சனி, 8 மார்ச், 2014

I can’t agree with you....விஷ்ணு நாராயணன் நம்பூதிரி ஸார் மன்னிக்கவும்- 2

சென்ற இடுகையின் தொடர்ச்சி.....

     திராவிட மரபில் வந்த, தெலுங்கிற்கும், கன்னடத்திற்கும், மலையாளத்திற்கும், வட மொழி ஆதிக்கம், அந்த தேசத்தை ஆண்ட மன்னர்களின் வடமொழி பக்தியாலும், ஆர்வத்தாலும் ஏற்பட்ட போது, தமிழக மக்களும், மன்னர்களும் ஒன்று சேர வட மொழியை அண்டவிடாமல் செய்ததால்தான், நீங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டது போல் தமிழ் "திராவிட முத்தச்சியாக" (திராவிடப் பாட்டி)இப்போதும் தென்னகத்தில் வலம் வருகிறது.  ஆனால், கேரளம், மலையாளத்தை விட சமஸ்கிருத்த்தைப் போற்றுகிறது. அதனால்தான், மலையாளிகள் மலையாளப் பல்கலைக்கழகத்திற்குப் பதிலாகக், காலடியிலுள்ள சமஸ்கிருத பல்கலைக்கழகத்தைத்தான் முதலில் போராடிப் பெற்றனர்.
மார்த்தாண்ட வர்மா

18ஆம் நூற்றாண்டில், திருவிதாங்கூரை ஆண்ட ஸ்ரீபத்மநாபதாஸனான மன்னர் மார்த்தாண்ட வர்மா, கேரளத்தில் பழைமைப் பொக்கிஷங்களாம் ஓலைச் சுவடிகளை எல்லாம் குழி தோண்டிப் புதைத்தால் உயர்ந்தெழுமோ என்ற பயத்தால் தீக்கிரையாக்கிவிட்டார்.  
நாளந்தா                                           தட்சசீலா 








அப்படி, வட இந்தியாவில் சுல்தான்கள், நாளந்தா மற்றும் தட்சசீலா பல்கலைக்கழகங்களைத் தீக்கிரையாக்கியதற்குச் சமமான ஒரு கொடுமையைத் தெற்கே திருவிதாங்கூரில் மார்த்தாண்டன், தான் படையோட்டம் நடத்திக் கைபற்றிய ஓலைகளை எல்லாம் தீக்கிரையாக்கி செய்திருக்கிறார். எப்படியோ, அவர் கவர்ந்தெடுத்த நவரத்தினங்கள், ஆபரணங்கள், உலோகச் சிலைகள் எல்லாவற்றையும் ஏழுமலையானுக்குச் சமர்ப்பிக்க  முடியாததால் (ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் ஆங்கிலேயர்கள் அறிந்தால் ஆபத்து என்பதால் பயந்து வெளியே காண்பிக்காமல் பாதுகாத்திருக்கிறார்) அனந்தசயனனின் அடியே உள்ள அறைகளில் அது இப்போதும் அடைபட்டுக் கிடக்கிறது. அதன்பின் புதியதோர் விதியை (புதிய கேரள வரலாறு) மனுஸ்ம்ருதியை ஆதாரமாகக் கொண்டு எழுதி வைத்திருக்கிறார்.  எனவே, அவர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதிய கேரள சரித்திரத்தில், கேரள மக்கள் ஸம்ஸ்க்ருதத்தைத் தான் பேசியிருந்தார்கள்.  இடையே, சோழ, பாண்டிய மன்னர்கள் வந்து தமிழைத் திணித்துவிட்டார்கள் என்றெல்லாம் எழுதியிருக்க வாய்ப்புண்டு.  250 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கேரள மற்றும், மலையாள மொழி வரலாற்றை பின் பற்றி வாதித்ததால்தான் தெலுங்கிற்கும், கன்னட மொழிக்கும் எளிதாகக் கிடைத்த பழம்பெருமை (க்ளாசிக்கல்) மொழிப் பதவி மலையாளத்திற்குக் கிடைக்காமல் போனது.  அவர்கள் எல்லாம் அவர்களது மொழிகளாகிய தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளைத் திராவிட மொழிகள் என்று வாதித்த போது, மலையாளிகள் சமஸ்கிருதத்தின் வாலைப் பிடித்து தொங்கியதால்தான் பழம்பெருமை (க்ளாசிக்கல்) பதவி மலையாளத்திற்குக் கிடைக்கவில்லை.

சும்மா சொல்லக் கூடாது ஸார்! உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு.  அதனால்தான் ஹிந்தி மொழியிலுள்ள “கித்னா வையும் தமிழில் உள்ள “எத்தனையையும்”  மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் போட்டு தமிழும் இந்தியும் வேத மொழியாம் சமஸ்க்ருதத்தின் பிள்ளைகள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறீர்கள்.  அதுமட்டுமா, ஒன்று வடக்கே கங்கை நதிக்கரையில் மகத மொழியாகவும், மற்றொன்று தாமிரபரணி நதிக்கரையில் திராவிட மொழியாகவும் வளர்ந்தது என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள்.  போதாததற்கு, திராவிடர்களின் இறைவனான(?!) சிவனைப் போற்றி யஜுர்வேதத்தில் நீண்ட ஒரு தோத்திரம் கூட உண்டு என்று அதிசயப்பட்டிருக்கிறீர்கள். இதில் அதிசயப்பட ஒன்றுமில்லையே!  A.D. 1400 ல் இமயம் முதல் குமரி வரை வாய்மொழியாக வழக்கில் இருந்தவையும், பல மொழிகளில் எழுதப்பட்ட ஒலைச் சுவடிகளில் இருந்த, சித்தர்கள் அருளிய வேதங்களும், மந்திரங்களும், புராணங்களும் சமஸ்க்ருதத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.  அப்படியெல்லாம் இல்லை என்று சொல்பவர்களது சத்தம் பெரிதாக இருப்பதால் இந்த உண்மை அதிகமான ஆட்களின் செவியில் விழுவதில்லை.  இதுபோன்ற ஏராளமான உண்மைகள் பொதுமக்கள் காதில் விழுவதில்லை.  விழுவதே இல்லை என்று சொல்வதை விட விழ அனுமதிக்கப்படுவதே இல்லை என்பதுதான் உண்மை. 

1938ல் மனுஸ்ம்ருதியைத் தீக்கிரையாக்கிய டாக்டர் அம்பேத்கார் ஏன் அப்படிச் செய்தார் என்பது எத்தனைபேருக்குத் தெரியும்?  அதே போல் கேரளம் ஒரு (அன்று திரு-கொச்சி ராஜ்ஜியங்கள்) பிராந்தாலயம் (மனநிலை சரியில்லாதவர்கள் வசிக்கும் இடம்) என்று சுவாமி விவேகானந்தர் ஏன் சொன்னார் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அது மட்டுமா? கொடுங்கல்லூரில் கோவிலுக்குள்ளே போக பிராமணர் அல்லாத ஒரே காரணத்திற்காக அனுமதிக்கப்படாமல், அவர் 2 நாட்கள் மரத்தடியில் தியானத்திலிருந்தது எத்தனை பேருக்குத் தெரியும்? எனவே கேரளத்தைப் பொறுத்தமட்டில் அவருக்கு மிகவும் வருத்தம் தந்தது, மக்களை சாதியின் பெயரால் இறைவனிடமிருந்து அகற்றியதுதான். அதனால்தான் சுவாமி விவேகான்ந்தர், “ஒரு காலத்தில் சாதியின் பெயரால் ம்னிதனை இறைவனிடமிருந்து அகற்றிய தவறைச் செய்தவர்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் என்றெல்லாம் சொல்ல வேண்டாம். அப்படி யாரும் எங்கிருந்தும் வரவில்லை.  நூற்றாண்டுகளுக்கு முன் இங்கிருந்த சில லாப நோக்குள்ள மனிதர்களின் செயல்தான் அது என்று சொல்லியிருக்கிறார்.  அதை நீங்கள் உங்களுக்குச் சாதகமாக எடுத்து உங்கள் கட்டுரையில் சேர்த்து, “திராவிடர்கள் என்பது “கால்ட்வெல்லின் கற்பனை என்று சொல்லி வாதிக்கிறீர்கள்.  அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால், அதை நீங்கள் சொல்வதால் கேரள மக்களில் பெரும்பான்மையோர் அப்படியே நம்ப வாய்ப்புண்டு.

திரு எம்.டி வாசுதேவன் நாயர்

மட்டுமல்ல, கேரளத்தில் எல்லோராலும் போற்றப்படும் எழுத்தாளர்கள் இப்படி முன்னுக்குப் பின் முரணாக ஏதாவது எழுதி மலையாளிகளின் மனதைக் குழப்புவது வழக்கமாகிவிட்டது. உதாரணமாகத், திரு எம்.டி வாசுதேவன் நாயரை எடுத்துக் கொள்ளலாம்.  ஞானபீடம் விருது (1995) பெற்ற எழுத்து வல்லுநர்.  ஏராளமான நல்ல புத்தகங்களுக்கு உயிர்தந்தவர்.  இப்போதும் மலையாள இலக்கியத்திலும் ஏன் திரைப்படங்களில் கூட அவரது தாக்கம் இருக்கிறது.  எவ்வளவு எளிதாக அவர் “உன்னியார்ச்ச எனும் பெண்புலியை திருட்டுப் பூனையாக்கி, குள்ளநரியாம் ‘சந்துவை (சதிகாரச் சந்து) “பரியாக்கி (குதிரை) புரட்சியே செய்திருக்கிறார். 


அவர் அப்படியெல்லாம் எழுதியதற்கான காரணம் கண்டிப்பாக “உன்னியார்ச்சஒரு தீயாப் பெண் ஆனதுதான் என்று அந்த “ஒரு வடக்கன் வீரகதா என்னும் திரைப்படம் வெளிவந்த போது பலரும் குற்றம் சாட்டியதை நான் முதலில் நம்பவில்லை.  பிறகுதான் எனக்கு அதில் உண்மை இருந்தது தெரியவந்தது – வருடங்களுக்குப் பிறகு அதற்குக் காரணமான வேறு ஒரு சம்பவத்தைப் பற்றி தெரியவந்த போது.  கோகுலம் கோபாலன் எனும் வடகரையைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் இயக்குனர் ஹரிஹரனை அணுகி, தான் வடக்கன் வீர நாயகர்களைப் பற்றி ஒரு திரைப்படம் எடுக்க விரும்புவதாகக் கூற, அவர் உடனே எம்.டி. யைப் போய் பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். (வடக்கன் வீர நாயகர்களில் பெரும்பான்மையானவர்கள் ‘தீயா குலத்தைச் சேர்ந்தவர்கள். தீயர்கள் என்றதும் கேரளத்தில் தீயவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு சாதியே வைத்திருக்கிறார்களோ என்று குழம்ப வேண்டாம்.  250 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கேரளவரலாற்றில், முற்பட்டவர்களையும், நாட்டரசர்கள் எனும் குட்டி ஜமீன்தார்களையும் அனுசரிக்காதவர்கள், ஒன்று இஸ்லாம் அல்லது கிறித்தவ மதத்திற்கு விரட்டப்பட்டிருக்கிறார்கள்.  அப்படிப் போகாமல் “எங்களுக்கு எங்கள் வழி என்று சிவனே என்று வாழ்ந்தவர்களை எல்லாம், தெற்கே ஈழ நாட்டிலிருந்து (இலங்கை) வந்தவர்கள் என்று முத்திரையே குத்திவிட்டார்கள்.  இப்படிக் கேரளத்தில் உள்ள 24% பேர் இலங்கையிலிருந்து வந்தவர்களாம். எப்படி போகிறது கதை?!). எம்.டி யோ தீயர்களைப் போற்றி எழுதுவது எப்படி என்று குழம்பி “அதெல்லாம் வேண்டாம். பழசிராஜாவைப் பற்றி எடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். 


கோபாலன் சேட்டனும் அதற்கு சம்மதித்து அப்படி வெளிவந்த வெற்றிப் படம் தான் மம்முட்டியுடன் சரத்குமார் நடித்த பழசிராஜா. 

இப்படி வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு கடிவாளம் இடும் திறன் படைத்தவர்கள் எழுதுவது கேரளத்தில் வேதவாக்காவது இயல்புதானே1 அப்படி நீங்கள் எழுதியது (மாத்ருபூமியில் இரு பகுதிகளாக) வேதவாக்காக மாறக்கூடிய வாய்ப்புண்டு. நீங்கள் சொல்வது போல், கால்ட்வெல் இந்தியாவுக்கு மிக அதிக அளவில் துரோகம் செய்த ஒரு துரோகி அல்ல, "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.  தர்மம் மறுபடியும் வெல்லும்" எனும் உண்மையை உலகிற்கு உணர்த்திய உத்தமர் என்றே சொல்ல வேண்டும்..  அதற்காகத்தான் நான் என் கருத்தை இங்கே குறிப்பிடுகின்றேன். ஓரிருவராவது உண்மை என்ன என்று அறிய முயலலாமே!

எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு.

என்பதுதானே உண்மை!

பின் குறிப்பு. ஸார், நாராயணராவ், கிருஷ்ணவாரியர் போன்ற ம்ண் குதிரையை நம்பி இனியேனும் ஆற்றில் இறங்காமல் கவனமாக இருக்க வேண்டுஎன்பதே என் வேண்டுகோள்.!

இரு பகுதிகளாக வந்த இந்த இடுகைக்கு ஏற்றத் தகவல்களுடன் வந்த ஒரு சில பின்னூட்டங்களை இந்த இடுகையுடன் இணைக்க விரும்பி இணைத்துள்ளோம். ஒரு வேளை, இதை வாசிப்பவர்களுக்கு பயன் தரலாம் என்ற நோக்குடன்.


மிகச் சிறந்த பதிவு ஐயா. திராவிட இனம் திராவிட மொழி என்பதையே எதோ கால்டுவேல் தான் உருவாக்கியது போன்ற பிரமையை இந்துத்வாவாதிகள் ஏற்படுத்தி வருகின்றனர். இந்தியா பல்லினம் ஐக்கியப்பட்ட சமூகம் என்பதில் ஐயமில்லை, இனவகையாக நோக்கினால் சுத்த ஆரியன் சுத்த திராவிடன் இங்கில்லை. ஆனாலும் இந்தியாவை மொழி கலாச்சாரம் வாழ்வியல் எனப் பிரித்தால் , இந்தியாவை பல பாகங்களாக பிரிக்கலாம். குறிப்பாக தென்னிந்தியா ஏனைய இந்திய பகுதியை விட மொழி, கலாச்சாரம் மற்றும் வாழ்வியல்களில் தனித்துவமாக இருக்கின்றது என்பது தெள்ளத் தெளிவு. குறிப்பாக கால்டுவேல் இந்தோ-ஆரிய மொழிகளில் இருந்து தென்னிந்திய மொழிகளை வேறுபட்டு உள்ளதை அறிந்து, இம் மொழிக் குடும்பத்துக்கு தனி பெயரிட்டார், அதுவும் தென்னிந்தியாவை குறிக்க ஆரியர்கள் பயன்படுத்திய திராவிட என்ற சொல்லை பயன்படுத்தினார். அது போக திராவிட மொழி பேசும் பழங்குடி இனங்களின் உடல் அளவுகள் மற்றும் மரபணுக்களை ஆராய்ந்த மானிட ஆய்வாளர்கள், இம் மக்கள் ஆஸ்திரோ ஆசியாடிக் கறுப்பின மக்களோடு பெரிதும் தொடர்பு பட்டு உள்ளதையும், மத்திய தரைக்கடல் மக்களோடு கலப்புற்று இருப்பதையும் மண்டை ஓட்டு அளவு, மூக்கின் அளவு மற்றும் மரபணுக்களை கொண்டு எடுத்துக் காட்டியுள்ளனர். தென்னிந்திய மக்களின் உணவு, உடை, கலப்பு நிறங்கள், முக்கியமாய் மொழி என்பவை தனித்துவமாய் உள்ளன என்பதை வெளிப்படையாகவே நாம் அறிவோம்.. இந்த வேறுபாடுகளைத் தான் திராவிட என்ற பொதுப் பெயரால் அழைக்கின்றோம்..! இதைக் கூட அறியாத சிலர் எதோ தாமே பேரறிஞர் போல எழுதியுள்ளமை ஏமாற்றம் அளிக்கின்றது..! குறிப்பாக வடமொழி பாசம் கொண்ட சிலர் தென்னிந்தியத்தை குறைத்துக் காட்ட இவ்வாறு செயல்படுவது ஏளனத்துக்குறியது.

நான் ஒரு முறை என் அண்ணாரவி (தமிழ்) சாரிடம் ஏன் சார் சேரநாடுங்குறது தமிழகத்தின் ஒரு பகுதினா ஒரு காலத்தில் கேரளா வே தமிழகத்தின் ஒரு பகுதிதானே அப்டின்னு கேட்டேன்.அப்போ நான் டென்த் படிச்சேன்.ரவி சார் இப்புடி நம்ம ஆளுங்க பேசிப்பேசிதான் நம்பூதிரிகள் எல்லாம் டென்சன் ஆகுறாங்கனு சொன்னார். இப்போ தான் புரியுது. ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ! மொழி ஆசிரியர் பொறுப்புணர்ந்து நீங்கள் வெளியிட்டிருக்கும் இப்பதிவிற்கு மற்றொரு மொழி ஆசிரியரின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!

சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன் மிக்க நன்றி!

சேரநாடு, மலைநாடு என்பது பண்டைய தமிழ் நாட்டின் ஒரு பாகம்தான்....கடலால் சூழப்பட்ட இந்தியாவின் தென்கோடியை சேர சோழ பாண்டியர்கள்தான் ஆண்டிருக்கிறார்கள். தென்பாகத்தை பாண்டியனும், வட பகுதியைச் சோழனும், மேற்குப் பகுதியை சேரனும் ஆண்டிருந்திருக்கிறார்கள்! நாளடைவில் மேற்கு பகுதி பல சிற்றர்சுகளாகப் பிரிந்திருக்கலாம்.
சுந்தரர் கொடுங்கல்லூரை ஆண்ட அரசரிடம் கோயில் கட்டுவதற்காக நிதி வசூலித்ததாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அதே போல் 12 அம் நூற்றாண்டில் எல்லாம் கேரளாவின் வட பகுதி சோழர்கள் ஆண்டிருந்தார்கள் என்பதற்கான சான்று கண்ணூர் தளிப்பரம்பில் அன்று புதுப்பிக்கப்பட்ட ராஜராஜேஸ்வர ஆலயமும், பெருஞ்ஜெல்லூர் செப்பேடும்தான்.
பெருஞ்ஜெல்லூர் செப்பேடு A.D.1145 கேரளாவில் முதன் முதலில் குடியேறிய பிராமணர்கள் குழுவாகிய பெருன்ஜெல்லூர் மற்றும் த்ரிச்சம்பரம் குழுக்களைப் பற்றியதுதான். இந்தப் பிராமணக் குழுக்களிடமிருந்து புகல்மலைச்சேரி சுவரன் தேவன் என்பவர், 707 ஆனைஅச்சு (அன்றைய நாணயம்-பொற்காசு) கடன் வாங்கியதாகவும் அதற்குப் பணயமாக பூமியும், வட்டியும் கொடுத்தது பற்றி உள்ள விவரங்கள்தான் அந்த செப்பேடில் உள்ளது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது,,,தமிழ் மன்னர்களாகிய சோழர்களும், பாண்டியர்களும் வட கேரளத்தை, 12ஆம் நூற்றாண்டிலும், அதற்கு முன்பும் ஆண்டிருந்தார்கள் என்பதும் 12ஆம் நூற்றாண்டில்தான் பிராமணர்களின் முதல் குடியேற்றம் நடந்தது என்பதும்தான்....மட்டுமல்ல ஆங்கில மொழிக்கு எப்படி ஆங்கிலோ -ஸாக்ஸன் (anglo-saxon ) மொழி ஆதாரமாகியதோ அது போலத்தான் மலையாள மொழிக்கு தமிழும். தமிழிலிருது உயிர் பெற்றதுதான் மலையாளம்! ஆங்கிலத்தில் ஃப்ரென்ஞ்சு வார்த்தைகள் கலந்தது போல் மலையாளத்திலும் சமஸ்க்ருத வார்த்தைகளும் கலந்திருக்கிறது.

MARIAPPAN RAVINDRAN ravindrashriram@yahoo.com

Mar 8 (1 day ago)
to me
Dear Brother Thulasidharan,

I have every right to call you as my brother being both of us are tamilians. I am a regular reader of your blogs in Tamilmanam.net. I have gone through your article 


Vishnu Narayanan Namboothiri Sir, I'm Sorry, I can't agree with you..... 1and 2

Really what you have written is 100% correct.These Malayali people are very much hesitating to accept their real mother Tamil. Instead they want to express themselves that they were born to Sanskrit infact it is not as such. It has been proved and established lot of times. These are all just because of Vishnu Narayanan Namboothiri and Krishna varior people like that. These people are perverted by birth itself (Vivekandhar has confirmed the same as told in your article). I have gone through lot of articles about the origin of Malayalam language and Malayalis (including the story of ETTU VEETTU PILLAIMAR). As per your article if a king has done such an atrocity like burning the ancient records in palmleaves. we can very well judge the attitude of these people. Really you have established very strongly (beyond doubt) at the last paragraph of your first part article about the specialities of Tamil.

Pl find a way to make these perverted people to go through your article and understand the real fact. Even then if they refuse to accept the fact, they will again prove themselves that they are perverted.

Really Our Mother Tongue "TAMIL" gives us strength to argue in such a good way.

Thanks a lot.

Enrum Anbudan,

M.Ravindran
09442738002
Madurai.

Thulasidharan thillaiakathu thulasithillaiakathu@gmail.com

6:48 PM (17 hours ago)
to MARIAPPAN
Dear Brother,   Thank you very much for your reading and for the
valuable comments and suggestions. Truth may be hidden for
sometime,but not forever,it will come out oneday.So I believe truth
lives in the mindS  and thoughts of the people like us.Its our duty to
sow the seeds of truth in the minds of as many people as we can,so
that it may  live forever.  Thanks.         With regards....
Thulasidharan.v.Thillaiakathu.


10 கருத்துகள்:

  1. மறைக்கப்படும் வரலாற்று உண்மைகளை இடித்து உரைத்த சிறப்பான
    பகிர்வுக்குத் தலை வணங்குகின்றேன் சகோதரா .மிக்க நன்றி பகிர்வுக்கு
    மேலும் தொடர என் இனிய வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  2. என்ன தான் குழப்பினாலும் நாம் தெளிவாக இருப்போம்...!

    பதிலளிநீக்கு
  3. தெளிவான திடமான ஆதாரங்களோடு விளக்கப்பதிவு சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி சகோதரி! தங்கள் அருமையான கருத்திற்கு! தங்கள் கவிதை மழையில் நனைந்து கொண்டே இருக்கிறோம்! அருமை தமிழ்!

    பதிலளிநீக்கு
  5. மிக்க நன்றி! தளிர்! தங்கள் கருத்திற்கும்! ஊக்கத்திற்கும்!

    பதிலளிநீக்கு
  6. அப்பா!! எவ்வளவு தகவல்கள்..எப்படி மறைக்கின்றனர்...அறியாத பலவிடயம் அறிந்துகொண்டேன்..மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும்!

      தங்கள் தளத்தைத் தொடர்கின்றோம்!

      நீக்கு
  7. ஒரு காலத்தில் உலகெல்லாம் ஆண்டான் தமிழன் அன்போடு!
    இன்று உலகமே அழிக்கிறது தமிழர்களை மண்ணோடு!
    காலம் மாறும்!
    முயற்சிப்போர் இல்லாமலே போனாலும் மாற்றங்கள் நடந்துகொண்டேதான் இருக்கும். எவனும் அதை நிறுத்த முடியாது. தனித்தமிழ்நாடு பிறக்கும்பொழுது வரலாறு திருத்தி எழுதப்படும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! தாங்கள் இந்த இடுகையை முழுவதும் வாசித்துக் கருத்திட்டதற்கு!

      நீக்கு