தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!!
இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் பற்றி எழுதிய போது. திரிரங்க யாத்திரை என்று,
ஸ்ரீரங்கப்பட்டினம், மத்யரங்கம்,
ஸ்ரீரங்கம் மூன்று
கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்கும் பயணம் இருப்பதாகச் சொல்லியிருந்தேன், உங்களுக்கு நினைவிருக்கலாம்!
சென்ற பதிவில் ஸ்ரீரங்கப்பட்டின கோவிலின்
படங்கள் சில விவரங்கள் போட்டுவிட்டு மீதி படங்களை அடுத்த பதிவில் சொல்லி முடிக்கிறேன்
என்று சொல்லியிருந்தேன். இதோ.....
பஸ்சிமவாஹினியில் நம்ம கடமையை முடித்துக் கொண்டு
(பதிவும் போட்டாச்சு) ஸ்ரீரங்கப்பட்டினம்
கோவிலுக்குப் போனோம். ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டையையும்
கோவிலையும் 38 வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன்.
அப்பவும் சரி இப்பவும் சரி, நிதானமாக
அங்கு ஒரு நாளேனும் தங்கிப் பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. இது பல பயணங்களிலும் ஏற்படும் ஒன்று. மகன் இங்கு இருந்தவரை நிதானமாகப் பார்ப்பது நடந்தது. இருவரின் அலைவரிசையும் ஒன்று.
சில்லு
- 1 - வரலாறு, பாரம்பரியம் என்பவை இப்படித்தானோ?
மரங்களின் வேர்களில் சித்தர்கள் - என்று படங்களுடன்,
ஸ்ரீராம், ஒரு வியாழன் பதிவில் கொடுத்திருந்தார். பதிவின் ====>சுட்டி <====
//ஆ! அங்கு சீக்கிரத்தில் கோவில் வந்துவிடும்
என்று கருத்தில் சொல்லியிருந்த நினைவு.// அப்போது, இங்கு அருகில் இருக்கும் பூங்காவில் நடந்த ஒரு
சம்பவம் நினைவுக்கு வந்து குறித்து வைத்திருந்தேன். பின்னர் பதிவாக்க மறந்து விட்டுப்
போயிருச்சு.
ரங்கனத்திட்டுவிற்குச்
செல்லும் போது ஆட்டோக்காரர் ஒரு இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னதாகவும் அப்போது அங்கு
நாங்கள் இறங்கவில்லை, பறவைகளைப் பார்த்த பிறகு வரும் போது பார்க்கலாம் என்றும் முடிவு
செய்து சென்றதாகச் சொல்லியிருந்தேன். அந்த இடத்தைப் பற்றி இப்பதிவுத் தொடரோடு சொல்வதா
இல்லை தனியாகப் போடலாமா என்று இங்கி பிங்கி பாங்கி போட்டுப் பார்த்ததில், மனதின் மெஜாரிட்டிக்
குரல்கள், 'பயணத்தில் இதைக் கடந்துதானே கோவிலுக்குப் போனோம், தொடரிலேயே போட்டுவிடு' என்பதற்குக் கை தூக்கியதால், இதைப் போட்டுவிட்டு அடுத்ததாக கோவிலுக்குப் போய்விடுவோம் என்று முடிவாகி, இதோ
அந்த இடத்தைப் பற்றி.
நம்ம நெல்லையும் (நெல்லை என்னைக் கலாய்த்தது நம்மவீட்டவரின் பெயரை வைத்து என்று என் ஊகம்!!!!), ஸ்ரீராமும் “ரங்கன திட்டு” என்று ஏன் ரங்கன திட்டறீங்கன்னு கலாய்த்திருந்தார்கள்.
ரங்கனதிட்டு - இப்பதிவில் பறவைகளைப் பார்வையிடும் கோபுரம்
படகிலிருந்து இறங்கியதும் நேரே இருக்கும் கடையிலிருந்து (சென்ற பதிவில் போட்டிருந்தேனே அக்கடைதான்) வலப்புறம் இதோ பாருங்க ஒரு தகவல் கைகாட்டிப் பலகை. தொங்கு பாலம், கண்ணாடி பாலத்துக்கான வழி என்று காட்டுகிறது.
படகில் சென்ற போது எடுத்த சில படங்களை முந்தைய பதிவில்
பகிர்ந்திருந்தேன் இல்லையா? இப்ப மிச்சம் மீதியையும் பகிரணுமே! இல்லைனா எனக்குத்
தூக்கம் வராதே! பறவைகள் எல்லாம் தூக்கத்துல வந்து சண்டை போடும்! திட்டும். மிரட்டும். அந்த
மரத்துல இருந்தவங்களை காட்டின நீ, இந்த மரத்துல நாங்க இருக்கோம் காட்ட மாட்டியா
அப்ப எதுக்குப் படம் புடிச்சேன்னு....
இந்தப் பதிவில் அதிகம் வாசிக்க இருக்காது. பார்ப்பது மட்டும்தான்.
Red Wattled Lapwing Bird - செம்மூக்கு ஆட்காட்டி பறவை
நான் அங்கு அப்பெண் அருகில் நின்று தூரத்தில் தெரியும் பறவைகளை கேமராவில் எடுக்க முடியுமா என்று ஆராய்ந்த போது என் கணவர் என் மொபைலில் தூரத்தில் தெரிந்த பறவைகளை க்ளிக் செய்திருக்கிறார். என் கேமராவில் மிஸ் ஆன காட்சி. அப்பெண் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்த மரத்தில் உச்சியிலும் நத்தை குத்தி நாரை மரத்தில் வந்து இறங்கிவிட்டது
இந்த மரத்தில் நத்தை குத்தி நாரை இறங்கப் போகிறது
இவை கேமராவில் முந்தைய பதிவிலும், இங்கு கீழேயும்....ஜூம் செய்து
எடுத்தவை
இதே காட்சியை இன்னும் கொஞ்சம் ஜூம் செய்தேன்....கீழே...
அதே காட்சியை இன்னும் கொஞ்சம் கூட ஜூம் செய்து எடுத்தேன்... கீழே
ஜூம் செய்ததில்
பெலிக்கன்ஸ் வந்தன....இடப்புறம் இருந்த நீர்க்காகங்கள் வரவில்லை. மூன்று படங்களுக்கும் வித்தியாசங்கள் தெரிகின்றன இல்லையா? படகு நகர....நான் ஜூம் செய்ய...
இது, மேலே இதுக்கு முந்தைய படத்தில் உள்ள மரம் இல்லைங்க...இது வேற மரம். வித்தியாசம் தெரியும் பாருங்க
நின்று கொண்டிருந்த நாரையை கேமராவில் பிடிக்க முயன்ற போது, அலகில் குச்சியை
எடுத்துக் கொண்டு பறக்க சிறகை விரித்து சில அடிகள் உயரே எழுந்தது. அதன் அசைவில் படம் இப்படி ஆகிவிட்டது. எதிர்பார்க்கவில்லை.
இதுதான் கடைசிப் படம். 1/2 மணி நேரம் படகு சவாரி முடிந்து கரைக்கு வந்தாச்சு படகு நிற்கப் போகிறது. படத்தில் வலப்புறம் ஓரமாக பெரிய
படகுகள் இருப்பது தெரிகிறதா? 18 பேர் செல்லும் துடுப்புப் படகு. இந்தப் படத்தில்
ஒரு நாரை நிற்பது தெரிகிறதா? நம்மவர் அதை க்ளிக் செய்திருக்கிறார் ஜூம்
செய்யாமல்...
இறங்கியதும் படகுத்
துறைக்கு நேர் எதிரே இந்தக் கடை, இங்கு டீ காஃபி, ஏதோ கொறிக்கவும் கிடைக்கிறது.
இடப்புறம் கோக்கோகோலா. கடைய சும்மா வேடிக்கை பார்த்துவிட்டு டீ காஃபி, கோக் ஏதாச்சும்
குடிக்கணும்னா குடித்துவிட்டு...அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது அடுத்த பதிவில்.
படங்கள் போட்டு விவரங்கள் எழுதினால், இப்படி எத்தனை பகுதிகள் போகும் என்று!! ஹாஹாஹா! சத்தியமாக எனக்குத் தெரியலைங்க பதிவு எப்படி எழுதுவது என்று! நம் கமலாக்கா, கோமதிக்கா ஆசையோடு படங்களைப் பார்ப்பார்களே என்றும், இடங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் இப்படியேனும் பார்த்துக் கொள்ளலாமே என்றும் எனக்குத் தெரிந்ததை, நான் பார்த்தவற்றை எல்லாம் பகிர வேண்டும் என்ற ஆவலில், ஆர்வத்தில், பதிவுகள் கொஞ்சம் நிறைய பகுதிகளாகப் பிரித்துப் போடும்படி ஆகிவிடுகிறது. அதனால் பறவைகள் பகுதி வர தாமதமாகிறது.
இதோ இந்த இடத்துக்குத்தாங்க நாம போகணும். இந்த இடம் பற்றிய தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். டிக்கெட் எடுக்க வேண்டாமா? வாங்கிவிட்டு அப்படியே படகுத்துறைக்குப் போகும் வழியில் இருப்பதைப் பார்த்துக் கொண்டே போவோம்.
ரங்கனதிட்டு பறவைகளைப் பார்க்க டிக்கெட் வாங்கும் வரை கொஞ்சம் இடைவெளியில் ஒரு பதிவு.
என் ஃபோல்டரில் மூன்று வருடங்களுக்கும் மேலாகக் கிடந்த (அப்பாவின்) நாற்காலி, 2025 மார்ச் மாத கணையாழி இதழில் வெளியானது. கணையாழி ஆசிரியருக்கும், குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றி. முதன் முறையாக இதழில் வெளிவந்திருக்கிறது. கணையாழிக்கு அனுப்புவதற்கு முதற் காரணமாகவும் தூண்டுகோலாகவும் இருந்தவர் நம்ம நட்பு எங்கள்ப்ளாக் ஸ்ரீராம். அவருக்கு என் நன்றி உரையை வழங்கிக் கொள்கிறேன்!
பாண்டவபுரா ரயில் நிலையம். வலப்புறம் தெரியும் 2 வது நடைமேடையில் இறங்கி நடைபாதை மேல் பாலம் வழியாக 1 ஆம் நடைமேடையில் இறங்கும் முன் இந்த வளைவு தெரிந்ததும், அழகாக இருக்கா, ஒரு க்ளிக்
பெங்களூரிலிருந்து 3, 4 மணி நேரப் பயணத்தில் - குறிப்பாக சாம்ராஜ்நகர், மாண்டியா மாவட்டங்களில் - சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் இருக்கின்றன. (அருகில் மைசூர், மடிக்கேரி). கொக்கரேபெல்லூர் சென்றுவந்த உடனேயே அடுத்த வார ஞாயிறில் அதாவது மார்ச் தொடத்திலேயே ரங்கனதிட்டு சென்று விட்டு வரவேண்டும் - பறவைகள் சீசன் என்பதால் - என்ற திட்டம் இருந்தது. ஆனால், சென்னைக்குச் செல்வது அந்தச் சனிக்கிழமையா அல்லது அடுத்த சனிக்கிழமையா என்ற குழப்பம் இருந்தது.
ஸ்ரீமதி ரவி என்ற புனைபெயரில் எழுதும் திரு பி டி ரவிச்சந்திரன் அவர்கள் சிறந்த புகைப்படக் கலைஞர். விகடனில் இவரது முதல் கதை வெளிவந்ததும், ஆசிரியர் பாலசுப்ரமணியன், கதை நன்றாக இருக்கிறது என்று இவரைத் தொடர்ந்து விகடனில் எழுதச் சொன்னாராம். நிறைய பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்.
அப்பர் - தந்தையின் பெயர். எனவே முகிலன் அப்பர். பெயரே அழகாக இருக்கிறது! பரிசு பெற்றவர்களில் மிகவும் இளையவர். வயது 22. பொறியியல் பட்டதாரி என்றாலும் தமிழ் மொழியின் மீதான பற்றின் காரணமாகத் தற்போது இளங்கலை (தமிழ்) இரண்டாமாண்டு படித்து வருகிறார். பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்கவர்.
அமெரிக்காவில்
வசித்துவரும் கதாசிரியரைப் பற்றி பிரமிப்பான குறிப்புகள். ஆங்கிலத்தில் கட்டுரைகள்
எழுதி வந்தவர், சமீபகாலமாகத் தமிழில் எழுதி வருகிறார். கட்டுரைகள் நாவல்கள் கதைகள்
என்று.
பொதுவாகக்
கதை இலக்கணம் என்று சொல்லப்படும் தொடக்கம் முடிச்சு அதை அவிழ்த்தல், சஸ்பென்ஸ், என்று
எதுவும் இல்லாமல் இயல்பான உரையாடல்களுடன் ஒரு கதாபத்திரம் - பெற்றோர் யார் என்று தெரியாத,
குடும்பம் என்பதே இல்லாத, சலூன் நடத்தும் ஒண்டிக்கட்டை சிவா - பற்றிச் சொல்லும் கதை.
2013
லிருந்து செல்லப்பா தமிழ் டயரி மற்றும்
இமயத்தலைவன் என்று இரு தளங்களில், (முன்னதில் அன்றாட நிகழ்வுகளையும், பின்னதில்
இலக்கியமானவைகளையும்) எழுதி வரும் பதிவர், எழுத்தாளர் திரு இராயசெல்லப்பா அவர்களை நாம்
எல்லோரும் அறிவோம். Subtle Humour என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் நுட்பமான நகைச்சுவை
எழுத்தும் பேச்சும் இவருக்கு வசப்பட்ட கலை.
சென்ற
பதிவுகளை எல்லாம் வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. அடுத்த பதிவு எழுத
கொஞ்சம் நேரம் எடுக்கிறது. எனவே இடைவெளியில் நாம ஒரு சின்ன பிக்னிக் போய்வரலாம் வாங்க!
இப்படித்தான்.
ரயிலில் பயணித்துக் கொண்டே.......காட்சிகளைப் பார்த்துக் கொண்டே ...
சென்ற பதிவின் தொடர்ச்சி - எங்களை ஏற்றிக் கொண்ட புதிய ஆட்டோகாரர், கிராமத்தின் பேருந்து செல்லும் சாலையில் செல்லாமல் வேறொரு வழியில் சென்றார். இந்த வழி வித்தியாசமாக இன்னும் பசுமையாக இருந்திட நான் அவரிடம் கேட்க, இது "பசுலு பசுலு Road" (பசுமையான சாலை) என்றார். அதே ருத்ராக்ஷிப்பூர்-ஹலகுரு சாலை பேருந்து செல்லாத கிராமத்துச் சாலை. ரொம்பவே வேகமாகச் சென்றார். எனக்கு ஃபோட்டோ எடுப்பது சிரமமாக இருந்தது. "ஐயா கொஞ்சம் மெதுவா போங்கய்யா". ஆனால் மனுஷர் கேட்கத் தயாராக இல்லை. ஏற்கனவே அறிமுகமாயிருந்த ஆட்டோ நண்பர் கிரணிற்கு என் விருப்பம் தெரியும் என்பதால் நிதானமாக ஓட்டிக் கொண்டு வருவார்.
முன்பெல்லாம் இரண்டாயிரத்திற்கும் மேலான பறவைகள் வந்து கொண்டிருந்ததாகவும், சமீபகாலங்களில்
அலைபேசி கோபுரங்களினால் வரவு குறைந்துவிட்டது என்றும், மேலும் சில
பறவைகள் இங்கு வந்து நோய்வாய்ப்பட்டதால் அதன்பின் வருவதில்லை என்றும் வருத்தத்துடன், WWFன் இயற்கை விளக்க மையத்தைப் பார்த்துக் கொள்ளும் திரு கிருஷ்ணா சொன்னார். "பறவைகள் வருவதும்
தாமதமாகிவிட்டது, ஜனவரி கடைசி, ஃபெப்ருவரியில் வந்துவிடும், என்னை அழைத்துக் கேட்டுவிட்டு
வாங்க" என்றுதன் மொபைல் நம்பரைத் தந்து
என் கணவரின் நம்பரையும் பெற்றுக் கொண்டார். பார்வையாளர்களின் பெயர், ஊர், அலைபேசி எண், தேதி, கையெழுத்து இவற்றை வருகைப் பதிவேட்டில் பதிவு செய்யச் சொல்கிறார்.
‘சக்கரே நகரா’ என்று அழைக்கப்படும் மாண்டியா மாவட்டத்தில் இருக்கும் இந்த கொக்கரே கிராமத்திற்கு சக்கரே உடம்பாக இருக்கும் நான் இரு முறை சென்று வந்தேன்/தோம்.
நெடுநாளைய ஓர் ஆசை நிறைவேறியது. (என்னிடம் இப்படியான ஆசைகளுக்குப் பஞ்சமில்லை. Lord Buddha Please! கண்டுக்காதீங்க!) கொக்கரேபெல்லூர். பெயரே வித்தியாசமாக இருக்கு இல்லையா? முதலில் கிராமத்தைப் பற்றிச் சொல்லிவிட்டு அதன் பின் அனுபவங்களைச் சொல்லலாம் என்று நினைத்ததால் பதிவை இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் போட வேண்டி வரும் என்று தோன்றுகிறது.
பாலக்காட்டில், நான் ஆசிரியராகப் பணியாற்றிய மாத்தூர் CFDVHS பள்ளியில் 2000-2002 ல் வணிகவியல் படித்த மாணவ மாணவியர் ஒரு சந்திப்பு நிகழ்வை, 2025, ஃபெப்ருவரி மாதம் 2 ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தார்கள். தற்போது பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அந்த Batch ல் படித்த மாணவியான ராதிகா என்னைத் தொடர்பு கொண்டு பங்கெடுக்க வேண்டும் என்று சொன்னார்.
முந்தைய சில சந்திப்புகளுக்குச் செல்ல முடியவில்லை என்பதால் இந்தச் சந்திப்பை ஒட்டி, குடும்பத்துடன் இரு நாட்கள் பயணத்தைத் தீர்மானித்தேன். கோவையில் படிக்கின்ற என் மனைவியின் தங்கையின் மகன் விவேக் படிக்கும் கல்லூரிக்கு இதுவரை செல்ல முடியவில்லை. அங்கும்சென்று அப்படியே மருதமலை முருகனையும் தரிசித்து முருகனின்அருள் பெற்று வரலாம் என்று முடிவு செய்தேன்.
நான்கு
மாதங்களுக்கு முன்பு நல்ல குளிர் சமயத்தில் பந்திப்பூரில், தமிழ்நாடு, கேரளா எல்லையின் அருகில், கர்நாடகாவின் எல்லைக்குள், 1450 மீட்டர்
உயரத்தில் இருக்கும் ஹிமவத் கோபாலசுவாமி பெட்டா (மலை)
எனும் மலைக்கோயிலுக்குச் சென்றோம்.