வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

கொக்கரேபெல்லூர் - பறவைகளும் மனிதர்களும் இயைந்து வாழும் கிராமம் - 3

முன்பெல்லாம் இரண்டாயிரத்திற்கும் மேலான பறவைகள் வந்து கொண்டிருந்ததாகவும், சமீபகாலங்களில் அலைபேசி கோபுரங்களினால் வரவு குறைந்துவிட்டது என்றும், மேலும் சில பறவைகள் இங்கு வந்து நோய்வாய்ப்பட்டதால் அதன்பின் வருவதில்லை என்றும் வருத்தத்துடன், WWFன் இயற்கை விளக்க மையத்தைப் பார்த்துக் கொள்ளும் திரு கிருஷ்ணா சொன்னார். "பறவைகள் வருவதும் தாமதமாகிவிட்டது, ஜனவரி கடைசி, ஃபெப்ருவரியில் வந்துவிடும், என்னை அழைத்துக் கேட்டுவிட்டு வாங்க" என்று  தன் மொபைல் நம்பரைத் தந்து என் கணவரின் நம்பரையும் பெற்றுக் கொண்டார். பார்வையாளர்களின் பெயர், ஊர், அலைபேசி எண், தேதி, கையெழுத்து இவற்றை வருகைப் பதிவேட்டில் பதிவு செய்யச் சொல்கிறார். 

நாங்கள் அன்றைய ஆட்டோக்காரரின் கார்டையும் வாங்கி வைத்துக் கொண்டோம். ஃபெப்ருவரியில் வரவேண்டி வரலாம் என்று. இது முதல் பயணத்தில்.


ஃபெப்ருவரி மாதம் பிறந்ததும், நாங்கள் மையப் பொறுப்பாளரை அழைத்ததும் பறவைகள் வந்திருப்பதாகச் சொன்னார். திரும்ப அவரிடமிருந்து அழைப்பு.  கிட்டத்தட்ட 600 வந்திருப்பதாகச் சொன்னார். எங்களால் வார இறுதியில்தான் வர முடியும் என்றதும், 'அப்படினா இன்னும் 400 வரலாம்' என்று  ஏதோ திருவிழா, கல்யாணத்துக்கு நாம் எதிர்பார்ப்போமே அப்படியான ஓர் உணர்வுக் குரல்.


எப்படிக் கணக்கெடுப்பார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது. (அதற்குத்தான் அங்கு ஒரு குழுவும் இருக்கிறதே. கூடவே கிராமத்தாட்களும்) ஒரு வேளை பறவைகள் உள்ளே வரும் போது வருகைப் பதிவேட்டில் பதியுமோ!!


நாங்கள் ஃபெப்ருவரி 9, ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை செல்லலாம் என்று முடிவு செய்திருந்த போது, நம்ம இளைய/மூத்த பதிவரிடம் இருந்து அழைப்பு. ஓ! மறந்துவிட்டேன் பாருங்கள்! முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன் இல்லையா இப்பதிவில் அவர் வருவார் என்று. இதோ இவர்தாங்க அவர்! 

'நான் அவனில்லை' ங்க. நான் ரொம்பச் சின்னப்பையன். என்னை மாதிரி இருக்கறவங்க யாரையோ போட்டுட்டு இந்த அக்கா ஏதோ கதை விடுறாங்க போல!!

“இந்த வார விடுமுறையில் உங்களைப் பார்க்க வரலாமா?”.

“நாங்க ஞாயிறு கொக்கரேபெல்லூர் போகிறோமே”

“என்னது என்ன சொன்னீங்க? வித்தியாசமா இருக்கு. வித்தியாசமான இடங்களுக்குப் போறீங்க. அதெங்கருக்கு" நான் மீண்டும் சொன்னேன்.

"நானும் சேர்ந்துக்கலாமா, உங்க ஹஸ்பண்ட்கும் ஒகேவா இருக்குமா?”

“அதெல்லாம் ஒன்னும் நினைச்சுக்க மாட்டார், நோ ப்ராப்ளம்”

"நான் கண்டிப்பா வரேன். என் ஹஸ்பண்டும் வருவாங்களான்னு உறுதிப்படுத்திவிட்டுச் சொல்கிறேன்"

"டன்". நாங்கள் காலை 5 மணிக்குக் கிளம்புவதாக இருக்கிறோம், சாப்பாடு நாம் கொண்டு செல்வது நல்லது என்றதும் தொடங்கியது வழக்கமான எங்கள் இருவருக்குமான சண்டைகள்!!!!

"நான் ஸ்வீட் கொண்டு வரட்டுமா?" என்னிடமிருந்து "நோ. நோ ஸ்வீட்ஸ் நோ ஸ்னாக்ஸ். நான் உங்களுக்கும் சாப்பிட எடுத்துக் கொள்ளட்டுமா" 

"நான் என் வைஃப் தவிர வேறு யார் செய்யறதும் சாப்பிட மாட்டேனே, டயட், நானே கொண்டு வந்துடுவேன், உங்களுக்கும் கொஞ்சம் கொண்டு வரேன். ஓகேவா"

"நாங்களும் டயட் தான். அதென்ன நான் கொண்டு வரத நீங்க சாப்பிட மாட்டீங்களாம், நீங்க கொண்டு வரத நாங்க சாப்பிடணுமாக்கும்? இது நல்லாருக்கே?!!! நாங்களும் அளவுச் சாப்பாடுதான்." வழக்கமான என் சண்டை!!!!!!! ஒண்ணாப்பு பிள்ளைங்க போல இருக்குல்ல? பின்ன நாங்க சின்ன பிள்ளைங்கதானே! முந்தைய தினம் இப்படிச் சண்டைக்குப் பின் என்ன கொண்டு வரப் போகிறேன் என்று சொல்லி, கடைசியில் அவங்கவங்க கொண்டு வந்துக்கலாம் என்று முடிவானது. அவருடைய ஹஸ்பன்ட் வருவதும் உறுதியானது.

கிளம்பிய அன்று காலை 2.30 மணிக்கு எழுந்து என் அப்பாவுக்குத் தேவையானதை இரவு வரைக்கானவற்றை தயார் செய்து வைத்துவிட்டு - கேழ்வரகு இட்லி, தக்காளிச் சட்னி - மதிய சாப்பாட்டிற்குக் கொஞ்சமே கொஞ்சம் புளியோதரை  தயிர் சாதமும், பாவற்காய் பொரியலும் கட்டிக் கொண்டு (நெல்லையின் மனைவி சுவை பார்ப்பாங்கன்னு அவங்களுக்கும் கொஞ்சம் எடுத்துக் கொண்டேன்) + தண்ணீர் குப்பிகள் சகிதம் கணவரின் உதவியுடன் தயாராகி, முதுகுப் பையுடன் காலை 5 மணிக்கு ரெடி. நெல்லைக்கு மெசேஜ் கொடுத்து தொடர்பில் இருந்தேன்.

அன்று, வீட்டிலிருந்து பேருந்தில் சென்றால் தாமதமாகிவிடும் என்பதால் சாட்டிலைட் பேருந்து நிலையத்திற்கு நேராக ஓலா ஆட்டோவில் சென்று 5.30க்குச் சேர்ந்தாச்சு. 

நெல்லையிடமிருந்து மெசேஜ். "நாங்க கிளம்பியாச்சு, பஸ் ஸ்டாண்டில் எங்க இருக்கீங்க? லைவ் லொக்கேஷன் அனுப்புங்க"

அனுப்பினேன். 15 நிமிடங்களில் நெல்லையும் அவர் ஹஸ்பண்டும் வந்துவிட்டனர் ஆனால் லைவ் லொக்கேஷன் சரியாக அவருக்குக் காட்டவில்லை என்று அழைத்து எங்கு நிற்கிறோம் என்று கேட்டுக் கொண்டே நாங்கள் நின்றிருந்த 4 வது ப்ளாட்ஃபார்மிற்கு வந்தனர்

அன்று செம கூட்டம் இருந்திட 5, 6 வது ப்ளாட்ஃபார்மில் பார்த்தது போல இருக்கு என்று நம்ம வீட்டவர் சென்று பார்த்து வந்தார். ம்ஹூம். அங்கும் இல்லை. வரும் போது 1 ஆம் ப்ளாட்ஃபார்மில் மைசூர் செல்லும் பேருந்து இருந்ததைப் பார்த்ததாக அவர்கள் சொல்லிட அது Non Stop பேருந்தாக இருக்குமோ என்ற சந்தேகம். இருந்தாலும் அங்கு சென்று பார்த்த போது அந்தப் பேருந்து மத்தூரில் நிற்கும் என்பதை அறிந்ததும் உடன் ஏறியாச்சு. 6.10க்குக் கிளம்பும் என்று சொல்லப்பட்டு, கூட்டம் சேர்த்து 6.15க்குக் கிளம்பியது. பேருந்தில் இந்த முறை வலப்பக்க ஜன்னல் இருக்கை. எனவே இப்பக்கக் காட்சிகளும்  உங்களுக்குக் காட்ட வேண்டாமா! இதோ...

எவ்வளவு குப்பைகள் பாருங்க. பின்னில் அழகான மலைகள். ஆனால் குப்பைகள் உறுத்துக்கின்றன

ஷிம்ஷா நதி சன்னப்பட்டினா-ராமநகரா இடையில் 


ஆஞ்சு இல்லாமல் ராமநகராவா!

அன்று மத்தூருக்கு இரண்டு மணி நேரத்தில் சென்று சேந்தாச்சு. 8.15. இறங்கி REFRESH செய்துவிட்டு அங்கு பேருந்து நிறுத்தம் ஷெட்டில் உட்கார்ந்து நாங்கள் கொண்டு சென்றவற்றைச் சாப்பிட, நெல்லையின் மனைவியிடம் நாங்கள் கொண்டு சென்றதைச் சுவை பார்க்கச் சொன்னேன். ஒரு விள்ளல்! (இதற்கான பதில் ஓவர் டு நெல்லை!) அது போல அவங்க கொண்டு வந்திருந்த சுவையான பொடி இட்லியை நாங்கள் (நோட் த பாயின்ட் மக்களே!!! நாங்க இருவரும்) ஒரு விள்ளல் எடுத்துக் கொண்டோம்! 

சாப்பிட்டு முடித்ததும், நெல்லை, வாழைப்பழங்கள் வாங்கினார். அதையும் சாப்பிட்டுவிட்டு நமக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்த ஆட்டோக்காரரின் எண்ணைத் தொடர்பு கொண்டு கூடவே இன்னொரு ஆட்டோவும் வேண்டும் என்றதும், அவர் ஆஜர். இன்னொரு ஆட்டோவிற்கு வரிசையில் முதலில் நின்ற ஆட்டோகாரரிடம் விவரங்கள் சொல்லியிருப்பதாகச் சொல்லி ஏறச் சொன்னார். நெல்லையையும் அவர் மனைவியையும் ஏற்கனவே அறிமுகமாயிருந்த ஆட்டோக்காரர் வண்டியில் ஏற்றிவிட்டு நாங்கள் அந்தப் புதிய ஆட்டோக்காரர் வண்டியில் ஏறிக் கொண்டோம். 

ஓகே அப்புறம்? அடுத்த நிறைவுப் பகுதியில் சொல்றேங்க! (கண்டிப்பாக அந்த கொக்கரே சாட்சியாக நிறைவுப்பகுதிங்க) 

இப்பகுதியோடு நிறைவுப்பகுதி என்று சொல்லியிருந்தேன். எழுதியும் முடித்து படங்கள் காணொளிகள் சேர்த்தும் விட்டேன். முன்னோட்டம் பார்த்தப்ப தெரிந்தது நம்ம மக்கள் பயந்து பேக்கடிச்சுடுவாங்களோன்னு!! பாருங்க நம்மால அப்படிச் சுருக்கி எழுதிட முடியுதா!? அதனால கத்தரிய போட்டேன். அடுத்த பகுதியை ஷெட்யூலும் பண்ணிவிட்டேன்! ஞாயிறு மாலைக்கு! ஹப்பா! பெரிய Relief! 


----கீதா

61 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தகவல்கள் தொடர்ந்து வருகிறேன்....

    பதிலளிநீக்கு
  2. ஓ! இதற்கு முந்தய பதிவுகளும் இருக்கின்றனவா? பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் கில்லர்ஜியா? யார் என்று பெயரைக் குறிப்பிடலாமே

      பாருங்கள்.

      நன்றி

      கீதா

      நீக்கு
    2. முந்தைய பதிவுகள் படித்து இருக்கிறேன்.

      இது யாரென்று தெரியவில்லை.

      நீக்கு
    3. ஆமாம் கில்லர்ஜி நீங்க கருத்தும் போட்டிருக்கீங்க...யார்னு தெரியலை. பரவாள்ல ஒரு வேளை ட்ரம்ப் அங்கிளின் செக்ரட்டரியா மீண்டும் பதவிக்கு ஏறியிருக்கறவங்களோ என்னவோ!!! அப்ப அவங்க பிஸியானவங்களாச்சே!!!

      கீதா

      நீக்கு
  3. ​பறவைகளைக் காண காத்திருக்கிறேன். எங்கள் வீட்டிலும் ஒரு சிறகு ஒடிந்த காகம். பறக்க முடியாது. கடந்த சனியன்று வந்தது எப்படி வந்தது என்று தெரியவில்லை. வீட்டை சுற்றி சுற்றி நடந்து நிழல் பகுதிகளில் இளைப்பாறிக்கொள்ளும்.

    படங்கள் சின்ன சைஸாக இருப்பதால் படஙக்ளின் சிறப்பு தெரிவதில்லை. கொஞ்சம் கூடுதல் பெரிதாக போட்டிருக்கலாம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம் அந்தக் காகம். பறக்க முடியலைனா பூனையோ, நாயோ கவ்வி விடும். பாவம்

      படங்கள் மொபைலில் எடுத்தேன் அண்ணா. சின்னது செய்யவில்லை ஆனால் ப்ளாகரில் போடும் போது லார்ஜ் சைஸ்தான் செலக்ட் பண்ணினேன். எக்ஸ்ட்ரா லார்ஜில் போட்டால் ஒரு படம் அதன் கீழே மற்றொன்று இப்படித்தானே போட முடியும் பதிவு ரொம்ப நீளமாகிவிடுமோ என்று போட்டேன். இரண்டாவது பேருந்தில் செல்லும் போது எடுத்ததால் தூரத்தில் தெரிவன.

      மிக்க நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
    2. அண்ணா இப்ப ஒரிஜினல் சைஸ் மாத்திட்டேன் பாருங்க சரியா தெரியுதான்னு

      கீதா

      நீக்கு
    3. JKC Sir... அந்த சிறகு ஒடிந்த காகம் உங்கள் அடைக்கலம் நாடி வந்திருக்கிறது.  அதற்கு உணவு கொடுக்கிறீர்கள்தானே?  பாவம்.

      நீக்கு
  4. ஆமாம் இப்போது படங்கள் துல்லியமாக அழகாக உள்ளன. இந்த மாதிரி இனி படங்களை பதிவில் உட்படுத்துங்கள். சுண்டல் விற்கும் மாற்று திறனாளி படம் முன்பே எங்கோ கண்டதாக தோன்றுகிறது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜெ கே அண்ணா.

      சுண்டல் மாதிரி தெரியலையே. வண்டி பக்கத்தில் இருக்கு பாருங்க அருகில் ஒரு பெண்மணி...இப்பதானே போடுகிறேன் இந்தப்படம் அதுவும் பேருந்தில் இருந்து ஆஞ்சுவை எடுத்த படம்.

      கீதா

      நீக்கு
    2. ​ஆமாம் முன்னாள் நிற்கும் பைக்கும் பின்னல் நிற்கும் தள்ளுவண்டியும் இணைந்து விட்டதால் வந்த தோற்ற பிழை. கண்ணை டெஸ்ட் செய்து கண்ணாடி மாற்ற வேண்டும்.

      Jayakumar

      நீக்கு
    3. அண்ணா இது எல்லாருக்கும் நிகழும் ஒன்றுதானே. சிலப்போ ஃபோட்டோவில் டக்குனு சிலது க்ளியரா இல்லைனா ஏற்படுவதுதான்...

      எழுத்து வாசிக்கக் கஷ்டமா இருந்தா, முன்ன நிக்கறவங்க சரியா தெரியலைனா மாத்தினா போதுமே!!!!

      கீதா

      நீக்கு
  5. ஆஹா... நம் நண்பர் நெல்லையும் அவர் மனைவியும் (ஹஸ்பெண்ட்) உடன் வந்தார்களா... நல்ல விஷயம் தான் - இப்படி தெரிந்தவர்களுடன் பயணிப்பது.

    படங்களும் தகவல்களும் சிறப்பு.

    சாலையோர குப்பைகள் - வேதனை தான். நம் மக்கள் எங்கே சென்றாலும் இப்படித்தான் குப்பைகளை எல்லா இடங்களிலும் வீசி வருகிறார்கள். இவர்களை திருத்த முடியாது! இமய மலைச் சிகரங்கள் சென்றால் கூட அங்கேயும் குப்பைகள் நிறையவே போட்டு வருகிறார்கள் என்பதை இந்த வருடத்தின் இரண்டு பயணங்களில் பார்க்க முடிந்தது. திருந்தாத ஜென்மங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெங்கட்ஜி, அவர் டக்கென்று இணைந்து கொண்டார். அவருக்கு அந்தச் சமயத்தில் வேறு பயணங்களோ இல்லை வேறு ஷெட்யூலோ இல்லாததால் வர முடிந்ததுன்னு!! நல்லாருந்தது ஜி.

      ஆமாம் இமயமலையிலும் கூடப் போடறாங்க....பாருங்க. என்ன சொல்ல? நீங்க சொல்றாப்ல திருந்தாத ஜென்மங்கள்!

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
    2. மூணாறிலும் கண்ட கண்ட இடத்தில் காலி தண்ணீர் பாட்டில், குளிர்பான பாட்டில்கள் வீசும் கைகளின் விரலை ஒடித்துவிட்டால் திருந்துவார்களா என யோசிக்க வைத்தனர் பலர் பாட்டில்களைத் தூக்கி எறிந்திருந்த இடங்கள்

      நீக்கு
    3. கேரளத்தவர் சொல்வது, மத்த மாநிலத்தவங்க வந்துதான் அவங்க ஊரை அழுக்காக்குவதாகச் சொல்வாங்க குறிப்பாகத் தமிழ்நாட்டுக் காரங்கன்னு.

      மக்களுக்குச் சுயமாக இதெல்லாம் வந்துவிட வேண்டும். இல்லைனா அரபு நாடுகள், சிங்கப்பூர் போன்று இங்கு சட்டம் வலுவாக்க வேண்டும். நம்ம ஊரில் சுற்றுலா பெருகப் பெருக இவை அதிகமாகிறது.

      மற்றொன்று, அரசும் அவர்கள் பங்கில் சுத்தம் செய்வது இல்லை. மேம்பாலம், ரயில் பாலங்கள் கட்டறாங்க. கீழே குப்பையைப் பார்த்திருப்போம். அதைச் சுத்தம் செய்வது இல்லை. அரசு எவ்வழி அவ்வழி மக்கள் என்றும் சொல்லலாம்.

      கீதா

      நீக்கு
  6. நெல்லைத்தமிழன் , தன் மனைவியுடன் (ஹஸ்பெண்ட்) வந்தது சிறப்பு. இளையவர் என்றதுமே நான் ஊகித்து விட்டேன்.
    ராகி இட்லி நன்றாக இருந்தது என்றார்கள் என்று "எங்கள் பளாக்" பதிவிலும் சொல்லி இருந்தார்.

    பஸ்ஸில் ஜன்னல் ஓரம் அமர்ந்து படங்கள் எடுத்தது அருமை.

    மண்டபத்தின் மேல் அனுமன் படம் அருமை.

    //ஷிம்ஷா நதி சன்னப்பட்டினா-ராமநகரா இடையில்//

    இந்த படத்தில் குப்பை எரித்து விட்ட சாம்பல் தெரிகிறது.

    முதல் படத்தில் குப்பை மலை, அடுத்த படத்தில் குப்பை எரித்து விட்டு இருக்கிறார்கள்.

    பயண விவரங்கள் அருமை. காணொளி அருமை. நெல்லைத்தமிழன் முகம் காட்டாமல் முன்னோக்கி படம் எடுத்து கொண்டு போகிறார் போலும்.
    அடுத்த பதிவில் முகம் காட்டுவார் என்று நினைக்கிறேன்.






    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா அக்கா ஊகித்துவிட்டீங்களா!!!!!

      ஆமாம் நெல்லையும் அவர் மனைவியும் வந்தது நாங்கள் சேர்ந்து சென்றது இதுதான் முதல் முறை. நன்றாக இருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது.

      ஆமாம் அக்கா அப்படிக் குப்பை எரித்த சாம்பல் ஆங்காங்கே இருந்ததைக் காண முடிந்தது. கிராமத்திற்குள் அறுவடை ஆன வயலில் ஓரத்தில் என்றும் காண முடிந்தது.

      அவர் முகம் காட்டாமல் என்றில்லை கோமதிக்கா. அது ஏதேச்சையாக பறவைகளைக் கீழிருந்து எடுக்க முனைந்த போது அவர் முன்னில் செல்ல காணொளியில் வந்ததை அப்பகுதியை எடிட் செய்து எடுத்து சேர்த்துப் போட்டேன். வேண்டுமென்றே!!! அவரைக் கலாய்க்க. அவர் முகம் எபி படங்களில் வந்திருக்கிறதே!!! அவர் பேசும் போதே என்னைக் கலாய்த்துக் கொண்டுதான் தொடங்குவார்....நான் சிரித்து முடியாது. அதை அடக்கவே நேரம் எடுக்கும்.
      மிக்க நன்றி கோமதிக்கா எல்லா படங்களையும் காணொளிகளையும் பார்த்து ரசித்ததற்கு.

      கீதா

      நீக்கு
    2. //நெல்லைத்தமிழன் முகம் காட்டாமல் முன்னோக்கி படம் எடுத்து கொண்டு போகிறார் போலும். அடுத்த பதிவில் முகம் காட்டுவார் என்று நினைக்கிறேன்.//

      "நிலவே முகம் காட்டு ஒளி வீசு" என்று நாமெல்லாம் பாடுவோம் அக்கா.. அடுத்த பதிவில் முதுகு திருப்பி, முகம் காட்டுவாராக...!

      நீக்கு
    3. // இளையவர் என்றதுமே நான் ஊகித்து விட்டேன். //

      ஆ..   அக்கா...  அப்போ நான் உங்கள் கவனத்துக்கு வரவில்லையா?

      நீக்கு
    4. ஸ்ரீராம் சிரித்துவிட்டேன்.....இதை நான் போட நினைத்து உங்களுக்காக ரிஸர்வ் செய்த கருத்து நீங்க போடுவீங்கன்னு எதிர்பார்த்து....நீங்க போட்டுவிட்டீர்கள்!!!!

      கீதா

      நீக்கு
    5. நீங்களும் இளையவர் தான். நெல்லையும், கீதாவும் அடிக்கடி வயது சொல்லி அக்கா, அண்ணன் என்று சொல்லி கலாய்த்து கொள்வார்களே ! அதனால் அப்படி சொன்னேன்.
      முன்பு இந்த இடத்திற்கு போக வேண்டும் என்று கீதா சொன்ன போது எப்போது போகிறீர்கள் நாங்களும் வர பார்க்கிறோம் என்று நெல்லை சொல்லி இருந்தார்.
      அதனால் தெரிந்து கொள்ள முடிந்தது.

      நீக்கு

    6. //"நிலவே முகம் காட்டு ஒளி வீசு" என்று நாமெல்லாம் பாடுவோம் அக்கா.. அடுத்த பதிவில் முதுகு திருப்பி, முகம் காட்டுவாராக...!//

      பாடிவிடுவோம். அடுத்த பதிவில் முகம் காட்டும் படம் போட்டு விடுவார் கீதா

      நீக்கு
  7. இப்போதெல்லாம் தொடர்கதை இல்லாத குறையை நாமதான் நிறைவேற்றவேண்டியிருக்கு. நல்ல காலம் ஓருசில வகைப் பறவைகளே வந்திருந்தன.ஒருவேளை பத்துவகையான பறவைகள் வந்திருந்தால் எவ்வளவு பதிவுகள் வந்திருக்கும், படிப்பவர்களுக்கு இவர் எந்தப் பயணத்தின் எத்தனையாவது வாரத்தை எழுதுகிறார் எனச் சரியாக எழுதுபவருக்கு பரிசுப் போட்டி வைக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா....சிரித்துவிட்டேன் நெல்லை. எல்லாத்தையும் சொல்லாண்டாமா!! அதென்னவோ ஆமாம் எந்தப் பயணத்தை எழுதுகிறேன்னு போட்டி வைக்கலாம்!!! ஹிஹிஹி...

      வேறு பறவைகள் இங்கு நம்ம ஏரிகளிலேயே வந்திருந்தனவே முந்தைய வீட்டுப் பகுதியில். அதைப் போட வேண்டும்.

      அங்கு இந்தக் குறிப்பிட்ட இடத்தில் இந்த இரு வகைதான் இப்படிக் கூட்டமாக வந்து கூடு கட்டி குஞ்சு பொரிக்கின்றன. ஆனால் சுற்றுப் புறங்களில் வேறு வகை வருகின்றன நாம பார்த்தோமே...அதை அடுத்த பதிவில் சேர்த்திருக்கிறேன்.

      நன்றி நெல்லை. மூணாறு பயணம் நல்லாருக்கும்னு நினைக்கிறேன். பதிவும் வரும் என்று நினைக்கிறேன்

      கீதா

      நீக்கு
  8. பயணத்தில் பறவைகளைப் பற்றி அறிந்ததைவிட நிஜமாகவே கீதா ரங்கன் க்கா ஒரிஜனல் ராகி இட்லியும் அதற்கேற்ற ருசியான சட்னியும் செய்யத் தெரிந்தவர் என்பதை அறிந்துகொண்டதே மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ!!!! எவ்வளவு இருந்துச்சு!!! பறவைங்க...நாங்க முதல் முறை போனப்ப அங்கிருந்தவங்ககிட்ட பேசினதுனால நிறைய தெரிந்தது நெல்லை.

      சாப்பிட்டுப் பார்க்காமலேயே இப்பூடியா!!!!! ஹஸ்பென்ட் சொல்லிருக்காங்க போல!!

      எனிவே மிக்க நன்றி நெல்லை.

      கீதா

      நீக்கு
    2. ராத்திரி ரொம்ப லேட்டா போடிருக்கீங்க போல.....பயணத்துல தூங்காம...

      நெல்லை அப்ப்டி எல்லாம் ஒன்றும் அவசரமில்லையே...உங்க ஆரோக்கியம்தான் முக்கியம்.

      நன்றி நெல்லை...

      கீதா

      நீக்கு
  9. இவங்க இரண்டுபேருமே ரொம்ப சிம்பிள். அனாவசிய அலட்டல் இல்லை. அதனால் பயணம் சுலபமாகவும் சுவையாகவும் இருந்தது.

    எதுக்கு பேரைக் கெடுத்துப்பானேன் என்று எண்ணி மத்தூர் போயும் மத்தூர் வடை சாப்பிடாததுதான் ஒரு குறை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவங்க இரண்டுபேருமே ரொம்ப சிம்பிள். அனாவசிய அலட்டல் இல்லை. அதனால் பயணம் சுலபமாகவும் சுவையாகவும் இருந்தது.//

      நெகிழ்ச்சி, மகிழ்ச்சி. மிக்க நன்றி நெல்லை.

      //எதுக்கு பேரைக் கெடுத்துப்பானேன் என்று எண்ணி மத்தூர் போயும் மத்தூர் வடை சாப்பிடாததுதான் ஒரு குறை//

      ஹாஹாஹாஹா....எனக்குமே அங்கு சாப்பிட முடியலைன்னு வருத்தம் உண்டு நெல்லை. ஏன்னா நாம இன்னும் உள்ள யாரு நல்லா சுகாதாரமா செய்வாங்கன்னு பார்க்கணும். நம்ம ஆரோக்கியம் முக்கியமில்லையா?

      இப்ப எல்லா இடங்களிலும் சின்ன சமோசா ஒரே போல கிடைக்கும் பாருங்க...மொத்தமா செய்யற இடத்துலருந்து எல்லா இடங்களுக்கும் கடைகளிலும் கொண்டு வராங்க குறிப்பா இந்த மாதிரி பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில். எனவே வாங்கத் தயக்கமா இருந்தது நெல்லை. authentic என்று சொல்ல முடியுமான்னு தெரியலை. எண்ணை பயம் இருந்தது. அதனால் தயக்கம். இல்லைனா நாங்களும் வாங்கிச் சாப்பிடும் வழக்கம் உடையவங்கதான். பார்க்கும் போது இங்கு கிடைப்பது போலவேதான் இருந்தது.

      இங்கு நம்ம வீட்டு ஏரியால மங்களூர் கடை ஒன்று உண்டு. நீங்க எங்க வீட்டுக்கு வந்தீங்கனா அங்கு வாங்கிச் சுவைக்கலாம். அங்கு பொருட்கள் கொஞ்சம் தரமாக இருக்கும் என்று தோன்றும்.

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. மத்தூரில் வடை அவ்வளவு ஃபேமஸா?  எங்க நடராஜன் வடையை பீட் அடிக்க முடியுமா?  ஹ!

      நீக்கு
    3. ஸ்ரீராம், மத்தூர் வடைன்னு ஃபேமஸ் அது வேற ஒன்னுமில்லை...நம்ம பருப்பு வடை போலவும் இல்லாம, தட்டை போலவும் இல்லாம ஒரு மெத் மொறு மொறு வடை. வடைன்னு அப்படி அவங்க சொல்லிக்கறாங்க. ரவை, மைதா அரிசிமாவு என்று நிறைய வெங்காயம் போடணும் அப்பதான் சுவை...அப்படிச் செய்வது. நான் வீட்டில் செய்ததுண்டு....ஆனால்...

      அங்கிருக்கும் மக்களைத் தவிர அல்லது கர்நாடகா மக்களைத் தவிர அதுவும் பல வருடங்களுக்கு முன்னானதை நாம யாரும் சுவைத்தது இல்லை. எனவே இப்ப வரும் வடை இப்படித்தான் ஒரிஜினல் இருக்குமா என்று நமக்குத் தெரியாது. எப்படி திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சொல்லப்படுகிறதோ அப்படி. authentic என்று எப்படிச் சொல்வது? ஃபேமஸ் ஆன போது அதற்கான குறிப்புகள் இல்லாமல்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் செய்யறாங்க. ஆனா பேஸ் நான் மேலே சொன்னதுதான். அளவு உண்டு.

      நீங்க சொல்லற நடராஜன் வடை போல இல்லை இது ஸ்ரீராம். அவர் இந்த வடையை செய்வாரா என்று கேட்டு ப் பாருங்க சும்மா...

      கீதா

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள், விபரங்கள் அனைத்தும் பிரமாதம்.

    ஆகா....! உங்களுடன் பறவைகளை பார்க்க கொக்கரே பெல்லூர் வரை வந்தது அந்த இளைய பதிவர் சகோதரர் நெல்லை தமிழர் தானா..? சூப்பர்..! சூப்பர்..! அவரும் குடும்பத்துடன் சேர்ந்து வந்தது கண்டிப்பாக பயணம் கலகலப்பாக இருந்திருக்கும். உங்கள் இருவரின் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள்.

    பிரயாணத்திற்கு முன்பு, உங்கள் இருவரின் பேச்சுக்களையும், வாக்குவாதங்களையும் படித்து ரசித்தேன். அவரை அறிமுகபடுத்தும் காணொளியில், அவர் முதுகை மட்டுந்தான் காண்பிப்பதாக உள்ள போட்டோவை மட்டுந்தான் போட வேண்டுமெனவும் வாக்குவாதங்கள் நடைபெற்றதோ ? ஹா ஹா ஹா.

    நீங்கள் எடுத்த படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன மலைகளும், ஷிம்ஸா நதி படங்களும் மிக அழகாக இருக்கிறது. எங்கும் மக்கள் வீசி எறியும் குப்பைகளுக்கு பஞ்சமேயில்லை.

    அப்போது ஆஞ்சநேயர் இலங்கைக்கு ஸ்ரீராமபிரான் தூதராக சென்ற போது, சங்கிலியால் பிணைத்து கட்டுண்டது போல், இங்கு அவரைச்சுற்றி மின்சார, கேபிள் ஒயர்கள்தான் எத்தனை...? ஆனால் அவரின் பலம், அவரின் சக்தி, ஒரு ராம நாமத்தில் வெளிப்பட்டு விடுமென்பது நாம் அனைவரும் அறிந்ததே...!

    நீங்கள் உங்களுக்கு முன்பே அறிமுகமான ஆட்டோவில், நெல்லைத் தமிழரின் சகோதரர் குடும்பத்தை ஏற்றி விட்டு நீங்கள் மற்றொரு ஆட்டோவில் உடன் பயணித்தது நல்ல பண்புள்ள செயல்..!

    ராம்நகர் ஆஞ்சநேயர் படத்தில், உங்களுக்கு முன் செல்லும் அந்த ஆட்டோவில்தான் சகோதரர் நெல்லைத் தமிழரும், அவர் துணைவியாரும் உள்ளனரா?:))

    அங்கு நீங்கள் பார்த்த பறவைகளின் படங்களை பார்க்க, அதன் விபரங்களை அறிய நானும் ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தச் சின்ன பையனேதான், கமலாக்கா!!!! பயணம் நன்றாக இருந்தது. அவருடைய ஹஸ்பண்டும் நானும் பேசிக் கொண்டு சென்றோம். கிராமத்தில். நடக்கும் போது பறவைகளைப் பார்க்கும் போது என்று...ரொம்ப மென்மையானவர்.

      //பிரயாணத்திற்கு முன்பு, உங்கள் இருவரின் பேச்சுக்களையும், வாக்குவாதங்களையும் படித்து ரசித்தேன்.//

      ஹாஹாஹா இது எப்ப பேசினாலும் நடக்கும் ஒன்றுதான் வழக்கான ஒன்று!!! அவர் பேசறப்ப நான் சிரிப்பதுதான் அதிகமாக இருக்கும்.

      ஆமாம் எங்கும் பல கம்பிகள் சுற்றி கிராமத்தில் கூட!

      //நீங்கள் உங்களுக்கு முன்பே அறிமுகமான ஆட்டோவில், நெல்லைத் தமிழரின் சகோதரர் குடும்பத்தை ஏற்றி விட்டு நீங்கள் மற்றொரு ஆட்டோவில் உடன் பயணித்தது நல்ல பண்புள்ள செயல்..!//

      நன்றி கமலாக்கா.

      //ராம்நகர் ஆஞ்சநேயர் படத்தில், உங்களுக்கு முன் செல்லும் அந்த ஆட்டோவில்தான் சகோதரர் நெல்லைத் தமிழரும், அவர் துணைவியாரும் உள்ளனரா?:))//

      ஹாஹாஹா!! உங்க கலாய்ப்பை ரசித்தேன்!

      நாங்க பார்த்த பறவைகள் இரண்டு வகைதான். நாங்கள் பார்க்க முடிந்தவை கொஞ்சம் தான் காரணங்கள் அடுத்த பதிவில் சொல்லியிருக்கிறேன் கமலாக்கா

      நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
    2. // அப்போது ஆஞ்சநேயர் இலங்கைக்கு ஸ்ரீராமபிரான் தூதராக சென்ற போது, சங்கிலியால் பிணைத்து கட்டுண்டது போல், இங்கு அவரைச்சுற்றி மின்சார, கேபிள் ஒயர்கள்தான் எத்தனை...? ஆனால் அவரின் பலம், அவரின் சக்தி, ஒரு ராம நாமத்தில் வெளிப்பட்டு விடுமென்பது நாம் அனைவரும் அறிந்ததே... //

      சூப்பர் அக்கா..   உங்கள் இந்த வரிகளை படித்ததும்தான் நான் மறுபடி சென்று ஆஞ்சி படத்தைப் பார்க்கிறேன்!  என்ன அவதானிப்பு, என்ன கற்பனை!

      நீக்கு
    3. ஆமாம் ஸ்ரீராம் அக்காவின் வரிகளை ரொம்ப ரசித்தேன் நான்....இதைப் பற்றிச் சொல்ல வரப்ப உங்க கமென்ட்ஸ் இங்கு பப்ளிஷ் ஆகலைன்னு சொன்னதை அங்கு பார்த்து பகிர்ரப் போனேன்...விட்டுப் போச்சு....

      நான் வயர்கள் பார்த்ததை என் கணவரிடம் சொல்லிக் கொண்டே வந்தேன் அது போல பறவைகளை எடுக்கும் போதும் குறுக்கில் வயர்கள் கமலாக்காவின் கமண்டைக் குறிப்பிட்டுச் சொல்ல நினைத்தேன்....

      நீங்க சொல்லிவிட்ட்டீங்க சூப்பர்!! எனக்கு நினைவு பதித்தியய்து

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    4. அப்போது ஆஞ்சநேயர் இலங்கைக்கு ஸ்ரீராமபிரான் தூதராக சென்ற போது, சங்கிலியால் பிணைத்து கட்டுண்டது போல், இங்கு அவரைச்சுற்றி மின்சார, கேபிள் ஒயர்கள்தான் எத்தனை...? ஆனால் அவரின் பலம், அவரின் சக்தி, ஒரு ராம நாமத்தில் வெளிப்பட்டு விடுமென்பது நாம் அனைவரும் அறிந்ததே...!//

      நான் ரசித்தேன் கமலாக்கா. நான் பதிவில் எழுதாதவை நிறைய. அடுத்ததில் பறவைகளுக்கு நடுவில் நிறைய வயர்கள்....மரங்களுக்கு இடையிலும்,....திரும்ப வரும் போதுதான் இந்தப் படத்தை எடுத்தேன் அப்ப இரண்டையும் ஒப்பிட்டு கணவரிடம் சொல்லிக் கொண்டே வந்தேன்.

      இப்படியான கற்பனைக்காகத்தான் சொல்கிறேன், உங்கள் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ளுங்கன்னு!!!!

      கீதா

      நீக்கு
  11. //  2000 ஆயிரத்திற்கும் மேலான பறவைகள் //

    இரண்டாயிரம் இண்ட்டு ஆயிரம்?!! 

    WWF க்கு விளக்கம் கொடுத்து விடுங்கள்.  ஏனெனில் அதே எழுத்துகளுக்கு வேறொரு சண்டையும் பொருள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா நான் அதை மாற்ற நினைத்து விட்டுப் போன ஒன்று....சொன்னதுக்கு நன்றி ஸ்ரீராம். மாற்றிவிடுகிறேன். முதல் எண்ணில் எழுதிட்டு அப்புறம் எழுத்தில் எழுதியிருந்தேன். அதை எடுக்க விட்டுப் போச்சு! ஆமாம் இன்னொரு விளக்கம் உண்டே!

      WWF க்கு முந்தைய பதிவிலேயே விளக்கம் கொடுத்திருந்தேன். இதில் சொல்ல விட்டுப் போச்சு. World Wildlife Fund - இது கொண்டு வந்ததுதான் World Wild life act இதன்படி அரிதாகிவரும் உயிரினங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்கிறது.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  12. ஆட்டோக்காரர் கார்டெல்லாம் வைத்திருக்கிறாரா என்ன?  அட...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் அவர் கார்ட் கன்னடத்தில் இருந்தது. அதனால் போடலை.

      அடுத்த பதிவில் சேர்க்கிறேன். இடம் இருக்கான்னு பார்க்கிறேன் ஹிஹிஹிஹி....ஏன்னா அதோட அர்த்தம் எழுதணுமே!

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  13. உண்மையில் பறவைகள் எண்ணிக்கையை எப்படி கணக்கெடுக்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான்.  ஏதாவது சுலப முறை இருக்கிறதா?  

    ஒருமுறை கொசுவோ, தேனீக்களோ கணக்கெடுப்பு முறைபற்றி நான் கூட பகிர்ந்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் எனக்கும் தோன்றியது எப்படி எண்ணுவாங்கான்னு கண்டிப்பா ஒரு முறை இருக்கும். அங்குள்ள மக்கள், குழுவுக்கு இதெல்லாம் பரிச்சயம் என்றும் அங்கு தெரிந்து கொண்டேன். எனவே பார்க்கப் பார்க்க கணக்கு எடுத்துடுவாங்களாம். ஒவ்வொரு வீட்டருகிலும் தானே கட்டுது.

      ஒருமுறை கொசுவோ, தேனீக்களோ கணக்கெடுப்பு முறைபற்றி நான் கூட பகிர்ந்திருந்தேன்.//

      ஓ எப்படி என் கண்ணில் தப்பியது! தேடிப் பார்க்கிறேன். அது இன்னம் கஷ்டமாச்சே

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  14. ஓ..  அந்தப் பதிவர் இவர்தானா?  புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு மட்டும்தான் திக்விஜயம் செய்வார் என்று நினைத்தேன்!  

    காணொளியில் ஒரு ஹீரோவின் மாஸ் அறிமுகம் போல ப்ரசண்ட் செய்திருக்கிறீர்கள்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா.....இல்லை அவர் எல்லா இடங்களுக்கும் போவார். அன்று கூடச் சொன்னார் 'சும்மா வீட்டுல இருக்கறதுக்கு இப்படி வந்து பார்த்தா நல்லாதான் இருக்கு' என்று.

      காணொளியில் ஒரு ஹீரோவின் மாஸ் அறிமுகம் போல ப்ரசண்ட் செய்திருக்கிறீர்கள். //

      ஹாஹாஹா ஆமாம் எடிட் பண்ணி போட்டதாச்சே!!! இன்னும் ஸ்லோ மோஷன் எஃபக்ட் எல்லாம் கொடுக்க நினைத்தேன்....இதுவே தாமதமாகிடுச்சா...அதுவும் எல்லாத்தையும் ப்ளாகரில் ஏற்ற இணையம் ஒத்துழைக்கணுமே என்று விட்டுவிட்டேன்!!!!!!

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  15. என்ன இப்படி சண்டையிட்டுக் கொள்கிறீர்கள்?  என்னைப்பொறுத்தவரை நான் நீங்கள் கொண்டு வருவதையும் சாப்பிடுவேன்..  அருகில் நிற்கும் யாராவது ஏதாவது தந்தாலும் சாப்பிடுவேன்!!!!   

    அப்புறம் பெரியவங்க நீங்களே இப்படி சண்டை போட்டா சின்னவங்க நாங்க என்ன செய்யறது...  எங்களுக்கெல்லாம் நீங்கள்  ஒரு முன் உதாரணமா இருக்கவேண்டாமோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ சிரித்துவிட்டேன்!!!!!!! நெல்லைக்குச் சொல்லுங்க...ஹிஹிஹிஹி..உடனே அவர் சொல்வார், நான் மத்தவங்களை சிரமப்படுத்த விரும்பமாட்டேன்னு.. நாங்க சாப்பிடுவோம் நான் சாப்பிடுவேன் ஸ்ரீராம்.

      அடப் பாருடா சைக்கிள் கேப்ல நுழையறத!!!!! ஹலோ நாங்களும் சின்னப் பிள்ளைங்கதானே!

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. ஸ்ரீராம்... நான் சாப்பிடுவதில் கொஞ்சம் கவனமாக இருக்கிறேன். ரொம்ப சாப்பிடக்கூடாது. இன்னொன்று என்னால் மற்றவர்களுக்கு சிரமம் வரக்கூடாது. இதனால்தான் முதலிலேயே சொல்லிவிட்டேன். ஒரு தடவை கீதா ரங்கன் (க்கா) எங்கள் வீட்டுக்கு வந்தபோது மிகப் பெரிய க்ரீம்லாம் போட்ட கேக்கைச் செய்துகொண்டு வந்திருந்தார்கள். எதுக்கு சிரமம், ஃபார்மாலிட்டி போன்றவை என்பது என் எண்ணம்.

      நீக்கு
  16. ஆ..  புளியோதரை.  

    ஆனால் உங்கள் அப்பா சமர்த்து கீதா...  சமர்த்தாக இருக்காரே...  என் மாமியார் ஸ்ட்ரைக் செய்வார்கள்..!!  இவ்வளவு சுமையுடன் கிளம்புகிறீர்கள்..  வரும்போது அல்லது பாதியிலேயே சுமை குறைந்து விடும்தான்.  ஆனாலும் ஒரு தனி வண்டி இல்லாமல் செல்லும்போது இப்படி சுமையுடன் செல்லவும் ஒரு திறன் வேண்டும்.  பாராட்டுகள்.  சுற்றிப்போட சொல்லுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புளியோதரை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேனே! புளிக்காய்ச்சல்! நீங்க கூட அதைப் பத்தி சொல்லியிருந்த நினைவு.

      பாருங்க அன்று ஒரு சின்ன டப்பாவில் - ஹோட்டலில் சட்னி வைச்சு தருவாங்களே அந்த சைஸ் டப்பாவில் நெல்லை மனைவிக்கு எடுத்து வைத்துக் கொண்டேன். ஜஸ்ட் சுவை பார்க்க ஆனா அன்று மதியம் சாப்பிடலையே அங்கு அதை எடுத்துக் கொடுக்க மறந்து போச்சு....

      நிஜமாகவே அப்பா சமர்த்துதான் ஸ்ரீராம். நல்லா அட்ஜஸ்ட் செய்து கொள்வார். நம் வண்டி அல்லது கார் வைத்துக் கொண்டு போகும் அளவு நமக்கு இருந்தா, அவரையும் மெதுவாகக் கூட்டிச் செல்லலாம். ஆனாலும் சிரமப்பட்டுவிடுவார் காலில் ப்ளேட் வைச்சிருக்கே. ஆனால் இப்போதைக்கு வண்டி வைத்துக் கொள்ள சான்ஸ் இல்லை .

      சுமையைப் பொருத்தவரை என் கணவரும் தன்னுடையதை அவர் பையில் வைத்துக் கொண்டுவிடுவார், நான் என் பையில் அப்படி இருவருமே எடையைப் பிரித்துக் கொண்டுவிடுவோம். அதுவும் கொஞ்சமாகத்தானே எடுத்துச் செல்வது. மீதிக்கு வெளியில் கூடப் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான். இந்த ஊர் மிகவும் சிறிய ஊர் என்பதால் இப்படி.

      //இப்படி சுமையுடன் செல்லவும் ஒரு திறன் வேண்டும். பாராட்டுகள். சுற்றிப்போட சொல்லுங்கள்!//

      இப்படிச் செல்வது இருவருக்குமே பழக்கமாகிவிட்டது. அப்ப நீங்கதான் சுத்திப் போடணும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! Got it!!!?

      மிக்க நன்றி ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
    2. நான் நிறைய இடனளைப் பற்றி பார்த்து குறித்து வைத்துக் கொண்டுள்ளேன், ஸ்ரீராம். பட்ஜெட்டுக்கு ஏற்ப. சாப்பாடு பற்றி கவலை கொள்ளாமல் ஆனால் அதே சமயம் எங்க ஆரோக்கியத்துக்குப் பாதிப்பு இல்லாம குறிப்பாக என் ஆரோக்கியய்த்திற்கு, பழங்கள், தயிர் இப்படி இருந்தாலும் போதும் என்று....அப்படிப் போனாதான் பயணம் இனிதாக இருக்கும். பயணம் தானே முக்கியம்....எனவே பட்ஜெட் மற்றும் பார்த்துக் கொண்டு மற்றவற்றைப் பின்னில் தள்ளி....செல்லுதல்.

      நம்ம வீட்டில் பயணம் என்றால் அதைக் குறித்த தகவல்கள் நான் திரட்டி திட்டம் இடுதல் என்று எல்லாமே அல்லது நான் மற்றும் மகன் இருவருமாகத் திட்டமிட்டுப் போவது தங்குவது என்று இருந்த காலம். அதன் பின் எங்கள் சூழல் அப்படியே மாறியது. தலைகீழானது. இப்ப மீண்டும் கணவர் ஆர்வம் காட்டுவதால் எங்கள் வசதிக்கேற்பத் திட்டமிடுதல். எல்லாமே நான் பார்த்துத் தெரிந்து கொண்டு திட்டமிட்டு கணவரிடம் சொல்லி அவரும் பார்த்து இன்னும் எளிதானது தெரிந்தாகல் அதையும் மனதிற்க் கொண்டு திட்டமிடுதல் என்று இப்போதைய காலட்டம். நாளை எப்படியோ தெரியாது இப்போதைக்கு இதை அனுபவித்துவிட வேண்டும்.

      பயணத்தில் ஆர்வம் இருந்தால் ஆரோக்கியம் மிக மிக மிக முக்கியம். எனவேதான் நான் அதைப் பார்த்துக் கொள்வதில் முனைப்பு!! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    3. //சுமையைப் பொருத்தவரை என் கணவரும் தன்னுடையதை அவர் பையில் வைத்துக் கொண்டுவிடுவார், நான் என் பையில் அப்படி இருவருமே எடையைப் பிரித்துக் கொண்டுவிடுவோம்.// எனக்கென்னவோ இதில் ஒரு சந்தேகம் உண்டு. உணவை கீதாக்கா வைத்துக்கொள்வார் என்று நினைக்கிறேன். அதுதான் நேரம் செல்லச் செல்ல எடையைக் குறைக்கும். ரங்கன் சாரிடம் தண்ணீர் பாட்டில்கள் போய்விடுமோ? அடுத்த தடவை அவரிடமே கேட்கவேண்டும்.

      நீக்கு
  17. எவ்வளவு குப்பைகளா?  இதெல்லாம் ஒரு குப்பையா?  

    ப்ப்பூ...  

    நான் காட்டுகிறேன் பாருங்கள் எங்கள் ஊர் குப்பைகளை... 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா.....ஸ்ரீராம் எந்த இடமும் விதிவிலக்கல்ல!!! இங்கயும் ஏன் இந்தியா முழுவதுமே அப்படித்தான்...பொதுவெளியில் சிலதை தவிர்க்கிறேன்

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  18. ஆஞ்சி எவ்வளவு பெரிய ஸ்டூலில் யோகா செய்கிறார்!  அம்மாடி... 

    புகைப்படங்களில் நீங்கள் உங்கள் பெயர் சேர்க்கும்போது இப்படி மேலே சேர்த்தால், அதை க்ராப் செய்து விட்டு உபயோகிப்பார்கள்.  அப்படி க்ராப் செய்ய இயலா இடத்தில வாட்டர்மார்க் செய்யவேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ராப் ஏன் செய்யணும்....இப்ப படத்தில் உள்ள டெக்ஸ்டைக் கூட நீக்கும் ஆப் இருக்கே ஸ்ரீராம்...

      ஆனா நீங்க சொல்ற பாயின்ட் ரொம்பவெ வேலிட்....அதுவும் டெஸ்ட் செய்தேன் ஸ்ரீராம்....ஒரு படத்தை இன்னொரு காப்பி எடுத்து அதில் வாட்டர் மார்க் போட்டுப் பார்த்தேன் அப்பதான் தெரிந்தது....க்ராப் வேண்டாம் டெக்ஸ்ட் ரிமூவர் போதும்னு....

      இதுக்கும் மேலே என்ன டெக்னாலஜி இருக்கு என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன், எடுக்க முடியாத படி, ஸ்ரீராம்

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. ஹாஹாஹா மண்டபத்தை ஸ்டூல்னு சொன்னதைப் பார்த்து சிரித்துவிட்டேன் உங்க கற்பனையும் சூப்பர். ஆமா இவ்வளவு பெரிய ஆஞ்சுக்கு அது தேவையாச்சே!!!!

      கீதா

      நீக்கு
  19. படங்கள் எல்லாமே அழகு,.  கை நடுங்காமல் ஜாக்கிரதையாக அழகாக எடுக்கிறீர்கள்.   

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம். ஆனால் வீடியோவில் கொஞ்சம் நடுங்கியிருக்கும்....அப்படிச் சொல்வதை விட, சூரிய வெளிச்சம் ரொம்ப ப்ரைட் அதனால் திரையில் சரியாகத் தெரியாமல் ஒரு வேளை இப்படி வைத்தால் தெரியுமோ என்று மாற்றி மாற்றி எடுத்ததில் கொஞ்சம் அசைந்திருக்கும்....அது அடுத்த பதிவில் தெரியும் பாருங்க...

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு