சனி, 18 ஏப்ரல், 2015

ஆ!!! ஓ..!!டைட்டிஸ் மீடியா -Otitis Media

Image result for otitis media in adults

“ஆதித், எனக்கு வலது காதுல ஹியரிங்க் எய்ட் போடறேன்ல... இப்ப சம்மர் வேறயா புண்ணு வந்துருக்குடா.. தெரியாம க்ளீண் பண்ண இயர் பட் வேற போட்டுட்டேன். கொஞ்சம் வலிக்குது. ஹியரிங்க் எய்ட் போட முடிலடா. மருந்து சொல்லேன்...”  மகன், காது, மூக்கு, தொண்டை நிபுணர்/மருத்துவரிடம் செல்வது நல்லது என்றான்.

 வலி வந்து 2 நாட்கள் கடந்தாயிற்று.  வெள்ளி அன்று நல்ல நேரம் பார்த்து மருத்துவரிடம் சென்றோம்.  மருத்துவரிடம் மேல்விவரம் சொன்னதுமே உடனே காதின் உட்புறம் செக் செய்து, ஒரு தாளில் இரண்டு மாத்திரைகள் எழுதத் தொடங்கி, காதில் விடுவதற்குச் சொட்டு மருந்தும் எழுதிக் கொடுத்தார்.

“டாக்டர், நான் ஸோ ஸ்வீட் பெண்”

“இட்ஸ் ஓகே.....அதனால ஒண்ணும் இல்ல.  இந்த மருந்து...போதும்...”

மகனும் எதுவும் கேட்கவில்லை. அவர் எழுதிக் கொடுத்தவை வெறும் விட்டமின் மாத்திரைகள்.

“ஏண்டா நீ டாக்டர்கிட்ட எதுவுமே பேசல? உனக்கு விஷயம் தெரியும்ல.  பேசியிருக்கலாம்ல.”

“அம்மா, முதல்ல நான் டாக்டர்னு சொல்லிக்க மாட்டேன். அதுவும் நான் வெட்னரியன்.  ஹ்யூமன் டாக்டர்கிட்ட, எனக்குத் தெரிஞ்சாலும் பேசக்கூடாதுனு நினைக்கறேன்.  ஏன்னா எல்லா டாக்டரும் ஒத்துக்க மாட்டாங்க..”

“டேய் நீயே உங்க அம்மாவுக்கு ட்ரீட் பண்ணிருக்கலாம்.  எதுக்கு டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போன?”

“அப்பா, நான் மனுஷங்களுக்கு மருந்து எழுத முடியாது.  எதிக்ஸ் இல்ல”

“அப்படின்னா உங்க அம்மா மனுஷிதானா!!!?”

“அப்பா...ப்ளீஸ்”

“அம்மா நீ உன் சிம்டம்ஸ் எல்லாம் டாக்டர்கிட்ட சொன்னல்ல...?”

“ஆமடா....ஏன்?”

“இல்ல அவரு ஆண்டிபயாடிக்ஸ் எழுதவே இல்ல...அதான்”

 “ஒரு வேளை அத்தனை சிவியர் இல்லையோ என்னமோ...”

“ஐயோ அம்மா....எனக்கு அப்படித் தோணல...”

2 நாட்கள் சென்றது.  அதிகமானதே அல்லாமல். குணமாகவில்லை.  மிகவும் அவதிப்பட்டேன். படுகின்றேன்.

“கீதாகிட்டருந்து ஃபோனே இல்லை...ஃபோன் போட்டாலும் அவ எடுக்கலையா....ஆச்சரியமா இருந்துது...ஐயையோ கீதாக்கு என்னாச்சுனு பார்த்துட்டுப் போயிடலாம்னு நேர்லயே வந்துட்டோம்.” என்று மகனின் பெரியம்மாவும், அவர்கள் பெண் அருணாவும் வந்திருந்தார்கள்.

“கீதா ஃபோன் பேசலையா! அதானே பார்த்தேன்....என்னடா சென்னைல இந்த சம்மர்லயும் மேகம் மூடிண்டுருக்கு, லைட்டா மழை பெஞ்சுதேனு....”  -  மாமியார்.

“ஹேய் இங்க பாரு... பாட்டி காது இதுக்கு மட்டும் நல்ல ஷார்ப்..” – அருணா.

“சரி அம்மா, உன் சிம்டம்ஸ் சொல்லு....”

“தாடையை அசைக்க முடியல. பேசறதுக்குக் கஷ்டமா இருக்கு.” சைகை மொழிதான் வீட்டில், இந்த வலி வந்ததிலிருந்து. அதை ஏன் கேக்கரீங்க. வீட்டுல ஒரே களேபரம்தான்

“ஹை! சித்தி! “வாயை மூடிப் பேசவும்”, போல வந்துருச்சோ?” – அருணா.

“உங்க சித்தி நல்ல நாள்ல பேசினாலே புரியாது....இப்ப கேக்கவே வேண்டாம்...ஒண்ணும் புரியல...... பேசாம இருக்கறதே நல்லது.”

“ஆமாம் பா....அம்மா எது பேசினாலும் நீ சும்மானாலும் கத்திக்கிட்டு இருப்ப...இப்பவாது வீடு அமைதியா இருக்கா.?....இப்பவும் கத்திக்கிட்டுதான் இருக்க.........சரி நீ சொல்லும்மா...”

“ரொம்ப மெதுவாதான் நடக்க முடியுது....”

“ஓ...அதான் எங்கேயுமே நிலநடுக்கம் வரல.....”

“அப்பா....”

“தலை லைட்டா சுத்துதுடா...”  சைகையில்....

“இதுக்குத்தான் டெய்லி தலைக்குக் குளிக்காதன்னு சொல்றது.” – இது என் அப்பா.

“பூமி டெய்லியே சுத்திக்கிட்டுத்தானே இருக்கு.. சுத்தலைனாதான் பிரச்சினை. அதுக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்”

“ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா....நக்கல்ஸ் அபார்ட்.......ம்மா நீ சொல்லு வேற என்ன சிம்டம்ஸ்?”

“சாப்பிட முடிலடா. மெல்ல முடியல, விழுங்க முடியல, நாக்கைக் கூடச் சுழட்ட முடியலைடா. தாடையை அசைக்க முடியாததுனால.”

“ஏற்கனவே, நீ சாப்பிடறது காக்காய்க்குச் சாதம் வைக்கிறா மாதிரிதான்...இப்ப அதுவும் சாப்பிட முடியலையா....” – இது ஆதியின் பெரியம்மா

“ரொம்ப நல்லதாப் போச்சு...அதான் அந்த ஸ்னாக்ஸ் எல்லாம் அப்படியே இருக்கு”
“ஹலோ அப்பா.... அம்மா ஸ்நாக்ஸ் பக்கமே போக மாட்டாங்க....உன் கண்ணுல அது எப்படிப் படாம போச்சு?  உன் கண்ணுல படலனு சொல்லு...”

“ஏற்கனவே உங்கம்மாகிட்டக் கத்தி பேசினாலே புரியாது.  இப்ப ஹியரிங்க் எய்ட் வேற போட முடில....நான் என்ன சொன்னாலும் புரியப் போறது இல்ல....ரொம்ப சொஸ்தம்...”

“ஹியரிங்க் எய்ட் இல்லாதது நல்லதா போச்சு.....உங்க அப்பா என்னத் திட்டினாலும் கேக்காது...ஜாலிதான்...” சைகையில்...நான்.

“இல்லேன்னா மட்டும் நான் சொல்றத நீ காதுல வாங்கறியாக்கும்..?”

“ஹ்ஹ்ஹ்ஹ் காதுல வாங்காததுனாலதான் நம்ம வண்டி இவ்வளவு வருஷம் ஓடிருக்கு...வாங்கிருந்தா என்னைக்கோ ப்ரேக்டவுன் ஆகிருக்கும்”

“ஹாஹ்ஹ்ஹ் உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஒரு கெமிஸ்ட்ரிப்பா....”

“டேய் ஆதித் அது தெரியாதா உனக்கு...உங்க அம்மாவுக்கு கெமிஸ்ட்ரியும் தெரியாது.....ஃபிசிக்ஸும் தெரியாது.....”

“ம்ம் உனக்கும் சரியா தெரியலனு சொல்லுப்பா....சேம் போல்ஸ் தான் ரிப்பெல் ஆகும்....ஆனா இங்க ஆப்போசிட் போல்ஸ்.......ஆனாலும் ரிப்பெல்தான்.  ஃபிசிக்ஸ் ஃபெய்ல்ஸ்.”

“அதெப்படி உனக்கு மட்டும் அம்மா பேசறது புரியுதுடா?”

“ப்பா கொஞ்சம் சும்மாருப்பா.......அம்மா வேற என்ன சிம்டம் சொல்லும்மா...”

“தொண்டைல, வலது பக்கம் ஏதோ வீங்கினா மாதிரி, தொண்டைப் புண் வந்தா இருக்குமே அது மாதிரி இருக்குடா.  அப்புறம், காது செம ஹெவியா இருக்கு.  ஏதோ அடைச்சா மாதிரி.....காதுக்குக் கீழ சின்ன வீக்கம்.  தொட்டா வலிக்குது.   சொல்லப் போனா வலது பக்கம் நெத்திப் போட்டு, தலைலருந்து தொண்டை வரை வலிடா. இப்படி அப்படினு முகத்தை வலிக்கு ஏத்தபடி வைச்சுக்கிட்டா, உள்ளே ஏதோ தண்ணி ஓடுதுடா...அது ரொம்ப வலி.  செம எரிச்சல்.  சர்ஜரி ஆனா வலி, எரிச்சல் இருக்குமே அது மாதிரி இருக்குடா”

மகன் காதின் சில இடங்களிலும், கழுத்து, முகம் எல்லாம் தொட்டுப் பார்த்து வலி எங்கிருக்கின்றது என்று சோதித்தான்.”

"காது ஹெவியா இருக்குடா...."

"நேத்து பக்கத்து வீட்டுல அவங்க வளர்க்கற எறும்பைக் காணலைனு தேடினாங்க அது ஒருவேளை அம்மா காதுக்குள்ள போய் ஒளிஞ்சுருக்குமோ?!"

"ஐயோ...அப்பா...சும்மாருப்பா...."

“ஆதித், காதுக்குள்ள அலை அடிக்கற சத்தம்...மாதிரி..இரைச்சல்”

“அது வேற ஒண்ணும் இல்லமா டினிட்டிஸ்...இரைச்சல் அது இருக்கும்.  இப்ப உனக்குச் சுத்தமா வலது காது கேக்கல...சரியா?”

“ஆமாம் டா”

“உங்கம்மா காதுல “பீச்”சே வைச்சுருக்கும் போது அலை சத்தம் தான் கேக்கும் எப்படிக் காது கேக்கும்...?”

"ஸ்ப்பா சித்தப்பா...தாங்கல உன் கடி...." - அருணா.

“அம்மா இது Otitis Media

டேய் அம்மா ஏற்கனவே ஏதோ ப்ளாக் அது இதுனு போய்ட்டுருக்கா.  இப்ப நீ வேற ஏதோ மீடியானு சொல்லற. அவ்வளவுதான்.  அதுலயே அம்மா உக்காந்துருவா...டா....பாத்துக்க”

“அ....ப்.....பா......ஆஆஅ........அம்மா நீ கிளம்புமா....டாக்டர்கிட்ட போய்ட்டு வந்துரலாம்...இது ரொம்ப தீவிரமா இருக்கு.  ஏன் அன்னிக்கே டாக்டர் சரியா மருந்து எழுதலைனு தெரியல...எனக்கும் உன் காத செக் பண்ண முடியல அந்த இன்ஸ்ட்ருமென்ட் இல்லாததால....”

எல்லோரும் என்னை "டைசெக்ட்" பண்ணிக் கொண்டிருக்க, என் செல்லங்கள் கண்ணழகியும், ப்ரௌனியும் மட்டும் தான் என்னை எதுவும் சொல்லாமல் எல்லோரையும் மாறி மாறிப் பார்த்து,  என்னைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தன.

இம்முறை டாக்டர் 5 நாட்களுக்கான ஆன்டிபயாட்டிக் எழுதிக் கொடுத்தார்.  வலி நிவாரணியும் எழுதிக் கொடுத்தார்.  ஆனால், பணம் வாங்கிக் கொள்ளவில்லை.  ஒருவேளை மனது உறுத்தல்?  இருக்கலாம்.

3 நாட்கள் மருந்து சாப்பிட்டும் வலி குறையவில்லை.  கூடித்தான் போனது.  வலி நிவாரணி எடுத்துக் கொண்டால், கொஞ்ச நேரம் வரைக்கும் தான்.  பின்னர் வலி தொடங்கிவிடும். பைத்தியமே பிடிக்கும் அளவிற்கு.  யாருக்குமே இது வரக்கூடாது என்று வேண்டிக் கொள்கின்றேன்.  சாப்பாடு வெறும் கஞ்சிதான். அதுவும் மென்று திங்காமல் அப்படியே விழுங்குவது போல. மகனும், நானும் ஒரே அறை என்பதால், நான் தூங்காமல் இருப்பதைப் பார்த்துவிட்டு, வலி குறைந்து நன்றாகத் தூங்குவதற்கு, மகன், காப்ஸ்யூல் வாங்கி வந்துக் கொடுத்தான்.

“இந்த காப்ஸ்யூல ஆண்டிபயாட்டிக்கோட எடுத்துக்க.  நல்லா தூக்கம் வரும். கூடிய வரை வலியை பொறுத்துக்கப் பாரு. முடியலைனா இதப் போட்டுக்க” என்று சொல்லி, ஒரு பச்சைக் கலர் காப்ஸ்யூல் பக்கத்தில் வைத்தான்” 

“ஆதித் அந்தப் பச்சைக் கலர் காப்ஸ்யூல் எங்கடா?”

“என்னம்மா நீ கலர் சொல்லிக் கேக்கற?”

“அட போடா....விசு அங்கிள் கூட “எங்களுக்குத் தெரிஞ்சது எல்லாம் சிவப்பு, நீலம், பச்சை” னுதான் எழுதிருப்பாரு....”

“அம்மா! அங்கிள் எழுதினது ஆம்பிள்ளைங்களுக்கு....உங்களுக்கு எல்லாம் கலர் கலரா தெரியுமே. அதுவும், அம்மா, மருந்துல எல்லாம் கலர் சொல்லிக் கேக்காதம்மா.  அப்புறம் படிக்காதவ மாதிரி ஆகும்...”

மாத்திரையைப் போட்டுக் கொண்டு படுத்ததுதான் தெரியும். இந்த வலியினால், அவ்வளவாக வலைப்பக்கம் வரவே இல்லையா, கண் மூடியதும், மாத்திரையின் ஒரு விதமான அரை மயக்கத்தில், நம் வலை அன்பர்கள் எல்லோரும் கலர் கலராக ரவுண்டு கட்டி வரிசையாக வரத் தொடங்கினார்கள்.

பழனி கந்தசாமி ஐயா வந்து “என் அந்தப்புரத்து அழகிகளப் பாக்க வரலியானு” கேட்டார்! ஏதேனும் புது அழகி வரவு உண்டோ? பார்க்க வேண்டும். அவரது மல்லிகைப் பூ இட்லியும் வந்தது.  ஆனால், என்னால்தான் சாப்பிட முடியாதே! வெங்கட்ஜியின் ஹிமாச்சல் பயணம் பனி மூடிய சிகரம் வந்து குளிர்வித்தது, கூடவே ஃப்ரூட் சாலடும், சுர்மாவும் கண் சிமிட்டன. வாயில் ஜொள்ளு வந்தது என்றான் மகன். ஆசான் விஜு ஜோசஃபின் யாப்பிலக்கணம் வந்து பயமுறுத்த, நான் கூட கவிதை புனைந்தேன். அது மயக்கத்தோடு போயே போச்! கோயில் பிள்ளை என்னை அடுத்து என்ன கலாய்க்கப் போகிறாரோ? நண்பர் சொக்கன் அவர்களைக் காணவில்லை.  நலம் கேட்டு மெசெஜ் அனுப்ப வேண்டும்.

டிடி வந்து, இதுவும் கடந்து போகும், இடுக்கண் வருங்கால் நகுக என்றார்.  நகைக்க என்ன வழி என்று நினைத்துக் கொண்டிருந்த போது, ஜோக்காளி ஜோக் அடித்தார். விசுஆசெம்மின் நண்பர் தண்டபாணி வந்து “வாத்தியாரே இதுக்கு ஏதாவது பழமொழி வைச்சுருப்பியே” என்று அவரை உசுப்பேத்தினார். ரூபன் அடுத்து என்ன போட்டி அறிவித்தாரோ? யாழ்பாவாணன்? வைகோ சார் போட்டி அறிவித்தார். அவர் பதிவுகள் வாசித்துப் பாதியிலேயே நிற்கின்றது. இதற்கு இடையில் மதுரைத் தமிழன் பூரிக்கட்டை அடி வாங்கினாரா? என்ற கவலை வேறு. இனியா, அம்பாளடியாள், என்ன கவிதை எழுதினார்களோ? ஏஞ்சலின் புதிதாக ஏதாவது விழிப்புணர்வு பதிவு போட்டிருப்பார்.  மைதிலியும், கஸ்தூரியும் வந்தார்களா என்று பார்க்க வேண்டும். எங்கள் ப்ளாகில் திங்கள் என்ன சமையல் குறிப்போ? காணொளியோ? விமலன் என்ன அழகானச் சொற் சித்திரம் போட்டாரோ? சகோதரிகள் மனோ, கோமதி அரசு, ரஞ்சனி நாராயணன் என்று கலர் கலராக வந்தார்கள். துளசி கோபால் அடுத்து ஏது அம்பலம் சென்றாரோ என்று  நினைத்த போது, “கீதே பெருமாள்ட பிரார்த்திச்சு” நு சொல்லிச் சென்றார்.  துரைராஜு ஐயா அவர்களின் தளத்தின் குருவிகளும், கடவுளர்களும் நிழலாடினர்!

வாத்தியாரின் சரிதா வேறு இடையில் வந்து “அடியே கீதா! இந்தக் காதுவலி திருகு வலிக்கெல்லாம் பாட்டி வைத்தியம்தான் நல்லது தெரியுமோ” என்று ஒரு லிஸ்ட் வாசித்தார். எந்த லேடீஸ் க்ளப் உபயமோ தெரியவில்லை. பயந்துவிட்டேன். ஆவி டாக்கீசில் என்ன புதிய படம் என்று பார்க்க வேண்டும். சீனுவை ராத்திரியில் ஏதேனும் நாய்கள், பேய்கள் துரத்தியதா? தெரியவில்லை. அரசனை எதற்கோ பாராட்டியதாக நினைவு. கார்த்திக் சரவணன் என்னுடன் ஏதோ பேசியது போல் தோன்றியது. குடந்தையூரார் எழுதும் தொடர்கதையில் அடுத்த பாகம் போட்டிருப்பார்.  தனிமரம் வேறு ஒரு தொடர் எழுதிட்டுருந்தாரே! கரந்தையார் யாரைப் பற்றி எழுதியுள்ளாரோ. ரமணி சார் கவிதைகள் பார்க்கலையே! மூங்கில் காற்று முரளிதரன் அவர்களின் அவரது நாய் பற்றிய பதிவு திடீரென பளிச்சிட்டது. என் செல்லங்கள் குரைத்ததாலோ என்னவோ?! சுரேஷின் சென்ரியு, பாப்பா மலர் பார்க்க வேண்டும். பாலமகி, அனிதா, சித்ரா சுந்தர், அனு? உமையாள் மீண்டும் வந்தாரோ?  சுப்புத் தாத்தா அடுத்த என்ன இசையமைத்தாரோ? குழல் இன்னிசை என்ன இசைத்தாரோ? மணவை? இரா? அன்பேசிவம் என்னா ஆனார்? கிரிக்கெட்ல நம்ம நாடு தோத்ததுக்கப்புறம் ஆளக் காணல. ஐபிஎல்லில் மூழ்கிட்டாரோ?! சாமானியனையும் காணவில்லை.
   இளங்கோ ஐயா அவர்களின் அம்மா பதிவு நினைவுக்கு வந்தது.  முத்துநிலவன் ஐயா ஒரு பட்டிமன்றம் குறித்த சுட்டி கொடுத்ததைப் பார்த்த நினைவு நிழலாக. க்ரேஸ் குழந்தைகள் கணினி நேரம் பற்றி அடுத்து என்ன எழுதினாங்களோ? ஆறுமுகம் ஐயாசாமி புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லியது நினைவுக்கு வந்தது. அவர் வீட்டுக்கு அடுத்து பாம்பு வந்ததா? ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் அடுத்து என்ன புலம்பல்ஸோ?  சுவாரஸ்யம்தான். இபுஞா அடுத்து என்ன சீறியிருக்கின்றாரோ?! இராயச் செல்லப்பா சாரின் குரல் எங்கேயோ கிணற்றுக்குள் இருந்து கேட்டது போல இருந்தது. இளமதி எப்படி இருக்கின்றார்களோ? தென்றல் கீதா பக்கம் போய் நாளாயிற்று.

நம்ம கூட்டாஞ்சோறு செந்தில் அடுத்து எந்த மலைக்குப் பயணித்தாரோ? அதை எழுதியிருப்பாரோ? படிக்கலையே...மலைகள் பளிச் பளிச்சென்று வந்து சென்றன.  ஜிஎம்பி சார் என்ன பதிவு எழுதியிருப்பார்? நண்பர் ஜோதிஜியின் புத்தகம் வாசித்து பாதியில் நிற்கின்றது என்று இப்படி எல்லோரும் வந்து போன வேளையில், "நீ இன்னும் போன பதிவுக்கே பதில் கொடுக்கல" என்று துளசி குட்டிச் சென்றார். ஏதாவது பதிவு போடு.  எனக்கும் நேரம் இல்லை என்றார். வரிசையில் கடைசியாக வந்து தன் கொடுவா மீசையை முறுக்கிக் கொண்டு, இடுப்பில் கை வைத்துக் கொண்டு நின்றார் பாருங்கள் நம் கில்லர்ஜி,ஓட்டுப் போட்டதுக்கு நன்றி.என்று. (அதாவது நாங்க ஓட்டுப் போடலைன்றத அப்படிச் சொல்றாராம்!) அட! இவர் எப்போ அபுதாபிலருந்து இங்க வந்து அரசியல் கட்சி ஆரம்பித்தார்? தேர்தல் இன்னும் வரலையே! வில்லங்கக் கோஷ்டிகள் போற இடமெல்லாம் பாத்துக்கிட்டேதானே இருக்கேன். நானும் ரெண்டு பதிவு போட்டாச்சு”. அப்படினு சொன்னப்பதான் அந்த அரை மயக்கத்துலயும் புரிந்தது, நாங்க அவர் தளத்துல போய் கருத்து போடலனு! அன்பான மிரட்டல் விட்டாரு பாருங்க...அருமை அண்ணனாச்சே!  அவர் சொல்பேச்சை மறுக்க முடியுமா...அவ்வளவுதான்...மோனத் தூக்கம் கலைந்தது. கில்லர்ஜி அண்ணனுக்கு ஒரு ஜே போடலாமானு முழித்துப் பார்த்தால், வீடு ஒரு ரவுண்ட் அடிப்பது போன்று இருந்தது.  போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட இல்லாம, காது வலியும், எரிச்சலும் மீண்டும்! எழுப்பி விட்டது.

"ஆ!!!! ஓ..!!!!டைட்டிஸ் மீடியா.....இப்படியா.....முடியல!! ஹ்ஹ்ஹ்ஹ்...

-கீதா

படங்கள் : கூகுளில் இருந்து

பின் குறிப்பு : பெரும்பாலும் சிறியவர்களுக்குத்தான் வருமாம்.  ஒருவேளை நானும் சின்னப் பிள்ளையோ!!!!!  இது என் வலியைச் சொல்லுவதற்காக இங்கு எழுதவில்லை.  சிறிய அளவில் வேதனை வந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகிவிடவும் என்பதைச் சொலல்வே.  அசட்டையாக இருந்தால் பெரிதாகி, நாட்பட அவதியுற வேண்டிவரும் என்பதால்.  மிகவும் வேதனையாக இருக்கும். வலி நிவாரணிகள் நிறைய எடுக்க வேண்டிவரும்.  வேறு வழி இல்லை. அந்த அளவிற்கு வலிக்கும். வலி நிவாரணிகள் சிறிது நேரம் தான் வேலை செய்யும். மீண்டும் வலி தொடங்கும் தூங்க முடியாத அளவிற்கு. அதற்காகத்தான் இந்தப் பதிவு.




33 கருத்துகள்:

  1. வலியிலும் வேதனையிலும் கூட- வலைத் தோழர்களின் நினைவு!..

    ஆச்சர்யம்..

    சரி..இப்போது நலமாகி இருக்கும் என நம்புகின்றேன்.. நலம் வாழ்க!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா மிக்க நன்றி தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும். இன்னும் சரியாகவில்லை. செகண்ட் ஒப்பினியன் எடுக்கலாம் என்றிருக்கின்றோம் ஐயா. வலியிலும் மனதை திசைதிருப்புவது வலைத்தளங்கள் தான் ஐயா....

      நீக்கு
  2. அன்புள்ள அய்யா,

    ‘காது கொடுத்துக் கேட்டால்... ’வலியிலும் ஒரு வலிமையான பதிவு... நகைச்சுவையுடன் சுவைபடச் சொல்லி...‘துன்பம் வரும் வேலையில சிரிங்க... என்று சொல்லி வைத்தார் வள்ளுவரும் சரிங்க... ’ பாடல் நினைவிற்கு வந்தது.
    மகன் மிகுந்த அக்கறையுடன் மருந்துகொடுத்து... மருத்துவரிடன் காட்டி... பிள்ளைப்பாசங்கிறது இதுதானோ? எந்த இடத்திலும் பிள்ளை, தாயை நையாண்டியோ கிண்டலோ செய்ய வில்லை என்பதைப் பார்த்தேன்.

    தாயின் வலி மகனுக்குத் தெரியும்! இருந்தாலும் ஹாஸ்யங்கள் குடும்பத்துக்குள் இருப்பதுதானே குதூகலம்....!

    கதை போல காட்சிப்படுத்தி விவரித்து எழுதியதை மிகவும் இரசித்துப் படித்தேன்.

    பதிவர்கள் அனைவரையும் மனதில் பதியவைத்திருக்கிறீர்கள் என்பதை அறியமுடிந்தது.

    நன்றி.
    த.ம. 1.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு. வலைத்தளங்கள் வாசிப்பது ஒரு ஆறுதல் அதான்...

      நீக்கு
  3. ஹியரிங் எய்டினால் பிரச்சனையா? காதில் புண்ணால் பிரச்சனையா. ? சீக்கிரம் நலம் பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹியரிங்க் எய்ட் சிலசமயம் அந்தப் ப்ளாஸ்டிக் குமிழ் சிறிய சிறிய புண் ஏற்படுத்தும். இந்தத் தடவையும் ஏற்பட்டது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அந்த குமிழை மாற்ற வேண்டும். மாற்றியும். இயர் பட் போட்டு க்ளீன் செய்யக் கூடாதாம். நான் தெரியாமல் செய்யப் போக....இன்ஃபெக்ஷன் அதான் சார். மிக்க நன்றி சார்!

      நீக்கு
  4. நண்பரே,
    வேலை அதிகம் இருப்பதால் முழுமையாக படிக்கவில்லை. இப்போதைக்கு தமிழ்மணம் 2
    விரைவில் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. சீக்கிரம் நல்ல ஈ என் டி டாக்டரைப் பாருங்க. கொஞ்சம் பெரிய ஆன்டிபயாடிக் எடுத்திருக்கலாமோ.... இந்நிலையிலும் ஒரு ஆள் விடாமல் எல்லோரையும் குறிப்பிட்டு நண்பர்கள் நினைவு! ஓய்வெடுங்கள் சகோதரி. சீக்கிரமே நலம் பெறப் ப்ரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  6. //ஏஞ்சலின் புதிதாக ஏதாவது விழிப்புணர்வு பதிவு போட்டிருப்பார்./
    5 பதிவுக்கு அப்புறம்தான் அவேர்னஸ் போஸ்ட் :) இவ்ளோ வலியிலும் ஒருத்தரையும் மறக்கலியே சகோதரி !

    டேக் கேர் ..காது வலி மட்டும் தாங்க முடியாத ஒன்று ..இயர் பட்டால் நான் பட்ட வேதனை அம்மம்மா:(

    அப்புறம் doc விட்டமின்ஸ் டாப்லட் கொடுத்தாரே ! அந்நேரம் மகன் சரியாத்தான் செய்திருக்கார் ..
    சீக்கிரம் வலி நீங்க பிரார்த்திக்கிறேன் take care..



    பதிலளிநீக்கு
  7. காதில் வலி இருந்தபோதிலும்
    மனதில் வலை நண்பர்களின் எண்ணங்கள்
    மகிழ்ந்தேன் சகோதரியாரே
    விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
  8. நானும் இப்போது அடிக்கடி வலைப்பக்கம் வருவதில்லை! அதனால்தான் உங்கள் வலைப்பதிவுகள் மிஸ்ஸாகிவிட்டது என்று நினைத்தேன்! விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்! காதுவலி வந்தால் பயங்கரமாக இருக்கும் நினைக்கவே பயமாக இருக்கிறது! இதில் எங்களையெல்லாம் நினைவு கூர்ந்து பதிவில் கூறியமை உங்களின் அசாதாரண மனவலிமையைக் காட்டுகிறது! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. காதுவலி, பல்வலி மட்டும் மனிதன் தாங்க முடியாத வேதனையைத்தரும் உலகமே வெறுக்கும் அளவு ஆத்திரத்தையும் கொடுக்கும்... விரைவில் நலம் பெற வாழ்த்துகள்.
    வேதனையிலும் அனைத்து பதிவர்களையும் நினைவில் கொண்டு வந்தது அருமை சீக்கிரமாக நல்லதொரு ஈ. என். டி டாக்டரைப் பார்த்து வேதனைக்கு END கொடுத்து விட்டு வலையுலகம் திரும்ப வேண்டுகிறேன்

    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  10. வலியிலும் வலைப்பற்றிய நினைவு, ஒருவரையும் விட்டது போல் இல்லை. நன்றி. விரவில் குணமாக வேண்டும். அடுத்து தங்கள் பதிவு கருத்து தேவையானது. நாம் அலட்சியம் காட்டகூடாது. நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வேதனையை கூட இனிய கதைபோல சொல்ல முடியுமா..? முடியும் என்று நிருபித்திருக்கிறீர்கள். அருமை!
    அந்த வேதனையிலும் வலைப்பதிவர்களின் நினைவு. அதில் எனக்கும் ஒரு இடம். மிக்க மகிழ்ச்சி!
    விரைவில் காது வலியில் இருந்து விடுபட நல்ல மருத்துவம் எடுத்து மீண்டும் வாருங்கள் கீதா மேம்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  12. பதிவர்கள் இத்தனை பேரின் பிரார்த்தனையால் விரைவில் குணம் அடைய வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  13. பொல்லாச் செவிப்பிழையும் போகத் தலைச்சோறில்
    எல்லாப் பதிவர்களும் வந்தாரோ - கில்லர்ஜி
    வாக்கிற்கு நல்ல பயனுண்டு! இங்கெழுதும்
    தாக்கத்தை தந்தத ததோ?

    நன்றி சகோ.

    விரைவில் குணமடைய விரும்புகிறேன்..


    த ம 7

    தமிழ்மணம் நுழைய.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்
    அண்ணா

    காது வலி பற்றி சொல்லியும் .. பல பதிவர்களையும் அறிமுகம் செய்துள்ளீர்கள்... உண்மையில் காது வலி என்றால் எங்கள் ஊரில் வைத்தியசாலை சென்று மருந்து எடுப்பது அரிது அன்றில் இருந்து இன்றுவரைக்கும் ஆயுள் வைத்தியம்தான்.சொன்னால் என்ன மருந்து என்றால்..

    .சின்ன பனை மரத்தின் தண்டை எடுத்து அதில் உள்ள கருக்கு எல்லாவற்றையும் சீவிய பின் தனி தட்டை நெருப்பில் வெதுவெதுப்பாக சூடாக்கி எடுத்த பின் கையால் முறுக்க அதில் சிறிதளவு சாறு வரும் அதை ஒரு தேக்கரண்டியில் எடுத்து 3 சொட்டு விட்டுத்து 10 நிமிடம் துாங்க சரியாகிவிடும்... கை வந்த மருந்து.... செய்து பாரத்த பின் சொல்லுங்கள்.எப்படி என்று.. பகிர்வுக்கு நன்றி

    இந்தகாலம் நவீன காலம் இதலாம் விடலாம் என்று நினைப்பவர் அதிகம்
    த.ம7

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  15. இடுக்கண் வருங்கால் சிரிக்க வேண்டும் என்பதை மிகவும் சீரியஸ் ஆக எடுத்துக் கொண்டு எழுதிவிட்டீர்களோ? படித்துக் கொண்டு வருகையில் சிரிப்பை தவிர்க்க முடியவில்லை - ஐயோ பாவம் என்று இருக்கிறது. எல்லோரையும் நினைவில் வைத்துக் கொண்டு எழுதியிருக்கிறீர்களே, பாராட்டுக்கள்!
    விரைவில் வலியிலிருந்து மீண்டு நலம் பெற வாழ்த்துக்கள். சீக்கிரம் குணம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. வலியையும் சிலநேரத்தில் மறக்க வைத்துவிடும் வலையுறவுகளின் நட்பு என்பதை அழகாய் சொல்லி மாலையாக்கி விட்டீர்கள் பதிவை.
    விரைவில் குணமாகிவிட கடவுளிடம் பிரார்த்திக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  17. "சிறிய அளவில் வேதனை வந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகிவிடவும்" என்ற வழிகாட்டலையே நானும் முன்மொழிகின்றேன்.

    பதிலளிநீக்கு
  18. பிள்ளைபேறு சமயத்தில் வலியைப் பொருத்து கொண்டு அழகான பிள்ளையைப் பெற்று எடுப்பது போல இந்த வலியிலும் ஒரு அழகான பதிவை தந்து இருக்கின்றீர்கள்...

    பதிலளிநீக்கு
  19. தங்கள் உடல் நலம் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன். இந்நிலையிலும் தாங்கள் வலையுலக நண்பர்களைப் பற்றி சிந்தித்து எழுதியிருப்பது தாங்கள் எங்கள் மீது கொண்டுள்ள அன்பையும், நெருக்கத்தையும் காட்டுகிறது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்பர். அன்புகூர்ந்து உடல் நலனுக்கு உடன் முக்கியத்துவம் கொடுங்கள். அது தாங்கள் தொடர்ந்து மென்மேலும் எழுத உதவும்.

    பதிலளிநீக்கு
  20. அசால்டாக இருக்காமல் உடனே கவனிக்கவும்...

    நக்கல்ஸ் செம... நண்பர்கள் அனைவரையும் குறிப்பிட்டது சுவாரஸ்யம்...

    பதிலளிநீக்கு
  21. அடடா.... காது வலி - மிகவும் கஷ்டமாயிற்றே......

    வலியிலிருந்து மனதை திசை திருப்ப, பதிவு.... கொஞ்சம் கவனமும் தேவை. விரைவில் நல்ம் பெற எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு


  22. கனவிலும் எம்நினைவா காதுவலி தந்தும்
    மனம்மகிழ பார்த்தீர் அனைவரையும் அன்பின்
    இனம்கண்டு இன்புற்றேன் தோழி நொடியில்
    கனமின்றி காயட்டும் புண் !

    அருமையான பதிவு நகைசுவையுடன் கூடிய உரையாடல் வெகுவாகக் கவர்ந்தது .உப்புத் தண்ணி எல்லாவற்றுக்கும் சொன்னது கேட்குமே தோழி எந்தப் புண் என்றாலும் ஆற்றுமே. தொண்டை சாடையாக கரகரத்தவுடனேயே warm water ல் உப்பை கரைத்து கொப்பளித்தவுடனே சுகம் காணும். அது போன்று காதிலும் விட்டால் உடன் சுகம் வந்து விடும் ஆரம்பத்திலேயே மாற்றி விடலாம். இல்லையேல் பிரச்சினை தான். நான் சிறு டப்பாவில் உப்பு எப்பவும் என் handbag ல் வைத்திருப்பேன் என் கூடவே. அட என்ன சிரிப்பு. ம்..ம்.ம் சிரிக்காதீர்கள் ஒரு பாதுகாப்புக்கு தான்.

    பதிலளிநீக்கு

  23. சீக்கிரம் நலம் பெற வாழ்த்துக்கள்....

    இந்த வேதனையிலும் அனைத்து பதிவர்களையும் கூறிப்பிட்டு என்ன ஒரு பதிவு ......

    பதிலளிநீக்கு
  24. ஆகா இதுதான் விசயமா ...
    எதிக்ஸ் ரொம்ப அசத்தல்
    விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் பிரார்த்தனைகள்

    பதிலளிநீக்கு
  25. நலம் பலம் சேர்க்கும்
    வாழியவே!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  26. அடடா ரெஸ்ட் எடுத்துக்குங்க கீதா.. எத்தனை பதிவு படிச்சு மனப்பாடமா வேற வச்சிருக்கீங்க. இப்ப எனக்கு தலைய சுத்துது. யம்மாடி :) :) !!!

    பதிலளிநீக்கு


  27. வாருங்கள் நண்பரே! பதிவினை காண்பதற்கு!
    பாரிசில் பட்டிமன்ற தர்பார் வாக்கோடு வருகை தர வேண்டுகிறேன்.
    நட்புடன்,
    புதுவை வேலு
    வணக்கம்

    பதிலளிநீக்கு
  28. சகோதரி கீதா அவர்களுக்கு, இன்றுதான் இந்த பதிவினை பார்க்க நேரம் கிடைத்தது. காது வலியிலும் ஒரு நகைச்சுவை பதிவு. முழு குணம் அடைய, எல்லாம் வல்ல அந்த இறைவன் உங்களுக்கு அருள் புரிவான். (இன்னொரு விஷயம், நீங்கள் ஒரு டாக்டரைப் பார்க்கப் போனால் அவர் சொல்லும் ஆலோசனையை மட்டும் பின்பற்றவும்)

    பதிலளிநீக்கு
  29. வலியும் வேதனையும் அளவு கடந்து போகும்பொழுதுதான் நகைச்சுவை உணர்வு கூடும் அல்லது தனக்கு ஏதுமில்லை என மற்றவர்களுக்குக் காட்டி அவர்கள் பீதியைக் குறைப்பதற்காக அப்படி நடந்து கொள்ளச் சொல்லும். இதை வாழ்நாளின் பெரும்பகுதி, பலமுறை பட்டவன் நான். உங்கள் நகைச்சுவை உணர்வு வாழ்க! ஆனால், உங்கள் வலியை மறைத்துக் கொண்டு எங்களைச் சிரிக்க வைக்கும் அந்த முயற்சியை என்னால் ரசிக்க முடியவில்லை; உங்கள் நிலையை நினைத்து வேதனைப்படத்தான் தோன்றுகிறது. 'ஓ டைட்டிஸ் மீடியா' எனும் தலைப்பையும் படத்தையும் பார்த்துக் காது பற்றி ஏதோ மருத்துவப் பதிவு என்று நினைத்து விட்டேன். இப்படி இருக்குமென்று எதிர்பார்க்கவில்லை. நீங்கள் விரைந்து குணம் பெற வேண்டும்! இந்த நிலைமையிலும் எங்களையெல்லாம் நினைவு வைத்துக் கொண்டு, இல்லை இல்லை கனவில் வைத்துக் கொண்டு இவ்வளவு விரிவாகப் பதிவு எழுதியிருக்கும் உங்கள் அன்பை என்னென்பேன்! அதுவும் மாதத்திற்கு ஓரிரு முறை மட்டுமே பதிவிடுகிற, எப்பொழுதாவது ஒருமுறை மட்டுமே இங்கு எட்டிப் பார்க்கிற என்னையும் மதித்து இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொண்டிருக்கும் உங்கள் பேரன்புக்குத் தலை வணங்கிய நன்றி! இனிமேல் உடல்நல விதயத்தில் இப்படி அசட்டையாக இருக்காதீர்கள்!!!

    பதிலளிநீக்கு
  30. மேடம்! வலி வேதனையிலும் எழுதிய நகைச்சுவை பதிவு அருமை.
    அதிலும் நீங்க வாசிக்கும் பதிவர்களையும் பதிவில் கொண்டு வந்து எழுதிய விதம் சூப்பர்!
    ---

    பதிவு அப்பரம்
    உட நலம் முக்கியம் மேடம்!

    பதிலளிநீக்கு