புதன், 18 ஜூன், 2025

ரங்கனதிட்டு- ஸ்ரீரங்கப்பட்டினம் கோவில் - 11

சென்ற பதிவில் ஸ்ரீரங்கப்பட்டின கோவிலின் படங்கள் சில விவரங்கள் போட்டுவிட்டு மீதி படங்களை அடுத்த பதிவில் சொல்லி முடிக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். இதோ.....

இடப்பக்கம் பிள்ளையார் தூணில் செதுக்கப்பவர் போன்று தெரிகிறது. வலப்பக்கம் பிள்ளையார் தூணில் பதிக்கப்பட்ட சிலை போன்று இருப்பதாக எனக்குப்பட்டது. ஆஞ்சுவிற்குத்தான் வெண்ணை தடவி வெள்ளையா இருப்பார். பிள்ளையார்களூம் இப்படி என்னவோ வெள்ளை பூசினாப்ல இருக்கிறார்களே!!! விபூதியோ?

இது வராகர் போன்று தெரிகிறது

மேலே விஷ்ணு, கீழே கிருஷ்ணர்
கோவர்த்தனன்

லக்ஷ்மி நாராயணர்?

கருடனின் தோளில் லக்ஷ்மி நாராயணர் 



 பெண் தெய்வம்?

இது யாராக இருக்கும்? எனக்குத் தெரியவில்லை

இவங்க ராஜா ராணியோ? இடப்புற சிற்பங்களில் கால்கள் சரியாக இல்லை. ஏதோ முட்டி போட்டு நிற்பது போன்று இருக்கு. 4 சிற்பங்களிலுமே கால் பகுதி சிதைந்து ஏதோ பூசி இருப்பது போன்று இருக்கிறது.


வாகனங்கள் இருக்க்ம் பகுதி அங்கிருக்கும் அழகான மண்டபம் குப்பைகள் ஏதேதோ பொருட்கள் வைக்கப்படு பராமரிப்பு இல்லாமல்  இருக்கிறது.
முன்மண்டபத்தில் இருக்கும் கல்லினால் ஆன கொடிமரம், பலிபீடம்
முகப்பு மண்டபத்தில் முகப்பில் வரவேற்கும் இரு அழகிய யானைகள்.

 யானை இன்னும் சற்று அருகில்...

 அழகான டிசைன்
வெளியில் வந்து நேராக கோபுரத்தை ஒரு க்ளிக் 

சைடில் அழகாகப் பழமையை நிற்கும் இது சத்திரமோ? இல்லை ஏதேனும் சன்னதியோ? 1.45 ற்கு பசவா எக்ஸ்பிரஸ் வரும் என்று சொன்னதால், டிக்கெட் இருக்குமா? கிடைக்குமா என்று பார்க்க வேண்டுமே அதனால் கிளம்பிவிட்டோம்.

மேலே உள்ள அந்த இடத்தின் கீழ் அழகான ஒரு கடை. நின்று நிதானமாகப் பார்க்க நேரமில்லை

கோவிலுக்கு எதிரில் இருக்கும் தெருவிலேயே இப்படி உழைத்து சம்பாதித்துக் கொடுக்கும் குதிரைகள், நிறைய கடைகள் நிதானமாகப் பார்க்க முடியவில்லை. ஆட்டோவிலிருந்தே க்ளிக்ஸ்

திப்புசுல்தான் சமாதியாம். ஆட்டோக்காரர் இறங்கிப் பார்க்க வேண்டுமா என்றார். இறங்கவில்லை. ஆட்டோவிலிருந்தே எடுத்த படங்கள்.


நேரே பாண்டவபுரா ரயில் நிலையத்திற்குச் சென்றோம். வழியில் காவிரி ஆறு இரண்டு இடங்களில். ஒன்றில் அழகான பாலம். ஆட்டோவிலிருந்தே படமும் வீடியோவும். 

அழகான பாலம்

ரயில் நிலையத்தில் இறங்கியதும் (காலையில் கொண்டுவிட்ட ஆட்டோகாரர், எங்களை ரங்கனதிட்டுவிலிருந்து அழைத்துவர அனுப்பியவர்) ஆட்டோகாரர், 700 ரூபாய் என்றதும் என்னடா இது? காலையில் எங்களை ரங்கனதிட்டுவிற்குக் கொண்டுவிட்ட ஆட்டோக்காரர் 350 ரூபா வாங்கிக் கொண்டார், ஆனால் போகும் போது ஒரு வேளை ஆள் பிடித்திச் சென்றிருக்கலாம் இல்லை என்றால் எங்களிடம் இரண்டுவழிக்கான பணம் கேட்டிருப்பார். ஏன் கேட்கவில்லை என்பதுதெரியவில்லை.

