tag:blogger.com,1999:blog-8791227559428336284.post169527853399241657..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : நினைவுகள் தொடர்கதை - அம்மாThulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50179022221682455682020-08-20T12:35:19.989+05:302020-08-20T12:35:19.989+05:30ஆமாம் என்ன நடக்க இருக்கிறதோ அதுதான் நடக்கும். இது ...ஆமாம் என்ன நடக்க இருக்கிறதோ அதுதான் நடக்கும். இது கனவு கூட இல்லை அதிரா. அன்று மனதில் தோன்றிய ஒன்று.<br /><br />//நான் ஊரில் இருந்தபோது, ஒரு உறவுக்கார அக்கா, அவவுக்கு அம்மா இருந்தா, அந்தம்மாவுக்கு அப்போ வெறும் 60-65 வயசுகளே இருக்கும், ஆனா அந்தக்கா சொன்னா என்னிடம், தான் எதைக் கவனிக்காவிட்டாலும், வயசானோரின் விசயத்தில் படு அக்கறையாக இருப்பேன், என் அம்மா எதை விரும்பினாலும் உடனே செய்து கொடுத்துவிடுவேன், தாமதித்தால் பின்பு அவவுக்கு ஏதும் ஆகிட்டால் தாங்க முடியாமல் போயிடும் என்றா... அது என் மனதில் பதிந்திருந்தது, இப்போ உங்கள் எழுத்துப் பார்த்ததும் அதுதான் நினைவுக்கு வந்தது.//<br /><br />உண்மைதான் அதிரா. நல்ல விஷயம். இதை நான் எல்லோருக்கும் சொல்வதுண்டு. பின்னர் நினைத்துப் பயனில்லை.<br /><br />//நாங்கள் கனடா போய் நின்று நன்கு கொண்டாடி, புதன்கிழமை இரவு பிளேனில் வெளிக்கிட்டு வியாழன் விடிய இங்கு வந்தோம், அப்பா ஃபோன் பண்ணி, நலமாக போய்ச் சேர்ந்திட்டீங்களோ எனப் பேசினார்... வியாழன் இரவு அப்பா போய் விட்டார்... திரும்பவும் வெள்ளி பகல் பிளேன் எடுத்து சனிக்கிழமை போய்ச் சேர்ந்தோம்... எவ்வளவு கவலையாக இருந்தது, இருப்பினும் நமக்கு அளந்தது அவ்வளவுதான் என மனதை தேற்றிக் கொண்டேன்.//<br /><br />ஓ! கவலையாக இருந்திருக்கும். ஆனால் மனதிற்குக் கொஞ்சம் சமாதானம் முந்தைய நாள் வரை அவரோடும் இருந்திருப்பீங்கதானே அந்த நல்ல நினைவுகள் மனதில் நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள் வேறு என்ன சொல்ல இல்லையா? கடந்த காலத்தில் நல்லதை நினைக்கலாம். இது அம்மா பற்றியது கூடுதல் அன்று நினைவுக்கு வரக் காரணம் இன்று அம்மாவின் நினைவு நாள். இது போன்று மனதில் தோன்றும் உள்ளுணர்வு எச்சரிக்கை நடந்ததில்லை அல்லது நான் தொடர்பு படுத்திப் பார்த்ததில்லை. இப்படி மனதில் தோன்றி நடந்தது இதுதான் என்பதால். <br /><br />மிக்க நன்றி அதிரா<br /><br />கீதா<br /><br /> Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-10569982035657904452020-08-20T12:27:50.604+05:302020-08-20T12:27:50.604+05:30வாங்க அதிரா. ஹைஃபைவ். இன்று நான் எங்கே அதிரா என்று...வாங்க அதிரா. ஹைஃபைவ். இன்று நான் எங்கே அதிரா என்று கேட்டு உங்க செக் கிற்கு மெயில் அனுப்ப நினைத்திருந்தேன் பார்த்தா உங்க கமெட்ன்ட். ஆமாம் நீங்களும் நலம்தானே. <br /><br />ஹா ஹா ஹா தலைப்பு பார்த்து கதை என்று நினைத்தீங்களா.!!! <br /><br />இல்லை அதிரா இது எழுத நினைத்து எழுதவில்லை. ஸ்ரீராம் தன் கனவு பற்றி எழுதி யிருந்தார். கூடவே எனக்கு கனவு எல்லாம் அப்படி வந்துவிடுவதில்லை ஆனால் அங்கு உள்ளுணர்வு சொல்லுவது பற்றியும் வாசித்த நினைவில் இதை எழுதினேன். இப்படி அடுத்து பள்ளி பதிவுகள் எல்லாம் வரும்.<br /><br />மிக்க நன்றி அதிரா உங்களை மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. நேற்றே செக் வந்ததும் நினைத்தேன் யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்று ஓ மை காட்!!! யானை...ஓடுறேன் ஓடுறேன்...நானும் ஓடுவதில் ப்ரைஸ் எல்லாம் வாங்கியிருக்கேனாக்கும்!!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52445164685570569092020-08-19T22:37:34.772+05:302020-08-19T22:37:34.772+05:30கனவுகள் பலசமயம் சும்மாவும் சில சமயம் எதையோ சுமந்து...கனவுகள் பலசமயம் சும்மாவும் சில சமயம் எதையோ சுமந்து கொண்டும் தான் கீதா வருகின்றன, எனக்குப் பெரும்பாலும் வரும் கனவுகள் பலித்திருக்கின்றன.<br /><br />கவலைப்படாதீங்கோ, நமக்கு என்ன நடக்கோணும் என எழுதியிருக்கோ அதை ஆராலும் மாற்ற முடியாது.. பகவத் கீதை உபதேசத்தை நினைத்து ஆறுதல் அடையுங்கோ.<br /><br />நான் ஊரில் இருந்தபோது, ஒரு உறவுக்கார அக்கா, அவவுக்கு அம்மா இருந்தா, அந்தம்மாவுக்கு அப்போ வெறும் 60-65 வயசுகளே இருக்கும், ஆனா அந்தக்கா சொன்னா என்னிடம், தான் எதைக் கவனிக்காவிட்டாலும், வயசானோரின் விசயத்தில் படு அக்கறையாக இருப்பேன், என் அம்மா எதை விரும்பினாலும் உடனே செய்து கொடுத்துவிடுவேன், தாமதித்தால் பின்பு அவவுக்கு ஏதும் ஆகிட்டால் தாங்க முடியாமல் போயிடும் என்றா... அது என் மனதில் பதிந்திருந்தது, இப்போ உங்கள் எழுத்துப் பார்த்ததும் அதுதான் நினைவுக்கு வந்தது.<br /><br />நாங்கள் கனடா போய் நின்று நன்கு கொண்டாடி, புதன்கிழமை இரவு பிளேனில் வெளிக்கிட்டு வியாழன் விடிய இங்கு வந்தோம், அப்பா ஃபோன் பண்ணி, நலமாக போய்ச் சேர்ந்திட்டீங்களோ எனப் பேசினார்... வியாழன் இரவு அப்பா போய் விட்டார்... திரும்பவும் வெள்ளி பகல் பிளேன் எடுத்து சனிக்கிழமை போய்ச் சேர்ந்தோம்... எவ்வளவு கவலையாக இருந்தது, இருப்பினும் நமக்கு அளந்தது அவ்வளவுதான் என மனதை தேற்றிக் கொண்டேன்.<br /><br />விதியை மாற்ற முடியாது கீதா, அதனால கடந்த காலத்தை நினைக்கக்கூடாது..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37929987942597488712020-08-19T22:29:48.122+05:302020-08-19T22:29:48.122+05:30கீதா நலம்தானே? நீண்ட இடைவெளிக்குப் பின்பு வந்திருக...கீதா நலம்தானே? நீண்ட இடைவெளிக்குப் பின்பு வந்திருக்கிறேன், இங்கும் ஸ்கூலும் தொடங்கிவிட்டமையால தொடர முடியாமல் இருக்கிறது புளொக்குகளை... இருப்பினும் விடாப்பிடியாக வரத் தொடங்கி இருக்கிறேன்.<br /><br />இப்போஸ்ட் முந்தநாளே தலைப்புப் பார்த்தேன், ஏதோ கதை எழுதியிருக்கிறீங்கள், கொஞ்சம் ரைம் ஒத்துக்கிப் படிப்போம் என விட்டு விட்டேன். இன்று படிக்கலாமே எனத் திறந்தால்.. உண்மைச் சம்பவம்.... ஏன் தலைப்பை அப்படிக் கொடுத்தீங்கள்.. “உண்மைச் சம்பவம்- அம்மா”.. இப்படி ஏதும் போட்டிருந்தால் எல்லோரும் ஓடி வந்திருப்பார்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-955737044230117542020-08-18T18:17:24.430+05:302020-08-18T18:17:24.430+05:30ஆமாம் ஜி எம் பி சார் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுப...ஆமாம் ஜி எம் பி சார் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் இருக்கும். நீங்கள் உங்கள் தந்தையைப் பற்றிச் சொல்லியது நினைவிருக்கு சார். உங்கள் பதிவிலும் எழுதியிருந்தீங்க.<br /><br />//அதுஎனக்கு எப்போதும் ஒரு குற்ற் உணர்வைத் தரும்//<br /><br />இது போன்ற உணர்வுகள் பலருக்கும் இருக்கிறது என்றே அறிகிறேன் சார்.<br /><br />மிக்க நன்றி ஜிஎம்பி சார்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-1167932824747834632020-08-18T18:15:10.407+05:302020-08-18T18:15:10.407+05:30வாங்க ஏஞ்சல். ஓ உங்களுக்கும் இதே போன்று அம்மா அப்ப...வாங்க ஏஞ்சல். ஓ உங்களுக்கும் இதே போன்று அம்மா அப்பா இருவருக்குமேவா!<br /><br />//அம்மா மறைவுக்குப்பின் லேண்ட்லைனுக்கு சும்மனாலும் கால் செய்து பார்ப்பேன் எடுக்க மாட்டாங்களான்னு நப்பாசை// மனதை என்னவோ செய்துவிட்டது. நான் என் மகனைப் பற்றிய செய்திகளை அம்மாவிடம் இப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கிறென். <br /><br />//நானும் அப்பா அம்மா இருவரிடமும் மன்னிப்பு கேட்டுட்டேதான் இருக்கேன் :( //<br /><br />இங்கு பாத்தீங்களா நிறைய சொல்லிருக்காங்க!பெரும்பான்மையோருக்கு இருக்கும் என்றே நினைக்கின்றேன். <br /><br />மிக்க நன்றி ஏஞ்சல்.<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3980470835380818142020-08-18T18:10:47.530+05:302020-08-18T18:10:47.530+05:30எனக்கு இன்னும் அம்மாவைச் சரியாகக் கவனித்துக் கொள்ள...எனக்கு இன்னும் அம்மாவைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லையே<br />என்ற வருத்தம் என்னை விட்டகலுவதில்லை.//<br /><br />வல்லிம்மா இப்படி பெரும்பான்மையோருக்குத் தோன்றும் இல்லையா?<br /><br />//அவள் எப்படியெல்லாம் உழைத்து எங்களைக் கவனித்துக் கொண்டார் என்று<br />இதயத்தை வலிக்கச் செய்யும் நினைவுகள்.//<br /><br />ஆமாம் அம்மா.<br /><br />பாட்டி என்னை கோந்தே என்று தான் சொல்வார்.//<br /><br />ஆமாம் வல்லிம்மா நம் வீட்டிலும் எல்லொருமே கோந்தே என்றுதான் அழைப்பார்கள். அதைத்தான் குழந்தே என்று எழுதும் போது எழுதியிருக்கிறேன். இப்போது சின்ன கஸின்களையும் கூட நான் அப்ப்டித்தான் கஸின் குழந்தைகளையும் அப்படித்தான் சொல்கிறேன். பழகிவிட்டது.<br /><br />பிறந்த வீட்டைப் பிரியும் போது<br />எதையோ அங்கே விட்டு விடுகிறோம்.<br />பாசம் இரண்டாகி விடுகிறது.//<br /><br />ஆம் சரியான வரிகள். <br /><br />மிக்க நன்றி வல்லிம்மா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66689947452592061332020-08-18T18:05:50.470+05:302020-08-18T18:05:50.470+05:30நன்றி கரந்தை சகோ
கீதாநன்றி கரந்தை சகோ<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33785977623444281112020-08-18T18:05:00.166+05:302020-08-18T18:05:00.166+05:30உங்கள் அப்பா பற்றியதை வாசித்த நினைவு இருக்கு கோமதி...உங்கள் அப்பா பற்றியதை வாசித்த நினைவு இருக்கு கோமதிக்க்கா.<br /><br />//அம்மா உடம்பு சரியில்லாமல் படுத்து இருந்த போது போய் கொஞ்ச நாள் கூட இருந்தேன் கொலு வைத்து இருந்தேன் உடம்புக்கு ரொம்ப முடியவில்லை உன்னை பார்க்க அம்மா ஆசைபடுகிறார்கள் என்று தம்பி போனில் சொன்ன உடன் நான் மட்டும் போய் விட்டேன் முதலில்<br />கொலுவை அக்கம் பக்கத்தினர் வந்து பூஜை செய்து பார்த்து கொண்டார்கள்.//<br /><br />மனதிற்கு கொஞ்சம் சமாதானம் ஆகியிருக்கும் இல்லையா இப்போதும் நினைத்துக் கொள்ள.<br /><br />நீ உன் அம்மாவை பார்த்து விட்டு போ என்றார்கள்,மறு நாள் போகலாம் என்ரு இருந்தோம் அதற்குள் அம்மா இறந்து விட்டார்கள் என்று போன் வந்து விட்டது. //<br /><br />மனதிற்கு கஷ்டமாக இருந்திருக்கும். இல்லையாக்கா. இன்னும் இருக்கும் தான்.<br /><br />அதனால்தான் நான் இப்போது சொல்ல முடிந்தவர்களிடம் சொல்வது கூடியவரை உங்கள் அம்மா அப்பாவை விசாரித்து பார்க்க முடிந்தால் பார்த்து கூட வைத்துக் கொண்டு அவர்களோடு பேசி உறவாடிவிடுங்கள் பின்னர் நினைத்து மனசு கஷ்ட்ப்படாதீங்க என்று.<br /><br />மிக்க ந்னறி கோமதிக்கா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67516258795521959722020-08-18T17:59:21.594+05:302020-08-18T17:59:21.594+05:30ஆமாம் அருணா எல்லோருக்கும் அவரவர் அம்மாக்கள் நினைவு...ஆமாம் அருணா எல்லோருக்கும் அவரவர் அம்மாக்கள் நினைவுக்கு வந்துகொண்டே தான் இருப்பாங்க ஒவ்வொரு தருணத்திலும். <br /><br />மிக்க நன்றி அருணா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45882578807432157272020-08-18T17:58:24.548+05:302020-08-18T17:58:24.548+05:30//குழந்தே உன் தம்பிக்கு 35 வயசுல கர்மா செய்ய வேண்ட...//குழந்தே உன் தம்பிக்கு 35 வயசுல கர்மா செய்ய வேண்டிவருமாம். நான் போயிடுவேனாம்”. மனதில் இது மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது.//<br /><br />அதே மாதிரியே ஆச்சா?//<br /><br />ஆமாம் கோமதிக்கா அப்படியேதான் ஆச்சு. அதைத்தான் சொல்லியிருக்கிறேன்.<br /><br />/அப்பா 51, அண்ணன் 34, அக்கா 25 தங்கை 11 மாத குழந்தை இழப்பை எல்லாம் சின்ன வயதில் சந்தித்து விட்டேன். //<br /><br />கடவுளே!. <br /><br />என் பாட்டி என் அப்பாவைத் தவிர எல்லோரையும் இழந்து 92 வயது வரை இருந்து மறைந்தார். அவர் புலம்புக் கொண்டே இருப்பார். <br /><br />//இப்போதும் வேறு விதமாக வேதனையை கொடுத்து இருக்கிறார். அத்தனையும் தாங்கி கொண்டு , அடித்தாலும் தாயின் காலை கட்டிக் கொண்டு அழும் பிள்ளை போல் அந்த இறைவனின் காலகளை கட்டிக் கொண்டு அழுவேன்.//<br /><br />புரிகிறது கோமதிக்கா. ஒவ்வொருவருக்கும் தான் எத்தனைப் பிரச்சனைகள். அதைக் கடந்து சென்று கொண்டே இருக்கிறோம்<br /><br />நன்றி கோமதிக்கா.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55604674377791865422020-08-18T16:46:08.520+05:302020-08-18T16:46:08.520+05:30எல்லோருக்கும் ஏதாவதுஅனுபவம் இருக்கும் என் தந்தைய...எல்லோருக்கும் ஏதாவதுஅனுபவம் இருக்கும் என் தந்தையை மிலிடரி ஆஸ்பத்கிரியில் சேர்த்து இருந்தபோது அங்கிருந்து ஒருகார்ட் வந்தது அதிலவரை DL இல் வைதிருப்பதாக இருந்ததுஅந்தவயதில் அது என்னவென்றே தெரியவில்லைஅவர் இறந்தபின் மருதுவமனைக்கு சென்று சத்தம்போட்டேன் அவர்கள் dangerously ill listஇல் இருப்பஹாகக் கூரியதும் நினைவுக்கு வந்தது அந்த DIலிஸ்ட் செய்தி அதுஎனக்கு எப்போதும் ஒரு குற்ற் உணர்வைத் தரும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22236284896174356212020-08-18T16:32:33.368+05:302020-08-18T16:32:33.368+05:30மனம் கனத்தது .எனக்கும் இது போல் அப்பா அம்மா இருவரு...மனம் கனத்தது .எனக்கும் இது போல் அப்பா அம்மா இருவருக்கும் அமைந்தது .அம்மா மறைவுக்குப்பின் லேண்ட்லைனுக்கு சும்மனாலும் கால் செய்து பார்ப்பேன் எடுக்க மாட்டாங்களான்னு நப்பாசை நானும் அப்பா அம்மா இருவரிடமும் மன்னிப்பு கேட்டுட்டேதான் இருக்கேன் :( Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-1169892590700793282020-08-17T20:29:18.567+05:302020-08-17T20:29:18.567+05:30தீராத சோகம் அம்மாவை இழப்பது.
எனக்கு இன்னும் அம்மா...தீராத சோகம் அம்மாவை இழப்பது.<br /><br />எனக்கு இன்னும் அம்மாவைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லையே<br />என்ற வருத்தம் என்னை விட்டகலுவதில்லை.<br />அவள் எப்படியெல்லாம் உழைத்து எங்களைக் கவனித்துக் கொண்டார் என்று <br />இதயத்தை வலிக்கச் செய்யும் நினைவுகள்.<br />உங்கள் அம்மா சின்ன வயதில் இறைவனடி சேர்ந்திருக்கிறார்.<br /><br />எத்தனை செய்திகள் கனவில் வருகின்றன.<br />நமக்கு உணர நேரமாகிறது.<br />பாட்டி என்னை கோந்தே என்று தான் சொல்வார்.<br />எல்லாப் பழைய நினைவுகளும் அலை மோதுகின்றன மனதில்.<br /><br />பிறந்த வீட்டைப் பிரியும் போது<br />எதையோ அங்கே விட்டு விடுகிறோம்.<br />பாசம் இரண்டாகி விடுகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38324519404955984172020-08-17T18:00:23.793+05:302020-08-17T18:00:23.793+05:30மனம் கனத்துப் போய்விட்டது சகோதரிமனம் கனத்துப் போய்விட்டது சகோதரிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8342960980757251032020-08-17T17:52:22.024+05:302020-08-17T17:52:22.024+05:30என் அப்பா இறக்கும் ராத்திரி என் கனவில் வந்து பேசிய...என் அப்பா இறக்கும் ராத்திரி என் கனவில் வந்து பேசிய்தை முன்பு எங்கள் ப்ளாக்கில் சொல்லி இருக்கிறேன்.<br /><br />அம்மா உடம்பு சரியில்லாமல் படுத்து இருந்த போது போய் கொஞ்ச நாள் கூட இருந்தேன் கொலு வைத்து இருந்தேன் உடம்புக்கு ரொம்ப முடியவில்லை உன்னை பார்க்க அம்மா ஆசைபடுகிறார்கள் என்று தம்பி போனில் சொன்ன உடன் நான் மட்டும் போய் விட்டேன் முதலில் <br />கொலுவை அக்கம் பக்கத்தினர் வந்து பூஜை செய்து பார்த்து கொண்டார்கள்.<br /><br />கார்த்திக மாதம் என் மாமியாருக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லை என்று போனில் சொன்னார்கள் அவர்களை பார்க்க கோவை போய் இருந்தோம்.<br />அவர்களுக்கு நான்கு நாளில் உடல் நிலை சரியாகி விட்டது, நீ உன் அம்மாவை பார்த்து விட்டு போ என்றார்கள், மறு நாள் போகலாம் என்ரு இருந்தோம் அதற்குள் அம்மா இறந்து விட்டார்கள் என்று போன் வந்து விட்டது. அது மிக வருத்தம் மனதில் இன்னும் இருக்கிறது.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43279086600691736792020-08-17T16:38:21.130+05:302020-08-17T16:38:21.130+05:30மிகவும் உருக்கமான உணர்வுப் பூர்வமான பதிவு. பலருக்...மிகவும் உருக்கமான உணர்வுப் பூர்வமான பதிவு. பலருக்கும் தன் அம்மாக்களை பற்றி நினைக்க வைத்த பதிவு. என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36774873873072197992020-08-17T16:36:51.277+05:302020-08-17T16:36:51.277+05:30//“குழந்தே உன்கிட்ட பேசணும் போல இருக்கு. உன் குரல்...//“குழந்தே உன்கிட்ட பேசணும் போல இருக்கு. உன் குரல் கேக்கணும் போல இருக்கு. அதான் கூப்பிட்டேன்”/<br /><br />கீதா, இந்த வரிகளை படித்ததும் என் அம்மா நினைவு வந்து விட்டது. அவர்களூக்கும் காது கேட்காது போனில் நான் பேசுவதை கேட்டுக் கொள் உன் நலனை தம்பியிடம் தெரிவி கேட்டுக் கொள்கிறேன் என்பார்கள். அடிக்கடி கடிதம் எழுது என்பார்கள். போன் வந்த பின் கடிதம் எழுத சோம்பல். நானும் ஒரு பதிவில் (நலம் நலமறிய ஆவல்) அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு இருப்பேன்.<br /><br />//குழந்தே உன் தம்பிக்கு 35 வயசுல கர்மா செய்ய வேண்டிவருமாம். நான் போயிடுவேனாம்”. மனதில் இது மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது.//<br /><br />அதே மாதிரியே ஆச்சா?<br /><br />எனக்கு நிறைய வேதனைகள் கீதா . அப்பா 51, அண்ணன் 34, அக்கா 25 தங்கை 11 மாத குழந்தை இழப்பை எல்லாம் சின்ன வயதில் சந்தித்து விட்டேன். இப்போதும் வேறு விதமாக வேதனையை கொடுத்து இருக்கிறார். அத்தனையும் தாங்கி கொண்டு , அடித்தாலும் தாயின் காலை கட்டிக் கொண்டு அழும் பிள்ளை போல் அந்த இறைவனின் காலகளை கட்டிக் கொண்டு அழுவேன்.<br /><br /><br />இந்த பதிவை படிக்கும் போது அம்மா இருந்தால் அடிக்கடி போன் செய்து பேசுவார்கள் இப்போது உறவுகள் போன் செய்யவே கஷ்டபடுகிறார்களே என்று நினைத்தேன், போன் மணி அடித்தது ஒரு கணம் உடல் சிலிர்த்து விட்டது அம்மா வருத்தபடாதே! என்று என் தங்கையை பேச வைத்தார்.<br />இன்று காலை முதலே மனம் கஷ்டபட்டது , உங்கள் அம்மா பதிவு மீண்டும் அம்மாவின் நினைவுகளில் மிகவும் ஆழ்ந்து விட்டது. எவ்வளவு பேர் இருந்தாலும். அம்மாவின் அன்பு போல் ஆகாது.<br /><br />பஜகோவிந்தம் பாடல் தினம் ரேடியோ சிட்டியில் வைக்கிறார்கள்.<br />சிறு வயதில் பாலவிஹாரில் (சின்பயாவிஷன்) கற்றுக் கொடுத்தார்கள் மனப்பாடமாக படிப்பேன்.<br /><br /><br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40886508700916466082020-08-17T12:42:28.606+05:302020-08-17T12:42:28.606+05:30இது தான் உண்மையான செல்வம் + திருப்தியான வாழ்வு.../...இது தான் உண்மையான செல்வம் + திருப்தியான வாழ்வு...//<br /><br />நன்றி டிடி. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74278574909071401362020-08-17T12:37:10.011+05:302020-08-17T12:37:10.011+05:30அன்று எனக்கும் இதே நிலைதான் டிடி. பல வருடங்கள் அது...அன்று எனக்கும் இதே நிலைதான் டிடி. பல வருடங்கள் அது மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. இப்போதும் தான் இருந்தாலும் மனது கொஞ்சம் சமாதானப்படுத்திக் கொள்கிறது. சாரி டிடி உங்கள் மனது கஷ்டமாகிவிட்டதை அறியும் போது..<br /><br />நன்றி டிடி<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64081695791738523932020-08-17T12:32:17.296+05:302020-08-17T12:32:17.296+05:30ஆமாம் வெங்கட்ஜி சில விஷயங்கள் மறக்க முடிவதில்லை. ந...ஆமாம் வெங்கட்ஜி சில விஷயங்கள் மறக்க முடிவதில்லை. நினைக்காமல் இருக்கவும் முடிவதில்லை ஆமாம்.<br /><br />//உங்கள் அம்மா இறைவனின் நிழலிலிருந்து உங்களை ஆசீர்வதித்துக் கொண்டிருப்பார் - நீங்கள் நீடூழி வாழ!//<br /><br />மிக்க நன்றி வெங்கட்ஜி உங்கள் வாழ்த்திற்கு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73233806150585352952020-08-17T12:31:11.242+05:302020-08-17T12:31:11.242+05:30மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா உங்கள் கருத்த...மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா உங்கள் கருத்திற்கு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35262086480917856472020-08-17T12:30:37.602+05:302020-08-17T12:30:37.602+05:30ஆமாம் கில்லர்ஜி. குற்ற உணர்வு கொஞ்சம் உண்டுதான். ஃ...ஆமாம் கில்லர்ஜி. குற்ற உணர்வு கொஞ்சம் உண்டுதான். ஃபோன் அடிக்கடி வேலை செய்யாமப் போகும் அப்பா நாகர்கோவில் வந்து எஸ்டிடி பூத்தில் இருந்து பேசுவார். அம்மாவால் முடியாது. மேலும் அப்போதெல்லாம் டக்கென்று பிரயாணம் மேற்கொண்டிட முடியாதே. எவ்வளவோ சூழல்கள். கஷ்டங்கள். அம்மாவை அழைத்து வந்து எம் வி டயபட்டிஸ் செண்டருக்குக் கூடிப் போகவும் நினைத்திருந்த வேளையில்...<br /><br />//சில நேரங்களில் கனவு வந்து ஏதோவொரு நிகழப்போகும் மரணத்தை உணர்த்திச் செல்வது பலரது வாழ்வில் நிகழ்ந்து இருக்கிறது.//<br /><br />பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன் கில்லர்ஜி.<br /><br />மிக்க நன்றி<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36960604271070311362020-08-17T12:04:56.523+05:302020-08-17T12:04:56.523+05:30வாங்க மதுரை. ஆமாம்ல எல்லோருக்குமே அவரவர் அனுபவங்கள...வாங்க மதுரை. ஆமாம்ல எல்லோருக்குமே அவரவர் அனுபவங்களை நினைவுக்குக் கொண்டு வரும். நீங்கள் உங்கள் அம்மாவைப் பற்றிச் சொல்லியதை வாசித்த நினைவு இருக்கிறது.<br /><br />//அதுவும் நல்லதிற்குதான் என்று என் மனம் இன்னும் நினைக்கிறது.. காரணம் என்னை பொருத்தவரையில் அவர் இன்னும் உயிரோட இருப்பதாகவே கருதுகின்றேன் .....//<br /><br />இதுவும் ஒரு வகையில் நல்லதுதான் பாசிட்டிவ்...நமக்கு அம்மாவின் கடைசித் தருண முகத்தை விட அவரோடு மகிழ்ச்சியாக இருந்த முகம் மனதில் இருக்கும். எனக்கும் என் அம்மாவும் என் மகனும் அத்தனை பாசத்துடன் இருந்தது எல்லாம் நினைவுக்கு வரும். <br /><br />மிக்க நன்றி மதுரை<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77823748517892743972020-08-17T12:01:46.847+05:302020-08-17T12:01:46.847+05:30கொஞ்சம் வருத்தமான பதிவுதான் நெல்லை. அம்மாவின் மரணம...கொஞ்சம் வருத்தமான பதிவுதான் நெல்லை. அம்மாவின் மரணம் கனவாக வரவில்லை. அது எனக்கு அன்று மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது ஒரு குறிப்பாக. நடக்கப் போவது என்று அறிவுறுத்தியது. ரொம்பவே.. ஆனால் நான் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நடந்த பிறகுதான் தோன்றியது நெல்லை.<br /><br />//அவங்க ஆயுளையும் சேர்த்து நீங்க ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கணும்.//<br /><br />மிக்க நன்றி நெல்லை வாழ்த்திற்கும்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com