செவ்வாய், 29 மார்ச், 2022

கல்விச் சாலை தந்த தலைவனுக்குப் பாராட்டு விழா

 

எப்போதும் பிறரது குறைகளைச் சுட்டிக் காட்டி ஆத்திரப்படும் நாம் ஏனோ பெரும்பாலும் அவர்களது நிறைகளைச் சொல்லிப் பாராட்டுவதே இல்லை.  சில நேரங்களில் அவர்கள் காலமான பின் அவர்களது சிறப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதுண்டு. 

இதை உணர்ந்த சில நல்ல உள்ளங்கள் அவர்கள் வாழும் சமூகத்திற்கும் அதை உணர்த்தி, கல்விச் சாலையைத் தந்த ஒரு தலைவனுக்குக் கடந்த தினம் ஒரு பாராட்டு விழா எடுத்தார்கள்.

சனி, 19 மார்ச், 2022

கடம்போடுவாழ்வு - 3

 

//இப்பத்தானே ஊருக்குள் வந்திருக்கோம். கொஞ்சம் ஆற அமர ஊரின் வளத்தை, செழிப்பை, உழைப்பைப் பார்க்க அடுத்த பகுதியில் ஊர் சுற்றுவோம்// என்று முடித்திருந்தேன். கடம்போடுவாழ்வு 2

அப்பதிவிற்கும், எனது மூன்றாவதுவிழியின் பார்வையில் பதிவிற்கும் கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி.

வெள்ளி, 11 மார்ச், 2022

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 14 - ஏரிக்கரை

 

கடம்போடுவாழ்வு பற்றிய இரண்டாவது பகுதியை வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. மூன்றாவது பகுதிக்கான படங்களை இன்னும் தொகுத்தபாடில்லை, பதிவு ஒரு சில வரிகள்தான் ஆனாலும் இன்னும் எழுதவில்லை என்று உண்மையைச் சொல்லலாம்! 

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

நாகர்கோவில் - கடம்போடுவாழ்வு - 2


//நீங்களும் வாருங்கள். கொஞ்சம் காத்திருங்கள். கடம்போடுவாழ்வு கிராமத்தைக் காட்டுகிறேன். என் உறவினர்களையும் அறிமுகப்படுத்துகிறேன். // என்று சொல்லியிருந்தேன்.  இதோ ஊருக்குள் நுழையப் போகிறோம்.

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

நாகர்கோவில் - கடம்போடுவாழ்வு - 1


பெங்களூர் – நாகர்கோவில்  (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 11 

சென்ற பதிவில் - திருநெல்வேலி - நாகர்கோவில் பதிவு - 5 ல் நாகர்கோவில் சென்றதும் அங்கிருந்து கடம்போடுவாழ்வு செல்வதற்காகப் பேருந்து ஏற வடசேரி பேருந்து நிலையம் செல்வது பற்றிச் சொல்லி முடித்திருந்தேன்.  மீண்டும் யு டர்ன் வந்த வழியே ஆனால் சாலை வழிப்பயணம் ஏர்வாடி வரை. எனவே அதே வெள்ளமடம், தோவாளை, ஆரல்வாய்மொழி, முப்பந்தல், காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர், ஏர்வாடி.

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

நன்றிக் கடன் - சியாமளா மாமி எழுதிய கதை

இதற்கு முன் ஒரு பதிவில் சியாமளா மாமி எழுதிய சாம்பு ஸ்டைல் கதை ஒன்று வெளியிட்டிருந்த நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன். இதோ அவர் எழுதிய மற்றொரு கதை 

-----கீதா


செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.

காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

புதன், 2 பிப்ரவரி, 2022

அமேசான் கிண்டிலில் என் நாவல் "காலம் செய்த கோலமடி"

மூன்று வருடங்களுக்கு முன்பு ஹார்ட் காப்பி ஆக வெளியிட்ட என், “காலம் செய்த கோலமடி” எனும் நாவல் அமேசான் கிண்டிலில் கடந்த வாரம் வெளியிட முடிந்தது. இதற்கு எல்லா உதவியும் செய்து வெளியிட்டுத் தந்த நம் அன்பு நண்பர், பயணக் காதலர் வெங்கட்ஜிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது.

வெள்ளி, 28 ஜனவரி, 2022

திருநெல்வேலி - நாகர்கோவில் - (பொய்கை அணை) - 5

 பெங்களூர் – நாகர்கோவில்  (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 10

திருநெல்வேலி - நாகர்கோவில் - 1

திருநெல்வேலி - நாகர்கோவில் - 2

திருநெல்வேலி - நாகர்கோவில் - 3

திருநெல்வேலி - நாகர்கோவில் - 4

//இப்போது ஆரல்வாய்மொழி மலைகளைப் பார்த்துக் கொண்டிருங்கள். அதற்கு அப்புறம் நாகர்கோவில் ஸ்டேஷன் வரை உள்ள பகுதிகள் அடுத்த பதிவில். // என்று முடித்திருந்தேன். இங்கிருந்து அடுத்து நாகர்கோவில் ஸ்டேஷன்தான். எனவே ஒரு தகவலுடன் இப்பகுதி. 

சனி, 22 ஜனவரி, 2022

திருநெல்வேலி - நாகர்கோவில் - (ஆரல்வாய்மொழிப் பகுதி) - 4

பெங்களூர் – நாகர்கோவில்  (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 9

திருநெல்வேலி - நாகர்கோவில் - 1

திருநெல்வேலி - நாகர்கோவில் - 2

திருநெல்வேலி - நாகர்கோவில் - 3

காவல்கிணறை அடுத்து மிக அருகில் உள்ள முப்பந்தல் எனும் சிறு கிராமத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்ட எல்லை தொடங்குகிறது. இக்கிராமம் ஆரல்வாய்மொழி பகுதியில்தான் இருக்கிறது. 

திங்கள், 17 ஜனவரி, 2022

திருநெல்வேலி-நாகர்கோவில் - 3


 பெங்களூர் – நாகர்கோவில்  (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 8

திருநெல்வேலி - நாகர்கோவில் - 1

சென்ற பகுதியின் தொடர்ச்சியாக.......களக்காடு தாண்டி, ஏர்வாடி, வள்ளியூர் பகுதியிலிருந்து தொடர்ச்சியாக மஹேந்திரகிரி மலைத்தொடர். பணகுடியை அடுத்து காவல்கிணறு பகுதி வரை திருநெல்வேலி மாவட்டம். காவல்கிணறு பகுதியில் தான் மகேந்திரகிரி மலையின் சரிவின் அடிவாரத்தில் மகேந்திரகிரி திரவ எரிபொருள் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது.  சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.