பயணங்கள் எப்போதும் மனதுக்கு இன்பமளிப்பவை.
அப்படியிருக்க தென் மாநிலத்தவர்களுக்கு வாய்க்கும் வட மாநிலப் பயணங்கள், அதிலும் இமயமலைப்
பகுதிகள் என்றால் எப்படிப்பட்ட இனிமை அளிக்கும், யோசித்துக் பாருங்கள்! அப்படி ஒரு
இனிய பயணம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் (2024) எனக்குக் கிடைத்தது.
நண்பரின் வீட்டுத் திருமணம் 22.04.24 அன்று
தில்லியில் என்று முடிவானதும், திருமணவிழாவில் பங்கெடுத்து, கூடவே சிம்லாவுக்குப் பயணம்
செய்ய முடிவு செய்தேன். கீதா தேவையான தகவல்களும், பரிந்துரைகளும் தந்தார். கல்லூரிக்குக்
கோடை விடுமுறை என்பதால் அதிகமாக யோசிக்க வேண்டாமே. மனைவியும், மகன் அருணும், நானும்
போக முடிவு செய்தோம். கூடவே உஷாவின் கல்லூரித்
தோழிகள் மூவரும் (எல்லோரும் 60 ஐத் தொடவிருந்தவர்கள்) வர, தயாரானார்கள். முன்பும் துபாய்
பயணத்தின் போதும் நாங்களெல்லோரும் ஒன்றாகப் பயணித்திருந்தோம். ரயில் பயணச் சீட்டுகளும்,
தங்குவதற்கு ரயில் நிலையத்தில் ஓய்வெடுக்கும் அறைகளும், சிம்லாவில் ஹோட்டலும் முன்பதிவு
செய்தாகி விட்டது. 19/04/24 மாலை திருச்சூரிலிருந்து வண்டியேறி பயணம் முடிந்து
30/04/2024 அன்று மாலை திருச்சூர் வந்து இறங்குவது என்று முடிவு செய்தோம்.
19-04-2024 வெள்ளிக்கிழமை கேரளா எக்ஸ்ப்ரஸ்ஸில்
திருச்சூரிலிருந்து கிளம்பினோம். 48 மணி நேரப் பயணம். இரண்டு இரவுகளும் ஒரு பகலும்
பயணம். எனவே பயணத்தில் அதிகமாகக் காட்சிகள் கண்ணில் படவில்லை. 21-04-2024 ஞாயிறு மதியம்
1 மணிக்கு புதுதில்லி ரயில் நிலையத்தை அடைந்தோம்.
ஓய்வெடுக்கும் அறையில் (Retiring room) பொருட்களை வைத்துவிட்டு செங்கோட்டைக்குப் போனோம். அரிய பல காட்சிகளையும் கண்டு உள்ளே உள்ள உணவகத்தில் நொறுக்குத் தீனி சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து ஊபர் வண்டி பிடித்து இந்தியா நுழைவு வாயிலை அடைந்தோம். வண்ண விளக்குகளில் நீராடி நிற்கும் இந்தியா நுழைவு வாயில் ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைக்கும். மக்கள் வெள்ளம். பிறகு ஓய்வெடுக்கும் அறையை அடைந்து தூங்கினோம்.
செங்கோட்டை - RED FORT - படங்கள் கீழே
.jpeg)
இந்தியா கேட் - படங்கள் கீழே
22-04-24 திங்கள் காலை கேரளா ஹவுஸ் உணவகத்தில்
காலை உணவு உண்டோம். நானும் மனைவியும், அருணும் மெட்ரோ ரயிலில் குருகிராமத்திற்குப்
பயணமானோம். மற்ற மூவரும் அன்று தில்லியில் சில இடங்களுக்குச் சென்று, இரவு ஓய்வெடுக்கும்
அறைக்குச் செல்ல முடிவானது.
குருகிராமத்தில் கோவா country க்ளப், அங்குதான்
திருமணவிழா. மெட்ரோ நிலையத்தில் இறங்கி ஆட்டோவில் அங்கு சென்றோம். அங்கு நட்பின் உறவுகள்,
மணமகன் எல்லோரையும் கண்டோம். மாலை மணப்பெண் மற்றும் எல்லோரும் வந்ததும் மணவிழா சடங்குகள்
தொடங்கின. எல்லோரது வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் சூழ சடங்குகள் முடிந்தன. நாங்கள்
மூவரும் எங்களுக்கான அறையில் தங்கி மறுநாள் காலை 7 மணிக்கு எல்லோரிடமும் விடைபெற்று
மெட்ரோவில் ரயில் நிலையத்தை அடைந்தோம். எங்களுடன் வந்திருந்த நட்புகள் மூவரில் ஒருவருக்குக்
காய்ச்சல். அவரால் சிம்லா வர முடியுமா? என்ற கேள்வி எல்லோருக்கும். அவரோ அதைப் பொருட்படுத்தாமல்
உடன் வரத் தயாரானார்.
23-04-2024 - காலை 11.05 மணிக்குக் கிளம்பும்
ரயிலில் ஏறி, 3.30 மணி அளவில் சண்டிகாரை அடைந்தோம்.
சண்டிகர் ரயில் நிலைய முகப்பு
பொருட்களை cloak room இல் வைத்துவிட்டு
ஊபரில் ராக் கார்டனுக்குச் சென்றோம். அருமையான காட்சிகள். நேக்சந்த் சைனி என்பவரால்
40 ஏக்கரில் உருவாக்கப்பட்டக் கல் தோட்டம். பாலக்காடு மலம்புழாவிலும் இது போன்ற ஒரு
ராக் கார்டன் உண்டு. ஆனால் சண்டிகர் பூங்கா மிகவும் பெரியது.
.jpeg)

ராக் கார்டன் பார்த்த பின் ரயில் நிலையத்தை அடைந்தோம். அங்குள்ள ஒரு உணவகத்தில் இட்லி, சாதம், சப்பாத்தி கிடைத்தது. சாப்பிட்டுவிட்டு முன்பதிவு செய்திருந்த ரிட்டையரிங் ரூமில் தூங்கினோம்.
25 ஆம் தேதி அன்று காலை 7.15ற்குக் கல்காவிலிருந்து சிம்லாவிற்கு டாய் ரயிலில் பதிவு செய்திருந்தேன். இந்த ஏற்பாடுகள் செய்த போது சண்டிகாரில் இடங்கள் பார்த்துவிட்டு அங்கிருந்து 3/4 - 1 மணி நேரப் பயணத்தில் இருக்கும் கல்காவில் இருந்துதான் சிம்லாவுக்கு ரயில் என்பதால் அங்கு அறை முன்பதிவு செய்து அங்கு தங்கி இடங்களைப் பார்க்கலாம் அல்லது இடங்களைப் பார்த்துவிட்டு அங்கு தங்கிக் கொள்ளலாம் என்ற திட்டம். ஆனால் கல்காவில் அறை முன்பதிவு செய்யவில்லை.
காரணம், 23 ஆம் தேதி இரவு தங்குவதற்கு சண்டிகர் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்திருந்த ஓய்வெடுக்கும் அறை 24 ஆம் தேதி இரவு 8 மணி வரைக்கும் என்பதால் சண்டிகரிலேயே தங்கி 24 ஆம் தேதி காலையில் இடங்களைப் பார்த்துவிட்டு அங்கிருந்து இரவு ரயிலைப் பிடித்து கல்கா ரயில்நிலையம் சென்றுவிட்டால் அங்கு காத்திருக்கும் அறையில் சில மணி நேரங்களைக் கடத்தி மறுநாள் காலை 7.15க்கு சிம்லா செல்லும் டாய் ரயிலில் சிம்லா சென்றிடலாம் என்று நினைத்ததால். ஆனால் இப்படியான திடீர் மாற்றங்கள் நல்லதல்ல என்பது அப்போது தெரியவில்லை. எனவே...
24-04-2024 புதன் காலை ஊபர் டாக்ஸியை
ஏற்பாடு செய்து கொண்டு இந்தியன் காஃபி ஹவுஸில் உணவு சாப்பிட்டுவிட்டு டாய் ஹவுஸ், எலந்தே மால், ஜப்பனீஸ் பூங்கா, சுக்னா லேக் போன்றவற்றைக்
கண்டோம்.
இந்தியன் காஃபி ஹவுஸில் உணவு
இந்தியன் காஃபி ஹவுஸ் - உள்ளே
டாய் ஹவுஸ் - பொம்மைகள் அகம். இங்கு ஒவ்வொரு நாட்டின் உடை, கலாச்சாரத்தைப் பொம்மைகள் வடிவில் வடிவமைத்துக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்மாலில் ஒரு உணவகத்தில்
ஜப்பனீஸ் பூங்கா
சுக்னா லேக்
அப்படி, 24 ஆம் தேதி மேற் சொன்ன இடங்களைப் பார்த்துவிட்டு இரவு 8 மணிக்கு அறையைக் காலி செய்துவிட்டு,
கல்கா செல்ல 9 மணி ரயிலுக்குக் காத்திருந்தால், 9 மணிக்கு ரயில் வரவில்லை. விசாரித்தோம்.
இதோ வரும், வந்துவிடும் வந்துவிடும் என்று சொல்லப்பட்ட ரயில், ஏதோ தீவிர வாதச் செயலால்
மறுநாள் - 25-04-2024 காலை 5.30 ஆகியும் வரவில்லை. இப்படி நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவும்
இல்லாததால் மிகவும் சிரமமாகிவிட்டது. 7.15 ற்குக் கல்காவிலிருந்து சிம்லாவுக்கு டாய்
ரயிலில் முன்பதிவு செய்திருந்த பயணம். 1 3/4 மணி நேரம்தான் இருந்தது. டாய் ரயிலில்
எங்களால் பயணிக்க முடிந்ததா?
அடுத்த பதிவில்...
(இத்தொடர் முடிந்ததும், இந்த வருடம் இதே ஹிமாச்சலில் வேறு இடங்கள் சென்று வந்த பதிவுகள் வரும்.)
-----துளசிதரன்
அம்மாடி... ஒன்றேகால் வருடம் ஓடிய பிறகு பயணக்கட்டுரை! சூப்பர். எனக்கும் இங்கே எல்லாம் போக ஆசைதான். ஆசை இருக்கு சிம்லா போக; அதிருஷ்டம் இருக்கு உள்ளூர் மார்க்கெட் போக!
பதிலளிநீக்கு'ஆசை இருக்கு'... அப்படீல்லாம் சொல்லிட்டுத் தப்பிக்க முடியாது ஸ்ரீராம். பொட்டில சாமான்களை அடுக்குங்க, கிளம்பிடுங்க. ஒரு தடவை இப்படிக் கிளம்பிப் பாருங்க..ஆட்டமேட்டிக்கா கால்ல சக்கரம் வந்து ஒட்டிக்கொள்ளும். அலை ஓய்ந்த பிறகு கடல்ல இறங்கலாம்னு நினைச்சால் வேலைக்காகாது. இப்பக்கூட பத்ரி யாத்திரை சென்றிருந்தபோது பவிஷ்ய பத்ரி போகலை (அதுக்கு ஒரு நாள் தனியா ஒதுக்கணும் என்றார்கள்). அவங்கள்ட, பவிஷ்ய பத்ரியைச் சேர்த்து இன்னொரு யாத்திரை அடுத்த மாதம் வைத்தால், நான் சேர்ந்துகொள்கிறேன் என்று சொன்னேன். வீட்டுலயே எப்போதும் இருந்து என்ன பண்ணப்போகிறோம்? இந்தப் பயணத்துக்குச் செலவழிக்க முடியுமா, சரியா வருமா என்று நான் மனைவியிடம் கேட்பேன். அவள் அதைப்பற்றி ஒன்றுமில்லை என்று சொல்லிட்டா உடனே பயணத்துக்குத் தயாராகிவிடுவேன்
நீக்குஆமாம். இதற்குப் பின்னால் கீதாவும் ஒரு காரணம். எழுதாமால் விடமாட்டேன் என்று துரத்திக் கொண்டிருந்தார்.
நீக்குவேலைகளும், பல பிரச்சனைகளும் அது இது என்று பல காரணங்கள்.
உங்களுக்கு உடல் நலம் நல்லபடியாகியிருக்கும் என்று நம்புகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல உடல் நலத்தையும், போகக் கூடிய சந்தர்ப்பங்களையும் எல்லா இடங்களையும் காணவும் சந்தர்ப்பங்களையும் தருவார். அதற்கும் பிரார்த்திக்கிறேன்.
மிக்க நன்றி ஸ்ரீராம்.
துளசிதரன்
//கீதா தேவையான தகவல்களும், பரிந்துரைகளும் தந்தார். //
பதிலளிநீக்குபின்னே? உதவி என்று கேட்டு விட்டால் கீதா செய்யாத உதவியா?
ஸ்ரீராம், நன்றி. ஆனால் கூச்சமாக இருக்கிறது. முடிவதை முடிந்தால் செய்ய எண்ணம் அவ்வளவே. அதில் ஒரு மகிழ்ச்சி.
நீக்குகீதா
//உதவி என்று கேட்டு விட்டால் கீதா செய்யாத உதவியா// உண்மைதான் ஸ்ரீராம். அவங்க வீட்டுலேர்ந்து எங்க வீட்டுக்கு அலைஞ்சு எங்களுக்கு ஒரு பெரிய உதவியைச் சமீபத்தில் செய்தார். அதே உதவியை நான் செய்யணும்னா, என்ன அவ்வளவு தூரம் போகணுமே என்றெல்லாம் யோசித்திருப்பேன். அதிலும் வீட்டை நிர்வகிக்கும் வேலையையும் பார்த்துக்கிட்டு இதனையும் செய்தார் கீதா ரங்கன் க்கா... உண்மையிலேயே உதவி செய்யும் மனம் உள்ளவர். அவங்க 'நர்ஸ்' வேலைக்குப் போயிருந்தால், ரொம்பவே பணத்தையும், பலரின் அன்பையும் சம்பாதிச்சிருப்பாங்க
நீக்குஆமாம் உண்மைதான். எள் என்று கேட்டால் எண்ணையாக்கித் தந்திடுவார். அவருடன் நெருங்கிப் பழகும் எல்லோருக்கும் இது தெரிந்திருக்கும்.
நீக்குநன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
இந்தியா கேட் செங்கோட்டை படங்கள் அருமை. ஊபர் என்று படித்ததும் நேற்று படித்த செய்தி நினைவுக்கு வருகிறது. ஊபர் ஓலா ரேபிடோ கட்டணங்களை இருமடங்கு உயர்த்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளதாம். ஏற்கனவே ஆடுவார்கள்...ம்ஹூம்!
பதிலளிநீக்குதில்லியில் ஊபர் செர்வீஸ் நன்றாக இருந்தது என்று என் அனுபவத்தில் அறிந்தது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு ஊபர் அனுபவங்களோ, அதை புக் செய்யும் திறமையோ இல்லை. மகன் அருண் வந்திருந்தானே. அவனுக்கு அதெல்லாம் அத்துப்படி. போதாதற்கு அவன் கொஞ்சம் ஹிந்தியும் பேசுவான். அதை வைத்து நாங்கள் ஒருவிதம் மேனேஜ் செய்தோம் என்றுதான் சொல்ல வேண்டும். ஊபர் டாக்ஸி எங்கும் பயமில்லாமல் பயணிக்க உதவும் என்று தோன்றியது. அதில் கட்டணம் குறிப்பிடப்பட்டு விடுவதால் அவர்கள் இஷ்டத்திற்கு வாங்க முடியாது என்பது சிறப்பம்சமாகத் தோன்றியது. உடனேயும் கிடைத்தது. அதுவும் சிறப்பம்சமாகத் தோன்றியது.
நீக்கு// ஊபர் ஓலா ரேபிடோ கட்டணங்களை இருமடங்கு உயர்த்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளதாம். ஏற்கனவே ஆடுவார்கள்.//
தகவல் எனக்கு. நீங்கள் ஆடுவார்கள் என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும் போது ஓ அப்படியும் நடக்கிறது இல்லையா? எனக்கு அனுபவம் மிகவும் குறைவு ஆனால் இப்பயணத்தில் ஊபரில்தான் சில இடங்களுக்குப் பயணித்தோம். அதில் சிரமம் இல்லாமல் எல்லாம் முடிந்தது, அவர்களாக எதுவும் கேட்கவில்லை. கட்டணமும் நியாயமாகவே இருந்ததாகத் தெரிந்தது,
மிக்க நன்றி ஸ்ரீராம்.
கீதா
படங்கள் யாவும் அருமை. உங்கள் மின்தடங்கல், நெட் பிரச்னையில் - அதன் கஷ்டங்கள் பதிவிலும் தெரிகின்றன - எப்படி இவ்வளவு படங்களை வலையேற்றினீர்களோ?
பதிலளிநீக்குஸ்ரீராம் நேத்தும் எபியில் கமென்ட் கொடுத்து இங்கு பதிவில் சில சந்தேகங்கள் இருந்தன அதை துளசியிடம் கேட்டு (நெல்லை சொல்லிருக்காப்ல தந்தி அடிச்சாப்ல தான் எழுதியிருந்தார். நானோ விலாவாரியா எழுதுபவள். ஸோ எனக்கு ஏகப்பட்ட க்ளாரிஃபிக்கேஷன், தகவல்கள் சொல்லலாமே என்று நினைத்தேன். அட்லீஸ்ட் அடுத்த பகுதியிலாவது சேர்க்கச் சொல்லி. ஒரு வழியா பதிவை பப்ளிஷ் செய்து....
நீக்குஅவர் இது போதும்னுட்டாரு. இதெல்லாம் முடிச்சதும் போன கரன்ட்......10 மணிக்கு போச்சு இடையில் கொஞ்சம் வந்துச்சு மீண்டும் போனது வந்து மினுக் என்றது போனது அப்புறம் மாலை 6 மணிக்குதான் வந்தது.
கரன்ட் இருந்தா நெட் சரியா இருக்காது.
எப்படியோ இத்தனையும் ஏற்றி முடிக்க கிட்டத்தட்ட 4 நாட்கள் ஆகிடுச்சு ஸ்ரீராம்.
கீதா
மூணு படம் சேர்த்து ஏற்றினா ஏறாது...ஒன்று இரண்டு என்று ஏற்றி அட்ஜஸ்ட் செய்ய வேண்டியிருந்தது
நீக்குகீதா
படங்கள் யாவும் அருமை.//
நீக்குநன்றி ஸ்ரீராம்.
ஆமாம், எழுத்து மட்டுமே என்னுடையது. அதையும், நான் எடுத்த படங்களையும் காணொளிகளையும் அனுப்பிக் கொடுத்துவிடுவேன். இயக்கம் எல்லாம் கீதாவினுடையதே. இங்கு எல்லாப் படங்களும் கூட வேண்டாம். வீடியோவில் போட்டுவிடலாம் என்றும் நினைத்தேன். ஆனால் கீதா தான் எல்லோரும் படங்கள் பார்க்க விரும்புவார்கள். போக முடியாதவர்களும் பார்த்துக் கொள்ளலாமே என்று போட்டார். சில காணொளிகள் எல்லாம் சேர்ந்து தொடரின் கடைசியில் மொத்தமாக வரும்.
மிக்க நன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
சீசன் முடிந்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் யார் சிம்லா பயணம் போயிருப்பார்கள் என யோசித்தேன். பிறகு இது கீதா ரங்கன் பதிவு என்பதால் மெதுவாக வெளி வந்திருக்கிறது எனப் புரிந்துகொண்டேன்.
பதிலளிநீக்குபெரிய கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை. பதிவு துளசியின் பதிவு அவர் போய் வந்த விஷயங்கள். படங்களைப் பார்த்தாலே தெரியுமே.....
நீக்குஅவரே இப்பதான் எழுதினார். நான் சொல்லிச் சொல்லி.....திட்டி, கெஞ்சி இப்படி இப்பதான் போன வருடம் போனதை எழுதினார். அடுத்தாப்ல அங்கே வேறு இடங்கள் போனது இந்த வருஷம் அதுவும் வரும்.
கீதா
துளசியின் எழுத்திற்கும் என் எழுத்திற்கும் வித்தியாசம் தெரியலையா நெல்லை? நான் விலாவாரியாக எழுதுபவள்....
நீக்குகீதா
நான் நினைத்தேன்...துளசி எப்பவோ அனுப்பியதை, வெயிலில் உலர வைத்து, வீட்டில் ஃபேனில் ஆறப்போட்டு பிறகு கீதா ரங்கன் க்கா எழுதியிருக்கிறார் என்று. ஹா ஹா ஹா
நீக்குஹையோ நெல்லை, இது நான் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் போன பயணம். இந்த வருடம் ஏப்ரல் கடைசியில் மணாலி, காசோல் எல்லாம் சென்று வந்தோம். அதை எழுத வேண்டும் அதற்கு முன் இதையும் எழுத வேண்டும் என்று கீதாவின் குடைச்சல். அதனால்தான் எழுதினேன்.
நீக்குதந்தி என்பதைப் பார்த்ததும் சிரித்துவிட்டேன். ஆமாம் சுருக்கிவிட்டேன் தான் பலவற்றையும் சொல்லும் போது நீண்டுவிடுமோ என்ற பயம். சுருங்கிப் போனதற்கு வேறு ஒரு காரணமும் கூட இருக்கிறது.
உண்மையிலேயே இதை நான் இடுகையாகப் போட வேண்டாம், யுட்யூபில் காணொளியாகப் போடுவோம் என்பதை வைத்துத்தான் சுருக்கி எழுதினேன். கீதாவின் வற்புறுத்தலின் பேரில் அதைக் கொஞ்சம் நீட்ட வேண்டியதானது. அப்படி நீட்டும் போது இயல்பாக வராததால் சுருங்கித்தான் இருக்கிறது. அதிகமாக விரிவாக்கம் செய்ய முடியவில்லை.
மிக்க நன்றி நெல்லை
துளசிதரன்
நான் நினைத்தேன்...துளசி எப்பவோ அனுப்பியதை, வெயிலில் உலர வைத்து, வீட்டில் ஃபேனில் ஆறப்போட்டு பிறகு கீதா ரங்கன் க்கா எழுதியிருக்கிறார் என்று. ஹா ஹா ஹா//
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்....ஹாஹாஹா...ஹையோ ஹையோ இந்த நெல்லை இருக்காரே..........நெலை,
துளசியின் பதிவுகளை அவர்தான் எழுதுவார். அவர் அனுபவங்களை நான் எப்படிஎ ழுத முடியும்? பதிவுகள் கையெழுத்தில்தான் வரும். கருத்துகள் ஒன்று தங்கிலிஷில் வரும் இல்லை என்றால் வாய்சில் வரும்.
சில ஓரிரு பதிவுகள் தான் வாய்ஸில் வந்தன அதாவது வீடியோவுக்காக அதை நான் எழுதியதுண்டு ஆனால் அதுவும் அவரது வார்த்தைகளாகத்தான் இருக்கும் பேச்சுத் தமிழ் இல்லை என்றால் மலையாளம் கலந்திருந்தால் மட்டும் நான் அதைத் தமிழில் எழுதுவேன் அவ்வளவுதான் நெல்லை. என்னுடையதை நுழைப்பதில்லை!!!!!!!!!!!!!!!!
கீதா
தந்தி அடித்த மாதிரி மிகச் சுருக்கமாக, படங்கள் குறைவாக எழுதியிருக்கிறீர்கள். படித்துவிட்டேன். பிறகு வந்து எழுதுகிறேன்.
பதிலளிநீக்குசட்டெனப் படம் பார்த்தபோது சிம்லா எனச் சொல்லிவிட்டு பாலக்காட்டு மலம்புழா அருகில் உள்ள படத்தைப் போட்டிருக்கிறார்களே என்று தோன்றியது.
நெல்லை, இதுக்கான பதிலையும் மேலே உள்ளதோடு கொடுத்துவிட்டேன், துளசியின் வாய்ஸ் தொடர்ந்து கேட்டுக் கொண்டே வந்த போது அப்படி அங்கேயே டைப் பண்ணிவிட்டேன். இதுக்கான பதிலும் மேலே...
நீக்குகீதா
ரெட் ஃபோர்ட் நான் பார்க்க நினைத்திருக்கும் இடம். இங்கிருந்து முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்திருக்கிறார்கள். கடைசி மன்னர் இந்தக் கோட்டையை மாத்திரமே கொண்டிருந்தார் எனப் படித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குபடங்கள் அழகு. கடைசி நேர பயண மாறுதல்கள் சிக்கலை உண்டாக்குமே
ஆமாம் ரெஃபோர்ட் பார்க்க வேண்டிய ஒன்று. உள்ளே எல்லாம் கட்டிடங்கள் மட்டுமே. முகலாயர் கலாச்சாரம் அவர்களுடைய டைப் கட்டிடங்களின் பிரதிபலிப்பு. வெளித்தோற்றம் மிக அழகு, முகலாயர் ஆட்சிக் காலத்தில் சில மன்னர்கள் மகாரணிகள் நினைவுக்கான கட்டிடங்கள். எனக்கு அதிகம் சொல்லத் தெரியவில்லை.
நீக்குஉள்ளே ஒரு காட்சியகம் இருக்கிறது. அருமையான ஒன்று. நுழைவுச்சீட்டு எடுத்துச் செல்ல வேண்டும் நேரம் இல்லை எனவே உள்ளே செல்லவில்லை.
நன்றி நெல்லை
துளசிதரன்
சிம்லாவில் தங்கின இடம், உணவு ஆகியவற்றைப் பற்றி விவரமாக எழுதுவீர்கள் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குநாங்கள் நவம்பர் டிசம்பரில் தில்லிக்கு ஒரு வாரம் சென்று சுற்றிப் பார்க்கலாம் என நினைத்திருக்கிறோம்.
அடுத்த பகுதியில் சொல்லியிருக்கிறேன் ஓரளவு. இனிதான் வரும்.
நீக்குநவம்பர் டிசம்பரில் செல்ல இருக்கிறீர்களா? நல்ல குளிராக இருக்குமே.காணவேண்டிய இடங்களை எல்லாம் கண்டு வாருங்கள்.
நன்றி நெல்லை
துளசிதரன்
நீண்ட நாட்கள் கழித்து பதிவு வந்தாலும், பதிவது முக்கியம். தில்லி, சண்டிகர் அனுபவங்கள் நன்று. அந்த சமயம் நான் தில்லியில் இல்லை என்பதால் என்னால் உங்களைச் சந்திக்க இயலவில்லை. சிம்லா பயண அனுபவங்கள் குறித்து எழுதுவதைப் படிக்க காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு”நெக்சந்த்” - நேக் சந்த்.
நீண்ட நாட்கள் கழித்து பதிவு வந்தாலும், பதிவது முக்கியம். //
நீக்குவெங்கட்ஜி, ஹைஃபைவ்! இதேதான் என் கருத்தும். சில சமயம் உடனுக்குடன் எழுத முடியாமல் போகிறது. அதுவும் சமீபகாலங்களில் ரொம்பவே சிரமமாக இருக்கிறது. என்னை வருத்திக் கொள்ளாமல், அழுத்தம் கொடுத்துக்கொண்டு stress ஆக்கிக் கொள்ளாமல் எழுதுவது நமக்கு நல்லது என்று நினைப்பதால்.
எப்போது எழுதினாலும் நீங்கள் சொல்வது போல் பதிவது முக்கியம். இக்கருத்தை ரொம்பவே வரவேற்கிறேன் ஆதரிக்கிறேன்....பார்த்ததும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
கீதா
முதல் வரிக்கு மிக்க நன்றி வெங்கட்ஜி. நேக் சந்த் என்ற பெயரைத் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி சொல்லியதற்கு. ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே போட்டேன்.
நீக்குஇந்த முறை வரும் போது உங்களைச் சந்திக்க நினைத்திருந்தேன் ஆனால் அதன் பின் அச்சமயம் நீங்கள் அங்கு இல்லை என்பதை கீதா எனக்குத் தெரிவித்தார். இருந்திருந்தால் இந்த முறை உங்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.
தில்லிக்காரரான (இப்போதைக்கு) உங்களுக்கு நான் தில்லியைப் பற்றி எழுதுவதென்றால் மிகவும் சிரமமான பரிகாசம் கொள்ளும் செயல்! இருந்தாலும் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்வது மகிழ்வானதுதானே.
தில்லியைப் பற்றிய உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் விரிவாகத் தெளிவாக, தகவல்கள் நிரம்பிய ஒன்றாக இருக்கும். இது நாங்கள் சும்மா சுற்றிப் பார்க்க வந்த போது ஓரிரு நாட்களில் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் அவ்வளவே.
மிக்க நன்றி வெங்கட்ஜி
துளசிதரன்
முகலாயர்களின் வாரிசுகள் என்பவர்கள் சுமார் 60 பேர்தான் இருக்கிறார்களாம். அவர்கள் பெரும்பாலும் மேற்கு வங்காளத்தில் உள்ளார்கள். தில்லியில் உள்ள அனேகம்பேரும் மற்ற இடங்களில் இருந்து குடியேறியவர்கள். வாரிசுகளில் ஒரு பெண், தனக்குத்தான் ரெட் ஃபோர்ட் சொந்தம் என்று கேஸ் போட்டார். அதனை கோர்ட் டிஸ்மிஸ் செய்துவிட்டது.
பதிலளிநீக்குஅந்த ஒரு பெண் கேஸ் கொடுத்தது நினைவிருக்கிறது. செய்தித்தாள்களில் வந்தது. 200 வருடங்கள் என்று பார்த்தால் நான்கு தலைமுறை கடந்திருக்கும். அவர்கள் எல்லாரும் எங்காவது இருக்கத்தானே செய்வார்கள்,
நீக்குதிருவிதாங்கூரை எடுத்துக் கொண்டால், அந்த வாரிசுகள் பெரும்பாலும் பெங்களூர் மும்பை என்று செட்டிலாகியிருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டும் இப்போதும் திருவிதாங்கூரில் உண்டு.
அது போன்று நீங்கள் சொல்லியிருக்கும் பின் தலைமுறையினர் இருப்பார்கள்தான் ஆனால் இனி அரசுக்குச் சொந்தமானதை சொந்தம் கொண்டாட யார் வந்தாலும் அதெல்லாம் நடக்குமா? கேலிக் கூத்தாகிவிடும்.
துளசிதரன்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. நண்பரின் வீட்டு திருமணத்திற்கான பயணமும், தாங்கள் போக வேண்டுமென நினைத்தப் பயணமும் ஒன்றாக சேர்ந்து வந்தது ஒரு நல்ல செயல்தான். அவ்வளவு தூரம் போகும் போது, நாம் நினைத்த இடத்திற்கும் சென்று வந்தால், மனதுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.
நீங்கள் சென்று வந்த பயணத்தைப்பற்றி நல்ல விபரமாக தந்துள்ளீர்கள். இடையிடையே அழகான படங்கள் கண்களை கவர்கிறது இதெல்லாம் என்னைப் போன்றவர்கள் பார்க்காத இடங்கள். எனவே நாங்களும் உங்களுடனேயே பயணித்த உணர்வோடு கண்டு மகிழ்ந்தோம். கூடவே விபரமான வர்ணனைகள் அருமையாக உள்ளது. . இதற்கு தங்களுக்கும், சகோதரி கீதாரெங்கனுக்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது.
/எங்களுடன் வந்திருந்த நட்புகள் மூவரில் ஒருவருக்குக் காய்ச்சல். அவரால் சிம்லா வர முடியுமா? என்ற கேள்வி எல்லோருக்கும். அவரோ அதைப் பொருட்படுத்தாமல் உடன் வரத் தயாரானார்./
பாவம்..! பிரயாணத்தில் அவரின் உடல்நிலை நல்லபடியாக குணமாகி விட்டதா? மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும், ஜுரத்தினால் களைப்பாக இருக்கும் அவரின் உடல்நிலையை வெளிக்காட்டாமல் உங்கள் அனைவருடனும் பயணித்த அவருக்கு வாழ்த்துகள்.
சிம்லாவுக்குச் செல்லும் ரயிலைப்பிடிக்கும், இறுதி நேரத்தில் கல்கா செல்ல வேண்டிய ரயிலின் வருகைக்காக காத்திருந்த நீங்கள் அனைவரும் மிகுந்த சிரமமான மனநிலையை அடைந்திருப்பீர்கள். வருத்தம் தரக்கூடிய நிகழ்வுகள்தான். பிறகு எப்படி குறிப்பிட்ட அந்த நேரத்தில் செல்ல முடிந்ததா? என்ற விபரத்தை படிக்க காத்திருக்கிறேன்.
அடுத்த ஹிமாச்சல் பிரயாண கட்டுரையையும் ஆவலோடு படிக்கக் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா, துளசி திருவனந்தபுரம் சென்றிருக்கிறார் அவரது இரண்டாவது மகன் மருத்துவரானதற்கான பட்டமளிப்பு விழாவிற்குச் சென்றிருக்கிறார். அவர் நாளை காலை வந்துவிடுவார். வந்ததும் கருத்தை அவர் அனுப்பியதும் இங்கு பதிகிறேன்
நீக்குகீதா
நன்றி சகோதரி கமலா ஹரிஹரன், ஆமாம் ஒரு நல்ல சம்பவத்துடன் பயணமும்.
நீக்குஉடன் பயணித்தவருக்குப் பெரிதாக ஒன்றும் இல்லை கொஞ்சம் காய்ச்சலில் வந்தாலும் மகன் அவருக்கு மருந்துகள், ஓ ஆர் எஸ் பொடி என்று கொடுத்து ஓரளவு நன்றாகிவிட்டார். பிறகு திரும்ப வரும் போது ரயிலில் பயணிக்கவில்லை. ஃப்ளைட்டில் அவர் வீட்டினர் புக் செய்ததால் பிரச்சனை இல்லாமல் வீடு வந்து சேர்ந்தார். இப்போது நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார்.
//பிறகு எப்படி குறிப்பிட்ட அந்த நேரத்தில் செல்ல முடிந்ததா? என்ற விபரத்தை படிக்க காத்திருக்கிறேன்.
அடுத்த ஹிமாச்சல் பிரயாண கட்டுரையையும் ஆவலோடு படிக்கக் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.//
அடுத்த பகுதியில் வந்துவிடும் எல்லாம். ஆமாம் முதலில் முடிவு செய்ததை இடையில் இப்படி மாற்றும் போது சிக்கலில் கொண்டு சேர்க்கும் என்பதும் ஒரு அனுபவம் பாடம் நேரம்.
மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.
துளசிதரன்
வணக்கம் சகோதரி.
நீக்குதாங்கள் எ.பியில் தந்த தகவலின்படி இங்கு வந்தேன். இங்கும் நல்ல தகவல்கள். துளசி சகோதரரின் மகன் மருத்துவ கல்வி முடித்து பட்டம் வாங்கியது கண்டு மிக மகிழ்வடைந்தேன். மருத்துவ உல.கில் அவர் நன்கு முன்னேறி, சிறந்த மருத்துவராக சிறப்புடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நல்ல செய்தி சொன்னதற்கு நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் துளசி சகோதரரே
நீக்குதங்கள் பதில் கண்டு மகிழ்வடைந்தேன். தாங்கள் ஊருக்குச் சென்ற விபரம் சகோதரி கீதாரெங்கன் அவர்கள் கூறியுள்ளார்கள். தங்கள் மகன் மருத்துவ கல்வியில் தேர்ச்சி பெற்றதற்கு மிக்க மகிழ்ச்சி. என் மனம் நிறைந்த வாழ்த்துகளையும் அவரிடம் கூறுங்கள். உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
ஒரு மருத்துவரோடு அன்று பயணமான தங்கள் குடும்பத் தோழி பயணத்தில் விரைவில் நலம் பெற்றதற்கும் சந்தோஷம். உங்கள் நட்புறவுகள் இனியும் உங்கள் அனைவரோடும், தொடர்ந்து பயணிக்கட்டும். வாழ்க வளமுடன். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்..
மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.
நீக்குதுளசிதரன்
கமலாக்கா, துளசியின் மூன்று குழந்தைகளுமே மருத்துவர்கள்தான்.
நீக்குமுதலாமவர் அருண் தான் இந்த சிம்லா பயணத்தில் அவர்களோடு பயணித்தவர். இப்போது மேற்படிப்புக்கு முயற்சி.
இரண்டாமவர் பட்டம் பெற்று இன்டெர்ன்ஷிப் செய்கிறார் அதற்குத்தான் இப்ப அவர்கள் சென்று வந்தார்கள்.
மூன்றாவது மகளும் மருத்துவப் படிப்பை முடிக்கிறார் இதோ இப்போது.
கீதா
மூவருக்கும் அன்பான நல்வாழ்த்துகள். நன்றி சகோதரி விபரங்களை பகிர்ந்தமைக்கு
நீக்குநன்றி கமலாக்கா, துளசியிடமும் சொல்லிவிடுகிறேன்.
நீக்குகீதா
பயண விவரமும், படங்களும் அருமை.
பதிலளிநீக்குமகன் மருத்துவ கல்வியில் தேர்ச்சி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
மூன்று குழந்தைகளும் மருத்துவர்கள் என்று கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மூவருக்கும் வாழ்த்துகள்.
மூவரையும் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.
நீக்குபயண விவரங்களையும் படங்களையும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி
துளசிதரன்
சுக்னா லேக்கில் குடை பிடித்து அமர்ந்து இருக்கும் பெண்ணை படம் எடுக்கும் சிற்பம் அழகு.
பதிலளிநீக்குகுடை பிடித்து அமர்ந்து இருக்கும் பெண் ஜப்பனீஸ் பூங்கா. அப்படங்களின் கீழே சுக்னா லேக் என்று கொடுத்திருப்பதால் அப்படி ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். தலைப்பின் கீழ் படங்கள் என்று கொடுத்திருக்கிறார் கீதா என்று நினைக்கிறேன்.
நீக்குமிக்க நன்றி சகோதரி கோமதி அரசு
துளசிதரன்
இரவு நேரத்தில் எடுத்த இந்தியா கேட் படங்கள் அழகு.
பதிலளிநீக்குமால் மற்றும் படங்களும் அருமை.
இந்தியா கேட்டின் இரவுப் படங்கள், மால் மற்றும் எல்லாப் படங்களையும் கண்டு ரசித்தமைக்கும் மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு
நீக்குதுளசிதரன்