திருவனந்தபுரம் அருகே உள்ள பூவார் டூரிஸ்ட் ரிசார்ட்டில் பெங்களூரைச் சேர்ந்த தகவல் தொழில் நுட்ப பெண் ஊழியரைக் கற்பழித்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த லக்கிநாத் (20 வயசு) பெர்SOசோநாகம் (22வயசு) நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ரிசார்ட்டில் க்ளீனிங்க் வேலைகளைச் செய்யும் கோட்டயதிலுள்ள பெஸ்ட் மனஜேமென்ட்(Pest Management) கம்பெனியின் ஊழியர்கள் தான் இந்த இருவரும். கைது செய்யப்பட்ட இவர்கள் விசாரணைக்கிடையில் ஜாமீன் கிடைத்துப் போனால் மீண்டும் கண்ணில் படப்போவதே இல்லை. கேரளாவில் ஏறத்தாழ 25 லட்சம் வட இந்திய தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். கட்டிட வேலை, ரோட் இடல், ஹோடல்கள், இப்படி எல்லா இடத்திலும், நகரங்கள் மட்டுமல்ல கிராமங்களிலும், அவர்கள் இன்றியமையாதவர்கள் ஆகி விட்டார்கள். இவர்களில் கணிசமான சத விகிதத்தினர் குற்ற வாசனை உள்ளவர்கள். லாப நோக்கம் உள்ள பல கம்பெனிகளிலும், குறைந்த கூலிக்கு சுலபமாக கிடைக்கும் இவர்கள் பணியாற்றுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு கம்பெனி, ரிசார்ட்டுக்குச் சப்ளை செய்த க்ளீனிங்க் ஊழியர்கள் தான் இருவரும்.
31 பேர் அடங்கிய கம்ப்யூட்டர் வல்லுனர்களின் ஒரு conference ல் பங்கெடுக்கத்தான் இந்த பெண்மணி வந்திருந்தார். 28.11.2013 அன்று, அவர் தங்கி இருந்த அறைக்கு பகலில் ரூம் சுத்தம் செய்ய வந்த இவர்கள் பின் கதவின் ஸ்க்ரூவை லூசாக்கி வைத்துச் சென்ற பின், இரவு 2 1/2 மணிக்கு முகமூடி அணிந்து அறைக்குள் புகுந்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர். அதனிடையே, அவர்கள் மலையாளத்தில் பேசவும் செய்திருக்கிறார்கள். அந்தப் பெண்மணி பெங்களூர் சென்று அங்கு புகார் கொடுத்த போதுதான் விவரம் கேரளா போலீசுக்குத் தெரிய வந்தது. (அவருடைய தைரியத்தையும், சம்யோஜித புத்தியையும் நாம் பாராட்டத்தான் வேண்டும்.. However, she avoided adding insult to her injuries). இப்படிப்பட்ட குற்றவாளிகள் கேரளத்தில் மட்டுமல்ல, தென்னகமெங்கும் பரவலாகப் பல இடங்களில் பணி புரிகிறார்கள்.
2 மாதங்களுக்கு முன்பு ஒரு சம்பவம், ஓடிக் கொண்டிருந்த ரெயிலில், ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட 15 பேர் அடங்கிய வட மாநிலத் தொழிலாளர்களைக் கண்டித்த ஒரு இளைஞரை ஓடும் ரெயிலிலிருந்து வெளியேத் தள்ளி இருக்கிறார்கள். கைகால்கள் ஒடிந்த அவர் இப்போதும் படுத்த படுக்கையில். (இதில் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீசாரிடம் புகார் கொடுக்கக் கூடத் தயாராகவில்லையாம்!!)
அது போல் போன மாதம் பெரிந்தல்மன்ன அருகே தன் பலசரக்குக் கடையை அடைத்து இரவு வீட்டிற்கு நடந்து சென்ற ஒருவரை, வட இந்திய கட்டிட வேலைத் தொழிலாளர்கள் கொன்று பணத்தை அபகரித்துச் சென்றனர். 2 மணி நேரத்திற்குள் அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டார்கள் என்றாலும் போன உயிர் போனது தானே. அது போல் திருச்சூர் அருகே உள்ள காரளம் வொக்கேஷனல் ஹையர் செகண்டரி ஸ்கூல் ஆசிரியையும், மகனையும் தலையில் வெட்டி படுகாயம் ஏற்படுத்தி அவர்களுடைய நகைகளையும், பணத்தையும் அபக்ரித்த வட இந்திய தொழிலாளர்கள் 3 மாதத்திற்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்த ஆசிரியையின் கணவர், அவர்கள் வீட்டிற்கு வேலைக்கு வந்த இந்த வட இந்தியத் தொழிலாளர்களுக்குத் தங்க, அவர்கள் வீட்டின் அருகே வாடகைக்கு ஒரு வீடும் ஏற்பாடு செய்து கொடுத்து உதவியவர் என்பது குறிப்பிடத் தக்கது. ஆசிரியையும், மகனும், இப்போதும் படுத்த படுக்கையாகத்தான் இருக்கிறார்கள். இத்தகைய சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருதிறது. அரசும், காவல்துறையும், பொது மக்களும் இதை உணர்ந்து ஆவன உடனே செய்ய வேண்டும். இல்லையேல்,
“வரும்முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போலக் கெடும்”.
காவல் துறையினர் இது போன்ற குற்றங்கள் நடக்கும் போது, அதில் ஈடுபடுபவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் அவர்கள் பணிபுரியும், தங்கும் இடங்களில் இடையிடையே சென்று அவர்களும் கண்காணிக்கப்படுகிறார்கள் என்ற எண்ணதையேனும் உண்டாக்க வேண்டும். ஹெல்மெட் இடாதவர்களையும், சீட் பெல்ட் இடாதவர்களையும் விரட்டி, விரட்டிப் பிடிக்கும் நம் காவல் துறையினரின் கவனமும் நேரமும், இது போன்ற பிற மாநிலங்களிலிருந்து பிழைப்புத் தேடி வந்த உண்மையான உழைப்பாளர்களுகிடையே உள்ள பசுத்தோல் போர்த்திய புலிகளை அடையாளம் கண்டு, அவர்களை இங்கிருந்து விரட்டுவதிலும், செலவிடப்படவேண்டும். உயிரா மானமா
சில வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடந்த மற்றொரு சம்பவம். பகல் 1 மணி. பரபரப்பான தெருவில் உள்ள ஒரு துணிக் கடை. திடீரென ஷட்டர் இறக்கப் படுகிறது. கத்தியுடன் 4 பேர் உள்ளே. வெளியே ஒருவன். யாரையும் உள்ளே விடாமல் இருக்க ஏதாவது காரணம் சொல்வதற்காக. கடையில் இருந்த பத்து பதினைந்து பேரில், ஒரு இளம் பெண்ணின் கையைப் பிடித்து கடைக்குள்ளேயே மறைவான ஒரு இடத்திற்கு இழுத்துக் கொண்டு போனார்கள். கூச்சல் போட்டவர்களை கத்தியால் மிரட்டியும் அடித்தும் மௌனமாக்கினார்கள். ஆனால், ஒரு 45 வயதுள்ள தாய், அழுவதை நிறுத்தாமல் அந்தக் கயவனிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டாள். (வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் பேரிடி.) கெஞ்சினாலும் பலனில்லை என்று தெரிந்ததும் “என்னை உபயோகித்துக் கொள் என் குழந்தையை விட்டு விடு” என மன்றாட, அந்தக் 'கல்லுக்குள்ளும் கொஞ்சம் ஈரம்' இருந்த்திருக்க வேண்டும். அவனது காமப் பேய்க்கு அந்தத் தாய் தீனி போட்டாலும் போதும்னு நினைத்திருப்பான் போலும். அந்த சம்பவத்தைப் பற்றி வாசித்த போதும், இப்போதும் நான் இறைவனிடம் வேண்டுகிறேன், “இறைவா அவர்களுக்கு விபரீத சிந்தனைகள் ஏதும் வராமல், நடந்ததெலாம் ஒரு பெரும் விபத்து என்று எண்ணி வாழச் செய்”. விவரிக்கப்பட்ட இரு சம்பவங்களிலும், பெண்கள் எடுத்த முடிவு அந்தச் சந்தர்பத்தில் எடுக்கப் படவேண்டிய முடிவுதான்.
வாகன விபத்தில் காயமடையும் போது ஒருவரை எப்படியேனும் காப்பாற்றி அவர் மனதுக்கும் உடலுக்கும் தெம்பேற்றி அவரை மீண்டும் அவரது வாழ்க்கையைத் தொடரச் செய்வது போல், இது போன்ற சம்பவங்களையும் ஒரு விபத்தாக நினைத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தத் தவறு செய்யும் கயவர்களுக்கு உரிய தண்டனையை வாங்கிக் கொடுக்க முடியும். இது போன்றத் தவறுகளைச் செய்யும் கயவர்களுக்கு, துணிச்சல் தருவது, அவர்களுக்கு இறையாகும் பெண்கள், ஒன்று, தற்கொலை செய்து கொள்வார்கள் இல்லையேல் வெளியே சொல்லாமல் நான்கு சுவர்களுக்கு இடையே வாழ்வை வாழ்ந்து தீர்ப்பார்கள் என்ற எண்ணம் தான். நம்பள்கியும் தன்னுடைய பதிவின் மூலம் சொல்ல வருவது ஒருவேளை இந்தக் கருத்தாக இருக்கலாம். உயிரா, மானமா என்றக் கட்டம் வரும் போது உயிர்தான் பெரிது என்ற யாதாத்தமான முடிவை எடுக்கத் தயங்கக் கூடாது.
---------------------------------------------------------------------------------------------------
அதிசயம் ஆனால் உண்மை
ஆல்பெர்ட் ஷ்வெய்ஷரைப் (Albert Schweitzer) பற்றிக் கேள்விபட்டிருபீர்கள். தன் 21 அம் வயதில் தனக்கு மிகவும், மகிழ்சிகரமான வாழ்வு தந்த இறைவனுக்கு நன்றி சொல்ல, உதவியற்று உழலும் மனிதர்களுக்கு உதவுவதே சிறந்த வழி என்பதை உணர்ந்தவர். பின்பு ஒரு போதும் வருந்தக் கூடாது என்று ஒன்பது வருடங்கள் தன் மகிழ்சிகரமான வழ்க்கையைத் தொடர்ந்த பின், தன் 30 வது வயதில் ஆப்பிரிக்க நாடுகளில் மருத்துவர்களின் அவசியத்தை உணர்ந்து 7 ஆண்டு காலம் மருத்துவம் பயின்று, 
தன் மனைவியை செவிலியும் ஆக்கி ஆப்பிரிக்கா சென்று மருத்துவச் சேவை புரிந்த மஹான். அது போல் ஒரு மஹான் காசரகோடு (கேரளா ) அருகே உள்ள பதிஅடுக்கா எனும் இடத்தில். பெயர் சாய்ராம் பட் என்று அழைக்கப்படும் K.N. கோபாலகிருஷ்ண பட்.

தன் மனைவியை செவிலியும் ஆக்கி ஆப்பிரிக்கா சென்று மருத்துவச் சேவை புரிந்த மஹான். அது போல் ஒரு மஹான் காசரகோடு (கேரளா ) அருகே உள்ள பதிஅடுக்கா எனும் இடத்தில். பெயர் சாய்ராம் பட் என்று அழைக்கப்படும் K.N. கோபாலகிருஷ்ண பட்.
ஒரு சாரண விவசாயி. சாதித்ததோ வியக்க வைக்கும் சாதனை. கடந்த மாதம், மற்றவர்களின் உதவி ஏதும் இன்றி, தான் கட்டிய 208 வது வீட்டின் சாவியை வீடில்லாத ஒரு ஏழைக்குக் கொடுத்தார். அன்றைய தினம், காசரகோடு மாவட்டத்திற்கு மட்டுமல்ல, கேரள மாநிலத்துக்கு மட்டுமல்ல, தென்னகத்துக்கே ஒரு பொன்னாள். அரசியல்வாதிகளும், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் என்று எல்லாத் துறையிலும் உள்ளவர்கள் அவரைப் பாராட்டிப் பேசவும், எழுதவும் செய்தார்கள் தனி ஒரு மனிதனுக்கு தன் வாழ்நாளில் 208 வீடுகள் வீடில்லாத ஏழைகளுக்குக் கட்டிக் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்த ஒரு மஹான். இவருடைய இந்தச் சேவை ஏராளமான மனிதர்களுக்கு ஊக்கம் தரும் ஒன்றாக மாறியிருக்கிறது. பெரும்பான்மையான பள்ளிகளில் பயிலும் குழந்தைகள், தங்களுடன் பயிலும் வீடில்லாத ஏழைக் குழந்தைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் சம்பவங்கள் ஏராளமாக நடந்து வருகிறது. சமூக்சேவையில் ஈடுபட்டிருக்கும் ஸ்தாபனங்களும் இது போன்ற சேவையில் ஈடுபடத் தொடங்கி இருக்கின்றன. அப்படி இந்த தனிமனிதனின் சாதனை எல்லோருக்கும் ஒரு முனுதாரணாமாக மாறியிருக்கிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
உயிரா? மானமா?
சிந்திக்க வைத்த ஒரு பூதம்!.நம்பள்கி திறந்துவிட்ட பூதம். நம்பள்கி சில நாட்களுக்கு முன்பு தன் வலைப்பூவில், ஒரு பாட்டிலில் இருந்து ஒரு பூதத்தைத் திறந்து விட்டது நினைவு இருக்குமே எல்லோருக்கும்? துப்பாக்கி முனையில் நீங்கள். நீங்கள் ஆணாக இருக்கலாம் பெண்ணாக இருக்கலாம். படு இல்லையேல் சாவு. Yes or No. இந்தக் கேள்விக்கு பதில் சொல்பவர்கள், பலவிதமான சிந்தனைகளை மனதினில் ஓடவிட்டாலும் கேள்வி ஒன்றுதான். வாழ்வா? சாவா? சாகத் தயாராகும் ஒருவர் என்னதான் நியாயங்கள் சொன்னாலும் அவர் தன் உடலை முழுவதுமாக உதறிவிட்டுத்தான் சாகிறார். ஆனால், அதற்காக அவர் சொல்லும் காரணமோ? என் உடலை என் சம்மதத்துடன் தரமாட்டேன் என்பது. கற்பழிக்கப்படும் பெண்களில் பலரும் உயிருக்குப் பயந்த நிலையிலோ, போராடி வலு இழந்த நிலையிலோ, அடியும் உதையும் பட்டு மயங்கிய நிலையிலோதான் ஆணுக்குக் கீழ் படுக்கிறார்கள். இங்கு தவறு செய்பவன் ஆண். அவனுக்கு இல்லாதக் குற்ற உணர்வு, அவனுக்கு வர வேண்டியக் குற்ற உணர்வு அவசியம் இல்லாமல் பெண்ணுக்கு வர வேண்டுமா? தன் சம்மதமின்றி, வலுக்கட்டாயமாக தன் வாழ்வில் ஒரு காமப் பிசாசு அதன் உமிழ் நீரைத் துப்பி விட்டது. உடனே அதை வெளியேத் துப்பி, வாயைப் பலமுறைக் கழுவியாகி விட்டது. என்றாலும் மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. உடலும்தான். ஏதோ குடலைப் புரட்டி வாந்தி வருவது போல். “வேண்டாம்! அவனுடைய எச்சிலில் ஒரு துளியின் ஒரு சின்ன அளவாவது என் உடலுக்குள் சென்று விட்டது. இனி இந்த உடல் வேண்டாம். இந்த சமூகம் என்னை ஏற்கவும் செய்யாது. இந்த வாழ்க்கை வேண்டாம். என் அப்பா வேண்டாம். ஏன் அம்மா வேண்டாம். கணவர் வேண்டாம். குழந்தைகள் வேண்டாம். இதோ நான் உயிரை விடுகிறேன்”. இது தான் நடக்கிறது. இதுதான் நடக்க வேண்டும் என பெரும்பான்மையான ஆணகளும் பெண்களும் எதிர்பார்க்கிறார்கள்.
நான் என் இளம் வயதில், உடலுறவை அனுபவ ரீதியில் அறியாது இருந்த கல்லூரி நாட்களில் ஒரு கதை எழுதினேன். எங்கள் வலைப்பூவில் இட, தூசி தட்டி எடுத்த சில பழைய கதைகளில் அதுவும் இருந்தது. வாசித்த நான் அதைக் கிழித்தே போட்டு விட்டேன். கதை சுருக்கம் இதுதான். ஹனிமூன் போகும் கணவனும், மனைவியும். வழியில் கார் பஞ்சராகிறது. இருள் படரும் நேரம். டயர் மாற்றிக் கொண்டு இருந்த போது வந்த ஒரு ஜீப்பிலிருந்த சிலர் மனைவியைக் கற்பழிக்க முயல, காப்பாற்ற பல வழிகளில் முயன்றும் முடியாத கணவன் வேறு வழி இன்றி, “சுதா மன்னிச்சிரு, என்று மனைவியின் தலையில் ஒரு பெரிய கல்லைப் போட்டுக் கொன்று விடுகிறான். (இச் சிறு துரும்பும் இப்படி பல் குத்த உதவும் என்று நினைக்கவே இல்லை!) இந்த ஐம்பது வயது வரை நான் கண்டதும், கேட்டதும், வாசித்தவைகளும், புரிந்து கொண்டவைகளும், என்னை, அந்தக் கணவன் சுதாவைக் கொலை செய்ய இப்போது அனுமதிக்க வில்லை.
சில வருடங்களுக்கு முன். காசரகோடு அருகே பேக்கல் கோட்டை( Bekal Fort). இளம் கணவனும் மனைவியும். மாலை நேரம். இருவரும் இருட்டு வரும் வரை கோட்டைக்குள்ளே பல இடங்களையும் சுற்றிப் பார்த்துத் திரும்பும் நேரம்.
திடீரென்று நான்கைந்து இளைஞகள் முன்னால். எவ்வளவோ கூச்சல் போட்டும் யாரும் உதவிக்கு வரவில்லை. இருவர், கணவனை அடித்து உதைத்து அவன் கை கால்களைக் கட்டி போட்ட பின் ‘இருவரையும் கொன்று கடலில் எறிந்து விடுவோம்’ என்று அச்சுறுத்தி அந்தப் பெண்ணைக் கற்பழித்து விட்டார்கள். நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலை பாவம் அந்தப் பெண்ணிற்கு. எனவே இருவரும் தங்களை அன்று இரவு தங்க ஏதேனும் ஒரு நல்ல ஹோட்டலிலாவது கொண்டு சென்று விடவேண்டும் என முறையிட ‘கல்லுக்குள் கொஞ்சம் ஈரம்’ இருந்திருக்க வேண்டும். கயவர்கள், பாதிக்கப் பட்டவர்கள் காரிலேயே டவுணில் உள்ள லாட்ஜுக்குக் கொண்டு சென்றனர். தந்திரமாகக் கயவர்களை அறைக்குக் கூட்டிக் கொண்டு போய் (இரவு மீண்டும் ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கூட அந்தக் கயவர்களுக்கு இருந்திருக்கலாம்) அவர்களை அறையில் ஆக்கிய பின், வெளிக் கதவைப் பூட்டி அந்தப் பெண் கூச்சல் போட்டு ஆட்களைக் கூட்டினார். போலீஸ் வந்தது. கையோடு கயவர்கள் பிடிபட்டார்கள். நாளிதழ்கள் பாதிக்கப்பட்ட்வர்களின் பெயரை வெளியிடாம்ல் அவர்கள் கண்ணியத்தை வெளிப்படுத்தினார்கள். பாதிக்கப்பட்ட அந்த கணவனும் மனைவியும் இன்றும் அந்தப் பயங்கரமான நாளை மறக்க முயற்சி செய்து வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
அதுபோல் சில வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடந்த மற்றொரு சம்பவம். பகல் 1 மணி. பரபரப்பான தெருவில் உள்ள ஒரு துணிக் கடை. திடீரென ஷட்டர் இறக்கப் படுகிறது. கத்தியுடன் 4 பேர் உள்ளே. வெளியே ஒருவன். யாரையும் உள்ளே விடாமல் இருக்க ஏதாவது காரணம் சொல்வதற்காக. கடையில் இருந்த பத்து பதினைந்து பேரில், ஒரு இளம் பெண்ணின் கையைப் பிடித்து கடைக்குள்ளேயே மறைவான ஒரு இடத்திற்கு இழுத்துக் கொண்டு போனார்கள். கூச்சல் போட்டவர்களை கத்தியால் மிரட்டியும் அடித்தும் மௌனமாக்கினார்கள். ஆனால், ஒரு 45 வயதுள்ள தாய், அழுவதை நிறுத்தாமல் அந்தக் கயவனிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டாள். (வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் பேரிடி.) கெஞ்சினாலும் பலனில்லை என்று தெரிந்ததும் “என்னை உபயோகித்துக் கொள் என் குழந்தையை விட்டு விடு” என மன்றாட, அந்தக் 'கல்லுக்குள்ளும் கொஞ்சம் ஈரம்' இருந்த்திருக்க வேண்டும். அவனது காமப் பேய்க்கு அந்தத் தாய் தீனி போட்டாலும் போதும்னு நினைத்திருப்பான் போலும். அந்த சம்பவத்தைப் பற்றி வாசித்த போதும், இப்போதும் நான் இறைவனிடம் வேண்டுகிறேன், “இறைவா அவர்களுக்கு விபரீத சிந்தனைகள் ஏதும் வராமல், நடந்ததெலாம் ஒரு பெரும் விபத்து என்று எண்ணி வாழச் செய்”. விவரிக்கப்பட்ட இரு சம்பவங்களிலும், பெண்கள் எடுத்த முடிவு அந்தச் சந்தர்பத்தில் எடுக்கப் படவேண்டிய முடிவுதான்.
வாகன விபத்தில் காயமடையும் போது ஒருவரை எப்படியேனும் காப்பாற்றி அவர் மனதுக்கும் உடலுக்கும் தெம்பேற்றி அவரை மீண்டும் அவரது வாழ்க்கையைத் தொடரச் செய்வது போல், இது போன்ற சம்பவங்களையும் ஒரு விபத்தாக நினைத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தத் தவறு செய்யும் கயவர்களுக்கு உரிய தண்டனையை வாங்கிக் கொடுக்க முடியும். இது போன்றத் தவறுகளைச் செய்யும் கயவர்களுக்கு, துணிச்சல் தருவது, அவர்களுக்கு இறையாகும் பெண்கள், ஒன்று, தற்கொலை செய்து கொள்வார்கள் இல்லையேல் வெளியே சொல்லாமல் நான்கு சுவர்களுக்கு இடையே வாழ்வை வாழ்ந்து தீர்ப்பார்கள் என்ற எண்ணம் தான். நம்பள்கியும் தன்னுடைய பதிவின் மூலம் சொல்ல வருவது ஒருவேளை இந்தக் கருத்தாக இருக்கலாம். உயிரா, மானமா என்றக் கட்டம் வரும் போது உயிர்தான் பெரிது என்ற யாதாத்தமான முடிவை எடுக்கத் தயங்கக் கூடாது.
சில விஷயங்களைக் கேட்கும்போது, நம் மனதில் யாரோ தீக்கங்குகளை வாரி இறைத்தது போல் இருக்கும். அந்தத் தீப்புண் ஆற நிறைய நாட்கள் வேண்டிவரும். அது போன்ற ஒரு சம்பவம் நேற்று கேட்க நேர்ந்தது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணிக்கு திருச்சூர் வானொலி நிலையத்திலிருந்து ஒலி பரப்பப்படும், ஜோய் ஆலூக்காஸ் ஸ்பான்ஸ்ர் செய்யும் ஒரு நிகழ்ச்சி. நேயர்கள் அனுப்பும் கடிதங்களை, பாலேட்டனும், ஆஷா சேச்சியும், வாசித்து வானொலி நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு நல்ல நிகழ்ச்சி. இறுதியில் அவர்கள் விரும்பும் ஒரு திரைப்படப் பாடலும் ஒலிபரப்பப்படும். வித்தியாசமான, சுவாரசியமான பல சம்பவங்களையும் நேயர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒரு நல்ல நிகழ்ச்சியானதால் நான் இதைப் பெரும்பாலும் கேட்பதுண்டு. நேற்று ஒரு கடிதம் வாசிக்கப்பட்டது.
கோழிக்கோடு அருகேயுள்ள ஒருவர் அனுப்பியது. அவர் ஒரு சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி எழுதியிருந்தார். கடந்த சில மாதங்களாக, பாவம், மனதில் போட்டுக் குமுறிக் கொண்டு இருந்திருந்தார் போலும். அவர் தன் மனதில் இருந்ததை இறக்கி வைத்துவிட்டார். இதோ, நானும் இங்கு இறக்கி பதிந்து விட்டேன். இதை வாசிக்கும் உங்கள் மனதில் ஏற்றி விட்டேன்.
சில மாதங்களுக்கு முன், கோழிக்கோடு அருகே, கன்னியாஸ்த்ரீகள் நடத்தி வரும் விடுதிக்கு, வழக்கமாக உதவித்தொகை வழங்கும் வழக்கம் உள்ள ஒரு நண்பருடன், அவர் தற்செயலாகச் சென்றிருக்கிறார். அங்கு தங்கியிருப்போர் பெரும்பாலும் வயதான அம்மாக்கள். அப்போது, கையில் ஒரு துணிப் பையுடன் யாரையோ ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயதான தாய் இவருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறார். இவர் அவரைப் பற்றி விசாரித்தபோது அங்கிருந்த கன்னியா ஸ்த்ரீகளிடமிருந்து அறிந்து கொண்டது,
“அந்தப் பெண் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். கணவன் மற்றும் 4 குழந்தைகளுடன் நல்ல மேம்பட்ட, குறையற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை. குழந்தைகளுக்கு நல்ல படிப்பு, நல்ல வேலை, எந்தக் கஷ்டமும் இல்லாத நல்ல குடும்ப வாழ்க்கை. திடீரென்று எதிர்பாராத விதமாக கணவனின் மறைவு. அதனால் இந்தப் பெண்ணின் மனநிலை பாதிப்பு. மன நோயாளியான அம்மாவைப் பாதுகாக்க வேண்டும் என்ற மனது ஏனோ அந்த 4 பிள்ளைகளுக்கும் இல்ல்லாமல் போனது இந்த அம்மாவின் துரதிர்ஷ்டம். மன நிலை சரியில்லாததால் அம்மாவினால் ஒரு சில பிரச்சினைகள் வந்திருக்கலாம், அக்கம்பக்கதிலிருந்து புகார்கள் வந்திருக்கலாம். பிள்ளைகளின் மனைவிகள் இதை எல்லாம் மன்னிக்க முடியாதக் குற்றமாக நினைத்திருக்கலாம், சொல்லியிருக்கலாம். இந்த 4 பிள்ளைகளும் அம்மவை அழைத்துக் கொண்டு ரயிலில் ஏறியிருக்கிறார்கள். அம்மாவுக்கு சாப்பாடு வாங்கி அதை சாப்பிடக் கொடுத்திருக்கிறார்கள். சிறிது நேரத்தில் அம்மா மயங்கி விட்டார். உடனே 4 பேரும் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.வீரியமுள்ள மயக்க மருந்தாக இருந்திருக்க வேண்டும். அவருக்கு நினைவு வந்த போது, அவர் கோழிக்கோடு ரயில்வே ஸ்ட்ஷனில். பதட்டத்துடன் இறங்கி அவருக்குத் தெரிந்த பாஷையில் ஏதேதோ சொல்லி அலைந்திருக்கிறார். பகல் நேரத்தில் அவரைப் பார்த்த பரிதாபக் கண்கள் சிலதில் எங்கோ காமப் பேய் ஒளிந்திருந்திருக்க வேண்டும்.
கைகளிலும், கால்களிலும் வெண்குஷ்ட்த்தால் பாதிக்கப்பட்ட அந்த 55 வயது அம்மாவை, இரவில், சில காமவெறியர்கள், மறைவில் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சமயம், நல்ல மனதும், சமயோசிதமும் உள்ள ஒருவர் தலையிட, ரயில்வே போலீஸ் வந்து அந்த அம்மாவை மருத்துவ மனைக்குக் கொண்டுச் சென்று காப்பாற்றி உள்ளார்கள். அதன் பின் இங்கு கொண்டுவந்து சேர்த்தனர். (பாருங்க, எந்த அளவுக்கு இருக்கு நம்ம சமூகம்! ஒரு மிருகத்த விட கேவலமான மனோநிலை. 5, மாசமோ, 5 வயசோ, 50 வயசொ 75 வயசானாலும் இந்தக் காமவெறியர்களுக்கு கொத்திக் கிழிப்பதில் என்னதான் கிடைக்கிறதோ?) பாவம், மன நிலை சரியில்லாததால் அந்த அம்மாவிற்கு இப்போதும் தெரியாது தன் பிள்ளைகள் தன்னை கொல்லாமல் கொன்றிருக்கிறார்கள் என்று. இப்போதும், அவர்கள் வருவார்கள், திரும்பக் கொண்டு போவார்கள் என்று அந்தத் தாய் மனம் காத்துக் கொண்டே இருக்கிறது.”
எனக்கு இதைக் கேட்டவுடன், இதோ, இப்போது இதை எழுதும் போது, என் வாயில் “தூய தமிழில்” கெட்டவார்த்தைகள் வருகிறது. ஆனால், தில்லைஅகமும், தமிழ்மணமும் நாறிவிடக் கூடாது என்று மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு எழுதுகிறேன். அந்த 4 நாய்களும் என்னதான் அவர்கள் தங்கள் குடும்பத்துடன் நல்ல வாழ்க்கை வாழ்வதாகச் சொல்லப்பட்டாலும், தெரு நாய்களை விடக் கேடுகெட்ட வாழ்க்கைதான் அது.
“டேய், அயோக்கிய ராஸ்கல்களா, நீங்கள் மனுஷங்களாடா? எப்படிடா உங்களுக்கு மனசு வந்திச்சு, இந்த மாதிரி செய்ய? உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்காடா? உங்களால் நிம்மதியா தூங்க முடியுதாடா? சாப்பாடு தொண்டைக்குள்ள இறங்குதாடா? உங்களுக்கும்தானேடா குழந்தைங்க இருக்காங்க? அவங்க, உங்க வயசான காலத்துல உங்களுக்கு வைக்கப் போறாங்கடா ஆப்பு. தன் வினை தன்னைச் சுடும். ஞாபகம் வைச்சுக்கோங்க .....டேய் பாவிங்களா உங்கள்ல கொஞ்சமாவது மனசாட்சி உள்ள ஒருத்தனாவது வந்து உங்க அம்மாவைக் கூட்டிட்டு போங்கடா. மனநிலை சரியில்லாத, அழக்கூடத் தெரியாமல் தவித்து, உங்களின் வருகைக்காகக் காத்திருக்கும் அந்தத் தாயின் ஏக்கம், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பொசுக்கிவிடும். மன நிலைக்கு நல்ல சிகிச்சை கொடுத்து உங்க கூட வைச்சுக் காப்பாத்த முடியலனாலும், உங்கள் பக்கத்துல உள்ள முதியோர் இல்லத்துலயோ, மனநிலை காப்பகத்துலயோ வைச்சாவது காப்பாத்துங்கடா? தாயிற் சிறந்தக் கோயிலும் இல்லை!!....அது தெரியுமா உங்களுக்கு? .........
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மகன்களை நினைக்கையிலே!!!!
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
சாதிகள் இல்லையடி பாப்பா
செத்தப்பிறகும் சாதியா? ஏங்க இருக்கும்போதுதான் சாதி பார்த்து, பார்த்துச் சீரழிந்துகொண்டு இருக்கிறோம். ஜப்பான்காரனும், அமெரிக்காகாரனும் என்னெல்லாமோ ஆராய்ச்சி பண்ணிக், கண்டுபிடித்து எங்கேயோப் போய்கொண்டு இருக்கும்போது நாம் மட்டும் என்னடானா, இருக்கின்ற சாதிகள் பத்தாது என்று இன்னும் புதுசா ஏதாவது சாதி சேர்த்துக்கலாமானு ஆராய்ச்சி பண்ணிக்கொண்டு இருக்கிறோம். சாதிகள் பேரில் புதிய, புதிய கட்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. சாதி, மதச் சண்டைகளுக்கு குறைச்சலே இல்லை. இதுல வேற நாம் கட்டுரை எழுதும்போது, இந்தியாவில் பல சாதிகளும், மதங்களுமிருந்தாலும் இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக சகோதர, சகோதரிகளாக வாழ்ந்து வருகின்றோம்னு சும்மானாலும் ஜம்பம் அடித்துக் கொள்ள வேண்டியது. காதுல பூ சுத்தும் வேலை.
இன்றைய சூழலில் (ஓரளவிற்கு) நகரங்களைத் தவிர, இன்னும் கூட இந்தியக் கிராமங்களிலும், டவுண்களிலும், வேற வேற ஜாதிப் பெண்ணும், பையனும் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்றால் அந்தப் பையனுக்கும், பெண்ணிற்கும் சரி, அவர்கள் குடும்பத்தாருக்கும் சரி, உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அதில் ஒருவர் முற்பட்டவராகவோ, மற்றொருவர் பிற்பட்டவராகவோ, இல்லை, ஒருவர் பிற்பட்டவர், மற்றொருவர் தாழ்த்தப்பட்டவர் (எல்லாம் நம் சமூகம் வைத்தப் பெயர்கள்தான்) என்றாலோ, பிரச்சினை அம்மா, அப்பாவின் உயிர் பலியோடு முடிவதில்லை. இரண்டு கிராமங்கள், இரண்டு சமுதாயங்களின், உறாவினர்களின் சண்டையில் முடிந்து பல உயிர்களின் பலியில்தான் முடிகிறது. இதைத்தான் நாம் சமீபத்தில் இளவரசன், திவ்யாவிற்கு நடந்த சம்பவத்தின் மூலம் அறிந்தோமே. எத்தனையோ இளவரசன் திவ்யாக்கள் பலியாகித்தான் இருக்கிறார்கள். உயிருடன் இருக்கும்போது சாதி பார்த்து, அதனால் உயிரழந்து, பொதுவாக்கப்படப்போகிற மயானத்தில்(!?) எரிக்கப்படுதல், இல்லைப் புதைக்கப்படுதல்.!!! என்ன ஒரு முரண்பாடு!!? விந்தையான சமூகம்!!!
உயிரோடு இருக்கும் போது நடக்கின்ற சாதி வெறியை, சாதிச் சண்டைகளையும், சாதியையும் ஒழிக்காதவர்கள், ஏதோ செத்தப்பிறகாவது, எரிப்பதற்கான சாதி அடிப்படையில் இருக்கும் மயானங்களைப் பொதுவாக்க நடவடிக்கை எடுக்கிறார்களே என்று மனதை சமாதானப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும் போல. எரித்தபின்னோ, புதைத்து அழுகிய பின்னோ கிடைக்கும் எலும்புத்துண்டுகள் எந்த சாதியைச் சேர்ந்தவை? யாராலும் சொல்ல முடியுமா?
பிறக்கும் போதே சாதி ஒட்டிக்கொள்கிறது. அதற்குப் பிறகு அது விடாக்கண்டனாக பள்ளியில், கல்லூரியில், வேலையில் சேரும்போதும் சாதி கர்ணகவசம் மாதிரி ஒட்டிக் கொண்டுதான் வருகிறது. இங்கெல்லாம் அரசு இந்த சாதி வேற்றுமையை ஒழித்து, பொதுவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கலாமே? முளையிலேயேக் கிள்ளி எறிந்தார்போல ஆகுமே.
கமலஹாசன் தன் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்த போது “சாதி” என்று இருந்த இடத்தில், பள்ளி நிர்வாகம் சாதியைத்தான் குற்ப்பிட வேண்டும் என்று சொன்னபோதும் கூட ‘மனித சாதி’ என்றுதான், தான் எழுதுவேன் என்று குறிப்பிட்டதாக எங்கோ படித்த நினைவு. இது போன்ற ஒரு சிந்தனை உள்ளவர்கள் தமிழகத்தில் பெருகி வரவேண்டும். சாதியைக் குறிப்பிடாதவர்களுக்கு இடஒதுக்கீடு, கலப்புத் திருமணம் செய்பவர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் இடஒதுக்கீடு என்று அரசே செய்ய முன்வந்தால் கண்டிப்பாக இனிவரும் காலத்தில் சாதி ஒழிந்து போக வாய்புண்டு. ஒன்று, அரசு சாதியைக் கிள்ளி எறியவேண்டும். இல்லையென்றால் மக்கள் புரட்சி எழ வேண்டும். அப்பொழுதுதான் இதற்கு ஒரு முடிவு வரும். ஆனால், அரசாட்சி செய்யும் அரசியல் வாதிகளும், மக்களுமே இந்தச் சாதியை வைத்து சித்து விளையாட்டு விளையாடிக் கொண்டு இருக்கும்போது, அரசியல் சட்டம் வேடிக்கப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறதே தவிர நாடு உருப்படுவதற்கானப் பாதையைக் காட்டுவதாகத் தெரியவில்லை. ஜோக்காளி, நடிகர் சூர்யா பேசியதைப் பதிவு செய்து பதிவில் கேட்டது போல் “இந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவது”? ஒளிமய(யான)மான எதிர்காலம்??!!
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
““லல்லு ப்ரசாத் யாதவ் ஜெயிலில். அவருக்கு என்ன வேலை தரலாம் என்று அதிகாரிகள் யோசித்து, லாலு, சட்டம் படித்தவர் என்பதால் மற்ற கைதிகளுக்கு பாடம் சொல்லித் தரும் பணியை அவருக்குத் தரலாம் என தொடக்கத்தில் நினைத்தனராம். ஆனால், கைதிகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பால், லாலுவுக்கு பாதுகாப்பு பிரச்சனை வரலாம். மேலும், லாலு அவர்களுக்கு அரசியல் பாடம் எடுக்கிறார் எனப் புகார்கள் வரவும் வாய்ப்புண்டு. எனவே, செடிகளுக்கு நீர் ஊற்றும் பணியை அவருக்குத் தந்ததாகச் செய்தி.
சட்டம் படித்தவரே இப்போது ஜெயிலில்.!! அப்படி இருக்க அவர் எப்படி கைதிகளுக்குப் பாடம் கற்பிக்க முடியும்?! ஒருவேளை சட்டம் படித்திருப்பதால் அதில் உள்ள ஓட்டைகளைப் புரிந்து கொண்டு தப்பித்துவிடலாம் என்பதால் ஊழல்கள்? ஆனால் அதே சட்டம்தானே அவரை இன்று ஜெயிலில் போட்டிருக்கிறது என்று நீங்க கேக்கலாம்....அடேயப்பா என்ன ஒரு புத்திசாலித்தனமான கேள்வி!....Good Question… அப்படி எல்லாம் நடந்திருச்சுனா நம்ம நாடு எங்கேயோ போயிருக்கும்ல... அவர் இன்று உள்ளே இருப்பது சட்டம் தன் கடமையை செய்ததால் அல்ல......அரசியல் காரணங்களினால், விரோதங்களினால் தான்.......அரசியலப்பா...அரசியல்! அது சரி, இவரு பாடம் கற்பித்தால் அந்தச் சட்டத்தினால் எப்படித் தப்பிக்கலாம்னு சொல்லிக் கொடுப்பாரோ?!!!
அது போகட்டும், லல்லு மட்டுமா என்ன? எத்தனையோ அரசியல்வாதிகள் ஊழல்களில் சிக்கி ஜெயிலுக்குப் போனதுண்டு. சமீபத்தில் 2G ஊழல், குவாரி ஊழல் இப்படி பல. நாம் அறியாததா என்ன? போனமா, வந்தமா என்று வெளியில் வந்தவர்களும் உண்டு. பெயர் அடிபட்டாலும் ஜெயிலுக்குப் போகாதவர்களும் உண்டு. பெரிய ஊழல், கொலைகள் செய்யும் நபர்கள் வெளியில் சுதந்திரமாக நடமாட, வறுமையில், அன்றாடம் காய்சிகளாக, பசியின் கொடுமையால், ஏதோ ஒரு கணத்தில் திருடுபவர்கள் ஜெயிலில். அதைவிடக் கொடுமை எந்தத் தவறுமே செய்யாத பலர் ஜெயிலில் இருக்க நிஜக் குற்றவாளிகள் வெளியில் உல்லாசமாக. நலிந்தவர்களுக்கு ஒரு சட்டம்; வலியோருக்கு ஒரு சட்டம். இப்படிக் குற்றமே செய்யாதவர்கள் ஜெயிலுக்குப் போய் பல வருடங்கள் ஜெயில் வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, வருடங்களுக்குப் பிறகு நிரபராதிகள் என்று தீர்ப்பு எழுதப்பட்டு வெளியில் வருவது எவ்வளவு கொடூரமானது? எத்தனை வருடங்கள் அவர்களது வாழ்வில் இழப்பு! குடும்பத்திலிருந்து பிரிந்து, மன வேதனை. நிரபராதி என்று சட்டம் தீர்ப்பு சொல்லும் முன்போ, சொல்லும் சமயமோ அந்த நிரபராதி ஜெயிலிலேயே இறப்பதும் உண்டு.
இந்த இடத்தில், லியோ டால்ஸ்டாயின் ஒரு அருமையான கதை நினைவுக்கு வருதிறது. “GOD SEES THE TRUTH, BUT WAITS”. கதையின் நாயகன் அக்ஸியோனோவ், அவன் செய்யாத ஒரு கொலைக் குற்றத்திற்காக, அவன் பையில் ரத்தக் கறை படிந்த ஒரு கத்தி இருப்பதை மட்டும் வைத்துக் கொண்டு, அவன் தான் குற்றவாளி என்று சட்டம் அவனை ஜெயிலில் தள்ளுகின்றது. 26 வருடங்கள் ஜெயில் வாழ்க்கை. ஜெயிலிலும் நல்லவனாகவே இருக்கிறான். ஜெயில் அதிகாரிகளுக்கும் அவனைப் பிடித்து விடுகின்றது. என்ன பிரயோஜனம்? சில வருடங்களில் ஜெயிலுக்கு புது குற்றவாளிகள் வரும்போது அதில் ஒருவனாக வரும் மாகர்செமியோனிச்சும் இவனுடைய ஊராக இருப்பதால் அவனுடன் பேசும் போது அவன் தான் உண்மையானக் கொலைக் குற்றவாளி என்பதைத் தெரிந்து கொள்கிறான். கோபம் வருகிறது. ஆனால், பிரார்த்தனை செய்து மனதை அடக்குகிறான். இனி வெளியில் போயும் பயன் இல்லை என்பதால். மாகர் ஜெயிலில் இருந்து தப்பித்துச் செல்ல மண்ணைத் தோண்டி வழி உண்டாக்குகின்றான். ஜெயில் அதிகாரிகளுக்கு இது தெரியவர, அந்த மண்ணைத் தோண்டியது யார் என்று அறிய, நேர்மையான அக்ஸியோனோவிடம் அது பற்றி விசாரிக்கின்றனர். ஆனால், அவனுக்கு அது மாகர் தான் என்று தெரிந்திருந்தாலும் காட்டிக் கொடுக்கவில்லை. இதை அறிந்த மாகருக்குக் குற்ற உணர்வு வந்து அவன் அக்ஸியோனோவிடம் மன்னிப்புக் கோரி, தன் குற்றத்தை அதிகாரிகளிடம் ஒப்புக் கொள்ளப் போவதாகவும், அதனால் அக்ஸியோனோவ் விடுதலையாகலாம் என்றும் கூறுகிறான். ஆனால், அக்ஸியோனோவ் மறுத்துவிடுகிறான். மனைவி இறந்தாயிற்று, குழந்தைகளுக்கு அவனை நினைவு இல்லை என்று இருக்கும் போது இவன் வெளியில் போய் என்ன செய்வது என்பதால் மறுத்து “கடவுள் உன்னை மன்னிப்பாராக” என்றுக் கூறிவிடுகிறான். ஆனால், மாகர் தன் குற்றத்தை அதிகாரிகளிடம் ஒத்துக் கொண்டு, அதிகாரிகள் அக்ஸியோனோவை விடுதலை செய்யும் ஆர்டருடன் அக்ஸியோனோவைக் காண வரும்போது இறந்து கிடக்கும் அக்ஸியோனவைத்தான் அவர்களால் காணமுடிகிறது. இதற்குப் பெயர்தான் “அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்”?
மன்னிப்பு என்ற ஒரு வார்த்தை ஒருவனுக்குக் குற்ற உணர்வை வரவழைத்து அவனைத் திருந்தச் செய்கிறது என்றால் அந்த வார்த்தையும், அந்த மனம் உள்ளவர்களும் மிகச் சிறந்தவர்கள்தான். மன்னித்தல்தான் சிறந்த தர்மம்; மறப்போம் மன்னிப்போம் என்ற தத்துவத்துடன் அக்ஸியோனோவைப் போல வாழ்பவர்கள் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சட்டம் சொல்லுவதென்னவோ, குற்றவாளிகள் தப்பித்தாலும், நிரபராதிகள் தண்டிக்கப்படவே கூடாது என்றுதான். இதைத் தானேயா நமது திரைப்படங்களில் ஹீரோக்கள் வசனமாகப் பேசி வருகிறார்கள். நிரபராதிகளில் ஒரு சிலர், நமது திரைப்படங்களில் வருவது போல் பழிவாங்கும் உணர்வுகளோடு வெளியில் வந்து, தான் ஜெயிலுக்குப் போக காரணமாக இருந்தவரை பழிவாங்குகிறார்கள். இல்லையேல், தான் நிரபராதியாக இருந்தும் தண்டிக்கப்பட்ட காரணத்தால் சமுதாயத்தின் மேல் உள்ளக் கோபத்தால் குற்றங்கள் செய்து, திரும்பவும் ஜெயில் வாழ்க்கைக்குப் போகவும் செய்கிறார்கள். யோசிக்கவே மாட்டார்களா இவர்கள்? யாருக்கு பாதிப்பு? நமது கேப்டன் ரமணாவில் சொல்லுவாரே “எனக்குத் தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை ‘மன்னிப்பு’” என்பதைப் போல். இதைக் கேட்கும் போது இதுவும் சரிதான் என்று தோன்றுகிறது. அக்ஸியோனோவ் போல் இருப்பவர்கள் அப்படி இருக்கட்டும். கேப்டன் போல் உள்ளவர்கள் இப்படிச் செய்யட்டும். இங்கே இரு தரப்பினருக்கும் தண்டனைக் கிடைக்கத்தான் செய்கிறது. ஒருவனுக்கு மரண தண்டனை. ஒருவனுக்கு மரணம் வரை தண்டனை. (குற்ற உணர்வுடன் வாழ்ந்து).
சட்டத்திலும் பல ஓட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன. குற்றம் செய்தவர் எந்த அளவிலான குற்றம் செய்திருக்கிறார் என்பதைப் பொருத்துத்தான் தண்டனை வழங்கப்பட வேண்டும். இதோ இந்தச் சம்பவத்தைப் படித்தால் உங்களுக்கே புரியும். அருணா ஷன்பாக் என்னும் ஒரு பெண் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். 40 வருடங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்ஸாக வேலை செய்து வந்தார். அங்கு பணிபுரிந்த ஒரு டாக்டரைக் காதலித்து அவர்கள் இருவரும் திருமணம் செய்ய இருந்த சமயம், ஒரு நாள் இரவு, அந்த ஆஸ்பத்திரியில் பணிபுரியும் வால்மீகி என்ற மொள்ளமாரி – இந்த நாய்க்கெல்லாம் வால்மீகினு ஒரு பேரு-வார்ட் பையன் (சுத்தம் செய்பவன்?!) அருணா உடை மாற்றும் ரூமிற்குச் சென்று, அவரை நாயைக் கட்டும் செயினால் கழுத்தை இறுக்கி, மிகவும் குரூரமாகக் கற்பழித்தான். கழுத்தை இறுக்கியதால், அருணாவிற்கு மூளைக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதிப்பு அடைந்ததாலும், செர்விகல் கார்ட் பாதிபடைந்ததாலும் அவள் கழிந்த 40 வருடங்களாக “Living Vegetable” ஆக – ஒரே பெட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார். அந்த ஆஸ்பத்திரியில் உள்ள கருணை உள்ளங்களின் அரவணைப்பில் இருந்து வருகிறார். அவரது கண்கள் இயல்பாக இருந்தாலும் பார்வை இழப்பும் உள்ளது. The asphyxiation cut off oxygen supply to her brain, resulting in brain stem contusion injury and cervical cord injury apart from leaving her cortically blind. அந்த கேடுகெட்ட மொள்ளமாரிக்கு 7 வருடங்கள்தான் தண்டனை. அதன் பிறகு வெளியில் வந்து, இந்த வெட்கம் கெட்டவன், மனசாட்சி இல்லாத மனித மிருகம் அவன் தன் குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான். இங்கு தண்டனை யாருக்கு? ஒரு குற்றமும் செய்யாத, வாழ்வைத் தொலைத்த அந்தப் பெண்ணிற்கு. அதுவும் 40 வருடங்கள். படுத்த படுக்கையாக....... இப்படிப்பட்ட ஓட்டைகளுடன் சட்டம் இருப்பதால்தான், மக்களுக்குக் குற்றம் செய்வதில் பயம் என்பதே இல்லாமல் போய்விடுகிறது. குற்றங்களும் பெருகுகிறது என்பதுதான் மிக்க் கேவலமான, கசப்பான உண்மையும் கூட. சட்டங்கள் இறுக்கப்பட வேண்டும்.
பத்திரிகையாளரான அந்தப் பெண்ணின் தோழி, பிங்கி விரானி, அருணாவின் அவஸ்தையைக் கண்டு அவரைக் கருணைக் கொலை (Mercy Killing/Euthanasia) செய்ய அனுமதிக்க வேண்டி சுப்ரீம் கோர்ட்டிற்கு மனு கொடுக்க, கோர்ட்டோ அதை நிராகரித்து விட்டது. ஆனால், கோர்ட் Passive Euthanasia வை அனுமதித்ததாகத் தெரிய வருகிறது. இது போன்ற சித்திரவதைகளை அனுபவிப்பவர்களை அதிலிருந்து மீட்கக் கூட விடாமல் நம் சட்டம் தடையாக இருக்கிறது. ஆனால், கருணைக் கொலையைச் சட்டமாக்குவது நம் நாட்டிற்குச் சரிப்பட்டு வராது. ஒன்று, நம் மக்கள் இன்னும் அந்த அளவிற்கு மனப்பக்குவம் அடையவில்லை. ம்ற்றொன்று, அந்தச் சட்டத்திலும் ஏதாவது ஓட்டைகளைக் கண்டுபிடித்து, இல்லையென்றால் ஓட்டை போட்டு தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகள் நம் நாட்டில் அதிகம். நம் மக்கள் புத்திசாலிகள் என்று பெயர் எடுத்தவர்களாயிற்றே.
ஊழல்கள் செய்வது யாருக்கும் தெரியாத வரை எல்லாம் சரி. ஆனால், ஊர், உலகம் அறியும்போதாவது, ஊடகங்களில் பெயர் அடிபட்டு கிழிபடும்போதாவது, ஜெயிலுக்குப் போகும்போதாவது, அவர்களது மனசாட்சி அவர்களோடு சிறிதாவது பேசாதா? உயர்நீதி மன்றங்களையும், உச்சநீதி மன்றங்களையும் விடுங்கள். இவர்களின் மனதிற்குள்ளும் இருக்கும் மனசாட்சி என்ற கோர்ட்டில் கூடவா, படங்களில் வரும் கோர்ட் ஸீனில் எல்லாம் நீதி தேவதைகளின் கண்கள் கட்டியிருப்பது போல, மனசாட்சித் தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருக்கிறது?!
எப்போது இவர்கள் எல்லோரும் திருந்துவார்கள்? இத்தனை அட்டூழியங்களுக்கிடையிலும் “இந்தியா வல்லரசு நாடாகும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று புளுகிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சட்டத்தின் பிடியில் சிக்காத, மனசாட்சி இல்லாதவர்கள், ஊழல் செய்பவர்கள், கொலைகாரர்கள், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை உள்ள மனித மிருகங்கள், பொறம்போக்குங்க அதிகமாக உள்ள இந்த நாடு வல்லரசானால், அது உலகிற்கே ஏற்படும் ஒரு சாபக்கேடு. நாம வல்லரசு எல்லாம் ஆக வேண்டாம். ஜப்பான், நார்வே, ஸ்வீடனில் எல்லாம் ஒரு லட்சத்தில், 50 பேர்தான் குற்றவாளிகளாம். அது போல ஒரு நல்லரசானாலே போதும்.
சட்டத்தில் உள்ள இந்த ஓட்டைகளை அடைக்க சட்ட வல்லுநர்களும், அரசும், காவல் துறையினரும், பொது மக்களும், நேர்மையுடன் முயன்றால், நம் நாடு நீதிக்குத் தலை வணங்கும் நாடாக மாறுவது உறுதி. Idealistic Thought and Dream???!!!!. கேக்க நல்லாத்தான் இருக்கு. அதெல்லாம் சரி, இந்தச் சட்டத்தில உள்ள ஓட்டைகளை அடைக்கச் சட்டம் எங்கருக்குது? சட்டம் யார் கையில? தேடுங்க! தேடிப் பாருங்க! தேடிக்கிட்டே........... இருங்க!!!!!........கிடைக்குன்றீங்க????!!!!!!!
-------------------------------------------------------------
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் ; அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்!
இந்த சம்பவத்தைப் படியுங்கள். இந்தத் தலைப்பின் அர்த்தம் புரியும் உங்களுக்கு. பெண்களுக்கான ஓர் எச்சரிக்கை!! ஆண்களுக்கும்தான், உங்கள் வீட்டுப் பெண்களை ஜவுளிக் கடைக்கோ, தையல் கடைக்கோ அழைத்துச் செல்லும்போது அவர்களிடம் எச்சரிக்கை மணி அடிப்பதற்கு.
திருச்சூரின் அருகே உள்ள ஒரு தையல் கடை. அதை ஒரு பெண்மணி நடத்தி வந்தார். பெண்களால் பெண்களுக்காக நடத்தப்பட்ட ஒரு கடை. அந்தப் பெண்மணியின் மகன் இப்போது போலீஸ் பிடியில். எதற்கு? அந்தப் பையன் பெயர் சிஜேஷ். வயது 27. சாஃப்ட்வேர் இஞ்சினியர் (Software Engineer). ஆனால், செய்த குற்றமோ மகாக் கேவலமான ஒரு குற்றம். நீங்கள் புத்திசாலிகள்!! ஊகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
அங்கு தைக்கக் கொடுக்கும் பெண்கள், தைத்ததை வாங்க வரும் போது தைத்த அளவு சரியாக இருக்கிறதா என்று போட்டுப் பார்ப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. (இப்போது இது புதிய பழக்கம் போல. பண்டெல்லாம், பெண்கள் வீட்டுக்கு வந்துதான், தைத்ததைப் போட்டுப் பார்ப்பது வழக்கம், என் அறிவுக்கு எட்டிய வரை). அப்படி அவர்கள் துணி மாற்றும் இடத்தில், இந்தக் கேடு கெட்டப் புண்ணியவான், அதுவும் தொழில் நுட்பம் தெரிந்தவன் ஆகையால், தனது மூளையை வக்ரபுத்திக்கு அடிமையாக்கி அங்கு ஒரு கேமராவை, அம்மா உட்பட, யாருக்கும் தெரியாமல் ஃபிக்ஸ் செய்திருக்கிறான். இத்தனை நாட்களும் அதன் வழியாக பதிவாகும் படங்களைக் கண்டு களித்திருக்கிறான். எப்படி இப்படிச் செய்யத் தோன்றியது அவனுக்கு? அவனுக்குக் கூடப் பிறந்த சகோதரிகள் யாரும் இல்லையா? ஏன் அவன் அம்மாவே ஒரு பெண்தானே! இது அங்கு வேலை செய்யும் பெண்களுக்குத் தெரிய வர, அவர்கள் போலீஸுக்குத் தெரியப்படுத்த, இப்போது அவன் அம்மாவை விட்டு, விய்யூரில் மாமியார் வீட்டில் (விய்யூர் போலீஸாரின் பிடியில்).
பெண்களே! ஜாக்கிரதை!. இது போல, தைத்தத் துணிகளை அளவு சரியா என்று கடையிலேயே போட்டுப் பார்க்க நேர்ந்தால், சுற்றும் முற்றும் ஏதாவது சந்தேகப்படும்படி உள்ளதா என்று நன்றாகச் சோதித்து விடுங்கள். எந்தப் புத்துல என்ன பாம்பு இருக்கோ! பாம்புதானே படம் எடுக்கும்...அதான்......இது தையல் கடைகளுக்கு மட்டுமல்ல, பெண்களாகிய நீங்கள் ஜவுளிக் கடைகளுக்கும் அடிக்கடி போகக் கூடியவர்கள் தானே! அங்கும் இப்போதெல்லாம் “Trial Room” என்று ஒன்று இருக்கிறதே.! அங்கும், நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், உங்களுக்காக இந்தப் பதிவு. பொது இடங்களில் பெண்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆண்களுக்கு எந்தப் பாம்பைப் பற்றியும் கவலை இல்லை. எந்தப் பாம்பும் அவர்களைப் படமும் பிடிக்காது.
இந்தச் சம்பவம், தையல் கடை நடத்தும் பெண்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணிதான். பெண்களே நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் வீட்டிலுள்ள எந்த ஆண் வேண்டுமென்றாலும் பாம்பாக இருக்கலாம். ‘புத்து’ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொளுத்திப் போட்டுவிட்டேனோ?!! பரவாயில்லை நாரதர் கலகம் நன்மையில்தான் முடியும். பெண்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள் இல்லையா?! Trial Rooms உள்ள ஜவுளிக் கடைகளை நடத்தும் ஆண்களுக்கும் இது ஓர் எச்சரிக்கைதான். இந்த லோகத்துல எதையுமே, யாரையுமே நம்ப முடியலையேப்பா!!
ஏமாறாதே......ஏமாற்றாதே..
இதுவரை நம்முடைய மின் அஞ்சல்(E.mail) வழியாகவும், மொபைல் வழியாகவும் வந்து கொண்டிருந்த இணையக் குற்றங்கள் (cyber crimes) இப்போது முகநூல் (Face Book) வழியாகவும் நிறையவே வர ஆரம்பித்து விட்டது. நம் மக்கள் எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை என் நண்பர் ஒருவருக்கு முகநூல் வழியாக வந்த இந்த மின் அஞ்சலும் அதற்கு அவர் கொடுத்த பதிலும், தப்பித்ததையும் என்னால் முடிந்த வரை தமிழில் மொழி பெயர்த்து இங்கு கொடுத்துள்ளேன்.
மாக்ஸ் ப்ரிசியஸ்
ஹலோ, மை டியர், இந்த நாள் இனிய நாளாகட்டும். நீங்கள் அங்கு நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். என் பெயர் ப்ரிசியஸ் மாக்ஸ்வெல். உங்கள் profile பார்த்துப் பிடித்து உங்களுடன் நட்பு கொள்ளலாம் என்ற ஆர்வத்தில் உங்களுக்கு எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கும் ஆர்வம் இருந்தால் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள உதவியாக எனது இந்த இமெயில் முகவரிக்குத் ************* தொடர்பு கொள்ளலாம். நான் எனது ஃபோட்டோக்களை அனுப்பி என்னைப் பற்றி எல்லாம் தெரியப்படுத்துகிறேன். நன்றி, கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.
***************************************************************************
ப்ரிசியஸ் மாக்ஸ்வெல், உங்கள் மெயில் பார்த்தேன். இனி வரும் நாட்களில் நாம் நமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வோம். உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்
********************************************************************************
அன்புள்ள,
என்னுடைய வேண்டுகோளை ஏற்று பதில் கொடுத்ததற்கு மிக்க நன்றி. இன்று நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? அங்கு உங்கள் சூழலும், எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். என் பெயர் ப்ரிஷியஸ் மாக்ஸ்வெல். நான் சென்ட்ரல் ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டாவைச் சேர்ந்தவள். எனது வயது 24. 5 அடி 8 இன்ச் உயரம். மணமாகவில்லை. நல்ல நிறம்.. கறுப்புத் தலைமயிர். பழுப்பு நிறக் கண்கள்.
அரசியல் சூழல் காரணமாகவும், உள்நாட்டுப் போர் காரணமாகவும் கடந்த சில வருடங்களாக நான் செனகல் என்னும் ஊரில் இருக்கிறேன். எனது தந்தை ************* ருவாண்டாவின் தலை நகரமாகிய சிகாலியில் உள்ள ஒரு Steel Industrial Company யின் மானேஜிங்க் டைரெக்டராக வேலை பார்த்து வந்தார். என் அன்பான அப்பா, அம்மா, தங்கை எல்லோரும் ஒரு நாள் காலை புரட்சியாளர்களால் கொல்லப்பட்டனர். நான் மட்டும்தான் தப்பிப் பிழைத்து செனகலுக்கு வந்து, இங்கு (United Nation Refugee Camp) அகதிகள் முகாமில், Reverend Pastor ன் கவனிப்பில் இருந்து வருகிறேன். இப்போது அவருடைய கணிணியை உபயோகப்படுத்தித்தான் இந்த மெயிலை உங்களுக்கு அனுப்புகிறேன்.
நான் எனது எந்த உறவினரையும் அணுக முடியாத நிலையில் இருக்கிறேன். ஏனென்றால் அவர்களும் போரின் இடையில் ஊரை விட்டு ஓடி விட்டார்கள். இப்போது எனக்கு இருக்கும் ஒரே நபர், இந்த அகதிகள் முகாமில் இருக்கும் MISSION SAVIOR CHURCH ன் pastor Reverend ***************. அவர் மிகவும் நல்லவர். என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் நான் அவருடன் வசிக்கவில்லை. காரணம் இங்கு ஆண்களுக்குத் தனி விடுதி, பெண்களுக்குத் தனி விடுதியாக உள்ளதால் நான் பெண்களின் விடுதியில் இருக்கிறேன்.
The Pastors Tel number is ******************* நீங்கள் இந்த நம்பருக்கு அழைக்கலாம். அவர்தான் எடுப்பார். அவரிடம், என்னுடன் பேச விரும்புவதாக்ச் சொன்னால் என் விடுத்திக்கு அந்த அழைப்பை அனுப்புவார். இங்கு நான் அகதியாக இருப்பதால் எனக்கு எந்த உரிமையும் கிடையாது. அகதிகளாகிய எங்களுக்கு இந்த முகாமை விட்டு மேலதிகாரிகளின் அனுமதி இல்லாமல் வெளியே செல்ல முடியாது. இது ஜெயில் போலத்தான். ஆனால் நான் இறைவனின் அருளால் இந்த முகமை விட்டு சீக்கிரமே விடுவித்திக்கொள்வேன் என்று நம்புகிறேன். இதை தயவு செய்து உங்களைப் புண்படுத்துவதாக நினைத்து கொள்ளாதீர்கள். எனக்கு இங்கு இந்த முகாமில் மிக வேதனையான சூழலாக இருப்பதால்தான் உங்களைத் தொடர்பு கொள்கிறேன். நாம் இதற்கு முன் சந்தித்ததில்லைதான். ஆனால் உதவி பெறவேண்டி தேடியபோது உங்கள் profile பார்த்து நீங்கள் மிகவும் பொறுப்பானவர் என்பதை அறிந்து, நான் உங்களை மிகவும் நம்புவதால், நீங்கள் என்னைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள்தான் சரியான நபர் என்பதால்தான் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.
நான் உங்களிடம் எனது பரம ரகசியத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். தயவு செய்து நீங்கள் என்னிடம் பொறுப்புடனும், வெளிப்படையாகவும் உங்கள் profile ல் உள்ளது போல் இருக்க வேண்டுகிறேன். உங்களுக்கு இப்படி நான் எழுதுவது வியப்பாக இருக்கலாம். ஆனால், மிக மிக அவசரத் தேவையாக இருப்பதால் நீங்கள் இதில் உடனேயே தலையிட்டு எனக்கு உதவுமாறு வேண்டுகிறேன். கடவுளின் அருளால், நீங்கள் நேர்மையாகவும், பொறுப்பாகவும் இருப்பீர்கள், என்னை ஏமாற்ற மாட்டீர்கள் என்று உங்களை மிகவும் நம்புகிறேன்.
எனது தந்தை, லண்டனில் ஒரு பெரிய வங்கியில் (Royal Bank Of Scotland) ல் அவர் உயிரோடு இருந்த போது பணம் சேமித்திருந்தார். என்னுடைய பெயரைத்தான் அவர் அடுத்த nominee ஆகக் கொடுத்திருந்தார். இதைப் பற்றி நான் யாரிடமும் கூறவில்லை. Reverend ***************** இடம் மட்டும், அவரின் பாதுகாப்பில் உள்ளதால் கூறியுள்ளேன். நான் எனது பாதுகாப்பிற்கு வேண்டியும், பணத்தை மோசமானவர்களிடம் இழந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இதை ரகசியாமாக வைத்துள்ளேன். அதனால்தான் உங்களையும் யாரிடமும் இதைப் பற்றித் தெரிவிக்கக் கூடாது என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். அந்த வங்கியில் டெப்பாசிட் ஆன தொகை 6 மில்லியன் 700 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். ($6.7 million).
எனக்கு இந்தப் பணம் திரும்பக் கிடைக்க நீங்கள் உதவ வேண்டும். நான் இதை ஏற்கனவே முயன்று விட்டேன். ஆனால் நான் இங்கு அகதியாக இருப்பதால் அந்தப் பணத்தை வங்கி தருவதற்கு மறுத்துவிட்டது. அவர்கள், என்னை ஒரு உறவினரையோ, அயல்நாட்டு பார்ட்னரையோ, ட்ரஸ்டியையோ என் சார்பாக கொண்டுவர வேண்டும் என்று அறிவுரைத்தனர். தயவு செய்து உங்கள் நாட்டில், உங்கள் வங்கிக் கணக்கிற்கு இந்தப் பணத்தை மாற்றி எனக்கு உதவ வேண்டுகிறேன். இப்படிச் செய்து எனக்கு பணம் நீங்கள் அனுப்பினால், அதை வைத்து நான் இந்த முகாமை விட்டு வெளியேறவும், எனது பயணத்திற்கு வேண்டிய ஆவணங்களை எல்லாம் பெற்று உங்கள் நாட்டிற்கு வந்து நல்லதொரு வாழ்வை வாழ வழி செய்யுங்கள்.
அங்கு வந்து எனது படிப்பைத் தொடர வாய்ப்புக் கிடைக்கும், காரணம், எனது படிப்பு இப்போது முதல் வருடத்தோடு பாதியில் நிற்கிறது. எனது பணத்தை நல்ல முறையில் ஏதாவது நல்ல தொழிலில் முதலீடு செய்து அதைக் காப்பாற்ற உதவலாம். நீங்கள் உதவ ரெடியாக இருந்தால், எனது தந்தையின் மரணச் சான்றிதழ். வங்கி கணக்கு விவரங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உங்கள் பெயர், தொடர்பு கொள்ள உதவும் நம்பர், உங்கள் நாடு பற்றிய விவரங்களை எனக்கு அனுப்பினால் போதும்.
இதை உங்களை நம்பித்தான் கொடுக்கிறேன். எனக்கு, நேர்மையான, உண்மையான, புரிந்துகொள்ளக் கூடிய, நல்ல உழைப்பாளியான, கடவுள் நம்பிக்கையும், கடவுளுக்குப் பயபடுபவராக உள்ள ஒருவரைத்தான் பிடிக்கும். அதற்கு முன் நீங்கள் நான் மேலே குறிப்பிட்டுள்ள்து போல் கூப்பிட வேண்டும் ஏனென்றால் எனக்கு உங்களிடம் இன்னும் நிறைய பேச வேண்டும். இதனுடன் எனது புகைப்படங்களை இணைத்துள்ளேன். இன்னும் நிறைய புகைப்படங்களை அடுத்த மெயிலில் அனுப்புகிறேன். உங்களைப் பற்றியும் சொல்லுங்கள். நானும் உங்களைப் பற்றி அறிந்து கொள்வேன். இந்த நாள் நல்ல நாளாகட்டும்..என்னைப் பற்றியும் சிறிது சிந்தியுங்கள். உங்களிடமிருந்து பதிலை சீக்கிரமாக எதிர்பார்க்கிறேன்.
உங்கள் உண்மையான தோழி
ப்ரிஷியஸ் மாக்ஸ்வெல்
***************************************************************************
நான் உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இருப்பதற்கு மிகவும் வருந்துகிறேன் மாக்ஸ். பழைய மது, புது பாட்டிலில் விற்பது எங்கள் நாட்டில் இது போல் பல பாமர மக்கள் அதேசமயம் பணத்திற்கு ஆசைப்பட்டு ஏமாந்துள்ளார்கள். அதனால் ஐ ஆம் வெரி ஸாரி. நான் உங்களுக்குச் செய்ய முடிந்தது ப்ரார்த்தனை ஒன்றுதான். காலமும், பொறுமையும் உங்களுக்கு நல்ல முடிவுகளைத் தரும். எனது நண்பர் ஒரு போலீஸ் ஆபீஸர். அவரிடம் உங்களது செய்தியையும், ஃபோன் நம்பரையும் கொடுத்துள்ளேன். அவர் உங்களைத் தொடர்பு கொள்வார். தொடர்பு கொண்டால் நாம் நல்ல நண்பர்கள் (!?) என்பதைச் சொல்ல மறந்து விடாதீர்கள். கடவுள் உங்கள் அருகில் இருக்கிறார். மனம் தளராதீர்கள். நான் உங்களுக்காக இறைவனை வேண்டுகிறேன்.
எனது நண்பர் “போலீஸ்: என்ற வார்த்தையை தட்டியாதால் அதற்குப் பின் அந்த மாக்ஸிடமிருந்து மெயில் எதுவும் இல்லை. தப்பித்தார். நல்லவேளை.
ஆமா, அம்மணி எத்தனை வருஷமா இந்த ஒரே கதைய சொல்லி ஏமாத்தப் போறீங்க? கொஞ்சம் கதைய மாத்துங்கப்பா. போரடிச்சுப் போச்சு. எங்க ஊர்ல இன்னும் உங்க கதைய கேட்டு எத்தனை பேரு ஏமாறப் போராங்களோ? ஏற்கனவே நாங்க இளிச்சவாயங்க, எங்க நாட்டுல, நாங்க நேரடியா பார்த்துக்கிட்டே இருக்கற அரசியல்வாதிங்க கதைய கேட்டே ஏமாந்துகிட்டுத்தான் இருக்கோம். அப்ப கண்ணுக்கே தெரியாம எங்கேயோ உக்காந்துகிட்டு, கம்ப்யூட்டர் வழியா கதையத் தட்டிவிட்டா எங்க மக்கள் ஏமாறாமயா இருப்பாங்க?!! அதுவும் நீங்க டாலர்னு தட்டினீங்கனா எங்க மக்கள் வாயப் பொளந்துடுவாங்களே அதுவும் ஒரு பொண்ணு வழியா!!! அம்மணி, நாங்களும் இப்ப முழிச்சுக்கிட்டோம். இந்தா இப்ப இங்க தட்டிவிட்டாச்சு. உங்க பருப்பு இனி இங்க வேகாது அம்மணியோவ்.!!
----------------------------------------------------------------------------------------------------
திருடாதே பாப்பா (தம்பி) திருடாதே/ஹாட்ஸ் ஆஃப் டு (குருவாயூர்) போலீஸ்
எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே – பின்
நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை (பெற்றோர்) வளர்ப்பதிலே
-கவிஞர் புலமை பித்தன். படம்: நீதிக்குத் தலை வணங்கு
23-10-2013 அன்று, குருவாயூர் பகுதியில் உள்ள கோவில்களில் ஒரு வாரமாக போலீஸுக்கு சவாலாக இருந்த உண்டியல் திருடும் குற்றவாளிகள் பிடிபட்டனர். குற்றவாளிகள் யாரென்று அறிந்தால் அது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம் இல்லையேல் இதெல்லாம் இப்ப சகஜமப்பா என்றும் இருக்கலாம்.
ஆனால், ஆசிரியனாக இருக்கும் எனக்கு அது அதிர்ச்சி. குற்றவாளிகள், 9ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். ஐந்து பேர் அடங்கிய குழு. பகலில் கோயிலுக்குச் சென்று, உண்டியல்களைப் பார்த்து வைப்பது, இரவில் சென்று, திருட்டுக் கலையில் கைதேர்ந்தவர்களுக்குக் கூட ஆச்சரியத்தை உண்டாக்கும் விதத்திலான திருட்டு நடத்துவது. கையிலுள்ள பணம் தீரும் வரை, அவர்களுக்குப் பிடித்ததெல்லாம் வாங்குவது. பெரும்பாலும் புதிய மொபைல்கள் வாங்குவதுதான். வீட்டில் உள்ளவர்கள் கேட்டால் ஒரு நண்பன் தந்தது என்று சொல்வார்கள். பிடிபட்டவர்களை விசாரித்தப் போது, அவர்களில் அப்பா இல்லை, அப்பா வெளியூரில் வேலை செய்பவர், அப்பா இந்தியக் ‘குடி’ மகன், அப்பா ஓடிப்போனவர்,. இப்படிப் பல குடும்பச் சூழலில் இருக்கும் பையன்கள். பிடிபட்டதும், அவர்களின் பெற்றோர் வரவேண்டிய காவல் நிலையத்திற்கு வந்தவர்கள் 10 மாதம் சுமந்து பெற்று வளர்த்தத் தாய்கள் மட்டுமே. அவர்களெல்லாம் தங்கள் குழந்தைகள் செய்த குற்றத்தையும் அதன் காரணத்தையும் அறிந்தவுடன் மனம் தளர்ந்து, மிகவும் கூனிக் குறுகி அழுத நிலை மிகவும் வருத்தத்திற்குறியது. அப்படி என்னய்யா காரணம் என்று கேட்கிறீர்களா? எல்லாம் இந்த மொபைல் ஃபோன்தாங்க. நவீன புது மாடல் மொபைல் ஃபோன் வாங்க வேண்டும் என்ற காரணத்திற்காக இந்தத் திருட்டு.
நான் காரணங்களை ஆராயத் தொடங்கினேன். எனது மாணவர்களும் கூட அதி நவீன மொபைல் ஃபோன்கள் உபயோகிப்பதைப் பார்க்கிறேன். பருவ வயதில் பிள்ளைகளிடம் ஏற்படும் மாற்றங்களை பெற்றோர்கள் கவனிக்கத் தவறுவதை இதற்கு ஒரு காரணமாகக் கொள்ளலாம். பெரும்பான்மையானப் பெற்றோர்களில், இருவருமே வேலைக்குச் செல்லும் வீடுகளில் இது போன்றவை நடந்தாலும், மற்றச் சூழலிலும் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. தந்தை வெளியூரிலுள்ள சூழலில், தாயின் கவனிப்பில் வளரும் பிள்ளைகளின் மாற்றங்கள், நடவடிக்கைகள் சில சமயம் தாயின் கண்ணில் படாமல் போவதற்கு வாய்ப்புண்டு. மட்டுமல்ல பிள்ளைகளும் தாய்/பெற்றோர்கள் நம்பும்படியான பல பொய்களைச் தாங்கள் செய்த குற்றத்தை மறைக்க சொல்வதுண்டு. தாய் தன் மகனை நம்பத்தானே செய்வாள். ஏன் தகப்பனும்தான். “பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு” என்றுதானே பழமொழி!
. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் ஏற்படும் இடைவெளி, பருவ வயதில் ஏற்படும் புதிய நட்புகள், நண்பர்கள் உபயோகிக்கும் அதிநவீன மொபைல் ஃபோன்களால் ஏற்படும் ஈர்ப்பு, ஊடகங்களின் வாயிலாக காண நேரும், ஈர்க்கும் விளம்பரங்கள், நன்றும், தீதும் ஆராயத் தெரியாத, பெற்றோர்களின் பொருளாதார நிலைமையை எண்ணிப் பார்கத் தோன்றாத முதிர்ச்சியின்மை, ஆடம்பர வாழ்கையின் மேல் ஏற்படும் மோகம் போன்றவையும் இங்கே காரணங்களாக அமையலாம். எதுவாக இருந்தாலும் இதில் பெற்றோரின் பங்குதான் அதிகம் எனலாம். அவர்கள் கவனிக்கத் தவறுவதால் தான் இவற்றில் பலதும் நிகழக் காரணம்.
இந்தச் செய்தியை படித்த போது, எனக்கு, என் நண்பர் ஒருவரது குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. நண்பரின் மனைவியும் குழந்தைகளும் ஒரு இடத்திலும், நண்பர் வேறு ஒரு இடத்திலும் வேலை நிமித்தம் இருக்கின்றனர். மனைவி பள்ளி ஆசிரியை. மனைவியின் பள்ளியிலேயே குழந்தைகளும் படிக்கின்றனர். மனைவி குழந்தைகளைப் பள்ளிக்குக் காரில் அழத்துச் செல்வார். இவர்களுடன் பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் வருவதுண்டு. பள்ளியில் பேருந்து கட்டணம், மற்ற பல நிகழ்சிகளுக்காக சேகரிக்கபடும் பணம் இவரது மனைவி சேகரித்து தன் கைவசம் வைப்பது வழக்கம். அப்படி, தன்னிடம் வரும் பணத்தை அவர் தனது கைப்பையில் வைத்துக் கொண்டு வருவது வழக்கம். ஒரு தினம் அப்படி அவர் கொண்டுவரும் போது சிறிய தொகை குறைந்தது தெரியவில்லை. ஆனால் மறு நாள் ரூ.2000 குறைந்தது தெரிய வந்தது. எங்காவது கை மாறி வைத்திருக்கலாம் என்று நினைத்தார். இரண்டு தினம் கழித்து ரூ. 3,500 காணாமல் போனது. பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு காணவில்லை. அதிர்ச்சி. ரூ.2000 காணாமல் போன பிறகு அவர் மிகவும் கவனமாகத்தான் கையிலுள்ள பணத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தார். இருந்தாலும் பணம் காணாமல் போனது அவருக்கு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் தந்தது. அடுத்தா நாளே, மறுபடியும் ரூ.2000 காணாமல் போனது. பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் தான் காணாமல் போயிருக்கிறது என்று தெரிய வந்ததும் தன்னுடன் வரும் மற்ற குழந்தைகள் மீது சந்தேகம் வரவே தன் குழந்தைகளுடன் அதைப் பற்றிப் பேசினார். எனது நண்பரின் மூத்த மகன் 9 ஆம் வகுப்பிலும், கூட வரும் பெண் குழந்தைகள் இரண்டு பேர் 10 ஆம் வகுப்பிலும் படிப்பவர்கள். அந்தப் பெண்களில் ஒரு பெண் கைப்பையை தனது மடியில் வைத்திருந்து அப்புறப்படுத்தியதை தான் பார்த்ததாகவும் ஒருவேளை அவள் எடுத்திருக்கலாம் என்றும் மகன் கூறினான். இவர் அந்தப் பெண்ணைப் பற்றி சக ஆசிரியைகளிடம் விசாரித்தார். அவர்களின் கருத்துப் படி அந்தப் பெண் குழந்தைக்கு ‘ரூ 6000, ரூ 7000 க்கு என்ன அவசியம். எடுத்திருக்க வாய்ப்பில்லை’ என்றனர். இவர்களது மகனின் கையில் ஒரு நவீன மொபைல். தனது நண்பன் தந்ததாகக் கூறியுள்ளான். என் நண்பருக்கு விஷயம் சொல்லப்பட்டது. அவர் உடன் தன் மகனை சந்தேகம் எழாதவாறு விசாரித்தார். தான் ஒரு புது மொபைல் வாங்கித் தருவதாகவும் அவன் அந்த மொபைல அவன் நண்பனிடம் கொடுத்துவிடவேண்டும் என்றும் சொன்னார். மகன் பேசியதிலிருந்து அவருக்கு சின்ன சந்தேகம் வந்தது. அவன் தனது குற்றத்தை மறைக்க நிறைய அடுக்கடுக்காகப் பொய்கள் சொல்லுவது போல் அவருக்குத் தோன்றியது. அவன் பலமுறை அவரிடம் தனக்கு ஒரு மொபைல் வேண்டுமென்று சொன்னபோதெல்லாம், தான் மொபைல் வாங்கித் தர மாட்டேன் என்று சொல்லியதால் அவன் இப்படி நடந்து கொண்டுவிட்டானோ என்று வருந்தினார். அவரது மகன்தான் பணம் காணாமல் போனதற்குக் காரணம் என்று தெரிந்ததும் மனம் மிகவும் தளர்ந்து துடித்து விட்டார். அவர் மனம் துடித்ததைப் பற்றி இப்போது நினைத்தாலும் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்.
அவர் உடன் தன் ஆஃபீஸிற்கு லீவு போட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார். அவனை, மிகவும் அன்பாக, அவன் மனம் நோகாதபடி, அன்புடன் அவனை எப்படித் திருத்துவது என்பதை யோசித்து அவரும் அவரது மனைவியும் மகனை ஒரு அமைதியான இடத்திற்கு அழைத்துச் சென்று அவனை அடிக்காமல், கடும் சொற்கள் உபயோகிக்காமல் அன்புடன் பேசி அவன் தான் காரணம் என்பதை அவன் வாயிலிருந்து அறிந்தார்கள். மிகவும் உடைந்து விட்டார்கள் என்றே சொல்லலாம். எனது நண்பர் தன் கையோடு கொண்டுவந்திருந்த புது மொபைலை மகனுக்குக் கொடுத்தார்.
முதலில் நடந்த, செய்தித் தாளில் வெளியான சம்பவத்தில், போலீசாரின் நடவடிக்கையும் என் ந்ண்பர் செய்ததுபோல மிகவும் பக்குவமான, இதமான ஒரு நடவடிக்கைதான் என்பது இங்கு நம் எல்லோருக்குமே மிகுந்த மகிழ்சியைத் தருகின்ற ஒன்றுதான். குற்றம் செய்த மாணவர்களை குற்றப் படுத்தாமல், குற்றவாளிகளைப்போல் கருதிக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தாமல், அவர்களது பெற்றோர்களை அழைத்துப் பேசி, அந்த மாணவர்களை சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பாமல்,
அவர்களுக்கு நல்ல விதமாக, மன ஆலோசகரைக் கொண்டு கவுன்சலிங்க் கொடுத்து, கருத்துரை வழங்கி, பின்னர் பழையபடி அவர்கள் படித்த அதே பள்ளியிலேயே படிப்பைத் தொடர வைக்க முடிவு செய்திருக்கிறார்கள். சமூகம் இந்த மாணவர்களை புறம்தள்ளாமல்,
அவர்களும் தங்களது தவறைத் திருத்தி மறு வாழ்வு வாழ அனுமதிக்க வேண்டும் என்பதை, போலீசாரின் இந்த முடிவு தெரியப்படுத்துகிறது. மிக மிக வரவேற்கப்படவேண்டிய ஒரு நல்ல முடிவு. போலீசாரைப் பற்றி பல தவறானக் கருத்துகளையும், நையாண்டியையும், நகைச்சுவகளையும் நாம் அள்ளித் தெளித்து உலா வரச் செய்யும் இந்நேரத்தில், இப்படிப்பட்ட நல்ல மனம் உள்ள போலீசாரும் இருக்கின்றனர் என்பதை, நாம் இச் சம்பவத்திலிருந்து அறிய முடிகிறது. மனதுக்கு இதமாக இருக்கிறது. போலீசாருக்கு மனமுவந்த பாராட்டுக்கள். ஹாட்ஸ் ஆஃப் டு குருவாயூர் போலீஸ்.!!----------------------------------------------
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீங்கப்பா
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல ஒரு சம்பவம்க. திருவனந்தபுரத்துல உள்ள ஒரு IAS அதிகாரிக்கு நடந்திருக்குது. பெண்கள் மட்டும்தான் கழுத்துல செயின் போடலாம்னு ஏதாவது சட்டம் இருக்காங்க? இல்லைல? அரசு ஊழியர்கள் உடம்புல இத்தனை பவுன் தான் போடலாம்னு, சர்வீஸ் ரூலும் கிடையாதுதானே? பிறகு என்னங்க? ஒரு IAS அதிகாரி சின்னதா 11 பவுன் செயின் கழுத்துல போட்டா என்னங்க? பார்க்கிறவங்க சின்னதாவோ, பெரிசாவோ ஏக்கப் பெருமூச்சு விடலாம்...... வருத்தப்படலாம்.......வருத்தமோ, வயிற்றெரிச்சலோபடுறவங்களோட சேர்ந்துகிட்டு அவருக்குத் தெரியாம...அவர் காதுல கூட விழாம.........கொடுமைய பாருங்க.........“11 பவுன் செயின், அதுவும் ஒரு ஆம்பிள கழுத்துல”னு சொல்லி வருத்தத்தையும், வயிற்றெரிச்சலையும் கொஞ்சம் குறைச்சுக்கலாம்....போனா போகுது....ஆனா ஏதோ ஒரு திருட்டு ராஸ்கல் அத அபேஸ் பண்ணிட்டு, 2 லட்சத்துக்கு மேல விலை மதிப்புள்ள அந்தச் செயின திருடிட்டு போன பிறகும் கூட, “இவரு இப்படி ஒரு செயின கழுத்துல போட்டது சரியா? இப்படிப்பட்ட நகை ஆசை ஒரு IAS அதிகாரிக்கு பொருந்துமா, வேணுமா? ....அவரு சின்னதா ஒரு 3 பவுன் செயின் போட்டிருக்கலாமே”னு போஸ்ட் மேல போஸ்ட்....கமெண்டுக்கு மேல கமெண்ட்ஸா, ஃபேஸ் புக், ட்விட்டர், ப்ளாகுனு (?!) எல்லாத்துலயும் எழுதி, பாவம் அந்த மனிதரை சித்திரவதை செய்வது நியாயமா? இந்த மனுஷனோட வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுரதுல உங்களுக்கெல்லாம் என்ன அப்படி ஒரு சந்தோஷம்? (அப்பாடா!....இப்பதான் மனசுக்கு சந்தோஷமா இருக்குதுங்க....நல்லபடியா போஸ்ட் பண்ணியாச்சு.....இனி நிம்மதியா மத்த வேலைகளை பாக்கலாம்!?)
----------------------------------------------------------------------------------------------------------
புதிய பாடகி சந்திரலேகா...
http://www.youtube.com/watch?v=6znBLiA_ui8
சமையலறையில் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டே பாடிய "ராஜஹம்ஸமே" என்ற பாடலைத் தன் மைத்துனர் மொபைலில் எடுத்த போது, பாவம் சந்திரலேகா ஒரு போதும் நினைத்திருக்க வழியில்லை, இந்த சம்பவம் தன் வாழ்வில் ஒரு திருப்பு முனையாகும் என்று.
கேரளா, பத்தம்திட்ட ஜில்லாவில், வடசேரிக்கரையில். பரங்கிமாமூட்டில் ரகுநாதனின் மனைவிதான் சந்திரலேகா. தன் கணவனுடனும், மற்றும் மூன்று வயதாகிய தன் மகன் ஸ்ரீஹரியுடனும் ஒரு சிறிய,உட்புறம் தேய்க்கப்படாத சுவர்கள் உள்ள வீட்டின் சமையலறையிலிருந்து திரைப்படப் பாடல்களைத், தன் குழந்தைக்குச் சோறூட்டும்போது பாடுவதுண்டு. B.A. படித்திருந்தாலும், தன் குழந்தையைக் கருதி வேலைக்குச் செல்லாமல், கணவனின் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தும் திறமைசாலி. தன் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் ஒரு நல்ல பாடகி என்று எல்லாராலும் பாராட்டப்பட்டவள்.
மைத்துனன் ரதீஷ் பல நேரங்களில் தன் அண்ணியின் நல்ல குரல்வளத்தோடு பாடும் பாடல்களைக் கேட்டு அதிசயப்பட்டிருக்கிறான். பாட வாய்ப்புத் தேடிப் போக முடியாதபடி பொருளாதார நிலை. டி.வி. சானல்களில் கூட பங்கெடுக்க, திருவனந்தபுரம், கொச்சி என்று போகமுடியாது என்பதால், அவற்றிற்கான வாய்ப்புகளை எல்லாம் வேதனையோடு தவறவிட்ட அண்ணியின் திறமையை வெளிப்படுத்த Youtube உதவியாக இருக்கும் என்று நினைத்து, குழந்தையை இடுப்பில் வைத்து சமைத்துக் கொண்டிருந்த அண்ணியைப் பாடச் சொல்ல, சந்திடலேகா மிக அருமையாக "ராஜஹம்சமே" என்ற சிதிராவின் பாடலைப் பாட, அதனைத் தன் மொபைல் ஃபோனில் முழுமையாக ரெக்கார்ட் செய்து தன் நண்பர்களிடம் காட்ட, அப் பாடலைக் கேட்ட ஒவ்வொருவரும் தந்த ஊக்கத்தினால், ரதீஷ் அந்தப் பாடலை youtube ல் upload செய்ய, பின்பு நடந்ததெல்லாம், வரலாற்றின் பாகமாக்கப் பட வேண்டியதற்கு சமமான நிகழ்சிகள். இலட்சக்கணக்கான நேயர்கள் Youtube ல் சந்திரலேகாவின் பாடலைக் கேட்டு, மகிழ்ந்ததோடுமட்டுமல்லாமல், அதைப் பகிர்ந்து கொள்ளவும் மறக்கவில்லை. கடந்த வாரம் மிகுந்த பரபரப்பைச் சந்திரலேகா கேரளாவில் ஏற்படுத்தியேவிட்டார்.
விளைவோ, அந்தப் பாடலைக் கேட்ட அனைவருக்கும் காதில் தேனாய்ப் பாய்ந்தது அவரது குரல். 17.10.2013 அன்று கொச்சியிலுள்ள Freddy ஸ்டுடியோவில், பிரஷாந்த் இயக்கும் 'லவ் ஸ்டோரி' என்னும் திரைப்படத்திற்கானப் பாடலை, டேவிட் ஷோன் என்பவரின் இசையமைப்பில், பிரபல இயக்குனரான சிபிமலையிலின் முன்னிலையில் சந்திரலேகா பாடினார். உடனே 'ஈஸ்ட்கோஸ்ட்' விஜயன் தம் அடுத்த ஆல்பத்திற்காகச் சந்திரலேகாவை ஒப்பந்தமும் செய்தார். அப்போதே வேறு ஒரு திரைப்படத்திற்கும் பாட வேண்டும் என அழைப்பும் வந்தது. இதை நீங்கள் வாசிக்கும் போது சந்திரலேகாவுக்கு எத்தனையோ படங்களில் பாட வாய்ப்புக் கிடைத்திருக்கலாம். இது போல் குப்பையில் கிடக்கும் மாணிக்கங்களை அடையாளம் கண்டு அதற்குறிய இடத்தை அளிக்கப்படவேண்டிய சந்தர்பங்களுக்காக நாம் அனைவரும் இறைவனிடம் மன்றாடுவோம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்து தமிழ் நாளிதழிலிருந்து........இந்து டாக்கீஸ்
தமிழ் ஸ்டுடியோ, தமிழில் குறும்பட முயற்சிகளைச் செறிவாக்கும் நோக்கில் குறும்படத் திரையிடல் மூலம் 2008ல் தன் பணியைத் தொடங்கியது. சென்னை திரைப்படக் கல்லூரி மாணவரான அருண் இந்த இயக்கத்தை முன்னெடுத்தவர்களில் முதன்மையானவர்.
சினிமா ஆர்வம் உள்ள இளைஞர்கள் பலருக்கும் தமிழ் ஸ்டுடியோ பயிற்சி அளித்து வருகிறது. எடிட்டிங், இயக்கம், ஒளிப்பதிவு போன்ற துறைகளில் குறுகிய காலப் பயிற்சிகளை அளித்துவருகிறார்கள். சென்னை மட்டும்மல்லாது, கோவை, திருச்சி போன்ற நகரங்களிலும் பயிற்சிப் பட்டரைகள் நடத்தி வருகிறார்கள். சினிமா என்பது தொழில் நுட்பத்திற்குள் நின்று விடக்கூடாது என்பதற்காக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களளுடனான உரையால்களைப் பயிற்சியின் ஒரு அம்சமாகச் சேர்த்துள்ளார்கள். ஆர்வமுள்ளோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்குடன் இதை இங்கு பதிவு செய்துள்ளோம். இதன் இணயதள முகவரி இதோ கீழே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக