புதன், 30 நவம்பர், 2022

காசர்கோட் கலோல்சவம் - பகுதி - 3

 

அடுத்த நாள் காலை (4-9-2022) அபிராமியின் நாட்டுப்புற நடனத்திற்கு மேக்கப்-ஒப்பனை இட அதே ஹாலைபெரிய அறையை அடைந்தோம்.


அன்வர் சார், உதவியாளர்களுடன் மேக்கப்ஒப்பனை செய்யத் தொடங்கினார். ஒப்பனை முடிந்ததும், மேடை ஏற அபிராமிக்கான நேரத்திற்காகக் காத்திருந்தோம்நேரமும் வந்தது. அபிராமி நன்றாகவே நாடோடி நடனத்தைச் செய்து முடித்தாள்

மகள் அபிராமியின் நாட்டுப்புற நடனம் ஒரு சிறிய பகுதி இணைத்துள்ளேன். நேரமிருந்தால் பாருங்கள். முதல் பரிசு கிடைத்தது.
நாட்டுப்புற நடனம் முழு காணொளி
எல்லா நாடோடி நடனங்களும் (இங்கு) பழைய கால மேலாளர்கள், கீழாளர்களுக்கு இழைத்த அநீதி பற்றியவையே. மற்ற எல்லா நடனங்களும் அதாவது குச்சிப்புடி, பரதநாட்டியம், மோகினியாட்டம் போன்றவை இறையைத் துதிப்பதும், போற்றிப் புகழ்வதுமாக இருக்கும் போது நாடோடி நடனம் மட்டும் இப்படிக் கசப்பான கடந்த கால உண்மைகளைச் சொல்லும் நிகழ்வுகளை நினைவூட்டுவையாகவே இருக்கின்றன.

பேக்கல் கோட்டை நுழைவு வாயில்

இடையில் மதிய உணவு உண்டபின், இனி மறுநாள் தான் அபிராமிக்கு அடுத்த நிகழ்ச்சி என்பதால் நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து ஏறத்தாழ 10 கிமீ தொலைவிலிருக்கும் பேக்கல் கோட்டைக்குச் செல்ல முடிவு செய்தோம்.


தங்கியிருந்த வீட்டின் அறைக்குச் சென்று உடைகளை மாற்றிவிட்டுப் போக முடிவு செய்து கல்லூரியின் வாயிலை நெருங்கிய போது நடந்து முடிந்த நாடோடி நடனத்தில் அபிராமிக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது என்ற அறிவிப்பு காதில் தேனாய் பாய்ந்தது.  


மகிழ்ச்சியுடன் பேக்கல் கோட்டைக்குப் பயணித்தோம்.  வண்டியை நிறுத்தும் இடத்தில் நிறுத்திய பின்நுழைவுச் சீட்டு எடுத்து கோட்டைக்குள் நுழைந்தோம்
பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும் என்று நினைக்கிறேன். வரலாறு

பத்தாம் நூற்றாண்டிற்கு முன் கதம்பராஜ வம்சமும் அதன் பின் மூஷிக ராஜ வம்சமும், அதன் பின் கோலத்திரி மன்னர்களும் (இந்தக் கோலத்திரி என்ற பெயர் பார்த்ததும், ஜெயகுமார் சந்திரசேகரன் சார் மொழிபெயர்த்து, எங்கள் ப்ளாகில் செவ்வாய் அன்று வெளி வந்த கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய கதைகளின்  ஒரு பகுதியில் இந்த மன்னர்கள் இடம் பெற்ற கதை உங்களுக்கு நினைவுக்கு வரலாம்) இந்தப் பிரதேசத்தை ஆண்டிருக்கிறார்கள்.
இந்த  மூன்று படங்களும் இணையத்திலிருந்து


