திங்கள், 27 அக்டோபர், 2025

லுஷிங்டன் பாலம் - Lushington Bridge - காவேரி கட்டே - Kaveri Katte

மத்தியரங்கம், சிவனசமுத்திரம் தலக்காடு என்று தொடங்கியிருந்தேன். இப்போது கடைசியில் பார்த்த தலக்காடு பற்றி எழுதி முடித்திடலாம் என்று எழுதத் தொடங்கிய போது, ஒரே ஒரு இடம் மிகவும் அழகான இடம் பற்றி மட்டும் உங்களுக்குக் காட்டிவிட்டு தலக்காடு போய்விடலாம். சரியா?

மத்யரங்கம், சிவனசமுத்திரம் போகும் வழியில் மத்யரங்கம் அருகில் இருக்கும் Sathegala/Sathyagala (ஸத்தேகலா? இந்தக் கிராமம் வைணவ குரு ஸ்ரீ வேதாந்த தேசிகனால் புகழ்பெற்ற கிராமம்) எனும் கிராமத்தின் அருகில் இருக்கும் மிக அருமையான இடம்இப்பகுதி முழுவதுமே காவிரியின் ஆட்சிதான்

இந்த இடத்தில் காவிரியின் குறுக்கே பிரிட்டிஷ் காலத்தில் 1700ல் கட்டப்பட்ட முதல் பாலம் என்றும், இல்லை 1818ல் கட்டப்பட்ட பாலம் என்றும் சொல்லப்படுகிறது.  

லுஷிங்டன் பாலத்தின் வலப்பக்க  முனை, தெரிகிறதா? சாலையிலிருந்து இறங்கியிருந்தால் அந்தச் சிறு கோவிலின் அருகில் சென்று பாலத்தின் மீது நடந்திருக்காலாம். 

இப்படத்தில் பாதை தெரிகிறதா? போகத்தான் முடியலை படமாவது எடுப்போமே என்று க்ளோஸப்!!

1835ல் Lushington Bridge - லுஷிங்டன் பாலம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் பொதுவாக அதன் முந்தைய பெயரான  Wellesley Bridge, வெல்லெஸ்லி/வெஸ்லி பாலம் என்றும் சொல்லப்படுகிறது. நான் இதை லுஷிங்டன் பாலம் என்றே வைத்துக் கொள்கிறேன். ஏனென்றால் கீழே கறுப்புநிற எழுத்தில் உள்ளதை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். 

லுஷிங்டன் பாலம் - முழு வடிவத்தையும் எடுக்கும் முயற்சி. 

நிழற்படத்தில் பாலம் முழுவதும் எடுக்க முடியவில்லை அதனால் ஒரு சிறு காணொளி 

லுஷிங்டன் பாலத்தின் நீளம் 400 மீ. ஆற்றின் வெள்ள வேகத்தைத் தாங்கும் வகையில் அக்காலத்தில், கற்களை ஒரு வடிவமாக வெட்டி, செதுக்கி  வடிவமைத்து, (Stone Girders)  கற்களால் ஆன உத்தரம் அதைத் தாங்கி  நிற்கும் வகையில் இணைத்துக் கட்டியுள்ளதால் Engineering Marvelous என்று சொல்லப்பட்டது. குறிப்பாக காவிரி பாயும் இப்பகுதியில் பாறைகளால் ஆன படுகை ஆற்றுப்படுகை. அப்பாறைப் படுகையின் மீதுதான் இப்பாலம் எழுப்பப்பட்டிருக்கிறது.

பிரிட்டிஷ் கால பாலத்தின் இடப்பக்க முனை தூரத்தில் தற்போதைய பாலத்தின் சாலையை ஒட்டி தெரிகிறதா? அந்த இடத்தில் இறங்கினால் ஒரு ஒற்றையடிப் பாதை இருக்கிறது. காரில் இருந்து க்ளிக்கினேன். ஓட்டத்தில் சரியாக வரவில்லை. இந்த இடத்திலும் சாலையிலிருந்து இறங்கியிருந்தால்  பாலத்தின் மீது நடந்து வலப்பக்க முனைக்கு வந்து பாலத்தின் அடியில் இறங்கி தூண்களின் வடிவத்தை படம் எடுத்திருக்கலாம். ஆனால் அன்றைய திட்டத்தின்படி நேரமில்லை. அந்தத் தூண்களில் அழகான சிற்பங்கள் இருப்பதாக அறிய நேர்ந்தது. வேறொரு முறை நம்மவருக்கு ஐஸ் வைத்துச் சென்று வர வேண்டும். தண்ணீர் அதிகம் இல்லாத காலத்தில். அப்போதுதான் இறங்கிப் பார்க்க முடியும்.

தற்போதைய பாலம், சாலை இதற்கு முந்தைய படத்தில் தெரிகிறது இல்லையா? பாலத்தின் மறுபுறம் காவிரி

2018 ல் காவிரி வெள்ளத்தில், லுஷிங்டன் பாலத்தின், கிட்டத்தட்ட 40 அடி, பகுதி அடித்துச் செல்லப்பட்டதாம், தற்போது ஓரளவு மீட்டெடுக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளதும் தெரிந்தது என்றாலும்.....

பார்த்த போது எந்தவிதப் பராமரிப்பும் இல்லாமல் பயன்பாடு இல்லாமல் கைவிடப்பட்ட பாலமாகவே அழிந்து வருவதாகத் தோன்றியது.

இந்த இடத்தில் மேலே உள்ள படங்களில் ஒரு மொட்டை மரம் இருக்கிற்தே அது என்னவோ என்னைக் கவர்ந்தது. அதை ஒரு க்ளிக்

ஆஞ்சனேய ஸ்வாமி கோவில். அதன் மேலே அழகான யானை வடிவம்
-----------

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் - மேலே சொல்லியிருந்த - "ஏனென்றால் கீழே கறுப்புநிற எழுத்தில் உள்ளதை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்" அதுதான் இங்கே

லுஷிங்டன் பாலத்தைப் பார்த்ததும் எனக்கு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள வெல்லெஸ்லி பாலத்தைப் போலவே இருக்கிறதே என்று நான் ரங்கனதிட்டு, ஸ்ரீரங்கப்பட்டினம் போனப்ப ஆட்டோவில் போய்க்கொண்டே ஒரு காணொளி எடுத்ததும் நினைவுக்கு வந்தது. அந்த வெஸ்லி/வெல்லெஸ்லி பாலம் புதுப்பிக்கப்பட்டு பார்க்க நன்றாக இருக்கிறது. அப்பதிவிலும் பகிர்ந்த நினைவு. வரலாற்றில் இதை வெல்லெஸ்லி என்று சொல்வதாலும் பதிவில் முதலில் உள்ள பாலத்தை லுஷிங்டன் என்று சொல்வதாலும் குறிப்பிட்டிருக்கிறேன். இல்லைனா குழப்பம் வந்துரும்னு.

வெஸ்லி பாலம்/வெல்லெஸ்லி பாலம் - ஸ்ரீரங்கப்பட்டினம்

வெஸ்லி பாலம்/வெல்லெஸ்லி பாலம் - ஸ்ரீரங்கப்பட்டினம் - காணொளி
---------------------------

மேலே சொல்லியிருக்கும் லுஷிங்டன் பாலத்திலிருந்து மிக அருகில்  தடுப்பணை (காவிரி கட்டே - Kaveri Katte என்று சொல்கிறார்கள் இங்கு) இருக்கிறது. அணைப்பகுதியில் நிறைய நீர் இருக்கும் சமயம் பரிசல் சவாரியும் இருக்கும். நாங்கள் சென்றிருந்த போது நிறைய நீர் இருந்தது. சுற்றிலும் அழகான இயற்கைக் காட்சிபரிசலில் சென்றிருந்தால் காட்சிகளை இன்னும் நன்றாகப் பார்த்திருக்க முடியும்.

தடுப்பணை

பொதுவாக எனக்குப் படகுபரிசல் சவாரி பயம் கிடையாது. இந்த இடத்தில் சவாரி சென்றால் காட்சிகளை நன்றாகக் காணலாமே என்ற ஆசை ஒரு புறம். ஆனால் இந்த முறை கூடவே தயக்கம். முதலைகள் உண்டு என்று சொல்லப்படும் ஹொக்கேனக்கல் காவிரியிலேயே மூன்று முறை பரிசல் சவாரி சென்ற அனுபவம் இருந்த எனக்கு,  ஒரு சில மாதங்கள் முன்தானே ரங்கனதிட்டுவில் முதலைகள் பார்த்தேன்! சிவனசமுத்திர பகுதியிலும் உண்டு என்பதாலோ என்னவோ மனதிற்குள் தயக்கம். இருந்தாலும் ஓர் ஆசையில் போலாமா என்று கேட்டேன்! நம்மவர் வேண்டாம் என்று சொன்னார். அதனால் நாங்கள் செல்லவில்லைஒரு வேளை அவருக்கும் பயம் இருந்திருக்குமோ?

அழகான இடம். அருகில்தான் சிவனசமுத்திரம் அருவிகளும். ஒரு நாள் சுற்றுலாவிற்கு ஏற்ற இடம்.

அடுத்து தலக்காடு போவோம். அங்கும் காவிரிதான்!!!


--------கீதா

13 கருத்துகள்:

  1. ​படங்களில் மரம் படம் அழகாக உள்ளது. காவேரி ஏன் ஓடாமல் குட்டை போல் தேங்கிக்கிடக்கிறது?

    அது என்ன boting point. boat jetty அல்லது boat pier என்றல்லவா இருக்க வேண்டும்!.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜெ கே அண்ணா.

      காவிரிக்கு என்னவோ ரொம்ப வயதானது போல ரொம்ம்ப மெதுவாக ஓடிக் கொண்டிருந்தாள். சில இடங்களில் ஓட முடியாமல் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள். அவளை யாரு கவனிக்கறாங்க? அவளுடைய ஓட்டத்திற்கு முட்டுக் கொடுத்தால் அவள் இப்படித்தான். கோபத்தை அடக்கிக் கொண்டு ஒரு நாள் பொங்குவாள் எல்லாவற்றையும் இடித்துக் கொண்டு!!!!

      மற்றது பரிசல் இருக்கும் இடம், தடுப்பணை நீர்த்தேக்கம் அண்ணா. வேறு இடத்தில் எங்கேனும் கொஞ்சம் கொஞ்சமாக நீரை பாசனத்திற்குத் திறந்துவிடுவாங்களோ என்னவோ . அது கண்ணில் படவில்லை.

      //அது என்ன boting point.//

      எப்படி எழுதியிருக்காங்க பாருங்க! பல இடங்களில் இப்படி எழுத்துப் பிழைகளைக் காணலாம்.

      //boat jetty அல்லது boat pier என்றல்லவா இருக்க வேண்டும்!.//

      ஹாஹாஹாஹா அண்ணா நான் இதுக்கு என்ன பதில் சொல்ல!!!!!!

      அங்கு என்ன jetty or pier போன்றது எதுவும் கிடையாதே. சும்மா கரையில் பரிசல்தானே. "coracle" boating னு வைச்சிருக்கலாமோ?

      நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
  2. லுஷிங்டன் பாலத்தின் வலப்பக்க முனை, தெரிகிறது காவேரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரிகிறது இல்லையா...நன்றி கோமதிக்கா. காவேரி இந்தப் பக்கம் ஓடுகிறது. சற்று தள்ளி தடுப்பணை அங்கு நீர்த்தேக்கம்.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  3. எல்லா படங்களும் அருமை காணொளியும் நன்றாக இருக்கிறது . பரிசல் சவாரிக்கு கூட்டி போக ஆள் இருக்கா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா பரிசல் சவாரிக்கு ஆள் இருந்தாங்க. இரண்டு பரிசல்கள் இருந்தன இரண்டு ஆட்கள் இருந்தனர். ஒரு காணொளியில் அவர் பேசிக் கொண்டிருப்பார் ஆனால் ரொம்பத் தெரியமாட்டார்

      படங்கள் காணொளிகளை ரசித்ததற்கு மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  4. பரிசல் கிட்டே ஒருவர் நிற்கிறார் அவர் தானா? காவிரி ஓடுவது அழகு, பின்னனியில மலைசிகரம் அழகு. தடுப்பணை படமும் அழகு. அனுமன் கோவில் மேல் யானை சிலை எதற்கு வைத்து இருக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிசல் கிட்டே நிற்பவர் பரிசல் ஓட்டுபவர், அக்கா.

      படங்களை ரசித்ததற்கு மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    2. ஆமாம் அனுமன் கோவில் மேல் யானை எதற்கு என்று தெரியவில்லை. வித்தியாசமாக இருந்தது.

      பின்னில் மலைகள் அத்தனை அழகாக இருக்கு அக்கா. அந்த இடமே ரொம்ப நல்லா இருந்தது.

      உங்கக் கணினிப் பிரச்சனைக்கு நடுவிலும் கருத்து போட்டதற்கு மிக்க நன்றி கோமதிக்கா.

      கீதா

      நீக்கு
  5. இலைகள் அற்ற மரம் அழகு தான் .அதே மாதிரி மரம் கொஞ்சம் இலைகளுடன் அழகாய் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இலைகளுடன் இருப்பதுமே அழகா இருந்தது.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  6. பெயரில்லா கருத்துக்கள் எல்லாம் கீதா நான் தான் போட்டேன்.
    லேப் டாப் கொஞ்சம் மக்கர் செய்கிறது ஐபேடிலிருந்து கருத்துக்கள் கொடுத்தேன்
    அது பெயரில்லாதவளாக காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரிந்தது கோமதிக்கா. பதிலும் கொடுத்துவிட்டேன். அப்படித்தான் அக்கா பெயரில்லா என்று காட்டும்.

      அப்படிக் காட்டினால், உங்களால் டைப் பண்ண முடிந்தால், கருத்தைப் போட்டு அதன் கீழே உங்கள் பெயரைப் போட்டுவிடுங்கள் அக்கா.

      நான் அப்படித்தான் செய்கிறேன்.

      இத்தனை சிரமங்களுக்கிடையிலும் போட்டிருக்கீங்க மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு