வெள்ளி, 29 டிசம்பர், 2023

சில்லு சில்லாய் - 17 - பாட்டியின் ரகசியம் - ஓவியம் - கரும்புலிகள்

சில்லு - 1 - சினிமா வைபவங்கள்

சிறு வயது, இளம் வயதில் சினிமா பார்க்கச் சென்ற அனுபவங்களை ஸ்ரீராம் எழுதியிருந்தார். வாசித்த போது சினிமாவில் ஃப்ளாஷ் பேக் வரும் முன் ஒரு சக்கரம் போல வருமே அது மனதில் வந்தது. 

திங்கள், 25 டிசம்பர், 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 27 - தருமபுரி - கிருஷ்ணகிரி மலைகள் - 1

வணக்கம், வந்தனம். பதிவுகளுக்கு இடையில் ரொம்பவே இடைவெளி வந்துவிட்டது. இதென்ன புதுசான்னு கேட்கக் கூடாது. இது Customary வசனம். எழுதிய பதிவுகளில் சில தொடரும் என்று போட்டிருந்த பதிவுகள் என்னன்னு எனக்கே மறந்துவிட்டது. உங்களுக்கும் மறந்திருக்கலாம். அப்பதிவுகளின் தொடர்ச்சி வருமா? புகழ்பெற்ற வசனமான "வரும் ஆனா வராது" கேஸ் தான்.  இதற்கான காரணத்தை - ஏன் என்னால் எழுத இயலவில்லை என்பதை - என்னை நானே சுயபரிசோதனை செய்து ஆராய்ந்த போது தெரிந்து கொண்டதைச் சொல்ல வேண்டும் என்றால் பின்னோக்கிச் செல்ல வேண்டும். அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல எழுத வேண்டும்.

வியாழன், 23 நவம்பர், 2023

எங்கள் வீட்டுப் பிதாமகர்


“கோந்தே, பாரு எவ்வளவு சமட்டினாலும் திடீர்னு சைக்கிள்ல லைட் ஏரியலை. டைனமோ பாக்கணும். இது டவுன் இல்லியா, போலீஸ் பாத்தா பிடிப்பா. நீ எறங்க வேண்டாம். அப்படியே உக்காந்திண்டிரு, Bar அ கட்டியா பிடிச்சுக்கோ. சைக்கிள தள்ளறேன். ஒழுகினசேரி பாலம் ஏறி இறங்கினதும்  ஹைவே. போலீஸ் இருக்கமாட்டா, அப்புறம் சைக்கிள சமட்டறேன்.”

புதன், 15 நவம்பர், 2023

சில்லு சில்லாய் - 16 - மங்கையா ராகப் பிறப்பதற்கே...- கங்கு கீரை - வானுலகம்

 

சில்லு - 1 - மங்கையராகப் பிறப்பதற்கே...

மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும் என்று எங்கள் ஊர் தாத்தா கவிமணி பாடியிருக்கிறார். கல்லூரியில் படித்த போது இதை நான் மேடை தோறும் முழங்கியிருக்கிறேன். ஆனால் அந்த முழக்கம் எல்லாம், எப்போது பெண்கள் பாலியல் துன்பத்துக்கு ஆளாவதும், சிவப்பு விளக்கிற்குத் தள்ளப்படுவதும் என்னைத் தாக்கத் தொடங்கியதோ அப்போது நின்றுவிட்டது.

செவ்வாய், 7 நவம்பர், 2023

ஒன்று கூடல் நிகழ்வும், ஈஷா பயணமும் பகுதி – 2


மகிழ்ச்சி என்பது இயற்கை, ஆனால் துக்கம் என்பது செயற்கை அதாவது துக்கம் என்பது நாமாக உருவாக்கிக் கொள்வது - இது சத்குருவின் வாக்கு. அதனால்தான் இறைவனை துதித்துப் பாடி ஆடி ஆனந்தம் கொள்வது ஈஷா மையத்தில் நித்ய நிகழ்வாகிறது. - 1

“சிவ சிவ என்றிடத் தீவினை மாளும். சிவ சிவ என்றிட என்னச் சிவகதி தானே” எனும் சான்றோர் வாக்கும் அதுதானே. பிறவிப் பெருங்கடலை நீந்தி இறைவன் திருவடி சேர்வதுதானே சைவ நெறி. அதைப் பின்பற்றும் சத்குருவின் ஈஷா மையத்தில் தூரத்திலிருந்து நம்மை அதிசயம் கொள்ள வைக்கும் பிறை சூடிய சிவரூபம் வரவேற்கிறது. - 2

வெள்ளி, 3 நவம்பர், 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 26 - லால்பாக் மலர் கண்காட்சி - 2023 - 3

இந்த வருடத்து லால்பாக் மலர் கண்காட்சி சென்று வந்ததும் சுடச் சுடப் போட்டுவிட நானே என்னைப் பார்த்து மயங்கிட இரண்டாவது பதிவு தாமதித்தது அதன் பின் மீண்டும் 3 வது பதிவு போட தாமதம். காரணம் படங்கள் காணொளிகளை அடுக்கிக் கோர்க்க. இடையில் ஒத்தி வைக்கப்பட்டிருந்த பெங்களூர் சாப்பாட்டு நகரம்னு எழுதி திசை மாறியது. துளசியின் பதிவுகள், எனக்கு வேலைப்பளு, பயணம் என்று போக, மீண்டும் மனம் தேங்கியது.  

சாப்பாட்டு நகரம்னு அதைப் பற்றியே வந்து கொண்டிருந்தால் போரடித்துவிடுமே, அடடா, லால்பாக் மலர் கண்காட்சி தொடர் அப்படியே நிக்குதேன்னு இதோ மீண்டும் தூசி தட்டி....கொஞ்சம் கலர்ஃபுல்லாகப் பகிரலாம் என்று அதன் தொடர்ச்சி.

மூன்றாவது பகுதிக்கு இடையில் இடைவெளி கூடிவிட்டதால் ஒரு சின்ன Recap! ற்கான சுட்டிகள் இங்கே பகுதி 1 - பகுதி 2 

வெள்ளி, 27 அக்டோபர், 2023

சில்லு சில்லாய் - 15 - இந்தியாவின் சிலிக்கன் நகரம் உணவு நகரமாய் மாறி வருகிறதா - 2

 

35 வருடங்களுக்கு முன் பங்களூர் அனுபவங்கள் என்றால், கிராமத்தை விட்டு வந்த எனக்குச் சென்னை நகரத்திற்கு அப்புறம் ஒரு நகரத்திற்குப் பயணம் என்றால் அது பெங்களூர், மைசூருக்கு ஒரு வாரம் பயணத்தில் சென்றதுதான். சிலவற்றை இப்போதையதுடன் (கறுப்பு நிற எழுத்துகள்) சேர்த்துச் சொல்லியிருக்கிறேன். அப்போது நாங்கள் தங்கியிருந்தது பெங்களூர் ஐஐஎஸ்ஸி வளாகத்துள் இருந்த உறவினர் வீட்டில்.

திங்கள், 23 அக்டோபர், 2023

ஒன்று கூடல் நிகழ்வும், ஈஷா பயணமும் பகுதி - 1

 

எப்போதாவது காண நேரும் நம் பள்ளித் தோழர்கள், அந்த இனிமையான நாட்களுக்குக் கொண்டு சென்று கடந்து போன அந்தப் பொன்னான நாட்களை நாம் சுவைத்து மகிழ உதவுவார்கள். அது போல் சமீபத்தில் நான் 23 ஆண்டுகள் பணியாற்றிய CFDVHS - சிஎஃப்டிவிஹெச்எஸ் பள்ளியில் 1998 – 2000 வருடங்களில் பயின்ற மாணவ மாணவியர்கள் ஒரு சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள். Voice 1

திங்கள், 9 அக்டோபர், 2023

சில்லு சில்லாய் - 14 - இந்தியாவின் சிலிக்கன் நகரம் உணவு நகரமாய் மாறி வருகிறதா - 1


என்னைப் போல் சாப்பாட்டை விரும்பி ரசித்துச் சாப்பிடும் பிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்! பெங்களூருக்கு வந்ததிலிருந்து இப்பதிவை எழுதத் தொடங்கி எழுதிக் கொண்டே……..இப்போதுதான் முடிக்க முடிந்தது. எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரின் வாழ்க்கை, உணவு முறை, உணவகங்கள் என்று நான் கொஞ்சம் கூர்ந்து நோக்குவது வழக்கம்.

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 25 - லால்பாக் மலர் கண்காட்சி - 2023 - 2

இந்த வருடத்து லால்பாக் மலர் கண்காட்சி சென்று வந்ததும் சுடச் சுடப் போட்டுவிட ஆ கீதாவான்னு!!!! எல்லாரும் மயங்கினீங்கதானே! பாருங்க அடுத்தது போடுவதற்குள் வாலு போச்சு கத்தி வந்ததுன்னு சில பணிகள் வந்துவிட அதில் ஆழ்ந்து செய்து முடித்ததும் மனமோ கெஞ்சியது ரிலாக்ஸ் ப்ளீஸ் என்று. சரி ரொம்ப நாளாச்சு, ஒரு தமிழ் கீர்த்தனை கற்றுக் கொள்ளலாம் என்று இணையத்தில் ஆராய்ச்சி. நாம ஏகலைவிதான்! அது ஒரு புறம்.

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

வட கேரளத்தின் தெய்யம்

 

தெய்யம் எனும் சொல் தெய்வம் எனும் சொல்லில் இருந்து மருவி வந்ததாகச் சொல்லப்படுகிறது. மட்டுமல்ல, மூதாதையர்களை வழிபடும் முறையும் தெய்யத்தில் கடைபிடிக்கப்படுவதால் அதனுடனும் தெய்யத்திற்குத் தொடர்புடையதாக நம்பப்படுகிறது.

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 24 - லால்பாக் மலர் கண்காட்சி - 2023 - 1


நுழைவு வாயிலின் வெளியில் சந்திப்பு + சிக்னல் இருக்கும் இந்த இடத்தில் இப்படியான பூச்சாடி வடிவங்கள் சாலையின்   நான்கு மூலைகளிலும் வைச்சிருக்காங்க. இன்னும் மெருகூட்டி அழகுபடுத்துவாங்க என்று தோன்றுகிறது. திறந்து வைச்சா உள்ளுக்குள்ள குப்பை, பூச்சி எல்லாம் குடிபுகாதோ!

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோயில்/தக்ஷின திருப்பதி - பகுதி - 2 - தென்பெண்ணை ஆறு

 

தக்ஷின திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் பற்றிய முதல் பகுதியை இதோ இந்தச் சுட்டியில் வாசிக்கலாம்.

=====> முதல் பகுதி சுட்டி <=====

முதல் பகுதியை வாசித்தவர்கள், கருத்து சொன்னவர்கள் அனைவருக்கும் நன்றி. 

சென்ற பதிவிலேயே சொன்னது போல பெருமாளை தரிசிக்க உள்ளே செல்ல பெருமாளின் இரு புறமும் தான் வாயில்கள். நேரே இல்லை. ஆனால் கொடிமரம் வெளியில் பெருமாளுக்கு நேரே ஆனால் அங்கிருந்து பெருமாள் தெரியமாட்டார். சுவர்!

புதன், 9 ஆகஸ்ட், 2023

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோயில்/தக்ஷின திருப்பதி - பகுதி - 1

 

ஒரு புத்தம் புது சூட்டோடு சுடா பதிவு! அதனால எல்லாரும் கை பிடிச்சிட்டு நில்லுங்க. ஆ! கீதாவான்னு வியந்து பார்க்கறப்ப தள்ளாடாம இருக்கணுமே!!!

நம்ம அனுபிரேமுக்குத்தான் நன்றி சொல்லணும். 2018ன்னு நினைக்கிறேன். அவங்க தளத்துல இந்தக் கோயில் பத்தி படங்களோடு போட்டிருந்தாங்க. சுற்றிலும் இயற்கை, குன்றுக்குக் கீழே ஆறு ஓடும் படம் எல்லாம் போட்டிருந்தாங்களா, அவ்வளவுதான் எனக்கு அங்கு போகும் ஆசை வந்துவிட்டது. வீட்டில் சொல்லி வைத்திருந்தேன். ஆனா அப்பதான் இங்கு என்ட்ரி. செட்டிலாகி முடிக்கறதுக்குள்ள அடுத்தாப்ல கொரோனா. அப்புறம் ஏதேதோ காரணங்கள் போக முடியலை.

கடந்த சனிக்கிழமை இரவு. மறு நாள் ஞாயிறு அன்று சுதந்திர தின- மலர் கண்காட்சிக்கு லால்பாக் போலாமா? தக்ஷின திருப்பதிக்குப் போலாமா? ஒத்தையா ரெட்டையா போட்டு கடைசில அடுத்த வாரம் லால்பாக் போயிக்கலாம், இந்த ஞாயிறு தக்ஷின திருப்பதின்னு முடிவாச்சு. 

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 23 - லால்பாக் மலர் கண்காட்சி - 4

ஆ அதுக்குள்ள இந்த வருட சுந்தந்திர தின மலர் கண்காட்சியா? இன்னும் இந்த வருஷத்துக் காட்சி தொடங்கலை...லால்பாகில் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரைன்னு செய்தி வந்தது அதெப்படி கீதாக்கும் மட்டும் Preview வா?!!! போன வருஷத்தையே போட்டு முடிக்கலை!! ஹிஹிஹி...இந்த வருடமும் செல்வதாக இருக்கிறேன். அதையும் க்ளிக்குவேனே அதைப் போடுவதற்குள் போன வருடம் எடுத்ததை போட்டு முடிச்சிடணுமே!!! (அதுவும் நெல்லை வந்து என்னைக் கலாய்ப்பாரே!!!!) இதோ அதன் முடிவுப் பகுதி. சட்டுபுட்டுன்னு நாளைக்குள்ள இன்று போட்டுட்டா கொஞ்சமாச்சும் தப்பிச்சேன்!!!! இதோ அந்தப் படங்கள்!

திங்கள், 31 ஜூலை, 2023

மகன் இங்கு வந்த போது அவனது பயண அனுபவங்கள் - இயந்திரப் பறவையின் பார்வையில் மகனின் மூன்றாவது விழி வழி படங்கள்

 

அமெரிக்காவிலிருந்து மகனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்து அவன் வந்த நாளன்று பங்களூர் விமான நிலையத்தில் மகனைக் காணும் பூரிப்போடு காத்திருந்தோம். அறிவிப்பு பலகையில் விமானம் தரையிறங்கிவிட்டது என்று எழுத்துகள் உருண்டன. மகனின் செய்தியும் வந்தது. ஆஹா! வந்தாச்சு இன்னும் சில நிமிடத் துளிகள். அந்தத் தருணங்களை இப்போது நினைத்தாலும் சுகமான இனிய நினைவுகள்.

புதன், 26 ஜூலை, 2023

திருப்பத்தூர் (சிவகங்கை) மற்றும் அதன் அருகிலுள்ள சிவன் - வைரவர் தலங்கள் – ஒரே நாளில் 9 கோயில்கள் - 3


திருப்பத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சிவன்/பைரவர் கோயில்களுக்கு ஒரே நாளில் 9 கோயில்கள் வரிசைப்படி சென்றதைப் பற்றி இந்த இரு பகுதிகளில் ===> பகுதி 1 <===  ===>பகுதி 2 <=== 1வது கோயில் முதல் 6 வது கோயில் வரை சொல்லியிருந்தேன். அதே போன்று இப்ப இந்த மூன்றாவது பகுதியில் 7, 8, 9 வதாகச் சென்ற கோயில்கள் பற்றி. இடையில் மீண்டும் முதல் கோயில் வரும்!

வியாழன், 20 ஜூலை, 2023

திருப்பத்தூர் (சிவகங்கை) மற்றும் அதன் அருகிலுள்ள சிவன் - வைரவர் தலங்கள் – ஒரே நாளில் 9 கோயில்கள் - 2


என் தங்கைக்குப் பரிகாரம் என்று சொல்லப்பட்ட, திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள சில சிவன் கோயில்கள் / பைரவ வழிபாடு என்று சென்றதைப் பற்றி சென்ற பதிவில் (====>பகுதி 1<====)  ஒரே நாளில் 9 கோயில்கள் அவர் சொன்ன வரிசையில் செல்லச் சொல்லியிருந்தார் என்றும் சொல்லியிருந்தேன். அந்த 9 கோயில்களில் முதல் இரு கோயில்கள் ( 1. திருமெய்ஞானபுரி/ தி-வைரவன்பட்டி - காலபாலபைரவர், 2. திருத்தளிநாதர் கோயில் - யோகபைரவர்) பற்றி முதல் பகுதியில் சொல்லியாச்சு. தொடர்ச்சி இதோ. நாங்கள் சென்ற கோயில்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் அம்சமான பராமரிப்பில் இருப்பவை. 

சனி, 15 ஜூலை, 2023

திருப்பத்தூர் (சிவகங்கை) மற்றும் அதன் அருகிலுள்ள சிவன் - வைரவர் தலங்கள் – ஒரே நாளில் 9 கோயில்கள் - 1


2016 ஆம் வருடம். என் தங்கை ஏதோ ஒரு ஜோசியர் அவளுடைய பிரச்சனைக்கு ஒரு பரிகாரம் சொல்லியிருக்கிறார் என்றாள்.  அந்த மாபெரும் சக்தி மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ள எனக்கு இப்படியான விஷயங்களில் நம்பிக்கை இல்லை. என்றாலும் இந்தச் சாக்கில், போயிருக்காத சில கோயில்களுக்குப் போக ஒரு வாய்ப்பு கிடைக்குதேன்ற மகிழ்ச்சியில் என் தங்கை அழைத்ததும், சொல்லணுமா?! என் ஓட்டை மூன்றாவது விழியுடன் கிளம்பிவிட்டேன்.

வெள்ளி, 7 ஜூலை, 2023

சில்லு சில்லாய் – 13 – ஒளிபடைத்த இளையபாரதம்! - பொன்னி நதி பாக்கணுமே - வெள்ளோட்டம்

 

சில்லு – 1 - ஒளிபடைத்த இளையபாரதம்!

ஓரிரு மாதங்களுக்கு முன் நம்மவருக்கு, அருகிலிருக்கும் கல்லூரி ஒன்றில் (தமிழ் நாட்டைச் சேர்ந்த கல்லூரி) கட்டுமானத் துறையில் (Civil Engineering) செயற்கை நுண்ணறிவு எப்படிப் பயன்படுகிறது என்பதைப் பற்றி உரையாற்ற அழைத்திருந்தார் அங்கு அந்தத் துறையின் தலைமைப் பொறுப்பில் பணிபுரிந்த எங்கள் நெருங்கிய நட்பு.

புதன், 28 ஜூன், 2023

சில்லு சில்லாய் – 12 - செயற்கை நாணல் படுகை – லால்குடி/திருத்தவத்துறை – ஞானப்பழத்தைப் பிழிந்து



சில்லு – 1 – கட்டப்பட்ட ஈரநிலம், செயற்கை நாணல் படுகை

(என் ஆர்வ மிகுதியில் எழுதியிருக்கும் சில்லு 1 பகுதி கொஞ்சம் பாடம் போன்று இருக்கலாம். வாசிக்கப் பிடிக்காதவர்கள் தவிர்த்துவிடலாம்.)

செயற்கை நாணல்படுகை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன் என்று முந்தைய பதிவுகளில் சொல்லியிருந்தேன். ஸ்ரீராமும் அது எப்படி இருக்கும் என்று அறிய ஆவல் என்று சொல்லியிருந்தார். செயற்கை நாணல்படுகை பற்றிச் சொல்லும் முன் ஈரநிலங்களின் அவசியம் பற்றி சில குறிப்புகள்.

வெள்ளி, 23 ஜூன், 2023

போக்குவரத்துக் கழகப் பேருந்து சுற்றுலா – மூணார் – 2

 


இந்த இடங்கள் நாங்கள் செல்லவில்லை. ஆனால் இவை எல்லாம் இங்கு எல்லோரும் பார்க்க வேண்டிய இடங்கள் என்று வாசிப்பவர்களுக்கான குறிப்புகள் படங்களாய்

புதன், 14 ஜூன், 2023

போக்குவரத்துக் கழகப் பேருந்து சுற்றுலா – மூணார் – 1

 

1960 களின் பின்பாதியில் நான் எழுத்துக் கூட்டி வாசிக்க ஆரம்பித்த போது போடி, ராசிங்கபுரம் வழியாகச் செல்லும் பஸ்களின் நெற்றியில் எழுதியிருந்த மதுரை-உத்தமபாளையம், பெரியகுளம்-குமுளி, தேனி டு தேனி, பழனி-தேவாரம் போன்றவைகள்தான் நான் ஆர்வத்துடனும் அதிசயத்துடனும் வாசித்தவைகள்.

வெள்ளி, 2 ஜூன், 2023

சில்லு சில்லாய் - 11 - (Reed Bed) இயற்கை நாணல் படுகை/சம்பு (Narrow Leaf Cattail) – புள்ளி மூக்கு வாத்து (Indian Spot Billed Duck) - ஹோக்கர்கார் (Hokersar) சதுப்பு நிலம்

சில்லு – 1 (Reed Bed) நாணல் படுகை/சம்பு (Narrow Leaf Cattail-Typha) – புள்ளி மூக்கு வாத்து (Indian Spot-Billed Duck)

நாணல் என்பது பேரினங்களைச் சேர்ந்த தாவரங்களுக்கான பொதுப்பெயர். கோரை என்றும் சொல்லப்படுவதுண்டு. நாணல் படுகைகள் என்பது நாணல்களால் நிறைந்து இருக்கும் நீர்நிலைகள் அல்லது சதுப்பு நிலத்தின் ஒரு பகுதி. அவை ஆரோக்கியமான நதி மற்றும் நீர் நிலைகளின் அடையாளம். மீன்கள், முதுகெலும்பில்லாத விலங்குகள் மற்றும் பறவைகள் வாழ்வதற்குச் சிறந்த வாழ்விடத்தை வழங்குகின்றன.

திங்கள், 29 மே, 2023

சில்லு சில்லாய் – 10 - இயற்கையும் செயற்கையும்

 


(Reed Bed) நாணல்/சம்பு நீர்த்தாவர படுகை - செயற்கை நாணல்/நீர்த்தாவர படுகை

இயற்கையான Reed Bed - சம்பு - நீர்த்தாவரம் - சம்பு தாவரப்படுகை. இதைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் வரும்

புதன், 24 மே, 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 21 - குளத்துக் கொக்கு - INDIAN POND HERON

 

எங்களின் முந்தைய பதிவை/வுகளை வாசித்த, வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்!

ஹெரான் வகைகள் வேறு சில இருந்தாலும் நான் பார்த்த ஹெரான் வகைகள் மூன்று. அதில் செந்நாரை - PURPLE HERON, சாம்பல் நாரை - GREY HERON பற்றி போட்டிருந்த நினைவு உங்களுக்கு இருக்கலாம். அந்த வகையில் இன்று மூன்றாவதாக குளத்துக் கொக்கு - INDIAN POND HERON.

புதன், 17 மே, 2023

மரம் ஒரு வரம்

 

“மரம் ஒரு வரம்”.  ‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என்ற வாசகங்கள் பயணத்தின் போதெல்லாம் முன் செல்லும் வாகனத்தின் பின்னால் எழுதியிருப்பதை நாம் எல்லோரும் எத்தனையோ முறை பார்த்திருப்போம். ஒரு மரம் எனக்கு எப்படி வரமானது என்பதைப் பற்றித்தான் இங்கு நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

சில்லு சில்லாய் - 9 - ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்

 

இரு நாட்களாக ஒரு பணி செய்து கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டு கிராமங்கள், பஞ்சாயத்துகள், ஊராட்சிகள், துணை மாவட்டங்கள், மாவட்டங்கள் என்று பல்வேறு பிரிவுகளில் ஆங்கிலத்தில் பதியப்பட்ட Excell கோப்பு. ஊரின் பெயர்களைத் தமிழில் பதிய வேண்டும். 

புதன், 5 ஏப்ரல், 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 20 - லால்பாக் மலர் கண்காட்சி 2


முந்தைய பதிவை வாசித்த, கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. செந்நாரை, சாம்பல் நாரை எனும் ஹெரான் - HERON வகைகளில் அடுத்து குளக் கொக்கு/POND HERON அது ப(ம)றந்து போகும் முன், பற்றி போட நினைத்தேன். ஆனால் இன்னும் சில காணொளிகள் தொகுத்து எடிட் செய்ய வேண்டும்.  

வெள்ளி, 31 மார்ச், 2023

சில்லு சில்லாய் - 8 - கிழிஞ்சுது போ

 

கிழிஞ்சுது போ 1


யாராக்கும் வந்திருக்கறவா, இவா எல்லாம்?”

ஒன் (கொள்ளுப்) பேரனோட கூட்டாளிங்க

"கூட்டாளிகளா சரி சரி" என்று சொல்லிவிட்டு, பாட்டி குரலைத் தழைத்துக் கொண்டாள்.

செவ்வாய், 21 மார்ச், 2023

ரப்பர் வேளாண்மை - பகுதி - 3


பகுதி 1, பகுதி 2

முந்தைய பதிவில், வெயிலில் உலர்த்திய ரப்பர் ஷீட்டில் இருக்கும் எஞ்சிய ஈரப் பதத்தை வெளியேற்றப் புகையிட வேண்டும், அதை அடுத்த பகுதியில் பார்க்கலாம் என்று சொல்லி முடித்திருந்தேன். இப்போது அதைப் பற்றி.

செவ்வாய், 14 மார்ச், 2023

சில்லு சில்லாய் - 7 - மாய வலைத் தொடர்பு உலகம்

 

என்னிடம் தொடர்பு எண்ணாக இருந்த என் தூரத்து நட்பு!!!!  (தூரத்து உறவு என்பது போலான பொருள்!!ஹிஹிஹிஹி) எப்போதேனும் உதவிக்கு அழைப்பதுண்டு. அப்படி ஓர் உதவிக்காக அழைத்தேன். இணைப்பு கிடைத்ததும்,

திங்கள், 6 மார்ச், 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 19 - சாம்பல் நாரை - Grey Heron

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - வீட்டருகே இருக்கும் இரு ஏரிகளில் நடைப்பயிற்சி செய்யும் ஒவ்வொரு தினமும் பார்த்து ரசித்த பறவைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் படங்களுடன் ஒவ்வொரு பதிவில். 

ஹெரான் வகையில் பல உள்ளன. நான் பார்த்த மூன்று வகைகளில் - Purple Heron (செந்நாரை), Grey Heron (சாம்பல் நாரை), Pond Heron (குளத்துக் கொக்கு) - முன்பு செந்நாரை (Purple Heron) பற்றி நான் எடுத்த படங்களுடன் தகவலும் பகிர்ந்திருந்தேன்.  இப்போது அதே வகையைச் சேர்ந்த சாம்பல் நாரை - GREY HERON

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

ரப்பர் வேளாண்மை – பகுதி - 2

 

ரப்பர் வேளாண்மை - பகுதி - 1

முதல் பகுதியை வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. அதில் ரப்பர் பால் சேகரிப்பது வரை சொல்லியிருந்தேன். இனி அதை அடுத்து என்ன செய்யப்படுகிறது என்பது இப்பகுதியில்.