தளிப்பரம்பில் உள்ள ராஜராஜேஸ்வரர் ஆலயம். நன்றி : கேரளா சுற்றுலா, விக்கி, இணையம்

இதனிடையே சோழர்களின் ஆட்சியிலும் இப்பிரதேசம் இருந்திருக்கிறது. தளிப்பரம்பு எனுமிடத்தில் உள்ள ராஜராஜேஸ்வரர் ஆலயம் அதற்கு ஒரு ஆதாரம்.  அதன் பின் விஜயநகரப் பேரரசின் பாகமாயிருந்திருக்கிறது. 1565-ல் நடந்த தளிக்கோட்டைப்  போருக்குப் பின் இப்பிரதேசம் பட்னூர் (Butnoor) அரசர்கள் ஆண்டிருக்கிறார்கள். 1650-ல் இக்கேரி நாயக்கர் இந்த பேக்கல் கோட்டையைக் கட்டியதாகவும் புதுப்பித்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதன் பின் 1763 ஆம் ஆண்டு மைசூரை ஆண்ட ஹைதர் அலி இதைக் கைப்பற்றியிருக்கிறார். 1791-ல் நடந்த போரில் அவரது மகனான திப்பு சுல்தானிடமிருந்து இதைக் கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றியிருக்கிறது.  1921 முதல் இந்திய தொல்லியல் துறையால் இக்கோட்டை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இக்கோட்டை முழுவதும் வெட்டுக்கல்லால் கட்டப்பட்டது என்பது இதன் தனிச் சிறப்பு. (வெட்டுக்கல் பற்றி காசர்கோடு முதல் பதிவில் சொல்லியிருக்கிறேன்)

கோட்டைக்குள் இப்படி அங்கிங்கிங்காய் கிணறுகள்

கோட்டைக்குள் அங்கிங்காய் கிணறுகளும், அதனுள் இறங்கிச் செல்லும் படிக்கட்டுகளும் இப்போதும் சேதமேதும் ஏற்படாமல் இருப்பது அதிசயமே.

கோட்டையிலிருந்து கடலை கண் காணிக்க சுவர்களில் எல்லா இடத்திலும் சின்ன இடைவெளி இருக்கிறது. காவலர்கள் இரவும் கலும் இதன் வழியாகத்தான்  இங்கிருந்து கண்காணித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

கீழே கடற்கரைக்குச் செல்ல பாதைகளும், அவற்றைப் பாதுகாக்க கதவுகளும் இருக்கின்றன.  நீண்ட தூரம் நடந்ததால் சிறிது நேரம் அங்கு ஓய்வெடுத்தோம்.

அதன் பின் பேக்கல் கோட்டைக்கு மிக அருகாமையில் உள்ள கடற்கரைக்குச் சென்றோம்.

பேக்கல் கோட்டைக்கு மிக அருகில் இருக்கும் பேக்கல் கடற்கரை மற்றும் பூங்கா

உள்ளே செல்ல நுழைவுச் சீட்டு எடுக்க வேண்டும். வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கும்  தனியாகக் கட்டணம் உண்டு.

ஸ்லிங்க் ஷாட் சவாரி
உள்ளே ஒரு ஸ்லிங்க் ஷாட் சவாரிSling Shot Rideஇருக்கிறது.  ரோப் வேயில் தனிமனிதனாகத் தொங்கியபடி பயணிக்கும் ஒரு சவாரி. இளைஞர்களும் இளம் பெண்களும் ரூ 200 கொடுத்து அதில் தொங்கிச் சென்று தங்களது துணிச்சலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிப்பே ஏற்படாது

கடற்கரையில் சீறிவரும் கடல் அலைகளின் அருகாமையில் நின்று தொடுவானம் வரை நீண்டு நிற்கும் கடலை எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிப்பே ஏற்படாதுதான்.
மீன்களுடன் வரும் இயந்திரப் படகுகளைக் கரைக்கு இழுத்துச் செல்லும் டிராக்டர்கள். குரல்கள் எடிட் செய்யவில்லை.  கீழே கொடுத்திருக்கும் யுட்யூப் முழு காணொளியில் குரல்கள் கொஞ்சம் எடிட் செய்யப்பட்டு என் குரலில் விளக்கம்
அருகே மீனவர்கள் குடியிருப்பு இருந்தது. அந்த மாலைப் பொழுதில் கடலிலிருந்து பிடித்த மீன்களுடன் வரும் இயந்திரப்படகுகளையும் அவற்றைக் கரைக்கு இழுத்துச் செல்லும் டிராக்டர்களையும் கண்டதும் அதனருகே போனோம். அந்தப் படகுகளில் கொண்டுவரப்படும் மீன்களை வாங்க அலுமினிய பாத்திரங்களுடன் காத்திருக்கும் பெண்கள்.  அவர்களுக்கு இது ஒரு புதுமையில்லா காட்சி என்றாலும் எங்களுக்கு இது மிகவும் அரிய காட்சியாக அமைந்தது.

