தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!!
இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
திங்கள், 21 ஏப்ரல், 2025
ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் - ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் - பயணம் - 6
ரங்கனதிட்டு - இப்பதிவில் பறவைகளைப் பார்வையிடும் கோபுரம்
படகிலிருந்து இறங்கியதும் நேரே இருக்கும் கடையிலிருந்து (சென்ற பதிவில் போட்டிருந்தேனே அக்கடைதான்) வலப்புறம் இதோ பாருங்க ஒரு தகவல் கைகாட்டிப் பலகை. தொங்கு பாலம், கண்ணாடி பாலத்துக்கான வழி என்று காட்டுகிறது.
அப்படி நடக்கும் போது மூங்கில்
வலப்பக்கம் ஏறிப் பார்க்கும் பார்வையாளர் கோபுரங்கள் என்று இருக்கின்றன.
பார்வையாளர் கோபுரங்களை விட்டுவிட முடியுமா? என்னவோ என் கேமரா அழகான படங்களையும் காணொளிகளையும் எடுத்துத் தள்ளும் என்ற நினைப்பில் ஆர்வத்துடன் இருக்கும் என் குழந்தை மனசை ஏமாற்றக் கூடாதில்லையா அதனால ஏறி சில காட்சிகளை எடுத்துக் கொண்டேன். அவற்றை மட்டும் இங்கு இப்பதிவில் பகிர்கிறேன்.
முதல் கோபுரத்திலிருந்து இந்த இரண்டும் எடுத்துக் கொண்டு அடுத்த கோபுரத்திலிருந்து பார்ப்போம் ஏதாச்சும் காட்சிகள் கிடைக்கின்றனவா என்று இறங்கி நடந்தப்ப,
இடப்புறம் பல வகை மரங்களின் பூங்கா என்ற பலகை. ஆஹா! இப்ப ஒரு க்ளிக். 2 வது கோபுரத்தில் ஏறிப் பார்த்துவிட்டு வருகிறேன். இந்த கீதா உங்களை எல்லாம் பார்க்காமல் போய்விடுவாளா என்ன? என்று அதுங்களுக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு....
இரண்டாவது கோபுரத்திற்கு வந்தாச்சு. அங்கிருந்து பார்க்கப் பார்க்க...பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது. பறவைகள் அங்குமிங்கும் தண்ணீரில் உரசிக் கொண்டு பறந்தபடியும், இந்தத் திட்டிலிருந்து அந்தத் திட்டிற்கு என்று பறந்து உட்கார்ந்து ...ஒன்று உட்கார மற்றொன்று எழுந்து பறக்க என்று... நான் காட்சிகளைப் படமும் பிடித்தேன் காணொளியும் எடுத்தேன். எல்லாம் கொஞ்சம் ஜூம் செய்துதான் எடுக்க முடிந்தது. காணொளிகளைத் தொகுத்துக் கீழே கொடுத்துள்ளேன்.
நான் எடுக்க முயற்சி செய்தது ஒரு பறவை பறப்பதை. அங்கு அப்போது குச்சி மிதப்பது போன்றுதான் எனக்குக் கேமராவில் தெரிந்தது. ஆனால் வீட்டிற்கு வந்து கணினியில் ஏற்றிப் பார்க்கும் போதுதான் தெரிந்தது பறவை கேமராவில் வரவில்லை, மிதப்பது குச்சியும் இல்லை அது முதலை என்று தெரிந்தது. உங்களுக்கும் தெரிகிறதா?அதுக்குக் கொஞ்சம் முன்னர்தானே படகில் இந்த இடமெல்லாம் சென்று வந்தோம் என்று நினைத்துக் கொண்டேன்.
பறவைகள் பறப்பது தெரிகின்றதா?
இப்படத்தில் என்ன தெரிகிறது எதை நான் எடுக்க முயற்சி செய்திருக்கிறேன் என்று கண்டுபிடிக்க முடிகிறதா?
அப்படி இரண்டாவது கோபுரத்திலிருந்து எடுத்துக் கொண்டிருந்த போது ஒரு நத்தைகுத்தி நாரை அந்தத் திட்டிலிருந்து பறந்து வந்து கோபுரத்தின் அருகில் இருக்கும் இம்மரத்தின் கிளையில் உட்கார்ந்தது. நான் ஜூம் மோடில் காணொளி எடுத்துக் கொண்டிருந்ததால், கிளை அருகில் என்பதால் பறவை கேமராவில் காணொளி ஃப்ரேமிற்குள் வரவில்லை. உடனே ஜூம் அவுட் செய்து கொஞ்சம் பிடித்தேன் காணொளியில். கீழே காணொளியில் கடைசியில் சேர்த்திருக்கிறேன். அது உட்கார்ந்ததும் ஒரு க்ளிக் எடுத்தேன். அது என்னைப் பார்ப்பது தெரிகிறதா?
பறவைகள் அங்குமிங்கும் பறப்பதும் அமர்வதும் என்று...
கோபுரத்திலிருந்து இறங்கி தொங்கு பாலம், கண்ணாடி பாலம் என்பவை எப்படி இருக்கும் என்ற நினைத்துக் கொண்டே பூங்காவிற்குள் நடக்கத் தொடங்கினோம். அங்கு பார்த்தவை அடுத்த பகுதியில்.
பதிவு அருமை. இன்றைய படங்களும் அருமை. நல்ல விபரங்கள். இங்கு செல்பவர்களுக்கு நல்ல வழிகாட்டியான பதிவு.
மூங்கில் மரங்களின் அணிவகுப்பு அருமை. அது எப்போதுமே ஒரே நேர்வரிசையில் அணிவகுத்துதான் இருக்குமில்லையா? பார்வையாளர் கோபுரம் ஏறி படங்கள் எடுத்திருப்பதும் கண்டேன். அந்த படங்களும் தண்ணீரில் பறவைகள் ஒட்டியபடி பறப்பதும் அழகாக இருக்கிறது. நான் கூட அவை அப்படி பறப்பதை பார்க்கும் போது, அதன் சிறகுகள் நனைந்து விடுமே என நினைப்பேன். ஆனால், அது லாவகமாக தண்ணீரை தொட்டும், தொடாமலும் பறப்பதை காணும் போது அது நம் கண்களுக்கு ஒரு விருந்து இல்லையா?
முதலை நீருக்குள் இருந்துகிட்டே தங்களுக்கு ஒரு குச்சி மாதிரி போஸ் தந்திருக்கும் படமும் நன்றாக உள்ளது. பெரிதாக்கி பார்க்கும் போது சற்று பயமாகவும் உள்ளது. அந்த நேரம் அங்கொரு படகு சென்றால் அது நகர்ந்து வழி விடுமா.? தெரியவில்லையே..!
காணொளியும் அருமை. ஒரே பறவையை விடாமல் உங்கள் கேமிரா துரத்தியுள்ளதை ரசித்தேன். மரத்தில் வந்தமர்ந்த அந்த பறவை உங்கள் கேமிராவைதான் பார்க்கிறது போலும். எங்கே சென்றாலும், இது விடாமல் பின்னாடியே வருகிறதே என வந்தமர்ந்த விட்ட பின் தங்கள் புகைப்பட கருவியை உற்று நோக்குகிறதோ? பறவைகள் திட்டுக்கள் வந்தமர்வதும், பறப்பதுமாக காணொளி கண்களுக்கு விருந்து. அடுத்து பார்த்த விபரங்களை படிக்க ஆவலாக காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
ஆமாம் ஸ்ரீராம், எனக்கு அலைபேசியை விட கேமராதான் பிடிக்கிறது. என் அலைபேசியில் ஜூம் ஆப்ஷன் தூரம் கம்மிதானே. அதனால்தான் நல்ல கேமரா வாங்க ஆசையாக இருக்கு. ஆனால் பாக்கெட் அதற்கு இடம் கொடுக்காது தற்போது.
இல்லை என்றால் ஐஃபோன் போன்ற ஹைடெக் அலைபேசி இருந்தால் நன்றாக எடுக்க வரும் பறவைகள் உட்பட. இன்று நெருங்கிய உறவினர் பையனைப் பார்க்கப் போயிருந்தேன் இல்லையா. அவன் எனக்கு அவன் ஹவாய் சென்றிருந்த போது எடுத்த படங்களைக் காட்டினான். எரிமலைகள், பறவைகள் எல்லாம். அவனிடம் நல்ல கேமராவும் இருக்கிறது. அவன் மொபைலில் எடுத்ததைத்தான் காட்டினான். அவ்வளவு அழகாக இருந்தன. இரவுக் காட்சிகள் முதல். குட்டிப் பறவைகள் கூட மிக அழகாக வந்திருந்தன. அதுவும் வானத்தின் நிறம் எல்லாம் அட்டகாசமாக இருந்தன ஏதோ பெயின்ட் அடித்தது போன்று. மாலை நேரவானம். செக்கச் சிவந்த வானம் எல்லாம். எரிமலை....ஜூம் செய்து எடுத்தவை. எனக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறேன்.
திகில் காட்சிபோல முதலையைக் காட்டுகிறீர்கள்! நல்லவேளை, ஒன்று அந்த முதலை அன்று பெருமாளுக்கு விரதமாயிருந்திருக்க வேண்டும், அல்லது லஞ்ச் ஆல்ரெடி முடித்திருக்க வேண்டும்!
ஹாஹாஹாஹாஹா....சிரித்துவிட்டேன். அன்று ஞாயிறு. என்ன விசேஷமோ விரதம் இருக்க!!!!! ஸ்ரீராம், படகில் செல்லும் போது பார்த்தேனே வாயைப் பிளந்து கொண்டும் இலைமறை காயாக தண்ணீரில் இருந்ததையும். ஆனால் அப்போதை விட இப்படி எடுத்த போதுதான் ஆ! என்று தோன்றியது. ஏனென்றால் கண்ணுக்கே தெரியாமல் அல்லவா இருக்கு பாருங்க. எப்படியோ ஒரு சாகசம் என்றே தோன்றியது.
முதலை கேமராவில் சிக்கிய படத்தில், பறவை அந்தக் குச்சியை (முதலை என்று தெரியாதே) எடுக்க வருகிறது அதான் தண்ணீரில் அருகில் வருகிறது என்று நினைத்து காணொளி எடுக்கலாமா சரியாக எடுக்க வேண்டும் என்று காணொளி ஆப்ஷன் பட்டனை கீழே தள்ள யோசித்துக் கொண்டிருந்த போதே பறவை கேமரா ஃப்ரேமிலிருந்து விலகியிருக்க நான் பட்டனை தள்ளாமலேயே க்ளிக் செய்திருக்கிறேன். முதலை சிக்கியது பறவை பறந்து போச்!
ஸ்ரீராம், மற்ற படத்தில், என் கேள்விக்கு நீங்க சொல்லியிருப்பது - நான் முயற்சி செய்ததை கோமதிக்கா சொல்லியிருக்காங்க. அது அப்படி மீனைப் பிடிக்குமோன்னு நினைச்சேன் ஆனா அது கிடைக்கலை....
காணொளி பார்த்தேன். பறக்கும் அந்தப் பறவைகளை பொறுமையாக, திறமையாக கேமிரா ரொம்ப ஆடாமல் பின்தொடர்ந்திருக்கிறீர்கள். கோகோ விளையாடுவது போல ஒன்று இந்தப் பக்கம் போய் அமர, இன்னொன்று தொட்டுவிட்டாற்போல அங்கிருந்து கிளம்பி இந்தப் பக்கம் வருகிறது. நடுவில் ஒரு வளையம் போன்ற அமைப்புக்குள் நுழைந்து வேறு வித்தை காட்டுகிறது! "ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம்தாண்டா சோறு" என்பது போல திட்டில் சில பறவைகள் சோர்வுடன் அல்லது சோகத்துடன் அமர்ந்திருக்கின்றன!
ஆமாம் ஸ்ரீராம், ஹைஃபைவ் நீங்களும் அலல்து கமலாக்கா, கோமதிக்கா யாராச்சும் சொல்லுவாங்கன்னு நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க. எனக்கும் தோன்றியது அப்ப கோகோ விளையாட்டு விளையாடுவது போல....
ஆமாம் ஸ்ரீராம் ரொம்ப அழகாக இருந்தது பார்க்க. ஒருவிதம் எடுத்திருந்தாலும் இன்னும் கேமரா நல்லதாக இருந்திருந்தால் தெளிவாக இருந்திருக்குமே என்றும் தோன்றியது..
//"ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம்தாண்டா சோறு" என்பது போல திட்டில் சில பறவைகள் சோர்வுடன் அல்லது சோகத்துடன் அமர்ந்திருக்கின்றன!//
ஹாஹாஹா சிரித்துவிட்டேன். நான் கோகோ என்று நினைத்தேன்....இது வேறு மாதிரி எனக்குத் தோன்றியது....முடியலைப்பா தொட்டு பிடிச்சு விளையாடி...இடைல இங்க கொஞ்சம் உக்காந்துக்கறோம் வேற யாராச்சும் வந்து எங்களை தொட்டு அவுட் பற பறன்னு சொல்லி பறக்கற வ்ரைன்னு....
நான் இதை நேரில் ரொம்ப ரசித்துப் பார்த்தேன், ஸ்ரீராம்.
பறவைகளைப் பார்த்து கேமராவில் படம் எடுத்ததும், கூகுளில் போட்டுப் பார்ப்பேன். அத்தகவல் சரியா என்று பார்த்துக் கொள்வேன். கூடவே சலிம் அலி எழுதிய புத்தகமும் இருக்கிறதே, மகன் வாங்கியது. ஆனால் அது கறுப்பு வெள்ளை படம். பல படங்கள் சரியாக இருக்காது. ஆனால் குறிப்புகளை வைத்து தெரிந்து கொள்வதுதான், ஸ்ரீராம். அப்புறம் கூகுளில் பறவைகள் பற்றிய சரியான தகவல்கள் இருக்கும் சுட்டியில், விக்கியில் தெரிந்து கொள்வதுதான். இப்போதைக்கு இங்கு ஏரிகளில் பார்க்கும் பறவைகளப் பற்றி மட்டுமே தெரியும்.
ஊரில் இருந்த போதே இந்த ஆர்வம், இயற்கை, விலங்குகள், பூக்கள் பறவைகள் என்று ஒரு வேளை அதுதான் மகனுக்கும் வந்திருக்கோ என்று நினைப்பதுண்டு.
பல மரங்கள் பெயர்களுடனே அங்கு இருக்கு. ஒரு சில எடுத்திருக்கிறேன் எல்லாம் எடுக்க முடியவில்லை. எழுத்துகள் சின்னதாக இருந்தன. உள்ளே செல்ல முடியாது. தூரத்தில் இருந்து எடுத்தேன். 4, 5 வகைகள் எடுத்ததை அடுத்த பதிவில் பகிர்கிறேன்.
குச்சி போல காட்சி கொடுத்த முதலை படம், சின்ன தீவு போன்ற பாறை திட்டுகளில் பறவைகள் அமர்ந்து இருப்பது அழகு.
ஒவ்வொரு பறவையாக பறந்து வந்து அமர்வது பார்க்க நன்றாக இருந்தது காணொளியில்.//
நன்றி கோமதிக்கா. காணொளி தெரிகிறது இல்லையா? ஓரளவேனும்.
பறவைகள் பறப்பது தெரிகிறது இல்லையா, நன்றி கோமதிக்கா
//பறவை பறந்து வந்து நதியில் மீனை கொத்த முயல்வதை எடுக்க முயற்சி செய்து இருக்கிறீர்கள். சிறகை விரித்து கீழ் நோக்கி இறங்கி கொண்டு இருக்கிறது.//
ஆமாம் அக்கா அதேதான். பெலிக்கன் ஒன்று பறந்து வருகிறது இல்லையா, இலைகளுக்கு நடுவில் அது தண்ணீரில் அருகில் வருவது போல வந்தது அதை க்ளிக் செய்தேன் அடுத்து அது எழும்பி பறந்துவிட்டது. இலைகளும் மறைத்துவிட்டது. என் கேமரா ஒரு படம் எடுத்து அதை சேவ் செய்து அடுத்த படத்துக்கு அது தயாராவதற்குள் டைம் எடுக்கிறது. நான் பறவைகளை எடுக்கும் போது தொடர்ந்து எடுக்கும் ஆப்ஷனை தேர்வு செய்யாமல் விட்டுவிட்டேன். விசாகப்பட்டினத்தில் எடுத்தப்ப அதுபயன்படுத்தி எடுத்ததால் அழகான ஷாட் கிடைத்தது. இப்ப அதைத் தேர்ந்தெடுக்காமல் விட்டுவிட்டேன் இனி அப்படி எடுக்க வே ண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
காணொளியில் பறவைகள் அங்கும் இங்கும் பறந்து அமர்வது தெரிகிறது. காகம் கரைந்து கொண்டு இருக்கிறது. நாரைகள் சத்தமும் கேட்கிறது. காற்றை கிழித்துக் கொண்டு படகு போவது கேட்கிறது. (காற்றின் ஒலி கேட்கிறது)
வெள்ளை நாரைகள் பறப்பது அழகு. திட்டில் வரிசையாக அமர்ந்து இருப்பது பார்க்க அழகு. நதியோரம் நாணல் புதர்களுக்கு பதிலாக மூங்கில் மரங்கள் பார்க்க அழகு. மரங்களில் பச்சை இலைகளும், வெள்ளை பறவைகளும், வானத்தின் நீலமும் வண்ணமயமாக காட்சி அளிப்பதை பார்க்க அழகு.
நீங்கள் யாரென்று குறிப்பிடுங்கள் பெயரில்லா....இல்லைனா எப்படித் தெரியும்?
பெயரில்லா என்று வந்த கருத்தை மேலே வெளியிட்டு பதிலும் கொடுத்திருக்கிறேன். இந்தப் பெயரில்லாவும் அந்தப் பெயரில்லாவும் ஒருவரா என்று எனக்கு எப்படித் தெரியும்?
பெயரில்லா என்று வருவதில் பிரச்சனை இல்லை ஆனால் தயவாய் உங்கள் கருத்துடன் பெயரையும் கொடுக்கவும்
சில நேரங்களில், இடையில் குமுதத்தில் வரும் தொடர்கதையைப் படிக்கவிட்டுவிட்டாலும், அதன் தொடர்ச்சியைப் படிப்பதில் ஒரு பிரச்சனையும் வராததுபோல, அதிலும் தற்கால தொலைக்காட்சித் தொடர்களை இடையில் பத்து நாட்கள் பார்க்காமல் இருந்தாலும் தொடர்ச்சி விட்டுப்போகாதது போல, எத்தனை பகுதிகளை நான் படிக்கவில்லையோ தெரியவில்லை. ஆனால் இன்னும் பறவைகள் வந்தபாடில்லை. ஹா ஹா ஹா
ஷில்லாங்கில் ஒரு பார்க்குக்கு நானும் மனைவியும் மாத்திரம் சென்றிருந்தோம். அதில் இருந்த சிறு குளத்தில், நீங்க ஒரு பறவையை அடிக்கடிச் சொல்வீங்களே (பெரிய மீனைப் பிடிக்கும்படியாக மிக நீளமான அலகு, பெரிய தொண்டையுடன் கூடிய பறவை). அந்தப் பெயரைப் பார்த்ததும் எனக்கு உங்கள் நினைவு வந்தது. ஒரே ஒரு அந்தப் பறவை இருந்ததை எல்லாக் கோணங்களிலும் படம் பிடித்தேன். பகிர்கிறேன்.
விளக்கங்களுடன் விரிவான பகிர்வு. படங்கள், காணொளி நன்று. அங்குமிங்குமாக ஏதேனும் ஒரு பறவை வட்டமிட்டபடியே இருக்கும். அப்படிப் பறந்தவற்றைத் தனியாக சில படங்கள் எடுக்க முடிந்தது. பூங்காவின் உட்பக்கம் வரை நான் செல்லவில்லை. பறவை கண்காணிப்புக் கோபுரங்களின் படங்கள் அருமை. விழுந்து விடுவோமோ எனும் பயத்தில் பாதி உயரமே ஏறினேன்:).
ஆமாம் ஏதேனும் ஒரு பறவை அப்படியும் இப்படியும் பறந்து வட்டமிட்டபடியே இருக்கும்...இருந்தது.
//அப்படிப் பறந்தவற்றைத் தனியாக சில படங்கள் எடுக்க முடிந்தது.//
நீங்க அருமையா எடுத்திருப்பீங்க.
பறவை கண்காணிப்புக் கோபுரங்களின் படங்கள் அருமை. விழுந்து விடுவோமோ எனும் பயத்தில் பாதி உயரமே ஏறினேன்:).//
ஓ! ஆனால் ஏறும் போது கொஞ்சம் அதிரும் சத்தம் கேட்கத்தான் செய்தது. நான் ஏறிவிட்டேன் எப்படியோ. இன்னொன்று ஏறினால் தான் நல்ல வியூ கிடைக்கும்னும் நினைத்ததால் ஏறிவிட்டேன்,
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய படங்களும் அருமை. நல்ல விபரங்கள். இங்கு செல்பவர்களுக்கு நல்ல வழிகாட்டியான பதிவு.
மூங்கில் மரங்களின் அணிவகுப்பு அருமை. அது எப்போதுமே ஒரே நேர்வரிசையில் அணிவகுத்துதான் இருக்குமில்லையா? பார்வையாளர் கோபுரம் ஏறி படங்கள் எடுத்திருப்பதும் கண்டேன். அந்த படங்களும் தண்ணீரில் பறவைகள் ஒட்டியபடி பறப்பதும் அழகாக இருக்கிறது. நான் கூட அவை அப்படி பறப்பதை பார்க்கும் போது, அதன் சிறகுகள் நனைந்து விடுமே என நினைப்பேன். ஆனால், அது லாவகமாக தண்ணீரை தொட்டும், தொடாமலும் பறப்பதை காணும் போது அது நம் கண்களுக்கு ஒரு விருந்து இல்லையா?
முதலை நீருக்குள் இருந்துகிட்டே தங்களுக்கு ஒரு குச்சி மாதிரி போஸ் தந்திருக்கும் படமும் நன்றாக உள்ளது. பெரிதாக்கி பார்க்கும் போது சற்று பயமாகவும் உள்ளது. அந்த நேரம் அங்கொரு படகு சென்றால் அது நகர்ந்து வழி விடுமா.? தெரியவில்லையே..!
காணொளியும் அருமை. ஒரே பறவையை விடாமல் உங்கள் கேமிரா துரத்தியுள்ளதை ரசித்தேன். மரத்தில் வந்தமர்ந்த அந்த பறவை உங்கள் கேமிராவைதான் பார்க்கிறது போலும். எங்கே சென்றாலும், இது விடாமல் பின்னாடியே வருகிறதே என வந்தமர்ந்த விட்ட பின் தங்கள் புகைப்பட கருவியை உற்று நோக்குகிறதோ? பறவைகள் திட்டுக்கள் வந்தமர்வதும், பறப்பதுமாக காணொளி கண்களுக்கு விருந்து. அடுத்து பார்த்த விபரங்களை படிக்க ஆவலாக காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலாக்கா. படங்களையும் காணொளியையும் ரசித்ததற்கு நன்றி.
நீக்குஆமா அக்கா நேரில் பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். பறவைகளின் செயல்பாடுகள். இயற்கையே நம்மை மறக்கச் செய்வதுதானே.
படகில் செல்லும் போதும் முதலைகள் தெரிந்ததுதான் இருந்தாலும் மேலிருந்து பார்க்கறப்ப அப்படித் தோன்றியது.
ஆமாம் என் கேமரா துரத்திச் சென்று படமெடுத்தது!!! கேமராவுக்குப் போஸ் கொடுத்ததாக இருக்கலாம்!!!
நன்றி கமலாக்கா
கீதா
அழகான படங்கள்! முதலை இருக்கும் ஏரியில் படகு சவாரியா? கடவுள்தான் காப்பாற்றிருக்கிறார்.
பதிலளிநீக்குபெயரில்லா யார் என்று குறிப்பிடுங்கள் தயவாய்.
நீக்குஅங்கு முதலைகள் உண்டு என்று தெரியும். முந்தைய பதிவுகளில் படங்களும் போட்டிருக்கிறேன் விவரங்களும் கொடுத்திருக்கிறேன்.
நன்றி பெயரில்லா.
கீதா
அது ஏரி அல்ல. காவிரி நதி.
நீக்குகீதா
டவர் படங்கள் நன்றாக உள்ளன. மரங்களின் பெயர்பலகையை யாரோ பின் நின்று பிடித்து காட்டுவது போல் உள்ளது. அவ்வாறு நின்றவர் யார்?
பதிலளிநீக்குJayakumar
நன்றி ஜெ கெ அண்ணா.
நீக்குஅது அப்படி வடிவமைத்திருக்காங்க தத்ரூபமாக. யாரும் நிற்கவில்லை அண்ணா.
கீதா
மூங்கில் காடுகளே என்று பாடியபடி நடக்கும்போது மூங்கிலை மேலே தூங்கும் பனி இல்லையா?!
பதிலளிநீக்குஹாஹாஹாஹா....ஸ்ரீராம், வெயில் ஆச்சே!!! பாட்டு நினைவுக்கு வரலை டக்குனு போட்டுப் பார்த்துக் கேட்கிறேன்.
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
அந்த டவர்களைப் பார்த்தாலே கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. கம்பிப் படிகள். ஏறினால் ஆடுமோ என்கிற பயம்... நானும் ஆடி விடுவேன்!!
பதிலளிநீக்குஆமாம் கொஞ்சம் அதிரும் யாராவது ஏறி வந்தால். எனக்கும் அதிர்ந்தது!!! அதில் கை அசைந்த படங்களை அழித்துவிட்டேன்!!
நீக்குமீதி கருத்துகள் மாலையில் தருகிறேன்.
கீதா
படங்கள் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கின்றன. அலைபேசியில் எடுப்பதைவிட நன்றாக எடுக்க முடிகிறதே...
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம், எனக்கு அலைபேசியை விட கேமராதான் பிடிக்கிறது. என் அலைபேசியில் ஜூம் ஆப்ஷன் தூரம் கம்மிதானே. அதனால்தான் நல்ல கேமரா வாங்க ஆசையாக இருக்கு. ஆனால் பாக்கெட் அதற்கு இடம் கொடுக்காது தற்போது.
நீக்குஇல்லை என்றால் ஐஃபோன் போன்ற ஹைடெக் அலைபேசி இருந்தால் நன்றாக எடுக்க வரும் பறவைகள் உட்பட. இன்று நெருங்கிய உறவினர் பையனைப் பார்க்கப் போயிருந்தேன் இல்லையா. அவன் எனக்கு அவன் ஹவாய் சென்றிருந்த போது எடுத்த படங்களைக் காட்டினான். எரிமலைகள், பறவைகள் எல்லாம். அவனிடம் நல்ல கேமராவும் இருக்கிறது. அவன் மொபைலில் எடுத்ததைத்தான் காட்டினான். அவ்வளவு அழகாக இருந்தன. இரவுக் காட்சிகள் முதல். குட்டிப் பறவைகள் கூட மிக அழகாக வந்திருந்தன. அதுவும் வானத்தின் நிறம் எல்லாம் அட்டகாசமாக இருந்தன ஏதோ பெயின்ட் அடித்தது போன்று. மாலை நேரவானம். செக்கச் சிவந்த வானம் எல்லாம். எரிமலை....ஜூம் செய்து எடுத்தவை. எனக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறேன்.
கீதா
திகில் காட்சிபோல முதலையைக் காட்டுகிறீர்கள்! நல்லவேளை, ஒன்று அந்த முதலை அன்று பெருமாளுக்கு விரதமாயிருந்திருக்க வேண்டும், அல்லது லஞ்ச் ஆல்ரெடி முடித்திருக்க வேண்டும்!
பதிலளிநீக்குஹாஹாஹாஹாஹா....சிரித்துவிட்டேன். அன்று ஞாயிறு. என்ன விசேஷமோ விரதம் இருக்க!!!!!
நீக்குஸ்ரீராம், படகில் செல்லும் போது பார்த்தேனே வாயைப் பிளந்து கொண்டும் இலைமறை காயாக தண்ணீரில் இருந்ததையும். ஆனால் அப்போதை விட இப்படி எடுத்த போதுதான் ஆ! என்று தோன்றியது. ஏனென்றால் கண்ணுக்கே தெரியாமல் அல்லவா இருக்கு பாருங்க. எப்படியோ ஒரு சாகசம் என்றே தோன்றியது.
நன்றி ஸ்ரீராம்
கீதா
ஒரு பறவை கழுத்துவரை தண்ணீரில் முங்கி நிற்பதைப் படம் எடுக்க முயன்றிருக்கிறீர்கள், சரியா?
பதிலளிநீக்குமுதலை கேமராவில் சிக்கிய படத்தில், பறவை அந்தக் குச்சியை (முதலை என்று தெரியாதே) எடுக்க வருகிறது அதான் தண்ணீரில் அருகில் வருகிறது என்று நினைத்து காணொளி எடுக்கலாமா சரியாக எடுக்க வேண்டும் என்று காணொளி ஆப்ஷன் பட்டனை கீழே தள்ள யோசித்துக் கொண்டிருந்த போதே பறவை கேமரா ஃப்ரேமிலிருந்து விலகியிருக்க நான் பட்டனை தள்ளாமலேயே க்ளிக் செய்திருக்கிறேன். முதலை சிக்கியது பறவை பறந்து போச்!
நீக்குகீதா
ஸ்ரீராம், மற்ற படத்தில், என் கேள்விக்கு நீங்க சொல்லியிருப்பது - நான் முயற்சி செய்ததை கோமதிக்கா சொல்லியிருக்காங்க. அது அப்படி மீனைப் பிடிக்குமோன்னு நினைச்சேன் ஆனா அது கிடைக்கலை....
நீக்குகீதா
காணொளி பார்த்தேன். பறக்கும் அந்தப் பறவைகளை பொறுமையாக, திறமையாக கேமிரா ரொம்ப ஆடாமல் பின்தொடர்ந்திருக்கிறீர்கள். கோகோ விளையாடுவது போல ஒன்று இந்தப் பக்கம் போய் அமர, இன்னொன்று தொட்டுவிட்டாற்போல அங்கிருந்து கிளம்பி இந்தப் பக்கம் வருகிறது. நடுவில் ஒரு வளையம் போன்ற அமைப்புக்குள் நுழைந்து வேறு வித்தை காட்டுகிறது! "ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம்தாண்டா சோறு" என்பது போல திட்டில் சில பறவைகள் சோர்வுடன் அல்லது சோகத்துடன் அமர்ந்திருக்கின்றன!
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம், ஹைஃபைவ் நீங்களும் அலல்து கமலாக்கா, கோமதிக்கா யாராச்சும் சொல்லுவாங்கன்னு நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க. எனக்கும் தோன்றியது அப்ப கோகோ விளையாட்டு விளையாடுவது போல....
நீக்குஆமாம் ஸ்ரீராம் ரொம்ப அழகாக இருந்தது பார்க்க. ஒருவிதம் எடுத்திருந்தாலும் இன்னும் கேமரா நல்லதாக இருந்திருந்தால் தெளிவாக இருந்திருக்குமே என்றும் தோன்றியது..
//"ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம்தாண்டா சோறு" என்பது போல திட்டில் சில பறவைகள் சோர்வுடன் அல்லது சோகத்துடன் அமர்ந்திருக்கின்றன!//
ஹாஹாஹா சிரித்துவிட்டேன். நான் கோகோ என்று நினைத்தேன்....இது வேறு மாதிரி எனக்குத் தோன்றியது....முடியலைப்பா தொட்டு பிடிச்சு விளையாடி...இடைல இங்க கொஞ்சம் உக்காந்துக்கறோம் வேற யாராச்சும் வந்து எங்களை தொட்டு அவுட் பற பறன்னு சொல்லி பறக்கற வ்ரைன்னு....
நான் இதை நேரில் ரொம்ப ரசித்துப் பார்த்தேன், ஸ்ரீராம்.
நன்றி ஸ்ரீராம் நீங்களும் ரசித்துப் பார்த்ததற்கு
கீதா
பார்க்கும் இந்தப் பறவைகளில் நத்தை கொத்தி நாரை நகம் வெட்டும் நாரை என்றெல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறீர்கள்?
பதிலளிநீக்குஹாஹாஹாஹா //நகம் வெட்டும் நாரை// சிரித்துவிட்டேன், ஸ்ரீராம்.
நீக்குபறவைகளைப் பார்த்து கேமராவில் படம் எடுத்ததும், கூகுளில் போட்டுப் பார்ப்பேன். அத்தகவல் சரியா என்று பார்த்துக் கொள்வேன். கூடவே சலிம் அலி எழுதிய புத்தகமும் இருக்கிறதே, மகன் வாங்கியது. ஆனால் அது கறுப்பு வெள்ளை படம். பல படங்கள் சரியாக இருக்காது. ஆனால் குறிப்புகளை வைத்து தெரிந்து கொள்வதுதான், ஸ்ரீராம். அப்புறம் கூகுளில் பறவைகள் பற்றிய சரியான தகவல்கள் இருக்கும் சுட்டியில், விக்கியில் தெரிந்து கொள்வதுதான். இப்போதைக்கு இங்கு ஏரிகளில் பார்க்கும் பறவைகளப் பற்றி மட்டுமே தெரியும்.
ஊரில் இருந்த போதே இந்த ஆர்வம், இயற்கை, விலங்குகள், பூக்கள் பறவைகள் என்று ஒரு வேளை அதுதான் மகனுக்கும் வந்திருக்கோ என்று நினைப்பதுண்டு.
நன்றி ஸ்ரீராம்.
கீதா
பார்வையாளர் கோபுரங்கள் மேல் இருந்து எடுத்த படங்கள், காணொளிகள் அருமை கீதா.
பதிலளிநீக்குபலவகை மரங்களை குறிப்பிடும் பூங்கா அறிவிப்பு பலகை இரண்டு கைகள் பிடித்து இருப்பது போல இருப்பது அருமை.
குச்சி போல காட்சி கொடுத்த முதலை படம், சின்ன தீவு போன்ற பாறை திட்டுகளில் பறவைகள் அமர்ந்து இருப்பது அழகு.
ஒவ்வொரு பறவையாக பறந்து வந்து அமர்வது பார்க்க நன்றாக இருந்தது காணொளியில்.
நன்றி கோமதிக்கா.
நீக்குபல மரங்கள் பெயர்களுடனே அங்கு இருக்கு. ஒரு சில எடுத்திருக்கிறேன் எல்லாம் எடுக்க முடியவில்லை. எழுத்துகள் சின்னதாக இருந்தன. உள்ளே செல்ல முடியாது. தூரத்தில் இருந்து எடுத்தேன். 4, 5 வகைகள் எடுத்ததை அடுத்த பதிவில் பகிர்கிறேன்.
குச்சி போல காட்சி கொடுத்த முதலை படம், சின்ன தீவு போன்ற பாறை திட்டுகளில் பறவைகள் அமர்ந்து இருப்பது அழகு.
ஒவ்வொரு பறவையாக பறந்து வந்து அமர்வது பார்க்க நன்றாக இருந்தது காணொளியில்.//
நன்றி கோமதிக்கா. காணொளி தெரிகிறது இல்லையா? ஓரளவேனும்.
கீதா
பறவைகள் பறப்பது தெரிகின்றதா?//
பதிலளிநீக்குதெரிகிறது.
//இப்படத்தில் என்ன தெரிகிறது எதை நான் எடுக்க முயற்சி செய்திருக்கிறேன் என்று கண்டுபிடிக்க முடிகிறதா?//
பறவை பறந்து வந்து நதியில் மீனை கொத்த முயல்வதை எடுக்க முயற்சி செய்து இருக்கிறீர்கள். சிறகை விரித்து கீழ் நோக்கி இறங்கி கொண்டு இருக்கிறது.
பறவைகள் பறப்பது தெரிகிறது இல்லையா, நன்றி கோமதிக்கா
நீக்கு//பறவை பறந்து வந்து நதியில் மீனை கொத்த முயல்வதை எடுக்க முயற்சி செய்து இருக்கிறீர்கள். சிறகை விரித்து கீழ் நோக்கி இறங்கி கொண்டு இருக்கிறது.//
ஆமாம் அக்கா அதேதான். பெலிக்கன் ஒன்று பறந்து வருகிறது இல்லையா, இலைகளுக்கு நடுவில் அது தண்ணீரில் அருகில் வருவது போல வந்தது அதை க்ளிக் செய்தேன் அடுத்து அது எழும்பி பறந்துவிட்டது. இலைகளும் மறைத்துவிட்டது. என் கேமரா ஒரு படம் எடுத்து அதை சேவ் செய்து அடுத்த படத்துக்கு அது தயாராவதற்குள் டைம் எடுக்கிறது. நான் பறவைகளை எடுக்கும் போது தொடர்ந்து எடுக்கும் ஆப்ஷனை தேர்வு செய்யாமல் விட்டுவிட்டேன். விசாகப்பட்டினத்தில் எடுத்தப்ப அதுபயன்படுத்தி எடுத்ததால் அழகான ஷாட் கிடைத்தது.
இப்ப அதைத் தேர்ந்தெடுக்காமல் விட்டுவிட்டேன் இனி அப்படி எடுக்க வே ண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
நன்றி கோமதிக்கா
கீதா
காணொளியில் பறவைகள் அங்கும் இங்கும் பறந்து அமர்வது தெரிகிறது. காகம் கரைந்து கொண்டு இருக்கிறது. நாரைகள் சத்தமும் கேட்கிறது. காற்றை கிழித்துக் கொண்டு படகு போவது கேட்கிறது. (காற்றின் ஒலி கேட்கிறது)
பதிலளிநீக்குவெள்ளை நாரைகள் பறப்பது அழகு. திட்டில் வரிசையாக அமர்ந்து இருப்பது பார்க்க அழகு.
நதியோரம் நாணல் புதர்களுக்கு பதிலாக மூங்கில் மரங்கள் பார்க்க அழகு.
மரங்களில் பச்சை இலைகளும், வெள்ளை பறவைகளும், வானத்தின் நீலமும் வண்ணமயமாக காட்சி அளிப்பதை பார்க்க அழகு.
ஆமாம் காகம் சத்தமும் நாரைகளின் சத்தமும் கேட்குது இல்லையாக்கா..
நீக்குஆமாம் மூங்கில்கள் நிறைய இருக்கு கோமதிக்கா. எல்லாம் ரசித்துப் பார்த்ததற்கு நன்றி கோமதிக்கா
கீதா
படங்களும் , காணொளி இணைப்பும் செய்திகளும் அருமை.
பதிலளிநீக்குநன்றி கோ.
நீக்குகீதா
நான் போட்ட கருத்து எங்கே?
பதிலளிநீக்குநீங்கள் யாரென்று குறிப்பிடுங்கள் பெயரில்லா....இல்லைனா எப்படித் தெரியும்?
நீக்குபெயரில்லா என்று வந்த கருத்தை மேலே வெளியிட்டு பதிலும் கொடுத்திருக்கிறேன். இந்தப் பெயரில்லாவும் அந்தப் பெயரில்லாவும் ஒருவரா என்று எனக்கு எப்படித் தெரியும்?
பெயரில்லா என்று வருவதில் பிரச்சனை இல்லை ஆனால் தயவாய் உங்கள் கருத்துடன் பெயரையும் கொடுக்கவும்
கீதா
சில நேரங்களில், இடையில் குமுதத்தில் வரும் தொடர்கதையைப் படிக்கவிட்டுவிட்டாலும், அதன் தொடர்ச்சியைப் படிப்பதில் ஒரு பிரச்சனையும் வராததுபோல, அதிலும் தற்கால தொலைக்காட்சித் தொடர்களை இடையில் பத்து நாட்கள் பார்க்காமல் இருந்தாலும் தொடர்ச்சி விட்டுப்போகாதது போல, எத்தனை பகுதிகளை நான் படிக்கவில்லையோ தெரியவில்லை. ஆனால் இன்னும் பறவைகள் வந்தபாடில்லை. ஹா ஹா ஹா
பதிலளிநீக்குஹாஹாஹா....ஹலோ பறவைகள் எல்லாம் வந்தாச்சு நீங்க பார்க்கலைனா அதுக்கு நான் எப்படிப் பொறுப்பு!!!!!!
நீக்குமுந்தைய பதிவுகளைப் பாருங்க தெரியும்....
நன்றி நெல்லை
கீதா
இருக்கற ஒரே நிறப் பறவைகளுக்கு விதவிதமாகப் பெயர் கொடுக்கறீங்க. ஹா ஹா. எனக்கு எல்லாமே ஒரே பறவையாகத்தான் தெரிகிறது.
பதிலளிநீக்குஇடையில் ஏதோ நெட்டி தண்ணீரில் மிதக்குது என்று நினைத்தால் அதுதான் முதலை என்று அடிச்சுச் சொல்றீங்க.
ஹாஹாஹா .....நேரில் பார்த்தால் வித்தியயசம் தெரியும்...சும்மா என்னை கலாய்க்கறீங்க தெரியுது!!! வைச்சு செய்யறீங்க ..செஞ்சுக்கோங்க!!!
நீக்குஹாஹா நிஜமாவே அது முதலைதான் நெல்லை...வாய் தெரியுது பாருங்க...
கீதா
ஷில்லாங்கில் ஒரு பார்க்குக்கு நானும் மனைவியும் மாத்திரம் சென்றிருந்தோம். அதில் இருந்த சிறு குளத்தில், நீங்க ஒரு பறவையை அடிக்கடிச் சொல்வீங்களே (பெரிய மீனைப் பிடிக்கும்படியாக மிக நீளமான அலகு, பெரிய தொண்டையுடன் கூடிய பறவை). அந்தப் பெயரைப் பார்த்ததும் எனக்கு உங்கள் நினைவு வந்தது. ஒரே ஒரு அந்தப் பறவை இருந்ததை எல்லாக் கோணங்களிலும் படம் பிடித்தேன். பகிர்கிறேன்.
பதிலளிநீக்குஓ சமீபத்திய பயணத்தில் மேகாலயாவில்....
நீக்குபெலிக்கனா? தொண்டை பெரிசானா அதுதான். பகிருங்க ....பார்க்கிறேன்.
நன்றி நெல்லை
கீதா
விளக்கங்களுடன் விரிவான பகிர்வு. படங்கள், காணொளி நன்று. அங்குமிங்குமாக ஏதேனும் ஒரு பறவை வட்டமிட்டபடியே இருக்கும். அப்படிப் பறந்தவற்றைத் தனியாக சில படங்கள் எடுக்க முடிந்தது. பூங்காவின் உட்பக்கம் வரை நான் செல்லவில்லை. பறவை கண்காணிப்புக் கோபுரங்களின் படங்கள் அருமை. விழுந்து விடுவோமோ எனும் பயத்தில் பாதி உயரமே ஏறினேன்:).
பதிலளிநீக்குமிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஆமாம் ஏதேனும் ஒரு பறவை அப்படியும் இப்படியும் பறந்து வட்டமிட்டபடியே இருக்கும்...இருந்தது.
//அப்படிப் பறந்தவற்றைத் தனியாக சில படங்கள் எடுக்க முடிந்தது.//
நீங்க அருமையா எடுத்திருப்பீங்க.
பறவை கண்காணிப்புக் கோபுரங்களின் படங்கள் அருமை. விழுந்து விடுவோமோ எனும் பயத்தில் பாதி உயரமே ஏறினேன்:).//
ஓ! ஆனால் ஏறும் போது கொஞ்சம் அதிரும் சத்தம் கேட்கத்தான் செய்தது. நான் ஏறிவிட்டேன் எப்படியோ. இன்னொன்று ஏறினால் தான் நல்ல வியூ கிடைக்கும்னும் நினைத்ததால் ஏறிவிட்டேன்,
நன்றி ராமலக்ஷ்மி
கீதா