வெள்ளி, 30 மே, 2025

சில்லு சில்லாய் - 22

 சில்லு - 1 - வரலாறு, பாரம்பரியம் என்பவை இப்படித்தானோ?

மரங்களின் வேர்களில் சித்தர்கள் - என்று படங்களுடன், ஸ்ரீராம், ஒரு வியாழன் பதிவில் கொடுத்திருந்தார். பதிவின் ====> சுட்டி  <====

//ஆ! அங்கு சீக்கிரத்தில் கோவில் வந்துவிடும் என்று கருத்தில் சொல்லியிருந்த நினைவு.// அப்போது, இங்கு அருகில் இருக்கும் பூங்காவில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்து குறித்து வைத்திருந்தேன். பின்னர் பதிவாக்க மறந்து விட்டுப் போயிருச்சு.

ஞாயிறு, 18 மே, 2025

பஸ்சிமவாஹினி - ரங்கனதிட்டு- ஸ்ரீரங்கப்பட்டினம் கோவில் - 9

 

ரங்கனத்திட்டுவிற்குச் செல்லும் போது ஆட்டோக்காரர் ஒரு இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னதாகவும் அப்போது அங்கு நாங்கள் இறங்கவில்லை, பறவைகளைப் பார்த்த பிறகு வரும் போது பார்க்கலாம் என்றும் முடிவு செய்து சென்றதாகச் சொல்லியிருந்தேன். அந்த இடத்தைப் பற்றி இப்பதிவுத் தொடரோடு சொல்வதா இல்லை தனியாகப் போடலாமா என்று இங்கி பிங்கி பாங்கி போட்டுப் பார்த்ததில், மனதின் மெஜாரிட்டிக் குரல்கள், 'பயணத்தில் இதைக் கடந்துதானே கோவிலுக்குப் போனோம், தொடரிலேயே போட்டுவிடு'  என்பதற்குக் கை தூக்கியதால், இதைப் போட்டுவிட்டு அடுத்ததாக  கோவிலுக்குப் போய்விடுவோம் என்று முடிவாகி, இதோ அந்த இடத்தைப் பற்றி.

சனி, 3 மே, 2025

ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் - ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் - பயணம் - 8

சலீம் அலி மையம் - பார்ப்பதற்கு முன்னர் ஒரு விஷயம் 

நம்ம நெல்லையும் (நெல்லை என்னைக் கலாய்த்தது நம்மவீட்டவரின் பெயரை வைத்து என்று என் ஊகம்!!!!), ஸ்ரீராமும் “ரங்கன திட்டு” என்று ஏன் ரங்கன திட்டறீங்கன்னு கலாய்த்திருந்தார்கள்.