வியாழன், 30 ஏப்ரல், 2026

அழகே! அழகே! பாரதத்தின் தென் கோடி அழகே - 2

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஜடாயுபுரம் - 2

ஜடாயுபுரம் என்பது தனி ஊரோ அல்லது குடியிருப்புகள் உள்ள பகுதியோ அல்ல. இது நம்ம கிராமத்தின் ஆற்றங்கரைப் பகுதி. முந்தைய பதிவில் போகும் வழியிலுள்ள வயல்கள் தென்னந்தோப்புகள், பழையாறு படங்கள் பகிர்ந்திருந்தேன். ஜடாயுபுரீஸ்வரர் கோயில் மற்றும் அதன் சுற்றுப்புறம் இப்பகுதியில்...

திங்கள், 27 ஏப்ரல், 2026

அழகே! அழகே! பாரதத்தின் தென் கோடி அழகே - 1

 ஜடாயுபுரம் - 1

அழகே! அழகே! பாரதமே அழகு! வடகோடி மட்டுமா அழகு? தென் கோடியும் அழகு! 
பின்னணியில் மலைகளும், வயல்களும், தோப்புகளும், வாய்க்காலும், ஆறும், சுற்றிலும் நீருமாகப் பின்னிப் பிணைந்து இருக்கும் திருவண்பரிசாரத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு சிறு வயதிலிருந்தே ஊரின் மீதான பிடிப்பை விட ஊரைச் சுற்றிப் பொதிந்து கிடக்கும் இயற்கையின் மீது லயிப்பும், காதலும், நேசமும், இயற்கையோடு வாழும் ஆசையும், யதார்த்தத்தில் நடக்கவில்லை என்றாலும், என் மனதுள் ஊறிப் போன ஒன்று. 

திங்கள், 20 ஏப்ரல், 2026

சில்லு சில்லாய் - 25 - Wallowing - சேறு நல்லதா? - மாடி மேல மாடி கட்டி...

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும். 

****************************************

சில்லு - 1 - Wallowing

செவ்வாய், 14 ஏப்ரல், 2026

காதோடுதான்.....

 

சில நாட்களுக்கு முன் பிரயாணம்.வேனலினால் காதிற்குள் கட்டி, சீழ் எனற நிலை! மூன்றாவது காது பயன்படுத்த முடியாத நிலை. காதோடுதான் நான் பாடுவேன்/பேசுவேன்னு நீங்க பேசினாலும் ம்ஹூம் கேட்காது. எனவே மனதோடுதான் நான் பேசுவேன்! விழியோடுதான் விளையாடுவேன்! விழியோடுதான் விளையாடிக் கொண்டிருந்தேன். இப்போது பிரச்சனை தீர்ந்து மூன்றாவது காதைப் போட்டுக் கொள்ள முடிகிறது. எனவே நீங்கள் என் காதிலும் பாடலாம், பேசலாம்.... மனதோடும் பேசலாம், நான் விழியோடும் விளையாடலாம்.