கடைசியாகப் பார்த்த தலக்காடைப் பற்றித்தான் இப்பதிவு. பின்னர் முடிந்தால், என் மனம் ஒத்துழைத்தால் இடையில் விட்ட பகுதியைப் பற்றி எழுதுகிறேன்.
தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
கடைசியாகப் பார்த்த தலக்காடைப் பற்றித்தான் இப்பதிவு. பின்னர் முடிந்தால், என் மனம் ஒத்துழைத்தால் இடையில் விட்ட பகுதியைப் பற்றி எழுதுகிறேன்.
இறைவனடி
சேர்ந்த இருவரது ஆத்மாக்களின் மோக்ஷத்திற்கும், நித்ய சாந்திக்கும் பிரார்த்திப்பதுடன்
தீரா துக்கத்திலாழ்ந்த இருவரது குடும்பத்தினருக்கும்
இப்பேரிழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை எல்லாம் வல்ல இறைவன் நல்கவும் பிரார்த்தனை
செய்வோம். வேண்டிக் கொள்வோம்.
இருவருடனான எங்கள் தொடர்பு பசுமை மாறாத நினைவுகள் நிறைந்தது. முன்பு பகிர்ந்த அந்த இனிய நாட்களை மீண்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது மனதின் வருத்தம் கொஞ்சம் குறையும்தான்.
மத்தியரங்கம், சிவனசமுத்திரம் தலக்காடு என்று தொடங்கியிருந்தேன். இப்போது கடைசியில் பார்த்த தலக்காடு பற்றி எழுதி முடித்திடலாம் என்று எழுதத் தொடங்கிய போது, ஒரே ஒரு இடம் மிகவும் அழகான இடம் பற்றி மட்டும் உங்களுக்குக் காட்டிவிட்டு தலக்காடு போய்விடலாம். சரியா?
ஸ்ரீரங்கம், ஆதிரங்கம் போயாச்சு மத்யரங்கம் போக வேண்டாமா பல வருஷமாச்சு என்று வீட்டில் சொல்லப்பட்டதும், மத்யரங்கத்தின் அருகில்தானே சிவனசமுத்திரமும் தலக்காடும். இந்த இரு இடங்களும் என் லிஸ்டில் பல வருடங்களாக, சொல்லப் போனால், 2001-2002ல் பெங்களூரில் இருந்தபோது போய், அப்போதைய வசதிகள் சரியாக இல்லாததால் - காரணம் நாங்கள் பொதுப்போக்குவரத்தை உபயோகிப்பதால் - சரியாகப் பார்க்க முடியாமல் விட்ட இடங்களாச்சே என்று நம்மவரிடம் சொல்லி அப்ரூவல் கிடைக்குமான்னு ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
4ஜி - இந்தா உன்னைத்தான், அந்த
தங்கச்சி உன்னை அழுத்தி அழுத்தி கூப்பிடுது பாரு.
5ஜி - என்னது? என்னையா? நல்லாருக்கே! ம்ஹூக்கும். காலைலருந்து....6 மணி இருக்குமா...ஹான் அப்ப தொடங்கி இவ்வளவு நேரம் 6 நிமிஷ வீடியோ 7 மணி நேரம் ஆச்சு. தங்கச்சி ஏத்திவிட்ட அவங்க வீட்டாளு வீடியோவை சொமக்க முடியாம சொமந்து மூச்சு திணறி சுத்தி சுத்தி, முக்கி முக்கி அந்த யுட்யூப் பொட்டில போட்டுட்டு ரெஸ்ட் எடுக்கறேன். நீ இவ்வளவு நேரம் சும்மாதானே இருந்த போயேன்.
//பொதுவாக நான் எனது என்று தன்னை கர்த்தாவாக எண்ணிக் கொண்டு செயல்களை செய்யாத பொழுது அவனை கர்மவினைகள் பாதிப்பதில்லை என்கிறார்கள் செய்பவன் நான் என்னால் தான் இது நடக்கிறது என்னும் புத்தியை விட்டுவிட்டு கர்மங்களில் பற்றற்று அவற்றின் பலனையும் எதிர்பாராமல் செயலாற்றுபவனை கர்மா பாதிப்பதில்லை என்பது ரமணர் அறிவுரையின் சாரம்.//
(சிம்லா நாட்கள் - 3 விரைவில் வரும். முடிவுத் தொடர். துளசிக்குச் சற்று உடல் நலம் சரியில்லாததால் காணொளிக்கான குரல் அவரால் கொடுக்க முடியவில்லை. இந்த வாரம் அனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார். பார்ப்போம்.)
பரிந்தோம்பிக் காக்க வேண்டிய ஒழுக்கம்
சுஜாதா அவர்கள் எழுதிய கதையான ஓலைப்பட்டாசு கதையில் சுஜாதா சொல்லியிருந்த ஒரு சம்பவம் குறித்து எங்கள் ப்ளாகில் நம்ம ஜெ.கே. அண்ணா, தான் வேலை பார்த்த இடத்தில் தனக்கும் கிட்டத்தட்ட அதே போல ஒரு சம்பவம் நடந்ததாகச் சொல்லி எபியில் சென்ற சனிக்கிழமை எழுதியிருந்தார்.
சென்ற பதிவில் கால்காவிலிருந்து சிம்லாவிற்கான டாய் ரயில் 7.15 ற்கு என்று தவறாக வந்துவிட்டது. 7 மணிக்குக் கால்காவிலிருந்து (ஹிந்தியில் कालका வாம். எனவே கால்கா) சிம்லாவுக்குச் செல்லும் ஹிமாலயன் தர்ஷன் எனும் டாய் ரயிலில் முன்பதிவு செய்திருந்த பயணம். 1 1/2 மணி நேரம்தான் இருந்தது. டாய் ரயிலில் எங்களால் பயணிக்க முடிந்ததா? என்று சென்ற பதிவின் கடைசி வரி.
பயணங்கள் எப்போதும் மனதுக்கு இன்பமளிப்பவை. அப்படியிருக்க தென் மாநிலத்தவர்களுக்கு வாய்க்கும் வட மாநிலப் பயணங்கள், அதிலும் இமயமலைப் பகுதிகள் என்றால் எப்படிப்பட்ட இனிமை அளிக்கும், யோசித்துக் பாருங்கள்! அப்படி ஒரு இனிய பயணம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் (2024) எனக்குக் கிடைத்தது.