சனி, 12 செப்டம்பர், 2026

சுவடுகளாகும் நினைவுகள்

ஜெயகுமார் சந்திரசேகரன் சாரின் மறைவு குறித்துக் கேட்டதும், அதிர்ச்சியாகத்தான் இருந்தது. எனக்கு அவரை அவரது கருத்துகளின் மூலம் தான் அறிமுகம் ஏற்பட்டது. அவருடைய முதல் கருத்தே பாராட்டியும் அதே சமயம் சர்காஸ்டிக்காகவும் வந்ததும், "யாருடா இவர்? இப்படி ஒரு கருத்தைக் கொடுத்திருக்காரு?" என்று கீதாவிடம் கேட்டேன். பலர் கொடுக்கும் கருத்துகளில் இருந்து வித்தியாசமாக, கொஞ்சம் Strange ஆக இருக்கும் அவருடைய கருத்து. கூடவே ஒரு மூத்த சேட்டன் போன்று சஜஷன்ஸும் கொடுப்பார். முதலில் கோபமும் எரிச்சலும் வந்தாலும், பின்னர் அதை யோசித்துப் பார்த்த போது அதை எடுத்துக் கொள்ளலாமே என்றும் தோன்றி மாற்றி திருத்திக் கொண்டதும் உண்டு. நெல்லிக்கனி போன்று என்றே தோன்றியது.