ஸ்ரீரங்கம், ஆதிரங்கம் போயாச்சு மத்யரங்கம் போக வேண்டாமா பல வருஷமாச்சு என்று வீட்டில் சொல்லப்பட்டதும், மத்யரங்கத்தின் அருகில்தானே சிவனசமுத்திரமும் தலக்காடும். இந்த இரு இடங்களும் என் லிஸ்டில் பல வருடங்களாக, சொல்லப் போனால், 2001-2002ல் பெங்களூரில் இருந்தபோது போய், அப்போதைய வசதிகள் சரியாக இல்லாததால் - காரணம் நாங்கள் பொதுப்போக்குவரத்தை உபயோகிப்பதால் - சரியாகப் பார்க்க முடியாமல் விட்ட இடங்களாச்சே என்று நம்மவரிடம் சொல்லி அப்ரூவல் கிடைக்குமான்னு ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சரி ப்ளான் என்ன, நேரம் எவ்வளவு ஆகும்னு பார்த்துச் சொல்லு, அதுக்கேத்தபடி போலாம்னு அப்ரூவல் கிடைச்சதும், விடுவனா! திட்டமிடலைத் தொடங்கினேன். நாமதான் ஊர் சுத்த காத்திட்டிருப்போமே!
பேருந்தில் சென்றால் மூன்று இடங்களையும் கவர் செய்ய முடியாது. மத்யரங்கத்தையும் சிவனசமுத்திரத்தையும் முடியும். சாட்டில்லைட் பேருந்து நிலையத்திலிருந்து கொல்லேகல் செல்லும் பேருந்தில் சென்றால் காவேரியைக் கடந்ததும் சத்யகலா ஹேன்ட் போஸ்ட் எனும் இடத்தில் இறங்கிக் கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் மத்யரங்கம் சென்றுவிட்டால் அங்கிருந்து சிவனசமுத்திரம் சென்று பார்த்துவிட்டு மத்யரங்கம் வந்து அல்லது ஆட்டோவில் இறங்கிய இடத்திற்கே வந்து அங்கிருந்து மீண்டும் பேருந்தில் வந்துவிடலாம்.
ஆனால் தலக்காடையும் இதோடு இணைக்க வேண்டும் என்றால் இப்படியான திட்டம் சரிவராது.
அப்பா வீட்டிற்குள்ளேயே இருப்பதால், ஒரு மாற்றத்திற்காக மத்யரங்கம் பார்க்க கூட்டிக் கொண்டு செல்லலாமா, அவரால் முடியுமா? அப்படி என்றால் கார் புக் செய்ய வேண்டும். நம்ம பட்ஜெட்டுக்கு ஒத்துவருமா என்ற யோசனைகள்.
இந்த ஒரு முறை மட்டுமென்றால் ஓகே என்றதும், எங்களுக்குத் தெரிந்த நட்பு, ஓட்டுநர் ஸ்ரீதரிடம் பேசி அவர் வண்டியை ஏற்பாடு செய்தோம்.
நான் கூகுள் உதவியுடன் தூரம், நேரம் எல்லாம் கணக்கிட்டு, காலையில் 5 மணிக்குக் கிளம்பினால் முதலில் மத்யரங்கம், அங்கிருந்து மிக அருகில் இருக்கும் சிவனசமுத்திரம் அருவிகள் இரண்டையும் 11 மணிக்கு முடித்துவிடலாம், அங்கிருந்து தலக்காடு சென்றால் 3 மணிக்குள் முடித்துவிடலாம், எனவே 7 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடலாம் என்று திட்டம் போட்டாயிற்று.
இடையில் நெல்லை கூப்பிட்டார். இந்த வாரக் கடைசியில் எங்க போறீங்க என்று கேட்டதும், சொன்னேன், தானும் சேர்ந்து கொள்ளலாமா என்று கேட்டார். ஓகே. கூட அவருடைய ஹஸ்பண்டும் வரமுடியுமா என்று கேட்டார். ஆனால் ஏற்பாடு செய்த வண்டியில் 4 பேர்தான் செல்ல முடியும். எனவே நெல்லை, தான் மட்டும் சேர்ந்து கொள்வதாகச் சொன்னார்.
கூடவே, போகும் வழிதானே, சமீபத்தில் கும்பாபிஷேகம் ஆன அப்ரமேயர் கோவிலையும் கவர் பண்ணிடலாமா, திட்டம் சரியாகாது என்றால் வேண்டாம், ஆனால் கும்பாபிஷேகம் ஆகி 40 நாட்களுக்குள் தரிசித்தால் நல்லது என்றார்.
எனக்கு இப்படியான சென்டிமென்ட்ஸ் சுத்தமாகக் கிடையாது. நம்மவரிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றேன். நம்மவர், ஒரிஜினல் திட்டமே இருக்கட்டும் என்று சொன்னதால் நெல்லையிடம் சொன்னேன்.
என் கவலை என் லிஸ்ட். முக்கியமாகத் தலக்காடு. வழியில் கொஞ்சம் திசை திருப்பி அப்ரமேயர் கோவிலையும் சேர்த்தால் நேரம் ஆகிவிடுமோ, தலக்காடு சரியாகப் பார்க்க முடியாமல் போனால்? என் நெடுங்காலக் கனவு என்னாவது!!!
நெல்லையும், “கும்பாபிஷேகம் சமீபத்தில் என்பதால் போகும் வழிதானே என்று சொன்னேன், கவர்பண்ணலாம். வேண்டாம் என்றால் பரவால்ல.” என்றார். அவரிடம் திட்டம், நேரம் எல்லாம் சொல்லிட அவரும் தயாராகிவிடுவேன் என்றதும் எல்லாம் பக்கா. பயணச் செலவில் தன் பங்கைப் பகிர்ந்து கொள்வேன் என்றார். சரி.
திட்டமிட்டபடி 5 மணிக்குள் ஸ்ரீதர் வந்துவிடுவார் என்று பார்த்தால் 5.25 ஆகிவிட்டது. அப்பாவை மெதுவாக வண்டியில் ஏற்றி உட்கார வைத்து, சாப்பாடு மூட்டையை ஏற்றிவிட்டுக் கிளம்பும் போது மணி 5.40ஐ கடந்துவிட்டது. திட்டத்தில் முதல் சொதப்பல்.
நெல்லையைத் தொடர்பு கொண்டு வந்துகொண்டிருக்கிறோம் என்று தகவல் கொடுத்தாச்சு. அவ்வப்போது எங்கிருக்கிறோம் என்று தகவல் பரிமாற்றங்கள். பெங்களூர் போக்குவரத்து மிகவும் புகழ்பெற்றது. அந்தக் காலை நேரத்திலும் போக்குவரத்து நெரிசல்.
எனக்குத் தலக்காடு மனதில் ஆடிக் கொண்டிருந்தது. சரி போகிறபடி போகட்டும். என்ன செய்ய முடியும்?
நெல்லையின் குடியிருப்பை (18 கிமீ நம் பகுதியிலிருந்து) அடையவே 1 மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது! அவரையும் ஏற்றிக் கொண்டதும், அப்ரமேயர் பற்றிப் பேச்சு தொடங்கியதும் நம்மவர், ஸ்ரீதரிடம், அப்ரமேயர் கோவிலும் சென்று விட்டு அப்படியே அடுத்து மத்யரங்கம் என்றார். திட்டம் பிரச்சனையாகாதே என்று நெல்லை கேட்க, நம்மவரும் போய்விடலாம்னு சொன்னதும், முதலில் ஒரிஜினல் திட்டம்தான் என்று சொன்னவர் கடைசியில் அப்ரமேயர் என்பதாலோ என்னவோ மனம் மாறி இப்படிச் சொன்னதும், ஆஹா நம்ம தலக்காடு திட்டம் என்னாகுமோன்னு எனக்குக் கவலை! கண்டிப்பாக வீட்டிற்குப் போய்ச்சேர 8.30 மணி ஆகிவிடும் என்று எனக்குத் தெரிந்தது.
காரணம் நம்மவருக்கு எங்கு சென்றாலும் 2, 3 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அதன் பின் சுற்றல் இல்லாமல் வீட்டிற்கு 7 மணிக்குள் திரும்ப வேண்டும்.
சரி ஆனது ஆகட்டும் என்று விட்டுவிட்டேன். இடையில் காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு, நேரே அப்ரமேயர் கோவிலுக்கு வண்டி சென்றது. முன்பு கொக்கரேபெல்லூர் சென்ற அதே வழிதான். அப்போது பேருந்து. இப்ப காரில், டோல் சாலை என்பதால் காட்சிகள் எனக்கென்னவோ வித்தியாசமாக இருந்தது போன்று ஓர் எண்ணம்! சும்மா சில க்ளிக்ஸ்! இப்படங்கள் ஸோ ஸோ தான்...
சன்னப்பட்டணாவிலிருந்து தோராயமாக 2 கிமீ தூரத்தில் உள்ள தொட்டமல்லூரில் (Doddamallur) இருக்கும் ஸ்ரீ அப்ரமேயர் கோவிலுக்குச் சென்ற போது 8.20 ஆகிவிட்டது. ஸ்ரீ அப்ரமேய ஸ்வாமி கோவில் என்றும் - அப்ரமேயர்' என்றால் அளவிட முடியாதவன் - மற்றும், குழந்தை கிருஷ்ணன் தவழும் கிருஷ்ணராக 'அம்பேகாலு கிருஷ்ணன்' என்ற தனித்துவமான திருவுருவம் உள்ளது என்பதாலும் ஸ்ரீ அம்பேகாலு நவநீத கிருஷ்ணர் கோவில் என்றும் சொல்லப்படுகிறது.
இக்கோவிலுக்கு ஸ்ரீ புரந்தரதாஸர் 15-16 ஆம் நூற்றாண்டில் வந்த போது ‘அம்பேகலு கிருஷ்ணர்’ வடிவத்தைப் பார்த்து அவர் மெய்மறந்து இயற்றிய புகழ்பெற்ற பாடல்தான் "ஜகதோதாரணா", என்பது வரலாறு.
மிச்சக் கதைகளை நீங்க கூகுளைக் கேட்டால் சொல்லிவிடும் என்பதால் நான் அதிகம் சொல்லவில்லை. கதையிலிருந்து நடப்புக்குச் செல்வோம்.
அப்பாவிற்குச் சும்மா ஒரு வேஷ்டியை சுற்றிவிட்டு, கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்ததும், கோவிலின் எதிரில் ஓர் அழகான மண்டபம். அங்கு வாகனங்கள் அழுக்கடைந்து வைக்கப்பட்டிருந்தன. தூண்களில் அழகான வடிவங்கள்
கையில் எடுத்துச் சென்றிருந்த எங்கள் காலை உணவைச் சாப்பிட்டோம். நெல்லை, நான் கொண்டு செல்வதைச் சாப்பிடமாட்டேன் என்று சொல்லியிருந்ததால்!!!!!!!!!! அவர் தனக்கானதைக் கொண்டு வந்திருந்தார், நான் அதை டேஸ்ட் பார்த்தேன். மக்களே இதைக் குறித்துக் கொள்ளுங்கள்!
சரி அங்கிருந்து அடுத்து நாம போகப் போவது மத்தியரங்கம் பகுதிக்கு. கொஞ்சம் பொறுங்கள். நான் எழுத வேண்டும், படங்கள் தொகுக்க வேண்டும், அதை ப்ளாகரில் ஏற்ற வேண்டும். அதற்கு 4ஜி/5ஜி ஒத்துழைக்க வேண்டும் இது அன்று எழுதிய போது ...இப்ப நாங்க ஆக்டிவா ACTக்கு மாறிவிட்டோம். எனவே படங்களை எளிதாக ஏற்றிவிட்டேன்....விடலாம்... எனவே அது காரணமல்ல. நான் அடுத்த பகுதி எழுதணும், அதற்கு மனோசக்தி வேண்டும்!!!!!
தொடர்வோம்...
-------கீதா
சிவனசமுத்திரம் என்று பார்க்கும்போது சிவசமுத்திரம் என்றே படிக்க வருகிறது! நான் ஸ்ரீரங்கம் பார்த்திருக்கேன். ஆதிரங்கம் பார்த்ததில்லை. ஆனால் கீதா ரெங்கனைத்தெரியும்!
பதிலளிநீக்குஹாஹாஹாஹா கருத்து பார்த்து சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்.
நீக்குஸ்ரீராம் மத்ய ரங்கம் இப்ப பார்க்கும் நிலையில் இல்லை. அடுத்த பகுதியில் சொல்கிறேன். இனிதான் எழுதணும்
கீதா
இந்த ரங்கத்தையெல்லாம் படிக்கும்போது ஆறெங்கும்தானுறங்க பாடல் நினைவுக்கு வரும்!
பதிலளிநீக்குஅரசாங்க அலுவலகக் கோப்பு போல அப்ரூவல் தாமதமாகத்தான் கிடைத்திருக்கிறது போல..!
ஹா.. ஹா.. ஹா..
ஆறெங்கும்தானுறங்க பாடல் //
நீக்குஎன்ன பாட்டு அது? கேட்டுப் பார்க்கிறேன்
ஹாஹாஹா ஆமாம், குறிப்பாக அப்பாவைக் கூட்டிட்டுப் போலாமா வேண்டாமான்ற யோசனைக்கு. ஓசிச்சு ஓசிச்சு தாமதமாக அப்ரூவல்.
நன்றி ஸ்ரீராம்
கீதா
நெல்லையின் வீடு நீங்கள் பயணம் செல்லும் அதே வழிதானா? சமயங்களில் நாம் போடும் திட்டம் வேறு சில யோசனைகளால் லேசான மாற்றங்களை சந்திக்கும்போது சிறு மாற்றங்கள் பெரிய நேரத்தைச் சாப்பிடும்! உங்களுக்கு என்ன ஆயிற்று என்று பார்க்கிறேன்.
பதிலளிநீக்குநெல்லையின் வீடு போகும் வழிதான். முதலில் ஸ்ரீதர் இங்கிருந்தே நேரே மைசூர் ரோட்டைப் பிடித்திடலாம்னு சொன்னார் அப்புறம் நெல்லையையும் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்றோம். சிட்டிக்குள்ளாற போயிடலாம்னு....
நீக்குகீதா
நெல்லையே நேரடியாகக் கேட்டதும் உங்களவர் ஓகே சொல்லி விட்டார் போல..
பதிலளிநீக்குஅப்ரமேயா சுப்ரபாலா என்கிற வரி மட்டும் மனதில் நிழலாடுகிறது. ஏதோ ஸ்லோகத்தில் வரும் போல..
இருக்கலாம், ஸ்ரீராம்....தெரியலை
நீக்குஅப்ரமேயோ சுப்ரபாலா?
அப்ரமேயோ ஹ்ரீஷீ கேஸப் பத்மநாபோ அமரபபிரபு என்று சஹஸ்ரநாமத்தில் வருமே
கீதா
அப்ரமேயோ ரிஷீ கேசோ பத்மநாபோ அமரப்பிரபு: என்பது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும்.
நீக்குஉங்களவர் நினைப்பது போலதான் நானும் நினைப்பேன். குறிப்பிட்ட நேரத்துக்குள் வீடு வந்துவிட வேண்டும்.
பதிலளிநீக்குஅதேபோல கிளம்பும் நேரம் இதுதான் என்று சொன்னால் அந்த நேரத்துக்கு ரெடியாகி விடவேண்டும்.
நல்லா படிக்கிறேனோ இல்லையோ, டியூஷனுக்கு காலை நாலரை மணிக்கு சரியான நேரத்துக்கு சென்று விடுவேன்!
டியூஷன் வகுப்புக்கு யார் யாரெல்லாம் வருவார்கள் என்பது ஏதேனும் வியாழன் பதிவில் வருமா?
நீக்குஉங்களவர் நினைப்பது போலதான் நானும் நினைப்பேன். குறிப்பிட்ட நேரத்துக்குள் வீடு வந்துவிட வேண்டும்.
நீக்குஅதேபோல கிளம்பும் நேரம் இதுதான் என்று சொன்னால் அந்த நேரத்துக்கு ரெடியாகி விடவேண்டும். //
ஹைஃபைவ் ஸ்ரீராம் மீக்கும். நானும் அப்படியேதான்.
அடுத்த வரிக்கும் நான் டிட்டோ. நேரம் தவறாமை ஸ்டேஷனுக்கு எல்லாம் கூட கொஞ்சம் முன்னாடியே போய் கூடக் காத்திருப்பேன் ஆனால் கடைசி நிமிடத்தில் ஓடும் வேலையை வைத்துக் கொள்வதில்லை.
கீதா
நெல்லை ஹைஃபைவ் நான் அடுத்து கேட்டு கருத்து போட நினைத்தேன் உங்க கருத்து பார்த்துவிட்டேன். அதேதான் ....கேட்டுட்டீங்கல்ல கண்டிப்பா எழுதுவார் பாருங்க.
நீக்குநீங்க என்ன நினைச்சு கேட்டிருப்பீங்கன்ற யூகத்துல இத சொல்றேன்.......ஆண்கள் வெளிப்படையாக எழுதுவது போல பெண்கள் எழுதுவதில்லையோ என்று தோன்றும். எனக்குமே நான் எழுதி குறிப்புகளாக வைத்திருந்தால் கூடத் தயக்கமாக இருக்கு.
கீதா
// யார் யாரெல்லாம் வருவார்கள் என்பது //
நீக்குயார் யார் வருவார் என்று எனக்கு எப்படி தெரியும்? யார் யார் வந்தார்கள் என்று கேட்டால் என்னிடம் பதில் உண்டு.
அப்படிப் போடுங்க ஸ்ரீராம் சரியா பாயின்ட் பிடிச்சிட்டீங்க!!!! இப்ப கேள்வி, 'யார் யார் வந்தார்கள்' !!!! ஹாஹாஹாஹா. இங்க சொல்லாட்டியும் பதிவுல சொன்னா கருத்துல நாங்க அடிச்சு விடலாம்!!!
நீக்குகீதா
அப்ரமேயர் கோவில் பார்க்க மிக அழகாக வண்ணமயமாக இருக்கிறது.
பதிலளிநீக்குஓ.. ஜகதோதாரணா இங்கு பாடிய பாடல்தானா... காபி ராகம் இல்லை?
ஆமாம் ஸ்ரீராம். உள்ளும் நன்றாக இருக்கும்.
நீக்குஆமாம் இங்குதான் பாடப்பட்டது காபி ராகமேதான்!!!
கீதா
உண்மையில் நீங்கள் நெட்வொர்க் மாற்றியதையே ஒரு பதிவாக போடலாம்!
பதிலளிநீக்குபாஸின் சித்தி வீட்டில் பரந்யாசம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் கூட இப்படித்தான்.. எங்கள் வீட்டில் எல்லாம் சாப்பிடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் வேறு வேறு ... இல்லையா? ஆனால், இப்போது சித்தியே சாப்பிடுகிறார். பாஸின் ஒன்று விட்ட அக்கா ரொம்ப ஸ்ட்ரிக்ட் இந்த விஷயத்தில். ஆனால் அவர் மகள் மணந்திருப்பது...
தெரியும் ஸ்ரீராம் பாஸின் உறவினர்கள் பற்றி.
நீக்கு//நான் வேறு வேறு ... இல்லையா? //
அட போங்கப்பா.....எனக்கு அம்மாதிரியான விஷயங்கள் சுத்தமாகப் பிடிப்பதில்லை.
சிலர் இன்னும் ஸ்ட்ரிக்டாக இருக்காங்க.
நம்ம நெல்லைய அந்த லிஸ்டில் சேர்க்க முடியாது. அப்படினா வெளியில் சாப்பிடக் கூடாதே!!!!!! ஹாஹாஹா...(அவர் காலை இழுத்தாச்சு!!)
அவர் சொல்வார், "உங்களை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னுதான்" என்று. இன்னொன்னு டேஸ்ட்!!!!!!!!!!!!!!!!!!!! அவர் வருவார் பாருங்க...பார்த்தார்னா ஹாஹாஹாஹா
கீதா
//எங்கள் வீட்டில் எல்லாம் சாப்பிடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் வேறு வேறு .// எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை ஸ்ரீராம். சின்னவயதில் நான் என் பெரியப்பா வீட்டில் வாழ்ந்தபோது, அடுத்த வீட்டில் தண்ணீர்கூட அருந்தக்கூடாது என்பார்கள். என் அப்பாவோ, அப்படியெல்லாம் சொன்னதில்லை. பசி அல்லது உடம்பு சரியில்லை என்ற நேரம் வரும்போது, யார் வீட்டிலும் உணவோ வெந்நீரோ சாப்பிடலாம் என்று வாழ்ந்தவர். அவர் ஜாதி பார்க்கமாட்டார், ஆனால் பசங்க, நல்லவங்களோட பழகறாங்களான்னு பார்ப்பார். என் நெருங்கிய நண்பன் (டிகிரியின்போது SC, வேலைக்குச் செல்லும் காலத்தில் செட்டியார். இருவரும் என் வீட்டில் பல முறை சாப்பிட்டிருக்கிறார்கள்)
நீக்குபயண திட்டம் வகுத்து சென்றதிலிருந்து பதிவு ஆரம்பித்து இருக்கிறது அருமை. அளவிடமுடியாதவனின் கோயில் விவரம் அருமை பெயர் காரணம் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குபடங்கள் நன்றாக இருக்கிறது. மீண்டும் சிறிது நேரம் கழித்து வருகிறேன்.
யாருங்க இது? //பெயர் காரணம் தெரிந்து கொண்டேன்.// சொன்னவங்க ப்ளீஸ் பெயர் போட்டுவிடுங்களேன். பானுக்காவா?!!!!!!
நீக்குநன்றி.
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. பயண விபரங்கள், படங்கள் என அனைத்தும் உங்கள் பாணியில் சிறப்பு. கூடவே உங்கள் அனைவருடனும், நாங்களும் (சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்கள் மட்டுமல்ல. :)). ) பயணித்த உணர்வை தரும் உங்கள் பாணியை ரசித்துப் படித்தேன்.
நாங்களும் இந்தக் கோவிலுக்கு ஒரு தடவை சென்றுள்ளதாக நினைவு. . (கொஞ்சம் இரவின் ஆரம்ப நேர அவசர கதியில். அதனால் உங்கள் அளவிற்கு புகைப்படங்களும், விபரங்களும் சேகரிக்க இயலவில்லை. ) நீங்கள் தந்த விபரங்களையும், படங்களையும் ரசித்துப் படித்தேன். அடுத்து மத்யரங்கம் காண ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலாக்கா.
நீக்குகருத்துக்கு மிக்க நன்றி. கோவிலுக்குள் படம் எடுக்க முடியாது.
அக்கா நான் வெளியில் மட்டும்தான் எடுத்தேன். சில விவரங்கள் அங்கிருந்த அர்ச்சகர் முதல் முறை போனப்ப சொன்னது. அப்ப கோவிலில் நாங்க மட்டும்தான் ஒரு மாலை நேரம் கோவில் திறந்திருந்த சமயம் சாதாரண நாளில் 5 வருடங்களுக்கு முன்.
மத்யரங்கம் காணவா! ஹாஹாஹா அடுத்த பதிவுல ஏமாந்துக்கோங்க!!!!! சொல்றேன் அதுல. ஹையோ எழுதணுமே....
நன்றி கமலாக்கா
கீதா
இஎனக்காவது பரவாயில்லை. ஞாயிறு மாத்திரம்தான் என்பதால் இன்றைக்குப் போய்வந்த கோயிலை இன்றே எழுதினாலும், மார்ச்சுக்குப் பிறகுதான் வெளியாகும்.
பதிலளிநீக்குஆனா இந்த கீதா ரங்கன் க்கா பல யுகங்களுக்கு முன்னால் அவரோடு சென்ற பயணத்தை இப்போது எழுத ஆரம்பித்திருக்கிறாரே
ஹாஹாஹாஹா....நெல்லை, எனக்கு பல வேலைகளைக் கையாளும் திறன் இல்லை என்ன செய்ய!!?
நீக்குஏதேனும் ஒன்றில்தான் செய்ய முடிகிறது. இத்தனை நாள் நெட் படுத்தியது. இப்ப ஆக்ட் படங்களை டக்குனு ஏற்றுகிறது.
ஆனால் ஸ்ரீராம் சொன்னது போல் முதலில் நல்லா வேலை செய்யும் போகப் போகத் தெரியும் (பாடிக்கலாம்!!!!) என்றது போல இப்ப சில சமயம் வைஃபை கால்ஸ் எடுக்க மாட்டேங்குது. நார்மல் கால்ஸ் ஏர்டெல் சுத்தமா எடுக்கமாட்டேங்குது!
எனக்கு எழுதுவது சிரமமாக இருக்கிறது. அதற்கென்று நேரம் ஒதுக்க வேண்டும். மனம் பல வேலைகளில் ஈடுபடுகிறது.
கீதா
உங்கள் மற்றும் கணவரின், உணவுத் திட்டமிடலும், எங்கே பாத்ரூம் வசதி உண்டு என்பதையும் கவனித்துத் திட்டமிடுவதும் எனக்குப் பிடித்தமானது.
பதிலளிநீக்குஉங்களுக்கு ஏகப்பட்ட வேலைகள். இதில் எனக்கும் சேர்த்து கொண்டு வாருங்கள் என்று சொல்லும் மனநிலை எனக்கு இல்லை. நீங்க மில்லட் அளவான உணவு இனிப்பு கிடையாது என்கிற ஜாதி. நானோ உணவில் ஆர்வம் உடையவன். என்ன செய்ய?
நன்றி நெல்லை. நாங்கள் அதில் சற்றுக் கூடுதல் கவனமாக இருப்பதால். இப்ப நீங்களும் மில்லட்டுக்கு மாறிட்டீங்களே இனிமேல் என்னிடம் வாலாட்ட முடியாதக்கும்!!!!!!!!!!!!!!!!ஹாஹாஹாஹா
நீக்குகீதா
'//அம்பேகாலு கிருஷ்ணன்' என்ற தனித்துவமான திருவுருவம் உள்ளது என்பதாலும் ஸ்ரீ அம்பேகாலு நவநீத கிருஷ்ணர் கோவில் என்றும் சொல்லப்படுகிறது.//
பதிலளிநீக்குஅம்பேகாலு நவ நீத கிருஷ்ணர் கோயில் நன்றாக இருக்கிறது கோபுரம், தூண் சிற்பங்கள் எல்லாம் அழகு
நன்றி கோமதிக்கா. இங்குள்ளவர்கள் அம்பேகாலு கிருஷ்ணன் என்று சொல்றாங்க.
நீக்குஆமாம் அந்தத் தூண்கள் அழகாக இருந்தன. சில விஷயங்களுக்கு எனக்குக் கூடுதல் நேரம் வேண்டும்.....இது போன்றவற்றில் புகைப்படம் எடுப்பதில் சற்று கூடுதல் ஆர்வம் என்பதால். எனவே தனியாகச் செல்லவும் விருப்பம் உண்டு. ஆனால் பல சமயங்களில் அது நடப்பதில் சிரமம் உண்டு
நன்றி கோமதிக்கா.
கீதா
\\அதை ப்ளாகரில் ஏற்ற வேண்டும். அதற்கு 4ஜி/5ஜி ஒத்துழைக்க வேண்டும் இது அன்று எழுதிய போது ...இப்ப நாங்க ஆக்டிவா ACTக்கு மாறிவிட்டோம். எனவே படங்களை எளிதாக ஏற்றிவிட்டேன்....விடலாம்... எனவே அது காரணமல்ல. நான் அடுத்த பகுதி எழுதணும், அதற்கு மனோசக்தி வேண்டும்!!!!!\\
பதிலளிநீக்குஎனக்கும் மடிகணினி ஒத்துழைக்க மறுக்கிறது அதற்கு மூட் இருக்கும் போது பின்னூட்டங்கள் போட வேண்டி இருக்கிறது. அப்புறம் என் மனதும் ஒத்துழைக்க வேண்டி உள்ளது.
ஆமாம் அக்கா உங்க மடிக்கணினி படுத்துகிறதே.
நீக்கு//அப்புறம் என் மனதும் ஒத்துழைக்க வேண்டி உள்ளது.//
அதைச் சொல்லுங்க. இப்ப நான் பல வேலைகளில் இருப்பதால் இடையில் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண சில வீடியோக்கள் எல்லாம் பார்க்கிறேன். ஆனால் பதிவுகள் எழுதுவதற்கு மனம் ஒத்துழைத்து நேரம் ஒதுக்கணும் என்று நினைக்கிறேன்.
நன்றி கோமதிக்கா
கீதா
அப்பாவை அழைத்து சென்றது நல்லது அவர்களுக்கு ஒரு மாறுதலாக இருக்கும். தரிசனம் செய்து மகிழ்ந்தார்களா?
பதிலளிநீக்குநெல்லை ஏன் உங்கள் உணவை வேண்டாம் என்றார் ? பூண்டு, வெங்காயம் சேர்த்த உணவா? அல்லது அவர் கொண்டு வந்த உணவை வீணாக்க வேண்டாம் என்று நினைத்து இருப்பார் என்று நினைக்கிறேன்.
நெல்லை, நான் கஷ்டப்படக் கூடாது என்று நினைத்து அப்படிச் சொல்வார். வீட்டிற்கு வந்தப்ப சாப்பிட்டாரே!!!!!
நீக்குவெங்காயம் சாப்பிடுவாரே!!!!!!
அவரை சும்மா இழுப்பதற்காக அந்த வரியைச் சேர்த்தேன்!!!! அவரை இழுக்கலைனா எனக்கு சும்மா இருக்க முடியாது. அவருக்கு என்னை இழுக்கலைனா சும்மா இருக்க முடியாது!!!!!!!
அவர் கருத்திலும் சொல்லியிருக்கிறாரே அதுதான்.
நன்றி கோமதிக்கா
கீதா
நான் பின்னூட்டம் போடு, போது யார் கருத்தும் இல்லை , நீங்கள் வெளியிடவில்லை , இப்போது தான் மற்றவர்கள் பின்னூட்டங்களை படித்தேன் , தெரிந்து கொண்டேன்.
நீக்குகுன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன், கருடழ்வார் சிலைகள் தூணில் அழகாய் இருக்கிறது.
பதிலளிநீக்குஆமாம் கோமதிக்கா. அழகாக இன்னும் உண்டு சில சாமான்கள் பைக் நிறுத்தி வைத்திருந்தடு எல்லாம் மறைத்தன.
நீக்குநன்றி கோமதிக்கா
கீதா
//ஸ்ரீ புரந்தரதாஸர் 15-16 ஆம் நூற்றாண்டில் வந்த போது ‘அம்பேகலு கிருஷ்ணர்’ வடிவத்தைப் பார்த்து அவர் மெய்மறந்து இயற்றிய புகழ்பெற்ற பாடல்தான் "ஜகதோதாரணா", என்பது வரலாறு.//
பதிலளிநீக்குநல்ல செய்தி தெரிந்து கொண்டேன்.
நன்றி கோமதிக்கா
நீக்குகீதா