சலீம் அலி மையம் - பார்ப்பதற்கு முன்னர் ஒரு விஷயம்
நம்ம நெல்லையும் (நெல்லை என்னைக் கலாய்த்தது நம்மவீட்டவரின் பெயரை வைத்து என்று என் ஊகம்!!!!), ஸ்ரீராமும் “ரங்கன திட்டு” என்று ஏன் ரங்கன திட்டறீங்கன்னு கலாய்த்திருந்தார்கள்.
நானுமே கூட ஸ்ரீரங்கப்பட்டினம் கோவிலில் வரிசையில் நிற்கறப்ப சாமியிடம், “ஏனப்பா உங்க பக்கத்துலன்றதுனால இந்தப் பறவைகள் சரணாலயத்துக்கு உங்க பெயரை வைச்சுட்டு கூடவே திட்டுன்னு ஏன் உங்க ஊர் ஆட்கள் சொல்றாங்க? அப்படி இந்த மக்களுக்கு உங்க மேல என்ன கோபம்? இல்லை உங்க பாஸ் உங்களை இந்த இடத்தில் திட்டினாங்களா எதுக்காச்சும்!!? அப்படி ஏதும் புராணக்கதை இருக்கா” - ஒரு மைன்ட் வாய்ஸ்ல சாமிக்கு வாட்சப்நோட் அனுப்பினேன். திட்டு என்பதன் பொருள் உனக்குத் தெரியாதாக்கும், பெரிசா என்னவோ மேதாவி மாதிரி கேள்வி கேட்கற? என்றது என் மற்றொரு மைன்ட் வாய்ஸ்! கேள்வியும் நானே பதிலும் நானே!
ஒரு பளிச். இணையத்தில் போட்டுப் பார்ப்போம் ரங்கனதிட்டா இல்லை ரங்கனத்திட்டா என்று. ஆங்கிலத்தில் Ranganathittu.
கன்னடத்தில் இருந்ததை எடுத்து கூகுளில் காப்பி பேஸ்ட் செய்து தமிழில் என்ன சொல்கிறது என்று கேட்டேன். ரங்கனதிட்டு என்று ‘த்’ இல்லாமல் காட்டியதோடு, கன்னடத்திலும் ‘த்’ இல்லை. கன்னடத்தில் இருந்ததை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்கிறது என்று பார்த்தால், Ranganatittu என்றது. அடுத்து, ரங்கனத்திட்டு என்று தமிழில் போட்டுப் பார்த்தேன். விக்கியும் இந்தியா டைம்ஸும் ‘ரங்கநதிட்டு’ என்று காட்டின. ஆனால் தளங்கள், தமிழில் வரும் செய்தித்தாள்கள் உட்பட எல்லாமே ‘ரங்கனதிட்டு’ என்றே சொல்கின்றன. கர்நாடகா சுற்றுலாத் துறை உட்பட. அதுவும் ரங்கனதிட்டு என்று சேர்த்தேதான் காட்டியது கன்னடத்திலும், தமிழிலும். அதனால் நானும் ரங்கனதிட்டு என்றே எழுதினேன்.
சரி தமிழறிஞர்கள் சொல்லுங்கப்பா, ரங்கனத்திட்டு என்று எழுதணுமா? இல்லை, ரங்கநதிட்டு? ரங்கன திட்டு? சொன்னீங்கனா எல்லாவற்றிலும் மாற்றிவிட்டால் போச்சு!
பதிவுக்கு வருகிறேன். கடைசியாக என்ன பார்த்தோம்ன்றத சொல்லி முடித்தால்தானே இங்கிருந்து வெளியில் வந்து ஸ்ரீரங்கபப்ட்டினம் கோவிலுக்குப் போக முடியும் இல்லையா? கடைசியாகத் தண்ணியில்லா அருவியை பார்த்துவிட்டு, டிக்கெட் வாங்கிய முகப்பிற்கே வந்து அங்கிருந்த சலீம் அலி மையத்தைச் சும்மா ஒரு விசிட். ஓர் அறையில், இந்த இடத்தைப் பற்றிய தகவல்கள், இங்கு வரும் பறவைகள் முதலைகளின் பொம்மைகள், பறவைகள் பற்றிய குறிப்புகள், நாம் சுற்றுச் சூழலை, பறவைகளைப் பாதுகாக்க வேண்டும் போன்ற பரிந்துரைகள் தகவல் பலகைகளாக இருக்கின்றன. அவை எல்லாம் கீழே படங்களாகவும், காணொளியாகவும்.
நம்மைக் கொண்டு விட்ட ஆட்டோ ஓட்டுநர், நாங்கள் வெளியில் வர 15-20 நிமிடங்களுக்கு முன் அவரை அழைத்து சொல்லச் சொல்லியிருந்தார். அவர் பாண்டவபுராவிலிருந்து வருவதற்கு 20 நிமிடங்கள் ஆகும் என்பதால். நாங்கள், ‘தண்ணி’ காட்டிய அருவியின் அருகில் வந்ததுமே அழைத்திருந்தோம். ஆனால் அவர் எடுக்கவில்லை. அதன் பின் தகவல் மையத்திலிருந்து வெளியில் வரும் போது அழைத்தோம். எடுத்தார். தன்னால் வர இயலாது, வேறொருவரை அனுப்புவதாகச் சொல்லி, வருவதற்கு 20 நிமிடங்கள் ஆகும் என்றும் சொன்னார்.
பார்க்கிங் பகுதியில் காத்திருந்தோம். அங்கு சின்ன சின்ன பறவைகளின் சத்தமும் பறவைகளும் இருந்தாலும், என் கேமரா மூச்சிழந்து விட்டதால் மொபைலில் ….ம்ஹூம் ஒன்றும் சிக்கவில்லை.
25 நிமிடங்களில் அந்தப் புதிய ஆட்டோக்காரரிடம் இருந்து அழைப்பு வந்தது. செக்போஸ்ட்டில் இருப்பதாகவும் அதைக் கடந்து உள்ளே வர ரூ 20 கேட்பதினால் அங்கே எங்களை வரச் சொன்னார். நமக்கென்ன, நடப்பதற்குக் கேட்கணுமா! அப்படி செக் போஸ்ட்டிற்கு நடந்த போது நுழைவு வாயிலின் வளைவின் உட்பக்கத்தை ஒரு க்ளிக்.
சரணாலய பறவைகளுக்கும், சரணாலயத்திற்கும் டாட்டா பைபை சொல்லிவிட்டு செக்போஸ்டில் நம்மை அழைத்துச் செல்ல வந்திருந்த ஆட்டோவில் ஏறி, அடுத்து ஸ்ரீரங்கப்பட்டின கோவிலுக்குப் போகச் சொன்னோம். அடுத்த பதிவில், கோவிலின் சிற்பங்களின் படங்கள் போட்டு பதிவா இல்லை, வழியில் உள்ள ஓரிடத்தைப் பற்றிச் சொல்லலாமா இல்லை, அதை தனிப் பதிவாகப் போடலாமா, என்று இங்கி பிங்கி பாங்கி போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
-----கீதா
திட்டு என்பது மூன்றாவது த என நினைக்கிறேன். நதி அல்லது நீர் இருக்கும் சூழலில் உள்ள மணல்மேடு அல்லது சிறு சிறு நிலப்பரப்பு. ஶ்ரீமங்கபட்டினம் அருகே என்பதால் ரங்கனதிட்டு.
பதிலளிநீக்குதமிழிலும் இதே பொருளில் திட்டு என வழங்கப்படுகிறது. காவிரி நடுவே இருந்த திட்டில் கரை ஒதுங்கினான் என வரும்.
நெல்லை, திட்டு என்பது அதே தான், நாம அடிக்கடி பயன்படுத்துவதுதானே. ஆற்றில், ஸ்ரீரங்கப்பட்டினம் அருகே என்பதால் அந்தப் பெயர் என்பதும் தெரியும். தமிழிலும் அதேதான். திட்டுத் திட்டாகன்னும் சொல்வதுண்டே. ஆமாம் இந்தப் பொருள் தெரியும். நான் நினைத்தது ரங்கனத்திட்டு என்று வருமோன்னு...
நீக்குநன்றி நெல்லை
கீதா
உயிருள்ள பறவைகளைவிட, செயற்கையாகச் செய்துவைத்த பறவைகள் மிகவும் இயற்கையாக அழகாக இருக்கின்றன.
பதிலளிநீக்குசமத்தா, அசையாமல் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதால் இருக்கும். அத்தகைய படங்கள் ரொம்ப அழகா வந்திருக்கு
ஹாஹாஹாஹா.....ஆமாம் அந்த பொம்மைகள் ரொம்பவே இயற்கையாக இருப்பது போல் இருந்தன நெல்லை. ரொம்ப அழகு
நீக்குகீதா
இயற்கைச் சூழலைவிட்டு வெளியேறி, கான்கிரீட் கட்டிடங்களுக்கு வந்துவிட்டாலும் நம் மனது இயற்கையைக் கண்டதும் எவ்வளவு மகிழ்ச்சி கொள்கின்றது என்று பாருங்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் வீட்டில் செடி கொடிகளை வளர்க்கிறோம் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குபச்சைப் பசேல் காட்சிகளும் எடுத்த விமும் அழகு.
ஆமாம் நெல்லை, இயற்கையைக் கண்டால் உடனே மனம் அப்படியே ஒரு பரவச நிலைக்குப் போய்விடும். ஆனால் அதே சமயம் இயற்கை எல்லாம் இப்ப சுற்றுலா சுற்றுலா என்று கட்டிடங்களாக மாறி வருவதைப் பார்க்கறப்ப மனம் வருந்துகிறது.
நீக்கு//பச்சைப் பசேல் காட்சிகளும் எடுத்த விமும் அழகு.//
நன்றி நெல்லை. பச்சைய, நதியை, மலைகளை எங்கு பார்த்தாலும் உடனே அதை க்ளிக்கி வைத்துக் கொள்ளத் தோன்றும். ஏன்னு கேட்டீங்கனா அடுத்த வருஷமே அவை எல்லாம் காணாமல் போகும் வாய்ப்புகள் அதிகம் பாருங்க!!!
கீதா
டெல்டா பகுதிகளில் பயணிக்கும்போது நெல் வயல்களும் வடநாட்டில் கோதுமை வயல்களும் என் கண்ணைக் கவரும். அதுபோலவே தென்னை வாழைமரத் தோப்புகள், மாமரங்கள் போன்றவை.
பதிலளிநீக்குநாங்களும் வாய்ப்பு கிடைக்கும்போது பகிர்வோமுல்ல. ஹா ஹா ஹா
டெல்டா பகுதிகளில் பயணிக்கும்போது நெல் வயல்களும் வடநாட்டில் கோதுமை வயல்களும் என் கண்ணைக் கவரும். அதுபோலவே தென்னை வாழைமரத் தோப்புகள், மாமரங்கள் போன்றவை.//
நீக்குஆமா, நெல்லை....மீக்கும்...
//நாங்களும் வாய்ப்பு கிடைக்கும்போது பகிர்வோமுல்ல. ஹா ஹா ஹா//
ஹாஹாஹாஹா பகிருங்க பகிருங்க...
கீதா
சரணாலய பறவைகள் படம் , காணொளி எல்லாம் அருமை.
பதிலளிநீக்குபேர் காரணம் தகவல் மையத்தில் போட்டு இருக்கும் ரங்கனதிட்டு பேரும். இடத்தின் பேர் ரங்கனதிட்டு என்று தெரிந்து கொண்டேன்.
சலீம் அலி மையத்தைச் சுற்றி காட்டி விட்டீர்கள்.
//இடத்தைப் பற்றிய தகவல்கள், இங்கு வரும் பறவைகள் முதலைகளின் பொம்மைகள், பறவைகள் பற்றிய குறிப்புகள், நாம் சுற்றுச் சூழலை, பறவைகளைப் பாதுகாக்க வேண்டும் போன்ற பரிந்துரைகள் தகவல் பலகைகளாக இருக்கின்றன. அவை எல்லாம் கீழே படங்களாகவும், காணொளியாகவும்.//
ஆமாம், பறவைகளை பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழலை நன்றாக வைத்து இருப்பதும் பறவைகள் தான். அவற்றின் எச்சங்கள் மரங்களாக அந்த மரங்கள் அவற்றிற்கு வசிப்பிடமாக என்று எத்தனை அழகாய் இயற்கை ஒழுங்கு படுத்தி இருக்கிறது.
பேர் காரணம் தகவல் மையத்தில் போட்டு இருக்கும் ரங்கனதிட்டு பேரும். இடத்தின் பேர் ரங்கனதிட்டு என்று தெரிந்து கொண்டேன்.//
நீக்குஆமாம் அக்கா. //சலீம் அலி மையத்தைச் சுற்றி காட்டி விட்டீர்கள்.//ன்டும்
ஆமாம் ...அவ்வளவுதான் அங்கு இருந்தது. அதான் சுற்றிக்காட்டினேன்.
அவற்றின் எச்சங்கள் மரங்களாக அந்த மரங்கள் அவற்றிற்கு வசிப்பிடமாக என்று எத்தனை அழகாய் இயற்கை ஒழுங்கு படுத்தி இருக்கிறது.//
ஆமாம் அக்கா. ரொம்ப அழகு அந்த இடம்.
நன்றி கோமதிக்கா
கீதா
சலீம் அலி தகவல் மைய படங்களில் முதலை வாயை திறந்து கொண்டு இருப்பது பார்க்க பயத்தை ஏற்படுத்துகிறது, அதற்கு இரையாகமல் பறவைகள் பிழைத்து இருப்பது மகிழ்ச்சியே!
பதிலளிநீக்குகாவிரிப்பகுதி என்பது பச்சை பாசேல் என்று இருப்பது உண்மை. வயல்களும், தென்னத்தோப்புகளும் மிக அழகாய் இருக்கிறது.
நுழைவு வாயிலின் வளைவின் உட்பக்கமும் அழகு.
//அடுத்த பதிவில், கோவிலின் சிற்பங்களின் படங்கள் போட்டு பதிவா இல்லை, வழியில் உள்ள ஓரிடத்தைப் பற்றிச் சொல்லலாமா இல்லை, அதை தனிப் பதிவாகப் போடலாமா, என்று இங்கி பாங்கி பாங்கி போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.//
இங்கி, பாங்கி பாங்கி முடிந்தவுடன் வரப்போகும் அடுத்த பதிவை படிக்க பார்க்க ஆவல் கீதா.
ஆமாக்கா அந்த முதலைய பார்த்ததும் டக்குனு நிஜம் போல தோன்றும்.
நீக்குஆமாம் அங்கு நிஜம் பறவைகளும் கூட முதலை அருகில் இருந்தன. ஆனால் முதலை ஒன்றும் செய்யலை.
ஆமாம் அக்கா காவிரி, கங்கை, கோதாவரி, இன்னும் பல நதியோரப் பகுதிகளில் பச்சை பசேலாக இருக்கும். வடக்கிலும் கூட.
//இங்கி, பாங்கி பாங்கி முடிந்தவுடன் வரப்போகும் அடுத்த பதிவை படிக்க பார்க்க ஆவல் கீதா.//
ஹாஹாஹாஹா நன்றி கோமதிக்கா. இங்கி பிங்கி பாங்கி....போட்டு....வரேன்...
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. ரங்கனதிட்டா விளக்கம் அருமை. பல முறை ரங்கனத்திட்டு என்பதின் பெயர் காரணங்களை அலசி ஆராய்ந்து சொல்லி சொல்லி, ஆசை தீர ரங்கனைதிட்டி விட்டீர்கள். நாங்களும் ரங்கனதிட்டு என பல முறை படித்து படித்து திட்டி விட்டோம். ஹா ஹா ஹா. ஆக மோத்தம் ரங்கன திட்டு என்பதுதான் சரியான விடை.
சென்னையில் நாங்கள் இருக்கும் போது "தீவு திடலில்" பொருட்காட்சி என பார்க்கப் போவோம். அதென்ன "தீவுத் திடல்" என நானும் பலமுறை யோசித்ததுண்டு. அங்கு தீவு இருந்ததா என யாரிடமும் கேட்டதில்லை. இப்போதும் அங்குள்ளவர்கள் அப்படித்தான் சொல்கிறார்களா என்பதும் தெரியவில்லை அதுபோல் இங்கு திடல் திட்டாகியதோ?
பறவைகள் படங்கள் நன்றாக இருக்கின்றன. காணொளியும் பார்த்து ரசித்தேன். அடுத்து வரப்போகும் இடத்தைக் காண ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஓ! கமலாக்கா, ரங்கன திட்டு என்று பிரித்து எழுதணுமா? ஆனா அந்த இடத்திலும் சரி. வலைத்தளங்களிலும் சரி இடத்தின் பெயர் ரங்கனதிட்டு என்றுதான் சொல்லியிருக்காங்க. ரங்கனதிட்டு என்பதில் மாற்றம் எதுவும் இல்லை. கன்னடத்தில் எழுதியதை அப்படியே எல்லோரும் அவரவர் மொழியில் எழுதிக்கறாங்க. அது ஓகே.
நீக்குநான் கேட்டது 'த்' போட்டு எழுதினாலோ என்று? ஏனென்றால், இந்த ஒற்று இல்லைனா, பொருள் மாறுவதுண்டே.
உதாரணத்திற்கு. நான் எபி யில் என் மாமியார் சொல்லும் செய்முறை ஒன்று எழுதினேன். பாகற்காய் உப்புசார். அவர் உப்புசார் என்றே தான் சொல்வார். நானும் அப்படியே எழுதிவிட்டேன். அங்கு ஒற்று வரும் என்று தெரிந்தாலும்.
பதிவின் கருத்தில் நெல்லையும் ஸ்ரீராமும், உப்புச்சார் என்றில்லாமல் உப்புசார் எனும் போது உப்பு என்றாகிவிடுமே பொருளே மாறுமே. அப்பவும் நான் சொல்லியிருந்த நினைவு என் மாமியார் அப்படிச் சொல்லிச் சொல்லி எனக்கும் அப்படியே எழுத்திலும் வந்துவிட்டது என்று. அது போலத்தான் இதுவும்.
சென்னையில் தீவுத்திடல் தான் அக்கா. அது ஏன் அப்படி வந்தது என்றால், கூவம் ஆறு இரண்டாகப் பிரிந்து நடுவில் இருந்த மேட்டுப் பகுதி என்பதால். வரைபடத்தில் பார்த்தால் தெரியும். ஆனா கூவம் இப்ப எங்கே இருக்குன்னு தேடணும். மாண்டியாவிலும் காவிரி ஆங்காங்கே இரண்டாகப் பிரிந்து தீவுகளை ஏற்படுத்திருக்கு.
மேட்டுப் பகுதி திட்டு தான்.
//பறவைகள் படங்கள் நன்றாக இருக்கின்றன. காணொளியும் பார்த்து ரசித்தேன். அடுத்து வரப்போகும் இடத்தைக் காண ஆவலாக உள்ளேன்.//
நன்றி கமலாக்கா
கீதா
திட்டு என்பதற்கு ஒரு மேடான பகுதி என்று பொருள் என்று தெரியும்தான். சும்மா சொல்லிப் பார்ப்பதுதானே! ரங்கனதிட்டு ரங்க னதிட்டு ரங்கன் திட்டு என்றெல்லாம் கூட உச்சரிக்கலாமோ என்னவோ...
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம், ரங்கன் திட்டு என்றால் நல்லாருக்கும் இல்லை? ஆனா எல்லா இடத்திலும் இப்படி ரங்கனதிட்டு என்று அது கன்னடத்தில் அப்படிச் சொல்லி இருப்பதால் தமிழிலும் அப்படிச் சொல்வதால் ...சரி நாம மாத்தி இடத்தின் பெயரில் குழப்பம் வந்துவிடாமல் இருக்கணுமே என்று, கூடலூர் என்று இரண்டு இடங்கள் இருக்கு அதாவது தமிழில் எழுதும் போது....Gudalur இது ஊட்டி, கேரளா, கர்நாடகா எல்லையில் இருக்கு...தமிழில் கூடலூர்னு சொல்லறாங்க குடலூர் னு எழுதலாம் தான்.
நீக்குஅது போல தருமபுரி மாவத்தில் ஒரு கூடலூர் இருக்கு கிராமம்.
நன்றி ஸ்ரீராம்
கீதா
சலீம் அலி காட்சி அருமையாய் இருக்கிறது. உள்ளே தத்ரூபமாக பறவைகள்.
பதிலளிநீக்குஆமாம் தத்ரூபமாக...சின்ன ஹால் தான் ஸ்ரீராம். ஆனால் இருக்கும் இந்தச் சிறிய ஹாலில் பொம்மை வடிவங்கள் ரொம்ப அழகாக இருந்தன.
நீக்குகீதா
ஆட்டோக்காரரிடம் இருபது ரூபாய் இருக்காதா? அனால் நடை நல்லதுதான். ஒரு கிலோமீட்டர் இருக்குமா இடையே இருந்த தூரம்? நாசி இருந்திருந்தால் கொடுத்துட்டு வாங்க, நான் தந்துடறேன் என்று சொல்லி உள்ளே அழைத்திருப்பார்!
பதிலளிநீக்குஅவரிடம் காசு இல்லையோ இல்லை கொடுக்க விருப்பமில்லையோ. நாங்க தந்துடறோம் என்றும் சொன்னோம். ஆனாலும் அவர் அங்கு வரச் சொன்னார். நடை நல்லதுதான். 1 கிமீ எல்லாம் இல்லை ஸ்ரீராம். காணொளி பார்த்தீங்களஆ? அதுல தெரியும் செக்போஸ்ட் நு நினைக்கிறேன். சரணாலயம் நுழைவு வாயிலில் இருந்து ஒரு 5 நிமிட நடைதான்.
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
போகும் வழியில் பசுமைக் காட்சிகள் கவர்கின்றன. காவிரி பாயும் கன்னி கர்னாடக நாடு...!
பதிலளிநீக்குஆமாம் மெயின் ரோட்டிலிருந்து அதாவது சரணாலயத்துக்கான வளைவு மாநில ஹைவேயில் இருந்து உள்ளே நுழைந்ததுமே ஒரு பக்கம் காவிரியின் பெண் பிள்ளை கூடவே வருவாள் போட்டிருந்தேனே வீடியோ....அதன் பின் உள்ளே சரணாலயம் நுழைவுக்குள் வந்ததும் பசுமைதான் இரு புறமும்.
நீக்குகீதா
திட்டு என்றால் நீர் நிலையில் இருக்கும் ஒரு சிறிய நிலப் பரப்புஎன்பது உங்களுக்குத் தெரியாமலா இருக்கும், சும்மா உல்லலாங்கட்டிக்கு விளையாடியிருக்கிறீர்கள். படங்களும் பதிவும் அருமை!
பதிலளிநீக்குபெயரில்லா யார்? பானுக்காவா?
நீக்குஹாஹாஹா இல்லை பெயரில்லா, அது அர்த்தம் தெரியாமல் இல்லை. எழுதுவது பற்றி....கமலாக்காவுக்குக் கொடுத்திருக்கும் பதிலில் சொல்லியிருக்கிறேன்.
நன்றி
கீதா
திட்டு என்பது தமிழ் சொல்தான், மணல் மேட்டின் பெயராக திட்டு என்று கூறுவர். ரங்கனுடைய திட்டு என்பது ரங்கன் திட்டு என்றாகி கன்னடத்தில் ரங்கன திட்டு என்றாகி விட்டது, சோமன துதி போல. "சோமன துதி" படம் பாருங்கள்.
பதிலளிநீக்குபோட்டோக்களும் விடியோவும் சுமார் தான். அடுத்த பதிவில் தொடர் முடியுமா?
Jayakumar
அண்ணா, திட்டு என்பதன் பொருள் தெரியும். ரங்கனின் இடம் என்பதாலும் அது ரங்கனதிட்டு என்றானதும் தெரியும். என் கேள்வி இடையில் ஒற்று வருமா என்பதே. அதாவது தமிழில் எழுதும் போது. ஒற்று வந்தால் ரங்கன திட்டு என்று திட்டாத பொருள் வருமா என்று உப்புசார், உப்புச்சார் என்ற இரண்டிக்கும் இருக்கும் வேறுபாடு போன்று!
நீக்குகோவில் படங்கள், சிற்பங்கள் இருக்கிறதே அண்ணா. அதனிடையில் ஒரு இடம்...உள்ளே சென்று பார்க்கவில்லை ஆனால் வெளிப்புறத்தில் இருந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். அந்த இடம் மற்றும் அதன் வரலாறு ஒன்று, அந்தக் குடும்பத்தின் இப்போதைய தலைமுறை அந்த இடத்தோடான தங்கள் பந்தம் என்று எழுதியிருக்கும் ஒன்று பகிரலாம் என்று நினைத்துள்ளேன். பார்ப்போம்.
நன்றி அண்ணா
கீதா
அண்ணா, திட்டு என்பதன் பொருள் தெரியும். ரங்கனின் இடம் என்பதாலும் அது ரங்கனதிட்டு என்றானதும் தெரியும். என் கேள்வி இடையில் ஒற்று வருமா என்பதே. அதாவது தமிழில் எழுதும் போது. ஒற்று வந்தால் ரங்கன திட்டு என்று திட்டாத பொருள் வருமா என்று உப்புசார், உப்புச்சார் என்ற இரண்டிக்கும் இருக்கும் வேறுபாடு போன்று!
நீக்குகோவில் படங்கள், சிற்பங்கள் இருக்கிறதே அண்ணா. அதனிடையில் ஒரு இடம்...உள்ளே சென்று பார்க்கவில்லை ஆனால் வெளிப்புறத்தில் இருந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். அந்த இடம் மற்றும் அதன் வரலாறு ஒன்று, அந்தக் குடும்பத்தின் இப்போதைய தலைமுறை அந்த இடத்தோடான தங்கள் பந்தம் என்று எழுதியிருக்கும் ஒன்று பகிரலாம் என்று நினைத்துள்ளேன். பார்ப்போம்.
நன்றி அண்ணா
கீதா
ந நாப் போட்டால் ஒரு சொல்லாகாது என நினைக்கிறேன் கீதா... தங்கப்ப தக்கம் போலாகிடும்.. ரங்க நதிட்டு என்பதுபோல வரும் ஹா ஹா ஹா.
பதிலளிநீக்குஇரு வீடியோக்களும் பார்த்தேன், வயல்வெளி அருகே ஒரு ஒற்றைவழி... அடர்ந்த மரங்களூடான பாதை.. அழகோ அழகு.
தமிழறிஞர் அதிரா சொன்னா சரியாகத்தானே இருக்கும்!!!!!
நீக்குநன்றி அதிரா இரு வீடியோக்களும் பார்த்ததுக்கும் ரசித்ததற்கும்.
அதுசரி இந்த அன்னபூரணிய விடவே மாட்டீங்காளோ!!!!!
இப்பலாம் அன்னபூரணின்னு பார்த்தாலோ கேட்டாலோ, தெய்வம் நினைவுக்கு வராம டக்குனு இப்படிச் சொல்லிக்கிட்டு தமிழ்நாட்டுல ஏமாத்திட்டுருக்கறவங்கதான் சட்னு நினைவுக்கு வராங்க பாருங்க மீடியா மனசை எப்படி ஆக்குதுன்னு!!
கீதா