ஓயாத திரை அலை தவழும் இந்தக் கரைக்கு இக்கடல் வழியே யாரெல்லாம் எங்கிருந்தெல்லாம் வந்திருக்கக் கூடும்!  இனியும் இக்கடல் அலை தவழும் கரை என்னென்ன நிகழ்வுகளை சந்திக்கப் போகிறதோ எதிர்காலத்தில்?


தொடுவானத்தில் மறைந்த கதிரவன், வானத்திற்குச் சந்தனமும் குங்குமமும் கலந்து பூசிக் கொண்டிருக்க, நாங்களும் தூரத்தில் தெரியும் பேக்கல் கோட்டைக்கும், கடற்கரைக்கும் விடை சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம்.

நாடோடி நடனத்தில் முதலிடம் கிடைத்தது பற்றி செய்தித்தாளில் 

அடுத்த நாள் காலை நாளிதழில், நாடோடி நிருத்தத்தில் முதலிடம் பெற்ற அபிராமியின் புகைப்படத்துடன் செய்தியும் வந்திருந்தது.
கதா பிரசங்கம் - காணொளியின் சிறிய பகுதி. நேரமிருந்தால் பார்க்கவும்

அன்றைய கதாபிரசங்கம் எனும் நிகழ்ச்சிக்கு ஒப்பனை தேவையில்லை.  அபிராமியின் கல்லூரியிலிருந்து இரண்டு தோழிகள் இசைக்கருவிகளை மீட்ட வந்திருந்தனர்.  அப்படி அபிராமியின் கதாபிரசங்கம் எனும் கதாகாலட்சேபமும் முடிவடைந்தது. 

அங்கிருந்து, எங்கள் ஊருக்கு 9 மணி நேரம் பயணம் என்பதால், நேரத்தை வீணாக்காமல், தங்கியிருந்த வீட்டின் அறைக்குச் சென்றோம்.  ஹோம் ஸ்டே – Home Stay – க்குப் பணம் எதுவும் வேண்டாம் என்று நாங்கள் தங்கியிருந்த அந்த வீட்டின் அம்மா சொன்னதால், இரண்டு சேலைகளை வாங்கி எங்களுக்கு மூன்று நாட்கள் தங்க உதவிய அந்த அன்புத் தாய்க்கும், மகளுக்கும் கொடுத்தோம்.

இறைவன் இது போல் நமக்கு உதவவும், பேசவும், பழகவும் காண்பிக்கும் நல்ல உள்ளங்கள் நம் உள்ளத்தில் எப்போதும் ஒளி வீசிக் கொண்டிருப்பார்கள்தானே!.

மனதிற்கு இதமளிக்கும் இனிய நினைவுகளைச் சுமந்தபடி கலோல்சவம் நடந்த கல்லூரியைத் தாண்டி வீடு நோக்கிப் பயணமானோம்.

பதிவின் முழு காணொளி இதோ. பதிவில் இல்லாத காணொளிகள் மற்றும் என் குரலில். பதிவு பார்க்க முடியாதவர்கள் காணொளியைக் காணலாம்.

https://youtu.be/tD5sBYZGedo


----துளசிதரன்



44 கருத்துகள்:

  1. கொட்டாரத்தில் சங்குண்ணி!..

    இங்கேயுமா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கதைகளும் ஒரு காலத்தில் இருந்தவைதானே! மாந்த்ரீகங்கள் போன்றவை எல்லா இடங்களிலும் இலக்கியங்களிலும் இருப்பவைதானே.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      துளசிதரன்

      நீக்கு
  2. வரலாற்றுச் செய்திகளுடன் அழகான படங்கள்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி துரை செல்வராஜு சார்

      துளசிதரன்

      நீக்கு
  3. காணொளிகள் பிறகு தான் பார்க்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா, வணக்கம். இதற்கு முந்தைய என் பதிவைப் பார்க்க விட்டுப் போய்விட்டதா....

      கீதா

      நீக்கு
    2. மெதுவாக நேரம் கிடைக்கும் போது பாருங்கள் சார்

      துளசிதரன்

      நீக்கு
  4. நாடோடிக் கதைகள், நாட்டியங்கள், பாடல்கள் நடந்த நிகழ்வைத் தெரிவிக்கும் சமகாலப் படைப்புகள் என்பதால் உண்மை மிகுந்திருக்கும்.

    மகளுக்கு முதல் பரிசு கிடைத்ததற்குப் பாராட்டுகள்.

    இது ஆந்திரா பயணமா இல்லை... ஓ கல்லூரிப் போட்டிகள்... என்று என்னைக் குழம்பும்படியாக, ஒவ்வொரு பதிவுக்கும் பலகால இடைவெளி விடுவது கீதா ரங்கன் வழக்கமாகிவிட்டது.

    தஞ்சைக் கோயிலின் அச்சு போல்ல்லவா இருக்கிறது. படம் தவறாகப் பதியப்பட்டிருக்கிறதோ?

    பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா நெல்லைக்கு என்னை வம்புக்கு இழுக்கலைனா தூக்கமே வராதே....ஹலோ நான் ஒன்னும் சும்மா இருக்கலை பெண்களாகிய எங்களுக்கு வீட்டில் எவ்வளவு பிரச்சனைகள், சூழல், வேலைகள் எல்லாம் அனுசரிச்சுதானே போட முடியும்.....சரியா எழுதாம டக் டக்னு போடவா முடியும்!!!!!!! இதை ஆண்கள் புரிஞ்சுக்கணும்...

      முதல்ல் இந்தப் பதிவு துளசியோடது. என் பதிவு இல்லை. அவரிடம் தலைப்பு என்ன போடவேண்டும் யுட்யூபிற்கு இப்படி ஒவ்வொண்ணா கேட்டு ....

      ரெண்டாவது ஒரு பாயின்ட் ஒத்துக்கறேன் நான் விசாகப்பட்டினம் போட லேட் ஆச்சு உங்களுக்கே தெரியும் என் பிரச்சனைகள்......சோ துளசியின் இந்தப் பதிவை நான் டைப்பி படங்கள் காணொளிகள் எல்லாம் எடிட் செய்து அவர் குரல் இணைத்து அப் லோட் செய்ய எனக்கு நேரம் எடுத்தது. என்னைச் சார்ந்து ஒருவர் இருக்கறப்ப நான் இவ்வளவாவது செய்யறேனே!!!!!!! அதைப் பார்க்கணுமாக்கும்!!!!!! கேட்டேளா!!! தட்டிக் கொடுக்கணுமாக்கும்!!!ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    2. தஞ்சைக் கோயிலின் அச்சு போல்ல்லவா இருக்கிறது. படம் தவறாகப் பதியப்பட்டிருக்கிறதோ?//

      இல்லை நெல்லை, இணையத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான் துளசியின் பதிவு அவருக்குத் தெரிந்த இடமும் கூட. ...இந்த இடம் தளிப்பரம்பா கண்ணூரில் இருக்கிறது. (கண்ணூரில்தானே துளசியின் மகள்

      முன்பே ஒரு பதிவில் துளசி இப்படி சோழர்களின் செப்பேடு இங்கெல்லாம் கிடைத்தது என்ற தகவலை ஏதோ ஒரு பதிவில் சொல்லியிருப்பார். எனக்குப் பதிவு நினைவில்லை அவருக்கு நினைவிருக்கும்...

      கீதா

      நீக்கு
    3. நெல்லை மூன்றாவது அப்டம் சொல்றீங்களோ....அது தவறுதலா வந்திருக்கு நான் டவுன்லோட் செய்ததில் அதுவும் இருந்து க்ளிக் பண்ணும் போது மாட்டிக்கிச்சு இப்பத்தான் சரியா கவ்னிக்கிறேன்....

      இதோ மாற்றிவிட்டேன் கோயில் முகப்புப் படம்...

      கீதா

      நீக்கு
    4. துளசியும் படம் மாறியிருப்பது பத்தி இப்ப சொல்லி அதைப் பார்த்தப்பதான் தவறு புரிந்தது உங்க கருத்து பார்த்துட்டு அப்பாவை எக்ஸர்சைஸ் செய்ய தெருவில் வாக்கிங்க் அழைத்துப் போகப் போய்ட்டேன்....

      கீதா

      நீக்கு
    5. அபிராமியின் நாடோடி நடனம் காணொளி பார்த்தேன்... அந்த எனெர்ஜி, அவ்வளவு நேரம் ஆடியது மிகவும் கஷ்டமான ஒன்று. நல்ல திறமை. பாராட்டுகள். பத்திரிகைப் பக்கத்தை பத்திரமாக்கி வைக்கச்சொல்லுங்கள்.

      நீக்கு
    6. //நான் இவ்வளவாவது செய்யறேனே!!!!!!! அதைப் பார்க்கணுமாக்கும்!!!!!! // - உண்மைதான் கீதா ரங்கன். நான் உங்கள் இடத்தில் இருந்திருந்தால், இணையத்துக்கு வருவதே சந்தேகம். அதிலும் பதிவு எழுதறதா? ஆளை விடுங்க சாமியோவ் என்றிருப்பேன். உங்கள் உழைப்பு மிக அதிகம். வாழ்த்துகள்

      நீக்கு
    7. கொஞ்சம் வயதானவர்கள், அதாவது 50+ என்ன என்ன உடற்பயிற்சிகள் செய்யணும், எவ்வெவற்றில் கவனமாக இருக்கணு என்ற பதிவு, எனக்கு 80+ ஆவதற்குள் வந்துவிடுமா? அதாவது உங்களுக்கு 100 வயது ஆவதற்குள் வந்துவிடுமா?

      நீக்கு
    8. உண்மைதான் கீதா ரங்கன். நான் உங்கள் இடத்தில் இருந்திருந்தால், இணையத்துக்கு வருவதே சந்தேகம். அதிலும் பதிவு எழுதறதா? ஆளை விடுங்க சாமியோவ் என்றிருப்பேன். உங்கள் உழைப்பு மிக அதிகம். வாழ்த்துகள்//

      நெல்லை அண்ணே/தம்பி நன்றியோ நன்றி!! ஆனா நானும் உங்களை மாதிரி உங்களை வம்புக்கு இழுத்தேன்!!! ஹிஹிஹிஹி....என்னைப் பத்தி எல்லாம் சொல்லிக்கலையாக்கும்!!!!!

      //கொஞ்சம் வயதானவர்கள், அதாவது 50+ என்ன என்ன உடற்பயிற்சிகள் செய்யணும், எவ்வெவற்றில் கவனமாக இருக்கணு என்ற பதிவு, எனக்கு 80+ ஆவதற்குள் வந்துவிடுமா? அதாவது உங்களுக்கு 100 வயது ஆவதற்குள் வந்துவிடுமா?//

      ஹையோ சிரிச்சு முடிலைப்பா சாமி!!! வந்துரும் வந்துரும்....கண்டிப்பா வந்துரும் விசாகப்பட்டினம் இன்னும் ஒன்றே ஒன்று .....முடிந்ததும் வந்துவிடும்.....மீதியை வெறும் படங்கள் தலைப்பில் போட்டுடுவேன்....நிறைய பதிவுகள் இருக்கு நெல்லை....

      துளசி வேறு நீங்கள் கேட்டுக் கொண்ட ஒரு பதிவுக்கு படங்கள் எல்லாம் ரெடி பண்ணிவிட்டார் அவரும் எழுதணும். ரொம்ப பிஸி.

      கீதா

      நீக்கு
    9. நாடோடிக் கதைகள், நாட்டியங்கள், பாடல்கள் நடந்த நிகழ்வைத் தெரிவிக்கும் சமகாலப் படைப்புகள் என்பதால் உண்மை மிகுந்திருக்கும்.//

      ஆமாம். ஆனால் அங்கு பங்குபெற்றவை பெரும்பாலும் எல்லாமே பழைய காலப்பாடல்கள். என்றாலும் நீங்கள் சொல்லுவது போல் உண்மை மிகுந்தவை.

      மகள் பரிசு பெற்றதறை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      //தஞ்சைக் கோயிலின் அச்சு போல்ல்லவா இருக்கிறது. படம் தவறாகப் பதியப்பட்டிருக்கிறதோ?//

      கீதா மாற்றிவிட்டார். பதிலும் கொடுத்திருக்கிறார்.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழன். நீங்கள் முன்பு ரப்பர் பற்றி கேட்ட ஒன்று நினைவில் இருந்ததால் அதைப் பற்றிய பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது.

      துளசிதரன்

      நீக்கு
    10. நெல்லைத்தமிழன், கோபுரம் உள்ள கோயில் மாற்றும் முன் இருந்தது பற்றி எனக்கும் சந்தேங்கம் வந்து கீதாவைக் கேட்டதும்தான் அவர் வெளியிடும் போது மாறியது பற்றித் தாமதமாக உங்கள் கருத்தைக் கண்டு கவனித்திருக்கிறார்.

      தளிப்பரம்பு கோயிலில் கோபுரம் தற்போது இல்லை. இங்கு மட்டுமில்லை திருவஞ்சிக்களம் எனுமிடத்திலும் கோபுரம் இல்லை....விழுந்ததா இல்லை புதுப்பிக்க இடித்து பின்பு புதுப்பிக்கப் படாமல் கிடக்கிறதா என்று தெரியவில்லை. தஞ்சை கோயில் போல் கட்டி பிற்காலத்தில் பராமரிப்பில்லாமல் இடிந்திருக்கலாம். தளிப்பரம்பில் ஒரு கிருஷ்ணன் கோயில் (திருசம்பரம்) தான் பிற்காலத்தில் பராமரிக்கப்பட்டது. இப்போதும் வைஷ்ணவத்திற்குத்தான் முக்கியத்துவம் கேரளத்தில்.

      துளசிதரன்

      நீக்கு
  5. இன்றைய பதிவு வித்தியாசமாக ஒரு கதம்பமாக இருக்கிறது. கட்டுரை, பாட்டு, டான்ஸ், சரித்திர பொக்கிஷம், கூடவே புகைப் படங்கள், காணொளி, மற்றும் ஒரு புதிய செய்தியாக (பொன்னியின் செல்வன் தாக்கத்தில்) ராஜ ராஜேஸ்வரன் கோயில் தளிபரம்பில்  இருப்பதையும் காண முடிந்தது. 

    பதிவைக் கொஞ்சம் எடிட் செய்து இரண்டு பகுதிகளாக செய்திருக்கலாம். 
    சிறப்பான பதிவு. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அவ்வண்ணமே நினைத்த்தேன்!

      நீக்கு
    2. பாராட்டிற்கு மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார்.

      இரண்டாகப் போட்டிருக்கலாம். ஆனால் பதிவுகள் வெளியாகத் தாமதம் ஏற்படுவதால் கீதாவின் பதிவுகளும் வர வேண்டும் என்பதால் இப்படிப் போட அவருக்கு அனுப்பிக் கொடுத்துவிட்டேன்.

      தளிப்பரம்பில் ராஜாராஜேஸ்வரன் கோயில் இருக்கிறது. ஆனால் சிதைந்த நிலையில். கோபுரம் எதுவும் இல்லை.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார்

      துளசிதரன்

      நீக்கு
    3. ஸ்ரீராம்ஜி உங்கள் கருத்திற்கும் நன்றி. பதிவு பெரிதாக இருப்பதைப் பற்றியும் என்றால் உங்களுக்கும் ஜெயக்குமார் சந்திரசேகரன் சாருக்குச் சொன்ன பதிலில் சொல்லியிருக்கும் அதே காரணம்தான்.

      துளசிதரன்

      நீக்கு
  6. காணொளிகள் அருமை...

    மகளுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகளைக் கண்டதற்கும், மகளை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி டிடி

      துளசிதரன்

      நீக்கு
  7. படங்கள், காணொளிகள் சிறப்பாக உள்ளது.

    முதலிடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவையும், காணொளிகளைக் கண்டும் சிறப்பாக உள்ளது என்று சொன்னதற்கு மிக்க நன்றி கில்லர்ஜி.

      மகளை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி

      துளசிதரன்

      நீக்கு
  8. //ஹோம் ஸ்டே – Home Stay – க்குப் பணம் எதுவும் வேண்டாம் என்று நாங்கள் தங்கியிருந்த அந்த வீட்டின் அம்மா சொன்னதால், இரண்டு சேலைகளை வாங்கி எங்களுக்கு மூன்று நாட்கள் தங்க உதவிய அந்த அன்புத் தாய்க்கும், மகளுக்கும் கொடுத்தோம்.// - பொருத்தமான gesture, இரண்டு பக்கத்திலிருந்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொருத்தமான gesture, இரண்டு பக்கத்திலிருந்தும்.//

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன். அவர்கள் மிகவும் அன்பாக உபசரித்தார்கள். நாங்கள் இப்படி ஏதேனும் ஹோம்ஸ்டே செய்யும் போது இப்படிச் செய்வதுண்டு.

      துளசிதரன்

      நீக்கு
  9. அருமையான காணொலிகள்
    தங்களின் அன்பு மகளுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்திற்கும், மகளை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி நண்பர் கரந்தையார்

      துளசிதரன்

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்களும், காணொளியும் நன்றாக உள்ளது. கல்லூரி விழாவில் தங்கள் மகள் ஆடும் நாட்டுப்புற நடனம் காணொளியை பார்த்தேன். மிக நன்றாக ஆடுகிறார். அந்த நடனத்திற்கு முதல் பரிசு பெற்ற தங்கள் மகளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். மறுநாள் வெளிவந்த அவ்வூர் பத்திரிக்கைகளிலும், அவரின் நடனச் செய்தியை குறிப்பிட்டு அவரை பாராட்டியமைக்கு மிகுந்த சந்தோஷமடைந்தேன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவருக்கு மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை அவரிடம் கூறுங்கள். .

    பேகல் கோட்டை படங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு தெளிவாகவும், அதை பற்றி வெளியிட்ட செய்திகள் அவ்வளவு விளக்கமாகவும். உள்ளது. மலையாள பூமியே என்றும் வனப்பு மிக்கதுதான். ராஜராஜேஸ்வரம் கோவில், மேலும் சரித்திரச் செய்திகள் பற்றியும் தெரிந்து கொண்டேன். கோலத்திரி என்ற பெயரை படித்ததும் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களின் ஐதீக மாலை பகுதி நினைவுக்கு வந்தது. நிறைய விஷயங்களை தந்துள்ளீர்கள். நன்றி.

    பேகல் கோட்டை படங்கள், அதன் அருகே உள்ள பூங்கா, கடற்கரை படங்கள் அனைத்துமே நன்றாக எடுத்துள்ளீர்கள்.

    கடல் அலைகளை எவ்வளவு நேரமானாலும் ரசிக்கலாம். அந்தப்படமும், செவ்வானத்தில் சூரியனின் வர்ண ஜால படத்தையும் மிகவும் ரசித்தேன்.

    பதிவில் சகோதரி, கீதா ரெங்கன் அவர்களின் உழைப்பு தெரிகிறது. அவரின் வேலை நேரங்களுக்கு நடுவே பதிவைப் பற்றிய அவரின் அக்கறை முழுதுமாக பதிவில் தெரிகிறது. அருமையான செய்திகளை தொகுத்து தந்த தங்களுக்கும், இதைப் பார்த்து பதவிசாக வெளியிட்ட சகோதரிக்கும் என மனமார்ந்த வாழ்த்துகள். நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை ரசித்து விரிவாகக் கருத்து கொடுத்ததற்கும், மகளைப் பாராட்டி வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.

      பேகக்கோட்டையைப் பற்றிய விவரங்களை ரசித்து வாசித்ததற்கும் படங்களைப் பாராட்டியதற்கும் மிக்க நன்றி.

      ஆமாம். என் பதிவுகளை கீதா தட்டச்சு செய்து, படங்கள் காணொளிகளை எடிட் செய்து இங்கு வெளியிடுவதாலும், மற்ற தளங்களில் என் கருத்துகளை, இங்கு என் பதில்களையும் தமிழிலாக்கிக் கொடுப்பதால்தான் உங்கள் எல்லோருடனும் தொடர்பில் இருக்க முடிகிறது. இறுதிவரை மறக்காதிருக்கத்தான் வேண்டும்.

      உங்கள் விரிவான கருத்திற்கும் மகளை வாழ்த்தியதற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.

      துளசிதரன்

      நீக்கு
  11. மகள் அபிராமியின் நாட்டியம் கண்டேன்.  அருமை.  முதலிடம் பெற்றது மகிழ்ச்சி.  படிக்கும் காலத்தில் பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொள்வது பாராட்டத்தக்கது.பேக்கல் கோட்டை பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம்.  முழு கோட்டையாக பார்ப்பதற்கே ஆவலை தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளைப் பாராட்டி வாழ்த்தியதற்கும், பதிவை ரசித்ததற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி. கோட்டையைப் பார்க்க எங்கள் ஊருக்கு வாருங்கள், ஸ்ரீராம்ஜி. அழைத்துச் செல்கிறேன்.

      துளசிதரன்

      நீக்கு
  12. அபிராமியின் நடனத்தைப் பார்க்க நேரம் ஒதுக்கி வாழ்த்தும் சொன்னது பெரும்ப பாக்கியம். நட்புகள் எல்லோருக்கும் மிக்க நன்றி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  13. "பேக்கல்" கோட்டையைப்பற்றி இப்போதுதான் அறிகிறேன்... தகவலுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவும் தகவலும் பயனுள்ளதாக அமைந்தது பற்றி மகிழ்ச்சி.

      கருத்திற்கு மிக்க நன்றி நண்பர் நாஞ்சில் சிவா.

      துளசிதரன்

      நீக்கு
  14. தங்கள் அன்பு மகளின் நடனம் கண்டேன். மிக சிறப்பாக ஆடியிருக்கிறார். அவருக்கு என் இனிய வாழ்த்துக்கள்!
    பேக்கல் கோட்டையைப்பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் மிகவும் அருமை! தஞ்சையில் சோழர்கள் காலம் முடிந்த பின் நாயக்க மன்னர்கள் ஆண்டார்கள். அது போலவே இங்கும் சோழர்களின் ஆட்சிக்காலமும் அதன் பின்னர் நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலமும் இருந்திருக்கிறது!
    கோவில்களின் அழகு அபாரம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளின் நடனத்தைக் கண்டு பாராட்டி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சகோதரி மனோ சாமிநாதன்.

      //தஞ்சையில் சோழர்கள் காலம் முடிந்த பின் நாயக்க மன்னர்கள் ஆண்டார்கள். அது போலவே இங்கும் சோழர்களின் ஆட்சிக்காலமும் அதன் பின்னர் நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலமும் இருந்திருக்கிறது!//

      ஆம் அப்படித்தான் வரலாறு செல்கிறது.

      கோயில் இடிந்திருந்தாலும் மிக அழகாக இருக்கும்.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி மனோ சாமிநாதன்

      துளசிதரன்

      நீக்கு
  15. பதில்கள்
    1. கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி வசுமதி. முதல் வரவு என்று நினைக்கிறேன் அதற்கும் மிக்க நன்றி. நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவதாகத் தெரிகிறது. உங்கள் மொழித்திறன் ஆளுமை பிரமாதம். நான் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்.

      துளசிதரன்

      நீக்கு
  16. மிக அழகாக ஆடிப் பாடிக் கதாப்பிரசங்கமும் செய்திருக்கிறார் உங்கள் மகள் அபிராமி. முதலிடம் கிடைத்ததில் வியப்பே இல்லை. வாழ்த்துகள், பாராட்டுகள். இதே போல் திறமையுடன் மருத்துவப் படிப்பிலும் முதல் இடம் பிடிக்க முன் கூட்டிய ஆசிகள்/வாழ்த்துகள்/பாராட்டுகள்.

    படங்களை எல்லாம் நன்றாக எடுத்து அழகாக அதனதன் இடங்களில் சேர்த்துப் பதிவைச் செம்மையாகப் பதிப்பித்த உங்களுக்கும் பாராட்டுகள். பேக்கல் கோட்டை பற்றிய தகவல்களும் ஆண்டு வந்த மன்னர்கள் பற்றிய தகவல்களும் சுவாரசியம். மிகமிக அருமையான பதிவுப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளைப் பாராட்டி வாழ்த்தியதற்கு மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம்.

      /இதே போல் திறமையுடன் மருத்துவப் படிப்பிலும் முதல் இடம் பிடிக்க முன் கூட்டிய ஆசிகள்/வாழ்த்துகள்/பாராட்டுகள்./

      உங்கள் ஆசிர்வாதம் மனதை மகிழ்விக்கிறது. மிக்க நன்றி சகோதரி.

      பதிவைப் பற்றிய அழகான கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி.

      துளசிதரன்

      நீக்கு
  17. அபிராமியின் நாடோடி நடனம் காணொளி பார்த்தேன்... பாராட்டுகள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு