சில்லு - 1 - வரலாறு, பாரம்பரியம் என்பவை இப்படித்தானோ?
மரங்களின் வேர்களில் சித்தர்கள் - என்று படங்களுடன், ஸ்ரீராம், ஒரு வியாழன் பதிவில் கொடுத்திருந்தார். பதிவின் ====> சுட்டி <====
//ஆ! அங்கு சீக்கிரத்தில் கோவில் வந்துவிடும் என்று கருத்தில் சொல்லியிருந்த நினைவு.// அப்போது, இங்கு அருகில் இருக்கும் பூங்காவில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்து குறித்து வைத்திருந்தேன். பின்னர் பதிவாக்க மறந்து விட்டுப் போயிருச்சு.
பெங்களூருக்கு வந்த புதிதில், வீட்டருகில் இருந்த மிக அழகான ஏரிக்கரையில், பூங்கா நடைபாதையில் நடைப்பயிற்சிக்குச் சென்ற போது நிறைய புற்றுகள் இருந்தன. இதோ கீழே படங்கள். மனதிற்குள் நினைத்துக் கொண்டேன், இது தெய்வமாகப் போகும் நாள் நெருங்கிவிட்டது என்று. ஓரிரு மாதங்கள் கடந்ததும், ஒரு புற்றின் அருகில் சாமிப்படங்கள் தொங்கின. "ஆரம்பிச்சிட்டாங்கையா ஆரம்பிச்சிட்டாங்க" என்று நினைத்தேன். அடுத்து என்ன மாற்றம் சம்பவிக்கும் என்பதை அனுமானிக்க முடியாதா என்ன?
சந்தனம், குங்குமம், மாலை, பூக்கள், ஊதுபத்தி, அகல் எல்லாம் இருந்த படங்கள் காணாமல் போய்விட்டன.
ஆமா, அதேதான். புற்றில் ஒவ்வொரு கூம்புக்கும் மஞ்சள் பூசப்பட்டு குங்குமம் வைக்கப்பட்டிருந்தது. அதன் பின் சில நாட்களில் ஊதுபத்தி ஏற்றப்பட்டு, பூக்கள் போடப்பட்டிருந்தது. மாலைகளும். சில நாட்களுக்குப் பின் ஒரு சூலம் வைத்திருந்தாங்க. அதன் பின் அகல் விளக்குகள் வந்தன, ஏற்றப்படுகின்றன என்பதற்கு அடையாளமாய். அடுத்து ஒரு வெள்ளிக்கிழமையில் வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய் கூடவே காசுகளும். என்று வைக்கப்பட்டிருந்தன. யார் அந்தக் காசுகளை எடுத்துக்குவாங்க? தெரியவில்லை. ஆச்சா? அடுத்து என்ன? கோலம் போட்டு பொங்கல் படையல்தான்!
ஒன்று கவனித்தேன். ஓரளவு பெரிய புற்றுகளுக்குத்தான் இந்த மரியாதைகள் எல்லாம். சின்னதெல்லாம் கண்டு கொள்ளப்படுவதில்லை! செவ்வாய், வெள்ளிகளில் வழிபாடுகள். மற்றொன்று இங்கு ஒரு சில கோவில்களில் புற்றும், நாகர் வழிபாடும் இருப்பதைக் காண்கிறேன்.
வேறு ஏரியாவுக்கு மாறிய போது அடடா கோவில் எழும்புதா
இல்லையான்னு பாக்க முடியலையேன்னு தோன்றியது.
பழைய ஏரியாவில் பழைய வீட்டின் அடுத்த வீட்டு,
தெங்கிலிஷில் மாட்டலாடும் நட்பு சமீபத்தில் சொன்ன தகவல், "ஆண்டி, எ நியூஸு. லேக்குலு
ஸ்னேக்கு சாயில் ஹில் ன? அரௌண்டு தட்டு டின் ஷீட்டு கெப்டு, பீப்புலு ஹேடு டெம்பிள்
பில்ட்டு. ஸ்டார்ட்டடு செலிப்ரேட்டு! ஸ்மாலு ஃபெஸ்டிவலு." உங்களுக்குப் புரியும் படி
இதோ... "ஆண்டி ஒரு நியூஸ். ஏரியின் கரையில் இருக்கும் அந்தப் புற்றைச் சுத்தி சின்னதா
தகரம் எல்லாம் வைச்சு கோயில் போன்று சின்ன கோபுரம் வைத்து சின்னதாகக் கட்டி சின்ன விழா
கொண்டாடத் தொடங்கிட்டாங்க" என்று.
"நான் எதிர்பார்த்ததுதான்..."
"ஆண்டி, யு டோல்டு மீ ன? இஃப் டெம்பிள்
பில்டு அரௌண்டு தட்டு, யு வில் கம் அண்ட் டேக்கு மில்க் பாட்டு? (பால் குடம்) ஹான்...
ரைட்? தட்டிஸ் வொய்யு ஐ கால்டு யு டு டெல் யு. வென் வில் யு கம்மு? (நீங்க சொல்லிட்டுப்
போனீங்கல்லியா அந்தப் புற்றைச் சுத்தி கோவில் கட்டினாங்கனா சொல்லுங்க, பால் குடம் எடுக்க
வரேன்னு" அதான் சொன்னேன். நீங்க எப்ப வருவீங்க!!!!"
ஓ மை! கடவுளே! நினைவுக்கு வந்தது. மக்கள்
பால் குடம் எடுக்கத் தொடங்கிடுவாங்கன்னு, நான் விளையாட்டாக நம் மக்களின் மனதைப் பற்றிச்
சொன்னதை, பக்திப் பிரவாகமாய் இருக்கும் அந்த நட்பு, 'நான்' என்று அப்படியே நம்பி எடுத்துக்
கொண்டதில் வியப்பில்லைதான்.
அப்பாவி நட்புலு! ஆனால் நல்ல நட்புலு. (நட்பின் மொழி வாசனை எனக்கும் தொற்றிக் கொண்டுவிட்டது.)
ஏற்கனவே சுற்றியிருக்கும் வீடுகளின் கழிவுகளையும், குப்பைகளையும் சுமந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் சுருங்கி வரும் ஏரி இன்னும் குப்பைகளால் நிரம்பத் தொடங்கி பறவைகளின் வாழ்வாதாரமாய் இருந்து வருவதும் போய் விடுமே என்ற வருத்தம். நான் அப்படிச் சொன்னது மக்களின் அறியாமையை நினைத்து. ஏரியைச் சுத்தமாக வைத்துக் கொண்டால் இன்னும் எவ்வளவு பறவைகள் வரும், அதல்லவா புனிதம்!
இன்னும் 100, 200 வருடங்களுக்குப் பிறகு, இப்போது
பிரபலமாக இருக்கும் ட்வின் டவர்கள், ட்ரேட் செண்டர்ஸ், மால்ஸ் உட்பட எல்லாம் பாரம்பரிய
சின்னங்கள் என்று சொல்லப்படுமோ!!!! 23 ஆம் புலிகேசி என்று ஒரு மன்னன் இருந்தான் என்று
வடிவேலு கூட வரலாற்றில் இடம் பெறலாம்!
சில்லு - 2 - ஏரிக்கரையின் மீதிருந்து
இதோ அடுத்தாப்ல அந்த ஏரியில் எடுத்த படங்களைச் சும்மா கொஞ்சம் போடுகிறேன்.
சமீபத்திய வியாழன் பதிவில், கல்யாண மண்டபங்களில்
செருப்பு வெளியில் விட்டுச் செல்லும் போது செருப்பு தொலைவது பற்றியும், திருடுதான்,
மாற்றிப் போடுவதென்பது சான்ஸ் இல்லை போடும் போது தெரிந்துவிடும் என்றும் சொல்லியிருந்தார்,
ஸ்ரீராம். ஆனால் இந்த மாற்றிப் போடும் தப்பை நான் செய்திருக்கிறேன் சமீபத்தில்.
மனதில் கதைகளும் கட்டுரைகளும் அதற்கான வார்த்தைகளும் ஃப்ளாஷாக வேகமாக ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் வேலைகளினால் அவை பின் தள்ளப்பட்டு பதிவுகளாகாமல் புஸ்வானம். இப்படி இரண்டிற்கும் இடையே போராட்டம்... இது எதுக்கு இப்ப என்ற கேள்வி எழுந்தால்...நிற்க...
மனம் கற்பனையில் ஓடிக் கொண்டிருந்ததால் வந்த வினை. தற்போது ட்ரெண்டி செருப்பு Breathable
Sandals/Perforated clogs Sling Back Sandals என்று பெரும்பான்மையோரின் கால்களில் விதவிதமாக,
பல வண்ணங்களில் பார்த்திருப்பீர்கள். கனமாக இருக்காது. முன்பக்கம் நல்ல அகலமாக, காலை
மூடும் பகுதியில் ஓட்டைகளுடன், பின்பக்கம் வாரோடு (வார் முன்பகமும் தள்ளிக் கொள்ளலாம்). இப்படியான செருப்பை என் காலுக்கு ஏற்றது என்று வாங்கச் சென்ற போது...
இதுதாங்க நான் மேலே சொல்லியிருக்கும்
செருப்பு. இந்த 'வாரை' முன்பக்கமும் தள்ளிக் கொள்ளலாம் பின் பக்கமும் தள்ளிக் கொள்ளலாம்
என் சைஸ், 12 வயது பிள்ளைகளின் சைஸ்னு சொன்னாங்க
கடைல!!!!! பாருங்க நான் எவ்வளவு சின்னப் பிள்ளைன்னு. அப்படி அந்த சைஸில் வாங்கிய செருப்பு.
செருப்பில் சில கார்ட்டூன் பொம்மைகள் அல்லது பூக்கள் போன்றவை எல்லாம் முன்பக்க ஓட்டைகளில்
செருகப்பட்டிருக்கும்.
புச்சோ புச்சு செருப்பை காலம், கண்டம், தசை
எல்லாம் பார்த்து முதல் வெளியீடாகப் போட்டுக் கொண்டு கோவிலுக்குச் சென்ற போது செருப்பை
வழக்கமான இடத்தில் வைத்துவிட்டு உள்ளே போன போது வழக்கம் போல ஜோஸ்ய பரிகார நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க, வழக்கம் போல தொழுத பின்,
வழக்கம் போல மனதில் சில காட்சிகள் விரிந்து எழுத்துகளில் ஓடின.
வெளியே வந்த பின்னும் நிற்காமல் மனதில் ஓடிக் கொண்டிருந்த சிந்தனைகள் (மனக்)கண்ணை மறைக்க, நான் செருப்பை மாட்டிக் கொண்டு சில அடிகள் நடந்து சாலையைக் கடந்தும் விட்டேன். ஏதோ மாற்றம் நடந்திருப்பதை தப்பு செய்திருக்கிறேன் என்று டக்கென்று உணர்ந்தேன்.
செருப்பைப் பார்த்தால் என் செருப்பேதான். எந்த
வித வித்தியாசமும் தெரியவில்லை. புதியதாகவே இருந்தது. அதே பொம்மைகள். ஆனாலும் மனசுக்குள்
செருப்பை மாற்றிப் போட்டுக் கொண்டுவிட்டோமோ என்று தோன்றிட மீண்டும் கோவிலின் வாசலுக்குச்
சென்று பார்த்ததும் வார் முன்பக்கம் மாற்றி வைக்கப்பட்ட செருப்பு இருந்தது. கடவுளே!
('எதுக்குக் கடவுளை கூப்பிடற? நிகழ்காலத்துல இருந்திருக்க வேண்டியவள், எனக்கு லகான் போடாம இப்படி என்னை இஷ்டத்துக்குப் பாயவிட்டியானா இப்படித்தான் மாட்டிக்குவ....." மைன்ட் வாய்ஸ்!)
என் செருப்புதானொ இல்லையா? என்று குழப்பத்தில் இருந்த
பொழுது, கோவிலுக்குள் இருந்து வந்த ஒரு குழந்தை "மம்மா, பப்பா" என்று கூப்பிட்டுக் காட்டி "ஜூதே கா back sling காயப் ஹை!" - செருப்பின் வார் காணவில்லை?" - என்று கேட்க, "தேக்கோ இதர் ஹை பேட்டி" - இங்கே இருக்கு பாரு - என்று குழந்தையின் அப்பா காலால் அந்த வார் முன்பக்கம் இருந்ததை நகர்த்திக் காட்ட, "யே ஜூதே மேரே நஹின் ஹை" - இது என்னுடையது இல்லை - என்று தன் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டிருக்க...
எனக்கு ஒரு மாதிரி ஆகி தர்மசங்கடமாயிற்று. 'சரிதான் நான் மாற்றிப் போட்டுக் கொண்டிருக்கிறேன்
முந்தைய நாள் மாலைதானே வாங்கினேன்...கோவிலுக்குச் சென்ற போதுதான் முதல் ரிலீஸ்! இன்னும்
பழகியிருக்கவில்லை அந்த ஃபீல் இல்லை...' நான் அருகில் சென்று ஸாரி சொல்லிக் கொண்டே
இருவரின் செருப்பும் புதிது. ஒரே சைஸ். ஒரே கலர். ஒரே பொம்மைகள்......செருப்பைக் காட்டி
விளக்கம் கொடுத்து தெரியாமல் மாற்றிப் போட்டுக் கொண்டுவிட்டேன் என்று வெகுவாக ஸாரி சொல்லிக் கொண்டு அக்குழந்தையின் பெற்றோரிடமும் மன்னிப்பு
கேட்டுக் கொண்டு செருப்பை மாற்றிக் கொண்டு வந்தேன்! அவர்களின் வியப்பு, வெள்ளைத் தலைமுடியுடன் இருக்கும் என் செருப்பும் அக்குழந்தையின் செருப்பும் எப்படி ஒரே சைஸ்? என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்!
நல்ல காலம் அது ஒரு வார நாளாக இருந்ததால் தப்பித்தேன்!
(இந்தக் கடைசி வரி எதற்கு?!!!!! புரிந்து கொள்பவர்கள்
புரிஞ்சுக்கோங்க, புரியாதவங்க புரிஞ்சவங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க!!! (நன்றி
விவேக்!)
பி கு : ரங்கனத்திட்டு தொடர் பதிவு போரடித்தது போலும், ஜெ கே அண்ணாவைக் காணவில்லை. தொடரில் அடுத்ததாகப் போட வேண்டியது ஸ்ரீரங்கப்பட்டினம் கோவில் படங்கள். இன்னும் தொகுத்தபாடில்லை. அதனால் இடையில் ஒரு சில்லைத் தூக்கிப்போட்டேன். மூன்று சில்லுகளாகிவிட்டது.
-----கீதா
நீங்க எழுதியிருக்கும் முதல் பகுதி மிகவும் சரியானது.
பதிலளிநீக்குமக்கள் புற்று, வேப்பமரம், அரசமரம் என்றெல்லாம் பார்த்து, அதில் மஞ்சளைத் தடவி, போதாதற்கு ஒரு மஞ்சள் துணியைச் சுற்றி...என்று மெதுவாக கோயிலாக ஆக்கிவிடுகிறார்கள். இருக்கும் பாரம்பர்யக் கோயில்களுக்குப் போனால் என்ன என்று தோன்றும்.
இதுல இன்னொரு பிரச்சனை...வீட்டில் இருக்கும் பழைய கடவுள் போட்டோக்களை இந்த மாதிரி மரத்தடில வைத்துவிடுகிறார்கள். அதாவது, நான் தூரப்போட மாட்டேன், தெய்வக் குற்றம், அதனால் பொது இடத்துல வைத்துவிடுகிறேன் என்று. இதில் என்ன லாஜிக் இருக்கோ
ஆமாம் நெல்லை. இங்கு மரங்களின் அடியிலும் படங்களை வைத்துவிடுகிறார்கள். அதன் பின் மரங்களைச் சுற்றி நூல் நூலாகக் கட்டுகிறார்கள். அப்புறம் விசேஷ தினங்களில் மரங்களின் அடியில் ஊதுபத்தி ஏற்றி விளக்கு ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள்...குறிப்பாக அரச மரம், வேப்ப மரம்.
நீக்குஆமாம் பொது இடங்களில், சிலர் சுவர்களின் ஓரத்தில் கூட சாமி படங்களை வைத்துவிடுகிறார்கள். அதுவும் பொது ரோடில்...அவை மழையில் விழுந்து கண்ணாடி உடைந்து மழை நீர் போகும் இடங்களில் கிடக்கின்றன. ஒரு லாஜிக்கும் இல்லை.
நாங்க முன்ன இருந்த ஏரியாவில், பிபிஎம்பி துப்புரவு பணியாள்ர்கள் மக்களிடம் சொல்லி சொல்லிப் பார்த்துவிட்டு, மக்கள் கண்ட இடங்களில் குப்பை போடுவதை நிறுத்தலைன்னதும், அவங்க அந்த இடங்களைச் சுத்தப் படுத்திவிட்டு தெளித்து கோலம் போட்டு சாமி படங்களைக் கொண்டு வைத்துவிட்டாங்க. மறு நாள் அங்கு குப்பை இல்லை. இரு நாட்கள் சென்றதும் சாமி வைத்த அந்தக் கோலம் போடும் பகுதிக்கு அருகில் குப்பையைப் போடத் தொடங்கினாங்க. பணியாளர்கள் அந்த முழு பகுதியையும் சுத்தப்படுத்திக் கோலம் போட்டு வைச்சாங்க. ஆங்காங்கே சாமி படந்க்அளையும் வைத்துவிட்டாங்க.
என்னெல்லாம் செய்ய வேண்டியிருக்கு பாருங்க நம்ம மக்கள் குப்பை போடாமல் இருக்க!!! எல்லாமே மத ரீதியாக ஆகிவிட்டது, பொதுச் சுத்தம் உட்பட.
இனிமேல் சுவரில் பான் குதப்பித் துப்பக் கூடாது என்பதற்காக சாமி படங்களை அங்கும் மாட்டுவாங்களோ என்னவோ? இல்லை சாமி படங்கள் வரைஞ்சு வைப்பாங்களோ என்னவோ!!
நன்றி நெல்லை.
கீதா
மனுஷங்களுக்குத்தான் வெண்ணிறத்தின்மீது மோகம்
பதிலளிநீக்குஆனால் எங்க ஜாதியில் இளம் சிவப்புக்குத்தான் மவுசு.
வெண்ணிற அல்லிக்கு மவுசு இல்லை
என்று சொல்கிறதோ. மூன்று படங்களும் மிக அழகு
ரொம்ப அழகா இருக்கு இல்லையா? அடர் பிங்க் நிறம்...
நீக்குவெண்ணிற அல்லியும் எடுத்திருக்கிறேன் இதே ஏரியில்....பின்னர் வரும்
//ஆனால் எங்க ஜாதியில் இளம் சிவப்புக்குத்தான் மவுசு//
ஹிஹிஹி அப்படியும் இருக்குமோ!!?
நன்றி நெல்லை
கீதா
இந்தச் செருப்பின் ஆதிமூலம் க்ராக்ஸ் பிராண்ட்.
பதிலளிநீக்குஅதன் விலையைக் கேட்டால் மயக்கம் போட்டுடுவீங்க. 5000 ரூபாயிலிருந்து 8000 ரூபாய்க்கு மேல் ஆகும்.
ஆனால் அதன் காப்பியில் ஆரம்பித்து இந்த மாதிரி (படத்தில் இருப்பதுபோல) நிறைய வகை செருப்புகள் வந்துவிட்டன. 250-450 ரூ வரை இருக்கும். நான் க்ரோம்பேட்டை சென்றிருந்தபோது ஒன்றரை வருடத்துக்கு முன் இந்தச் செருப்பு 450 ரூபாய்க்கு வாங்கினேன். ரொம்ப உபயோகம். அதிலும் யாத்திரையின்போது சட் சட் என்று கழற்றிவைத்துவிட்டு கோயிலுக்குள் செல்ல உபயோகம். தொலைந்துபோனாலும் கவலையில்லை. இன்னொரு 400 ரூ ஆகும். (ஆனால் இந்தச் செருப்பு சூப்பரா உழைக்கிறது. கொடுத்த பைசாக்கு நல்ல வேல்யூ)
ஆமாம் இணையத்தில் பார்த்திருக்கிறேன். விலை தெரியும் ஆன்லைனில் கூட இதன் விலை அந்தரேட்டில்தான் 5000 லிருந்து....இதுக்குப் போயா இப்படின்னு...
நீக்குஎனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது ரொம்ப சௌகரியமாக இருக்கிறது. விலையும் ரொம்ப அதிகம் இல்லை. வெகு எளிதாகப் பயன்படுத்த முடிகிறது. ஆமாம் உழைக்கிறது. கொடுக்கும் பைசாவுக்கு நன்றாகவே உழைக்கிறது.
நன்றி நெல்லை
கீதா
//வெள்ளைத் தலைமுடியுடன் இருக்கும் என் // - செருப்பை காலில்தானே போட்டுப்பாங்க. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவு அல்லவா? சின்னவர்களுக்கு 12, 14 சைஸ் இருப்பதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். எனக்கு 8 என்பதால் ஆச்சர்யமாக இருக்கும். இன்னொன்று, 10 சைஸை தாண்டினால் கிடைப்பது கடினம்.
பதிலளிநீக்குஉங்களுக்கு ஒரு அனுகூலம் இருக்கு. கோயிலுக்கோ வெளியிடங்களுக்கோ சென்றால் உங்கள் செருப்பைத் திருட மாட்டார்கள்.
//வெள்ளைத் தலைமுடியுடன் இருக்கும் என் // - செருப்பை காலில்தானே போட்டுப்பாங்க. //
நீக்குஹாஹாஹா நெல்லை, வெள்ளைத் தலைமுடின்னு சொன்னது அவங்க என்னை .....ஆ! அதெல்லாம் சொல்லக் கூடாது இங்கே. பின்ன நான் சின்ன பிள்ளைதானே.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவு - நெல்லை, எனக்கு 12 வயதுக் குழந்தை அளவுதான் என் கால் சைஸ். நம்பர் 3 சில ப்ரான்ட் சில வகைகளில் 2, சில வகைகளில் 4 ஆனால் பெரும்பாலும் 3. ஒரே ஒரு தடவை அளவு 5 என்று வாங்கியது காலை விட கொஞ்சம் நீளமாகப் பின் பக்கம் இருந்தது. ஆனால் பிரச்சனையாக இருக்கலை அது வீட்டில் போட டாக்டர் சப்பல் இருக்கே அது.
இந்தச் சப்பல் அந்தக் குழந்தைக்கும் எனக்கும் ஒரே அளவு!!!
//உங்களுக்கு ஒரு அனுகூலம் இருக்கு. கோயிலுக்கோ வெளியிடங்களுக்கோ சென்றால் உங்கள் செருப்பைத் திருட மாட்டார்கள்.//
இல்லை நெல்லை திருடு போயிருக்கிறது.
கீதா
பொருளாதாரம் விரிவடைகிறது. அவசியம், அவசியமில்லாதது என்று வேறுபடுத்தாமல் வாங்கி குவித்த பொருட்களை களையும்போது சாமி படங்களை எங்கே போடுவது என்பதில் குழப்பம். இதை பார்க்கும்போது மேல்நாடுகள் போல் உருவம் இல்லா சாமியை கோவிலில் (சர்ச், மசூதி) சென்று கும்பிடுவது போன்று நாமும் கடைபிடித்தால் இந்த பிரச்சினை ஏற்படாது என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குசெருப்பு மாறுவது இயற்கை. கண்டுபிடித்து திரும்ப தந்தது நன்று. வயது ஆகிறது என்பதை இந்த செருப்ப மாறாட்டம் சுட்டுகிறது.
ஜெ கே அண்ணா, உங்கள் முதல் கருத்தை நான் வழி மொழிவேன். ஆனால் பாருங்க, சாமி விஷயங்கள் மட்டுமில்லை பொதுஇடங்கள் குப்பையாவதற்கு. படித்தவர்களும் கூட பொது இடங்களில் காஃபி கப்பை தூக்கி வீசறாங்க. டிக்கெட்டை போகிற போக்கில் போட்டு போறாங்க. ஏரிகளில் கூட சாப்பிட்டதும் இலையை வீசறாங்க சாப்பாடை வீசறாங்க.
நீக்குஇரண்டாவது கருத்திற்கு - ஹாஹாஹா அண்ணா, எனக்கு வயசா...ஆ நோ நோ.... தெள்ளத் தெளிவா சொல்லியிருக்கேனே...மனம் எதையாச்சும் யோசிச்சிட்டே இருப்பதால்னு.
நன்றி ஜெ கே அண்ணா
கீதா
கண்டுபிடித்து திரும்ப தந்தது நன்று.//
நீக்குநன்றி ஜெ கே அண்ணா. அட்லீஸ்ட் ரொம்ப தூரம் போகும் முன் தெரிந்ததேன்னு நினைத்துக் கொண்டேன்.
கீதா
பெங்களூருக்கு வந்து இருந்த போது அங்கு உள்ள மக்கள் மரத்தடியில் நாகர் வைத்து வழிபடுவது அதிகம் என தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குநாகர் வழிபாட்டில் விருப்பம் உள்ள மக்கள் புற்றை கண்டால் விடுவார்களா?
நாங்கள் ஸ்ரீசைலம் போன போது போகும் பாதை எங்கும் மூங்கில் காடு அதற்குள் புற்றுக்கள் உயரம் உயரமாக இருந்தது.
யார் அந்தக் காசுகளை எடுத்துக்குவாங்க? தெரியவில்லை.//
இப்படி காசு சம்பாதிக்க ஆசை படும் சிலர் இருப்பார்கள் அவரிகளில் யாராவது இப்படி வைத்தால் மக்கள் வைப்பார்கள் பிற்பாடு எடுத்து கொள்ளலாம் என வைப்பார்கள்.
ஒரு படத்தில் கவண்டமணி மரத்தடியில் உண்டியல் கட்டி வைத்து சாமியார் மாதிரி அமர்ந்து கொள்வார். உண்டியல் நிறைந்தவுடன் வேறு இடம் போவார்.
அவரை பார்த்து இன்னொருவர் ஒவ்வொரு மரத்தடியிலும் மஞ்சள், குங்க்குமம் வைத்து உண்டியல் வைத்து மாட்டிக் கொள்வார்.
கவண்டமணி உன்னல் நானும் மாட்டினேன், உன்னை யாருடா மரத்துக்கு மரம் உண்டியல் வைக்க சொன்னது என்பார்.
கோமதிக்கா, ஸ்ரீராம், கமலாக்கா, எல்லோருக்கும் கொஞ்சம் மெதுவாகப் பதில் தருகிறேன். பின்னர் வந்து.
நீக்குகீதா
ஆமாம் கோமதிக்கா, இங்கு அப்படியான வழிபாடுகள் நிறைய. ஒரு பார்க்கில் பண்டு இந்த இடங்கள் கிராமங்களாக இருந்ததால் முன்பு இருட்ந்த கிராமத்துமக்களின் குலதெய்வ கோயில் ஒன்று பூங்காவில் இருப்பதைப் போடுகிறேன். நடைபாதையையும் கோவில் பகுதியையும் பிரித்து வைச்சிருந்தாலும் ஒரே வளாகம் தான்.
நீக்கு//நாங்கள் ஸ்ரீசைலம் போன போது போகும் பாதை எங்கும் மூங்கில் காடு அதற்குள் புற்றுக்கள் உயரம் உயரமாக இருந்தது.//
ஓஹோ. ஸ்ரீ சைலம் போகும ஆசை உண்டு. ஆனால் எப்பவோ?
ஆமாம் அக்கா காசு பண்ண பார்க்கும் மக்கள்...எனக்கு ஏரியைப் பற்றியகவலை!
நன்றி கோமதிக்கா
கீதா
ஏரியில் எடுத்த அல்லிமலர்கள் அழகு.
பதிலளிநீக்கு//திரை இசைப் பாடல்கள் நினைவுக்கு வரும்...//
எனக்கு நினைவுக்கு வந்த பாடல்.
"சந்திரனை பாராமல் அல்லி விழி மலருமோ பாடல் "
ஏரியில் எடுத்த அல்லிமலர்கள் அழகு.//
நீக்குநன்றி கோமதிக்கா
//"சந்திரனை பாராமல் அல்லி விழி மலருமோ பாடல் "//
இந்தப் பாட்டு கேட்டிருக்கிறேனா என்று பார்க்கிறேன். ஏனென்றால் எனக்குச் சட்டென்று பாடல் வரிகள் ஒரு சிலதைத் தவிர மற்றவை நினைவுக்கு வருவதில்லை
நன்றி கோமதிக்கா
கீதா
//ஏமாற்றிய புதுச் செருப்பு //
பதிலளிநீக்குஇந்த செருப்பு நிச்சயம் ஏமாற்றும் . இப்போது எல்லோரும் இந்த செருப்புதான் போட்டு இருக்கிறார்கள்.
உடனே போனதால் உங்கள் செருப்பு கிடைத்தது. அவர்களும் செருப்பு மாறி விட்டது என்று புலம்பி விட்டு போய் இருப்பார்கள்.
//அப்பாவி நட்புலு! ஆனால் நல்ல நட்புலு. (நட்பின் மொழி வாசனை எனக்கும் தொற்றிக் கொண்டுவிட்டது.)//
//"யே ஜூதே மேரே நஹின் ஹை" - இது என்னுடையது இல்லை - என்று தன் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டிருக்க...//
உங்கள் பன்மொழி திறமையை ரசித்தேன் கீதா
ஆமாம் அக்கா, இது ரொம்ப பரவலாக எலலரும் அணிவதாலும்....செருப்பு பழக்கும் முன்னரே ...இல்லைனா போட்டுக் கொண்டதும் தெரிந்து விடும். ஆனால் மனசு வேறு எங்கோ வேறு இருந்ததே....ஹிஹிஹி
நீக்குஅக்கா எனக்குப் பன்மொழித் திறன் எதுவும் இல்லை. அவங்க பேசியது...ஹிந்தி எனக்குப் புரிந்தது அவ்வளவே...
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
சித்தரா?
பதிலளிநீக்கு"சித்தர் கூட பித்தராகி புத்தி மாறிச் செல்லலாம்; பித்தர் கூட சித்தராகி தத்துவங்கள் சொல்லலாம். புத்தி கெட்ட ,மானுடர்க்கு தத்துவங்கள் தேவை என்னடா..."
ஆமாம் ஸ்ரீராம் நீங்க போட்டிருந்த படத்தோடு பதிவு அந்தச் சுட்டியில் இருக்கே!!
நீக்கு"சித்தர் கூட பித்தராகி புத்தி மாறிச் செல்லலாம்; பித்தர் கூட சித்தராகி தத்துவங்கள் சொல்லலாம்.//
இந்த வரிகளைப் பார்த்ததும் டக்கென்று , "புத்தி கெட்ட மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை பாடல் நினைவுக்கு வந்தது சரியாகப் பொருந்தியும் போகிறது.
//புத்தி கெட்ட ,மானுடர்க்கு தத்துவங்கள் தேவை என்னடா..."//
இந்த வரியைப் பார்த்ததும் பாடல் வேறோ என்று தோன்றியது
பார்க்கிறேன்
நன்றி ஸ்ரீராம்
கீதா
சிறிய புற்றும் காசாகும் பின்னொரு நாளில். பிழைப்பதற்கு எத்தனை வழிகள் கண்டு பிடிக்கிறார்கள்! பழைய வழி.. புதிய இடம்! ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல நீர்நிலையை அசுத்தம் செய்யப்போகிறார்கள், நாசம் செய்யப் போகிறார்கள். அந்தோ...
பதிலளிநீக்குநிறைய வழிகள் கண்டுபிடிக்கிறார்கள்.
நீக்கு//ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல நீர்நிலையை அசுத்தம் செய்யப்போகிறார்கள், நாசம் செய்யப் போகிறார்கள். அந்தோ...//
ஆமாம் ஸ்ரீராம் அதேதான் என் ஆதங்கம். கொஞ்சம் அழகான ஏரி. அதுவும் சுற்றி வரும் போது மரங்களும், நடுவில் மூங்கில் காடுகளும், என்று அழகு. ஆனால் ஏரி சுருங்கி வருகிறது.
கீதா
நட்புலு புன்னகைக்க வைத்தது.
பதிலளிநீக்குசிரிப்புலு!
பால்குடம்லு எடுக்க எப்போது போகிறீர்கள் என்று சொல்லுங்கள். போட்டோலு பிடிக்க நானும் வருகிறேன்!
ஹாஹாஹாஹா ஸ்ரீராம், கீதாவா!!! ஆஆஆ! உண்மைய சொல்லணும்னா பதிவிலும் நட்பு கேட்ட கேள்விய எழுதிட்டு, கூடவே ஒன்று சொல்லியிருந்தேன்,.
நீக்கு"கீதாபால் குடம் எடுத்துப் போவது போல் ஒரு காட்சி மனதில் ஓடியது!! கீதாவா!!??" என்று அப்புறம் அதை எடுத்துவிட்டேன்.
அவங்க பேசினாங்கனா பதில் சொல்லும் போதோ, நான் பேசும் போதோ என் ஆங்கிலம் தடுமாறும். அவங்க பேசுவதுதான் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். நிறைய பேசுவாங்க. ஆங்கிலம் எனக்கு மறந்தே போய்விடும் போல இருக்கும். நான் பேசும் போது ரொம்பக் கஷ்டப்படுவேன் ஆங்கில இலக்கணத்தில் தடுமாறுவேன். ஏனென்றால் அவங்க ஆங்கிலம் அப்படி இருக்கும். ஆங்கிலத்தை தெலுங்கில் பேசுவது போன்று இலக்கணமும் சரியாக இல்லாமல்....ஆனால் அவங்க நல்லவங்கன்றதுனால , நட்பிற்காகப் பொறுமை!!
நன்றி ஸ்ரீராம்
கீதா
பாவம் அந்தப் புற்றில் வாழும் கரையான்கள். நாம் கட்டிய வீட்டை ஒருத்தன் பிஸினஸுக்கு எடுத்து விட்டான் என்பதை அவைகள் அறியா. ஏற்கனவே பாம்புத் தொல்லை வேறு இருக்கும்! ஆனால் அவை புத்திசாலிகள். இந்த வழிகளை அடைத்து விட்டு வேறு வழிகள் அமைத்துக்கொண்டு விடும்!
பதிலளிநீக்குஆமா ஸ்ரீராம், ஆனா நீங்க சொல்லியிருப்பது போல் உள்ள சுரங்கப் பாதை எல்லாம் வைச்சிருக்கும்ங்க...ஆமா அதுங்களுக்கு எங்க போனாலும் பாம்புத் தொல்லை இருக்கும். அதுவும் இந்த மாதிரி ஏரி மரங்கள் அடர்ந்த இடங்களில் கட்டினால் பாம்புத் தொல்லை ரொம்பவே...
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
முதல் படத்தில் இருக்கும் புற்று பார்ப்பதற்கு பெருமாள் வடிவில் இருக்கிறது. அதை உபயோகப்படுத்தி இருக்கலாமோ.. இன்னும் கல்லா கட்டி இருக்கலாம்.
பதிலளிநீக்குஓ அப்படியா, எனக்கு ஜடா முடி முனிவர்கள் பலர் இருப்பது போன்று தோன்றியது. படத்தின் கீழ் மற்றும் பதிவிலும் இன்னும் சொல்ல நினைத்து விட்டவை நிறைய.
நீக்குஅதை உபயோகப்படுத்தி இருக்கலாமோ.. இன்னும் கல்லா கட்டி இருக்கலாம். //
நல்ல ஐடியா ஸ்ரீராம், இதைப் பார்த்தாங்கனா கட்டினாலும் கட்டிடுவாங்க! சொல்றதுக்குத்தான் நிறைய நம்பிக்கைகள் காரணங்கள் இருக்கின்றனவே.
கீதா
அல்லிமலர்களைப் பார்க்கும்போது எனக்கு சட்டென்று பாடல் எதுவும் நினைவுக்கு வரவில்லை. "அல்லி மகள் மெல்ல வந்தாள்" "அல்லித் தண்டு காலெடுத்து" பாடல்கள் மட்டுமே நினைவுக்கு வருகிறது!
பதிலளிநீக்குஇந்த இரு பாடல்களும் கேட்டிருக்கிறேனா? கூகுளில் போட்டுக் கேட்டுப் பார்க்கிறேன். குறித்து வைத்துவிட்டேன் கோமதிக்கா சொன்ன பாடலும் நீங்கள் சொல்லியிருக்கும் பாடல்களையும்.
நீக்குகீதா
இலைக்கதவுகளைத்
பதிலளிநீக்குதிறந்து
குளவீட்டிலிருந்து
சூரியனை பார்க்கும்
அல்லிப்பெண்!
சூப்பர்! நல்லாருக்கு ஸ்ரீராம். பார்த்ததும் 'கவிதை கேளுங்கள், கவிதை பாடும் குயிலே குயிலே !!
நீக்குகீதா
அந்த அல்லி மலர்களை சுற்றி அடிப்பாகத்தில் அந்த இலைகள் எவ்வளவு அழகாக பாய்விரித்தது போல படர்ந்திருக்கின்றன.. இல்லை?
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் இதையும் சொல்ல நினைத்தேன்....எவ்வளவு அழகாக விரிந்து இருக்கு பாருங்க மிதக்க சௌகரியமாய்....இந்த இடத்தில் பார்க்கவே அத்தனை அழகாக இருக்கும். இது போல தாமரையும் உண்டு. ஆனால் அடியில் தண்டும்....இந்த இலையின் மீது பறவைகள் உட்காரும்...ஆச்சரியமாக இருக்கும் இலைகள் மடங்காமல் இருக்கும்.
நீக்குபடங்கள் போடுகிறேன். தாமரை, பறவைகள் இலைகளி மீது அமர்ந்திருப்பது எல்லாம்
நன்றி ஸ்ரீராம்
கீதா
புதுச்செருப்பு கடிக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். புதியவர்களோட செருப்பு அடிகொடுக்காமல் தப்பிக்க வைத்ததே பெரிசு போலிருக்கு! ஹா.. ஹா.. ஹா..
பதிலளிநீக்குஹாஹாஹா ஆமாம்....செருப்படி வாங்காம .....நாம ஏனோ அதை எடுத்துவிட்டோமோன்னு அவங்க நினைச்சிருவாங்களோன்னு பயம் வேறு.
நீக்குஇப்பலாம் என் செருப்பை ஒரு திண்டின் அடியில் வைக்கிறேன்!!!!!
கீதா
உண்மையில் மாற்றுச் செருப்பை நீங்கள் அணியும் தருணமே அது நான் உன் ஆள் இல்லை என்று கால் மூலம் மூளைக்கு உணர்த்தும்.
பதிலளிநீக்குஒரு சிரமம்.
கொஞ்ச நேரம் பழகிவிட்டால், மாற்றுச் செருப்பு நாய்க்குட்டி போல நம் காலுடன் ஒத்துப் போய் விடும்! அதற்குமுன் அதைக் கண்டுபிடித்து நம் ஆளை மீட்க வேண்டும்!
ஆமாம் ஸ்ரீராம்....என் செருப்பும் பழகிக்கலையே....அபப்தானே ரிலீஸ். அதான் குழப்பம் அக்குழந்தையின் செருப்பும் எனக்கு எந்தவித வித்தியாசமும் தரவில்லை. முன்பக்கம் வைத்த வார் எப்படி பின் பக்கம் என் காலில் வந்தது ந்றதுதான் யோசிக்க வைத்து....ஹப்பா ஒரு வழியாக...
நீக்கு//கொஞ்ச நேரம் பழகிவிட்டால், மாற்றுச் செருப்பு நாய்க்குட்டி போல நம் காலுடன் ஒத்துப் போய் விடும்! அதற்குமுன் அதைக் கண்டுபிடித்து நம் ஆளை மீட்க வேண்டும்!//
ஆமாம் நல்லகாலம் அந்த வார் தான் உதவியது.
நன்றி ஸ்ரீராம்
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குமூன்று சில்லுகளையும் படித்து ரசித்தேன். அருமையாக உள்ளது.
புற்றுகள் (அதுவும் கரையான்கள் ஏற்படுத்தும் புற்று.) தோன்றிய இடமெங்கும் பூஜைகள்தான். இங்கும் நிறைய புற்றுக்குள் உள்ளன. அருகிலிருக்கும் வாக்கிங் போகும் இடத்தில் ஒரு மரத்துக்கடியில், இப்படி படங்கள். ஊதுபத்தி விளக்குடன் பார்த்திருக்கிறேன். நாம் வாக்கிங் சுற்றும் போது கடவுளையும் சேர்த்து சுற்றுகிற மாதிரி யாரோ ஒருவர் அமைத்திருக்கிறார் என்பது சிறந்த விஷயந்தானே என நினைத்துக் கொள்வேன்.
"அல்லி மலருக்கு கொண்டாட்டம்" என்ற பாடல் நினைவுக்கு வந்தது உங்களின் அழகான அல்லி மலர்கள் படங்களை பார்க்கும் போது. மரங்களுக்கிடையே அல்லி மலர்கள் படம் மிக அழகாக இருக்கிறது.
புகைப்படங்கள் எடுப்பதில் தாங்கள் எப்போதும் சிறந்தவராயிற்றே..!
புகைப்படங்கள் அழகான கோணத்தில் எடுப்பது, சமூக கண்ணோட்டங்களை அருமையாக விவாதிப்பது, விமர்சிப்பது, கதைகள், கவிதைகள், சமையல் பதிவுகள் என கலக்குவது என பன்முக ஆற்றல் படைத்தவர் நீங்கள். உங்களை, உங்கள் கருத்துக்களை, உங்கள் எழுத்துக்களை நானும் எப்போதுமே மனதாற பாராட்டுகிறேன் சகோதரி.
தற்போது கூட சகோதரர் நெல்லைத்தமிழர் எ. பியில் எழுதிய ஜோசிய கதைக்கு நீங்கள் அழகாக, கதைக்குப் பொருத்தமான புகைப்படங்களை தேர்ந்தெடுத்து தந்துள்ளீர்கள். அதற்கும் என் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த செருப்பு இப்போது பிரபலமாகி விட்டது.(எங்கள் குடும்பத்திலும்.) நன்றாக உழைக்கிறதென்றும் சொல்லி எனக்கும் அது ஒன்று வந்துள்ளது. உங்கள் செருப்பு அழகாக உள்ளது. தொலைந்துப் போகாமல் அது உங்களுக்கே வந்த சேர்ந்த விதமும் சிறப்பு. நீங்களும் அதை உணர்ந்து அவர்களிடமே சென்று சேர்ப்பித்த விதமும் அருமை.
அன்று வார நாளாக இருந்தமையால் கோவிலில் கூட்டமில்லையோ ?
ஸ்ரீ ரங்கபட்டிண கோவிலை உங்கள் பார்வையில் சந்திக்க ஆவலாக உள்ளேன். விரைவில் இறைவன் அருளட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி
சில்லுக்கள் மூன்றையும், சிதறி சில்லுக்களாக போகாமல் முழு தேங்காயாக சேர்க்க முயற்சித்து விட்டேனோ? எனவும் தோன்றுகிறது. மன்னிக்கவும் சகோதரி. ஹா ஹா ஹா. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலாக்கா.
நீக்குஆமாம் இங்கு புற்று, மரங்கள் எல்லாம் இப்படிப் பூஜை செய்யப்பட்டு விளக்குகள் ஊதுபத்தி பூ என்று இருக்கின்றன. இங்கும் இரு மரங்கள் உண்டு படம் எடுத்திருக்கிறேன். நூல் சுற்றி விட்டிருப்பாங்க.
//"அல்லி மலருக்கு கொண்டாட்டம்" என்ற பாடல் நினைவுக்கு வந்தது//
லில்லி மலருக்குக் கொண்டாட்டம் இல்லையோ அந்தப் பாட்டு? எனக்கும் அல்லி மலருக்குக் கொண்டாட்டம் என்று எழுத நினைத்து அப்புறம் அது லில்லி என்று நினைவு அதனால் விட்டு விட்டேன்.
//புகைப்படங்கள் எடுப்பதில் தாங்கள் எப்போதும் சிறந்தவராயிற்றே..!
புகைப்படங்கள் அழகான கோணத்தில் எடுப்பது, சமூக கண்ணோட்டங்களை அருமையாக விவாதிப்பது, விமர்சிப்பது, கதைகள், கவிதைகள், சமையல் பதிவுகள் என கலக்குவது என பன்முக ஆற்றல் படைத்தவர் நீங்கள். உங்களை, உங்கள் கருத்துக்களை, உங்கள் எழுத்துக்களை நானும் எப்போதுமே மனதாற பாராட்டுகிறேன் சகோதரி.//
நன்றி கமலாக்கா. நான் அதெல்லாம் இல்லை அக்கா. உங்களுக்கும் தான் பல திறமைகள் இருக்கின்றன. இங்கு வரும் எல்லோருக்குமே இருக்கு கமலாக்கா.
//தற்போது கூட சகோதரர் நெல்லைத்தமிழர் எ. பியில் எழுதிய ஜோசிய கதைக்கு நீங்கள் அழகாக, கதைக்குப் பொருத்தமான புகைப்படங்களை தேர்ந்தெடுத்து தந்துள்ளீர்கள். அதற்கும் என் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.//
நன்றி கமலாக்கா. அது நெல்லையைக் கலாய்ப்பதற்காகவே!!! முதற்காரணமாகக் கொண்டு செய்தது!!!!!!
ஆமாம் அக்கா இந்தச் செருப்பு நல்லாருக்கு. உங்களுக்கும் கூட சௌகரியமாக இருக்கும் நடைப்பயிற்சி செய்ய எல்லாம்.
//அன்று வார நாளாக இருந்தமையால் கோவிலில் கூட்டமில்லையோ ?//
ஹாஹாஹா இல்லை....அது காரணமில்லை. யாராச்சும் கெஸ் பண்ணுவாங்கன்னு நினைச்சேன்.
வார நாளில் கணவருக்கு அலுவகலம் உண்டே!!!!!!
கோவில் படங்கள் தொகுக்க வேண்டும் ....போடப் பார்க்கிறேன்.
//சில்லுக்கள் மூன்றையும், சிதறி சில்லுக்களாக போகாமல் முழு தேங்காயாக சேர்க்க முயற்சித்து விட்டேனோ? எனவும் தோன்றுகிறது. மன்னிக்கவும் சகோதரி. ஹா ஹா ஹா. நன்றி.//
அக்கா இதுக்கு எதுக்கு மன்னிப்பு. அக்கா ப்ளீஸ்....மூன்றும் சேர்த்து முழுத் தேங்காயாகக் கொடுத்ததும் குறையில்லையே கமலாக்கா....ஒரே கருத்தாக!!! நம் நேரமும் முக்கியமாச்சே.
நன்றி கமலாக்கா
கீதா
எம்ஜிஆர் பாடும் அந்தப் பாடலில், "லில்லி மலருக்கு கொண்டாட்டம்" என்றுதான் வருமமென கருத்து அடித்து முடிந்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது. லில்லிக்கு வில்லியாக நான் அல்லியை "அடித்து" அனுப்பி விட்டேன். அதை தவறென்று உணர்ந்த பின் அல்லியிடம் சொல்லி மன்னிப்பு கேட்கலாமென்றால், அதற்கு நேரம் சரியாக அமையவில்லை. நீங்களும் அல்லிக்குப் பதிலாக லில்லியை பரிந்துரைத்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குஜில்லென்றிருக்கும் அழகான குளத்தில் தன் கூட்டத்தோடு கூட்டமாக அழகாக மலர்ந்திருக்கும் அந்த சந்தோஷமே போதுமென்றிருக்கும் அல்லிக்கு தோதாக நாம் "அல்லி மலருக்கு கொண்டாட்டம்" என்றே பாடி விடுவோம். ஹா ஹா ஹா.
/ஒரே கருத்தாக!!! நம் நேரமும் முக்கியமாச்சே/
அதுவும் ஒரு காரணம். சகோதரி. நேரத்தை விட என் கைப்பேசியில் மேலும் கீழுமாக சென்று டைப்பிங் செய்யும் போது, அனைத்தையும் படித்து கிரஹித்துக் கொண்டு, ஒரே கருத்தில் பதிலளித்தால் செளகரியமெனத் தோணும். சின்ன, சின்னதாகவும் அவ்வப்போது அளிக்கலாம். அதற்குள் ஏதாவது வேலைகள் வந்து விட்டால், கைப்பேசியை கையில் எடுப்பதே சிரமமாகி விடும். பிறகு ஆறிய கஞ்சியாகி விடும். (இப்போது மட்டும் என்ன வாழுதாம்..? என மனசாட்சி ஒருபக்கம் வந்து கத்தி விட்டுச் செல்கிறது.:))) )
அக்கா நானும் டக்குன்னு அப்படித்தான் நினைத்தேன்...அல்லி லில்லி எல்லாம் ஒண்ணும் நினைச்சுக்க மாட்டாங்க...அதானே அல்லி மலருக்குக் கொண்டாட்டம்னு பாடிடலாம் !!
நீக்குநான் கைப்பேசியில் கருத்து அடிப்பது என்பது ரொம்ப ரொம்ப அரிது, கமலாக்கா. வேறு வழியில்லைனாதான் அதில்.
புரிகிறது கமலாக்கா உங்கள் நிலை. எனக்கும் பல சமயங்களில் அப்படித்தான்.
மனசாட்சிய சும்மா இருக்கச் சொல்லுங்க அதுக்கென்ன தெரியும்? அது சும்மா உள்ள உக்காந்து குரல் கொடுத்துட்டேன் இருக்கும்...வேலை செய்யறது யாராம்? நீங்கதானே!!!! ஹாஹாஹா
நன்றி கமலாக்கா
கீதா
அக்கா நானும் டக்குன்னு அப்படித்தான் நினைத்தேன்...அல்லி லில்லி எல்லாம் ஒண்ணும் நினைச்சுக்க மாட்டாங்க...அதானே அல்லி மலருக்குக் கொண்டாட்டம்னு பாடிடலாம் !!
நீக்குநான் கைப்பேசியில் கருத்து அடிப்பது என்பது ரொம்ப ரொம்ப அரிது, கமலாக்கா. வேறு வழியில்லைனாதான் அதில்.
புரிகிறது கமலாக்கா உங்கள் நிலை. எனக்கும் பல சமயங்களில் அப்படித்தான்.
மனசாட்சிய சும்மா இருக்கச் சொல்லுங்க அதுக்கென்ன தெரியும்? அது சும்மா உள்ள உக்காந்து குரல் கொடுத்துட்டேன் இருக்கும்...வேலை செய்யறது யாராம்? நீங்கதானே!!!! ஹாஹாஹா
நன்றி கமலாக்கா
கீதா
பதிவை விட பின்னூட்டங்கள் நீளமாக இருக்கின்ரனவே..? உங்கள் பதிவின் முதல் பகுதியில் நீங்கள் சொல்லியிருப்பதைப் போல எங்கள் வீட்டிற்கருகில் ஒரு சிறிய ஏரியும், அதில் நீந்தும் அன்னங்களும் பார்க்க அழகாக இருந்தது, இப்போது அதில் குப்பையை கொட்டி, அந்த ஏரியை வற்ற வைத்து விட்டார்கள்.
பதிலளிநீக்குபதிவை விட பின்னூட்டங்கள் நீளமாக இருக்கின்ரனவே..?//
நீக்குபெரும்பாலும் அப்படித்தான் பானுக்கா!!! ஹாஹாஹா
ஆமாம் உங்க வீட்டுக்கு முதன் முறை சுற்றி வந்தப்ப அந்த ஏரியைப் பார்த்து அப்போதே நொந்து போனேன்.
பல ஏரிகளின் நிலையும் இதுதான். இதில் ஏதோ பெரிய ஏக்கர் கணக்கில் பூங்கா ஒன்று எலஹங்கா அருகில் காட்டுப் பகுதி ஒன்றில் உருவாக்குகிறார்களாம்!!!!! உள்ள ஏரிகளை சுத்தம் படுத்தி தூர் வாரினாலே நல்ல விஷயம். வீடுகளின் கழுவுகளுக்கு வேறு இடம் பார்த்து...
நன்றி பானுக்கா
கீதா
ஒரு திருமணத்தில் என்னுடைய செருப்பை போலவே காலணி அணிந்திருந்த மணமகனின் சகோதரி என் செருப்பை மாற்றி போட்டுக் கொண்டு விட்டார். அவருடைய செருப்பை அணிந்து கொண்ட எனக்கு வித்தியாசம் தெரிந்தது, நல்லவேளை, அவர் என் அருகிலேயே நின்று கொண்டிருந்ததால் உடனே மாற்ற முடிந்ததது.
பதிலளிநீக்குஆமாம் பழகிவிட்டால் நம் செருப்பு நமக்குத் தெரிந்து விடும் பானுக்கா.
நீக்குமாற்ற முடிந்தது நல்ல விஷயம்
நன்றி பானுக்கா
கீதா