சனி, 25 மார்ச், 2017

பெண் அன்றி நான் அல்ல பொம்மை...5

சென்ற இரு பகுதிகளின் சுட்டி

இப்படி இருக்க, காலச் சக்கரத்தின் சுழற்சியில் வருடங்களுப் பிறகு முரளி இந்தியாவுக்குத் திரும்பி, தாய் மற்றும் சகோதரனின் மரணத்திற்குப் பிறகு, மனைவி மற்றும் குழதைகளுடன் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினாலும், ஒருவேளை, மனதில் எங்கேயோ ஒரு மூலையில் குற்ற உணர்வு உறங்காமல் விழித்திருந்திருக்க வேண்டும்! அதனால்தானோ என்னவோ, அதிலிருந்து மீள, அவர் ஆன்மீகத்தை நாடியிருக்க வேண்டும்! அதுதானே, பெரும்பான்மையான மக்களின் இயல்பும், மன நிலையும்!  “ஷீரடி சாய்பாபா சேவா சங்கத்தில்இணைந்து, தியானப் பயிற்சி கற்று, பல சமூகச் சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.

காலமும், வாழ்க்கை அனுபவங்களும் அவனது குற்ற உணர்வை நீக்கி இருக்கலாம்! அவனது பழி வாங்கும் உணர்வில், பழி வாங்குகிறேன் பேர்வழி என்று அவன் செய்த பல செயல்களும், மாதவிக்கும், குழந்தைக்கும் இழைத்தக் கொடுமைகளும், அவனுடைய மனதில் முள்ளாய் குத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும். அதுவும் அவனது மன மாற்றத்திற்குக் காரணமாய் இருந்திருக்கலாம். மனைவியும், மகளும் மாத ஊதியம் பெற்று பொருளாதார நெருக்கடி இல்லாமல் வாழ்வதும் ஒரு காரணமாக இருக்குமோ, என்ற எண்ணமும் என்னுள் தோன்றத்தான் செய்தது.

அவர்களைக் காண வேண்டும், அவர்களுடன் வாழ வேண்டும் என்றும் விரும்பிய அவன், அவர்களுடன் பல முறை ஃபோன் மூலம் தொடர்பு கொண்டிருந்திருக்கிறான். இரண்டு நாட்கள் முன்பு அவன் மாதவியைத் தொடர்பு கொள்ள முயல, மாதவி தொடர்பைத் துண்டித்து விட, மீண்டும் அவன் முயற்சி செய்ய இந்து ஃபோனை எடுத்ததும், அதுவரை நேரில் கண்டிராத  அப்பாவின் குரலை, முதன்முதலாக கேட்டதும் பாவம் இந்து நிலைகுலைந்து போனாள்எப்படியோ சமாளித்து, அதிலிருந்து மீண்டதும், இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள், காற்றடைத்த குளிர்பானக் குப்பியைத் திறந்தால் பொங்கும் நுரை போல், மேலெழுந்து இந்துவைப் பேச வைத்தது!

நீங்க யாருங்கஇந்த மாதிரி அடிக்கடிக் கூப்பிட்டுத் தொந்தரவு பண்றீங்க! .........! மிஸ்டர் அப்பா!.....என்னது? நீங்க என்னோட அப்பாவா?...ஹாஹாஹா......நல்ல காமெடி! எனக்கு அப்பாவே கிடையாதே! அவரு  எங்க மனசுலருந்து செத்து பல வருஷங்கள் ஆகிடுச்சே! நீங்க அப்பான்றீங்க!? ஆனா நான் உங்களப் பாத்தது கூட இல்லியே! என்னை உங்க மடியல வைச்சுக் கொஞ்சியிருக்கீங்களா? என்னோட முதல் பிறந்த நாளைக்கு எங்கூட இருந்தீங்களா? என்னை ஸ்கூல்ல சேக்கும் போது என் கூட வந்து, “தந்தையின் பெயர்அப்படின்னு கேட்டுருந்த இடத்துல உங்க பெயரை எழுதி கைஎழுத்துப் போட்டீங்களா? ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரைக்கும் பல போட்டிகள்ல கலந்துகிட்டு பரிசு வாங்கும் போது, என் ஃப்ரென்ட்ஸ்க்கு எல்லாம் அவங்க அப்பா வந்தபோது, எனக்கு மட்டும், இருந்தும் வராத உங்கள நான் எப்படி அப்பானு இப்ப அடையாளம் காட்ட முடியும்? என் அம்மா அன்னிக்குப் பட்ட அவமானம் என்னன்னு உங்களுக்குத் தெரியுமா?”  என்று பேசிக் கொண்டிருந்த போது, அதைக் கேட்டுக் கொண்டிருந்த மாதவிக்குக் குமுறல் இருந்தாலும், அதை அடக்கிக் கொண்டு,

இந்து, அதெல்லாம் ஏன் இப்ப பேசற? பிரயோசனம் இல்ல! காலம் கடந்து தலைக்கு மேல வெள்ளம் போயாச்சுஇனி சாண் போனா என்ன முழம் போனா என்ன? அதிகமா பேசாம கட் பண்ணுடிஎன்றதற்கு,

அம்மா, நீ பேசாம இரும்மா. நீ இப்படி பேசாம இருந்ததுனாலயும், இருக்கறதுனாலயும்தான், அந்த ஆளு நம்மள ஏமாத்தினாரு! இப்ப தொந்தரவு பண்ணறாரு! நான் அந்த ஆள்கிட்ட நறுக்குன்னு கேள்வி கேப்பேன்! அப்பதான் என் மனசு ஆறும்! இது என் போராட்டம்! நீ இதுல தலையிடாதம்மா”....

ம்ம் சொல்லுங்க...மிஸ்டர் அப்பா! நாங்க பேசினது உங்க காதுல விழுந்திருக்குமே!!! எனக்கு மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சீங்களா? என் குழந்தைங்க பிறந்தப்ப, அதுங்களக் கையில எடுத்துக் கொஞ்சி, தாத்தானு கூட இருந்தீங்களா? என் கணவர் உயிரோட இருக்காரா, இல்லையானாவது உங்களுக்குத் தெரியுமா? என்ன பொறுப்பு சுமந்தீங்க? கணவனா, அப்பாவா, தாத்தாவா? என் தாத்தா பண்ணின தப்புக்கு, நானும் என் அம்மாவும்தான் பலி ஆடுகளா? தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லைனு படிச்சப்ப எனக்கு சிரிப்புதான் வந்துச்சு!...என் அம்மா, அப்பா எல்லாமே என் அம்மா மாதவிதான்! ஹும்! வெக்கமா இல்ல உங்களுக்கு? இவ்வளவு நாள் எங்க கூட வாழாம, இப்ப எங்கேருந்தோ வந்துட்டுஅப்பான்றீங்க!! ஸாரி! மிஸ்டர் அப்பா, இது ராங்க் நம்பர்! ராங்க் அட்ரஸ்! நீங்க தேடுற இடம் இது இல்ல!”

மாதவி வாய் அடைத்து, இந்துவின் கோபத்தைக் கண்டு, என்ன பேசுவதென்று தெரியாமல், ஒரு பக்கம் பெருமையாக இருந்தாலும், திக்பிரமை பிடித்தது போல இருந்தாள்! இந்துவுக்கு இது போன்ற ஒரு அப்பா இனி அவசியமில்லைதான்! அப்பா என்பதற்கான கடைமைகளில் ஒன்று கூட செய்திராத அவரை நிராகரித்த இந்துவை  குற்றம் சொல்ல முடியமா என்ன?!

மாதவியின் வாழ்கைச் சம்பவங்களை இப்படி நான் அசை போட்டு மீண்ட போது, மாதவி சொன்னஅந்த ஆள்தான்”, என்பது முரளிதான் என்பதும், மாதவிக்கு வந்த அழைப்புகள் அந்த முரளியிடமிருந்துதான் என்றும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது!

மாடிப்படிகளில் யாரோ ஏறி வரும் சத்தம் கேட்க நான் திரும்பினேன். மாதவிதான் ஃபோன் ரிங்க் சத்தம் கேட்க அதைப் பார்த்துக் கொண்டே வந்தாள்.

“ஓ நீங்க இங்க இருக்கீங்களா? என்ன, அட்டப்பாடி செம்மன்னூர் மல்லீஸ்வரமுடி தரிசனமோ

“ம்ம்ம்..கீழ போரடிச்சுது. அதான் இங்க வந்தேன்..இங்க வரும் போதெல்லாம், நான் மொட்டைமாடிக்கு வந்து, தூரத்தில தெளிவா தெரியற அட்டப்பாடி மல்லீஸ்வரன் முடியை ரசிச்சுப் பாத்து, கொஞ்ச நேரம் நிற்கறதுண்டு இல்லியா. அப்படி, அட்டப்பாடி ஆதிவாசிகளோட ஆதிபகவானான மல்லீஸ்வரமுடியைக் கண்டு ரசிச்சுக்கிட்டிருந்தேன்… இங்கிருந்து நல்ல வ்யூ! இங்கருந்து பாக்கற மாதிரி இந்த நல்ல வ்யூ எங்கருந்து பார்த்தாலும் கிடைக்கறதில்ல

மாதவியின் மனம், இனம் புரியாத உணர்வுகளில் தவித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

அந்த ஆள்…..முரளிதானே! கூப்பிட்டது முரளின்னா, நீங்க தப்பா நினைக்கலனா, நான் ஓண்ணு சொல்லறேன்! இப்படி பதில் கொடுக்காம இருந்தா, அது அவருக்கு ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கும். உங்களுக்கு டென்ஷனையும் கொடுக்கும். பதில் சொல்லிடுங்க..........”  என் பேச்சு முடியும் முன்னரே, யாரோ மாதவியைக் கூப்பிட அவர் உள்ளே சென்றார்.

 அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு ஆகிய சொற்கள் வெறும் பசப்பு
இச்சைக் கிளியாய் போகப் பொருளாய் இருப்பது தானா பெண் பொறுப்பு?
எத்தனை உரிமைகள் ஆணுக்கு! அதில் ஏதுமில்லே இங்கு பெண்ணுக்கு!
ஆயிரம் வஞ்சனை பெண்ணுக்கு அது தெரிவதில்லை நம்கண்ணுக்கு...........”

என்று எங்கேயோ, எப்போதோ வாசித்த, கவிஞரும், நாடகவியலாளருமான பிரளயனின் வரிகள் நினைவில் ஓடியது! மீண்டும் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்கத் திரும்பினேன். மாதவிதான்! ண்டும் அவரது ஃபோன் அலறியது! அவர் ஸ்க்ரீனைப் பார்த்து அலுத்துக் கொண்டதும், அது முரளியாகத்தான் இருக்கும் என்று நான் ஊகித்ததால்,

அது முரளியாக இருந்தால் கட் பண்ணாம, உங்களுக்கு என்ன சொல்லணும்னு தோணுதோ, இவ்வளவு வருஷம் நீங்க அடக்கி வைச்சுருந்த உங்க உணர்வுகள், அது கோபமோ, ஆற்றாமையோ, வருத்தமோஎதுவா இருந்தாலும் பளிச்சுனு சொல்லிடுங்க. இந்து, வெட்டு ஒண்ணு துண்டு இரண்டுன்னு பளிச்சுன்னு சொன்னது மாதிரி உங்களால ஒருவேளை சொல்ல முடியலனாலும், உங்க முடிவு என்ன அப்படின்றத தெளிவாச் சொல்லிடுங்க! அது எதுவா இருந்தாலும்! அது அவருக்குக் கேக்க விரும்பாத பதிலாகவே கூட இருக்கட்டும்இப்படிக் கட் பண்ணினா, இது தொடருமே தவிர, ஒரு தீர்வு கிடைக்காதுஎன்றேன்.

மாதவி பெருமூச்சு விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

நீங்க சொல்றதும் சரிதான்! இதுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கணும்என்று சொல்லி, ஒரு தீர்மானத்துடன், ஃபோனின் பச்சை பட்டனை அமர்த்தினார்.

முரளி என்ன சொன்னான் என்று தெரியவில்லை. சிறிது நேரம் மௌனம் நிலவியது. எதிர்முனையில் முரளி ஏதோ சொல்லுவது தெரிந்தது…

                "ஸ்டாப்! நானும் ஒரு பொண்ணுதான்! எனக்கும் எல்லா உணர்ச்சிகளும், உணர்வுகளும் இருக்கு! ஒண்ணா, ரெண்டா, 37 வருஷமா தனியா வாழ்ந்துகிட்டுருக்கேன்! அதுல எத்தனையோ வருஷங்கள் உங்கள மாதிரி ஒரு பித்தலாட்டப் பேர்வழிய கனவு கண்டு மனசுல சுமந்துகிட்டு வாழ்ந்திட்டுருந்தேன்! அந்த நேரத்துல எல்லாம் நீங்க வேற ஒரு பொண்ணோட சுகமா வாழ்ந்துருக்கீங்க! அப்படி 10 வருஷம், கண்ணு இருந்தும் குருடியா வாழ்ந்தேன்! அதுக்குப் பிறகுதான் எனக்குத் தெரிஞ்சுச்சு, நீங்க அப்பாவைப் பழிவாங்கத்தான் என்னைக் கருவியா உபயோகிச்சிருக்கீங்கனுஅதக் கேட்டப்ப, நான் எவ்வளவு துடிச்சேன் தெரியுமா? உண்மையான அன்போடயும், காதலோடயும் என்னை நீங்கத் தொட்டதே இல்லங்கறத நினைச்சு நான் கூசிக், கூனிக் குறுகிப் போய்ட்டேன் தெரியுமா?

கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண்ண இந்த சமூகம் எப்படியெல்லாம் ஏளனம் செய்யும், வேதனைப்படுத்தும், சித்திரவதைச் செய்யும்னு உங்களுக்குத் தெரியாது! என்னை அம்மாவா, அக்காவா, தங்கச்சியா, மகளா நினைக்க வேண்டியவன் எல்லாம் அப்படி நினைக்காம, சின்னக் குழந்தைங்க பொம்மைய கைல வைச்சுக் கிள்ளி, அமுக்கி, நசுக்கித் தொந்தரவு பண்ணுறா மாதிரி, தொந்தரவு பண்றது! எத்தனை பேரை கை நீட்டி அடிச்சுருக்கேன் தெரியுமா?

அது ஆபீஸோ, வீடோ, பஸ்ஸோ, ட்ரெயினோ, அது எந்த இடமானாலும், எங்கிட்ட முறைதவறி நடக்க முயற்சிக்க முக்கியமானக் காரணம், நான் புருஷனை விட்டுப் பிரிஞ்சு வாழறதுதானாம்! அது சரி, நானா பிரிஞ்சேன்? நீங்கதானே பிரிஞ்சீங்க! ஏன்? என் அப்பாவைப் பழிவாங்க! ஆனா, தண்டனை எனக்கு! என்னை ஒரு குழந்தைக்குத் தாயாக்கினது அதுவும் உங்க பழிவாங்கும் படலத்துல ஒரு பாகம்தான், இருந்தாலும், அது எனக்கு வாழணும்னு ஒரு வைராக்கியத்த கொடுத்துச்சு! 37 வருஷத்துக்குப் பிறகு, என்னைத் தேடிவந்த உங்கள, நீங்க செஞ்ச துரோகத்த எல்லாம் மறந்து, உங்கள, ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்னுஏத்துக்கத் தயாரா இல்லைகண்கெட்ட பிறகு எதுக்கு சூரிய நமஸ்காரம்

புருஷன விட்டுப் பிரிஞ்சு வாழற பெண்கள் எல்லாம் ஏதோ ஆணுக்கு ஏங்கி வாழறா மாதிரி, இந்த சமூகம் கீழ்தரமா நினைக்குது! ஒரு ஆண் எவ்வளவு மன்மதனா இருந்தாலும், உண்மையான அன்பு அந்த ஆணுக்குத் தன்மேல இல்லைனா, பெண் தன்னைத் தொட அனுமதிக்க மாட்டா! அதேபோல, பெண், தான் காதலிக்கற, அன்பு செலுத்தற ஆண மட்டும்தான் தன்னைத் தொட அனுமதிப்பா!

உங்களுக்கு என் மேல உண்மையான அன்பு இருந்துருந்தா, முதல்ல என்னை விட்டுட்டுப் போயிருந்துருக்க மாட்டீங்க! இப்ப வந்ததுக்கு முக்கியக் காரணம், ஒண்ணு, செய்த பாவத்துக்குப் பிராயச்தித்தம் தேட வந்திருக்கலாம்இல்லைனா, என் பணத்துக்காக இருக்கலாம்! எந்தக் காரணமா இருந்தாலும் சரி, உங்கள ரெண்டு கையையும் நீட்டி வரவேற்க நான் தயாரா இல்லை! என் மகளும் உங்கள அப்பாவா ஏத்துக்கத் தயாரா இல்லை! இப்ப உங்களுக்கு என் கணவனாகவோ, என் மகளுக்கு அப்பாவாகவோ செய்ய வேண்டிய ரோல் எதுவுமே இல்ல! ஒரு கணவனா இருந்து நீங்க செய்ய வேண்டியக் கடைமைகளை, இப்ப உங்களோடு வாழற மனைவிக்குச் செய்யுங்க! நல்ல ஒரு அப்பாவா பையன்களுக்கு ஒரு வழியக் காட்டுங்கஎன் வீட்டுக்கு வரவோ, என்னோடு பேசவோ முயற்சி செய்ய வேண்டாம்அது உங்க மனைவிக்குச் செய்யற துரோகமும் கூடஅதனால, என்ன இப்படிப் ஃபோன் பண்ணித் தொந்தரவு செய்யாதீங்க

என்னைப் பொருத்தவரை என் அம்மா படுத்த படுக்கையா இருந்தப்ப, மணி வாத்தியார் காட்டுன உங்க லெட்டரை வாசிச்சப்பவே, என் புருஷன் செத்துப் போய்ட்டார்னு முடிவு பண்ணிட்டேன்அதனால, பட்ட மரம் இனி துளிர்க்காதுஇனியும் நீங்க தொந்தரவு பண்ணினா நான் போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் பண்ண வேண்டியிருக்கும்! நானும் ஒரு பெண்தான்! பொம்மை  இல்ல! தோணும் போது கையிலெடுத்து வைச்சுக் கொஞ்சவும், வேண்டாத போது வீசி எறியவும்! குட் பை!” என்று ஆணித்தரமாகச் சொல்லி, ஃபோனை  கட் செய்தார் மாதவி!

 மாதவியின் இந்த மன அழுத்தத்தின் வெளிப்பாடைக் கேட்டதும், “ஒரு தென்றல் புயலாகி வருமே! ஒரு தெய்வம் படி தாண்டி வருமே! கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே!” என்ற, கவிஞர் வைர முத்துவின் அழகிய வரிகள் என் நினைவிற்கு வந்ததைத் தவிர்க்கமுடியவில்லை!

இன்று, மார்ச் 8!  பெண்கள் தினம்! மாதவியை நினைக்கையில் மிகவும் பெருமையாக இருந்தது! தூரத்தில் உயர்ந்து நிற்கும் மல்லீஸ்வரமுடியிலுள்ள மல்லீஸ்வரனிடம், இம் மல்லீஸ்வரியின் மனதில் சக்தியாய், நம்பிக்கையாய், என்றென்றும் தங்கி அவரைக் காத்தருள வேண்டும் என மனதார வேண்டினேன்மாதவி முறுவலித்துக் கொண்டே,

உங்க உதவிக்கு ரொம்ப நன்றி! இப்ப, மனசுல இருந்த பாரம் எல்லாம் போச்சுஇனி டென்ஷன் இல்லாம கல்யாண வேலையை, பழைய மாதவியா, கவனிக்கலாம்என்று சொல்லிக் கொண்டே கீழே இறங்கினார்நானும்,

காலம் காலமாய் அடிமையாய் கணவன் சொல்வதே வேதமாய்
புதைந்து கிடந்தது பெண்குரல் புயலாய் எழுகுது புதுக்குரல்

என்ற பிரளயனின் வரிகளை அசை போட்டுக் கொண்டே, அந்தப் புயல் பழையபடி தென்றலானதை நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டு, அவரைத் தொடர்ந்தேன்!

முற்றும்

-----துளசிதரன்







32 கருத்துகள்:

  1. மாதவியின் வார்த்தைகளில் தீயின் ஜூவாலையை கண்டேன் இதுவே சிறந்த முடிவு.
    தக்க தருணத்தில் ஃபோனை எடுத்து பேச வைத்த தங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி! தங்களின் கருத்திற்கு! ஆம் ஒரு பெண் இத்தனை கஷ்டங்களை அனுபவிக்கும் போது அப்படித்தானே வரும் இல்லையா ஆம் எனக்கும் இந்த முடிவுதான் பிடித்திருக்கிறது.

      நீக்கு
  2. அருமையான கதை....
    மாதவி பேசுவதாய் வரும் வரிகள் அருமையிலும் அருமை....
    கதாசிரியருக்கு வாழ்த்துக்க்ள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி குமார் தம்பி! தங்களின் கருத்திற்கு! வாழ்த்திற்கும் நன்றி!

      நீக்கு
  3. மிக அருமையான முடிவு ..மாதவி எத்தனை கஷ்டம் பட்டிருப்பார் வாலிப வயதில் சந்தோஷத்தை இழந்து அவர் சிறு குழந்தையை வளர்த்து நல்ல நிலையில் இருக்கும்போது எட்டிப்பார்ப்பது சேர துடிப்பது குற்றஉணர்ச்சியினால் அல்ல ....நான் இவளை ஏற்றுக்கொண்டேன் என்று ஊருக்கு நல்லவனாக காட்ட மேற்கொண்ட முயற்சிதான் முரளியின் மீள் வருகை ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஏஞ்சல் சகோ!உங்கள் வரியே உண்மை அந்த இறுதி வரி முரளியைப் பற்றியது ....

      மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
    2. ஆஹா ஏஞ்சல் சில வரிகளில் நறுக்கென்று கருத்து சொல்லிவிட்டார் நாந்தான் வளவளவென்று சொல்லி இருக்கிறேனோ? ஏஞ்சல் சுருக்கமாக கருத்திடுவது என்பதை என்னிடம் இருந்தும் நான் வளவளா என்று பெரிதாக கருத்திடுவதை மற்ற பெண்களிடம் இருந்தும் கற்றுக் கொண்டேன் போல இருக்கே

      நீக்கு
    3. அட! மதுரை சகோ எங்கள் நால்வரிடமிருந்தும் கற்றுக் கொண்டுவிட்டீங்களா!!! சூப்பர்!! அப்ப நாங்க நாலு பேரும் உங்களுக்குப் பரீட்சை வைச்சுடறோம்!! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    4. மதுரைத் தமிழன் சரி சரி நீங்கள் பெண்கள் எங்களிடமிருந்து கற்றுக் கொண்டுவிட்டீர்கள் என்பதை த் தெரிந்து கொண்டுவிட்டேன்...ஹிஹிஹிஹி நாங்கள் தேர்வு வைககமலேயே பாஸ் செய்துவிட்டீகள்!! எப்படித் தெரிந்து கொண்டேன்னு பாக்கறீங்களா...ஜோதிஜி அவர்களின் தளத்தில் நீங்கள் செமையா எழுதியிருந்த கருத்துகள் அனைத்தையும் பார்த்துவிட்டுத்தான்....ஹிஹி

      கீதா

      நீக்கு
  4. ஆவ்வ்வ் முடிஞ்சிடுச்சா... முடிஞ்சிடுச்சா....? முரளிகதை முடிஞ்சிடுச்சா எனக் கேட்டேன்ன்:) துளசி அண்ணன் நல்லாக் குழப்பி விட்டிட்டார் போன பாகத்தில்..:) நான் நினைச்சேன் முரளி மாதவியோடுதான் வாழ்கிறார் என கர்ர்:)...

    சாமியார் ஆகிட்டாரோ?.. அப்படியே காசியில் இருக்கச் சொல்லுங்கோ.. நான் ரிக்கெட் எடுக்கப் போறேன்ன்.. அங்கு வச்சே மீட் பண்ணிடுறேன்:)..

    நல்ல முடிவு, முடிவு மாறியிருந்தால் நான் பொயிங்கியிருப்பேன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹாஹ்ஹ் அதிரா சகோ, இது மாதவியின் கதை அல்லவா?!!! அவருடைய முடிவுதானே!! முரளி சாமியாரெல்லாம் ஆகவில்லை. ஆன்மீக சேவா சங்கத்தில் சேர்ந்து...

      எனக்குமே யதார்த்த வாழ்க்கையில் முடிவு மாறிவிடுமோ என்ற அச்சம் இருந்தது. நல்ல காலம் அப்படி இல்லாமல் இந்த முடிவுதான் மாதவி எடுத்தார்...

      மிக்க நன்றி சகோ அதிரா...

      நீக்கு
    2. கீதா நீங்க இப்படி கதையை முடிச்சு இருந்ததால்தான் அதிரா பொங்கி எழுந்து தேம்ஸ் நதியில் குதிக்காமல் தப்பித்து இருக்கிறார்கள் முடிஞ்சா தேம்ஸ் நதிக்கரையோரம் உள்ளவர்களுக்காக மட்டும் கதையின் முடிவை மாற்றுங்க்ளேன் ஹீஹீஹீ

      நீக்கு
    3. ஹஹ்ஹஹஹ்...மாற்றிவிடலாம் அப்போ அதிரா தேம்ஸ்ல குதிச்சுருவாங்க!! என்னையும் சேர்த்துக்கிட்டாலும் நான் நீஞ்சி வந்துருவேன்...எனக்கு நல்லா நீச்சல் தெரியும்...நான் தப்பிச்சுருவேன்...

      கீதா

      நீக்கு
  5. இடையில் ஒரு விசயம் மட்டும் எனக்குப் பிடிக்கவில்லை... அதாவது மாதவியின் மகள், முரளியைப் பார்த்து அப்படி எல்லாம் கேள்வி கேட்டது சரியாகப் படவில்லை... பிள்ளைகள் அப்படி எதிர்த்துப் பேசுமளவுக்கு அம்மாமார் விடக்கூடாது... பேசியதெல்லாம் உண்மைதான், ஆனாலும் தவிர்த்திருக்கலாமோ என எண்ணத் தோணுது.

    சாதாரண பெண்போல இல்லாமல் மாதவி ஒரு புரட்சிப் பெண்போல இருக்கிறார், அதேபோல மகளையும் வச்சிருந்திருக்க வேண்டும், இது சாதாரண பெண்கள் போலவே ஏசிட்டார்ர்:(.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு குழந்தை தந்தையில்ல்லாமல் அதுவும் ஊரார் பழி பேசும், பெண்களைக் காமக் கண்களுடன் நோக்கும் ஒரு சூழ்நிலையில் ஒரு தந்தை மகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய தருணத்தில் இல்லாமல் போன வருத்தம் அந்தக் குழந்தைக்கு இருந்திருக்கும் இல்லையா...மட்டுமல்ல இப்படிப் பேசினாள் என்பதற்காக இந்துவை முற்றிலும் குறை சொல்லிட முடியாதெ. இது அவள் தன் மனதில் அடக்கி வைத்திருந்த உணர்வுக் கொந்தளிப்பு...மற்றபடி இந்து நல்ல பண்பாடு அறிந்த குழந்தைதான். அவளும் புரட்சிப் பெண் தான். மாதவி கண்டிக்கவும் செய்கிறாளே அவள் பேசும் போது. இந்து மாதவியைப் புறக்கணித்து முரளி வரும் போது தன் அப்பா என்று உணர்ச்சியில் சேர்ந்திருக்கலாமே? ஆனால் இல்லையே அவள் தன் தரப்பிலிருந்த நியாயமான கேள்விகளைத் தானே கேட்டிருக்கிறாள்...அந்த நிமிடம் மட்டுமே...அவள் இயற்கையில் மிகவும் நல்ல பெண் தான்...

      மிக்க நன்றி சகோ ஒன்றிப் போய் வாசித்து கருத்திட்டமைக்கு

      நீக்கு
  6. இன்றைய ஐந்தாம்பகுதி சிறப்பாக இருக்கிறது. பல்லாண்டு காலம் கைவிட்டுவிட்ட அப்பன், இன்று பேசினால் எந்தக் குழந்தையும் இதைதான் பேசும். எந்த மனைவியும் இப்படித்தான் பேசுவாள். நல்ல முடிவுதான். (2) பல விஷயங்கள்/பெயர்கள்/ பழக்க வழக்கங்கள், கேரளாவில் பிறந்தவர்களுக்கு மட்டுமே புரியும்படியாக உள்ளதால், உடனே புரிந்துகொள்வதற்குக் கொஞ்சம் கடினமாக இருந்தது.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார்.

      ஆம் கொஞ்சம் கேரளத்து வாழ்க்கையின் பின்புலத்தில் சொல்லப்பட்டதால் புரியாமல் இருந்திருப்பதும் போட்டியில் நடுவர்களாக இருந்தவர்களூக்கும் புரியாமல் போயிருக்கலாம்..பெயர்கள் எல்லோரும் வைக்கும் பெயர்கள்தானே சார்...தமிழ்நாட்டிலும்....

      மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  7. நன்றி! இந்த முடிவைப் படிக்கும்போதுதான் உள்ளுக்குள்ளே விட்டுக்கொண்டிருந்த ஓங்கிய மூச்சுகள் எனக்குள்ளும் சமனப்பட்டன. உங்கள் தலைப்பப் படித்தனால் முதல் எனக்கு நினைவுக்கு வரும் ஒரு பாடல் ஜெயச்சந்திரன் குரலில் "பெண்ணல்ல நீ ஒரு பொம்மை" என்கிற பாடல். அப்படித்தான் முரளி போன்றவர்கள் நினைத்திருக்கிறார்கள். தாங்கள் மன்னிப்புக் கேட்பதையே கூட ஒரு பெருந்தன்மையான செயலாக நினைத்திருக்கக் கூடும். புறக்கணிப்பின் வழியை அவனுக்கு உணர்த்திய மாதவி வாழக. இந்துவும் வாழ்க. சிறிதளவேயாயினும் அவன் வாழ்வின் மிச்ச நாட்களில் அது மனதில் இருந்துகொண்டே இருக்கும்.

    நல்ல முடிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம்! தாங்கள் கதையை நன்றாக உள்வாங்கி வாசித்து ஒன்றி கருத்திட்டமைக்கு. யதார்த்த நிகழ்வில் நானும் பயந்தேன்....அப்பெண் மாறுபட்ட முடிவு எடுத்துவிடுவாரோ என்று. ஆனால், நானும் இம்முடிவைத்தான் விரும்பினேன் அதே போல இங்கு நீங்கள் கில்லர்ஜி ஏஞ்சல், அதிரா, குமார் செல்லப்பா சார் எல்லோருமே அதையேதான் எதிர்பார்த்திருக்கிறீர்கள் என்பதும் மனதிற்கு மிகவும் மகிழ்வாக இருக்கிறது.

      இப்போதும் இந்தக் கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். நிகழ்வுகளை அறிந்து எனது கற்பனையையும் கலந்து எழுதிய ஒன்றே.

      ஆம் பல ஆண்கள் மன்னிப்புக் கேட்பதையே பெருந்தன்மையான செயலாக நினைக்கிறார்கள்தான்!! பல வருடங்கள் வேண்டிய சமயத்தில் இல்லாமல் திடீரென்று வந்து ஒட்ட நினைக்கும் போது அதுவும் வேறு ஒரு குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டு....அப்போ அந்தக் குடும்பத்துக்கும் அநீதி தானே! அதான் இந்துவையும், மாதவியையும் அப்படிப் பேச விட்டேன்...!!! ஆம் அவன் மனதில் அது இருக்கும்...இருக்கட்டும்! அந்தக் குற்ற உணர்வு இருக்கட்டும் இருக்க வேண்டும்...

      மிக்க நன்றி ஸ்ரீராம் தங்களின் உணர்வுபூர்வமான கருத்திற்கு.

      நீக்கு

    2. /பல ஆண்கள் மன்னிப்புக் கேட்பதையே பெருந்தன்மையான செயலாக நினைக்கிறார்கள்தான்!!///

      காலம் கடந்து கேட்கும் மன்னிப்பு அர்த்தமற்றவைகளாக ஆகின்றன. வீட்டை நெருப்பு பற்ற ஆரம்பிக்கும்போது அணைக்க முயற்சிக்காமல் முற்றிலும் அழிந்து முடியும் தருவாயில் முயற்சிப்பது போலத்தான் இந்த காலம் கடந்த மன்னிப்பும்

      நீக்கு
    3. மிகச் சரியாகச் சொன்னீர்கள் மதுரைத் தமிழன். மிக்க நன்றி

      நீக்கு
  8. பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் கரந்தையார்!! தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  9. கண் முன்னே எத்தனை எத்தனையோ கொடுமையான நிகழ்வுகள்..

    இதுதான் நிறைவாக இருக்கின்றது.. இதுவே மங்கலம்..
    புத்தம் புதிய வாழ்க்கை தொடரட்டும்..

    நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  10. பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி தேனம்மை தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்....அதுவும் தங்களின் பிசி ஷெட்யூலுக்கு நடுவில் என் கதையையும் வாசித்துக் கருத்திட்டமைக்கு....மிக்க நன்றி

      நீக்கு

  11. கதைகளை படிக்காமல் பல் ஆண்டுகள் இருந்த என்னை இறுதியாக படிக்கவைத்துவீட்டீர்கள் கதையும் கதையோட்டமும் நன்றாக இருந்தது. ஒரு எழுத்தாளர் கதை எப்படி எழுதுவது என்று சொன்னது இன்னும் மனதில் நிற்கிறது அப்படி சொன்ன எழுத்தாளர் பெயர் ஞாபகம் இல்லை. அவர் சொன்னது நாம் கதை எழுதி முடித்தவுடன் அதை அப்படியே மூடிவிட்டு மீண்டும் ஒரு வார காலத்திற்கு அப்புறம் அதை எடுத்து படிக்கும் போது அதில என்னனென்ன மாற்றங்களை செய்யவேண்டும் என்று நன்றாக புரியும் அந்த மாற்றங்களை செய்துவிட்டு மீண்டும் சில நாட்கள் கழித்து அதேமாதிரி செய்து வந்து இறுதியில் அந்த கதையயை வெளியிட்டால் அது மிக சிற்ந்த கதையாக ஏன் பரிசு பெறும் கதையாக அது கண்டிப்பாக இருக்கும் என்றார்.



    அவர் சொன்னதுதான் இன்று உங்கள் கதையை படித்தபின் என் ஞாபகத்திற்கு உடனே வந்தது. கதை நன்றாக வந்து இருந்தாலும் அந்த எழுத்தாளர் சொன்ன வழியை பின்பற்றி இருந்தால் இது சிறப்பான கதையாகி பரிசு பெறும் கதையாகி பரிசும் பெற்றும் இருக்கும் என்பது என் கருத்து


    நல்ல கதையோடு நல்ல கருத்துக்ளையும் சொல்லி சென்ற துளசிதரன்&கீதா இருவருக்கும் என் பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! மதுரைத் தமிழன் முதலில் மனமார்ந்த நன்றிகள் பல! பாராட்டிற்கும், வாழ்த்திற்கும்....அட! கதை உங்களைப் படிக்க வைத்துவிட்டதா!! ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது...

      உண்மை மிக உண்மை...மதுரைத் தமிழன். அந்த எழுத்தாளர் சொல்லியிருப்பது...வாசித்ததுண்டு..கதையைப் பல மாற்றங்கள் செய்து...இறுதியில் அதைக் கிடப்பில் இட்டு மீண்டும் வாசித்து திருத்தங்கள் செய்ய இயலாமல் போய்விட்டது...மட்டுமல்ல போட்டி என வரும் போது பல ரெஸ்ட்ரிக்ஷன்ஸ்....அதாவது பக்கங்கள், வார்த்தைகள்...என்று...அதை எல்லாம் கணக்கில் கொண்டு எழுதுவதற்குள்....துளசி டிக்டேட் செய்ய கீதா அதை சென்னையில் டைப்பிட...என்று பல இடர்கள்..

      ..இந்தப் போட்டி பற்றி திரு ராயசெல்லப்பா சார்தான் சொன்னார். இதுதான் குறுநாவல் போட்டியில் முதல் முறையாகக் கலந்து கொண்டது. எனவே இறுதியில் பல டென்ஷன் இறுதி நாள் அன்று அதுவும் க்ளோசிங்க் டைம் முன்புதான் போஸ்டில் அனுப்பினால் தேதி தப்பிவிடும் என்று கீதா நேரில் கொண்டு கொடுத்துவிட்டு வந்தார். அதற்கும் ராயசெல்லப்பா சார்தான் ஐடியா கொடுத்ததும் நேரடியாகக் கொடுப்பதற்கு. அப்படி ஆகிவிட்டது எழுத்தாளர் சொன்னது போல் செய்வதற்கு.

      இனி நிச்சயமாக உங்கள் அந்த எழுத்தாளர் சொன்ன கருத்துரையும் உங்கள் பரிந்துரையையும் கருத்தில் கொள்கிறோம்..எல்லோரது ஆதரவிற்கும்..மிக்க நன்றி

      மிக்க நன்றி மதுரைத் தமிழன் தங்களின் அன்பான கருத்துரைக்கு

      நீக்கு
  12. கதை, குறும் தொடர்கதை, நெடும் தொடர்கதை
    எதுவானாலும் - அதனை
    வாசித்து முடித்ததும்
    ஒருவரது வாழ்வை
    திரைப்படம் போல பார்த்த உணர்வு வரணும்!
    அதனை
    மாதவி என்ற உறவூடாக
    வெளிப்படுத்தி உள்ளீர்கள்!
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  13. மாதவிக்கு ஒரு ஜே! அருமையான தெளிவான முடிவு.

    பதிலளிநீக்கு
  14. கதையை மீண்டுமொரு முறை படித்தேன் முரளியும் மாதவியும் ஒரு காலத்தில் இன்ஃபசுவேஷனால் ஈர்க்கப்பட்டு சேர்ந்தவர்கள்மாதவியின் குடும்பம் ஒரு குற்ற உணர்ச்சியில் இருந்திருக்க வேண்டியதில்லை அதையே கரணமாகக் காட்டி முரளி செல்கிறான் என்பதும் ஏதோ காரணம் கண்டுபிடிக்க முயற்சி செய்வது போல் இருக்கிறது மொத்தத்தில் திருமணம் என்பது பெண்களுக்கு வாழ்க்கை என்பதும் ஆண்களுக்கு அது ஒரு அத்தியாயம் என்பது போலவும் இருக்கிறதுஇவையெல்லாம் முழுக்கப் படிக்கும் போதுவரும் சிந்தனைகள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு