தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!!
இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் பற்றி எழுதிய போது. திரிரங்க யாத்திரை என்று,
ஸ்ரீரங்கப்பட்டினம், மத்யரங்கம்,
ஸ்ரீரங்கம் மூன்று
கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்கும் பயணம் இருப்பதாகச் சொல்லியிருந்தேன், உங்களுக்கு நினைவிருக்கலாம்!
சென்ற பதிவில் ஸ்ரீரங்கப்பட்டின கோவிலின்
படங்கள் சில விவரங்கள் போட்டுவிட்டு மீதி படங்களை அடுத்த பதிவில் சொல்லி முடிக்கிறேன்
என்று சொல்லியிருந்தேன். இதோ.....
பஸ்சிமவாஹினியில் நம்ம கடமையை முடித்துக் கொண்டு
(பதிவும் போட்டாச்சு) ஸ்ரீரங்கப்பட்டினம்
கோவிலுக்குப் போனோம். ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டையையும்
கோவிலையும் 38 வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன்.
அப்பவும் சரி இப்பவும் சரி, நிதானமாக
அங்கு ஒரு நாளேனும் தங்கிப் பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. இது பல பயணங்களிலும் ஏற்படும் ஒன்று. மகன் இங்கு இருந்தவரை நிதானமாகப் பார்ப்பது நடந்தது. இருவரின் அலைவரிசையும் ஒன்று.
சில்லு
- 1 - வரலாறு, பாரம்பரியம் என்பவை இப்படித்தானோ?
மரங்களின் வேர்களில் சித்தர்கள் - என்று படங்களுடன்,
ஸ்ரீராம், ஒரு வியாழன் பதிவில் கொடுத்திருந்தார். பதிவின் ====>சுட்டி <====
//ஆ! அங்கு சீக்கிரத்தில் கோவில் வந்துவிடும்
என்று கருத்தில் சொல்லியிருந்த நினைவு.// அப்போது, இங்கு அருகில் இருக்கும் பூங்காவில் நடந்த ஒரு
சம்பவம் நினைவுக்கு வந்து குறித்து வைத்திருந்தேன். பின்னர் பதிவாக்க மறந்து விட்டுப்
போயிருச்சு.
ரங்கனத்திட்டுவிற்குச்
செல்லும் போது ஆட்டோக்காரர் ஒரு இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னதாகவும் அப்போது அங்கு
நாங்கள் இறங்கவில்லை, பறவைகளைப் பார்த்த பிறகு வரும் போது பார்க்கலாம் என்றும் முடிவு
செய்து சென்றதாகச் சொல்லியிருந்தேன். அந்த இடத்தைப் பற்றி இப்பதிவுத் தொடரோடு சொல்வதா
இல்லை தனியாகப் போடலாமா என்று இங்கி பிங்கி பாங்கி போட்டுப் பார்த்ததில், மனதின் மெஜாரிட்டிக்
குரல்கள், 'பயணத்தில் இதைக் கடந்துதானே கோவிலுக்குப் போனோம், தொடரிலேயே போட்டுவிடு' என்பதற்குக் கை தூக்கியதால், இதைப் போட்டுவிட்டு அடுத்ததாக கோவிலுக்குப் போய்விடுவோம் என்று முடிவாகி, இதோ
அந்த இடத்தைப் பற்றி.
நம்ம நெல்லையும் (நெல்லை என்னைக் கலாய்த்தது நம்மவீட்டவரின் பெயரை வைத்து என்று என் ஊகம்!!!!), ஸ்ரீராமும் “ரங்கன திட்டு” என்று ஏன் ரங்கன திட்டறீங்கன்னு கலாய்த்திருந்தார்கள்.
ரங்கனதிட்டு - இப்பதிவில் பறவைகளைப் பார்வையிடும் கோபுரம்
படகிலிருந்து இறங்கியதும் நேரே இருக்கும் கடையிலிருந்து (சென்ற பதிவில் போட்டிருந்தேனே அக்கடைதான்) வலப்புறம் இதோ பாருங்க ஒரு தகவல் கைகாட்டிப் பலகை. தொங்கு பாலம், கண்ணாடி பாலத்துக்கான வழி என்று காட்டுகிறது.
படகில் சென்ற போது எடுத்த சில படங்களை முந்தைய பதிவில்
பகிர்ந்திருந்தேன் இல்லையா? இப்ப மிச்சம் மீதியையும் பகிரணுமே! இல்லைனா எனக்குத்
தூக்கம் வராதே! பறவைகள் எல்லாம் தூக்கத்துல வந்து சண்டை போடும்! திட்டும். மிரட்டும். அந்த
மரத்துல இருந்தவங்களை காட்டின நீ, இந்த மரத்துல நாங்க இருக்கோம் காட்ட மாட்டியா
அப்ப எதுக்குப் படம் புடிச்சேன்னு....
இந்தப் பதிவில் அதிகம் வாசிக்க இருக்காது. பார்ப்பது மட்டும்தான்.
Red Wattled Lapwing Bird - செம்மூக்கு ஆட்காட்டி பறவை
நான் அங்கு அப்பெண் அருகில் நின்று தூரத்தில் தெரியும் பறவைகளை கேமராவில் எடுக்க முடியுமா என்று ஆராய்ந்த போது என் கணவர் என் மொபைலில் தூரத்தில் தெரிந்த பறவைகளை க்ளிக் செய்திருக்கிறார். என் கேமராவில் மிஸ் ஆன காட்சி. அப்பெண் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்த மரத்தில் உச்சியிலும் நத்தை குத்தி நாரை மரத்தில் வந்து இறங்கிவிட்டது
இந்த மரத்தில் நத்தை குத்தி நாரை இறங்கப் போகிறது
இவை கேமராவில் முந்தைய பதிவிலும், இங்கு கீழேயும்....ஜூம் செய்து
எடுத்தவை
இதே காட்சியை இன்னும் கொஞ்சம் ஜூம் செய்தேன்....கீழே...
அதே காட்சியை இன்னும் கொஞ்சம் கூட ஜூம் செய்து எடுத்தேன்... கீழே
ஜூம் செய்ததில்
பெலிக்கன்ஸ் வந்தன....இடப்புறம் இருந்த நீர்க்காகங்கள் வரவில்லை. மூன்று படங்களுக்கும் வித்தியாசங்கள் தெரிகின்றன இல்லையா? படகு நகர....நான் ஜூம் செய்ய...
இது, மேலே இதுக்கு முந்தைய படத்தில் உள்ள மரம் இல்லைங்க...இது வேற மரம். வித்தியாசம் தெரியும் பாருங்க
நின்று கொண்டிருந்த நாரையை கேமராவில் பிடிக்க முயன்ற போது, அலகில் குச்சியை
எடுத்துக் கொண்டு பறக்க சிறகை விரித்து சில அடிகள் உயரே எழுந்தது. அதன் அசைவில் படம் இப்படி ஆகிவிட்டது. எதிர்பார்க்கவில்லை.
இதுதான் கடைசிப் படம். 1/2 மணி நேரம் படகு சவாரி முடிந்து கரைக்கு வந்தாச்சு படகு நிற்கப் போகிறது. படத்தில் வலப்புறம் ஓரமாக பெரிய
படகுகள் இருப்பது தெரிகிறதா? 18 பேர் செல்லும் துடுப்புப் படகு. இந்தப் படத்தில்
ஒரு நாரை நிற்பது தெரிகிறதா? நம்மவர் அதை க்ளிக் செய்திருக்கிறார் ஜூம்
செய்யாமல்...
இறங்கியதும் படகுத்
துறைக்கு நேர் எதிரே இந்தக் கடை, இங்கு டீ காஃபி, ஏதோ கொறிக்கவும் கிடைக்கிறது.
இடப்புறம் கோக்கோகோலா. கடைய சும்மா வேடிக்கை பார்த்துவிட்டு டீ காஃபி, கோக் ஏதாச்சும்
குடிக்கணும்னா குடித்துவிட்டு...அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது அடுத்த பதிவில்.