தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!!
இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
வியாழன், 24 ஏப்ரல், 2025
ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் - ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் - பயணம் - 7
சென்ற பதிவில், //அழகானபூங்கா, பூங்காக்குள்ஓடும்ஓடைஆங்காங்கேஇருக்கும்பாலங்கள்இவைஎல்லாம்அடுத்தபதிவில்.// என்றுசொல்லிமுடித்திருந்தேன்.
பூங்காவிற்குள்ளேயேஓடும்நீரோடையில் - இதுஆற்றிலிருந்துதண்ணீரைக்கொஞ்சம்பூங்காவுக்குள்திருப்பிநீரோடைபோன்றுஅமைத்துஅழகாகச்செய்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. கீழே உள்ள படத்தைப் பார்த்தால் தெரியும். அதன்குறுக்கேஇப்படிப்பாலங்கள்கட்டிநாம்நடந்துசென்றுசுற்றிப்பார்க்கும்வகையில்...
சிறிய காணொளி - ஷார்ட்ஸ் - நீரோடையும் மரங்களும் அழகான காட்சிகள். இயற்கையின் ஒலியுடன்
போன பதிவில் தொங்கு பாலம், கண்ணாடிப்பாலம் என்ற தகவல் பலகையும் இருந்ததைச் சொல்லிப் படமும் போட்டிருந்தேன் இல்லையா? என்னவோ ஏதோ? ஆஹா ஒரு வேளை ஆற்றின் குறுக்கே இந்தப் பாலங்களைக் கட்டியிருக்கிறார்களோ? நடந்தால் நல்ல அனுபவமாக இருக்கும், அங்கிருந்து பறவைகள், முதலைகள் தெரிந்தால் க்ளிக்கலாமே என்று போனால், எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தைத் தரும் என்ற தத்துவத்தைப் பின்பற்ற வேண்டும் என்று அடிக்கடி நினைத்தாலும் அவ்வப்போது இப்படிக் குட்டும்!
இப்பகுதியின் பின் பகுதியிலிருந்துதான் நீர் வருகிறது. வலப்புறம் சற்று தூரத்தில் நீல வண்ணத்தில் ஒரு பாலம் தெரிகிறதா? அதுதான் கண்ணாடிப்பாலமாம். இங்கு தெளிவாக இல்லை. காணொளியைப் பார்த்தால் தெரியும். இறுதியில் இருக்கும்.
தொங்கு பாலம் என்று ஓடையின் மீது சிறிய உயரத்தில் சிறிய தூரம் தான்! இதா தொங்கு பாலம்...ம்ம்ம்ம். சைடில் எடுக்க முயற்சி செய்தேன். உயரத்தைக் காட்ட....ஆனால் வரவில்லை. எடுத்திருக்கலாம் என்று இப்ப தோன்றுகிறது!
கண்ணாடிப் பாலம் வழியாக (காணொளியில்) நடந்து சென்று மரங்கள் பூங்காவைப் பார்க்கலாம்.
அர்ஜுனா மரமாம். பீமன், தருமன், நகுலன் சகாதேவன் இருக்கிறார்களா என்று தேடினேன்.
பூங்காவைச் சுற்றிய எல்லையில் இப்படிக் கம்பி வேலியை ஒட்டி வெளிப் பகுதியில், வயல்கள், தென்னந்தோப்புகள், பாக்குத் தோப்புகள் இருக்கின்றன. காவிரிக் கரையாச்சே! இல்லாம இருக்குமா? அங்கும் எக்ரெட்ஸ்/சின்ன கொக்குகள் பெரிய கொக்குகள் எல்லாம் மேய்ந்து கொண்டிருந்தன.
கருங்குருவி இருந்ததைப் பார்த்ததும் எடுத்தேன். ஆனால் சரியாக வரவில்லை. இன்னும் கொஞ்சம் அருகில் சென்று எடுக்கலாம் என்றால் ஒன்று பறந்துவிடும். மற்றொரு காரணம் பயம். இலைகள் நிறைய உதிர்ந்து இருந்ததால் அடியில் பாம்பு, பூச்சி ஏதாச்சும் இருந்தா? ரிஸ்க் எல்லாம் ரஸ்க் இல்லைப்பா நமக்கு!
மேலும் கீழும் அத்திப்பழ மரங்களில் ஒரு வகை. அத்திப்பழங்களைக் காணவில்லை. ஆனால் நம் வீட்டருகில் இருக்கும் பூங்காவில் அத்திப்பழ மரம் இருக்கிறது அது வேறு வகை. அத்திப்பழங்கள் கொத்துக் கொத்தாகக் காய்த்து இருக்கும். அதை வேறு ஒரு பதிவில் பகிர்கிறேன்.
பலாப்பழத்தைக் காணவில்லை!
அழகான பெரிய பூங்கா. நீரூற்று போன்று நீர் பாய்ச்சுவது தெரிகிறதா?
அங்கு பணிபுரிபவர்களுக்கான சமையலறை மற்றும் சாப்பிடும் இடம். அங்கிருக்கும் செல்லங்களுக்கும் கிடைக்கும் போல! மேலே நின்று கொண்டிருந்த செல்லம், சாப்பிட்டுச் செல்பவரைப் பார்க்கிறது....
நடை தொடங்கிய இடத்திற்கே வந்து சேர்ந்தாச்சு. அரசமரம். இப்படி ஒவ்வொரு மரத்தின் அடியிலும் மரத்தின் பெயரைக் குறிப்பிட்டுத் தகவல் பலகை. இக்கடையின் முன்னால் இருப்பது வரும் வழி. பின்னால் இருக்கும் பாதைதான் வெளியில் செல்ல.
வெளியில் செல்லும் போது இப்படி ஒரு குளம் போன்ற அமைப்பு. தூரத்தில் தண்ணீர் விழுவது தெரிகிறதா? ஓடையிலிருந்து வரும் தண்ணீர்.
நேரே தெரிவது வெளி வரும் பகுதி. வண்டிகள் நிறுத்துமிடம். அங்கு கேண்டீன் இருப்பதாகச் சொல்கிறது தகவல் பலகை. நாங்கள் போகவில்லை. வலப்புறம் அருவி என்று காட்டுகிறது. அட அருவியா? எங்கே? உள்ளே போக வேண்டுமோ என்று பார்த்தால் மீண்டும் ஒரு பல்பு!
அடச்சே! இதுதாங்க அருவி விழும் இடமாம். செயற்கை அருவி. 11 மணிக்குத்தான் அருவி பாயுமாம். நேரம் 10.15 தான் ஆகியிருந்தது. இயற்கையான அருவிகளைப் பார்த்த நமக்கு ஆர்வமில்லை. முகப்பில் இருக்கும் சலீம் அலி தகவல் மையத்தைப் பார்ப்போம் என்று நடையைக் கட்டினோம். அடுத்த பதிவில் சலீம் அலி மையத்தில் பார்த்த படங்கள். அதுக்குப் பிறகு?.....
ஓடையில் நீர் சலசலப்பும் பறவைகளின் ஒலியும் தான் அங்கு அந்த அமைதியில் ரொம்ப நன்றாக இருந்தது. கூட்டம் இருந்திருந்தால் இது கேட்டிருக்காது என்றும் தோன்றியது கோமதிக்கா. நாங்கள் சீக்கிரமா போய்விட்டோமே....
ஒவ்வொரு மரங்களும் எவ்வளவு ஆண்டுகளாக உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறதோ. எனக்கும் இந்த மாதிரி மரங்களை, காடுகளைப் படம் பிடிப்பது ரொம்பவே பிடித்தமானது.
மரங்களைச் சுற்றி இருக்கும் சருகுகள் இலைகள் பகுதிகளில் நான் நடக்கமாட்டேன். காரணம் அங்கு பாம்புகள் இருக்கும் என்று நான் நினைப்பேன். அதிலும் இலைமாதிரியே இருக்கும் என்றெல்லாம் படித்திருப்பதால் அந்தப் பக்கமே செல்லமாட்டேன்.
நெல்லை, இங்குள்ள மரங்கள் பல இந்தச் சரணாலயத்தை அறிவித்த போதுதான் நட்டிருக்காங்க போல, மரங்களின் பெயருடன். மரங்களின் பூங்கா என்று. இங்கு வளரும் மரங்கள். ஒரு சில பல ஆண்டுகளாக இருப்பவை அது மரத்தின் நடுப்பகுதியை வைத்துக் கணிக்கலாம். ஒரு சில தான் இருந்தன.
எனக்கும் காடுகளையும் மரங்களையும் படம் பிடிக்க ரொம்பப் பிடிக்கும்.
மரங்களைச் சுத்தி அந்த இடம் முழுவதும் பாய் விரித்தது போல இலைகள். இங்கு பூங்காக்களிலும் அப்படித்தானே நெல்லை. ஆனால் கூட்டி அதை எல்லாம் சேகரித்து உரமாகப் பயன்படுத்தறாங்க. அங்கு காடு என்பதால் அப்படியே விட்டிருக்காங்க போல மழை பெய்யும் போது உரமாகும் என்று ஆனால் கண்டிப்பாகப் பூச்சி, பாம்பு வரும். ஆறு வேறு அருகில்.
அதனால்தான் நான் எங்குமே இலைகள் இப்படி உதிர்ந்திருந்தால் கால் வைக்க மாட்டேன். ஏன் இங்குமே கூட குடியிருப்புகளில் சாலை ஓரங்களில் மரங்களில் இருந்து உதிரும் இலைகள் இப்படி இருக்கின்றன. நான் பார்த்துப் பார்த்துதான் நடப்பது. தினமும் பெருக்குகிறார்கள்தன ஆனால் குமித்து வைச்சுடறாங்க. அதை அள்ளி எடுத்துப் போவது சில சமயங்களில்
உண்மை நெல்லை, நல்லா பராமரிக்கறாங்க சுத்தமாகவும் அழகாகவும் வைச்சுருக்காங்க. ஆமாம் பாராட்டிற்குரிய விஷயம். நான் வெளி வரும் முன் பணியாளர்களிடமும், அலுவலகத்திலும் சொல்லி பாராட்டிவிட்டு வந்தேன்.
செயற்கை அருவி ஆமாம் ஈர்க்கவில்லை. பார்க்கில் இருப்பது நீரூற்று இல்லை நெல்லை தண்ணி பாய்ச்சுவது Sprinklers
இயற்கையின் ஒலியுடன் காணொளி அருமை. காய்ந்த இலைகள் மரங்களுக்கு அடியில் பாய் விரித்து கிடப்பது பயம் தான். நீங்கள் சொல்வது போல உள்ளே என்னவெல்லாம் இருக்கும் ! கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ரிசிஸ்க் எடுக்காமல் இருந்தது நல்லதுதான்.
ஆமாம் அக்கா அதனால்தான் வேறு இசையோ, என் குரலோ பதியவில்லை.
ஆமாம் காய்ந்த இலைகளில் நடப்பது பயம் அக்கா. ஆனால் அப்படி ஒரு முறை காட்டில் நடந்தப்ப நடந்திருக்கிறேன். கையில் கம்பு வைத்துக் கொண்டு ஒவ்வொரு அடிக்கும் கம்பால் இலைகளை அகற்றிக் கொண்டு என்று ஆனாலும் பயம் தான் கம்பு பட்டதும் அடியிலிருந்து ஏதாச்சும் எழுந்து வந்து ஒரு போடு போட்டிருச்சுன்னா என்று? அதுவும் கட்டுவிரியன் ரொம்ப விஷமாச்சே...குட்டிகள் கூட அதிக விஷம்.
கருங்குருவி தெரிகிறது சிறியதாக. அந்த பற்வையே சின்ன பறவைதன்.
தொங்குபாலம், கண்ணாடி பாலம் எல்லாம் தெரிகிறது. ஓடையில் நீர் ஓடுவதும், பறவைகளின் பல்வேறு ஒலிகளும், பசுமை இளம் பச்சை, கரும் பச்சை இளம் வெயில் எல்லாம் பார்க்க அழகு. இயற்கை அருவியை கணட் கண்களுக்கு செயற்கை அருவியை ரசிக்க பிடிக்குமா?
அழகான பெரிய பூங்கா. நீரூற்று போன்று நீர் பாய்ச்சுவது தெரிகிறதா?//
தெரிகிறது.
செல்லங்களுக்கு சரியான சாப்பாடு இல்லை என்று தெரிகிறது. பாலங்கள் எல்லாம் அழகு.
ஆம் கருங்குருவி பறவையே சின்னதுதான். கேமரால முன்ன எடுத்தது வந்திருக்கு இங்கு ஏரிகளில் எல்லாம்
ஆமாம் அக்கா அங்கு அமைதியாக இருந்ததால் பறவைகளின் சத்தம். நானும் தேடித்தேடிப் பார்த்தேன் கண்ணில் சிக்கலை. ஆனா சத்தம் மட்டும் வந்திட்டே இருந்துச்சு.
ஆமாம் செயற்கை அருவி ஈர்க்கலைனாலும் ஒரு வேளை அது பாயும் போது அதுவும் ஒரு அழகா இருக்குமோன்னு தோன்றியது இப்பலாம் டீம் பார்க்குகளில் செய்திருக்காங்களே! ஆமாம் செல்லங்களுக்கு சாப்பாடு சரியா இல்லைன்னு எனக்கும் தோன்றியது கோமதிக்கா...பாவமா பார்த்திட்டிருந்துச்சு
பதிவு அருமை. படங்கள், காணொளிகள் அனைத்தும் வழக்கம் போல அருமையாக உள்ளது. காணொளியில் சலசலத்து கொண்டோடும் நீரின் சப்தம், மற்றொரு காணொளியில் பறவையின் இனிய கீதம் எல்லாவற்றையும் கேட்டேன்.
/எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தைத் தரும் என்ற தத்துவத்தைப் பின்பற்ற வேண்டும் என்று அடிக்கடி நினைத்தாலும் அவ்வப்போது இப்படிக் குட்டும்! /
நல்ல அனுபவபூர்வமான வார்த்தைகள். ஆனால், அந்த நீரோடையின் காட்சிகள் சற்று எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தை குறைத்திருக்குமென நினைக்கிறேன். பாலங்களின் மேல் நடந்து கொண்டே பசுமையான மரங்கள், பறவைகள் என இவையெல்லாம் கண்டு ரசிக்கலாம். நானும் உங்களுடன் அப்படித்தான் ரசித்தேன்.
அர்ஜுனா மரம் என்று எதற்காக அந்த மரத்திற்கு பெயர் வந்ததோ? வில்லைப் போல வளைந்து இருந்ததா?
/அர்ஜுனா மரமாம். பீமன், தருமன், நகுலன் சகாதேவன் இருக்கிறார்களா என்று தேடினேன். /
ஹா ஹா ஹா. நானும் அடுத்தடுத்து இப்பெயர்களை உடைய மரங்களைச் சொல்லப் போகிறீர்கள் என எதிர்பார்த்தேன். நீங்களே அவரைத் தவிர்த்து (அர்ஜூனன்) வேறு எவரையும் அங்கு காணவில்லை என வருந்தியிருக்கிறீர்கள்.ஹா ஹா ஹா.
பிறகு பெரிய மரங்கள் (அத்திப்பழமரங்கள்) பலவற்றையும் காணும் போது, ஆளுக்கொன்றாக (பீமன் தருமன் நகுலன் சகாதேவன் என) சகோதரர்கள் பெயர்களை நாமே சூட்டி மகிழ்ந்து கொள்ள வேண்டியதுதான்.
மற்ற எல்லா படங்களும் அருமையாக உள்ளது. அருவியை கொஞ்ச நேரம் காத்திருந்தால் நாங்களும் பார்த்திருக்கலாம். அருவி பெயர் பலகையை பார்த்த எங்களுக்கும் பல்புதான் போங்கள். ஆனாலும் இயற்கை வனப்புடன் இருந்த காட்சிகளை உங்களுடன் சேர்த்து எங்களையும் காண வைத்தமைக்கு என் நன்றிகள் பல.
அடுத்து ஸ்ரீ ரங்கப்பட்டிண பெருமாளா? அவரைக்காணத்தான் ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
பதிவு அருமை. படங்கள், காணொளிகள் அனைத்தும் வழக்கம் போல அருமையாக உள்ளது. காணொளியில் சலசலத்து கொண்டோடும் நீரின் சப்தம், மற்றொரு காணொளியில் பறவையின் இனிய கீதம் எல்லாவற்றையும் கேட்டேன்.//
நன்றி கமலாக்கா
//நல்ல அனுபவபூர்வமான வார்த்தைகள். ஆனால், அந்த நீரோடையின் காட்சிகள் சற்று எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தை குறைத்திருக்குமென நினைக்கிறேன்.//
இல்லைக்கா...அது நல்லாருந்துச்சு. தொங்குபாலம் கடைசில செயற்கை அருவி நு போட்டிருக்கலாம் வெறுமனே அருவின்னு எழுதியிருந்ததுதான் எதிர்பார்ப்பைக் கிளறியது...
அர்ஜுனா மரம் என்று எதற்காக அந்த மரத்திற்கு பெயர் வந்ததோ? வில்லைப் போல வளைந்து இருந்ததா?//
அதன் பட்டை நல்ல பளபளன்னு ப்ரைட்டா இருப்பதால் அதுக்கு அர்ஜுனா மரமாம். அர்ஜுனனை நாம எங்க பார்த்தோம்!!! பல கதைகள் இருக்கின்றன அர்ஜுனனுடன் தொடர்புடையதாக....சும்மா ஏதாச்சும் இப்படிக் கதை கட்டுவதுண்டு இதன் பட்டை மருத்துவகுணங்கள் உள்ளது.
படங்கள் காணொளி எல்லாம் பார்த்து ரசித்ததுக்கு நன்றி கமலாக்கா
சலீம் அலி மையம் பிறகு, ஸ்ரீரங்கப்பட்டினா கோவிலுக்குப் போகும் முன் ஒரு இடம்...அங்கு உள்ளே செல்லவில்லை ஆனால் அது பற்றி இடையில் சொல்வதா இல்லை ஸ்ரீரங்கப்பட்டினா கோவில் முடித்து சொல்லலாமா என்று யோசனை ஓடுது.
ஆனால், அந்த நீரோடையின் காட்சிகள் சற்று எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தை குறைத்திருக்குமென நினைக்கிறேன்.
/இல்லைக்கா...அது நல்லாருந்துச்சு/
நானும் அதைத்தான் கூறியுள்ளேன் சகோதரி. அழகான நீரோடை அதன் மேலே நடந்து செல்ல பத்திரமான பாலம் பசுமையான மரங்கள், என எல்லாமே பார்க்க நன்றாக உள்ளதென தான் கூறியுள்ளேன்.
அக்கா, புரிந்தது....நான் கருத்து அடிக்கும் போது இடையில் சிலது விட்டுப் போயிருக்கிறது. நீங்கள் சொன்னது புரிந்தது. ஆமாம் நீரோடைக்காட்சி ரொம்பவே நல்லாருந்துச்சு ஆனா கடைசிக் குட்டும் முதல் குட்டும் ...ச்சே கீதா இப்படி எதிர்பார்த்து குட்டு வாங்கலமான்னு வடிவேலு ஸ்டைல்ல என்னையே நான் கேட்டுக்கிட்டிருந்தேன்!!!! ஹாஹாஹா
ஆமாம் பத்திரமான பாலம் தான்...ஆனா பாருங்கக்கா சின்ன பிள்ளை நான் விழுந்தாலும் பிரச்சனை இல்லை...ஹிஹிஹிஹிஹிஹி அம்புட்டுதான் தண்ணி!!!!
உங்களுக்கு நன்றாக நீந்த தெரியும்னு நினைக்கிறேன். நானும், எங்கள் பிறந்த வீட்டருகே தாமிரவருணி வாய்க்கால், தி. பின் கல்லிடை தாமிரவருணி ஆறு என குளித்திருந்தாலும் நீச்சல் பழகவில்லை. காரணம் ஆடிக்கு ஒரு முறை என அவற்றில் குளித்தால்... எப்படி நீச்சல் வரும்.? பிறந்த வீட்டில் வாய்க்காலில் குளியல் ஒரு குறிப்பிடட வயது வரைதான் அனுமதி கிடைத்தது. . தி. பின் அங்கு (கல்லிடை) போகும் போது ஆற்றில் குளியல். இப்போதும் எனக்கு கல்லிடை போக விருப்பம். ஆனால் அங்குள்ள உறவுகள் சென்னைவாசியாகி விட்டனர்.
ஆமாம் கமலாக்கா நீந்தத் தெரியும். இப்போது அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதால் நன்றாக என்பதைத் தவிர்த்து....உங்கள் அனுபவங்களையும் தெரிந்து கொண்டேன்.
எங்க வீட்டிலும் அனுமதி கிடையாது ஊரில் இருந்தப்ப. ஆனால் கோடையில் வீட்டில் கிணற்றில் தண்ணீர் குறையும் போது, குளம் ஆறுதான். அப்பலாம் தோன்றியதில்லை ஆற்றில் குளத்தில் சோப் கலக்கக் கூடாது என்று. குளத்தில் மீன்கள் இறந்து மிதந்த போது அறிய நேர்ந்தது. இத்தனைக்கும் குளத்து நீர் தேரேகால் வாய்க்காலில் இருந்து வந்து மறு பக்கம் ஓடை வழியாக வெளியேறும் ஆனால் கோடையில் தண்ணீர் குறையும் நேரத்தில் வெளியேறும் ஓடையை அடைப்பார்கள் எனவே மீன்கள் இறந்து மிதக்கும். அப்போது அறிய நேர்ந்தது மீன்களின் இறப்பிற்கு சோப்பும் ஒரு காரணம் என்று, அதிலிருந்து நான் துணிகளை குளத்தில் ஆற்றில் தோய்ப்பதை விட்டேன், குளித்தாலும் சோப் பயன்படுத்தாமல், செம்பருத்தி இலை பூ என்று பயன்படுத்திக் குளிக்கத் தொடங்கினேன். அதுவும் ஆற்றில் மட்டுமே.
ஆமாம் அக்கா என் உறவினர்களில் சிலர் இப்பவும் திருநெல்வேலியில் இருக்காங்க. ஆனால் நாகர்கோவிலில் இல்லை. நட்புகளைத் தவிர.
கல்லிடைக்குறிச்சி தெரியும். ஆறு தாமிரபரணி அழகாக இருக்கும். கிராமத்திற்குப் போயிருக்கிறேன். அங்கு ஓர் உறவினர் உண்டு. இப்ப அவங்க அப்பப்ப மகளிடமும் அங்குமாக. கல்லிடைக்குறிச்சி மாமி ஒருவர் யுட்யூப் போடுகிறாரே. உங்களுக்கும் தெரிந்திருக்கலாம் அவரை. என் உறவினருக்கு அவரைத் தெரியும். காரைக்குறிச்சியிலும் அத்தை ஒருவர் இருந்தார் இப்ப அடுத்த தலைமுறை திருநெல்வேலி டவுனில். காரைக்குறிச்சியில் மண் பாண்டங்கள் யானை மான் போன்ற பொம்மைகளைச் செய்வாங்க. வாங்கியது வீட்டில் இருந்தன. இப்பவும் செய்யறாங்களா என்று தெரியவில்லை.
ஹாஹாஹா ஸ்ரீராம்....நெல்லை சென்ற பதிவுகளில் ஏதோ ஒன்னுல சொல்லிட நானும் அதேதான் சொல்வதாக இருந்து பதிவில் சொல்லலைன்னு போன பதிவிலோ இல்லை அதுக்கு முந்தைய பதிவிலோ சொன்ன நினைவு.
ஆ!!!! கமலாக்கா....இந்த கீதாவைப் பத்தி தெரியாம இப்படி மன்னிப்பை எல்லாம் வேஸ்ட் பண்ணறீங்களே!!!!!ஹாஹாஹாஹா
சத்தியமா எனக்குப் புரியலைக்கா...நான் எதுக்கு வருத்தப்படணும் உங்க மேலன்னு....முதல்ல நான் பெரும்பாலும் எதுவும் சீரியஸா எடுத்தறதில்லை,
நீங்க சொன்னதுக்கு பதில் சொல்லலை காரணம், கோயில் பத்தி வர பதிவுல நெல்லை, ஸ்ரீராம் நீங்க இப்ப சொன்னதுக்கு அதான் ரங்கன திட்டு வுக்கு ஏற்கனவே அதில் சொல்லன்னு வைச்சிருக்கேன்....அதான்...
நான் தப்பாவே எடுத்துக்க மாட்டேன். சின்ன சின்ன விஷயத்துக்கே சிரிக்கக் கூடியவள் நான். ஸ்ரீராம், நெல்லை கிட்ட கேட்டுப் பாருங்க.....
பதில் கொடுக்கத் தாமதமானதுக்குக் காரணம் வேலைகளால். அல்லது யோசித்துக் கொடுக்க வேண்டியவற்றிற்கு யோசித்துக் கொடுப்பேன் குறிப்பாக மாற்றுக் கருத்து இருந்தால். மற்றபடி தப்பாக எல்லாம் எடுப்பதில்லை. பெரும்பாலும் நான் கொடுகக்த் தாமதமாகிறது இப்போது. உங்களுக்குக் கொடுக்கத் தாமதமானதுக்குக் காரணம் வேலைகள். ஸோ No problem அக்கா.
ஹப்பா ஒரு மாற்றம் உங்களிடம்....நன்றி சொல்லாம விட்டீங்களே....சமத்து அக்கா!!!!!!!!
'ஓடையின்னா நல்லோடை ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை தங்கப் பசுங்கிளிக்கு சாந்துப்பொட்டு வைக்கவேணும் தன்னன்னா' என்று ஆவலுடன் பாடிக்கொண்டே வந்து ஓடையைப் பார்த்தால் சிறிய ஏமாற்றம்தான்! மரங்களின் அடர்த்தி கவர்கிறது.
ஈர்ப்பதற்குத்தான் ஸ்ரீராம் எல்லாமே ஆனா நல்லா பராமரிக்கறாங்கந்கு ...பச்சை பசேல்னு இருக்கு எல்லாம். மழைக்காலத்தில் ரொம்ப அழகா இருக்கும். அதீத மழை என்றால் உள்ளே அனுமதி இல்லை. படகுச்சவாரியும் இருக்காதாம். வெள்ளம் வந்திருச்சுனா?!!
கண்ணாடி பாலம் என்றதும் சிங்கப்பூர், சீனாவில் இருக்கும் உயரமான கண்ணாடி தளம் போல எதிர்பார்த்தீர்களோ... சரியாய்ப் பார்த்தீர்களா? அங்கு ஆணியில் ஏதாவது ஒரு கண்ணாடி மாட்டி வைத்திருக்கிறார்களா என்று!
இந்த ஊர்லதானே பகாசுரனை பீமன் கொன்றாதாகவும் இங்கு பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்தாங்கன்னும் அதனாலதான் பாண்டவபுரான்னும் முதல் பதிவுல சொல்லியிருந்தேன் இல்லையா...ஒரு வேளை அர்ஜுனன் இந்த மரத்தை எதுக்காச்சும் வில் மாதிரி பயன்அபடுத்தியிருப்பானோ என்னமோ. எனக்கென்னவோ பீமன் மரம்னு இருந்தா இன்னும் நல்லாருக்கும்னு தோன்றியது. அவந்தானே மரத்த்தை பிடுங்கி அடிக்க எல்லாம் செய்வான்!!
'எக்' வெள்ளையாய் இருக்கும். நீங்கள் ரெட் என்கிறீர்கள்.. என்னமோ போங்க... கருங்குறுவை லேசுபாசா தெரியுது. நான் ஒரு புகைப்படம் ஒரு குருவியை எடுத்திருக்கேன். வியாழக்கிழமைல போடறேன். பேர் சொல்லுங்க!
ஹாஹாஹாஹா நானே யோசித்திருக்கிறேன் வெள்ளைனால இப்படியான்னு அதுக்கு மில்க்ரே ன்னு கூட வைச்சிருக்கலாமோன்னும்...கருங்குருவி அம்புட்டுத்தான் தெரியும்...சரியா வரலைதான். வேறு இடங்களில் எடுத்த தெளிவான் படங்கள் இருக்கு பகிர வேண்டும்...
நீங்க எடுத்த குருவிய போடுங்க சொல்ல முடியுதான்னு பார்க்கறேன் ஸ்ரீராம். இல்லைனா தெரிஞ்சுக்குவோம்!
ஸ்ரீராம் இந்தப் பாட்டு கேட்டிருக்கேனே....ஆனா பாருங்க அந்த வரி அதுல வரும்னு தெரியலை....ஆனா யாருக்கும் வெட்கமில்லைன்னு பார்த்ததும் இந்தப் பாட்டுதான் நினைவுக்கு வந்தது. ட்யூன்...
படங்கள் அனைத்தும் அழகாக இருக்குது. தொங்குபாலம் நன்று. இங்கும் தொங்குபாலம் இருந்து வீடியோ எடுத்திருக்கிறேன் அது இப்போ 4,5 வருடம் இருக்கும் எடுத்து இன்னும் எடிட்பண்ணிப்போட நேரம் வருகுதில்லை:))
அர்ச்சுனா மரம் அங்கேயும் இருக்கோ... நான் போன ஹஜராஹோ வில், பாண்டவர் குகையில் இருந்தது, வீடியோ எடுத்துப் போட்டேன். ஆனா அந்த மரம் மிக உயரமாக நீண்டிருந்தது, இது குட்டியாக கிளைகள் பரவியிருக்கே.. ஒரு வேளை எவலூசனாக இருக்குமோ ஹா ஹா ஹா..
இந்த வீடியோவில் இருக்கு நான் பார்த்த அர்ச்சுனா மரம்..
அனைத்தும் அருமை கீதா. காணொளிகள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குஓடையில் நீர் சல சல என ஓடுவதும் பறவைகளின் ஒலியும் கேட்க இனிமை.
நன்றி கோமதிக்கா.
நீக்குஓடையில் நீர் சலசலப்பும் பறவைகளின் ஒலியும் தான் அங்கு அந்த அமைதியில் ரொம்ப நன்றாக இருந்தது. கூட்டம் இருந்திருந்தால் இது கேட்டிருக்காது என்றும் தோன்றியது கோமதிக்கா. நாங்கள் சீக்கிரமா போய்விட்டோமே....
கீதா
படங்கள் மிக அழகு. அதுவும் இயற்கையான இடங்களை ரொம்பவே அழகாகப் படம் எடுத்துப் பகிர்ந்துள்ளீர்கள். பாராட்டுகள்
பதிலளிநீக்குநன்றி நெல்லை. இன்னும் சில விட்டுப் போச்சு. எடுத்திருக்கலாம். கேமராவில் சார்ஜ் போய்விட மொபைலை பயன்படுத்தினேன். சில சரியாக வரவும் இல்லை
நீக்குஇயற்கையான இடங்களை வனத்துறையும் சுற்றுலாத்துறையும் மேம்படுத்தி உள்ளன எனலாம்.
கீதா
ஒவ்வொரு மரங்களும் எவ்வளவு ஆண்டுகளாக உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறதோ. எனக்கும் இந்த மாதிரி மரங்களை, காடுகளைப் படம் பிடிப்பது ரொம்பவே பிடித்தமானது.
பதிலளிநீக்குமரங்களைச் சுற்றி இருக்கும் சருகுகள் இலைகள் பகுதிகளில் நான் நடக்கமாட்டேன். காரணம் அங்கு பாம்புகள் இருக்கும் என்று நான் நினைப்பேன். அதிலும் இலைமாதிரியே இருக்கும் என்றெல்லாம் படித்திருப்பதால் அந்தப் பக்கமே செல்லமாட்டேன்.
நெல்லை, இங்குள்ள மரங்கள் பல இந்தச் சரணாலயத்தை அறிவித்த போதுதான் நட்டிருக்காங்க போல, மரங்களின் பெயருடன். மரங்களின் பூங்கா என்று. இங்கு வளரும் மரங்கள். ஒரு சில பல ஆண்டுகளாக இருப்பவை அது மரத்தின் நடுப்பகுதியை வைத்துக் கணிக்கலாம். ஒரு சில தான் இருந்தன.
நீக்குஎனக்கும் காடுகளையும் மரங்களையும் படம் பிடிக்க ரொம்பப் பிடிக்கும்.
மரங்களைச் சுத்தி அந்த இடம் முழுவதும் பாய் விரித்தது போல இலைகள். இங்கு பூங்காக்களிலும் அப்படித்தானே நெல்லை. ஆனால் கூட்டி அதை எல்லாம் சேகரித்து உரமாகப் பயன்படுத்தறாங்க. அங்கு காடு என்பதால் அப்படியே விட்டிருக்காங்க போல மழை பெய்யும் போது உரமாகும் என்று ஆனால் கண்டிப்பாகப் பூச்சி, பாம்பு வரும். ஆறு வேறு அருகில்.
அதனால்தான் நான் எங்குமே இலைகள் இப்படி உதிர்ந்திருந்தால் கால் வைக்க மாட்டேன். ஏன் இங்குமே கூட குடியிருப்புகளில் சாலை ஓரங்களில் மரங்களில் இருந்து உதிரும் இலைகள் இப்படி இருக்கின்றன. நான் பார்த்துப் பார்த்துதான் நடப்பது. தினமும் பெருக்குகிறார்கள்தன ஆனால் குமித்து வைச்சுடறாங்க. அதை அள்ளி எடுத்துப் போவது சில சமயங்களில்
நன்றி நெல்லை
கீதா
இடத்தை ரொம்பவே அழகாக வைத்துள்ளார்கள். அதுவே பாராட்டிற்குரிய விஷயம்.
பதிலளிநீக்குசெயற்கை நீரூற்று.... அதில் பெரிய ஆர்வமில்லை.
உண்மை நெல்லை, நல்லா பராமரிக்கறாங்க சுத்தமாகவும் அழகாகவும் வைச்சுருக்காங்க. ஆமாம் பாராட்டிற்குரிய விஷயம். நான் வெளி வரும் முன் பணியாளர்களிடமும், அலுவலகத்திலும் சொல்லி பாராட்டிவிட்டு வந்தேன்.
நீக்குசெயற்கை அருவி ஆமாம் ஈர்க்கவில்லை. பார்க்கில் இருப்பது நீரூற்று இல்லை நெல்லை தண்ணி பாய்ச்சுவது Sprinklers
கீதா
இயற்கையின் ஒலியுடன் காணொளி அருமை.
பதிலளிநீக்குகாய்ந்த இலைகள் மரங்களுக்கு அடியில் பாய் விரித்து கிடப்பது பயம் தான். நீங்கள் சொல்வது போல உள்ளே என்னவெல்லாம் இருக்கும் ! கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ரிசிஸ்க் எடுக்காமல் இருந்தது நல்லதுதான்.
ஆமாம் அக்கா அதனால்தான் வேறு இசையோ, என் குரலோ பதியவில்லை.
நீக்குஆமாம் காய்ந்த இலைகளில் நடப்பது பயம் அக்கா. ஆனால் அப்படி ஒரு முறை காட்டில் நடந்தப்ப நடந்திருக்கிறேன். கையில் கம்பு வைத்துக் கொண்டு ஒவ்வொரு அடிக்கும் கம்பால் இலைகளை அகற்றிக் கொண்டு என்று ஆனாலும் பயம் தான் கம்பு பட்டதும் அடியிலிருந்து ஏதாச்சும் எழுந்து வந்து ஒரு போடு போட்டிருச்சுன்னா என்று? அதுவும் கட்டுவிரியன் ரொம்ப விஷமாச்சே...குட்டிகள் கூட அதிக விஷம்.
நன்றி கோமதிக்கா
கீதா
பாலங்களும் செயற்கை நீரூற்றும் மழைக்காலங்களில் இன்னமுமே அழகாகவும் உபயோகமாகவும் இருக்கும்னு தோணுது.
பதிலளிநீக்குகாணொளி கண்டேன்
ஆமாம் நெல்லை, பாலங்களும் நீரோடையும் மழைக்காலத்தில் நல்லாருக்கும் பார்க்க. பூங்காவும் தான்...
நீக்குகாணொளி கண்டதுக்கும் நன்றி நெல்லை
கீதா
கருங்குருவி தெரிகிறது சிறியதாக. அந்த பற்வையே சின்ன பறவைதன்.
பதிலளிநீக்குதொங்குபாலம், கண்ணாடி பாலம் எல்லாம் தெரிகிறது. ஓடையில் நீர் ஓடுவதும், பறவைகளின் பல்வேறு ஒலிகளும், பசுமை இளம் பச்சை, கரும் பச்சை இளம் வெயில் எல்லாம் பார்க்க அழகு. இயற்கை அருவியை கணட் கண்களுக்கு செயற்கை அருவியை ரசிக்க பிடிக்குமா?
அழகான பெரிய பூங்கா. நீரூற்று போன்று நீர் பாய்ச்சுவது தெரிகிறதா?//
தெரிகிறது.
செல்லங்களுக்கு சரியான சாப்பாடு இல்லை என்று தெரிகிறது.
பாலங்கள் எல்லாம் அழகு.
தொடர்கிறேன்.
ஆம் கருங்குருவி பறவையே சின்னதுதான். கேமரால முன்ன எடுத்தது வந்திருக்கு இங்கு ஏரிகளில் எல்லாம்
நீக்குஆமாம் அக்கா அங்கு அமைதியாக இருந்ததால் பறவைகளின் சத்தம். நானும் தேடித்தேடிப் பார்த்தேன் கண்ணில் சிக்கலை. ஆனா சத்தம் மட்டும் வந்திட்டே இருந்துச்சு.
ஆமாம் செயற்கை அருவி ஈர்க்கலைனாலும் ஒரு வேளை அது பாயும் போது அதுவும் ஒரு அழகா இருக்குமோன்னு தோன்றியது இப்பலாம் டீம் பார்க்குகளில் செய்திருக்காங்களே!
ஆமாம் செல்லங்களுக்கு சாப்பாடு சரியா இல்லைன்னு எனக்கும் தோன்றியது கோமதிக்கா...பாவமா பார்த்திட்டிருந்துச்சு
எல்லாம் பார்த்து ரசிதத்ததுற்கு நன்றி கோமதிக்கா
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள், காணொளிகள் அனைத்தும் வழக்கம் போல அருமையாக உள்ளது. காணொளியில் சலசலத்து கொண்டோடும் நீரின் சப்தம், மற்றொரு காணொளியில் பறவையின் இனிய கீதம் எல்லாவற்றையும் கேட்டேன்.
/எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தைத் தரும் என்ற தத்துவத்தைப் பின்பற்ற வேண்டும் என்று அடிக்கடி நினைத்தாலும் அவ்வப்போது இப்படிக் குட்டும்! /
நல்ல அனுபவபூர்வமான வார்த்தைகள். ஆனால், அந்த நீரோடையின் காட்சிகள் சற்று எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தை குறைத்திருக்குமென நினைக்கிறேன். பாலங்களின் மேல் நடந்து கொண்டே பசுமையான மரங்கள், பறவைகள் என இவையெல்லாம் கண்டு ரசிக்கலாம். நானும் உங்களுடன் அப்படித்தான் ரசித்தேன்.
அர்ஜுனா மரம் என்று எதற்காக அந்த மரத்திற்கு பெயர் வந்ததோ? வில்லைப் போல வளைந்து இருந்ததா?
/அர்ஜுனா மரமாம். பீமன், தருமன், நகுலன் சகாதேவன் இருக்கிறார்களா என்று தேடினேன். /
ஹா ஹா ஹா.
நானும் அடுத்தடுத்து இப்பெயர்களை உடைய மரங்களைச் சொல்லப் போகிறீர்கள் என எதிர்பார்த்தேன். நீங்களே அவரைத் தவிர்த்து (அர்ஜூனன்) வேறு எவரையும் அங்கு காணவில்லை என வருந்தியிருக்கிறீர்கள்.ஹா ஹா ஹா.
பிறகு பெரிய மரங்கள் (அத்திப்பழமரங்கள்) பலவற்றையும் காணும் போது, ஆளுக்கொன்றாக (பீமன் தருமன் நகுலன் சகாதேவன் என) சகோதரர்கள் பெயர்களை நாமே சூட்டி மகிழ்ந்து கொள்ள வேண்டியதுதான்.
மற்ற எல்லா படங்களும் அருமையாக உள்ளது. அருவியை கொஞ்ச நேரம் காத்திருந்தால் நாங்களும் பார்த்திருக்கலாம். அருவி பெயர் பலகையை பார்த்த எங்களுக்கும் பல்புதான் போங்கள். ஆனாலும் இயற்கை வனப்புடன் இருந்த காட்சிகளை உங்களுடன் சேர்த்து எங்களையும் காண வைத்தமைக்கு என் நன்றிகள் பல.
அடுத்து ஸ்ரீ ரங்கப்பட்டிண பெருமாளா? அவரைக்காணத்தான் ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதிவு அருமை. படங்கள், காணொளிகள் அனைத்தும் வழக்கம் போல அருமையாக உள்ளது. காணொளியில் சலசலத்து கொண்டோடும் நீரின் சப்தம், மற்றொரு காணொளியில் பறவையின் இனிய கீதம் எல்லாவற்றையும் கேட்டேன்.//
நீக்குநன்றி கமலாக்கா
//நல்ல அனுபவபூர்வமான வார்த்தைகள். ஆனால், அந்த நீரோடையின் காட்சிகள் சற்று எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தை குறைத்திருக்குமென நினைக்கிறேன்.//
இல்லைக்கா...அது நல்லாருந்துச்சு. தொங்குபாலம் கடைசில செயற்கை அருவி நு போட்டிருக்கலாம் வெறுமனே அருவின்னு எழுதியிருந்ததுதான் எதிர்பார்ப்பைக் கிளறியது...
அர்ஜுனா மரம் என்று எதற்காக அந்த மரத்திற்கு பெயர் வந்ததோ? வில்லைப் போல வளைந்து இருந்ததா?//
அதன் பட்டை நல்ல பளபளன்னு ப்ரைட்டா இருப்பதால் அதுக்கு அர்ஜுனா மரமாம். அர்ஜுனனை நாம எங்க பார்த்தோம்!!! பல கதைகள் இருக்கின்றன அர்ஜுனனுடன் தொடர்புடையதாக....சும்மா ஏதாச்சும் இப்படிக் கதை கட்டுவதுண்டு இதன் பட்டை மருத்துவகுணங்கள் உள்ளது.
படங்கள் காணொளி எல்லாம் பார்த்து ரசித்ததுக்கு நன்றி கமலாக்கா
சலீம் அலி மையம் பிறகு, ஸ்ரீரங்கப்பட்டினா கோவிலுக்குப் போகும் முன் ஒரு இடம்...அங்கு உள்ளே செல்லவில்லை ஆனால் அது பற்றி இடையில் சொல்வதா இல்லை ஸ்ரீரங்கப்பட்டினா கோவில் முடித்து சொல்லலாமா என்று யோசனை ஓடுது.
நன்றி கமலாக்கா
கீதா
ஆனால், அந்த நீரோடையின் காட்சிகள் சற்று எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தை குறைத்திருக்குமென நினைக்கிறேன்.
நீக்கு/இல்லைக்கா...அது நல்லாருந்துச்சு/
நானும் அதைத்தான் கூறியுள்ளேன் சகோதரி. அழகான நீரோடை அதன் மேலே நடந்து செல்ல பத்திரமான பாலம் பசுமையான மரங்கள், என எல்லாமே பார்க்க நன்றாக உள்ளதென தான் கூறியுள்ளேன்.
அக்கா, புரிந்தது....நான் கருத்து அடிக்கும் போது இடையில் சிலது விட்டுப் போயிருக்கிறது. நீங்கள் சொன்னது புரிந்தது. ஆமாம் நீரோடைக்காட்சி ரொம்பவே நல்லாருந்துச்சு ஆனா கடைசிக் குட்டும் முதல் குட்டும் ...ச்சே கீதா இப்படி எதிர்பார்த்து குட்டு வாங்கலமான்னு வடிவேலு ஸ்டைல்ல என்னையே நான் கேட்டுக்கிட்டிருந்தேன்!!!! ஹாஹாஹா
நீக்குஆமாம் பத்திரமான பாலம் தான்...ஆனா பாருங்கக்கா சின்ன பிள்ளை நான் விழுந்தாலும் பிரச்சனை இல்லை...ஹிஹிஹிஹிஹிஹி அம்புட்டுதான் தண்ணி!!!!
நன்றி கமலாக்கா
கீதா
எத்தனையோ ஆறுகளில் வாய்க்கால்களில் குளித்திருக்கிறேன். வாய்க்கால் ஆறு எங்க பார்த்தாலும் டபக்குனு குதித்துவிடுவேன்....அப்படியான ஸ்வபாவம் எனக்கு. ஆனா என்னவோ காவிரில முதலைய பார்த்ததும் கால் வைக்கவும், கை போடவும் கூட பயமா இருந்துச்சு ஹாஹாஹாஹா
நீக்குகீதா
உங்களுக்கு நன்றாக நீந்த தெரியும்னு நினைக்கிறேன். நானும், எங்கள் பிறந்த வீட்டருகே தாமிரவருணி வாய்க்கால், தி. பின் கல்லிடை தாமிரவருணி ஆறு என குளித்திருந்தாலும் நீச்சல் பழகவில்லை. காரணம் ஆடிக்கு ஒரு முறை என அவற்றில் குளித்தால்... எப்படி நீச்சல் வரும்.? பிறந்த வீட்டில் வாய்க்காலில் குளியல் ஒரு குறிப்பிடட வயது வரைதான் அனுமதி கிடைத்தது. . தி. பின் அங்கு (கல்லிடை) போகும் போது ஆற்றில் குளியல். இப்போதும் எனக்கு கல்லிடை போக விருப்பம். ஆனால் அங்குள்ள உறவுகள் சென்னைவாசியாகி விட்டனர்.
நீக்குஆமாம் கமலாக்கா நீந்தத் தெரியும். இப்போது அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதால் நன்றாக என்பதைத் தவிர்த்து....உங்கள் அனுபவங்களையும் தெரிந்து கொண்டேன்.
நீக்குஎங்க வீட்டிலும் அனுமதி கிடையாது ஊரில் இருந்தப்ப. ஆனால் கோடையில் வீட்டில் கிணற்றில் தண்ணீர் குறையும் போது, குளம் ஆறுதான். அப்பலாம் தோன்றியதில்லை ஆற்றில் குளத்தில் சோப் கலக்கக் கூடாது என்று. குளத்தில் மீன்கள் இறந்து மிதந்த போது அறிய நேர்ந்தது. இத்தனைக்கும் குளத்து நீர் தேரேகால் வாய்க்காலில் இருந்து வந்து மறு பக்கம் ஓடை வழியாக வெளியேறும் ஆனால் கோடையில் தண்ணீர் குறையும் நேரத்தில் வெளியேறும் ஓடையை அடைப்பார்கள் எனவே மீன்கள் இறந்து மிதக்கும். அப்போது அறிய நேர்ந்தது மீன்களின் இறப்பிற்கு சோப்பும் ஒரு காரணம் என்று, அதிலிருந்து நான் துணிகளை குளத்தில் ஆற்றில் தோய்ப்பதை விட்டேன், குளித்தாலும் சோப் பயன்படுத்தாமல், செம்பருத்தி இலை பூ என்று பயன்படுத்திக் குளிக்கத் தொடங்கினேன். அதுவும் ஆற்றில் மட்டுமே.
ஆமாம் அக்கா என் உறவினர்களில் சிலர் இப்பவும் திருநெல்வேலியில் இருக்காங்க. ஆனால் நாகர்கோவிலில் இல்லை. நட்புகளைத் தவிர.
கல்லிடைக்குறிச்சி தெரியும். ஆறு தாமிரபரணி அழகாக இருக்கும். கிராமத்திற்குப் போயிருக்கிறேன். அங்கு ஓர் உறவினர் உண்டு. இப்ப அவங்க அப்பப்ப மகளிடமும் அங்குமாக. கல்லிடைக்குறிச்சி மாமி ஒருவர் யுட்யூப் போடுகிறாரே. உங்களுக்கும் தெரிந்திருக்கலாம் அவரை. என் உறவினருக்கு அவரைத் தெரியும்.
காரைக்குறிச்சியிலும் அத்தை ஒருவர் இருந்தார் இப்ப அடுத்த தலைமுறை திருநெல்வேலி டவுனில். காரைக்குறிச்சியில் மண் பாண்டங்கள் யானை மான் போன்ற பொம்மைகளைச் செய்வாங்க. வாங்கியது வீட்டில் இருந்தன. இப்பவும் செய்யறாங்களா என்று தெரியவில்லை.
கீதா
ஒவ்வொரு பதிவிலும் ரங்கன திட்டு ரங்கன திட்டு என்று நீங்கள் சொல்லி இருப்பது கஷ்டமாக இருக்கு.. பாவம் இல்லை ரங்கன்? அவரை எதற்கு திட்டவேண்டும்!
பதிலளிநீக்குஹா ஹா ஹா. ரொம்பவே சிரித்து விட்டேன். ஸ்ரீராம் சகோதரரே.
நீக்குஅதனால்தான் பதிவில் சொல்லியபடி அன்றைய பயணத்தின் இறுதியில் ஸ்ரீ ரங்க பட்டிணம் கோவிலுக்கு ப் போகப் போகிறார்களே கீதாரெங்கன் சகோதரி.!! அப்போது"அவனை" திட்டியதற்கு "அவன்" மன்னித்தருளுவான். ஹா ஹா ஹா.
ஹாஹாஹா ஸ்ரீராம்....நெல்லை சென்ற பதிவுகளில் ஏதோ ஒன்னுல சொல்லிட நானும் அதேதான் சொல்வதாக இருந்து பதிவில் சொல்லலைன்னு போன பதிவிலோ இல்லை அதுக்கு முந்தைய பதிவிலோ சொன்ன நினைவு.
நீக்குகீதா
வணக்கம் சகோதரி
நீக்குஎன் மீது தங்களுக்கு ஏதேனும் வருத்தமா? தவறுதலாக நான் விளையாட்டாக சொல்லியிருப்பதால் மன்னித்து விடுங்கள். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆ!!!! கமலாக்கா....இந்த கீதாவைப் பத்தி தெரியாம இப்படி மன்னிப்பை எல்லாம் வேஸ்ட் பண்ணறீங்களே!!!!!ஹாஹாஹாஹா
நீக்குசத்தியமா எனக்குப் புரியலைக்கா...நான் எதுக்கு வருத்தப்படணும் உங்க மேலன்னு....முதல்ல நான் பெரும்பாலும் எதுவும் சீரியஸா எடுத்தறதில்லை,
நீங்க சொன்னதுக்கு பதில் சொல்லலை காரணம், கோயில் பத்தி வர பதிவுல நெல்லை, ஸ்ரீராம் நீங்க இப்ப சொன்னதுக்கு அதான் ரங்கன திட்டு வுக்கு ஏற்கனவே அதில் சொல்லன்னு வைச்சிருக்கேன்....அதான்...
நான் தப்பாவே எடுத்துக்க மாட்டேன். சின்ன சின்ன விஷயத்துக்கே சிரிக்கக் கூடியவள் நான். ஸ்ரீராம், நெல்லை கிட்ட கேட்டுப் பாருங்க.....
அதனால ரொம்ப நினைச்சு கவலைப்படாதீங்கக்கா,..
கீதா
/ஆ!!!! கமலாக்கா....இந்த கீதாவைப் பத்தி தெரியாம இப்படி மன்னிப்பை எல்லாம் வேஸ்ட் பண்ணறீங்களே!!!!!ஹாஹாஹாஹா/
நீக்கு/வேஸ்ட் செய்யவில்லை. உங்களிடந்தானே தருகிறேன். வேண்டாமென்றால் திருப்பி தந்து விடுங்கள். :))
என் பதிலுக்கு உங்களிடமிருந்து ரியாக்ஷன் ஏதும் இல்லையே..! அதனால் நீங்கள் தப்பாக நினைத்து விட்டீர்களோ என பயந்து விட்டேன். அவ்வளவுதான்.
ஹாஹஹா கமலாக்கா திரும்பக் கொடுத்துவிட்டேன்!!!
நீக்குபதில் கொடுக்கத் தாமதமானதுக்குக் காரணம் வேலைகளால். அல்லது யோசித்துக் கொடுக்க வேண்டியவற்றிற்கு யோசித்துக் கொடுப்பேன் குறிப்பாக மாற்றுக் கருத்து இருந்தால். மற்றபடி தப்பாக எல்லாம் எடுப்பதில்லை. பெரும்பாலும் நான் கொடுகக்த் தாமதமாகிறது இப்போது. உங்களுக்குக் கொடுக்கத் தாமதமானதுக்குக் காரணம் வேலைகள். ஸோ No problem அக்கா.
ஹப்பா ஒரு மாற்றம் உங்களிடம்....நன்றி சொல்லாம விட்டீங்களே....சமத்து அக்கா!!!!!!!!
கீதா
'ஓடையின்னா நல்லோடை ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை தங்கப் பசுங்கிளிக்கு சாந்துப்பொட்டு வைக்கவேணும் தன்னன்னா' என்று ஆவலுடன் பாடிக்கொண்டே வந்து ஓடையைப் பார்த்தால் சிறிய ஏமாற்றம்தான்! மரங்களின் அடர்த்தி கவர்கிறது.
பதிலளிநீக்குஸ்ரீராம் ஹைஃபைவ்! எனக்கு இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது அந்த ஓடையை படம் காணொளி எடுத்து பார்த்தப்ப. ....
நீக்குசின்ன ஓடைதான் ஸ்ரீராம் ஆனால் நேரில் பார்க்க நல்லாருந்துச்சு.
நன்றி ஸ்ரீராம்
கீதா
சும்மா ஒரு கவர்ச்சிக்கு பாலம் போல ஒன்றை கட்டி வைத்திருக்கிறார்கள். மழைக்காலங்களில் ஜேஜே என்று அல்லது ஜோஜோ என்று இருக்குமோ....
பதிலளிநீக்குஈர்ப்பதற்குத்தான் ஸ்ரீராம் எல்லாமே ஆனா நல்லா பராமரிக்கறாங்கந்கு ...பச்சை பசேல்னு இருக்கு எல்லாம். மழைக்காலத்தில் ரொம்ப அழகா இருக்கும். அதீத மழை என்றால் உள்ளே அனுமதி இல்லை. படகுச்சவாரியும் இருக்காதாம். வெள்ளம் வந்திருச்சுனா?!!
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
கண்ணாடி பாலம் என்றதும் சிங்கப்பூர், சீனாவில் இருக்கும் உயரமான கண்ணாடி தளம் போல எதிர்பார்த்தீர்களோ... சரியாய்ப் பார்த்தீர்களா? அங்கு ஆணியில் ஏதாவது ஒரு கண்ணாடி மாட்டி வைத்திருக்கிறார்களா என்று!
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் பெரிசா தண்ணி அடில போறதும் சைட்ல போறதுமா இருக்கும்னு ...இப்ப கன்னியாகுமரில விவேகாந்தர் பாறைக்கும் திருவள்ளுவரை சிலைக்கும் நடுவில் கண்ணாடிப்பாலம் கட்டிருக்காங்களாமே நடந்து போய் பார்க்கலாம்னு...
நீக்குஅது வேணா நல்லாருக்கும்னு தோன்றுகிறது. வீடியோ கூகுள்ல பார்க்கணும்
அங்கு ஆணியில் ஏதாவது ஒரு கண்ணாடி மாட்டி வைத்திருக்கிறார்களா என்று!//
ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்.
கீதா
அர்ஜுனன் யாரையோ உஷார் பண்ண அவன் மட்டும் இங்கு வந்திருப்பானாயிருக்கும்! பாசுபதாஸ்திரம் வாங்கப் போனான் இல்லையா....
பதிலளிநீக்குஇந்த ஊர்லதானே பகாசுரனை பீமன் கொன்றாதாகவும் இங்கு பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்தாங்கன்னும் அதனாலதான் பாண்டவபுரான்னும் முதல் பதிவுல சொல்லியிருந்தேன் இல்லையா...ஒரு வேளை அர்ஜுனன் இந்த மரத்தை எதுக்காச்சும் வில் மாதிரி பயன்அபடுத்தியிருப்பானோ என்னமோ. எனக்கென்னவோ பீமன் மரம்னு இருந்தா இன்னும் நல்லாருக்கும்னு தோன்றியது. அவந்தானே மரத்த்தை பிடுங்கி அடிக்க எல்லாம் செய்வான்!!
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
'எக்' வெள்ளையாய் இருக்கும். நீங்கள் ரெட் என்கிறீர்கள்.. என்னமோ போங்க... கருங்குறுவை லேசுபாசா தெரியுது. நான் ஒரு புகைப்படம் ஒரு குருவியை எடுத்திருக்கேன். வியாழக்கிழமைல போடறேன். பேர் சொல்லுங்க!
பதிலளிநீக்குஹாஹாஹாஹா நானே யோசித்திருக்கிறேன் வெள்ளைனால இப்படியான்னு அதுக்கு மில்க்ரே ன்னு கூட வைச்சிருக்கலாமோன்னும்...கருங்குருவி அம்புட்டுத்தான் தெரியும்...சரியா வரலைதான். வேறு இடங்களில் எடுத்த தெளிவான் படங்கள் இருக்கு பகிர வேண்டும்...
நீக்குநீங்க எடுத்த குருவிய போடுங்க சொல்ல முடியுதான்னு பார்க்கறேன் ஸ்ரீராம். இல்லைனா தெரிஞ்சுக்குவோம்!
கீதா
அத்திப்பழத்தை குற்றம் கூற யாருக்கும் வெட்கமில்லை எனும் பாடல் வரி கேட்டிருக்கிறீர்களா? பலாப்பழம் இருந்தால் ஊழியர்களே களவாடி விடுவார்களோ என்னவோ..
பதிலளிநீக்குஇவ்வளவு மரங்கள் இருக்கின்றனவே.. குரங்குகள் இல்லையா? ரங்கனதிட்டில் குரங்கார் இல்லையா?
இல்லையே ஸ்ரீராம்..அந்தப் பாட்டு கேட்டதில்லையே
நீக்குபலாப்பழம் ஆமாம் அங்குள்ளவங்களே எடுத்துக்குவாங்களா இருக்கும். ஒரு வேளை காச்சு எடுத்திருப்பாங்களோ அதான் காணலையாருக்கும்.
எனக்கும் இந்தக் கேள்வி எழுந்தது. இவளவு இருக்கு குரங்காரைக் காணலையேன்னு...
எங்குமே கண்ணில் படவில்லை ஸ்ரீராம்.
கீதா
https://www.youtube.com/watch?v=KeWZ6sy79AM
நீக்குஸ்ரீராம் இந்தப் பாட்டு கேட்டிருக்கேனே....ஆனா பாருங்க அந்த வரி அதுல வரும்னு தெரியலை....ஆனா யாருக்கும் வெட்கமில்லைன்னு பார்த்ததும் இந்தப் பாட்டுதான் நினைவுக்கு வந்தது. ட்யூன்...
நீக்குகீதா
செல்லங்கள் அழகு. பழைய இடத்துக்கே வந்ததும் தொடங்கும் பாராவின் ஆரம்ப வரியில் ஒரு சிறு திருத்தம் உள்ளது. நடக்கத்தொடங்கிய அல்லது நடை தொடங்கிய..
பதிலளிநீக்குதிருத்திவிட்டேன் ஸ்ரீராம்.
நீக்குஇந்தக் கடைக்கு எதிரேதான் படகுத் துறை.
நன்றி ஸ்ரீராம்
கீதா
அருவி நல்ல ஜோக். ஜோக் பால்ஸ் போல இருக்கும் என்று போனீர்களா? அங்கு "அருவி கூட ஜதியில்லாமல் ஸ்வரங்கள் பா'டவில்லை!
பதிலளிநீக்குஹாஹாஹா 'ஜோக்' ஃபால்ஸ் இல்லைனாலும் ஒரு சின்னதாக மடிப்பு மடிப்பா விழுவது போலாச்சும் இருக்க்மோன்னு நினைச்சேன் ...
நீக்கு//"அருவி கூட ஜதியில்லாமல் ஸ்வரங்கள் பா'டவில்லை!//
அருவி கூட ஜதியில்லாமல் ஸ்வரங்கள் பாடுது பாட்டுதானே தாஸேட்டன் பாடியது? ஸ்ரீராம்
கீதா
தாஸேட்டன் மட்டுமா...
நீக்குகூடவே தலைவரும்..
முதல் சரணமே தலைவர்தான்.
ஆமா கூடவே தலைவரும் ....பாட்டு முழுசும் கேட்டேன் ஸ்ரீராம். அருமையான பாட்டு இல்லையா...
நீக்குகீதா
அழகான படங்களும் ..அருமையான பயணமும் தொடர்கிறேன் கீதா அக்கா
பதிலளிநீக்குமிக்க நன்றி அனு.
நீக்குகீதா
படங்கள் அனைத்தும் அழகாக இருக்குது. தொங்குபாலம் நன்று. இங்கும் தொங்குபாலம் இருந்து வீடியோ எடுத்திருக்கிறேன் அது இப்போ 4,5 வருடம் இருக்கும் எடுத்து இன்னும் எடிட்பண்ணிப்போட நேரம் வருகுதில்லை:))
பதிலளிநீக்குதொங்கு பாலம், ஈர்க்கவில்லை, அதிரா. த்ரில்லிங்காகவும் இல்லை.
நீக்குநீங்கள் எடுத்த தொங்கு பாலம் போடுங்க, அதிரா.
நன்றி அதிரா
கீதா
அர்ச்சுனா மரம் அங்கேயும் இருக்கோ... நான் போன ஹஜராஹோ வில், பாண்டவர் குகையில் இருந்தது, வீடியோ எடுத்துப் போட்டேன். ஆனா அந்த மரம் மிக உயரமாக நீண்டிருந்தது, இது குட்டியாக கிளைகள் பரவியிருக்கே.. ஒரு வேளை எவலூசனாக இருக்குமோ ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குஇந்த வீடியோவில் இருக்கு நான் பார்த்த அர்ச்சுனா மரம்..
https://youtu.be/HNBWtS2rFC0?si=pAKixxhHBLAnjmTx
அர்ஜுனா மரம் என்று எழுதி வைச்சிருக்காங்க, அதிரா. நானும் இதுதான் முதல் முறை பார்க்கிறேன். இது இப்பதான் வளருதா இருக்கலாம்.
நீக்குஉங்க வீடியோவிலும் பார்த்தேன். அது வித்தியாசமாக தடியாக, நெடிதுயர்ந்த மரம். இது இப்பதான் வளருதுன்னு நினைக்கிறேன்.
நன்றி அதிரா
கீதா