ரப்பர் பால் சொட்டுவது, மரத்தை சீவி ஓரிரு மணி நேரத்தில் நின்று விடுவதால், அதன் பின் பால் சேகரிக்கப்படுகிறது. அப்படி சேகரிக்கும் போது கப்பிலிருந்து நன்றாகப் பால் வழித்து எடுக்கப்பட வேண்டும்.

சனி, 18 பிப்ரவரி, 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 18 - வீட்டுத் தோட்டத்தில் கூ...குக்கூ


சென்ற பதிவை வாசித்த கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. ஒரு சிலருக்குப் பயிற்சிகள் பயன்பட்டன என்பதும் மகிழ்ச்சி.

நாங்க ஜிப்சி கூட்டம். ஊர் ஊரா மாறுவோம் இல்லைனா வீடு மாறுவோம். வீடு  கூட மாறலைனா எப்படி? இருப்புக் கொள்ளாது. ஏதானும் ஒரு காரணம் கிடைத்துவிடும்! அப்படி ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன்! கிடைத்துக்கொண்டே இருக்கும் அனுபவங்கள்.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி - படுத்துக் கொண்டு செய்யும் சில எளிய பயிற்சிகள்

எல்லா நாட்களையும் நாம் சில சிறிய எளிய பயிற்சிகளுடன் தொடங்குவது நல்லது. இப்பயிற்சிகளைச் செய்யும் போதே நம் உடல் சரியாக இருக்கிறதா என்றும் தெரிந்துவிடும். அப்படி ஏதேனும் சிறிய பிரச்சனை தெரிந்தால், அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்றிருக்காமல் உடனே மருத்துவரைச் சென்று பார்த்துவிடலாம்.

புதன், 8 பிப்ரவரி, 2023

நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி - உட்கார்ந்து செய்யும் சில எளிய பயிற்சிகள்

 

அடுத்து உட்கார்ந்து செய்வது, படுத்துக் கொண்டு செய்வது, மற்றும் சில குறிப்புகள் என்று கூடியவரை ஒரே பதிவிலோ அல்லது இரு பதிவுகளிலோ முடித்துவிடப் பார்க்கிறேன் என்று சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். ஆனால் இப்பதிவில் நாற்காலியில் உட்கார்ந்து செய்யும் சில எளிய பயிற்சிகள் மட்டும் சொல்கிறேன். தரையில் அமர்ந்து செய்யும் பயிற்சிகள் உண்டு. அவை பெரும்பாலும் யோகாசனங்கள் என்பதால் இங்கு தரவில்லை. மேலும் பலருக்கும் தரையில் அமர முடிவதில்லை என்பதாலும் தரவில்லை. அடுத்த பதிவில் படுத்துக் கொண்டு செய்யும் பயிற்சிகள் சில சொல்லி சில குறிப்புகளுடன் முடித்துவிடுகிறேன். 

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

சில்லு சில்லாய் - 6 - வைரல் பாய்ஸ், பாட்டி, திரு சைலேந்திர பாபு

 

இப்போதைய பெரும்பான்மை இளைஞர்கள், பெண்கள் பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள், செலவு செய்கிறார்கள், அப்பா அம்மாவின் கஷ்டம் புரிந்து கொள்வதில்லை என்ற பரவலான பொதுவான கருத்துகள் எங்கும், வலைத்தளங்களிலும் சொல்லப்படுகிறது. விதிவிலக்குகளை நான் சொல்லவில்லை.

சமீபத்தில் ஒரு வைரஸ் பற்றிய தகவல்கள் தேடப் போக தேவையில்லாத காணொளி ஒன்று வந்து கொண்டே இருந்தது. இப்படித்தான், நம் விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பவர் போல இந்தக் கொடை வள்ளல் கூகுள் நாம் தேடும் விஷயங்களில் உள்ள ஒரு சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு அதற்கான விஷயங்களை, காணொளிகளைக் காட்டிக் கொண்டே இருக்கும்.

திங்கள், 30 ஜனவரி, 2023

நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி - கைகள், கழுத்து, தோள்பட்டைக்கான பயிற்சிகள்


Relax பண்ணிக்கோங்க. அடுத்தாப்ல, நின்று கொண்டு இடுப்புக்கு மேலே செய்யும் மிக எளிதான சில பயிற்சிகள் செய்வோம்ஓகேயா…// இது சென்ற பகுதியில் இறுதியில். இப்போது இன்றைய பதிவு

எழுத்தில், படங்களின் மூலம் சொல்வதை விட நேரடிப்பயிற்சி நல்லது என்பதை நான் மீண்டும் இங்கு வலியுறுத்துகிறேன். யோகா ஆசனங்களை எப்படி ஒரு ஆசிரியரிடம் கற்றுக் கொண்டு செய்வது நல்லதோ அப்படி, இப்படியான சில பயிற்சிகளை உடல் உபாதைகள் ஏதேனும் இருந்தால், தகுந்த மருத்துவர், ஃபிசியோதெராப்பிஸ்ட்டிடம் ஆலோசனை பெற்று கற்றுக் கொண்டு செய்வது நல்லது.

