செவ்வாய், 24 ஜூன், 2025

சில்லு சில்லாய் - 23

 

சில்லு - 1 - சிறிய பின்னோட்டம் + முன்னோட்டம்

ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் பற்றி எழுதிய போது. திரிரங்க யாத்திரை என்று, ஸ்ரீரங்கப்பட்டினம், மத்யரங்கம், ஸ்ரீரங்கம் மூன்று கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்கும் பயணம் இருப்பதாகச் சொல்லியிருந்தேன், உங்களுக்கு நினைவிருக்கலாம்! 

நாங்கள் அப்படிக் குழுவில் எல்லாம் செல்வதில்லை. ஆனால் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 4, 5 முறை சென்றதுண்டு. எந்தக் கோவிலுக்குச் சென்றாலும், கோபுரங்கள், சிற்பங்கள், அழகுக் கலைவடிவங்கள் எடுக்க ஆசைப்படுவேன். ஆனால் அப்போதெல்லாம் கையில் கேமரா கிடையாது. 2013 ல் பயன்படுத்தப்பட்ட கேமரா - நிக்கான் கூல்பிக்ஸ் ஒன்று எனக்கு வந்தது. அது அப்போதுதான் தளம் தொடங்கிய புதிதும் கூட எனவே எடுத்த படங்கள் எல்லாம் அவ்வப்போது பகிர்ந்திருப்பேன். அது கேடாகியதும், சோனி சைபர் ஷாட், இதுவும் Used one.

2019ல் நெருங்கிய உறவின் மகனின் திருமணத்திற்குக் குடும்பமாக ஸ்ரீரங்கம் சென்ற போது திருமணம் முடிந்து ஊருக்குக் கிளம்புவதற்கு முன் கிடைத்த 45 நிமிட அவகாசத்தில் என் மைத்துனர், கோவிலின் கோபுரங்கள் அனைத்தும் ஒருசேரப் பார்க்கலாம் என்று சொல்லி எங்களை அழைத்துச் சென்றார். எந்த சாமியையும் பார்க்கவில்லை. அவசர அவசரமாக ஓடி ஓடிச் சென்றோம், சுற்றினோம். நான் ஒரு சில க்ளிக்கினேன். 



அப்போது அந்த சோனி கேமாரா கையில் இருந்தது. அது போதுமே எனக்கு. விடுவேனா? முடிந்தால் படங்கள் எடுத்துவிடுவோம் என்று கோவிலின் கோபுரங்கள் மட்டுமின்றி, கீழே வெளியில், மண்டபத்தில் தூண்கள், ஒரு சில சிற்பங்கள், என்று எடுத்துப் பதிவாகவும் போட்டேன்இப்படிப் படங்கள் எடுப்பது தற்போது என்றில்லை. கேமரா கையில் கிடைத்த பின் எப்போதுமே, எல்லா வகையான படங்களுடன், இவ்வகையானக் கலைவடிவங்களையும் படங்கள் எடுக்க மிகவும் பிடிக்கும், வழக்கமும் கூட. அப்படி முன்பு எடுத்தவற்றைப் பகிர்ந்த சுட்டிகள் கீழே. பார்க்காதவர்களுக்கு...இங்கு இரண்டு படங்கள்தான் கொடுத்திருக்கிறேன் சாமபிளாக. மீதியை சுட்டிகளில் பார்க்கலாம். அழகான கோபுரங்கள், மண்டபங்கள்....

கோபுர வாசலிலே - 1 - ஸ்ரீரங்கம்

கோபுர வாசலிலே - 2 - ஸ்ரீரங்கம்

கோபுர வாசலிலே - 3 - ஸ்ரீரங்கம்

கோபுர வாசலிலே - 4 - ஸ்ரீரங்கம்

அப்படி மூன்று ரங்கங்கங்களிலும் ஸ்ரீரங்கம் ஓவர். சமீபத்தில் ஆதிரங்கம் ஸ்ரீரங்கப்பட்டினம் ஓவர். நம்ம வீட்டில் மத்தியரங்கமும் பார்த்திடலாம் என்றதும் (பல வருடங்களுக்கு முன் போனவைதான்), நான் அதோடு, சிவனசமுத்திரமும், தலக்காடும் (நெடுங்கால ஆசை அது ஏனென்றால் சிற்பங்களுக்காகவே) எல்லாமே அருகருகேதான் என்பதால் பார்க்க வேண்டும் என்று சென்ற போது எடுத்தவை பதிவாகப் போட படங்கள் தொகுக்க வேண்டும். ஒரு சாம்பிள் இதோ...

தலக்காடு - வைத்தியநாதேஸ்வரர் கோவில்

இப்படி, பதிவுலகம் வரும் முன்னும் கூட, மகாபலிபுரம், சில கோவில்கள் என்று எடுத்தவற்றைப் பதிவுகள் போடவில்லை. எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்கில் இருக்கும் அப்படங்களை எடுக்க முடிந்ததென்றாலும் பதிவாகப் போடப் போவதில்லை. படங்களை மட்டும் அவ்வப்போது பகிர்கிறேன்.

**********************

சில்லு - 2 - இந்த நெகிழிப் பொருட்கள் பிரச்சனை தொடர்கதை...

நெகிழிப் பொருட்கள் கூடாது என்று தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறதுதான். ஆனால் தீர்வு தான் சரியாக இல்லை. ஒருபக்கம் நெகிழிப் பொருட்கள் கூடாது என்று சொல்கின்றனர். ஆனால், நெகிழிப் பொருட்கள் கடைகள் பெருகிக் கொண்டேதான் இருக்கின்றன. பால் பாக்கெட்டுகள்? கண்ட கண்ட இடங்களின் அதுலும் நாகருக்குப் பால் ஊத்துகிறேன் என்று பாக்கெட் கொண்டு வந்து ஊற்றி அருகிலேயே போடுவதை அருகில் உள்ள கோவில்களில் பார்க்கிறேன்.

இந்த அறிவிப்பை பல இடங்களிலும் வைத்திருந்தார்கள். நான் இந்த இடத்தில் படம் எடுத்ததன் காரணம் பின்புறத்தில் இருக்கும் அழகிய வடிவிற்காக.

இப்ப, இங்கு நெகிழிப் பொருட்களுக்குத் தடை, கோயில்கள் உட்பட வீட்டருகில் உள்ள கோவிலில் அறிவிப்பு வைத்திருந்தார்கள். (அதில் இருக்கும் ஆங்கிலத்தைக் கண்டுக்காதீங்க. பொருள் புரிந்துவிடும்).


வலப்பக்கம் உள்ள படத்தில் ஒரு பெண்மணி பூஜை செய்கிறார். கை மட்டும் தெரியும் மற்றவற்றை மறைத்துவிட்டேன்


அறிவிப்பைப் பார்த்ததும், கோவிலின் வெளி மதில் ஓரத்தில் இருக்கும் மரம், அருகில் ஒரு சாலையில் இருக்கும் மரம், முந்தைய பதிவு ஒன்றில் சொல்லியிருட்ந்த பூங்காவில் புற்றுகள் இவை எல்லாம் நினைவுக்கு வந்தன. மரத்திற்கும், கரையான் புற்றுகளுக்கும் அதைச் சுற்றியும் நடக்கும் atrocities களுக்கு பிபிஎம்பி முடிவு கட்டினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இப்படியான நம்பிக்கைகள் தனிநபர் சார்ந்தவை. அதை இப்படி வெளிப்படுத்தி, பொது இடங்களை அசுத்தப்படுத்துதல் தவிர்க்கப்பட வேண்டும். 

************************

சில்லு - 3 - இது என்ன என்று தெரிகிறதா?

இந்த மரங்கள்/அதில் தொங்குபவை என்னவென்று தெரிகிறதா? (நானே கீழ சொல்லிவிட்டேனே!!!!!) நடைப்பயிற்சி செல்லும் பல பூங்காக்கள் ஒன்றில் இவை. ஒரு நாள் அங்கு வந்த குடும்பத்தில் பெரியவர்களே அதைப் பறித்திட, உடனே குழந்தைகளும் அதைப் பறித்தன. அப்படிப் பறிக்கலாமா, கூடாதா, ஏதேனும் விதிமுறைகள் உண்டா என்று தெரியவில்லை. அவர்களைத் தவிர பூங்காவுக்கு வரும் யாரும் இதை எல்லாம் தொடுவதில்லை. பொதுவாக யாரும் பறிப்பதில்லை. அப்படினா இவற்றை யார் பயன்படுத்துவாங்க? பூங்காக்களைப் பராமறிப்பவர்களா இல்லை விலைக்குப் போகுமா? தெரியவில்லை.


அத்திப் பூத்தாற் போல - அதாவது அத்திப்பூ அந்தக் காயிற்குள்ளேயே மறைந்து இருப்பதால் பூவைப் பார்ப்பது அரிது பூவும் காயும் ஒன்று. அத்திப்பழம்/காய் என்பது ஒரு பூதான், அது சிறிய உருண்டையாகக் காய் போலவே பூத்து, அது பூவாக இருந்து, அவை பெரிதாகிக் காய் போல வந்து அப்புறம் பழமாகிவிடும். ஒரு காலத்தில் பணக்காரர்களின் பழம் என்று சொல்லப்பட்ட இது இப்போது பரவலாக மக்கள் வாங்கக் கூடிய விலையில் கிடைக்கின்றன என்று சொல்லப்பட்டாலும் மத்தியதரக் குடும்பங்கள் வரைதான் எட்டும். 

சரிங்க, அத்திப் பூ போல பதிவு போடும் நானும், அடுத்த பதிவுக்குப் படங்களைத் தொகுக்க வேண்டுமே! அடுத்த பதிவில் சந்திப்போம். அதற்குள் துளசி, அவர் பதிவை ரெடி செய்துவிட்டார் என்றால் அது வரலாம்...


------கீதா

14 கருத்துகள்:

  1. அனைத்து படங்களும், விவரங்களும் மிக அருமை கீதா
    ஸ்ரீரங்கம் படங்கள் அனைத்தும் கண்ணை கவர்கிறது.
    நெகிழி பொருட்களை அழிக்க முடியாது, அதற்கும் பூமியில் விழுந்தால் அழிவே இல்லை அப்படி வரம் வாங்கி வந்து இருக்கிறது.

    மரத்தடி நாகர்கள், புற்றுகள் வழிபாடு காலம் காலமாக நடக்கிறது.
    பெங்களூரில் அதிகமாக பார்த்து இருக்கிறேன்.

    வனம் மாதிரி இருப்பாதல் பாம்பு அடிக்கடி வரும் அதனிடமிருந்து காத்துக் கொள்ள நாகராஜன் வழிபாடு நீங்கள் சொன்னது போல நம்பிக்கை சார்ந்த விஷயம். குப்பைகளை தொட்டிகளில் போடலாம்.பொது இடத்தை சுத்தமாக வைத்து கொண்டால் நல்லது.

    அத்திமரம் படங்கள் அழகு. நல்ல அத்திபழமாக இருந்தால் பூங்காவை பாராமரிப்பவர்களே எடுத்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிக்கா. அது முன்பு எழுதிய பதிவுதான்....அதிலிருந்து படங்கள் சும்மா ரெண்டு...

      ஆமாம் நெகிழிப் பொருட்களை அழிக்க முடியாது ஆனால் அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த யோசிக்கலாம்

      காலம் காலமாக நடப்பவைதான்...நீங்க சொல்லியிருப்பது போல்...தான்

      நானும் நினைத்தேன் நல்ல அத்திபழமாக இருந்தால் (அதில் வகைகள் இருக்கின்றனவே) பராமரிப்பவர்களே எடுத்துக் கொள்வார்களோ? இருக்கலாம்

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. முதல் சில்லு வில் ஸ்ரீரங்கம் கோவில் படங்கள் மிக அழகாக இருக்கிறது. நீங்கள் ஒரு உறவின் திருமணத்திற்கு சென்று விட்டு ஊருக்கு கிளம்பும் அவசரத்தில், ஸ்ரீ ரங்கம் கோவிலுக்குச் சென்று அதன் அழகான 21 கோபுரங்களை படங்கள் எடுத்து பதிவாக போட்டது நினைவுக்குள் இருக்கிறது. அந்தச் சுட்டிகளுக்கும் சென்று படித்து வந்தேன். அவை அனைத்திலும் நானும் கருத்துரைகள் தந்திருக்கிறேன்.

    உங்கள் பதிவை பார்த்த நானும் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்ல மிகவும் ஆசைப்பட்டிருக்கிறேன். எனக்கும் இரு தடவைகள் இறைவன் அந்த ஆசையின் விருப்பங்களை பூர்த்தி செய்திருக்கிறான். அதில் இரண்டாவது தடவை அவன் அருளால், அந்த 21 கோபுரங்களை காணும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. என் கைப்பேசியில் போட்டோக்களும் எடுத்துள்ளேன். பகிரத்தான் இயலவில்லை.

    மத்திய ரங்கம் கோவில் தரிசனம் ஒரு தடவை மைசூர் சென்று திரும்பி வரும்போது கிடைத்தது. ஆனால், அச்சமயம் கோவில் பராமரிப்புக்காக உள்ளே செல்ல இயலவில்லை.மேலும் அப்போது இரவு மணி எட்டை தாண்டி விட்டது. நீங்கள் அதை பகிரும் போது தரிசித்துக் கொள்ள ஆவலாக உள்ளேன்.

    தலக்காடு கோவில் சிற்பம் மிக அழகாக உள்ளது.

    இப்போது மரங்களைச்சுற்றி மஞ்சள் சிவப்பு வண்ண கயிறுகள் கட்டுவதும், மரங்களுகடியில் சிதிலமடைந்த இறைவனின் போட்டோக்களை வைத்து இறை நம்பிக்கையை உண்டாக்குவதும் தொடர்கிறது.நெகிழி பைகள் குறித்த தங்களது கருத்துக்கள் உண்மைதான். என்ன செய்வது மக்களும் உணர வேண்டும்.

    சில இடங்களில் கண்டிஷனாக நெகிழி பைகள் தருவதில்லை. அதற்குப் பதிலாக துணிப்பைகள் விற்பனைக்கு அவர்களே தருகிறார்கள். ஒரு பை. பத்து, ரூபாய் வரை விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். குப்பைகள் இல்லாத காலங்கள் ஒருநாள் மாறும் என நம்பிக்கை கொள்வோம்.

    அத்திப்பழங்கள் மரங்களின் படங்கள் மிக அழகாக உள்ளது. பலாப்பழமும் மரத்தின் ஆரம்ப அடிமர வேரில்தான் காய்த்து உண்டாகும். அத்திப்பழமும் அப்படித்தான் என இன்று தெரிந்து கொண்டேன். அனைத்துப் படங்களும் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா உங்களுக்குப் பதில் கொடுத்து பப்ளிஷ் பண்ணினா கமென்ட் காணாமல் போய்விட்டது, நெட் பிரச்சனையினால்.....சலிப்பு வந்துவிட்டது!!

      உங்களுக்கு அந்தப் பழைய பதிவுகள் நினைவிருக்கும் என்று தெரியும் அக்கா உங்க கருத்துகள் எல்லாப் பதிவிலும் இருக்கும்..

      இங்கு நீங்க சொல்லியிருப்பது போல் மெல்லிய வெள்ளைத்துணியில் தைத்த பைகள் தராங்க இல்லைனா ஜூட் பை காசு கொடுக்க வேண்டும். இல்லைனா ப்ரௌன் கவரில் கொடுக்கறாங்க எல்லாப் பொருட்களும் நாமே எடுப்பதாக இருந்தாலும் ப்ரௌன் கவரில் எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைய கவர்கள் குமிகின்றன அதை உலர் குப்பைகளுடன் போட்ட்டு பையில் வைக்க வேண்டும்.

      என்றேனும் அரிதாக, வெளியில் டிஃபன் வாங்க வேண்டும் என்றால், னான் வீட்டிலிருந்து சின்ன சின்ன டப்பாக்களை அலல்து சின்ன கேரியரை எடுத்துச் செல்வேன். பில் போடும் போது சொல்லிவிடுவேன், பாத்திரங்கள் இருக்கு என்று. பாக்கிங்க் சார்ஜ் போடமாட்டாங்க. பாக்கிங்க் சார்ஜுக்காக இல்லை....ப்ளாஸ்டிக் டப்பாக்களாகச் சேருமே என்று.

      நானுமே இங்கு வந்துதான் பார்க்கில் அத்திப்பழ மரங்களைக் கண்டேன், கமலாக்கா.

      நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  3. கோவில்களுக்குச் செல்வதும் அங்கிருக்கும் காளிவடிவங்களை கண்ணார மனமார உல் வாங்குவதும் எனக்கும் பிடிக்கும்.  கெமிக்கரா நமக்கு எக்ஸ்டரா போனஸ்.  அவற்றை கேமிராவில் சிறையடுத்து அவ்வப்போது ராசிபப்தற்கு.  அதென்னவோ நமக்கு கடந்த கால வரலாற்றின் அடையாளங்கள் மிகவும் பிடித்துப் போகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கேமரா எக்ஸ்ட்ரா போனஸ். ஆமாம் அப்புறம் ரசித்துக் கொள்ளலாமே....ஆமாம் கடந்த காலங்களின் மிச்ச சொச்சங்களைப் பார்ப்பதிலும் ஆர்வம். பார்க்கப் பிடிப்பதும்

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. நானும் நிக்கான் கூல்பிக்ஸ் வைத்திருந்தேன்.  நான் வாங்கிய முதல் டிஜிட்டல் கேமிரா.  13 எம்பி. இப்போது அது எங்கோ ஓரத்தில் தூங்குகிறது!  கோவில் படங்கள் அற்புதம்.  தலக்காடு ஈஸ்வரர் படம் தெளிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், நிக்கான் கூல்பிக்ஸ், நிக்கானின் பேசிக் கேமராக்களில் நல்ல காமேரா இது. எனக்குப் பிடித்திருந்துச்சு. சோனிய விட அது நல்லாருக்கும். ஓரத்துல இருக்கறாத வெளிய எடுத்துப் பாருங்க ஸ்ரீராம் வொர்க் ஆகுதான்னு,.என் கை துறு துறுங்குது!!!!!

      கோவில் படங்கள் அற்புதம். தலக்காடு ஈஸ்வரர் படம் தெளிவு.//

      நன்றி ஸ்ரீராம். அது ஈஸ்வரர் இல்லை வாயில் காப்போன்!!!

      இனியும் படங்கள் வரும் தலக்காடு பதிவில்.

      கீதா

      நீக்கு
  5. கேரி பேக் என்னும் பொருள் இன்னும் பெரிய அளவியல் உபயோகத்தில் இருக்கிறது.  மூலைக்கு மூலை காட்டகிரிக் கடைகளிலும், மட்டன் விற்கும் இடங்களிலும் நீலத்திலும், கறுப்பிலும் மானாவாரியாகக் கிடைக்கின்றன.  பிளாஸ்டிக்கை தடை செய்வது என்பது சற்று  சிரமம்தான். கண்டு பிடித்து உபயோகபப்டுத்த தொடங்கி விட்டோம்.  இனி மாற்றுவது கடினம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இங்கு கொஞ்சம் தேவலாமோ என்று தோன்றுகிறது. கவருக்குப் பதிலா சாப்பாடு ப்ளாஸ்டிக் பாக்ஸ் கறுப்புல வருதே அது. ஆனா அது ரொம்ப மோசமாம் உடல் நலத்துக்கு. தடை செய்வது ரொம்ப சிரமம். ஆனால் அதை ஒழுங்காக அப்புறப்படுத்தி மீள்சுழற்சிக்கு அனுப்பி அதை உணவுப் பொருளுக்கு அல்லாமல் வேறு எதுக்கேனும் பயன்படுத்தலாம்.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  6. ஓ..  அது அத்திப் பூவா?  காய் இல்லையா?  நான் பார்த்ததில்லை.  அத்திக்காய் காய் காய் பாடலும், அத்திப்பழத்தைக் குற்றம் கூற யாருக்கும் வெட்கமில்லை பாடலும் நினைவுக்கு வருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூதான் ஸ்ரீராம் ஆனால் இப்ப காயாக இருக்கு. இப்படிப் பெரிதாகும் போது. பூ சின்ன வடிவில் தொடங்கி பெரிதாகும் காய்தான் பூ காய் எல்லாம் ஒன்று காய் பழுக்கும் போது பழம்!

      பாடல்களைப் பகிர நினைத்து, ஸ்ரீராமுக்கு அதை விட்டு வைப்போம்னு வைச்சுட்டேன்!!!

      கீதா

      நீக்கு
  7. படங்களும் தகவல்களும் நன்று. பதிவுகள் எழுதுவதும் படிப்பதும் முடிவதில்லை. முடிந்த போதெல்லாம் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட்ஜி.

      எப்ப முடியுதோ அப்ப எழுதுங்க, வாசிங்க ஜி. We should never stress ourselves! அது மிகவும் முக்கியம். நல்ல ரிலாக்ஸ் பண்ணுங்க ஜி.

      கீதா

      நீக்கு