அதன்படி, எங்களை அழைத்துச்செல்ல வந்த ஆட்டோக்காரரிடமும் அந்த அட்டோக்காரர் அப்படித்தான் சொல்லியிருப்பார் என்று நினைத்திருந்தோம். கொண்டுவிட்ட அவர் இருவழிக்கான பணம் என்று சொன்னார். நாங்களும் ரொம்ப விவாதம் செய்யாமல் கொடுத்துவிட்டோம். ரங்கனதிட்டு சென்று வர 1050 ரூ. காலையில் 350, இப்ப திரும்பி வர 700.

ரங்கனதிட்டுவிற்கு நாம் பேருந்தில் செல்வது சிரமம். சென்றாலும் 2 1/2 கிமீ நடக்க வேண்டும். நடப்பது எங்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் பேருந்துகள் அதிகம் இல்லை என்பதால் நேரம் சரிப்பட்டு வராது.

ஏதேனும் கார் அல்லது ஆட்டோவில் சென்று வர, காத்திருப்பு, இடையில் கோவில் என்று எல்லாம் பார்த்து வர கண்டிப்பாக 1200 ரூ கேட்க வாய்ப்புண்டு. அரைநாளுக்கு. அந்த மட்டில் குறைவுதான் என்று தோன்றியது.

இடப்பக்கப் படம் - பல வருடங்களுக்குப் பிறகு, வழக்கமான அப்படியே நம் இந்திய கிராமத்து ரயில் நிலையத்தின் காட்சியை ரசித்தேன்! வலப்பக்கப் படம் -  மாண்டியா கரும்பு இறங்கிருக்கு பாருங்க. ஜூஸ் போட!

ரயில் நிலையத்தில் பசவா எக்ஸ்பிரஸில் ஏசி கோச்சில் இடம் இருக்கு என்றதும் டிக்கெட் வாங்கிக் கொண்டோம். ரயில் சரியான நேரத்திற்கு வந்தது. எங்கள் பெட்டியில் பயணிகள் மிஞ்சிப் போனால் 5, 6 பேர்.

மத்தூர் வரை இப்படி பசுமையான காட்சிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டே.....

....பெங்களூருக்கு 4.15 க்கு வந்து சேர்ந்தோம். வீட்டிற்கு வந்து சேர்ந்த போது 6.30 மணி. அப்படியாக எங்கள் பயணம் முடிந்தது. நானும் தொடர் பதிவை ஒருவழியாக முடித்துவிட்டேன். ஹப்பா!!!



-----கீதா




16 கருத்துகள்:

  1. ஸ்ரீரங்கபட்டினம் கோயில் படங்கள் நான் சென்ற நினைவுகளை மீட்டெடுக்க உதவியது. பலமுறை தரிசனம் வாய்த்த கோயில் அது.

    பெண் தெய்வம் என்று நீங்கள் போட்டிருப்பது, வரதராஜர் போல எனக்குத் தோன்றுகிறது. கர்நாடகாவில் பல இடங்களில் விஷ்ணு மூர்த்தம் கையில் Gகதையுடன் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை.

      பெண் தெய்வம் என்று நீங்கள் போட்டிருப்பது, வரதராஜர் போல எனக்குத் தோன்றுகிறது.//

      ஓ அப்படியா!? விஷ்ணு மூர்த்தம் என்றுதான் நானும் நினைத்தேன். ஆனால் உருவ அமைப்பு பெண் போன்று தெரிகிறது எனக்கு அதனால் வந்த சந்தேகம்.

      கீதா

      நீக்கு
  2. உழைத்துச் சம்பாதித்துக்கொடுக்கும் குதிரைகள், நிச்சயமாக கர்மாவைக் கழிக்கப் பிறந்தவைகள். அவைகள் உணவுக்கு உழைத்துத்தான் சாப்பிடுகின்றன

    பதிலளிநீக்கு
  3. ஆங்கிலேயப்படையுடனான போரில், திப்புசுல்தான் அந்த இடத்தில்தான் இறந்தான். அவன் ரொம்ப காயத்துடன் இருந்தான், ஆனால் அவனுடைய விலையுயர்ந்த அணிகலன்களுக்கு ஆசைப்பட்டு பிரிட்டிஷ் சிப்பாய் அவனைக் கொன்று மற்ற பிணங்களோடு அந்த இடத்தில் போட்டுவிட்டான். மறுநாள் அவனுடைய உடலைக் கண்டுபிடித்து, மரியாதையுடன் அவனுடைய அப்பா சமாதி அருகே புதைத்துவிட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திப்பு சுல்தான் பற்றி வாசித்ததுண்டு. நீங்கள் சொல்லியிருப்பதும் வாசித்திருக்கிறேன். படத்தோடு சிலது கொடுக்க நினைத்து ஏற்கனவே பதிவு பெரிசு. என்று விட்டுவிட்டேன்.

      நன்றி நெல்லை.

      கீதா

      நீக்கு
  4. நாமே ஆட்டோவைக் கூட்டிச் சென்றால் விலை குறைவு. அவனை வரச்சொன்னால் இரண்டு வழிக்கும் சேர்த்துப் பணம் கேட்பார்கள். அதுக்குப் பதிலா, காத்திருப்பதற்கு கூட கொஞ்சம் பணம் கொடுத்தால் நமக்கு பணம் மிச்சம். ஆனால் எவ்வளவு நேரம் காத்திருக்கணும், சரியாகச் சொல்லமுடியுமா என்பதெல்லாம் முக்கியம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை. காலையில் எங்களை அழைத்துச் சென்றவர் அவர் காத்திருந்து அழைத்துச் செல்வார் என்று நினைத்தோம் ஆனால் அங்கு இறங்கியதும் 350 மட்டும் வாங்கிக் கொண்டு வேறு ஒருவரை அனுப்புகிறேன்னு சொல்லிவிட்டார்.

      அப்படியே ஆனாலும் குறைவுதான் என்று தோன்றியது.

      காத்திருப்பு பற்றிச் சொல்வது ரொம்பக் கஷ்டம் அதான் அவர் போய்விட்டு நீங்கள் முடித்ததும் சொல்லுங்க வேறு ஒருவரை அனுப்பறேன்னு சொல்லிட்டுப் போய்விட்டார்.

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  5. ஸ்ரீரங்கப்பட்டினம் கோயிலை உங்களுடன் சுற்றிப்பார்த்து விட்டேன்.
    தூண் சிற்பங்கள் அழகு.
    வாயிலில் சிறிய யானைகள் அழகு. மேலே சிற்ப வேலைப்பாடு அழகு.
    ஆட்டோவில், ரயில் பயணத்தில் எடுத்த படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிக்கா. ஆமாம் அக்கா யானை ரொம்ப அழகு. சிற்பங்கள் எல்லாமே ரொம்ப அழகு சிலது சரியா தெரியலைனாலும்..

      ஆட்டோவில், ரயில் பயணத்தில் எடுத்த படங்களும் அருமை.//

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  6. காணொளியும் ஆட்டோவில் போகும் போது எடுத்ததா? நன்றாக இருக்கிறது.
    ஆட்டோ, ரயில் பயண விவரங்கள் அடுத்து போகிறவர்களுக்கு உதவும்.
    பெண்தெயவம் என்று கேள்வி குறியிட்ட படம் விஷ்ணு. அவர் கையில் சங்கு , சக்கரம், கதை, தாமரை எல்லாம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா காணொளி ஆட்டோவில் போகும் போது எடுத்ததுதான். நன்றி அக்கா.

      ஆட்டோ, ரயில் பயண விவரங்கள் அடுத்து போகிறவர்களுக்கு உதவும்.//

      ஆமாம், அதனாலதான் எல்லாம் கொஞ்சம் விவரமாகக் கொடுக்க நினைக்கிறேன்.

      //பெண்தெயவம் என்று கேள்வி குறியிட்ட படம் விஷ்ணு. அவர் கையில் சங்கு , சக்கரம், கதை, தாமரை எல்லாம் இருக்கிறது.//

      அக்கா விஷ்ணு என்பது தெரிகிறது. ஆனால் உடலமைப்பு பெண் போன்று இருப்பதால்...வந்த சந்தேகம். ஒரு வேளை மோகினியோ என்று கூட நினைத்தேன்.

      நன்றி கோமதிக்கா

      கீதா


      நீக்கு
  7. இன்னொரு தூணில் இராஜா, ராணியா என்று கேட்டதில் மோகினி அவதார கதை போல உள்ளது. தலையில் கை வைத்து மோகினி ஆடும் கதை.(அசுரகளை அழிக்க விஷ்ணு எடுத்த அவதாரம் மோகினி) மற்ற இருவர் அசுரர்கள் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிச் சொல்றீங்களா? ஆனால் அருகில் இருக்கும் ஆண்கள் சிற்பங்கள் கிரீடத்துடன் நல்ல முக அமைப்புடன், கை குவித்து வணங்குவது போல் இருக்கிறதே அக்கா.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் உங்கள் பாணியில் எங்கள் கண்களுக்கு அருமையான விருந்து.

    நீங்கள் சொன்னபடி பிள்ளையார் இருப்பக்கத் தூண்களிலும் வித்தியாசத்தை காட்டுகிறார். ஆனால், இருவருமே அழகான பிள்ளையார்கள். பணிவுடன் வணங்கி கொண்டேன்.

    மற்ற தூண்களில் விதவிதமாக தோற்றங்கள் இறைவனும் அழகு. பெண் தெய்வம் அது திலஷ்மியாக இருக்குமோ? இறைவன் உலா வரும் வாகனங்கள் நன்றாக உள்ளது.

    யானைகள் நன்றாக இருக்கிறது. அங்கு இதுவரைதான் நான் எடுத்துள்ளேன். அதற்கு மேல் கோவிலுக்குள் ஃபோனை பயன்படுத்த தயக்கம். துவஸ்தம்ப கல்தூண் கோபுர தரிசனம் பெற்றுக் கொண்டேன்.

    போக வர ஆட்டோ செலவு அதிகமோ ? ஒரு கார் ஏற்பாடு செய்து போயிருந்தால், உங்களுக்கும் பிரயாணம் நல்ல வசதியாக இருந்திருக்குமோ? எனக்கும் அங்குள்ள விலை ரேட் விபரங்கள் தெரியவில்லை. மகன்கள்தான் பேசுவார்கள்.

    வரும் வழியில் எடுத்தப் புகைப்படங்கள், ரயில்வே நிலையம் எல்லாமே ரசித்தேன். நல்லபடியாக பிரயாணம் மேற்கொண்டு ஸ்ரீ ரங்கநாதரை கூட்டமில்லாமல் தரிசித்து, அழகான புகைப்படங்களுடன் எங்களுக்கும் அவனருளை பார்க்கத் தந்தமைக்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றி சகோதரி.

    எனக்கும் மற்றொரு முறை ஸ்ரீ ரங்கபட்டிணம் சென்று வர ஆசை உதயமாகி உள்ளது. இறைவனுக்கும் என ஆசை புரிந்தால் அவனும் வழி நடத்துவான். பார்க்கலாம். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலாக்கா.

      ஆம் வித்தியாசமாக இருந்தாலும் அழகு பிள்ளையார்கள். எங்கு போனாலும் ஆஞ்சு பிள்ளையார் கண்ணில் பட்டு படம் எடுக்க முடிந்தால் உடனே எடுத்துவிடுவேன்! அது போல அழகான கண்ணையும் மனதையும் கவரும் எல்லாவற்றையுமே.

      //மற்ற தூண்களில் விதவிதமாக தோற்றங்கள் இறைவனும் அழகு.//

      ஆமாம் . இன்னும் உள்ளேயும் நன்றாக இருக்கும். என்னிடம் இருக்கின்றன ஆனால் வெளியிடத் தயக்கம் பயம்.

      //பெண் தெய்வம் அது திலஷ்மியாக இருக்குமோ?//

      திலஷ்மி என்று தேவி உண்டா? எனக்கு இதிலெல்லாம் அவ்வளவு அறிவு இல்லை அக்கா.

      இந்த மண்டபத்தில் எடுக்கலாம் அக்கா. உள்ளே சன்னதிகள் இருக்கும் அந்த முற்றம் மண்டபம் இருக்கும் இடத்தில் எங்கும் அனுமதி கிடையாதுதான்.

      அக்கா ரங்கனதிட்டு வரை தூரம் 15 கிமீ. போக வர 30 கிமீ என்று வைத்துக் கொள்வோம். கோவிலுக்கு, ஹைவேயிலிருந்து உள்ளே 2 கிமீ க்குள் அங்கு காத்திருப்பு. எனவே இந்த ரேட் ஓகே தான். இதே போன்றுதானே மத்தூர் கொக்கரேபெல்லூர் சென்று வந்த போதும் போய் வர 700ரூ அதுவும் 15 கிமீ தூரம் மத்தூரிலிருந்து. ஓகேதான் என்று தோன்றியது.

      //எனக்கும் மற்றொரு முறை ஸ்ரீ ரங்கபட்டிணம் சென்று வர ஆசை உதயமாகி உள்ளது. இறைவனுக்கும் என ஆசை புரிந்தால் அவனும் வழி நடத்துவான். பார்க்கலாம். //

      கண்டிப்பாக நிறைவேறும் கமலாக்கா.

      நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு