வியாழன், 31 ஜூலை, 2014

ஒரு FLASH BACK!


சிவலோகம் – சிவனும் – பார்வதியும் பூலோகத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்இதோ, ஏப்ரல் முடிந்து,  12 ஆம் வகுப்பு பரீட்சை எல்லாம் முடிந்து, ரிசல்டும் வந்து, கவுன்சலிங்கும் ஆரம்பித்துவிட்டது!  பிள்ளைகளுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்று அம்மாக்கள் எல்லாம் அப்ளிகேஷனுக்கு மேல் அப்ளிகேஷன் போட்டு கோயில் கோயிலாகச் சுற்றி, பல கடவுளர்களையும் சுற்றோ சுற்றென்று சுற்றி வரும் சமயம். பல கடவுளர்களும், இந்தச் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக, தேனிலும், பாலிலும், நீரிலும், பன்னீரிலும், பூவிலும் நனைந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்க..... பக்தர்கள் இருக்கும் வரை கவலை இல்லை!

என்ன தேவி!  இப்பொதுதானே +2, 10 வது வகுப்புத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள், கோரிக்கைகள், அப்புறம் கல்லூரிகளுக்கான கோரிக்கைகள் எல்லாம் ஒருவிதமாகப் பார்த்து முடித்து விட்டோமே என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அடுத்த வருடம் ஆரம்பிப்பதற்குள் கொஞ்சம் ஹைபர்னேட் பண்ணிவிட்டு வரலாம் என்று நினைத்தால்…..

ஆம்! பிரபோ!  வெயிட்டிங்க் லிஸ்ட் கோரிக்கைகள்! பிரபோ! அங்கு பாருங்கள்! நம் மகன் வினாயகனுக்கும், என் அண்ணன் விஷ்ணுவின் பக்தன் ஆஞ்சனேயனுக்கும் வந்த மவுசை! 

என்ன தேவி?  பூலோகத்தில் கணினி யுகம் என்பதால் இப்போதெல்லாம் மௌசைக் கூட காணிக்கையாகச் செலுத்துகின்றார்களா என்ன? அப்படியே ஆனாலும் அது விநாயக்கிற்குதானே வர வேண்டும்?  எப்படி ஆஞ்சனேயனுக்கு வரும்? 

 ஐயோ! பிரபோஇது அந்த மௌஸ் அல்லமவுசுஅதாவது செல்வாக்கு!  ஆஞ்சநேயனுக்கு வடைகளும், பழங்களும், நம் விநாயகனுக்கும், தேங்காய்களும், பழங்களும்......குவிந்து கிடக்கின்றன!

ஆமாம் தேவி!  நிறைய அப்ளிகேஷன்ஸ் வந்திருக்கிறதாகத் தெரிகின்றது! அதனால்தான் ஆஞ்சனேயனுக்கு வந்த்தைதெல்லாம் விஷ்ணுவிற்கு டைரக்ட் பண்ணச் சொல்லி ஆஞ்சனேயரிடம் சொல்லி விட்டேன்!  விநாயக்கிற்கு வந்ததை, விநாயக் எனக்கு அனுப்பி உள்ளான்! அது சரி தேவி! கோபித்துக் கொள்ள வேண்டாம்...கல்வி என்று வரும் போது, பிரம்மாவின் தேவியாகிய சரஸ்வதிக்குத்தானே கூட்டம் போக வேண்டும்?.....ஆனால்.....

அதுதான் நாதா!  எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது!!  எல்லோரும் நம் மகன், ஆஞ்சனேயர், இவர்களைத்தான் நாடிச் செல்கின்றார்கள்!

அதுவும் சரிதான்... இல்லையென்றால் தேவியர் உங்கள் மூவருக்கும் இடையில் யார் பெரியவர் யாருக்கு நீ சொல்லுகின்ற அந்த மவுசு அதிகம் என்ற பிரச்சினை வந்து விட்டால்......

உங்கள் மூவருக்கும் எப்போதுமே எங்கள் மூவரையும் இப்படிச் சொல்வதில் என்ன சந்தோஷம் என்று தெரியவில்லை! என் சகோதரர் விஷ்ணுவுக்கும் சற்று பெருமை அதிகம்தான்...பின்ன என்னவாம்? அன்று பெருமைப்பட்டுக் கொண்டார்.....என் அண்ணி லஷ்மிக்குத்தான் பூலோகத்தில் மவுசு அதிகமாம்....அவர்தான் ஃபைனான்சியராம்! மக்கள் எல்லோரும், நிதிக்காக அவரிடம் தான் வருகிறார்களாம்!

ஆஹா! நாரதருக்கு பதில் விஷ்ணுவே கலகத்தை விதைத்து விட்டாரா?!  பூலோகத்தில் யார் காதிலாவது விழுந்து விட்டால், உடனே கிளம்பிவிடுவார்கள்...படம் எடுக்க! ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட சரஸ்வதி சபதத்தை, நவீன சரஸ்வதி சபதம் என்று ரீமேக் செய்து விட்டார்கள்! நல்ல காலம் அது மொஞ்சம் மொக்கையாகிப் போனதால் உங்கள் மூவருக்குள் சண்டை இல்லை.  நாங்கள் தப்பித்தோம். ஆனாலும் பயமாகத்தான் இருக்கின்றது. கல்வியா, செல்வமா, வீரமா என்று படம் எடுக்க கிளம்பிவிட வாய்ப்புண்டு! இப்போதெல்லாம் ஏதாவது ஒரு படத்தின் பாட்டை டைட்டிலாக வைப்பதுதானே ஃபாஷன்!  நாங்கள் மூவரும் உங்கள் மூவரின் சண்டையைத் தாங்க முடியாது! 

நாதா! இப்படிச் சொல்லிக் காட்டியே என்னை எப்போதும் வம்புக்கு இழுக்கின்றீர்கள்.....என்னதான் நீங்கள் எல்லோரும் சொல்லிக் கொண்டாலும் எனக்கு வரும் கூட்டம் என்னவோ குறைவுதான்!

ஏன் தேவி இந்த மனக் குறை!  ஆடிமாதம், தை மாதம் வந்துவிட்டால் உனக்குத்தான் கூட்டம் கூடிவிடுகின்றதே! இதோ இப்போது ஆடி பிறந்துவிட்டது! எல்லா கோயில்களிலும் பாட்டுக்கள் வேறு அலறுகின்றது.....உனக்காக என்று.....அதுவும் சினிமா பாட்டுக்கள்....எல்லோரும் வேப்பிலை கட்டி ஆடத் தொடங்கிவிட்டார்கள். தொலைக்காட்சிகளில் உன்னைப் பற்றிய திரைப்படங்கள்....வெள்ளியன்று......ஒவ்வொரு வெள்ளியன்றும் உனக்கும் மக்கள் வரத்தானே செய்கின்றார்கள்! 

ப்ரபோ தங்களுக்கு எப்போதும் என்னைக் கேலிக்குள்ளாக்குவதே தொழிலாகிவிட்டது!  அப்படிப் பார்த்தால் நானும் தங்களைப் பற்றி நிறையச் சொல்லலாம்.....சரி! சரி! பிரபோ!  நாம் இந்தக் கதையை அப்புறமாக வைத்துக் கொள்வோம்!  நாம் வந்த அப்ளிகேஷன்ஸ் எல்லாம் பார்ப்போம்!

தேவி! கொஞ்சம் எளிதாக உள்ளவற்றைக் கொண்டுவரவும்!  அதாவது, மருத்துவம் போன்ற துறைக்களுக்கானவை......பொறியியல் இப்போது வேண்டாம்.....அவை ஏராளமாகக் குவிந்து இருக்கும் ......அதனால் பின்னர்.....

அப்படியென்றால் பிரபோ!  கால்நடை மருத்துவத்திற்கானவற்றைக் கொண்டுவருகின்றேன்!  அவைதான் சொற்பம்!  இதில் ஒரு சின்ன குழப்பம்.....இதை எப்படி நீங்கள் தீர்க்கப் போகின்றீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை!  இரண்டு வேண்டுகோள்கள்!  ஒன்று மாணவி!  மற்றொன்று மாணவன்!  இருவருக்கும் ஒரே கட் ஆஃப்!  இந்தப் பையன் அதே பையன்.....10 ஆம் வகுப்பில் 92% எடுத்திருந்தும், பள்ளியில் உயிரியல் பிரிவு கொடுக்க மறுக்க.........விநாயக் தங்களிடம் பரிந்துரை செய்ய, தாங்கள் அருளினீர்கள்!  ஏதோ சில கணக்கு வழக்குகள் எல்லாம் ஆராய்ந்து!

தெரியும்!  இந்தப் பையன் தன் 2 ஆம் வகுப்பிலிருந்து கால்நடை மருத்துவம்தான் படிக்கவேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருப்பவன்! எனவே அவனுடையதை முதலில் ஆராய்ந்து பார்க்கிறேன்! 

என்ன இருந்தாலும், பிரபோ!  நான் அந்தப் பெண்ணின் பக்கம்தான்!  உங்களுக்குத் தெரியுமா?  பூலோகத்தில் பெண்கள் மிகுந்த சக்தி வாய்ந்தவர்கள்! பாராளுமன்றத்தில் 33% ஒதுக்கீடு!  எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்!

பாவம் அந்தப் பையன்! அட்மிஷன் என்று வரும் போது எப்போதுமே அந்தப் பையன் விளிம்பில்தான். கிடைக்குமா, கிடைக்காதா என்றுதான்...அதனால் அவனுக்குத்தான் உதவ வேண்டும் இம்முறையாவது.  ஆனால் அதேசமயம் அந்தப் பெண்ணிற்கும் செய்ய வேண்டும்.  இருவருக்குமே கொடுத்துவிட்டால் என்ன....

பிரபோ அது கொஞ்சம் கஷ்டமானது! என்ன பிரபோ உங்களுக்குப் பூலோகத்தில், இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் இருக்கும் அட்மிஷன் விதிகள் மறந்து விட்டதோ? பரவாயில்லை, இப்போது அந்தப் பெண்ணிற்கு கொடுத்து விடுங்கள் உங்கள் வரத்தை!

சரி! தேவியின் சித்தம்! அப்போ அந்தப் பையனுக்கு என்ன செய்ய?  அந்த அம்மா பாவம்! அவரது குழந்தை விரும்புவதைப் பெற வேண்டி எப்படித் தவிக்கின்றார் பார். ஏனென்றால் அவருக்கு நன்றாகத் தெரியும் தன் குழந்தை இப்படிப்பை எப்படிப் புனிதமாக நினைத்து, ஆழ்ந்து படிப்பான் என்று!  அதில் அவன் மிகப் பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்பது இருவரது கனவும்! எனவே அவனை ஏமாற்ற முடியாது!

பிரபோ! அந்தப் பையனின் பெற்றோரிடமிருந்து மற்றொரு அப்ப்ளிகேஷன் வந்துள்ளது!  “இறைவா, இதுவரை நடந்த கௌன்சலிங்கில் எங்களுக்கு ஃபேவரபிளாக இல்லை. வெயிட்டிங்க் லிஸ்ட் 1 என்று வந்துள்ளது. பரவாயில்லை, வேறு இடத்திலாவது, பாண்டிச்சேரியிலாவது அவன் என்ட்ரன்ஸ் எழுதிச் சேர அவன் மனதை மாற்றுங்கள்.  அப்பாவுக்குச் செலவு என்று பாண்டிச்சேரி கல்லூரியில் சேர மாட்டேன் என்று சொல்லுகின்றான்”. 

பிரச்சினை தீர்ந்தது!  பார்த்துக் கொண்டே இரு தேவி!  எனது திருவிளையாடலை!

பூலோகத்தில் பையனின் வீட்டில் பெற்றோர் அப்பையனின் மனதை மாற்ற முயற்சி “இங்க பாரு, இங்க வெயிட்டிங்க் லிஸ்ட் 1.  ஆனாலும், யுனிவேர்சிட்டில என்ன சொல்றாங்கன்னா, கிடைக்க வாய்ப்பு கம்மினு. ரிசர்வேஷன்ல போயிடும்னு சொல்றாங்க.  இங்க கதவு மூடினா என்ன, பாண்டிச்சேரி கதவு திறக்கலாம்ல. செலவப் பாக்காத....எங்களுக்கு நீ ஒரே பையன்...இது கூட செய்ய மாட்டமா.....நீ முயற்சி செய்.   கிடைச்சா அப்புறம் பாப்போம்..யோசிப்போம்...

தேவி! உன் அண்ணி லக்ஷ்மியைக் கொஞ்சம் கூப்பிடவும்!  அவர்களிடம் கேள் இந்தப் பையனின் அப்பாவின் நிதி நிலைமையைப் பற்றி.

கேட்டாயிற்று.....பிரமாதம் என்று சொல்வதற்கில்லை என்றாலும், கஷ்டப்பட்டாவது சமாளித்து விடலாமாம்.  அதான் பூலோகத்தில் லோன் எனும் சமாச்சாரம் இருக்கின்றதே!...பிரபோ உங்கள் திருவிளையாடலே திருவிளையாடல்தான்....அவன் மனதை மாற்றி விட்டீர்களே! 

அந்தப் பையனுக்குப் பாண்டிச்சேரி காலேஜில் இடம் கிடைக்க அருளிவிட்டோம்.  அந்தப் பெண்ணிற்குச் சென்னை காலேஜிலேயே கிடைத்துவிடும்! நான் ஒரு கணக்கு வைத்திருக்கின்றேன்.  என்ன..செய்ய.... பூலோகத்து மனிதர்கள் அதைப் புரிந்து கொள்ளாமல் நம்மைத் தவறாகப் புரிந்து கொண்டு நாம் அவர்களுக்கு நன்மை செய்வதில்லை என்பது போல் பேசிக் கொள்வார்கள். என்ன செய்ய நம் தலையெழுத்து! ஹாஹாஹா...இந்த ஆண்டவன் சொல்றான்.....அங்க அருணாச்சலம் முடித்து வைப்பான்....அருளினோம்.

பிரபோ! என்னதான் நீங்கள் உங்கள் பெயரில் படம் எடுத்திருக்கின்றார்கள் என்று...சூப்பர் ஸ்டாரின் டயலாக் பேசினாலும்...நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆகிட முடியாது....உங்களை எல்லாம் நடிப்பதற்கு அழைக்கப் போவதில்லை! சரி சரி!  பிரபோ! அடுத்து எஞ்சினீயரிங்க் அப்ளிகேஷன்சை பார்க்கலாமா?!!

ஓ! கடவுளே! இஞ்சினீயரிங்கா!.....அது மலை போல இருக்குமே! எனக்கு அயற்சியாக உள்ளது!  முடியாது!

என்ன பிரபோ! நீங்கள் கடவுள் என்று அழைக்கின்றீர்கள்?  என்னாயிற்று?  நீங்கள் தானே கடவுள்!

ஓ! ம்ம்ம்.. ஒரு செகண்டில் என்னையே மறந்துவிட்டேன்...பூலோகத்தில் இருக்கும் அந்த கௌன்சலிங்க் ஹாலுக்குச் சென்றுவிட்டேன்....இந்த அப்ளிகேஷன்ஸ் எல்லாம் பார்த்ததும்.....

ஹாஅஹாஹாஹாஆ.....

என்ன தேவி இப்படி விழுந்து விழுந்து சிரிப்பு?!

நீங்கள் அங்கு சென்றிருந்தீர்கள் என்று சொன்னதும்...நினைத்துப் பார்த்தேன்...........ரஜனி உங்களைப் போல் வேடம் அணிந்து ஸ்கூட்டரின் பின் உட்கார்ந்து செல்வாரே ஒரு படத்தில்...அப்போது மக்கள் எல்லோரும்.....எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதை.....நினைத்தேன்.....தாங்களும் கழுத்தில் பாம்புடன் நம் குடும்பத்துடன் அங்கு அப்படிச் சென்றால்....”ஓ இது கால்நடை மருத்துவ கௌன்சலிங்க் இல்லையா அதனால் யாரோ மாறு வேஷம் இட்டு பாம்புடன், காளையுடன், மயிலுடன், யானையுடன் வந்திருக்கின்றார்கள் போலும்.....” என்று மக்கள் வேடிக்கைப் பார்த்திருப்பதை நினைத்து.......

61/2 வருடங்களுக்குப் பிறகு........

பிரபோ! தாங்கள் அன்று அருளிய வரம்! இதோ அந்தப் பையன் வெளிநாட்டில் மேற் படிப்பு படிக்க பறந்து கொண்டிருக்கின்றான்...அந்தப் பெண்ணிற்கும் நல்ல வேலை கிடைத்து விட்டது  போலும்! தங்கள் விளையாடலே விளையாடல்தான்!

ஆம் தேவி!  பையனும் தனது கனவை நனவாக்க, இலட்சியத்தை நிறைவேற்றப் பறந்து கொண்டிருக்கின்றான்.  நிறைவேற்றுவான்!
**********************
ஹாஹாஹாஹா.........
பையன் கவுன்சிலிங்க் ஹாலில் சிவன் கழுத்தில் பாம்புடன் தன் படை சூழ, காளையுடனும், மயிலுடனும், யானையுடனும் வருவதைப் போல் அவன் கனவில் வரவும்....எழுந்தது தான் இந்தச் சிரிப்புச் சத்தம். இந்தச் சத்தம் உடன் இருந்த வெள்ளைக்காரரைப் பயமுறுத்திச் சற்றுத் தள்ளி சாய்ந்து இருக்கச் செய்தது! 

All passengers “Ladies and gentlemen, as we start our descent, please make sure your seat backs and tray tables are in their full upright position. Make sure your seat belt is securely fastened and all carry-on luggage is stowed underneath the seat in front of you or in the overhead bins. Please turn off all electronic devices until we are safely parked at the gate. Thank you.”

Ladies and gentlemen, welcome to …. Airport. Local time is …. and the temperature is ….”

சட்டென்று விழித்தான் பையன்.......”ஓ மை காட்! ஃப்ளைட் லாண்ட் ஆகும் சமயம்”. அப்படி என்றால்.....இத்தனை நேரம்? நல்ல தூக்கம். தனது சிறு வயதுக் கனவான, இலட்சியப் படிப்பான கால்நடை மருத்துவப்படிப்பு, தகுதி இருந்தும், ரிசர்வேஷன் அடிப்படையில் கிடைக்காமல் போனதால், பெற்றோர் கஷ்டப்பட்டு பணம் செலவழித்துப் படிக்க வைத்துத் தனது இலட்சியத்தை நிறைவேற்றி மேற்படிப்பும் நல்ல ராங்கில் இருந்தும் அதே அடிப்படையில் கிடைக்காமல் போனதால், 1 1/2 வருடம் வேலை செய்துவிட்டு இதோ மேற்படிப்பிற்காக/க்ளினிக்கல் ட்ரெயினிங்கிற்காக கனடா செல்லும் வாய்ப்புக் கிடைத்து, சாதியில்லா பூமியில் இறங்கப் போவதை நினைத்து சந்தோஷப்பட்டு, தன் அட்மிஷன் அனுபவத்தை அசை போட்டுக் கொண்டே தூங்கிப் போனதில் தூக்கத்தில், தனது நிஜ வாழ்வில் நடந்த சம்பவம் இப்படி சிவனும், பார்வதியும் பேசிக் கொள்வது போலக் கனவாக விரிந்திருந்ததை நினைத்துத் தனக்குத் தானே நகைத்துக் கொண்டான் இறங்குவதற்குத் தயாராகிக் கொண்டே! இந்த முறை சத்தமில்லாமல்!

சம்போ மஹாதேவா!


படம் : இணையம்

34 கருத்துகள்:

  1. அடேங்கப்பா ஒரு சினிமாவே எடுத்து விடலாம் போலயே ? இந்த மாதிரியெல்லாம் சிந்திக்க நானும் முயற்சிக்கிறேன் ம்ஹூம் முடியலை.... அருமையான கற்பனை நண்பரே... போட்டோ பூலோகத்தை எட்டிப்பார்ப்பது போல் ஸூப்பர். அசத்துங்க... அசத்துங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஅ...உங்கள் கற்பனையும் அபாரம்தான் கில்லர் ஜி! உங்கள் தளத்தில் பல கருத்துக்களை அழகாகச் சொல்லுகின்றீர்கள்....அதுவும் செம ஸ்பீடில்.....

      பாராட்டிற்கு மிக்க நன்றி கில்லர் ஜி!

      நீக்கு
  2. தங்களைப்பற்றி.....

    http://mayilirahu.blogspot.ae/2014/07/amma-puthukkavithai.html

    வாழ்த்துக்கள் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர் ஜி! தகவல் சொல்லியதற்கு. பார்த்துகருத்தும் இட்டோம்!

      நீக்கு
  3. நல்ல ஓட்டம். தொடர்ச்சியாக நல்ல கற்பனை. வழக்கம் போல கனவென்று முடிக்காமல் அந்தப் பிரச்னையையும் மகாதேவனையே பேச வைத்திருக்கலாமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார்! தாங்கள் சொன்னது சரிதான்....எங்களுக்குள்ளும் அந்த டிஸ்கஷன் வந்தது....பின்னர் இறுதியில் பப்ளிஷ் பண்ணும் போது மாற்றாமல் அப்படியே போட்டுவிட்டோம்......ஒரிஜினல் ஆங்கிலத்தில் 2008 ஆம் ஆண்டு தொடக்கத்தில் எழுதப்பட்டது. அதில் நீங்கள் சொல்லியபடிதான் முடிவும். அதைத்தான் இப்போது கொஞ்சம் மாற்றித் தமிழில் எழுதும் போது....முடிவை இப்படிக் கொடுத்தோம்....தாங்கள் சொல்லியதை யோசிக்கும் போது அதையும் அப்படியே கொடுத்து பின்னர் இப்போது நடந்ததையும் சொல்லி இருக்கலாமோ என்று தோன்றியது.....ஏனென்றால் அப்போது பையன் முதல் வருடம்.....இறுதியில் இருந்தான்....எனவே அட்மிஷன் கிடைத்த வரை மட்டுமே ஆங்கிலத்தில் ....

      தங்கள் அழகான கருத்திற்கு மிக்க நன்றி! வரவேற்கின்றோம்....

      நீக்கு
  4. நல்ல கற்பனை நண்பரே
    எழுத்தும் அபாரம்
    காட்சிகள் கண் முன்னே விரிகின்றன
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் பாராட்டிற்கும், கருத்திற்கும்!

      நீக்கு
  5. நேற்று இரவே முதல் வோட்டு போட்டு கமெண்ட்டைப் போட்டேன் ,அது எங்கே ,எப்படி போச்சுன்னு தெரியலே ,சரி பரவாயில்லை ...
    நம்ம பயபிள்ளே கனவில் வந்த பெண்ணைத்தான் டாவடிக்கிறான் என்று கேள்வி பட்டேனே ,அதைப் பற்றி அடுத்த பதிவில் எழுதலாமே ?
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி அந்த முதல் வோட்டு உங்களது தானா?! நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தோம் ஓட்டு மட்டும் வந்திருக்கு....கமென்டைக் காணமேனு....ப்ளாகர் காக்காய்கள் னிறைய இருக்கு போல.....ஆமா ஜி எங்களுக்கும் இப்படித்தான் ஆகின்றது...பல சமயங்களில்.....கமென்ட் காணாமல் போய் விடுகின்றன...என்ன செய்ய திரும்ப திருமப் அடிக்க வேண்டியிருக்கு....

      பய புள்ளா..அஹஹஹஹ்...சார் நிஜமாவே அந்தப் பொண்ணு யாருன்னு கூடத் தெரியாது சார்...வெயிட்டிங்க் லிஸ்டில் பார்த்ததோடு சரி....அதத்தான் கனவு...ஆனா நீங்க சொன்னப்புறம்தான் ...ஓ அதக் கூட கற்பனை கலந்து பதிவா போடலாமோனு தோணுது.... சூப்பர் ஜி! ஐடியாக்கு...காப்பி ரைட் உங்களுக்கு!

      நீக்கு
  6. எப்படி சார் உங்களால இப்படியெல்லாம் சிந்திக்க முடியுது. இந்த பதிவுக்கு காபிரைட் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். யாராவது சினிமா துறையைச் சார்ந்தவர்கள் பார்த்தால் அப்படியே சுட்டு, படமாக எடுத்து விடுவார்கள். அந்த அளவிற்கு நாட்டு நடப்பை நக்கலும் நையாண்டியுமாக சொல்லியிருக்கிறீர்கள். மேலும் அழகாக சாதிப் பிரச்சனையை கையாண்டு ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

    மிகவும் ரசித்து இருமுறை படித்தேன் சார். வாழ்த்துக்கள். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா....காப்பி ரைட்...? !! நீங்கள் சொல்லுவதும் நடக்கலாம் தான்...நம்மவர்கள் ஹாலிவுட்டையே காப்பி அடிச்சு அதுல உள்ள பிட்ட செருகறவங்கதான்......

      தங்கள் பாராட்டே போதும் சார்!!! மிக்க நன்றி சார் ரசித்துப் படித்ததற்கு!

      நீக்கு
  7. மிகச்சிறப்பான கற்பனை! எத்தனைதான் வேண்டுதல்கள் வந்தாலும் அத்தனையும் கடவுளாலும் நிறைவேற்ற முடிந்தால் என்ன ஆகும் உலகம்? மிகச்சிறப்பான ஆக்கம்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ்! தங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும்!

      நீக்கு
  8. கற்பனை என்றாலும் கடவுளர்கள் பற்றி எழுதி இருப்பது சிந்தனையைத் தூண்டுகிறது.கடவுள்களும் பாவம்தான். முதலில் அதிகக் கஷ்டம் இல்லாத பணியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பதிவுக்கு கடவுளும் உதவுகிறார் என்பது புரிகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. மெய்ப்பாடுகள் என்றொரு பதிவினை எழுதத் தேவையான அனைத்தும் தங்களின் பதிவில் உள்ளன.
    நாளை எழுதிவிடுவேனாக்கும்.
    பகிர்விற்கு நன்றிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! எங்கள் பதிவுகள் இப்படி எல்லாம் கூட உதவிகின்றனவா! ஆச்சரியமாகத்தன் இருக்கின்றது!

      நீக்கு
    2. விஜு ஐயா தங்கள் பதிவை வாசித்தோம்...இல்லை இல்லை படித்தோம்.....இன்னும் படிக்க வேண்டும்!!!!!!!மெய்ப்பாட்டியல் அருமை!

      நீக்கு
  10. ஒ! அது கனவா? ஆனாலும் ரியலிசம் பேசியது கனவு! ஹ...ஹா..ஹா...
    ஒரு குறும்(பு)படம் பார்த்தது போன்ற உணர்வு சகாஸ்!
    ***சாதியில்லா பூமியில் இறங்கப் போவதை நினைத்து***
    அங்க வெச்சீங்க பாருங்க ஒரு பஞ்ச்!!! சூப்பர்!! சூப்பர்!!
    தம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரியலிசம்தான் சகோதரி! உண்மைச் சம்பவம்தான்! அதைச் சிறிது கற்பனை கலந்து அந்தப் பையன் தனக்கு நேர்ந்ததை அசை போடும் போது மனதில் அது அப்படிப்பட்டக் கனவாக விரிவது போல் கலந்து எழுதப்பட்ட உண்மைச் சம்பவமே!

      மிக்க நன்றி சகோதரி!

      நீக்கு
  11. தங்களைப்பற்றி...
    http://oomaikkanavugal.blogspot.ae/2014/08/blog-post.html
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! கில்லர் ஜி! தங்கள் தகவலுக்கு! சென்றோம் வாசித்தோம், படித்தோம்...இன்னும் படிக்க வேண்டும்.....

      நீக்கு
  12. ஆஹா கற்பனைக் கதை இங்கேயும் ஓடுகிறதா கற்பனை அபாரம் சகோ!
    என்ன அடிக்கடி கருத்தும் திருட்டு போகிறதா என்ன ? வலைச்சரத்திலும் இட்ட கருத்துகளை காணவில்லை யாம் அது தான் சொன்னேன். வாழ்த்துக்கள் சகோ தொடருங்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோதரி! கருத்துக்கள் காணாமல் போய்விடுகின்றன! என்ன நடக்கிறது இங்கே என்று தெரியவில்லை! ஹஹாஹஹ. பகவான் ஜி சொல்லுவது போல காக்காய்கள் திருடுகின்றன போலும்.....

      தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரி!!!

      நீக்கு
  13. அந்தப் பையன் கனடா போவதற்கு முன் என்னைச் சந்தித்தான் என்றால் வாசகர்கள் நம்புவார்களா?.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையை நம்பித்தானே ஆக வேண்டும் சார்! வாசகர்களே! நம்புங்கள்! செல்லப்பா சாரை அந்தப் பையன் கனடா போவதற்கு முன் சந்தித்தான்!

      நீக்கு
  14. "மீண்டும் திருவிளையாடல் 2014" - புதுமையான திரைப்படம் கண்டது போல இருந்தது.

    // சட்டென்று விழித்தான் பையன்.......”ஓ மை காட்! ஃப்ளைட் லாண்ட் ஆகும் சமயம்”. அப்படி என்றால்.....இத்தனை நேரம்? //

    ஓ நாங்கள் துளசிதரன் ஐயாவின் பதிவை படித்தோமா...? சரி படித்து கருத்திட்டு செல்வோம் என விழித்துக் கொண்டேன் .

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹஹா மிக்க நன்றி சகோதரி! தங்கள் நகைச்சுவையானக் கருத்திற்கு!

      நீக்கு
  15. மிக சரளமான, எழுத்து நடையில் கற்பனை வளமும் கருத்து வளமும் ஒரு சேர, அருமையான பகடிகளுடன் எழுதிய ஆழமான பதிவு !

    " என்ன..செய்ய.... பூலோகத்து மனிதர்கள் அதைப் புரிந்து கொள்ளாமல் நம்மைத் தவறாகப் புரிந்து கொண்டு நாம் அவர்களுக்கு நன்மை செய்வதில்லை என்பது போல் பேசிக் கொள்வார்கள்... "

    நீங்கள் விரும்பியது கிடைக்காவிட்டால் இயற்கை அதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்காக தேர்வு செய்துள்ளது என நம்புங்கள் என்ற ஓஷோவின் வார்த்தைகள் ஞாபகத்துக்கு வருகின்றன !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! தங்கள் பாராட்டிற்கும், கருத்திற்கும்! நண்பரே! நல்ல கருத்து! அந்த நம்பிக்கையில்தானே இந்த உலகமே இயங்குகின்றது!

      நீக்கு
  16. தங்கள் வலைத்தளம் வந்தோம். கருத்திட்டோம். தொடர்கின்றோம் ஐயா!

    பதிலளிநீக்கு