணை அசைத்தாலே பறவைங்க பறந்துரும்...நாம?

      கீதா

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் வழக்கம் போல் அழகு. படகில் ஏறியவுடன் தங்களின் அறிவுரைகளை ரசித்துப் படித்தேன். எந்த இடத்தில் நிற்க வேண்டும், எந்த இடம் நின்று கொண்டு செல்வதற்கு உகந்ததல்ல என நீங்கள் சொல்லிய வை அனைத்தும் அருமை. ஒரு சிறந்த போட்டோகிராப்பருக்குரிய சிந்தனைகள் உங்களுக்குள்ளும் இயற்கையாகவே இருக்கிறது.

    பறவைகளின் படங்கள் அத்தனையும் அழகு. எந்த கோணத்தில் எடுத்தால் அவை நன்றாக படங்களில் விழும் என்பதை பார்த்து எடுத்துள்ளீர்கள். அருமை. பாராட்டுக்கள்.

    முதலைகளும் அந்த ஏரியில் இருந்தல் படகில் போக பயமாக இருக்குமே.! எப்படி பயமின்றி செல்கிறார்களோ ? காணொளியில் முதலைகள் நன்றாக தெரிகிறது. பறவைகள் பயமின்றி அதைக்கண்டதும் பறந்து விடலாம். ஆனால், அருகில் வரும் முதலையை கண்டதும், பறக்க நமக்கு சிறகில்லையே எனத் தோன்றுகிறது. இன்னம்ம் ஒருதடவை நன்றாக படித்து பார்த்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஆனால், அருகில் வரும் முதலையை கண்டதும், பறக்க நமக்கு சிறகில்லையே எனத் தோன்றுகிறது //


      அதைச் சொல்லுங்க!

      நீக்கு
    2. கமலாக்கா நானும் அந்த முதலை விஷயத்தை நினைத்துக் கொஞ்சம் பயந்தேன். மேலே ஸ்ரீராமுக்குச் சொன்னேன்

      பறவைகளின் படங்கள் அத்தனையும் அழகு. எந்த கோணத்தில் எடுத்தால் அவை நன்றாக படங்களில் விழும் என்பதை பார்த்து எடுத்துள்ளீர்கள். அருமை. பாராட்டுக்கள்.//

      ஹையோ அக்கா, கோணம் எல்லாம் அங்கு பார்க்கவே முடியாது நான் பார்த்தாலும் போட் தன் கோணத்தில் போய்க்கிட்டே இருக்கும். நாம பாட்டுக்கு எடுத்து தள்ளணும். ஒழுங்கா வந்ததை இங்க போடணும் அம்புட்டுத்தான். ஃப்ரேமுள்ள சிக்கிச்ச்சா அவ்வளவுதான். பறந்து கொண்டே வேறு இருக்கும்.

      முதலைகளும் அந்த ஏரியில் இருந்தல் படகில் போக பயமாக இருக்குமே.! எப்படி பயமின்றி செல்கிறார்களோ ? //

      அக்கா படகோட்டிகளுக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. அவர்கள் அதற்கு ஏற்பத்தான் ஓட்டிச் செல்கிறார்கள். அங்கு இருக்கும் வனத்துறை அலுவலர்களுக்கு எங்கு முதலைகள் இருக்கும் என்பது தெரியும் என்பதால் அதற்கேற்பத்தான் பயணம்.

      போட் குறித்த தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது என்றதற்கும் நன்றி.

      புகைப்படக் கலை பற்றி அதிகம் தெரியாது அக்கா. நான் வாசித்துத் தெரிந்து கொண்டதுதான், அங்கு சூரிய ஒளி சில இடங்களில் கம்மி சில இடங்களில் அதிகம் அதற்கேற்ப எல்லாம் கேமராவை அட்ஜஸ்ட் செய்ய முடியலை எனக்கு என்னுடியயது சாதாரணமான ஒன்றுதான்.

      நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  16. படங்கள் எதுவும் காணவில்லை. பயணத்தில்.

    பதிலளிநீக்கு
  17. படங்கள் பரவாயில்லை. வீடியோ தான் ஷேக் ஆகி கொஞ்சம் படுத்துகிறது. நான் வாடியார் காலம் திப்புவிற்கு பின் என்றே நினைத்திருந்தேன்.

    ரங்கண்ணன் யார் என்பது பற்றிய விவரங்களையும் ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கலாம்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜெ கே அண்ணா ஷேக் ஆனது.

      திப்புவின் காலம் - 1782 - 1799, வாடியார் 1300- 1950..இடையில் ஹைதர் அலி திப்பு....வாடியார்கள் இருந்தாலும் இவங்க கைலதான் அப்ப ஸ்ரீரங்கப்பட்டினத்துலருந்துதானே.....திப்புவிற்குப் பிறகு பிரிட்டிஷ் மீண்டும் ராஜாக்கள் கையில் ஒப்படைத்தது . விவரங்கள் எழுதினா பெரிதாகிவிடும் பதிவு.

      நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
  18. படங்கள், காணொளிகள் மற்றும் தகவல்கள் யாவும் அருமை. சமீபத்தில் நான் சென்றிருந்தது மூன்றாவது முறை. 2006, 2012_ஆம் ஆண்டுகளிலும் சென்றிருக்கிறேன். 2006_ல் இது போன்ற மோட்டார் படகுகள் கிடையாது. துடுப்புப் படகுகள்தாம். அப்போது கனமான வீடியோ கேமராவில் பயந்தபடியே படம் எடுத்தேன். படகோட்டி, யாராவது கொஞ்சம் அசைந்தாலும் படகு ஆடி விடும் எனப் பயம் காட்டியபடியே இருந்தார்:). இந்த முறை படகில் செல்லவில்லை. ஆங்காங்கே இரும்பினால் ஆன வாட்ச் டவர் இருந்ததைக் கவனித்திருப்பீர்கள். அதில் பாதி உயரம் ஏறி தூரத்திலிருந்த பறவைகளை ஓரளவு படமாக்கினேன். ஃப்ளிக்கரில் படங்களை பகிர்ந்து வருகிறேன். வலைப்பூவில் இன்னும் தொகுக்கவில்லை.

    பெரும்பாலும் கூழைக்கடாக்களும் அன்றில் பறவைகளுமே இருந்தன. மற்ற பறவைகளைக் காத்திருந்துதான் பார்க்க வேண்டும் போலும். உங்களுக்கு சுதந்திரமாக நீந்தும் முதலையைப் பார்க்க வாய்த்திருக்கிறது. விரிவான பதிவு. நன்று.

    பறவை ஆர்வலர் சலீம் அலி நினைவு மையமும் அங்கிருந்த தகவல்களும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராமலக்ஷ்மி. உங்க கருத்தைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. ஏனா உங்களை ரொம்ப நினைத்துக் கொண்டேன். உங்களையும் உங்கள் புகைப்படக் கலையையும், கேமராக்களையும். நீங்கள் எடுக்கும் விதத்தையும்.

      படங்கள், காணொளிகள் மற்றும் தகவல்கள் யாவும் அருமை. //

      ஆ! நீங்களே சொல்லிட்டீங்களா!!!! உங்க அளவுக்க் இல்லை ராமலக்ஷ்மி. உங்கள் படங்களைப் பார்த்தும் நீங்கள் எடுத்த விதத்தைச் சொல்லுவதைப் பார்த்தும் கற்றுக் கொள்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

      பாருங்க நீங்களும் எடுத்திருக்கீங்க. வாவ் அப்ப ரொம்ப அழகா இருக்கும். கண்டிப்பாக நீங்க பகிரும் போது பார்க்கிறேன். இடையில் வர முடியாமல் போகிறது.

      இல்லை இப்பவும் துடுப்புப் படகுகள்தாம். சுற்றுச்சூழலையும் நீரையும் பாதிக்கக் கூடாது என்று மோட்டார் படகுகள் இல்லை.

      ஆமாம் நானும் டவர் மீது ஏறி எடுத்தேன். டவர் ஒன்று இரண்டு என்று ஆங்காங்கே இருக்கின்றன. முழுவதும் ஏறினேன் நான். ஆனால் மக்கள் அதில் ஏறியதும் அதன் அதிர்வில் என் கைகளும் அசைந்தன!!!!!! இத்தனைக்கும் கூட்டம் அதிகம் இல்லை நேரமே சென்றதால். அப்படங்களை இனி வரும் பதிவுகளில் டவரிலிருந்து என்று சொல்லிப் பகிரலாம் என்றிருக்கிறேன்.

      இப்பவும் அப்படித்தான் அசைந்தால் படகு ஆடும்தான், ராமலக்ஷ்மி. ஆடியது. நானும் நின்று கொண்டதால் தடுமாறினேன். அதனால்தான் வீடியோக்களில் ஷேக் ரொம்பவே தெரியும்.

      //பெரும்பாலும் கூழைக்கடாக்களும் அன்றில் பறவைகளுமே இருந்தன. மற்ற பறவைகளைக் காத்திருந்துதான் பார்க்க வேண்டும் போலும். //

      ஆமாம் ராமலக்ஷ்மி ஒவ்வொரு பறவைக்கும் சீசன் வெவ்வேறு இல்லையா உங்களுக்கும் தெரியுமே.

      இது கூழைக்கடாக்கள், வண்ண நாரைகள், அகலவாயன்கள்/நத்தைகுத்தி நாரைகள், சின்னக் கொக்குகள், அன்றில் பறவைகள்/அறிவாள்மூக்கன்னு சொல்றாங்க ஆனால் நீங்கள் சொல்வது போல் இலக்கியங்களில் அன்றில்பறவைகள்....இவைதான் நான் பார்த்தேன். ஆட்காட்டிப் பறவையும் ஒன்றே ஒன்று. அது இங்கு ஏரிகளிலேயே பார்க்க முடியுமே.

      ஆனால் அங்கு அவர்கள் குறிப்பிட்டிருக்கும் வகைப் பறவைகளை வெவ்வேறு பறவைகளைப் பார்க்கணும்னா...ஒவ்வொரு சீசனிலும் போக வேண்டிவரும். கரைப்பறவைகளைப் பார்த்தாலும் கேமராவில் வர வேண்டும்.

      கொக்கரேபெல்லூர் போயிருந்தப்ப நிறைய பார்த்தேன் இரு வகைகள் பார்க்க முடிந்தது. அடுத்த சீசனில் நீங்க கொக்கரேபெல்லூர் போனீங்கனா உங்க கேமராவுல பறவைகள் சூப்பரா வரும். அதுவும் எல்லாமே அருகில் இருக்கும். வீடுகளின் மொட்டைமாடிகளில் ஏறி எடுக்கலாம்.

      //பறவை ஆர்வலர் சலீம் அலி நினைவு மையமும் அங்கிருந்த தகவல்களும் சுவாரஸ்யம்.//

      ஆமாம். நானும் எடுத்திருக்கிறேன் இனிதான் வரும்.

      மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      கீதா





      நீக்கு
  19. ஹா ஹா ஹா கீதா, போஸ்ட்டைத் திறந்ததும் பலமாகச் சிரித்து விட்டேன்....:) அவரைப் பார்க்க நஞ்சுண்டவர் போலதான் இருக்கிறார் ஹா ஹா ஹா ஆனாலும் பாவம் அவர் என்ன பண்ணுவார்., பெற்றோர் வைத்து விட்டார்கள்போலும்.. குலதெய்வப்பெயராக இருக்கும்போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா.....நஞ்சுண்டவாயன் என்பது சிவனின் பெயர் அதிரா! ஆமாம் இங்குள்ள லிங்காயத்துகள் எனப்படுபவர்கள் சிவனை வழிபடுபவர்கள் எனவே இப்படியான பெயர்கள் நமக்குத் தெரியவரும்

      நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  20. சுற்றுலாபற்றி மிக விளக்கமாக சொல்லியிருக்கிறீங்க கீதா, அதிலும் போர்ட்டில் எப்படி இடம்பிடிக்கோணும் என்பதிலிருந்து ஹா ஹா ஹா நல்லவிசயம்.

    அனைத்து வீடியோக்களையும் இம்முறை நீங்க போன பதிவில் சொன்னமையால், யூரியூப் ஓபின் பண்ணி அங்குபோய்ப் பார்த்து லைக்கும் போட்டேன்.. அங்கிருக்கும் லைக் எல்லாம் என்னுடையதாக்கும் சொல்லி விடுங்கோ துளசி அண்ணனுக்கு:)).. ஶ்ரீராம் நெல்லை டமிலன் ஆரும் லைக் பண்ணேல்லை ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுற்றுலாபற்றி மிக விளக்கமாக சொல்லியிருக்கிறீங்க கீதா, அதிலும் போர்ட்டில் எப்படி இடம்பிடிக்கோணும் என்பதிலிருந்து ஹா ஹா ஹா நல்லவிசயம்.//

      நன்றி அதிரா. அப்படி இடம் பிடித்தாலும் கூடா அங்குமிங்கும் மாறி மாறி படம் எடுக்கோணும்!!!! அதுதான் கொஞ்சம் சிரமமா இருக்கும். இங்கு எடுக்கறப்ப மறுபுறம் பறவைகள் இருக்கும்...இப்படி...

      //அனைத்து வீடியோக்களையும் இம்முறை நீங்க போன பதிவில் சொன்னமையால், யூரியூப் ஓபின் பண்ணி அங்குபோய்ப் பார்த்து லைக்கும் போட்டேன்.. //

      நன்றி அதிரா. இப்பதான் தெரியுமா? யுட்யூபில் போடுகிறேன் என்று? ஓ!!! இதற்கு முன்னும் சில ஷார்ட்ஸ், சமையல் செய்முறைகள், சுற்றுலா காட்சிகளும் பகிர்ந்திருக்கிறேன்.

      அங்கிருக்கும் லைக் எல்லாம் என்னுடையதாக்கும் சொல்லி விடுங்கோ துளசி அண்ணனுக்கு:)).//

      நன்றி அதிரா. துளசியும் சொன்னார்.

      கீதா

      நீக்கு
  21. போட்டோக்களை விட வீடியோவில் அழகாக தெரியுது. அதுசரி இது தமிழ் நாடுதானே? அப்போ நஞ்சுண்டசாமி பேசிய வார்த்தை தமிழ் இல்லையே?:).

    முதலையும் இருக்கே, அதெப்படி பயமில்லையோ? போர்ட்டைத் தள்ளாதோ? நான் போகமாட்டேன் சாமீ..ஈஈஈஈ.. எப்படித் துணிந்து போவது?
    ஆனா கொக்குகள் அருகில் பயமில்லாமல் நிக்குதே.. விழுங்காமல் இருக்குது அந்த முதலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ அதிரா ரங்கனதிட்டு தமிழ்நாட்டில் இல்லை. காவிரின்னதும் தமிழ்நாடுன்னு நினைச்சீங்களோ? இது கர்நாடகா வில் மாண்டியா மாவட்டத்தில் இருக்கு. அழகான இடம்.

      முதலை கொஞ்சம் பயம் தான். படகைச் செலுத்துபவர்களுக்கும், அங்கிருக்கும் வனத்துறை அலுவலர்களுக்கும் முதலைகள் எங்கிருக்கும் என்று தெரியும் அனுபவமும் அதிகம் அன்என்பதால் அவர்கள் சரியாக நம்மைக் கொண்டு செல்வார்கள். அங்கு இதுவரை முதலை தாக்கியதாக எந்த செய்தியும் இல்லை.

      ஆமாம் கொக்குகளுக்குப் பயமில்லை. அவங்க பறந்தும்விடுவாங்களே! அலர்ட்னெஸ் கூடுதல் இல்லையா? அவங்க கண் எல்லாப் பக்கமும் அசையுமே!!!

      நன்றி அதிரா.

      கீதா

      நீக்கு
  22. இடம், சுற்றுச் சூழல் நல்ல அழகாக இருக்கு.. நாரை வறைற்றீஸ்தானே இருக்கினம், வேறு வகைப் பறவைகளைக் காணம்.. இனி வருமோ.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, பறவைகளுக்குப் பறவைகள் சீசன் மாறும். எனவே நாம் ஒரு முறை போகும் போது எல்லாப் பறவைகளையும் பார்க்க முடியாது. நீர்ப்பறவைகளுக்குள்ளூமே சீசன் மாறும். எனவே ஒரே டைமில் எல்லாம் பார்க்க முடியாது. நிறைய முறை வெவ்வேறு சமயங்களில், அங்கு பறவைகள் வந்துள்ளனவா பார்க்க முடியுமா என்று தெரிந்து கொண்டு செல்லலாம்.

      இனி வருபவையும் உண்டு. உதாரணத்திற்கு, செம்மூக்கு ஆட்காட்டி பறவைகளுக்கு சீசன் ஏப்ரல் - ஜூன். நாங்கள் அன்று போன போது ஒன்றே ஒன்று பார்க்க முடிந்தது. இனிதான் நிறைய வரும். இங்கு வீட்டருகில் உள்ள ஏரிகளில் நிறைய பார்க்கலாம். கூட்டமாக இருக்கும். படங்கள் இருக்கு. ஒவ்வொரு பறவை பற்றியும் தனிப் பதிவு போட எடுத்து வைத்திருக்கிறேன். அது போல தாழைக்கோழி வகைகளிலில் common moorhen எனப்படுவதற்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை. இங்கு சம்பு நாணல் புற்களின் இடையில் கூடு கட்டுவதைப் பார்க்கலாம் குஞ்சுகளோடு போவதையும். எல்லாம் படங்கள் உள்ளன காணொளிகளூம் உள்ளன தொகுத்துப் போடத்தான் நேரம் இல்லை...காணொளிகளை கொஞ்சம் எடிட் செய்ய வேண்டும் என் கேமரா பிரச்சனை ரொம்ப உண்டே ஓப்பன் செய்யும் போதே blur ஆகிவிடும் பல சமயங்களில்..காத்திருந்து எடுக்க வெண்டும் அபப்டியே எடுக்கும் போதும் ப்ளர் ஆகிவிடும் எனவே எடிட்டிங்க் ரொம்பத் தேவைப்படுது. நேரம் எடுக்குது

      நன்றி அதிரா

      கீதா

      நீக்கு