வியாழன், 26 ஜனவரி, 2023

ரப்பர் வேளாண்மை - பகுதி 1

 

இயற்கையோடு இணைந்து வேளாண்மை செய்து வாழ்பவர்கள்தான் நம் நாட்டில் பெரும்பாலும்அதனால்தான்உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்மற்றவர்கள் எல்லாம் அவர்களைத்தொழுதுண்டு வாழ்பவர்கள்என்று சொல்லப்படுகிறதுவேளாண்மையில் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றுடன் காப்பி, தேயிலை, ஏலம், ரப்பர் போன்றவைகளும் அவரவர்களுக்கான சூழல்களில் பயிரிடப்பட்டு பராமறிக்கப்படுகிறதுதான்இவற்றில் ரப்பர் பராமரிப்பும், பயனெடுப்பும் பற்றித்தான் இங்கு நான் உங்களுடன் நான் கண்டறிந்தவற்றைப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.

திங்கள், 23 ஜனவரி, 2023

நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி - நின்று கொண்டு செய்யும் பயிற்சிகள்-தொடர்ச்சி

 

சென்ற பகுதியில், நின்று கொண்டு செய்யும் பயிற்சிகள் இன்னும் சில பற்றி அடுத்த பகுதியில் தொடர்கிறேன், என்று சொல்லியிருந்தேன். இதோ இங்கே. இவை எல்லாமும் நான் செய்வதுதான் ஆனால் நான் செய்யும் படங்கள், காணொளிகள் எடுக்க முடியாததால் இங்குப் பகிர முடியலை.  ஒவ்வொன்றையும், லெஃப்ட் ரைட் தவிர நான் 30 எண்ணிக்கை செய்வதுண்டு. லெஃப்ட் ரைட் மட்டும் 100 எண்ணிக்கை செய்வதுண்டு.  

வியாழன், 19 ஜனவரி, 2023

நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி - நின்று கொண்டு செய்யும் பயிற்சிகள்


சென்ற முதல் பகுதியில், முதலில் நின்று கொண்டு செய்யும் சில பயிற்சிகள், நிறைய இருந்தாலும், எளிதாகச் செய்ய முடிந்த, நான் ஃபிசியோதெரப்பிஸ்டிடம் கற்றுக் கொண்ட சில பயிற்சிகள் பற்றி இணையத்திலிருந்து எடுத்த படங்களுடன் அடுத்த பதிவில் சொல்கிறேன், என்று முடித்திருந்தேன். அதுவும் பாதம் முதல். 

சனி, 14 ஜனவரி, 2023

நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி

 

தை பிறந்தால் வழி பிறக்கும்! தங்கமே தங்கமான எங்கள் நட்புகள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் மகிழ்வாக வாழ்ந்திட வாழ்த்துகள்! (துளசிதரன், கீதா)

(இந்த வரியைப் பார்த்து வாழ்த்துகளை மட்டும் சொல்லிவிட்டு ஓடிடாதீங்க! இதை முன்னரே சில பதிவுகளில் சொல்ல நினைத்ததுண்டு. இப்ப எபி வியாழன் பதிவில் நம்ம ஸ்ரீராம் சொல்லியிருந்த ஒரு வரி எனக்கு இதை நினைவுபடுத்தியது!!)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

வெள்ளி, 6 ஜனவரி, 2023

இந்திய கடற்படையின் கிழக்குக் கரையோரத் தலைமையக நகரத்தில் பயணம் - 13 - Bபோரா குஹாலு (Borra Caves)

பகுதி 12, பகுதி 11பகுதி 10, பகுதி 9பகுதி 8பகுதி 7பகுதி 6,  பகுதி 5,  பகுதி 4பகுதி 3பகுதி 2பகுதி 1

சென்ற பகுதியின் இறுதியில் தடிகுடா நீர்வீழ்ச்சி பற்றி சொல்லி  அங்கிருந்து சுமார் 11.5 கிமீ தூரத்தில் இருக்கும் போரா குகைகளைப் பார்க்கச் சென்றோம் என்று சொல்லி முடித்திருந்தேன்.  பதிவுகளை வாசிப்பவர்கள், கருத்திடுபவர்கள் அனைவருக்கும் நன்றி.