புதன், 11 ஜூன், 2025

ரங்கனதிட்டு- ஸ்ரீரங்கப்பட்டினம் கோவில் - 10

பஸ்சிமவாஹினியில் நம்ம கடமையை முடித்துக் கொண்டு (பதிவும் போட்டாச்சு) ஸ்ரீரங்கப்பட்டினம் கோவிலுக்குப் போனோம். ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டையையும் கோவிலையும் 38 வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். அப்பவும் சரி இப்பவும் சரி, நிதானமாக அங்கு ஒரு நாளேனும் தங்கிப் பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. இது பல பயணங்களிலும் ஏற்படும் ஒன்று. மகன் இங்கு இருந்தவரை நிதானமாகப் பார்ப்பது நடந்தது. இருவரின் அலைவரிசையும் ஒன்று.

வீட்டவர்கள் ஒரே அலைவரிசையில் அமைவது அரிதுதான். அவரவர் ஆர்வங்களைப் பூர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பேனும் கிடைத்தால் நல்லது. தற்போது அப்படியான வாய்ப்புகளுக்கான சூழலும் இல்லை.

பாருங்க பதிவிலிருந்து விலகல். காவிரியின் தாக்கம்!

ஸ்ரீரங்கப்பட்டினத்தில்  காவிரி ஆறு பிரிந்து கொஞ்ச தூரம் ஒடி மீண்டும் இணைவது போல நானும் விலகிச் சென்று மீண்டும் பதிவில் இணைந்தாச்சு. காவிரி, தீவு போல உருவாக்கிய பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவிலின் இறைவனான ஸ்ரீரங்கநாதரின் பெயரிலேயே ஊரின் பெயர் - ஸ்ரீரங்கப்பட்டினம். பெயர்க்காரணத்தைச் சின்னக் குழந்தையும் சொல்லும்!

காவிரிக் கரையில் அமைந்திருக்கும் மூன்று ரங்கநாதர் கோவில்களும் - ஸ்ரீரங்கப்பட்டினம் ஆதிரங்கம் - கர்நாடகாவில் சாமராஜ்நகர் மாவட்டத்தில் சிவனசமுத்திரம் பகுதியில் உள்ள மத்யரங்கம் (இப்பயணம் அடுத்தாப்ல) - திருச்சியில் ஸ்ரீரங்கம்/திருவரங்கம் கோவில் அந்தியரங்கம். இவை எல்லாமுமே காவிரி நதி சில இடங்களில் ஏற்படுத்தும் தீவுகளில்/திட்டுகளில் அமைந்த கோவில்கள்.

இந்த மூன்று கோவல்களையும் இணைத்து, திரிரங்க யாத்திரை என்று, விடியலுக்குள் தொடங்கி அந்தி சாயும் நேரத்திற்குள், அதாவது, ஸ்ரீரங்கப்பட்டினத்தில் தொடங்கி, மத்யரங்கம் தர்சனம் முடித்து நேரே திருச்சி திருவரங்கப் பயணமாம். மாலை சூரியன் மறையும் முன் தரிசனம் முடித்து திரும்பும் யாத்திரையாம்.

வேறொரு குறிப்பு சொல்வது பஞ்சரங்க கோவில்கள்- ஸ்ரீரங்கப்பட்டினம் -ஆதிரங்கம் (காவிரி தொடங்கி ஆதிரங்கம் (காவிரி தொடங்கி வரும் பகுதி என்பதால்) சிவனசமுத்திரம் கோவில் - மத்யரங்கம். இது ஒரு சிலரால் மத்யரங்கம் என்று சொல்லப்பட்டாலும் இந்தக் குறிப்பில் தமிழ்நாடு திருவரங்கம் - மத்யரங்கம் எனப்படுகிறது. அப்பாலரங்கம் - கோவிலடி, தமிநாடு. சதுர்த்தரங்கம் - சாரங்கபாணி கோவில், கும்பகோணம். பஞ்சரங்கம் - பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர், மாயவரம்.

நாம் இப்ப பார்க்கும் ஸ்ரீரங்கப்பட்டினம் கோவில், மேலை கங்கர் குல அரசர் படைத் தலைவர் - அப்பகுதி தலைமை திருமலைய்யா என்பவரால் 984 ல் கட்டப்பட்டதாகக் குறிப்புகள் சொன்னாலும் அதற்கும் முன்னரே கோவிலின் இறைவனின் திரு உருவச் சிலை அங்கு இருந்ததாகவும் அதன் மேலேயேதான் கோவில் கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அதன் பின் 12 ஆம் நூற்றாண்டில், ஹொய்சாள அரசர் விஷ்ணுவர்த்தனனால் ஸ்ரீ இராமானுஜருக்கு இந்தக் கிராமம் அக்ரஹாரமாக அதாவது கற்கும் இடமாக அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்புகள். அதன் பிறகு வந்த ஹொய்சாள மன்னரால் விரிவுபடுத்தப்பட்டதாகவும், பின்னர் விஜயநகர அரசர்கள் கோபுரம் எழுப்பி விரிவுபடுத்தியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள்.

கோபுரத்தைப் பார்த்தால் நம் பகுதி கோபுரம் என்று.

மேலே சொன்ன இம்மாதிரியான விஷயங்களை ஆர்வத்தில் தெரிந்து கொள்வேனே தவிர விவாதங்களுக்குள் நுழைவதை விரும்புவதில்லை. கோவிலுக்குப் போனமா, தியானித்தோமா, ரசித்தோமா, படங்கள் பிடிச்சமா, வந்தமா

வரைபடத்தில் தெரிகிறதா? காவிரி பிரிந்து சுத்தி ஓடுவது

கோவில் கோபுரம் அருகில் ஆட்டோக்காரர் நிறுத்தியதும் செருப்புகளை ஆட்டோவிலேயே விட்டுவிட்டு எங்கள் முதுகுப் பையுடன் மட்டும் கோவிலுக்குள் சென்றோம்

உள்ளே சென்றதும் கோபுரத்தை உட்பகுதியிலிருந்து... ஹப்பா வெயில்! கேமரா ஸ்க்ரீனில் ஒன்றுமே தெரியலையே! ம்... இருக்கட்டும்...குத்து மதிப்பா ஒன்னு எடுத்துக்குவோம்!

என்ன அழகான மண்டபம் இல்லையா? பின்னாடி இதுக்கு வருவோம். அந்த ஆரஞ்சு கலர் போர்ட் இருக்கு பாருங்க கொடிமரம் மேல சாஞ்சுக்கிட்டு. கொடிமரம் தெரிகிறதா? இது வெளியே. உள்ளே நேரே ஒரு கொடிமரம் தெரிகிறதா? உள்ளார ஃபோட்டோ எடுக்க அனுமதி இல்லை. இடப்புறம் கம்பித் தடுப்புகள் தெரியுதா அதுக்குள்ளார போய்தான் உள்ள போணும்...டிக்கட் counter உம் இருக்கு பாருங்க

பெரிய திறந்தவெளி. கோவிலுக்குள் நுழையும் முன் பெரிய மண்டபம், முகப்பு. மண்டபத்தினுள் பல தூண்கள். உள்ளே தரிசனம் முடித்த பிறகு இவற்றிற்கு வருவோம். இந்த முகப்பின் மேல் தசாவதார வடிவங்கள்


மண்டபத்தில் நுழைந்ததும் நான் புகைப்படம் எடுக்க முயற்சி

மண்டபத்தில் நுழைந்ததும் நான் புகைப்படம் எடுக்க முயற்சி செய்து க்ளிக்கியதும் திரும்பிப் பார்த்தால் வீட்டவரைக் காணவில்லை. நான் சுற்றிலும் பார்க்க, கம்பிகள் தடுப்பாக உள்ள வரிசையில் போனவர் அங்கிருந்து அழைக்க, நான் ஓடினேன். நாங்கள் தர்மதரிசன வரிசையில்தான் சென்றோம். பொதுவாக கோவில்களில் நாங்கள் டிக்கெட் வரிசையில் செல்வதில்லை. தவிர்க்க முடியாத தருணங்களைத் தவிர. தர்ம தரிசனத்தில் செல்வதில் ஒரு நன்மை. சில சுவாரசியங்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கும்.

அழகான உள் முற்றம். சுற்றிலும் உருளைகள் போன்ற தூண்கள். லேத்தில் செதுக்கப்பட்டவையாம்...ஹொய்சாளர் கலை. படம் விக்கியிலிருந்து. விக்கியோ சொக்கியோ எடுத்துப் போட்டா தப்பில்லைங்க....நாம எடுத்துப் போட்டாதான் தப்புங்க!

வரிசையில் சென்று முகப்பு மண்டபத்திலிருந்து சில படிகள் கடந்தால் உட்பக்கம் பெரிய அழகான முற்றம் போன்ற அமைப்பு. முற்றத்தைச் சுற்றி்த்தான் பிராகாரம், சன்னதிகள், நடுவில் ஸ்ரீரங்கநாதர் சன்னதியும், கர்ப்பகிரஹமும். முற்றமும் முற்றத்தைச் சுற்றிலும் உருளைகள் போன்று நின்ற தூண்களைக் கண்டதும் அதன் அழகில் வியந்து நின்றேன்வாவ்! ஹொய்சாளர் கலை.

முற்றம் இருக்கும் மண்டபத்தில் நுழைந்ததும் இடப்பக்கம் பெரியதிருவடி - கருடன், வலப்பக்கம் சின்ன திருவடி - ஆஞ்சு. வரிசை இடப்பக்கம் திரும்பும் இடத்தில் கருடனைப் பார்த்துவிட்டு நகர்ந்திட, என் பின்னால் வந்த பெண் கருடனைக் கிளிக்க முயற்சிக்க, அர்ச்சகர் கூடாது என்றார். சற்று நகர்ந்ததும் ஒரு கோணத்தில் கருடர் தெரிவார் அப்போது அவள் எடுக்க எத்தனித்த போது, அர்ச்சகர் அவளை அழைத்து, சிசிடிவியை காட்டினார். நானும் என் மொபைலை பதுக்கினேன்.

என் முன்னில், வழிகாட்டியுடன் வந்திருந்த உயரமான வெளிநாட்டவர் என்னைப் பார்த்ததும், அவர் உயரத்திற்கு இடுப்பளவு இருக்கும் என்னை, புருவம் உயர்த்தி 'ஹை' என்று புன்சிரிப்பொன்றை உதிர்த்ததும் நானும் அண்ணாந்து பார்த்து பதில் மரியாதை செய்தேன்!  அர்ச்சகர் 'ஃபோட்டோஸ் பேடா' (இது என்ன ஸ்வீட்டு!!!) என்று சொல்லிக் கொண்டே இருந்தார். வெளிநாட்டவர் மொபைலை தூக்கிப் பிடித்து, ஒரு கோணத்தில் டக்கென்று பிடித்தார் கருடனை! Multi Clicks! இடப்புறம் சற்று உயரத்தில் இருந்த மண்டபத்தையும், தூண்களையும் க்ளிக்கினார்.

இவருக்கு மட்டும் அனுமதி உண்டா என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்த நான் அவர் என்னைப் பார்த்ததும் "மறைச்சு வைச்சு நீங்க எடுத்ததை நாங்களும் பார்த்துட்டம்ல" என்ற தொனியில் என் சிரிப்பு புரிந்திருக்குமோ?! டக்கென்று தன் வழிகாட்டியிடம், தூண்களை எல்லாம் காட்டி ஏதோ பேசினார்.

நாங்கள் நகர்ந்திருந்த பகுதியில் எங்கள் அருகில் ஒரு தூண் வித்தியாசமாக இருந்தது கொஞ்சம் தோல் உரிந்தது போன்று!! அதைத் தொட்டு தட்டிக் காட்டி அந்த வழிகாட்டி சொன்னது எனக்கு மக்களின் சத்தத்தில் காதில் விழவில்லை. அந்தத் தூணில் இரும்பு வளையம் ஒன்றும் பொருத்தப்பட்டு அருகில் கம்பியுடன் இணைக்கப்பட்டு ஒரு வேளை விழுந்துவிடாமல் இருக்க அப்படிச் செய்திருப்பாங்களோ? நல்லகாலம் உறுதியாகத்தான் இருந்தது!

நானும் விடுவனா? திருட்டுத்தனமாக உட்பகுதிகளில் தூண்கள், சன்னதிகள் மற்றும் சிற்பங்களை எடுத்தேன். ஆனால், ஸ்ரீநிவாசர் சன்னதி அர்ச்சகர், ஒருவரைப் பார்த்து பெரிதாகச் சத்தம் போட்டு மொபைலைக் காட்டச் சொல்லி படங்களை அழிக்கச் சொன்னார், நான் மொபைலைப் பைக்குள் போட்டுக் கொண்டுவிட்டேன். நம்ம வீட்டவரின் பெரிய மண்டகப்படியை வாங்கிக்கிட்டேனா!!!! பயமா போச்சு! அதனால உட்பகுதியில் திருட்டுத்தனமா நான் எடுத்த 24 படங்களை இங்க தரலைங்க. நரசிம்மர்/சக்கரத்தாழ்வார், கிருஷ்ணர், ராமர், இராமானுஜர், மணவாளமாமுனிகள், தேசிகர் சன்னதிகள் இருக்கின்றன. அழகு சிற்பங்கள் உடைய தூண்கள்!

வரிசையில் வந்து உட்பக்கம் மெயினான ஸ்ரீரங்கநாதரை ரொம்ப பெரிய விரட்டல் இல்லாமல் நின்று தரிசிக்க முடிந்தது. வெளியில் வரும் போது இடப்பக்கம் படங்கள் எல்லாம் விற்கும் கடை இருக்கிறது. நான் எதுவும் வாங்கவில்லை. நோ சென்டிமென்ட்ஸ். உள்ளதைக் காப்பாற்றவே முடியலை.

இப்ப வெளியில் வந்த பிறகான நுழையும் போது, இந்த மண்டபத்துக்குப் பின்னாடி வருவோம்னு சொன்னேனே  அந்த மண்டபத்தில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் சில (இது வெளியிடலாமாம்!!)....

மேலே தாமரைப்பூ போன்று செதுக்கப்பட்ட வடிவம் அழகாக இருக்கிறது இல்லையா? ஒவ்வொரு சின்ன சின்ன தூணாகச் செதுக்கிச் செய்து அப்புறம் எல்லாவற்றையும் இடைவெளியில் பொருத்தி வைச்சிருப்பாங்களோ?

இது கருடர்?

பின்னால் கம்பித் தடுப்புகள் இருக்கு இல்லையா அந்த வரிசையில்தான் உள்ளே நாம் போய்ட்டு வந்தோம்ங்க...

கஜேந்திர மோக்ஷம். அழகான தூணில். பின் பக்கம் படிகள் தெரிகின்றன இல்லையா? ஏறி உள்ளே சென்றால் அழகிய முற்றம். வலப்பக்கம் ஒரே ஒரு உருளை வடிவத் தூண் தெரிகிறது...வெளியில்தான் 

இது என்னவென்று உங்களுக்குப் புரிந்திருக்கும்

சரஸ்வதி

சின்ன திருவடி

இந்தத் தூண்களின் மேலே அந்தத் தாமரை போன்ற வடிவம் ரொம்ப ஈர்க்கிறது. வரிசையாகப் பெண்கள் (பார்பி டால் போன்று) நிற்பது போன்றும் தெரிகிறது. பின்னாடி மக்கள் உள்ளே ஏறிப் போவது தெரிகிறதா?


மீதி படங்களை அடுத்த பதிவில்  பார்க்கலாமா? இருக்கும் எல்லாப் படங்களும் போட்டு முடித்துவிடலாம் என்றும் தோன்றுகிறது பார்ப்போம்.


----கீதா

40 கருத்துகள்:

  1. அழகிய படங்கள். நல்ல விளக்கங்கள். இந்தக் கோயில் பயணத்தை நான் எங்கள் பிளாக்கில் எழுதிய நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை.

      ஆமாம் நீங்க எழுதியிருக்கீங்க எங்கள் ப்ளாகில்

      கீதா

      நீக்கு
  2. அக்ரஹாரம், சதுர்வேதி மங்கலம் போன்ற பலவற்றை அரசர்கள் உருவாக்கினர். இதற்குக் காரணம், அப்போது பிராமணர்களிடம் சொத்து கிடையாது, சொத்து இருக்கக்கூடாது என்ற புரிதலில்.

    இன்னொன்று, கோயில் எதிராகவே உள்ள தெரு பெரும்பாலும் பிராமணர்களுக்காக அரசரால் விடப்பட்டதாக இருக்கும். காரணம், கோயில் நடைமுறைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக.

    காரணங்கள் போய், சொத்தாக மாறிய காலத்தில்தான் பிரச்சனைகள் எழுந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்ரஹாரம், சதுர்வேதி மங்கலம் போன்ற பலவற்றை அரசர்கள் உருவாக்கினர்.//

      ஆமாம்.

      கோவில் எதிரில்தான் அக்ரஹாரம் பெரும்பாலும் இருக்கும் இல்லை என்றால் ஒரு சில கிராமங்களில் கோவிலைச் சுற்றிலும் இருக்கும். எதிரில் குளம் இருந்தால் சைடில் இருக்கும், எங்கள் ஊர். சுசீந்திரம் கோவில் பகுதியிலும் சைடிலும் பின் பக்கமும் தான்...

      சொத்து என்பது பல பிரச்சனைகளை எழுப்பியதுண்டு. எங்க ஊரில் உட்பட.

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. அந்தக் காலத்திலுமே அந்தணர்கள் சொத்து சேர்க்காமல் இருந்திருப்பார்களா?

      நீக்கு
    3. இப்போதான் நமக்கு சொத்து சேர்க்கணும் (மிடில் கிளாஸுக்கு தன் பசங்க, இல்லாட்டிப்போனா பேரன்களுக்கு) என்று தோணுது, நமக்கே நமக்கான வீடு, கிணறுன்னுல்லாம். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் இப்படி இருந்ததில்லை என்று நினைக்கிறேன். அதுக்கும் முன்னால, வாய்ப்பே இல்லை. எல்லோருக்கும் கஞ்சிக்கும் கூழுக்கும்தான் கிடைத்திருக்கும். சேர்த்து வைக்கவேண்டிய அவசியமே (எதைச் சேர்த்து வைப்பது? இப்போதுபோல நூற்றுக்கணக்கான உடைகளையா?) இருந்திருக்காது.

      நீக்கு
  3. நீங்கள் காண்பித்த முன் மண்டபத்தில் (டிக்கெட் கவுண்டர் இருக்கும் மண்டபம்) அழகிய இரண்டு யானைகள் சிற்பம் உண்டு. கோயிலின் நுழைவு கோபுரத்தின் உட் பகுதியிலும் உண்டு. அதை நீங்கள் எப்படி புகைப்படம் எடுக்க மறந்தீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை நீங்கள் எப்படி புகைப்படம் எடுக்க மறந்தீர்கள்?//

      இன்னும் முழுசும் போடலையே நெல்லை! வரும்...

      இரண்டாவது, நான் பொதுவாக எல்லாத்தையும் எடுக்க நினைப்பவள். ஆனால், உங்களைப் போல் நான் ஆண் இல்லையே!!!! பெண் with restrictions!

      எனக்குக் கிடைக்கும் அவகாசத்தில்தான் நான் எடுக்க முடியும் அதற்குள் என்ன எடுக்க முடியுமோ அதைத்தான் எடுக்க முடியும்.

      திரும்பச் செல்லும் போது பேருந்தில் செல்லலாம் என்பதால் ரயிலில் டிக்கெட் எடுக்கவில்லை. 1.45 க்கு ரயில் இருக்குன்னு சொன்னார் ஆட்டோ ஓட்டுநர். சரி அப்ப அதைப் பிடிக்க டிக்கெட் கிடைக்க வேண்டும். முன்னாடியே போனாதான் எடுக்க முடியும்....இப்படி பல யதார்த்த பிரச்சனைகளுடன் செல்பவள் நான்.

      எனவே என்னால் அதற்குள் என்ன எடுக்க முடியுமோ அதைத்தான் எடுத்துப் போடுகிறேன். பார்க்கப் போனால் இன்னும் நிறைய இருக்கு அங்கு பார்க்கவும், புகைப்படம் எடுக்கவும். ஆனால் எனக்கு யோசிக்கக் கூட அவகாசம் கிடைக்கவில்லை. ஆட்டோ வேறு வெயிட்டிங்க். எனவே இவ்வளவுதான் என்னால் முடிந்தது.

      நன்றி நெல்லை.

      கீதா

      நீக்கு
    2. என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. சில நேரங்களில், 'வெயிட் பண்ணு' என்று மனைவியிடம் சொல்லிவிட்டு நான்பாட்டுக்கு படங்கள் எடுப்பேன். எனக்கு இன்னொரு பயமும் இருக்கும். அவசரத்தில் நல்ல சிற்பத்தை எடுத்த படம் சரியாக வராட்டா? அதுனால இரண்டு தடவைகள் எடுப்பேன். இருந்தாலும் நான் சொல்லவந்தது, அந்த யானைச் சிற்பம் தனித்துவமானது. ஆனால் அவசர அவசரமாக கியூவில் நின்று, பெருமாளைச் சேவித்து, பிறகு காலணியைத் தேடி, ஆட்டோவில் ஏறி என்றால் பலவற்றை புகைப்படம் எடுப்பது கடினம்தான்.

      நீக்கு
    3. நானும் சிலவற்றை இரண்டிரண்டு எடுப்பதுண்டு.!!!!! உள் யானையை எடுக்கலை. ஆனால் முகப்பில் இருந்ததை எடுத்திருக்கிறேன்.

      முன் மண்டபத்தில் தூண்களை முடித்ததுமே, நான் சுற்றிப் பார்த்து விட்டுப் போனதை எடுக்க முயற்சி செய்த போது நேரம் ஆகிவிட்டது என்றதால் வர வேண்டியதானது.

      வரிசையில் நின்ற போது எடுப்பது சிரமம் அதுவும் வேகமாக நகர்ந்த வரிசை. அடுத்த முற்றம் மண்டபத்தில் எடுக்க அனுமதி இல்லாத போதும் நான் சிலவற்றை திருட்டுத்தனமாக எடுத்திருக்கிரேன் அழகான தூண்கள் சிற்பங்கள். சன்னதியின் சுவரோரத்தில் பார்டராக சில சிற்பங்கள் அழகு. எடுத்திருக்கிறேன். ஆனால் போட முடியாது இங்கு. போடவும் மாட்டேன். உள்ளே எடுத்தவை 24 படங்கள்.

      செருப்பைத் தேட வேண்டிய அவசியம் இல்லை!!!!!!! ஆட்டோவிலேயெ விட்டிருந்ததால்!!! ஹிஹிஹி

      ஆனால் நேரமாகிவிட்டதே பாண்டவபுரா போய் ரயில் பிடிக்கணுமே!!!

      கீதா

      நீக்கு
  4. ஸ்ரீரங்கப்பட்டினம் கோவில்படங்கள் எல்லாம் அருமை.

    கோயில் பற்றிய செய்திகள் எல்லாம் தெரிந்து கொண்டேன்.
    தூங்கள் உள்ள மண்டபம் அழகு. தூண் சிற்பங்கள் நன்றாக இருக்கிறது.
    நம்மை படம் எடுக்க கூடாது என்பார்கள். தொலைகாட்சிகள் படம் எடுத்து விவரமாக போடுவார்கள். அப்போது தப்பு இல்லையாம்.
    என்ன செய்வது அவர்கள் சொல்வதை கேட்டுக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் நம் வீட்டில் திட்டுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிக்கா.

      ஆமாம் தொலைக்காட்சிகள் காணொளிகள் கூட எடுக்கறாங்க. காட்டறாங்களே. அது தப்பு இல்லையாம் நாம் எடுக்கக் கூடாதுன்றாங்க. அது என்னவோ ஏன் இப்படி என்று தெரியவில்லை.

      என்ன செய்வது அவர்கள் சொல்வதை கேட்டுக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் நம் வீட்டில் திட்டுவார்கள்.//

      ஆஹா!!! ஹைஃபைவ் கோமதிக்கா. புரிஞ்சுக்கிட்டீங்க!!!

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    2. //தொலைக்காட்சிகள் காணொளிகள் கூட எடுக்கறாங்க. காட்டறாங்களே. அது தப்பு இல்லையாம்// இதுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1. யார் படம் எடுக்கறா என்று ஒவ்வொருவரையும் கண்காணிக்க முடியாது. தவறான நோக்கத்தோடு படம் எடுக்க வாய்ப்பு இருக்கிறது, நான் சொல்வது, தவறான மனிதர்கள். 2. படம் எடுக்க அனுமதி கொடுத்துவிட்டால், ஒருவரும் பெருமாளையோ அல்லது கோயில் சன்னிதிகளையோ நிம்மதியாகச் சேவிக்க முடியாது. பெருமாள் முகத்தருகே மொபைலை நீட்டுவாங்க, அவரோடயே செல்ஃபி எடுத்துக்கிட்டு மத்தவங்களுக்கு இடைஞ்சலாக்கிடுவாங்க.

      நேற்று மாலை நான் மெது நடை சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு டவர்களுக்கு இடையே மத்தி வரை மிகக் கருமையான மேகம் தெரிந்தது. அதாவது மழை வெகு சீக்கிரம் வரும் என்பதுபோல. எனக்கு அதைப் படமெடுக்க ஆசை. ஆனால் அப்போதுதான் குறுக்கே இரண்டு பெண்கள் பேசிக்கொண்டு நடந்துகொண்டிருந்தனர். நான் டவர்கள் இரண்டையும் அதன் நடுவே தெரிந்த கரிய மேகத்தையும் படமெடுக்கலாம் என்றால், கொஞ்சம் தள்ளி நின்று பார்ப்பவர்களுக்கு தவறாகத் தோன்றிவிடும் என்பதால் படமெடுக்கவில்லை.

      நீக்கு
    3. நெல்லை நீங்க சொல்லியிருப்பதை நானும் யோசித்திருக்கிறேன். சில கோவில்களில் நீங்கள் சொல்லியிருப்பது போல் மொபைல்கள் தான் உயரே தூக்கிப் பிடிக்கப்பட்டிருக்கும். எனவே உட்பகுதியில் கூடாது என்று சொல்வது சரிதான். சன்னதிகளைக் கூடாது என்றும் அங்கிருக்கும் சிற்பங்கள் தூண்களில் இருபப்வற்றை மட்டும்னு சொன்னாலோ?

      ஆனால் அப்பவும் நம்ம மக்கள் விடமாட்டாங்கதான்...

      //கொஞ்சம் தள்ளி நின்று பார்ப்பவர்களுக்கு தவறாகத் தோன்றிவிடும் என்பதால் படமெடுக்கவில்லை.//

      நெல்லை அப்படிப் பார்த்தா நாம பொதுவெளில எடுக்கறப்ப பலரும் இருக்காத்தானே குறிப்பாகப் பெண்களும் இருக்கத்தானே செய்வாங்க இல்லையா?

      ஆனால் நான் பொதுவாகவே மக்கள் இருந்தால் படம் எடுப்பதைத் தவிர்ப்பது வழக்கம். அதனாலேயே முன் மண்டபத்தை மேற்பகுதி மட்டும் எடுத்தேன் ஃபுல் வியூ எடுக்கணும்னா மக்கள்.

      மண்டப முகப்பில் இருந்த ஆனைகளை எடுத்திருக்கிறேன் ஆனால் பெண்மணி ஒருவர் டக்குன்னு ஃப்ரேமுக்குள் வந்துவிட்டார். அதனாலேயே அதைப் போட தயக்கம். இருந்தாலும் போடுகிறேன்.

      இப்படித் தயங்கி சில படங்கள் எடுக்காமல் போனதுண்டு.

      கீதா

      நீக்கு
    4. ஆமாம்.. நானும் ஒரு குறிப்பிட்ட சிலைகளையோ, வித்தியாசமான இடங்களையோ, அதன் அருகில் யாருமில்லாத போதுதான் படங்கள் எடுப்பேன். ஆனால் அதற்குள் எங்கள் வீட்டில் என்னுடன் வந்து கொண்டிருப்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள். அவர்களை விழிகளில், தேடவே சிறிது நேரமாகும்,. தேடிய பிறகும், "என்னதான் அப்படி விழுந்து விழுந்து எடுக்கிறாய்.? இன்னமும் பல இடங்களை பார்த்து முடிக்க வேண்டாமா..? சீக்கிரம் வா..!" என கோவில் உள்ளுக்குள் தெய்வத்திற்கு நடக்கும் அர்ச்சனைகள் இலவசமாக எனக்கு கிடைக்க அப்புறம் என் ஃபோன் கைப்பைக்குள் நித்திரை கொண்டு விடும். எனக்கு நிறைய செல்ஃபியோ, குடும்பமாக சேர்ந்து இருக்கிற மாதிரியோ படங்கள் நிறைய எடுக்கப் பிடிக்காது. ஆனால் அவர்கள் ஆங்காங்கே அதற்கெனவே நிறைய பொழுதுகளை கழிப்பார்கள். அப்போது ஒன்றும் சொல்ல முடியாது.

      நீக்கு
    5. கமலாக்கா கையைக் காட்டுங்க இன்னொரு ஹைஃபைவ் உங்களோடு!!! எனக்கும் இதே போலத்தான்....இப்போது கொஞ்சம் பரவால்லை என்பேன்

      //எனக்கு நிறைய செல்ஃபியோ, குடும்பமாக சேர்ந்து இருக்கிற மாதிரியோ படங்கள் நிறைய எடுக்கப் பிடிக்காது.//

      ஆஹா ஹைஃபைவ் ஹைஃபைவ் !!!! நானும் எடுக்க மாட்டேன். என் மகனும் எடுக்க மாட்டான். கணவரும் அப்படியே. நானும் மகனும் இயற்கையை நிறைய எடுப்போம். இப்படியான கலைகளை நிறைய எடுப்போம். செல்ஃபி எடுக்கும் பழக்கம் இல்லை.

      தன் செல்லங்களைக் கூட நிறைய எடுத்து கூகுள் ஆல்பமாகப் போட்டு அனுப்புவான். இயற்கையை எடுத்ததை கூகுள் பிக்சர்ஸ் போட்டு அனுப்புவான்.

      கீதா

      நீக்கு
  5. மண்டபத்தில் நுழைந்தவுடன் எடுக்க முயற்சி செய்த படத்தில் ஒரு தூண் புதிதாக தெரிகிறது. புது தூண் வைத்து இரும்பு சட்டம் கொடுத்து இருக்கிறார்கள் போலும் பலபடுத்த.
    ஸ்ரீரங்கநாதரை விரட்டல் இல்லாமல் பார்த்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதி அக்கா இன்னொன்னு பார்த்தா தெரியும் பின்னில் இருக்கும் இரண்டின் நிறம், வடிவம், முன்னில் இருக்கும் தூணை விட நல்லா வடிவமைத்தது போல கொஞ்சம் வித்தியாசமாவும் இருக்கு இல்லையா.

      ஆமாம் இரும்புக் கம்பி சட்டம் வைச்சிருக்காங்க.

      //ஸ்ரீரங்கநாதரை விரட்டல் இல்லாமல் பார்த்தது மகிழ்ச்சி.//

      நன்றி கோமதிக்கா.

      கீதா

      நீக்கு
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. உங்களிடமிருந்து நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு. படங்கள் உங்கள் கைவண்ணங்களில் அபாரமாக உள்ளது. நானும் இந்த கோவிலுக்கு ஸ்ரீ ரங்கனை தரிசிக்க பிரியபட்டு "அவன்" இரு முறைகள் அழைத்திருக்கிறான் . ஆனால், இந்தளவிற்கு புகைப்படங்கள் நான் எடுக்கவில்லை. கோபுரம், மற்றும், முன்பகுதிகள் மட்டுமே எடுத்துள்ளேன்.

    வரிசையில் போகும் போது மனது "ரங்கனை நன்றாக பார்த்து அவன் விழிகளை சந்திக்க நல்ல நேரத்தை அமைத்துக் கொடு" என்ற ரங்கனிடம் நடந்து கொண்டிருந்த பிரார்த்தனையில் மெய்யுருகியதால், வேறு எங்கும் கவனம் செல்லவில்லை. ஏனென்றால் அவ்வளவு தூரம் செல்லும் போது, அதுவும் "அவனே" எங்கள் வீட்டில் உள்ளவர்களின் மனதை மாற்றி அழைத்துச் செல்லும் போது," அவனை" முழுமையாக மனக்கண்ணில் படமெடுத்து இருதயத்தில் பதித்து வைக்க வேண்டுமே என்ற பக்திப் பரிதவிப்பு.

    அன்று என் மனக்கண்ணில் எடுத்த புகைப்படங்களை, இன்று உங்கள் பதிவில், என் விழிகளினால் பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன்.நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கமலாக்கா....நீங்க போன பதிவிலேயே சொல்லியிருந்தீங்க.

      //நானும் இந்த கோவிலுக்கு ஸ்ரீ ரங்கனை தரிசிக்க பிரியபட்டு "அவன்" இரு முறைகள் அழைத்திருக்கிறான் . ஆனால், இந்தளவிற்கு புகைப்படங்கள் நான் எடுக்கவில்லை. கோபுரம், மற்றும், முன்பகுதிகள் மட்டுமே எடுத்துள்ளேன்.//

      நானுமே குறைச்சல்தான்னு சொல்வேன், கமலாக்கா. நீங்களும் எல்லோருடனும் போயிருப்பீங்க. அப்ப நாம மட்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தால் எல்லோருக்கும் அது நேரம் கஷ்டமாகிவிடுமே இல்லையா...அவங்களும் எடுக்கறவங்களா இருந்தால் நல்லது இல்லைனா கஷ்டம்.

      எனக்கு இப்படி நேர்வதுதான்.

      //வரிசையில் போகும் போது மனது "ரங்கனை நன்றாக பார்த்து அவன் விழிகளை சந்திக்க நல்ல நேரத்தை அமைத்துக் கொடு" என்ற ரங்கனிடம் நடந்து கொண்டிருந்த பிரார்த்தனையில் மெய்யுருகியதால், வேறு எங்கும் கவனம் செல்லவில்லை. ஏனென்றால் அவ்வளவு தூரம் செல்லும் போது, அதுவும் "அவனே" எங்கள் வீட்டில் உள்ளவர்களின் மனதை மாற்றி அழைத்துச் செல்லும் போது," அவனை" முழுமையாக மனக்கண்ணில் படமெடுத்து இருதயத்தில் பதித்து வைக்க வேண்டுமே என்ற பக்திப் பரிதவிப்பு.//

      புரிந்து கொள்ள முடிகிறது கமலாக்கா.

      நான் உங்கள் அளவு எல்லாம் பக்திமானி இல்லைக்கா.
      சுத்தமாக இல்லை என்பேன். உண்மையாகவே....நான் இப்படி எல்லாம் நினைத்ததே இல்லைக்கா. ரசிப்பதோடு சரி.

      //அன்று என் மனக்கண்ணில் எடுத்த புகைப்படங்களை, இன்று உங்கள் பதிவில், என் விழிகளினால் பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன்.நன்றி சகோதரி.//

      நன்றி கமலாக்கா. உள்ளே எடுக்க முடியாது. இவை வெளியே உள்ள மண்டபத்துத் தூண்களில் உள்ளவை. நீங்க பார்த்திருப்பீங்க அன்று.

      நன்றி கமலாக்கா.

      கீதா

      நீக்கு
  7. அந்த இடத்திலேயே தங்கி நிறுத்தி நிதானமாக அந்த ஊர் கோவில்களை பார்த்தால் நல்லதுதான்.  நான் கூட நினைத்ததுண்டு, ஓய்வுபெற்றபின் இதற்கெல்லாம் சாத்தியப்படும் என்று...  எப்போதுமே பாஸ்ட் பார்வேர்டில்தான் அரசிக்கவேண்டும் என்பதுதான் விதிக்கப்பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம்...நடக்கும் என்று நம்புவோம்...

      கீதா

      நீக்கு
  8. இன்னொரு விஷயம், நாம் வசிக்கும் இடங்களில் உள்ள கோவில்களையே நாம் நின்று நிதானமாக பார்ப்பதில்லை.   தூரத்து உயரங்கள்தான் கண்ணுக்குத் தெரிகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மிகவும் உண்மை ஸ்ரீராம். முற்றத்து முல்லையின் அருமை தெரியாது என்பது போன்று!

      நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  9. பஞ்சரங்க கோவில் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேனோ?  இல்லை, ஏற்கனவே படித்து நினைவில் இல்லையோ!  இவ்வளவு தூர தூரமாக இருக்கும் இடங்களை ஒரு நாளில் கவர் செய்ய முடியுமா?  அப்படியே பார்த்தாலும் ஏற்கெனவே சொல்லியுள்ளபடி நிறுத்தி நிதானமாக பார்க்க முடியாது.  மூலவரைப் பார்த்துவிட்டு காலில் வெந்நீர் கொட்டியது போல அடுத்த இடத்துக்கு ஓடவேண்டும்!பஞ்சரங்க கோவில் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேனோ?  இல்லை, ஏற்கனவே படித்து நினைவில் இல்லையோ!  இவ்வளவு தூர தூரமாக இருக்கும் இடங்களை ஒரு நாளில் கவர் செய்ய முடியுமா?  அப்படியே பார்த்தாலும் ஏற்கெனவே சொல்லியுள்ளபடி நிறுத்தி நிதானமாக பார்க்க முடியாது.  மூலவரைப் பார்த்துவிட்டு காலில் வெந்நீர் கொட்டியது போல அடுத்த இடத்துக்கு ஓடவேண்டும்!பஞ்சரங்க கோவில் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேனோ?  இல்லை, ஏற்கனவே படித்து நினைவில் இல்லையோ!  இவ்வளவு தூர தூரமாக இருக்கும் இடங்களை ஒரு நாளில் கவர் செய்ய முடியுமா?  அப்படியே பார்த்தாலும் ஏற்கெனவே சொல்லியுள்ளபடி நிறுத்தி நிதானமாக பார்க்க முடியாது.  மூலவரைப் பார்த்துவிட்டு காலில் வெந்நீர் கொட்டியது போல அடுத்த இடத்துக்கு ஓடவேண்டும்!பஞ்சரங்க கோவில் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேனோ?  இல்லை, ஏற்கனவே படித்து நினைவில் இல்லையோ!  இவ்வளவு தூர தூரமாக இருக்கும் இடங்களை ஒரு நாளில் கவர் செய்ய முடியுமா?  அப்படியே பார்த்தாலும் ஏற்கெனவே சொல்லியுள்ளபடி நிறுத்தி நிதானமாக பார்க்க முடியாது.  மூலவரைப் பார்த்துவிட்டு காலில் வெந்நீர் கொட்டியது போல அடுத்த இடத்துக்கு ஓடவேண்டும்!பஞ்சரங்க கோவில் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேனோ?  இல்லை, ஏற்கனவே படித்து நினைவில் இல்லையோ!  இவ்வளவு தூர தூரமாக இருக்கும் இடங்களை ஒரு நாளில் கவர் செய்ய முடியுமா?  அப்படியே பார்த்தாலும் ஏற்கெனவே சொல்லியுள்ளபடி நிறுத்தி நிதானமாக பார்க்க முடியாது.  மூலவரைப் பார்த்துவிட்டு காலில் வெந்நீர் கொட்டியது போல அடுத்த இடத்துக்கு ஓடவேண்டும்!பஞ்சரங்க கோவில் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேனோ?  இல்லை, ஏற்கனவே படித்து நினைவில் இல்லையோ!  இவ்வளவு தூர தூரமாக இருக்கும் இடங்களை ஒரு நாளில் கவர் செய்ய முடியுமா?  அப்படியே பார்த்தாலும் ஏற்கெனவே சொல்லியுள்ளபடி நிறுத்தி நிதானமாக பார்க்க முடியாது.  மூலவரைப் பார்த்துவிட்டு காலில் வெந்நீர் கொட்டியது போல அடுத்த இடத்துக்கு ஓடவேண்டும்!பஞ்சரங்க கோவில் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேனோ?  இல்லை, ஏற்கனவே படித்து நினைவில் இல்லையோ!  இவ்வளவு தூர தூரமாக இருக்கும் இடங்களை ஒரு நாளில் கவர் செய்ய முடியுமா?  அப்படியே பார்த்தாலும் ஏற்கெனவே சொல்லியுள்ளபடி நிறுத்தி நிதானமாக பார்க்க முடியாது.  மூலவரைப் பார்த்துவிட்டு காலில் வெந்நீர் கொட்டியது போல அடுத்த இடத்துக்கு ஓடவேண்டும்!பஞ்சரங்க கோவில் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேனோ?  இல்லை, ஏற்கனவே படித்து நினைவில் இல்லையோ!  இவ்வளவு தூர தூரமாக இருக்கும் இடங்களை ஒரு நாளில் கவர் செய்ய முடியுமா?  அப்படியே பார்த்தாலும் ஏற்கெனவே சொல்லியுள்ளபடி நிறுத்தி நிதானமாக பார்க்க முடியாது.  மூலவரைப் பார்த்துவிட்டு காலில் வெந்நீர் கொட்டியது போல அடுத்த இடத்துக்கு ஓடவேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்‌ரீராம், என்னாச்சு இம்பொஸிஷன் போல!!!! ப்ளாகர் இம்பொசிஷன் எழுதச் சொல்லிடுச்சோ!!!?

      இந்த பஞ்சரங்க கோவில் ஒரே நாளில்னு தகவல் இல்லை ஸ்ரீராம். அது அந்த திரிரங்க கோவில்கள்தான் ஒரே நாளில்

      இந்த ஐந்தும்னா நீங்க சொல்றாப்லதான். திரிரங்கமே அப்படித்தான். எனக்கும், நம்ம வீட்டிலும் இப்படிப் போகும் யாத்திரைகள் பிடிப்பதில்லை.

      நாமாக நிதானமாகப் பார்த்து வருவதுதான் பிடித்திருக்கிறது.

      கீதா

      நீக்கு
    2. ஆஹா..   இது எப்படி நிகழ்ந்ததுன்னே தெரியலை.  ஒருமுறைதான் வெளியிடுவை அமுக்குவோம்.  அதுவும் மாடரேஷன் உள்ள பதிவுகளில் உடனே அது காணாமல் போயும்விடும்!  இது எப்படி சாத்தியம்?  ஏதோ தெய்வ குத்தம் போல இருக்கே...

      நீக்கு
    3. திரிரங்க கோயில்களை ஒரே நாளில் நாங்கள் தரிசனம் செய்திருக்கிறோம். இன்னும் எழுதவில்லை. காலை 6 1/2-7 மணிக்கு ஸ்ரீரங்கபட்டினம் தரிசனம் செய்துவிட்டு..... திருவரங்கம் கியூவில் மாலை 8 மணிக்கு நின்றோம். இதற்கிடையில் சாப்பிடவேறு நிறுத்தவில்லை. பழைய காலத்தில் வாய்ப்பே இல்லை.

      நீக்கு
    4. ஆனால் மூன்று கோவில்னு நேரமும் கொடுத்திருக்காங்களே நெல்லை. அதுவும் சூரியன் மறைவதற்குள் திருவரங்கமும் முடித்து வருவோம்னு நேரம் எல்லாம் கொடுத்திருந்தாங்க...

      கீதா

      நீக்கு
    5. /இது தெய்வ குத்தமோ/

      இல்லையில்லை. இது தெய்வ சங்கல்பம்..!

      சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் என்னைப்போலவே நீளமான கமெண்ட்ஸ் தர மாட்டாரே என என் மனது சொன்னாலும், படித்து முடித்த பின்தான் தெரிந்தது. அவர் பஞ்சரங்க கோவில் தரிசனம் செய்ய மனதளவில் விருப்பப்பட்டிருக்கிறார் என..! (இறைவனின் கட்டளையும் கூட.. போலும்.) அதுதான் ஐந்து தடவைக்கும் மேலாகவே மூலவரை அவசரமாக தரிசனம் செய்து விட்டார். "அவனும்" செய்ய வைத்து விட்டான்.🙏.

      நீக்கு
  10. படங்கள் யாவும் அருமை. உள்ளே எடுக்க முடியவில்லை என்பது வருத்தம்தான். அந்த வெளிநாட்டவர் உள்ளே எடுத்தாரா? பட்டர் அவரை ஒன்றும் சொல்லவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளிநாட்டவர் எடுத்துக் கொண்டே வந்தவரிடம், அந்த கைட் அப்புறம் எடுக்க வேண்டாம் என்று சொல்லிருப்பார் என்று நினைக்கிறேன் வெளிநாட்டவர் மொபைலைத் தன் பைக்குள் போட்டுக் கொண்டதை வைத்துப் புரிந்து கொண்டது.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  11. கோவில் கோபுரம் தமிழ்நாடு கட்டடக்கலை போலவேதான் இருக்கிறது.  கோவிலும் கோவிலுக்குள் கிடைக்கும் நேர்மறை அதிர்வுகளும் எப்போதுமே இனிமையானவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோபுரம் நம்ம ஊர் மாதிரிதான் தெரிகிறது.

      //கோவிலும் கோவிலுக்குள் கிடைக்கும் நேர்மறை அதிர்வுகளும் எப்போதுமே இனிமையானவை.//

      நிச்சயமாக. உறுதியாக. முற்றிலுமாக....ஆமோதிக்கிறேன். ஆனால் அதற்கும் மனம் தான் காரணமோ?!.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  12. படங்களும் பகிர்வும் அருமை.

    பெரும்பாலான கோயில்களில் சன்னதிகளைப் படம் எடுக்க அனுமதி இல்லை. அறிவிப்பும் செய்திருப்பார்கள். ஆனால் நீங்கள் சொல்வதைப் போல் இங்கே அதை அர்ச்சகர்கள் தீவிரமாகக் கண்காணித்து மீறுபவர்களைக் கடுமையாகக் கண்டிக்கிறார்கள். ரங்கநாயகி தாயார் சன்னதியில் அர்ச்சகர் தீப ஆராதனை காட்டிக் கொண்டிருந்த சமயத்தில் ஒருவர் படம் எடுத்து விட்டார். அர்ச்சகர் கவனிக்கவில்லை என வெற்றிக் களிப்போடு இருந்தார். தீபத் தட்டை மற்றவர்களுக்கு அமைதியாகக் காட்டியபடி வந்த அர்ச்சகர் இவர் அருகில் வந்ததும் மொபைலைப் பிடுங்கி விட்டார். இவர் படத்தை டெலிட் செய்வதாகக் கெஞ்சியும் கேட்காமல், கோயில் அலுவலகத்திற்கு வந்து மொபைலை வாங்கிக் கொள்ளுமாறு சொல்லி எடுத்துச் சென்று விட்டார்.

    இதைப் பார்க்க நேர்ந்ததில் கோயில் உள்ளே மற்றும் பிரகாரத்தில் எதையும் படம் எடுக்கவில்லை:). நீங்கள் எடுத்திருக்கும் தூண் சிற்பங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராமலக்ஷ்மி!

      ஆமாம் பெரும்பான்மையான கோவில்களில் உள்ளே எடுக்க விடுவதில்லை.
      ஆமாம் இங்கே அர்ச்சகர்கள் தீவிரமாகக் கண்காணிக்கிறார்கள்.

      பாருங்க...அதேதான்...

      நான் எடுத்தவை வெளியிடும் நோக்கிலும் இல்லை அந்தத் தூண்கள் மற்றும் சில தூண்களில் இருந்த அழகான சிற்பங்கள் கவர்ந்தன...சரி நமக்காச்சும் எடுத்து வைத்துக் கொள்வோம்னு. ஆனால் அவற்றையும் வெளியிடவில்லை எதற்கு இல்லையா? அப்படி ஒரு விதிமுறை இருக்கறப்ப?

      சன்னதிகளை எடுக்க முயற்சி செய்யவில்லை.

      இதைப் பார்க்க நேர்ந்ததில் கோயில் உள்ளே மற்றும் பிரகாரத்தில் எதையும் படம் எடுக்கவில்லை:). நீங்கள் எடுத்திருக்கும் தூண் சிற்பங்கள் அருமை.//

      ஆமாம் நானும் மொபைலை உள்ளே போட்டுக் கொண்டு வெளியில் வந்த பிறகுதான் தூண்களில் உள்ளவற்றை எடுத்தேன்.

      நன்றி ராமலக்ஷ்மி. இன்னும் கொஞ்சம் அடுத்த பதிவில் வரும்.

      கீதா

      நீக்கு
  13. படங்கள் நன்றாக உள்ளன. திட்டுகளை பொறுத்துக்கொண்டு உறங்கிய ரங்கனுக்கு நமஸ்காரங்கள். ஒரு நாள் கூத்தை ஒரு வருடத்திற்கு இழுத்துச் சென்று விடுவீர்கள் போல் தோன்றுகிறது. ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் இடையில் நிறைய இடைவெளி.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜெ கே அண்ணா.

      அண்ணா, பதிவுகள் இடைவெளி குறைக்க முயற்சி செய்கிறேன். ஆனால் என் வேலைகளுக்கு இடையில் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. வீட்டில் உதவிக்கு ஆள் கிடையாது. நானேதான்.

      படங்களைக் கோர்த்து, இணையம் ஒத்துழைக்க மறுக்கும் போது அயற்சி வந்துவிடுகிறது. வீட்டிற்குள் இணையம் பல நாட்களில் படுத்துகிறது.

      நன்றி ஜெ கே அண்ணா

      கீதா



      நீக்கு
    2. ​டிஷ் இணைப்பு என்றால் கேபிள் இணைப்புக்கு மாறிவிடுங்கள்.டிஷ் மழை பெய்தால் இணைப்பு மக்கர் செய்யும்.
      ​கேபிள் இணைப்பு railwire அங்கு இருந்தால் எடுத்து கொள்ளுங்கள். காரணம் உபயோகிப்பவர்கள் குறைவு. அதனால் இணைய இணைப்பு வேகம் சரியாக இருக்கும்.

      Jayakumar

      நீக்கு
    3. அண்ணா, டிஷ் எதுவும் நம் வீட்டில் கிடையாது. டிவி இல்லை. கணினி தான் இருக்கிறதே!.

      ஏர்டெல் wifi, data. இதுதான் நம்ம கனெக்ஷன் ஆரம்ப காலத்தில் பி எஸ் என் எல் லிலிருந்து மாறிய பிறகு. 5 ஜி மாறினாலும் 4 ஜியும் இருக்கிறது. ஆனால் 5 ஜியும் கூட படுத்தும். எங்கள் பகுதிக்கும் railwire wifi இருக்கிறது. இன்னும் யோசிக்கவில்லை அதை எடுப்பது பற்றி. எவ்வளவு ஆகும் என்பதும் பார்க்க வேண்டும். ஏனென்றால் நம் வீட்டில் வீடியோக்கள் செய்வது, சப்ஜெக்ட் ஒலிப்பதிவு செய்வது நடப்பதால் டேட்டா ஆகுமே. அதில் சென்று பார்க்க வேண்டும்

      நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு