ரங்கனதிட்டு பறவைகளைப் பார்க்க டிக்கெட் வாங்கும் வரை கொஞ்சம் இடைவெளியில் ஒரு பதிவு.
என் ஃபோல்டரில் மூன்று வருடங்களுக்கும் மேலாகக் கிடந்த (அப்பாவின்) நாற்காலி, 2025 மார்ச் மாத கணையாழி இதழில் வெளியானது. கணையாழி ஆசிரியருக்கும், குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றி. முதன் முறையாக இதழில் வெளிவந்திருக்கிறது. கணையாழிக்கு அனுப்புவதற்கு முதற் காரணமாகவும் தூண்டுகோலாகவும் இருந்தவர் நம்ம நட்பு எங்கள் ப்ளாக் ஸ்ரீராம். அவருக்கு என் நன்றி உரையை வழங்கிக் கொள்கிறேன்!