திங்கள், 30 டிசம்பர், 2013

கலைவாணர் –நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்.எஸ்.கே பற்றி - வாசித்ததில் ரசித்தது!


இந்தியாவின் சார்லி சாப்லின்


மாலை மலர் ‘தீபாவளி மலரில் (நன்றி: மாலை மலர்) கலைவாணரைப் பற்றிய சுவாரசியமான சம்பவங்களைப் படித்தவுடன், ‘மதுரை வீரனில் இளவரசி அவர் மனைவியை ‘அத்தை என்றதும், “அத்த நீ செத்த என்று ரைமிங்க் நகைச்சுவையில் கலக்கியது நினைவுக்கு வந்தது. நாகர்கோவில், ஒழுகினசேரியில் பிறந்து (முத்து தியேட்டர் அருகில் தான் அவரது வீடு) வில்லுப்பாட்டுக்காரராக தனது கலையுலகப் பயணத்தை ஆரம்பித்து, “இந்தியாவின் சார்லி சாப்ளின் என்று பாராட்டப்பட்டு கலையுலகில் கொடிகட்டிப் பறந்தவர்.தன்னுடைய தனித்தன்மையுள்ள நகைச்சுவையால், கருத்துக்களையும் அள்ளித் தெளித்தவர்.  பெரும்பாலும் தனது வசனங்களைத் தானேதான் எழுதும் வழக்கம் கொண்டவர். என்.எஸ்.கே. எங்கள் ஊர்காரர் என்று சொல்லிக் கொள்வதில் எங்களுக்குப் பெருமைதான். (நாகர்கோவிலில் பிறந்து வளர்ந்தவளுடன் நாகர்கோவிலில் தனது (துளசிதரன்) கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தவர்.  ஆதலால் எங்கள் ஊர்)

 மாலை மலர் தீபாவளி மலரில் வாசித்தது ரசித்தது

கலைவாணரும் பழைய சோறும்

சினிமாவில் நகைச்சுவை மூலம் சமூக சீர்திருத்த கருத்துக்களை பரப்பியவர் கலைவாணர் என்.எஸ். கிருஸ்ணன்.  அவரது வாழ்க்கையிலும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் உண்டு.  அதில் ஓரிரு சம்பவங்கள்...
கலைவாணர் ஒரு நாள் காலையில் தன்னுடைய வீட்டில் அமர்ந்து பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும், முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன்,


“என்னங்க, உங்க மனைவி மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா? பழைய சோறு சாப்பிடுறீங்க! என்றார்.

கலைவாணர் எதுவும் பேசாமல், வேலைக்காராரைக் கூப்பிட்டு, “இந்தா..இந்த ஒரு ரூபாய்க்கு (ஒரு ரூபாய் அப்போது...இப்போது மதிப்பு ??) பழைய சோறு வாங்கிட்டு வா. என்றார்.

ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்கார்ர், “ ஐயா, நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன், ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல என்றார்.
“கேட்டீங்களா நடராசன்.  எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்.  அதனால்தான் இதை சாப்பிட்டேன்! என்று கலைவாணர் சொன்னதைக் கேட்டு நடராசன் மட்டுமின்றி, மதுரமும் அசந்து விட்டார்.

[வாழ்க்கையை எந்தக் கோணத்தில் எப்படிப் பார்த்தார் என்.எஸ்.கே என்று தெரிகிறது.  அதாவது, பழைமை மறக்கக் கூடாது என்பதுதான் அது. ]

பெரியார் பக்தி

1947 ஆகஸ்ட் 15 முதல் சுதந்திர நாள் என்பதற்காக கலைவாணரை சென்னை வானொலி நிலையம் அழைத்திருந்தது.  நிகழ்ச்சி சம்பந்தப்பட்டவற்றை வானொலிக்கு முன்னதாகவே எழுதிக் கொடுத்து விட்டார் என்.எஸ்.கே.  நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வரிசையில் தந்தை பெரியார் பெயரும் இடம் பெற்றிருந்தது.  வானொலி நிலையத்தார் அதனை நீக்கி விட்டனர்.
கலைவாணருக்கு வந்ததே கோபம்.  பெரியார் பெயர் இடம் பெறாவிட்டால், என் நிகழ்ச்சியும்  இடம் பெறாது என்று கூறிவிட்டு வெளியேறி விட்டார். இதனைச் சற்றும் எதிர்பாராத வானொலி நிலையத்தினர் மறுபடியும் பெரியார் பெயரையும் இணைத்து நிகழ்ச்சியை நடத்திட ஏற்பாடு செய்தனர்.

[எங்கு ஒரு அநீதி நடந்தாலும் தட்டிக் கேட்கும் துணிச்சல்காரர்]

கலைவாணரும் அண்ணாவும்

கலைவாணர் சிலை திறப்பு விழா பேரறிஞர் அண்ணா தலைமையில் நடந்தது. கலைவாணர் சிலையைத் திறந்து வைத்துப் பேசுகையில், அண்ணா கூறியதாவது :-

"கலைவாணர் கலையுலகதிற்கு மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் நம்முடையை தொண்டுகளைச் செய்ய வேண்டும். அதற்கு இந்தக் கலை ஒரு விழிகாட்டியாக அமையவேண்டும் என்ற முறையில் கலைத் துறையைத் தேர்ந்த்தெடுத்தார். அவருடைய சிறந்த உழைப்பு, அவருக்கு மட்டுமல்லாமல், கலைத்துறைக்கே, நகைச்சுவைப் பாத்திரத்திற்கே ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.   நகைச்சுவை பாத்திரமென்றால், ஒட்டப்பட்ட மீசை திடீரென்று கீழே விழும்.  அது நகைச்சுவைப் பாத்திரம் நடக்கின்ற பொழுது இடறிக் கீழே விழுவார்கள்...அது நகைச்சுவைப் பாத்திரம்.  இப்படி இருந்ததை மாற்றி, நகைச்சுவை பாத்திரமென்பது, சிந்தித்துப் பார்த்து சிறிது நற்பயனைப் பெறத்தக்க ஒரு பாத்திரம் என்று மாற்றி அமைத்துக் காட்டியவர் நகைச்சுவை மன்னர் என்.எஸ் கிருஷ்ணன் என்று அண்ணா தனது பேச்சில் குறிப்பிட்டு பாராட்டினார்.


அன்று முதல்










                                                                                இன்று வரை


நகைச்சுவையில் தனி இலக்கணமே வகுத்தவர் என்று அண்ணாவால் சொல்லப்பட்டு, அந்த நகைச்சுவையாலேயே தன்னைப் பொது வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத நபராக ஆக்கிக் கொண்டவர் கலைவாணர்.  சொல்லப் போனால் இவரது நகைச்சுவை பாதிப்பு அன்று டணால் தங்கவேலுவிடமும் இருந்தது என்றும் சொல்லலாம்.  இன்று ‘சின்னக் கலைவாணர் என்று அறியப்படும் விவேக் வரை கலைவாணரின் தனித்தன்மை வாய்ந்த நகைச்சுவை பாதிப்பு, காலம் கடந்து வந்து நிற்கிறது என்றால் அது பெருமை மிக்க ஒரு விஷயம் மட்டுமல்ல அது எந்த அளவு நகைச்சுவை உலகை பாதித்துள்ளது என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது! 



15 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி! நண்பரே!!

      நீக்கு
  2. சுவாரஸ்யமான சம்பவங்கள்... நன்றி... அவரின் துணிச்சல் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!!

      நீக்கு
  3. மிகவும் அருமையான பகிர்வு. கலைவாணர் நன்கு பாடக் கூடியவர், அவரது " அந்தக் காலம் " பாடல் எம்மைப் போன்ற இளம்தலைமுறையினர் வரை ஈர்த்துள்ளதே. 1940-களில் வந்த எதோ ஒரு படம் பார்ப்பனராக நடிப்பார், அப்போது மனைவியோடு சண்டையிட்டு அவரை தாய்வீட்டுக்கு அனுப்பிவிட்டு தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணோடு உறவாட நினைத்து இறுதியில் மனைவி விசயம் அறிந்து திரும்பி வர வசமாய் மாட்டிக் கொண்டு விழிப்பார். அந்தக்காலத்திலேயே நகைச்சுவையோடு பகுத்தறிவையும் விதைத்துள்ளார், லக்மிகாந்தன் கொலைவழக்கில் சிக்க வைக்கப்பட்டு சின்னாப்பின்னம் ஆக்கப்பட்ட போதும் அதிலிருந்து மீண்டு வந்து ஜொலித்தார். ஏன் கலைவாணரைக் குறித்து இன்றுள்ள தொலைக்காட்சிகள் பெரிதும் காட்டாமல் விடுகின்றனவோ?! வருத்தமே. அடுத்த தலைமுறையினருக்கும் கலைவாணரின் சிறப்புக்களை எடுத்துரைக்க வேண்டும்.

    --- விவரணம். ---

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலைவாணர் நன்கு பாடக் கூடியவர், அவரது " அந்தக் காலம் " பாடல் எம்மைப் போன்ற இளம்தலைமுறையினர் வரை ஈர்த்துள்ளதே.

      மிகச் சரியே! தொலைக்காட்சிகள் அவரைப் பற்றி பேசாதது குறையே!.

      தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி!!

      நீக்கு
  4. சுவையான குறிப்புகள். நன்றி!

    revmuthal.com

    பதிலளிநீக்கு
  5. தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  6. கலைவாணரைப் பற்றிய களஞ்சியங்கள் பல தலைமுறைகள் கடந்தும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன. இப்பதிவில் நீங்கள் பகிர்ந்துள்ள சம்பவங்கள் இதுவரை நான் அறியாதது. தொடர்ந்து நடத்துங்கள்....
    இப்பதிவில் விவேக்கோட படத்தை நீங்கள் தவிர்த்திருக்கலாம். சரியான அரைவேக்காடு சார் அந்த பீசு... ஒரு படத்துல பெரியாரும்பாரு, அடுத்த படத்துல ஷகிலாம்பாரு... நடிகனாக மட்டுமே பார்க்கப் பட வேண்டியவர் விவேக்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மலர் வண்ணன்! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! விவேக்! ம்ம்ம்ம் ஆமாம் முதலில் நாங்கள் போடணுமானு யோசிச்சோம்! ஆனா, கடைசில "சின்ன கலைவாணர்" அப்படினு சொல்றாங்களே ஒரு சில இடங்கள்ல "தத்துவ பித்தா" இருக்காறேனு போட்டுவிட்டோம்...உங்கள் comment ரசித்தோம்! சிரித்தோம்!

      என்னடா "தோம்" "சோம்" னு வருதேனு பார்க்கறீங்களா...நாங்க 2 பேர் எழுதறோம். துளசிதரன், கீதா (நண்பர்கள்) உங்களுக்கு அந்தக் குரங்கு பத்திக் கொடுத்தது, அந்தக் குரங்கு வாயால கடி வாங்கினதும் கீதா....

      நன்றி!

      நீக்கு
  7. நல்ல கட்டுரை.

    கலைவாணர் பற்றிய செய்திகள் நன்று. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக! தங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  8. கலைவாணர் பற்றிய தகவல்கள் எனக்கும் புதிது. அவர் பாடல்கள் படங்கள் பார்த்திருக்கிறேன். அற்புதமான பாடல்கள் "எங்கே தேடுவன்" சிரிப்பு....இப்படி பல கருத்துள்ள பாடல்களை சொந்தக்குரலில் பாடி சிந்திக்க வைத்த மாமனிதர் பற்றிய சிறப்பான பகிர்வு. இது போன்ற பகிர்வுகளைத் தொடருங்கள். என்றாவது எல்லோரையும் சென்றடைய வாய்ப்பிருக்கிறது.

    நண்பர்களின் வலையில்தங்களின் பின்னூட்டம் அவ்வப்போது பார்த்திருக்கிறேன். கருத்துள்ளவையாகவும்இருக்கும். ஆதலால் நேரம் அமையும் போதெல்லாம் தங்கள் பகிர்வை படிக்க வருவேன். அனுமதி உண்டாங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக இது போன்ற பதிவுகளும் எழுதுகின்றோம் சகோதரி! தாங்கள் இப்படித் தேடி வாசித்து, ஊக்கமிக்க கருத்துகளையும் இடுவது எங்களுக்கு மேலும் ஊக்கமும், உற்சாகமும் தருகின்றது. உங்களைப் போன்றோர் தரும் கருத்துகள் வலிமை மிக்கவை. மோதிரக் கையால் குட்டு என்பார்களே அது போல. எனவே குறைகளையும் சுட்டிக் காட்டலாம் தாங்கள். என்னங்க இது கேள்வி? உங்களுக்கு இல்லாததா? எதற்கு அனுமதி கோர வேண்டும்....எப்போது வேண்டுமானாலும் வரலாம் வாசிக்கலாம்...தங்களுக்கு நேரம் அமையும் போதெல்லாம் சகோதரி...மிக்க மகிழ்ச்சி!

      மிக்க நன்றியும்!

      நீக்கு
    2. உடன் பதிலுக்கும் வரவேற்புக்கும் எனது மனமார்ந்த நன்றிங்க.

      நீக்கு