இயற்கையின் ரகசியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கையின் ரகசியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 மே, 2021

இந்த அன்னையரையும் வாழ்த்துவோமே

வலையுலக நட்புகள் அனைவருக்கும் வணக்கம். சமீபமாக வலையில் அவ்வப்போது கருத்துகள் போட்டாலும் எங்கள் தளத்தில் பல மாதங்களுக்குப் பிறகு எட்டிப் பார்க்கிறோம். தொடர வேண்டும் என்றும் முயற்சி, நம்புகிறோம். இன்று அன்னையர் தினம் என்று அறிந்ததும் ஒரு பதிவு போட்டு தொடங்கலாமோ என்று எண்ணி இதோ..

எல்லாவற்றிற்கும் விவரங்கள் கொடுக்க முடியவில்லை. ஒரு சிலவற்றிற்கு மட்டும் கொடுத்திருக்கிறேன். 

அன்னையர் தினம் என்றால் அன்னையர் மட்டுமல்ல, தாயுமானவராய் இருக்கும் தந்தைகளுக்கும் அன்னையர் தின வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்வோம். 

மனித குல அன்னையர் மட்டும் தானா?! தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கவும், வளர்க்கவும், அசாதாரண நடவடிக்கைகளை எடுப்பவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல. செல்லங்களிலும் அன்னையர் தங்கள் குழந்தைகளுக்குத் தங்கள் உணவைத் தேடிக் கொள்வது முதல், தங்களைப் பாதுகாத்துக் கொள்வது வரையான பாடங்களைப் புகட்டுகின்றனர். தன்னையே தியாகம் செய்யும் அன்னைகளும் இருக்கிறார்கள். இதோ சில உதாரணங்கள். இய்ற்கையில் தான் எத்தனை எத்தனை ரகசியங்கள்!






முட்டை இட்டதும் அம்மா பெங்க்வின் ஆண் பெங்க்வினிடம் பாதுகாக்க விட்டுவிட்டு கடலில் மீன் பிடிக்க 50 மைல் தூரம் பயணம் செய்யும். அவற்றைப் பிடித்துக் கொண்டு தன் குஞ்சுகளுக்குக் கொண்டுவரும். இங்கு ஆணும் தாயுமானவர் ஆகிறார்!!!!



ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? குட்டிகள் பிறந்ததும் பாதுகாப்பிற்காக அவற்றை தாடையில் சுமந்து கொண்டு மீன் பூச்சிகள் நத்தைகள் என்று அவற்றின் உணவைப் பழக்கத் தண்ணீரில் பழக்கப்படுத்துமாம் இப்படி ஒரு வருடம் ..

ம்மா ஹார்ன்பில் தன் பசி வலி எல்லாம் மறந்து அடைகாக்கும் காலமான இரு மாதங்கள் தன் பொந்திலேயே இருந்து அடைகாத்து குஞ்சு பொரிக்குமாம்.



இதுவும் ஆச்சரியமான விஷயம். கொஞ்சம் கூட சுயநலமற்ற அம்மாக்கள் எனலாம். ஆக்டோபஸ் 50 ஆயிரத்திற்கும் மேல் முட்டையிடும். அவற்றின் மீது அமர்ந்து முட்டைகளின் கூடவே இருந்து எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும், 14 லிருந்து 53 மாதங்கள் வரை. அவற்றிற்கு ஆக்சிஜன் கிடைப்பதற்கு அவற்றின் மீது நீரோட்டங்களை வீசிக் கொண்டே இருக்கும் (வாட்டர் கரன்ட்) தனது உணவைப் பற்றிக் கூட கவலைப்படாமல். குஞ்சுகள் பொரியும் போது அம்மா இறந்துவிடுமாம்!

Meerkats - கீரிப்பூனை
இவை கூட்டுக் குடும்ப உதாரணம். குட்டிகளைப் பேணுவது அவற்றிற்குத் தேவையான நுணுக்கங்களைக் கற்றுக் கொடுப்பது சகோதரிகளும் அத்தைகளுமாம்


Earwigs - விட்டில் பூச்சிகள் / மூலைவிட்ட பூச்சிகள்
பல இனங்களில் பூச்சிகளில் இல்லாத தாய்க்கவனிப்பு இவற்றில் காணப்படுகிறது. இவற்றின் பெண் பூச்சிகள் முட்டைகளைப் பொரித்த பிறகும் இள உயிரிகளை இரண்டாவது தோலுரிப்பு வரை காப்பாற்றுகின்றன. (முதிரும் முன்பாக 5 முறை தோலுரிக்கின்றன)

இவை சில உதாரணங்கள். எப்போதோ இப்படி ஒரு பதிவு எழுத எடுத்து வைத்திருந்த படங்கள் நினைவுக்கு வர தேடி எடுத்து இங்கு பகிர்ந்துள்ளேன்.

நன்றி அனிமல் ப்ளானட், விக்கி, கூகுள்

----கீதா

செவ்வாய், 28 ஜூலை, 2020

ஹீரோயின் துங்கா - கறுஞ்சிறுத்தை - அக்கம் பக்கம் - 2

இன்றைய பொழுது எல்லோருக்கும் இனிதாக அமையட்டும்!
சென்ற பதிவில் மருத்துவக் குறிப்புகள் சொல்லப்படும் காணொளிகள் பற்றிச் சொல்லியிருந்தேன். 

வியாழன், 10 மே, 2018

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே!

அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்ளை நிற வண்ணத்துப் பூச்சிகள். இதோ கீழே உள்ள படத்தில் போன்றவை.

இது என் பால்கனி தோட்டமல்ல! நடைப்பயிற்சி செய்யும் இடத்தில் சீசனின் போது எடுத்தது. 

பூப்பூவாய்ப் பறந்து போகும் பட்டுபூச்சியக்காக்கள் பச்சை நிறமே பச்சை நிறமே என்று கறிவேப்பிலையைச் சுற்றி சுற்றிப் பறந்திட, கறிவேப்பிலை, ஏன்? சுத்தி சுத்தி வந்தீகனு கேட்டது. வாச கறிவேப்பிலையே என்ற வண்ணத்துப் பூச்சிகள் கறிவேப்பிலையின் மீது அமர்ந்தன. வண்ணத்துப் பூச்சிகளைப் புகைப்படம் எடுக்க ஆசை இருந்தாலும் அருகில் சென்றால் அவை இலையின் மீது அமராமல் பறந்துவிடும் பாவம் என்று புகைப்படம் எடுக்கவில்லை.

சிறிது நாட்கள் கழித்துப் பார்த்தால் கறிவேப்பிலை செடியில் கரும்பச்சை நிறத்தில் புழு ஒன்று தென்பட மற்றொரு புழு இலையின் அடியில் இருந்தார். கேமரா ரிப்பேருக்குப் போயிருந்ததாலும் மொபைலில் படங்கள் சரியாக வருவதில்லை அதன் கேமராவில் ஏதோ பிரச்சனை போலும் என்று நினைத்துவந்ததாலும் படம் எடுக்காமல் இருந்த நான் இதனை வந்தது வரட்டும் என்று எடுத்தேன். நன்றாக வரவில்லை என்று தெரியும். மொபைலில் கேமராவில் என்ன பிரச்சனை? காரணம் பதிவின் முடிவில்!!! ரொம்ம்ம்ம்ப அறிவுக் கொழுந்து நான் என்பது புரியும்!! 

இதோ அம்புக் குறி இட்டுக் காட்டியிருக்கிறேன் பாருங்கள் அதுதான் முதலில் வந்த கரும்பச்சை நிறப் புழு(க்கள்.) கொஞ்சம் கூர்ந்து பார்த்தால்தான் தெரிவார். மற்றொருவர் புகைப்படத்தில் சரியாக வரவில்லை. அதனால் இங்கில்லை


தினமும் பார்த்தாலும் அத்தனை வித்தியாசம் டக்கென்று தெரியவில்லை. 4, 5 நாட்களில் பார்த்தால் அசந்துவிட்டேன் வியப்பில். கண்ணிற்கு எதுவும் புலப்படவில்லை. புழுக்கள் என்ன ஆனார்கள்? என்று பார்த்தால் கொழு கொழுவென்று பச்சையோடு பச்சையாக இலைகளில் உட்கார்ந்து கொண்டு தொங்கிக் கொண்டிருந்தார்கள். இரண்டு இலைகளைக் காணவில்லை. என்ன அழகாய் கொழு கொழுவென்று இருக்கிறார்கள் பாருங்கள்!! கேமரா என்றால் இன்னும் நன்றாக, அழகாகத் தெரிந்திருப்பார்கள். இருந்தாலும் க்ளிக்கினேன்.

அவற்றை ரசித்தேன் ரசித்தேன். அதன் அழகை ரசித்துக் கொண்டே இருந்தேன். அவை நகர்வதே தெரியவில்லை. சரி அவை சுதந்திரமாகத் தின்னட்டும் என்று படங்கள் எடுத்துவிட்டு உள்ளே வந்துவிட்டேன். மகனுக்கும் அனுப்பினேன். இந்தப் படங்களைத்தான்!! 

மகன் சொன்னான் பாவம் அம்மா. அதை ஒன்னும் செஞ்சிடாதே. சாப்பிட்டா சாப்பிடட்டுமே இப்ப என்ன? நீ கடைல வாங்கிக்கமா கறிவேப்பிலை எல்லாம். “அடேய்! மகனே! "ஒன்னும் செஞ்சிடாதே"?? உனக்குச் சொல்லிக் கொடுத்த எனக்கே பாடமா?”


அடுத்த 4 தினங்களில் பார்த்தால் நான் வியப்பின் உச்சியில். எல்லா இலைகளையும் நன்றாகத் தின்று செடியை மொட்டை அடித்து இருந்ததைப் பார்த்ததும், கேமராவும் ரிப்பேர் சரியாகி வந்திருந்ததால் உடனே க்ளிக்கிவிட்டேன். அப்போது இந்தக் கொழு கொழு பச்சையான புழுக்களைக் காணவில்லை. எங்கே போனார்கள்?

பாருங்கள் எப்படி சாப்பிட்டுருக்கிறார்கள் கமுக்கமாய்! ஹா ஹா ஹா

என்னாச்சு மீண்டும்? காகம் வந்து கொத்திக் கொண்டு சென்றுவிட்டதா? என்று தோன்றிட கறிவேப்பிலையை ஆராய்ந்தால் ஆஹா! அவை இலையையே கூடாரம் போல் கூடு கட்டிக் கொண்டு கருவறையாக்கிக் கொண்டுவிட்டன. இது எப்படி செய்தன என்பதைப் பார்க்க முடியவில்லை. அவை எப்போது செய்யும் என்று தெரியவில்லையே! அனிமல் ப்ளானெட் எல்லாம் செய்வது போல் அங்கே எப்போதும் ஓடும் கேமரா ஒன்றை வைக்க வேண்டும் போல!   

எப்படி இருக்கிறது பாருங்கள். புழு இருப்பது தெரிகிறதல்லவா? இலையையே கூடாரம் போல் செய்து கருவறையாக்கிக் கொண்டு!!!
இது மற்றொருவரின் கருவறை


சரி அடுத்து எப்படியும் வண்ணத்துப் பூச்சி வருமே அதைப் பார்க்க வேண்டும் என்று காத்திருந்து காத்திருந்து.....!காத்திருந்தேன். என்று எப்போது ப்ரௌன் நிறமாகியதோ? பச்சை ப்ரௌன் நிறமாகியிருந்தது. உள்ளுக்குள் இருக்கா என்றும் தெரியவில்லை. அதைத் தொட்டுப் பார்த்து அதற்குத் தொந்ததரவு கொடுக்க வேண்டாமே என்று தோன்றிட விட்டுவிட்டேன். நாள் பார்த்தால் கூடு வெற்றிடமாகத் தோல் மட்டும் இருந்தது போல் தோன்றிட தொட்டுப் பார்த்தேன். வெறும் கூடு மட்டுமே இருந்தது. வண்ணத்துப் பூச்சி பிறந்து பறந்து போய்விட்டது போலும். வண்ணத்துப் பூச்சி வெளியில் வருவதைப் பார்க்க இயலவில்லை என்று. வருத்தமாகிவிட்டது! அவள் பறந்து போனாளே! என்னை மறந்து போனாளே!! ஹா ஹா ஹா…  

கூடு மட்டும். பூச்சியைக் காணவில்லை

ஓ! பட்டர்ஃபளை பட்டர் ஃப்ளை! ஏன் விரித்தாய் சிறகை!

இந்த வருடம் சீசன் தொடங்கட்டும்! விடுவேனா? இம்முறை என் கறிவேப்பிலை பூக்கத் தொடங்கிவிட்டது! எனவே வண்ணத்துப் பூச்சிகள் நிச்சயமாக வரும். இம்முறை ஆதியிலிருந்து எடுத்திட வேண்டும். விடமாட்டேன்! விடமாட்டேனாக்கும்!! 

  மொட்டுவிட்டிருக்கும் கறிவேப்பிலை. (பொத்தி வைச்ச கறிவேப்பிலை மொட்டு!!!) இரவில் எடுத்த புகைப்படம். நேற்று ஒரு சிறு குளியல் அவளுக்கு

இது பகலில் எடுத்தேன் மொட்டுவிட்டிருக்கும் கறிவேப்பிலையை. எவ்வளவு அழகாக இருக்கிறாள் இல்லையா? குளித்தும் அதற்குள் தூசி படிந்து அழுக்காகிவிட்டாள். குளிப்பாட்ட வேண்டும். பூ பூக்கும் ஓசையைக் கேட்கக் காத்திருக்கிறேன்

தற்போது என் கேமரா முழுவதும் பழுதடைந்துவிட்டது. எனவே மொபைலில் தான் எனது மூன்றாவது விழி படங்கள் எல்லாம் எடுக்கிறேன். இதோ இந்த கடைசி இரு படங்களும் மொபைலில் தான் எடுத்தேன். கேமரா இல்லாதது ஏதோ போல இருக்கு. மொபைலில் சில நன்றாக வருகின்றன. சில படங்கள் நன்றாக வருவதில்லை. என் மொபைலும் மொபைல் கேமராவும் அத்தனை ஹை டெக் இல்லை.

என் மொபைல் கேமராவில் என்ன பிரச்சனை இருந்தது? மொபைலில் கேமரா சரியில்லை படங்கள் எல்லாம் ஏதோ புகை மூடியது போல வருகிறது என்று நினைத்திருந்த எனக்கு ஒரு நாள் திடீரென்று மூளையில் பல்பு எறிந்திட கேமராவை பார்த்தால்.....அதன் மேல் ஏதோ இருப்பது போல் புலப்பட.....அறிவுக் கொழுந்தே புது கேமராவின் லென்ஸ் மேல் கண்ணாடிப் பேப்பர் ஒட்டிர்யிருப்பாங்க அதுகூடவா உனக்குத் தெரியாது? தெரியலை? அதை ஒன்றரை வருஷமா அகற்றாமலேயே இருந்திட்டு மொபைல் கேமரா சரியில்லை சரியில்லை அப்படினு புலம்பிக்கிட்டு...என்னா அறிவு!! ஹிஹிஹிஹிஹி!!! பேப்பர் இருப்பதைக் கண்டுபிடிச்சு அதை அகற்றிய இந்த அறிவுக் கொழுந்தை, குழந்தையை எல்லாரும் ஜோரா கைதட்டி பாராட்டுங்கப்பா!!!

-------கீதா



செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 6 - பூப்பூவாய்ப் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ!!!!

இந்த அன்புத் திருநாள் மட்டுமின்றி எந்நாளும் எப்போதும் உங்கள் எல்லோருக்கும் அன்பார்ந்த மலர்க்கொத்து
பூப்பூவாய்ப் பூத்திருக்கும் ஆயிரம் பூ 
பூவிலே சிறந்த பூ என்ன பூ
அன்பு!!














                                    மலர்களே! மலர்களே ஏன் இந்த மௌனம்?! 
                                                    அன்பிற்கு மொழி உண்டோ?
                                                                           இல்லை!
                                                   அதனால் தான் இந்த மௌனம்

அன்பெனும் இறைவனிடம் படைக்கையிலும் கூட இயற்கையால் படைக்கப்பட்ட எங்களிடம் சாதி பார்க்கிறார்கள் மனிதர்கள்! ஆனால், ஆர்பாட்டமில்லாத அன்பு! சுயநலமற்ற அன்பு! எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு! கட்டளைகள் இல்லாத அன்பு! உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் அன்பு! என்று அதனைச் சொல்லும் விதமாய் மலர்ந்திட்ட மலர்கள் நாங்கள்! அதுவே இயற்கை படைத்திருக்கும் பூக்களாகிய எங்களின் வாசம்! இயற்கை ஆட்சி செய்யும் இயற்கையால் படைக்கப்பட்ட இவ்வுலகின்  நேசம்! ஆதலால் அன்பு செய்வீர்! இயற்கையையும், இவ்வுலகம் முழுவதையும்!

அன்பெனும் பூவாசம் தொடரும்!

------கீதா


சனி, 17 டிசம்பர், 2016

வார்த - என் பார்வையிலும், எனது மூன்றாவது விழியின் பார்வையிலும் -3

சென்னையின் இயல்பு வாழ்க்கையையே ஒரு சில மணி நேரங்களில் வாரிக் கொண்டுச் சென்ற வார்த. ஒரு சில மணி நேரங்கள்தான்! ஆனால், சுழற்றிச் சுழற்றி அடித்து வாரி ஆட்டம் போட்டது. இயற்கை அன்னையின் சிக்சர் பௌன்சர்! இயற்கை அன்னை எவ்வளவு அழகானவளோ, எவ்வளவு அமைதியானவளோ, எவ்வளவு நன்மை தருவாளோ, அத்தனைக்கும் நிகராக, அந்த அன்னை சீற்றம் கொண்டால் பெரும் சீற்றத்துடன், பேரிசைச்சலுடன், தாண்டவம் ஆடி எல்லாவற்றையும் புரட்டியே போட்டும் விடுவாள். எங்கள் வீட்டின் - முதல் மாடி - பால்கனி வழியாகத் தண்ணீரை அறைக்குள் தள்ளிக் கொண்டே இருந்தாள். நாங்களும் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் தள்ளி விட்டுக் கொண்டே இருந்தோம். அன்னையின் இந்தச் சீற்றத்திற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே, பல எண்ணங்களுடன், நான் வார்த புயலையையும் , மழையையும் ரசித்தேன்.


புயல் காற்று நின்றதும் நான் எங்கள் பகுதியைப் பார்வையிடச் சென்றேன். புயல் கரையைக் கடந்து சென்றதும், போருக்குப் பின் அமைதி என்பது போல் அப்படியொரு அமைதி. ஆனால் நிலமோ, போருக்குப் பின் வீரர்களும், யானைகளும், குதிரைகளும் மடிந்து இரத்த வெள்ளத்தில் பிணக்குவியல்கள் மலை போல் காணப்படுவது போல், மரங்கள் வேரோடும், ஒடிந்தும் வீழ்ந்து, சாய்ந்திருக்க, நின்றிருந்த மரங்களில் பல, கணவரைப் போரில் இழந்த விதவைகள் போல் இலைகள் உதிர்ந்து மொட்டையாய், ஒரு போர் பூமி போல் காட்சியளித்தது. அளிக்கிறது. ஆடி அடங்கியபிறகு சிறிது நேரத்தில் வருடிக் கொடுக்கும் சிறிய காற்று!

“அடிப்பாவி! நீயா சற்று நேரம் முன்பு இப்படித் தலைவிரித்தாடியது? ஒன்றுமே நடவாதது போல் இப்படி வருடிக் கொடுத்துக் கொண்டு அமைதி காக்கிறாயே! பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டுவது போல் அல்லவா இருக்கிறது உன் செயல்! உன் சீற்றத்திற்கான காரணம்தான் என்னவோ?” என்றும் என் மனம் கேட்டது.

“ஏய் மனிதா நீ உன் பேராசையில், உனக்கு நிழல் கொடுத்த, கனிகள் கொடுத்த, மண் அரிப்பைத் தடுத்த, நிலத்தடி நீரை சேமிக்க உதவிய என் மரங்களை வெட்டி வீழ்த்தி அதில் அடுக்கடுக்காய் கட்டிடங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் என்று கட்டினாயே! இப்போது பார் அதே மரங்களை நான் வீழ்த்துகிறேன்! இப்போது பார் நீ வசிக்கும் நிலத்தை. வெட்ட வெளியாகிவிட்டது இல்லையா? ஒவ்வொரு மரத்தையும் வளர்க்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை உற்றுக் கவனித்துக் கற்றுக் கொள்! இனி வரும் கோடை மேலும் கடும் கோடையாக இருக்கும் என்பதை நினைவில் நிறுத்திக் கொள். அத்தண்டனையை அனுபவி. இனியேனும் உனக்குப் புத்தி வரட்டும்!” என்று சொல்கிறாளோ என்பது போல் தோன்றியது.

"சரி மனிதனைத் தண்டிக்க நினைக்கிறாய்! மிகவும் சரியே! ஆனால், வாயில்லா உயிர்களான பறவைகளும், குஞ்சுகளும், இன்னும் குஞ்சுகள் வெளிவராத நிலையிலான முட்டைகளும் அல்லவா  அன்று இறந்தன." என்ற என் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. இல்லை இல்லை என் மூளைக்குள் அதற்கான பதில் இல்லை!
 
இந்திராநகர் பேருந்து நிறுத்தம்
நான் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பகுதி
எங்கள் பகுதி முழுவதும் நிழற்சாலைகள். பசுமை நிறைந்த இடம். ஆனால், நான் கண்டதோ? நான் நடைப்பயிற்சி செய்யும் மரங்கள் அடர்ந்த நிழற்சாலைகள் அனைத்தும் வெட்டவெளியாய், வேரோடு சாய்ந்த பெரிய மரங்கள், இலைகள் இழந்து மொட்டையாய் மரங்கள், கிளைகள் ஒடிந்து ஊனமுற்ற மரங்கள் என்று சாலையில் குவிந்து இருந்தக் காட்சியைக் கண்டு என் மனம் வெம்பி, விக்கித்து நின்றுவிட்டேன், இனி எத்தனை வருடங்கள் ஆகும் மீண்டும் இச்சாலைகள் அனைத்தும் முன்பு போல் நிழல் தருவதற்கு?

மறு தினமே அடித்த வெயிலின் கடுமை தெரிந்தது! பல இடங்கள் சென்றேன். அனைத்துச் சாலைகளிலும் மரங்கள் வீழ்ந்து போக்குவரத்தைத் தடுத்திட போக்குவரத்து நெரிசல். போக்குவரத்தை ஒழுங்கு படுத்திட நிறையக் காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். பல இடங்களில் கார்களும், கட்டிடங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பேருந்து ஒன்று கவிழ்ந்தது என்று சொல்லப்பட்டு விழுமியம் பகிரப்பட்டது. எனக்குக் கிடைக்கவில்லை.

எல்லா இணையத் தொடர்புகளும் அற்று, அலைபேசிகள் தொடர்புச் சேவையும் செயலிழந்து, மின்சாரம் தடைப்பட்டு, தண்ணீரில்லாமல் என்று இதுவரை இன்னும் முழுவதும் மீண்டபாடில்லை. இணையத் தொடர்பும், அலைபேசித் தொடர்புகளும், மின்சாரமும் அவ்வப்போது செயலிழந்து விட்டுவிட்டுத்தான் வருகிறது.

அன்று புயல் நின்றதும், அந்தந்தப்பகுதியைச் சேர்ந்த மக்களே, பொதுச் சேவையை எதிர்பார்க்காமல் மரங்களை வெட்டி அகற்றிச் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தத் தொடங்கிவிட்டனர். தற்போது பொது மக்களுடன், பொதுச் சேவைப் பணியாளர்களும், மலை போல் குவிந்து கிடக்கும் மரங்களையும், குப்பைகளையும் அகற்றிடத் துப்புரவு பணியாளர்களும் இணைந்து கொண்டு மீட்புப் பணிகள் நடக்கின்றது, என்றாலும், சென்னை முழுவதும் இயல்பு நிலைக்குத் திரும்பிட இன்னும் பல நாட்கள் ஆகலாம் என்றே தோன்றுகின்றது. கட்டிடக் காடாக இருந்த சென்னை இப்போது காடு போல் காட்சியளிக்கிறது. கட்டிடங்கள் பெருகிவரும் சென்னையில் இத்தனை மரங்களா என்ற வியப்பு ஒரு புறம். ஐயகோ! இருந்த மரங்களும் இப்படி வீழ்ந்துவிட்டனவே என்று வேதனை மறுபுறம். என்ன செய்வது? நம்மை எல்லாம் மீறிய வலுவாய்ந்த இயற்கையின் சீற்றத்தை எதிர்க்க முடியுமா!!! 

நான் எடுத்த சில புகைப்படங்களுடன் எனது உறவினர் அனுப்பிய மூன்று புகைப்படங்களும்.

 
படத்திலேயே எந்த அலுவலகம் என்று தெரிந்துவிடும். டைடல் பார்க்கிற்கு அடுத்திருப்பது
 டைடல் பார்க் முன் - புயல் நின்றதும் எடுத்த படம்மேலே நந்தனம் சிக்னலில்  
கீழே கோடம்பாக்கம் பகுதி
 மறுதினமே வெயில் சுளீரென்று அடித்தது
 
 கீழே நீலாங்கரையில்
 


----- கீதா
படங்கள் எல்லாம் புயல் அன்றும் அடுத்தும் எடுத்து, பதிவும் எழுதியிருந்தாலும் இணையத் தொடர்பு சரியாக இல்லாததால் இன்றுதான் வெளியிட முடிகிறது. இன்னும் முழுவதும் சரியாகவில்லை.