ஞாயிறு, 17 ஜூலை, 2016

பூமித்தாயின் கண்ணீர்



பூமியில் தான் குழப்பங்கள், பிரச்சினைகள் என்றால் அண்ட விண்வெளியில் உள்ள சூரிய குடும்பத்திலும் ஒரு பிரச்சினை என்று தெரிந்த பொழுது வியப்பாக இருந்தது. என்ன பிரச்சினையாக இருக்கும் என்று எட்டிப் பார்த்தபோதுகுடும்பத்தின் தலைவனாகிய சூரியனிடம் பூமித்தாய் புலம்புவது கேட்டது.

தலைவனே! இது என்ன கொடுமைஇந்தக் குடும்பத்தில் இத்தனைக் கோள்கள் இருக்கும் போது நான் மட்டும்தான் இவ்வளவு பாரம் சுமக்க வேண்டுமாஎன் குழந்தைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறார்கள்நீங்கள் தான் இதற்கு ஒரு தீர்வு கொண்டுவர முடியும்.”

உன் வேதனை எனக்குப் புரிகிறதுஆனால் மற்ற கோள்களில் உனக்கிருப்பது போல் வளமும, செழிப்பும், நீரும், காற்றும், இல்லையேஏன், ஒளி கூட உனக்குத்தானே உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு சரியான அளவில் நான் கொடுத்திருக்கிறேன்அப்படி இருக்கும் போது மற்ற கோள்களிடம் எப்படி நான் கேட்க முடியும்?” என்றான் சூரியன்.

    .  அதற்குள் அங்கு செவ்வாய் கோளின் குரல்.  “பூமியே! உன் குழந்தைகள் என்று அடிக்கடிக் கூறிக் கொள்வாயே அதே குழந்தைகள் தான், என்னிடம் உன் குழந்தைகளை அனுப்ப முடியுமா என்று என் மீது அடிக்கடி, ராக்கெட் ஏவி என்னை வேவு பார்க்கிறார்கள். என்னிடம் காற்றில்லை, சூரிய ஒளி இல்லை என்பதை நம்பாமல் பொய் சொல்கிறேன் என்று நினைக்கிறார்கள் போலும்.”


புதன் அதற்குள், “உன்னை மட்டுமல்ல என்னையும்தான் வேவு பார்க்கிறார்கள்ஏன் சந்திரன் பூமிக்கு அருகில் இருப்பதால் அங்கு ராக்கெட் அடிக்கடி விட்டுப் பார்ப்பது அவர்களுக்கு வழக்கமாகிவிட்டதுஅதிலும் சந்திரனைப் பார்த்து பூமியின் பிள்ளைகள் சிலர் நிலா நிலா என்று கவிதைகள் கூட நிறைய எழுதுகிறார்கள்சந்திரனுக்குப் பூமியில் நல்ல மவுசுஎன்றது.


  “நீங்கள் எல்லோரும் இப்படி என்னைப் புரிந்து கொள்ளாமல் பேசுகின்றீர்களே. வருத்தமாக இருக்கிறதுஎன் வருத்தத்தை யாரிடம் சொல்வது என்று தெரியாமல்தான், சூரியன் தலைவனிடம் வந்தேன்நான் என் குழந்தைகள் நன்றாக, செழிப்பாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று, பசுமையையும், நல்லக் காற்றையும், சூரியனிடமிருந்து ஒளியையும், நல்ல மழையையும் கொடுத்து, நதிகள், மரங்கள், கனிமங்கள், மலைகள், ஆறுகள், நிலத்தடித் தண்ணீர், பயிரிடுவதற்கான நல்ல மண் வளம் என்று பல சொத்துக்களை என் பல சந்ததியினர் அனுபவிக்க சேர்த்து வைத்தேன்.
ஆனால், என்ன பயன்என் குழந்தைகள் எல்லாவற்றையும் உபயோகித்தால் அதைத் திரும்ப சேமிப்பதற்கும், என்னைப் பராமரித்துப் பாதுகாக்கவும், முயற்சி செய்ய வேண்டுமில்லையா? சொத்தைப் பராமரிக்காமல், பாதுகாக்காமல் அழித்து விட்டால் அடுத்து வரும் சந்ததியினர் என்ன செய்வர்என் குழந்தைகள், வளமாகிய என் சொத்தை எல்லாம் அழித்துத்தான் வருகின்றனர்











என் மீது எல்லா இடங்களிலும் கழிவையும், குப்பையையும் எறிகின்றனர்துப்புகின்றனர்சிறுநீரும், மலமும் கழித்து என்னைக் கேவலப்படுத்துகின்றனர். என் நீர் நிலைகளாகிய நதி நீரையும், கடல் நீரையும், ஏரிகளையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி, நீர் நிலைகள் குறைந்து நல்ல சுத்தமான தண்ணீர் இல்லாமல் தட்டுப்பாடு வந்து இன்று என் சொத்தாகிய நீரைக் குடைந்தெடுத்து, சுத்தாமாக்கி, புட்டிகளில் அடைத்து விற்கிறார்கள், கொழிக்கிறார்கள்.

 நல்ல காற்று கிடைக்க நான் வைத்திருந்த மரங்களை எல்லாம் வெட்டிக், காடுகளும், சோலைகளும் இல்லாமல் செய்து, சுத்தமான காற்று இல்லாமல் செய்து வருகின்றனர்என் குழந்தைகள் பண வெறி பிடித்து நல்ல பயிர் விளையும் நிலங்களை எல்லாம் கட்டிடங்களாக்கி, அடுக்கு மாடி வீடுகளாகவும், பல்பொருள் அங்காடிகளாகவும் மாற்றி வருகின்றனர்விளை நிலங்களே இல்லாமல் போவதால் விளைச்சல் குறந்து உணவுப் பற்றாக் குறையும் ஏற்பட ஆரம்பித்து விட்டதுஇன்னும் சொல்லப் போனால் நான்கு சக்கர வாகனங்களும், இரு சக்கர வாகனங்களும், ஆலைகளும் பெருகி புகையைப் பெருக்கி, என்னைச் சுற்றிப் புகை மண்டலத்தை எழுப்பி அடைத்து விட்டனர்

அவர்களுக்குள் எனது சொத்தாகிய நிலத்தையும், நீரையும் பிரிப்பதற்குச் சண்டைஇவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாதுஇவற்றை அவர்கள் உயிர் உள்ளவரை அனுபவித்து, பராமரித்துக் கட்டிப் பாதுகாக்க மட்டும்தானே அல்லாது சுய நலத்திற்காக உபயோகித்து அழிப்பதற்கல்ல என்பது என் குழந்தைகளுக்குப் புரிய வில்லை.

பேராசையும், கொலைகளும், கொள்ளைகளும், ஊழல்களும் தலை விரித்தாடுகிறதுஎனக்கு மனிதர்கள் மட்டும்தான் குழந்தைகளாஐந்தறிவுடைய விலங்கினங்களிலிருந்து, ஒர் அறிவு கொண்ட உயிரனங்களூம், நுண்ணுயிரினங்களும்மரம் செடி கொடிகளும் என் குழந்தைகள் தான்எல்லா உயிரினங்களுக்கும் வெளித் தோற்றம், உருவம்தான் வேறுஉள்ளிருக்கும் உயிர் ஒன்றுதானே.  ஆறறிவு கொண்ட என் குழந்தைகள் மற்ற என் குழந்தைகளையும் கொன்று அழிப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்க முடிகிறதே தவிர என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை
னக்கு சுவாசிக்க நல்ல காற்று இல்லாமல் மூச்சுத் திணறுகிறது. ஓசோன் படலம் குறைந்து கிரீன் ஹவுஸ் விளைவினால் வெப்பம் கூடி என்னை தகிக்க வைக்கிறதுஎன்னுடைய நீரே எனக்குக் குடிப்பதற்கு மாசற்று, சுத்தமாகக் கிடைப்பதில்லை. எனக்கு அமைதியாக வாழக் கூட வழி இல்லாமல் போய் விட்டது. எனக்கும் வயதாகி வருகிறதுஅன்னை, அன்புடன் கொடுத்த சொத்தை எல்லாம் அனுபவித்து அழிப்பவர்கள் அன்னைக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம் என்று நினைத்துப் பார்க்கிறார்களா? இல்லைநானும் பொறுமையோடுதான் இருக்கிறேன்என்று வருந்தினாள்.  

ஆம், பூமித்தாய் பொறுமையானவள்தான். மனிதர்களாகிய நாம், நம் பூமித்தாய்க்கு இழைக்கும் கொடுமைகளைக் கண்டு அவளுக்குக் கோபமே வராதோ?  
சூரியன், “பூமியே! நீயும் சில சமயம் கோபப்படுகிறாயே! அப்பொழுதும் உன் குழந்தைகள் உணரவில்லையா?” என்றதற்கு

ஆம்நான் சில சமயம் கோபப்படத்தான் செய்கிறேன். என் பொறுமைக்கும் எல்லை உண்டு. இல்லையாபூகம்பமாக, சுனாமியாக, மழையாக, வெள்ளமாக, கடல் கொந்தளிப்பாக, எரிமலைப் பிழம்பாக, நிலச்சரிவாக, புயலாக, சூறாவளிக் காற்றாக, வறட்சியாக என்று பல வகைகளில் என் சீற்றத்தைச் சிறிதாக வெளிப்படுத்தி என் குழந்தைகளை மிரட்டத்தான் செய்கிறேன்

இது போன்று நான் மிரட்டும் போது, என்னைப் பராமரிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு சிலர் சிறிது நாட்கள்பூமித்தாயைப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும்.” என்று குரல் கொடுப்பார்கள்ஆனால் அதற்கெல்லாம் என் குழந்தைகள் பயப்படுவதாகவோதாங்கள் செய்யும் தவறை உணருவதாகவோ தெரியவில்லைஎன் குழந்தைகளில் நல்ல மனதுடனும், அறிவுடனும் இருப்பவர்கள் என்னைப் பாதுகாக்கவேண்டும் என்றும், என் வளங்களை அழித்தால் அவர்களுக்கு அழிவு நிச்சயம் என்றும் அறிவுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் செய்கிறார்கள்என்ன செய்வதுஎன் குழந்தைகளை நினைத்து வருந்தத்தான் முடிகிறது.”

மற்ற கோள்கள் எல்லாம், “இப்படிப்பட்டவர்களை நாங்கள் எப்படி வைத்துக் கொள்ள முடியும்எதற்காக வைத்துக் கொள்ள வேண்டும்? நல்லவேளை எங்களுக்கெல்லாம் உன்னைப் போன்று நல்ல வளங்கள் இல்லாமல் போயிற்றுஇல்லையென்றால் நாங்களும் உன்னைப் போல் இப்படிப் புலம்ப வேண்டி வந்திருக்கும்.” என்றன.
ரொம்ப சொல்லிக் கொள்ளாதீர்கள்சமீபத்தில் என் குழந்தைகள் சிலர், செவ்வாய் கோளிற்குச் சென்று தங்குவதற்கு விருப்பம் உள்ளவர்களை 2022-23 ல் அழைத்துச் செல்வதற்கான வழிகளைப் பார்த்துக் கொண்டு இருப்பதாக அறிகிறேன். அவர்களுக்குப் பயணத்திற்கான பயிற்சி அளிக்கவும் போகிறார்களாம்அதற்கு இப்போதே முன் பதிவு செய்ய வேண்டுமாம்போவதற்கான பயணச் சீட்டு பின்னர் தரப்படுமாம்அதற்கு எவ்வளவோ மில்லியன் டாலராம்ஆனால் போவதற்கான சீட்டு மட்டும்தான்வருவதற்கு அங்கு சென்ற பிறகுதான் திரும்பவும் பதிவு செய்ய வேண்டுமாம்அதற்கு தனி கட்டணம் செலுத்தி பயணச் சீட்டு பெற வேண்டுமாம்அதனால், செவ்வாய் கோளே உன்னிடமும் என் மனிதக் குழந்தைகள் வரப் போகிறார்கள்அதனால் உன் வாயை கொஞ்சம் அடக்கி வைத்துக் கொள்.”  என்றாள் பூமித்தாய்.

செவ்வாய், “ஐயோஇது என்ன கொடுமைஉன் மக்கள் என்னிடமும் வரப் போகிறார்களாஅப்படியென்றால் இன்னும் சில வருடங்களில் நானும் உன்னைப் போல் புலம்பி கண்ணீர் விட வேண்டியதுதான்தலைவா சூரியனே நீங்கள் இதற்கு என்ன சொல்கிறீர்கள்?”  என்று புலம்ப ஆரம்பித்து விட்டது.

"நானும் இதைக் கேள்விப் பட்டேன்.  MARS ONE என்று அதற்குப் பெயர்போவதற்கே ஏழு மாதங்கள் ஆகுமாம்அதெல்லாம் சரி, எனக்கு ஒரு சந்தேகம்போனால் முதலில் உயிருடன் போவார்களோஅப்படியே போனாலும் உயிருடன் திரும்பி வர முடியுமா அவர்களால்? வர உத்தரவாதம் உண்டா?" என்றது வியாழன். 

  "அதை ஏன் கேட்கிறீர்கள். இதற்கும் அங்கு கிறுக்குப் பிடித்தவர்கள் இருக்கிறார்கள்நிறைய மக்கள் பதிவு செய்திருக்கிறார்களேஅவர்களை என்னவென்று சொல்வதாம்?" - நெப்டியூன், ப்ளூட்டோ

சந்திரனில் கூட நிலத்தைக் கூறு போட்டு விற்க உன் குழந்தைகள் முயல்வதாக கேள்விப்பட்டோம்.” என்று எள்ளி நகையாடியது வெள்ளிக் கோள்
எனக்கு மூச்சுத் திணறுகிறதுஎன்ன செய்வது என்று தெரியவில்லை..”  என்றது பூமி.

நிச்சயமாக நீ ரொம்பப் பொறுமைசாலிதான்நம்மை எல்லாம் படைத்த அந்த அண்டவெளி சக்தியிடம் முறையிட்டுப் பார்என்றான் தலைவன் சூரியன்.

ஆம் பூமித்தாய் ரொம்பப்  பொறுமையானவள்தான்! அவள் ஒரு நல்ல தாய்!.  நாம் செய்யும் தவறுகளை எல்லாம் பொறுத்து எந்தக் கைமாறும் எதிர்பார்க்காமல் நமக்குத் தன் வளங்களை எல்லாம் தந்து கொண்டுதான் இருக்கிறாள்நாம்தான் அழிவை நோக்கி நமக்கு நாமே குழி பறித்துக் கொண்டிருக்கிறோம்பூமித்தாய் பொறுமைசாலிதான்.!!! அவள் கண்ணீரும் வற்றி வருகிறது!

---கீதா

படங்கள் : இணையத்திலிருந்து

வலைப்பூ ஆரம்பித்த பொழுது எழுதிய பதிவு. எங்கள் வலைப்பூ அப்போது அறிமுகமாகியிராத காலம் ஆதலால் இப்போது மீள் பதிவு.




செவ்வாய், 5 ஜூலை, 2016

விலங்குகளின் தகவல் பரிமாற்றம் 1 – தேனீக்கள் - இயற்கையின் ரகசியங்கள்

கோடை காலத்தில் மரக்கிளைகளின் இடையே எங்கே இருக்கிறது என்று அறிய முடியாமல் கூ என்று வரும் குயிலின் இனிய நாதம்

மழை பெய்யும் நாட்களில் இரவில் அரங்கேறும் தவளைகளின் கச்சேரி

தினமும் காலையில் எழும் போது கேட்கும் குருவிகளின், கிளிகளின் அன்றைய தினத்தின் கீச் சத்தம்.

காக்கைகள் சரியான நேரத்திற்கு ஜன்னலின் ஓரம் வந்து அமர்ந்து தங்கள் தினப்படியான கப்பத்தினைக் கேட்டுக் கொடுக்கும் குரல்

இரவின் அமைதியில் கேட்கும் சுவர்க்கோழிகளின் ரீங்காரம்

அடர்த்தியான காடுகளின் இடையே கேட்கும் விதம் விதமான இயற்கை ஒலிகள் என்று

நம்மைச் சுற்றி எத்தனையோ இயற்கையின் ஒலிகள் கேட்கத்தான் செய்கின்றன. ஆனால் நகரத்து வாழ் மக்கள் விரைந்தோடும் வண்டிகளின் சத்தத்தில், வீட்டினுள் இருக்கும் முட்டாள் பெட்டிகளுல் மூழ்கிக் கிடத்தலில் இந்த இயற்கை ஒலியினைத் தொலைத்துவிட்டு...

பல கிராமத்து வாழ் மக்களோ வீட்டினுள் இருக்கும் முட்டாள் பெட்டியின் சத்தத்தில் தொலைத்தோ, அல்லது கிராமத்து இயற்கை வளம் அழிந்து வருவதாலோ,  இந்த இயற்கையின் இனிய ஒலிகளை அனுபவிக்க முடியாத ஒரு நிலைக்குத் தங்களைத் தள்ளிக் கொண்டு……இப்படியாக

மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான தொடர்பும், தகவல் பரிமாற்றமும் மெதுவாக இற்றுப் போய் அற்றுப் போகும் நிலையிலான ஒரு வாழ்வு.

ஒவ்வொரு விலங்கினமும் எழுப்பும் ஒலி, தங்களுக்குள்ளும், மனிதனுடனும் தொடர்பு கொள்ள/தகவல் மரிமாறிக் கொள்ள எழுப்பும் ஒலியே. ஆனால், அதனை மனிதன் படித்தானில்லை. விலங்குகளுக்கு மொழி உண்டா? விடை கொடுக்க முடியாத கேள்விதான் என்றாலும், விஞ்ஞானிகள் மொழிக்குக் கொடுக்கும் வரையறை, மொழி என்பது அடையாளக் குறியீடுகளுடன் ஆக்கப்பூர்வமான தொடர்பு என்பதே. ஆனால்

விலங்கினங்கள் பொதுவாக மனிதனைப் போன்றில்லாமல் குறிப்பிட்ட மூன்று விதமானச் சூழ்நிலைகளில் மட்டுமே தொடர்பு கொள்ளுகின்றன.

1.   உணவு பற்றிய தகவலைப் பரிமாறிக் கொள்ள

2.   இனப்பெருக்கக் காலத்தில் தங்கள் இணையுடனான உறவை வலுவாக்கிக் கொள்ள அல்லது

3.   ஆபத்தான காலக்கட்டத்தில்/ஆபத்தில் சிக்கிக் கொண்டால்

ஒரு சில விலங்கினங்களின் தகவல் பரிமாற்றங்கள் மிகவும் மதிநுட்பமான முறையில் இருப்பதால், விஞ்ஞானிகள் அதனை விலங்குகளின் மொழி என்றே முடிவு செய்ய வேண்டியதானது. உதாரணத்திற்குத் தேனீக்களின் இனத்தில் ஒரு தேனீ உணவைக் கண்டுபிடித்துவிட்டால் உடன் தனது கூட்டிற்கு வந்து, ஆட்டல் நடனம் செய்து – இதில் இந்த ஆட்டல், எண் 8 வடிவத்தில் நிறைய நேரம் என்றால் உணவு தூரத்தில் உள்ளது என்று அர்த்தம். ஆட்டல் நடனம் வட்ட வடிவில் சிறிது நேரம் என்றால் உணவுக் கூட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில்/அருகில் என்ற அர்த்தத்தில் அங்கிருக்கும் தனது சகாக்களான உழைப்பாளித் தேனீக்களுக்குத் தகவலைப் பரிமாறுகின்றன.

How can honeybees communicate the locations of new food sources? Austrian biologist, Karl Von Frisch, devised an experiment to find out! By pairing the direction of the sun with the flow of gravity, honeybees are able to explain the distant locations of food by dancing. "The Waggle Dance of the Honeybee" details the design of Von Frisch's famous experiment and explains the precise grammar of the honeybees dance 

வேகமும், சுற்றுகளின் எண்ணிக்கையும் தூர அளவைக் குறிக்கின்றன. 40 சுற்றுகள் என்றால் உணவு 100 மீ தூரத்தில் என்றும் 24 சுற்றுகள் என்றால் 500 மீ ருக்கும் அதிகம் என்று அர்த்தம். நடனத்தின் நோக்கு நிலை (Orientation) உணவு இருக்கும் இடத்தின் அறிகுறியாகும். நடனத்தின் தீவிரமும், கால அளவும் உணவின் செழுமையைக் குறிக்கும். 

இந்த நடனமாடும் தேனீ உணவின் தரத்தைத் தனது சக உழைப்பாளித் தேனீக்களிடம் எப்படி அறிவிக்கின்றன என்றால், அந்தத் தேனீக்கள் இந்த நடனமாடும் தேனீயை முகர்ந்துப் பார்த்து பூக்களின் மணத்தை அறிந்து கொள்கின்றன. உடன் அந்தத் தேனீக்கள் புறப்பட்டுவிடும். இப்படித் தேன் எடுக்கப் புறப்படும் புதிய குழு தேனீக்கள் இந்த முக்கியமானத் தகவலைப் பரப்புகின்றன. ஒரு மணி நேரத்திற்குள் 10,000 தேனீக்கள் அந்த இடத்திற்கு வந்து விடும் என்ற தகவல், தேனீக்களின் இந்த வகையான மிக நுட்பமானத் தகவல் பரிமாற்றத்திலிருந்து அறிய முடிகிறது.

ரகசியங்கள் தொடரும்..

------கீதா 

காணொளி - நன்றி யுட்யூப் 

வெள்ளி, 1 ஜூலை, 2016

BGR-34 நீரிழிவு நோயைத் தடுக்கும் ஆயுர்வேத மருந்தும், நீரிழிவு நோயும்

Image result for bgr 34
நம் சகோ மதுரைத் தமிழன் இந்த மருந்தைக் குறித்த  ஒரு நல்ல அறிமுகப் பதிவு போட்டிருந்தார். நீரிழிவு நோயின் தலைநகரம் என்று சொல்லும் நிலைக்கு உள்ளான நம் நாட்டிற்குத் தேவையான ஒன்றுதான், நமது மத்திய அரசின் CSIR சமீபத்தில் வெளியிட்ட BGR 34 எனும் நீரிழிவு நோய்க்கான/ஆண்டி டயபட்டிக் ஆயுர்வேத மருந்து. நல்ல மருந்தாகவே இருந்தாலும் அதற்கு முன் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை.

இந்த மருந்தைப் பற்றி அறிந்ததும் என் மகன் கேட்ட கேள்விகள். இதனை மனிதர்களிடம் உபயோகித்துப் பார்த்தார்களா? எத்தனை பேரின் சுகர் லெவல் குறைந்தது. ஆய்வு நடத்தப்பட்டதா? எந்த ஒரு மருத்துவம் பற்றிய ஆய்வும் பல நிபுணர்களின் விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டப் பிறகே, அதுவும் வெளிப்படையாக அந்த ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டு அது பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டே வெளியிடப்பட வேண்டும். இதைப் பற்றிய ஆய்வுப் பேப்பர்கள், விவாதப் பேப்பர்கள் இருக்கிறதா? என்றும் கேட்டான்.

நல்ல கேள்வி. நான் கூகுளில் தேடியவரை நம்பள்கி, மதுரைத் தமிழனின் தளத்தில் கொடுத்திருந்த லிங்க் மட்டுமே கிடைத்தது. தகவல்கள் இருந்தனவே அல்லாமல், ஆய்வுப் பற்றிய விரிவான குறிப்புகள் எதுவும் இல்லை. ஒரு வேளை என் அறிவுக்கு எட்டவில்லையோ என்றும் தெரியவில்லை.

நம்பள்கி அவர்கள் கொடுத்த லிங்கில் நான் அறிந்தவை, இந்த மருந்து ஒரு குளிகை ரூ 5 என்றாலும், 2 காலையிலும், 2 மாலையிலும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அப்படியானால் ஒரு நாளைக்கு ரூ 20 செலவாகும் இது மட்டும் எடுத்துக் கொண்டால். அலோபதி மருந்துடன் எடுத்துக் கொண்டால் இன்னும் ரூ 500 கூடலாம். அப்படிப் பார்க்கும் போது இந்த மருந்து விலை குறைவு என்று சொல்வதற்கில்லை.

பக்க விளைவுகள் இருக்காது என்று சொல்லுகின்றார்கள். அது சரியாக இருக்கலாம். ஆனால், அலோபதியிலும் பக்க விளைவுகள் என்று பெருவாரியாகச் சொல்லுவதற்கில்லை. மெட்ஃபார்மின் வகைகள் ஒரு சிறிய வயிறு உப்பலை ஏற்படுத்துகிறது என்று பொதுவாகவே சொல்லப்படுகிறது. எனக்கும் உண்டு.

முதலில் நாம் அறிய வேண்டியது என்னவென்றால், குளுக்கோஸ் டாலரன்ஸ் GTT. ஒரு சில நீரிழிவு நோய் மருத்துவமனைகள், மருத்துவர்கள் மட்டுமே இந்தச் சோதனையைச் செய்யச் சொல்லுகின்றனர். இதைக் கண்டறிந்தால் சர்க்கரையை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் சக்தியைப் பெற்றிருக்கிறதா, எவ்வளவு, நாம் நீரிழிவு நோய்க்காரரா, நாம் நீரிழிவு நோய் வரும் வட்டத்திற்குள் சிக்கி இருக்கிறோமா என்பது தெரிந்துவிடும்.

ஆனால் பல மருத்துவர்கள், மருத்துவமனைகள் வெறும் வயிற்றிலும், சாப்பாட்டிற்குப் பிறகு 1 ½ , 2 மணி நேரத்திற்குப் பிறகான பரிசோதனையைச் செய்யச் சொல்லுகின்றனர். இந்தச் சோதனை தற்காலிகமானதே. இதை வைத்து ஒருவரை நீரிழிவு நோய்க்காரார் என்று தீர்மானிக்க முடியாது. ஆனால், வரும் வாய்ப்பு உள்ளதா என்று ஓரளவு யூகிக்கலாம். நீரிழிவு நோய்க்காரார்கள் இந்தப் பரிசோதனையை நன்றாக டபாய்க்க வழி உண்டு. டபாய்க்கவும் செய்கிறார்கள். இது தங்களையே தாங்கள் ஏமாற்றிக் கொள்வதாகும்.

அடுத்து 3 மாத சர்க்கரை அளவு.  இதையும் ஒரு சிலர்தான் பரிந்துரைக்கிறார்கள். இதுவும் முக்கியமான பரிசோதனை. நாம் மூன்று மாதங்களில் செய்த திருட்டுத்தனங்கள் தெரிந்துவிடும். ஆனால், இதையும் டபாய்க்கலாம் அதற்கான சூத்திரங்கள் இங்கு பொதுவெளியில் பேச முடியாது. அது நல்லதல்ல. இதுவும் தங்களையே ஏமாற்றிக் கொள்வதாகும்.

ஒவ்வொருவருக்கும் இன்சுலின் சுரப்பும், மெட்டபாலிசமும் வேறுபடும். ஒரு சிலருக்கு என்னதான் இன்சுலினே எடுத்துக் கொண்டாலும், குறைந்து கூடி என்று வேரி ஆகும். இன்சுலின் டிப்பெண்டன்ட் ஆகாமல் மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கே கூட ஒருவர் மூன்று வேளை, ஒரு சிலர் இரு வேளை, ஒரு சிலர் ஒரு வேளை என்று சாப்பாட்டுடன், சாப்பிட்ட பிறகு, சாப்பிடும் முன், 1/2 மணி நேரம் முன், பின் என்று எத்தனையோ இருக்கிறது.

ஒவ்வொருவரது வாழ்க்கை முறையும் கூட இதில் உட்படும். பலரும் எனர்ஜி பர்ன் செய்ய எந்தவித உடற்பயிற்சியும் செய்யாமல் வெறும் மாத்திரை மட்டும் எடுத்துக் கொண்டு, உணவுக் கட்டுப்பாடும் இல்லாமல், இல்லை உடற்பயிற்சி செய்தாலும் உணவுக் கட்டுப்பாடு இல்லாமல், “நான் சர்க்கரை நோயாளி” என்றும் "எனக்குச் சர்க்கரை குறையவே மாட்டேன் என்கிறது” என்றும் பெருமையாகச் சொல்பவர்களையும் பார்க்க நேரிடுகிறது.

இப்படி இருக்க இந்த மருந்து எல்லோருக்கும் பொதுவாக, ஒரே அளவாக எடுத்துக் கொள்ள முடியுமா? அப்படி எடுத்துக் கொண்டாலும், அதை நாம் அலோபதியுடன் எடுத்துக் கொள்ளும் போது இதன் பலனை எப்படி அறிய முடியும்.?

நம்பள்கி கொடுத்த லிங்கில் பலரும் இதை அலோபதியுடனே எடுத்துக் கொள்வதாகத்தான் சொல்லி இருக்கிறார்கள். 3, 4 மாதம் எடுத்தும் பலன் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனென்றால் ஆயுர்வேத மருந்துகள் அலோபதி போன்று உடனடி நிவாரணம் தராது. ஒரு சில காலம் கழித்தே அதன் பலன் அறிய முடியும். இந்த மருந்தைத் தனியாக எடுத்துக் கொண்டு பலன் அறிய வேண்டும். அதுவும் முழுமையான பலனைக் குறைந்த காலத்தில் அறிய முடியாது. அந்தச் சுட்டியில் 1000 பேருக்குப் பரிசோதனை செய்து பலன் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த ஆயிரம் பேரில் எத்தனை பேர் இன்சுலின் டிப்பெண்டன்ட்? இதைப் பற்றிய தகவல்கள் இல்லை. பொதுவாக “நீரிழிவு நோயாளிகள்” என்று சொல்லிவிட முடியாது. சிலர் பார்டரில் இருந்தால் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மட்டுமே பரிந்துரைக்கப்படும்.

மட்டுமல்ல 1000 என்பது மிகவும் குறைவு. நீரிழிவு நோயே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் இருக்கும் பொது மேற்கொண்ட பரிசோதனைகளை, முடிவுகளை விவரமாக வெளியிட வேண்டும்.

இங்கு ஒரு சிறு உதாரணம். நான் சென்ற 20 வருடங்களுக்கும் மேலாக நான் நீரிழிவு நோயாளி. மாத்திரை மட்டுமே. 10 வருடங்களுக்கு முன் என் இடது கண்ணில் ஒரு மிகச் சிறிய புள்ளி போன்ற இடத்தில் மட்டும் சிறிது நிழல் போல மறைக்கும். பரிசோதனையில் தெரிந்தது டயபட்டிக் ரெட்டினோபதி என்று.  ரெட்டினாவைப் பாதிக்கவில்லை. பார்வையில் கோளாறு இல்லை.
Image result for 24 hrs diabetic monitor
எப்படி இது? என் எல்லா சர்க்கரை அளவும் மிகவும் கட்டுப்பாட்டிற்குள்தானே இருக்கிறது? என்று மருத்துவரிடம் வினவிய போது அவர் சொன்னது இதுதான். நாம் என்ன 24 மணி நேரமுமா சர்க்கரை அளவைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்? எப்போது அது ஏறுகிறது என்று நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. நாம் இடையிடையில் விருந்துச் சாப்பாடும், இனிப்புகளும் சாப்பிடுவது இல்லையா? அப்படி ஏதேனும் ஒரு சமயத்தில் கண்ணைப் பாதித்திருக்கும் வாய்ப்பு உள்ளது. (இப்போது மேலை நாடுகளில் நம் உடம்புடன் பொருத்தப்படும் கைக்கடிகாரம் போன்று சர்க்கரை மானிட்டர் வித விதமாக இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள என் கசின் வாங்கித் தரட்டுமா என்றான்? அதை அணிந்து கொண்டு டென்ஷனுடன் அட போடா என்றுவிட்டேன்)

3 வருடங்களுக்கு முன் எனக்கு நடந்த அறுவை சிகிச்சைக்கு முன் எடுக்கப்பட்ட ரத்தத்தில் எனது சர்க்கரை மூன்று மாத ஆவரேஜ் "நான் டயபடிக் ரேஞ்சில்" இருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகும், எனது சர்க்கரை அளவு மருந்து இல்லாமலேயே அப்படித்தான் இருந்தது. இந்தப் பரிசோதனைகள் தற்காலிகமானவையே. எனக்கு குளுக்கோஸ் டாலரன்ஸ் இல்லை என்பது ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டதே. நானும் கள்ளத்தனங்கள் செய்வதுண்டு. ஆனால், அதற்கு ஏற்றபடி அன்றைய உணவு முறை உடற்பயிற்சி எல்லாவற்றையும் அமைத்துக் கொண்டுவிடுவேன்.

நான் என் அனுபவத்திலிருந்து அறிந்தது என்னவென்றால், இது என்னையே நான் பல முறை சோதனைக்கு உட்படுத்திக் கொண்டுச் சொல்வது.

என்ன மருந்து எடுத்துக் கொண்டாலும், மனதை அமைதியாக வைத்துக் கொண்டு உணவிலிருந்து, உடற் பயிற்சி வரை, ஸிஸ்டமாட்டிக்காக இருந்தால், குறித்துக் கொள்ளுங்கள் மிக மிக ஒழுங்கு முறையுடன் கள்ளத்தனங்கள் இல்லாமல், (ஒரு சிலர் நன்றாக வளைத்துக் கட்டி இனிப்பு, ஐஸ்க்ரீம் என்று சாப்பிட்டுவிட்டு கூடுதலாக ஒரு மாத்திரை எடுத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்) இருந்தால் சர்க்கரை அளவை நன்றாகப் பராமரிக்க முடியும்.  நீரிழிவு நோய் என்பது நோயல்ல. ஒரு குறைபாடே. கட்டுப்பாட்டிற்குள் இருந்தால், பிற நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். வாழ்க்கையைக் கட்டுப்பாட்டோடு அனுபவியுங்கள்!

------கீதா

படங்கள் இணையத்திலிருந்து.  (நான் மருத்துவரும் அல்ல நிபுணியும் அல்ல. இந்தப் பதிவு என் அனுபவத்தில் அறிந்ததைப் பகிர்ந்துள்ளேன்.)